Advertisement

விழிகள் இரண்டும் மெது மெதுவாக மூட இருள் சூழ மயக்க நிலையில் விழிகளை திறக்க சிரமபட்டு கண்ணை திறக்க முற்பட்டவளின் முன் வெள்ளையாக ஒரு உருவம் தோன்றி தோன்றித் மறைய ,விழியில் நீர் கோர்க்க மூச்சினை கடினத்துடன் விட்டபடியே ” என் குழந்தைய காப்பாத்துங்க ” என்றவாறே இமை முழுவதுமாக மூடியது…
“நங்கை மா எழுந்திறீங்க ” என்று பாரி எழுப்ப முனைய
“டேய் உன் தங்கச்சி இங்க மயங்கி கிடக்கிறா ” என்றவாறே மூச்சிறைக்க மற்றவனிடம் சொல்ல
“ஆமா டா ” என்றான் ஒருவித புன்னகையோடு..
“நீங்களெல்லாம் யாரு ” என்று புருவ முடிச்சிட்டு கேட்க
“நான் அவளோட அண்ணா பாஸ். வெளிய பொய்ட்டு வரேன்னு காலையில போனா .என்னடா இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தேடி வந்தா இங்க மயங்கி கிடக்கிறா ” என்றான் பொய்யை உண்மையாக சித்தரித்து…
“ஹே…” என்றவாறே அவளை மடியில் கிடத்தி எழுப்ப முயன்றான்.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் எங்க தங்கச்சியை எங்க கிட்ட கொடுத்திட்டு போங்க .நாங்க அவளை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் ” என்க
“இவுங்க உன்னோட தங்கச்சி இதை நான் நம்பணும் பாரு. இவுங்க எங்க வீட்டு இளவரசி டா நாய்ங்களா. உங்களோட இச்சை எங்க வீட்டு பொண்ணு தான் கிடைச்சாள அசிங்கமா இல்ல உங்களுக்கு “என்று காரி உமிழ
அதில் கோபம் கெண்டவர்கள் பக்கத்திலிருந்த கட்டையை எடுத்து அவனை அடிக்க ஓங்க
நங்கை மீது எந்த அடியும் விழுந்திட கூடாது என்று அவளை தனக்குள் புதைத்து அடியை வாங்கி தடுத்தான் பாரிவேந்தர் .
“இருங்க டா போலிஸை கூப்பிடுறேன் ” என்று மொபைலை எடுத்தவனை கண்டு வந்த கயவர்கள் யாவும் பயந்து ஓடினர்.  
அதன்பின் நங்கையை தூக்கிய பாரிவேந்தர் ,அவளை ஓரிடத்தில் அமர வைத்தவன் தனக்கு தெரிந்த நபருக்கு அழைப்பு விடுத்து ஒரு ஆட்டோவை வரவைத்தான்.
சிறிது நாழிகையிலே அந்த ஆட்டோவும் வந்து விட ,நேரடியாக அவளை மருத்துவமனைக்கே அழைத்துச் சென்றான்.
நங்கை என்னுடைய குழந்தையை காப்பாற்றுங்கள் என்று இறுதியாக கூறிய வாரத்தை  அவனுக்குள் யோசனையாய் இருந்தது.
மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்து அவள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூற அவளை கண் விழித்ததும் அழைத்து செல்ல சொன்னர்.
பாரியும் அவள் கண் விழிக்கும் நேரத்திற்காக இமைக்க கூட மறந்து காத்திருந்தான்.
இரண்டு மணி நேரங்கள் கழித்தே கண் முழித்த நங்கையை பார்த்தான் பாரி.
முதலில் எங்கிருக்கிறோம் என்று விழித்த நங்கை தான் யாரோ ஒருவரின் உதவியால் காப்பாற்றப்பட்டேன் என்று நினைத்தவளுக்கு பாரியை கண்டதும் இருண்ட உலகம் சூரியன் போல் வெளிச்சம் வருவதை உணர்ந்தாள் நங்கை.
ஓடிச்சென்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் உணர்வுகளின் மிகுதியில்…
நங்கை அணைத்ததில் விக்கித்து போய் நின்றுவிட்டான் பாரி.
அவனிடமிருந்து பிரிந்த நங்கை “என்னோட குழந்தைய காப்பாத்தினக்கு ரொம்ப நன்றி பாரி. நீங்க செஞ்ச உதவிக்கு நான் என்ன கைம்மாறு பண்ண போறேன்னே தெரியல ரொம்ப நன்றி ” என்று கை கூப்பி நின்றாள்.
“என்ன மா நீங்க போய் இப்படி கை கூப்பிட்டு நிக்குறீங்க . வாங்க மா நான் உங்கள வீட்ல கொண்டு போய் விடுறேன் ” என்க
“இல்லை பாரி நான் எங்க வீட்ல இருந்து என்னோட குழந்தைய காப்பாற்ற ஓடி வந்துட்டேன் ” என்றாள் வெறித்த பார்வையோடு..
“என்ன சொல்றீங்க மா நீங்க..?? உங்களுக்கு எப்படி..??” என்று அடுத்து கேட்க முடியாமல் தொங்க
“எல்லாம் விதியின் சதி பாரி. எனக்கே தெரியாம என்னோட கருவுல ஒரு குழந்தை வளருது. இந்த குடும்பத்தில் பிறந்த பாவத்துக்காக தானோ என்னவோ எனக்கு இந்த குழந்தையை பரிசா கொடுத்திருக்கிறார் ” என்றாள் புன்சிரிப்புடன்…
அதனை கேட்ட பாரி நங்கைக்கு வந்த அவநிலையை கண்டு மனமொடைந்து போனான்.
“அப்போ நீங்க என்னோட வீட்டுக்கு வாங்க மா ” என சொல்ல
“இல்ல அது சரி வராது பாரி ” என்று நாசுக்காக மறுத்து பேச
“இந்த நேரத்துல நீங்க எங்க போவீங்க சொல்லுங்க. அப்புறம் உங்க வயித்துல வளருர தம்பி பாப்பா நிலைமை என்னாகுறது சொல்லுங்க .இப்போ தான் டாக்டர் வந்து சொல்லிட்டு போனாங்க குழந்தை வீக்கா இருக்கா அங்க இங்கன்னு அழைய கூடாதுன்னு “என்று நிஜத்தோடு பொய்மையும் கலந்து கூற
முதலில் தயங்கியவளுக்கு குழந்தையின் நலத்தினை காட்டி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான் பாரிவேந்தர்.
அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் ,வாசலிலே நிற்க வைத்து உள்ளே சென்றான்.
“எதுக்கு வெளிய நிக்க சொல்லிட்டு போறீங்க காருக்காரரே ” என்க
“ஒரு நிமிஷம் அமைதியா இருங்க மா நான் வந்தறேன் “என்று உள்ளே சென்றான்.
“சரி சீக்கிரமா வாங்க ” என்றவள் இருட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடியிலே வெளி வந்தவன் கையில் ஆர்த்தி தட்டு இருக்க ,”இது எதுக்கு தேவையில்லாம. என்னைய பார்த்தா எல்லாம் திட்டி ஒழிக்க தான் நினைக்கிறாங்க .நீங்க என்ன ஆர்த்தி தட்டு எடுத்து வந்திருக்கீங்க ” என்று கேள்வியாய் நோக்கினாள்.
“இந்த வீட்டுக்கு வர முதல் தேவதை நீங்க தான். அதுவும் என்னைய வாழ வச்ச குடும்பத்தோடு இளவரசி நீங்க .அதுனால அமைதியா நில்லுங்க ” என்றவன் அவளுக்கு ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தான்.
“ரொம்ப நன்றி பாரி ” என்றாள் கண் கலங்க
அவளின் கண்ணீரை துடைத்து “உங்களுக்காக நான் இருக்கேன் மா .நீங்க எதுக்கும் கவலை படாதீங்க மா ” என்று ஆறுதல் படுத்தினான்.
“நான் கவலை பட கூடாதுன்னு நினைச்சா ,இந்த மா சொல்லி கூப்பிடுறதை விடுங்க ” என்றாள் பெரிய மனிஷியாக
“அது எப்படி முடியும் “
“அப்போ நான் கவலை படுவேன் போங்க ” என்றாள் சிறுபிள்ளை தனமாக
“சரி சரி கவலை படாதீங்க நான் இனி மா போட்டு கூப்பிடல போதுமா ” என்க
“அது மட்டும் போதாது.நான் உங்கள காருக்காரர்ன்னோ பாரின்னு தானே கூப்பிடுறேன். அதே மாதிரி நீங்களும் என்னைய பேரு சொல்லி தான் கூப்பிடனும் சரியா ” என்க
“அதெல்லாம் முடியவே முடியாது. நீங்க எங்க நான் எங்க . நான் எப்படி உங்க பேரை சொல்லி கூப்பிடுவேன் சொல்லுங்க ” என்று மறுக்க
“அப்போ நான் இங்க இருக்க மாட்டேன்.நான் எங்கேயோ போறேன் போங்க ” என்று வீராப்பாய் கிளம்ப எத்தனிக்க
“சரி சரி நான் பேரு சொல்லியே கூப்பிடுறேன். ஆனா உங்க பேரு சொல்லி கூப்பிட மாட்டேன் “
“அப்போ எப்படி கூப்பிடுவீங்க..???”
“எங்க அம்மாவோட பேரு கண்ணம்மான்னு அப்பா சொல்லி கேள்வி பட்டுருக்கேன். ஆனா நான் அவுங்களை பார்த்தது இல்லை. அதுனால உங்களை நான் கண்ணம்மான்னு சொல்லி கூப்பிடுறேன்‌ ” என்றான்…
அடுத்தநாளே நங்கைக்கு தேவையான உடைகள் மருந்துகள் என அனைத்தையும் வாங்கி வந்து குவித்திருந்தான்.
நாட்கள் நகரத்தொடங்க இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உருவாகி இருந்தது‌ அவர்கள் அறியாமலே…
நங்கையின் வயிற்றில் வளரும் குழந்தையும் வளரத்தொடங்க அதோ இதோ என ஏழு மாதத்தில் வந்து நின்றது…
ஏழு மாத முடிவில் நங்கைக்கு வலைகாப்பு வைக்கலாம் என்று பாரி கூறிட
திருமணம் ஆகாமல் எப்படி இந்நிகழ்வை எதிர்கொள்வது..?? ஊர் மக்கள் என்னவென்றாலும் பேசுவார்களே அது குழந்தையின் பிறப்பினை பாதிக்க கூடுமே என்று பயந்து போனாள் நங்கை.
அதனாலே பாரியிடம் மறுத்து பேசி வேண்டாம் என்றிட
“நீங்க ஏன் உங்க குழந்தையா மட்டும் பார்க்குறீங்க சொல்லுங்க. நம்ம குழந்தையா பாருங்க கண்ணம்மா. உங்களுக்கு எப்படியோ ஆனா பிறக்கப் போற குழந்தைக்கு அப்பா கண்டிப்பா வேணும். இனி குழந்தைக்கு அப்பா இல்லையே ஊர் என்ன பேசும்னு யோசிக்காதீங்க .இனி இந்த குழந்தைக்கு நான் அப்பா நீங்க அம்மா . உங்களை பொறுத்தவரைக்கும் நான் ஒரு காவலாளி .இனி இதை பத்தி யோசிக்காதீங்க . நான் நல்ல படியா இந்த விழாவை நடத்தி காட்டுறேன் ” என்று வாக்களித்தான்…
அவன் சொன்னதை போலவே விழாவை சிறப்புற நடத்தினான்.
இரவில் கண்ணாடி முன்பு நின்றிருந்த நங்கைக்கு அவள் வகுட்டில் இருந்த குங்குமத்தை கண்டு கண்ணம் இரண்டும் குங்குமம் போல் சிறப்பேறியது.
விழாவின் நடுவில் பாரியை அழைத்து சந்தனம் பூசிவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க சொல்ல ,பெரிதாய் தயங்கினான் பாரிவேந்தர்.
“என்ன தம்பி இது பொண்டாட்டிக்கு குங்குமத்தை வைக்க சொன்னா இப்படி வெக்கப்படுறீங்க “என்று கிண்டல் செய்ய
தயங்கி தயங்கி நின்ற பாரியை பார்த்து நங்கை,”வச்சி விடுங்க பாரி ” என்க
“ம்ம்ம் ” என்று தலையசைத்து அவள் முன்னே வந்து இரு கண்ணத்திலும் சந்தனம் பூசியவன் நெற்றியில் குங்குமம் வைக்க தடுமாற
“இது நம்ம குழந்தைக்கான விசேஷம் பாரி. எப்போ நீங்க இந்த குழந்தைக்கு அப்பாவா ஆனீங்களோ அப்பவே குழந்தையோட அம்மா மேலயும் உங்களுக்கு உரிமை இருக்கு. உங்களால மட்டும் தான் எனக்கு குங்குமம் வைக்க முடியும் அதுக்கான உரிமையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். இதுக்கு பேரு காதல் கிடையாது பாரி அன்புன்னு சொல்லலாம்.இந்த அன்பும் அதுக்கப்புறம் வர காதலும் உங்களுக்கு மட்டுமே சொந்தம் ” என்று நாணத்தோடு சொல்ல
பாரியின் கண்கள் கலங்கி போயின. தனக்கு யாருமே இல்லை என்ற நிலையில் இருந்து நீங்கி இப்போது மனைவி குழந்தை போல் சொந்தம் வந்தததை எண்ணி கலங்கினான்.
“வச்சி விடுங்க பாரி உங்களுக்கான உரிமையை நிலைநாட்டுங்க ” என்க
ஆனந்தத்தோடு அவள் வகுட்டில் குங்குமத்தை வைத்து விட்டான். சிரிப்போடு அதனை ஏற்றுக் கொண்டாள் நங்கை..‌.
அதன்பின் வந்த நாட்களில் நங்கையை ராணியை போல் பார்த்துக் கொண்டான் பாரி.
ஒன்பது மாத முடிவில் பாரி அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தான்.
அன்றைய தினம் நங்கைக்கு ஏனோ மனம் சஞ்சலமாகவே இருக்க , பக்கத்திலிருந்த கோவிலுக்கு சென்றாள் நங்கை…
அவளது கேட்ட நேரமோ என்னவோ அங்கே ஏதோ வேலையாக வந்த சீனிவாசனும் கிருஷ்ணவேணியும் வந்திருக்க ,நங்கையை பார்த்த அவர்களுக்கு ஆத்திரமாக வந்தது.
தன் பிள்ளை எங்கிருக்கிறான் என்று தெரியாமல் தவித்து இருந்தவர்களுக்கு அவளின் நிறைமாத வயிற்றை கண்டு புகைத்தனர்.
நங்கையின் முன்பு வந்து கோபமாக நின்றார் கிருஷ்ணவேணி .அவரை பார்த்த நங்கைக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்னடி ரொம்ப சந்தோஷமா இருக்க போல. அப்படி வாழ விட்டுருவேன்னு நினைக்காத . என் பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்ச உன்னையும் உன் குழந்தையும் சும்மாவே விடமாட்டேன். அப்புறம் உன் குழந்தை எப்படி உயிரோட வாழுதுன்னு பாக்குறேன். மொதல குழந்தையை பெத்தெடு அப்புறம் இருக்கு உனக்கு ” என்று மிரட்டி விட்டு சென்றார்.
அன்றிரவே பயத்திலே பிரசவ வலி வந்து விட ,பாரி இல்லாமல் போகவே அவளே பக்கத்து வீட்டாரை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றாள்.
சிறிது நேரத்திலே பாரியும் அவளை தேடி மருத்துவமனைக்கு வந்து விட்டான்.
அவன் வரும்வரை வலியை பொறுத்துக் இருந்தவள் அவனை பார்த்த நிம்மதியில் பிரசவ அறைக்கு சென்றாள்.
அவளின் கதறலில் வெளியில் இருந்த பாரி துடிதுடித்து போனான்.
பாரியின் துடிப்பினை அறிந்தோ அறியாமலே அவனின் பிள்ளை அழுகுரலுடன் வெளிவந்தது.
அடுத்த மூன்று நாட்களில் நங்கையை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் பாரி.
வீட்டிற்கு வந்தவளுக்கு அன்று மிரட்டிச் சென்ற கிருஷ்ணவேணியை நினைத்து ஒரு ஓரத்தில் பயம் இருந்தது.
ஆனாலும் வெளியில் சொல்லாமல் மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தாள்.
சரியாக பதிமூன்று நாட்கள் கழித்து மூவருமாய் குடும்பமாக கோவிலுக்கு சென்றன்ர். அவசர வேலை ஒன்று பாரிக்கு வந்து விட பாதியிலே அவன் அங்கிருந்து செல்லும் படி நேர்ந்தது.
வீட்டிற்கு வரும் வழியில் கிருஷ்ணவேணி சீனிவாசன் அனுப்பி இருந்த ஆட்களின் கண்ணில் பட்டாள் நங்கை.
அவர்கள் அவளையே பார்ப்பதை உணர்ந்த நங்கை வேகமாக நடக்க துவங்கிய நேரம் அவர்களும் பின் வர ,நங்கை மகனின் உயிரை காக்க வேண்டி மீண்டும் ஓடத் துவங்கினாள்.
அவளை பின்னாடியே துரத்தி வந்தவர்கள் ,”உனக்கு குழந்தைக்கு அப்பா யாருன்னே தெரியாதாமே. நான் வேணும்னா உன்னோட குழந்தைக்கு அப்பாவா இருக்கவா ” என்று அசிங்கமாக பேச
அவளுக்கு அதனை கேட்கும்போது பாரியின் ஞாபகமே வந்து கண்ணீர் துளிர்விட்டது.
“உன்ன கண்டிப்பா உன்னோட அப்பா கிட்ட நேர்த்திடனும் கண்ணா ” என்று அவனை இறுகணைத்தாள்.
அவளால் முடியும் வரையும் ஓடியவள் ,எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள்‌.
வீட்டிற்கு வந்தவளை அங்கிருந்தவர்களின் பார்வை ஏனோ ச்சீ என்பது போலே அவளுக்கு தோற்று விக்க , வேகவேகமாக துணிகளை அடுக்கத் தொடங்கினாள்.
இரண்டு பைகளில் ஒன்றில் பாரியின் உடையும் மகனின் உடையையும் வைத்தவள் , மற்றொன்றில் அவளின் உடையை எடுத்து வைத்தாள்.
மாலைப் போல் வந்தவனிடம் நடந்ததை கூறி இறுக அணைத்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.
“இங்க பாரு கண்ணம்மா ,நம்ம பையனுக்கு ஒன்னும் ஆகாது மா நீ கவலை படாதே .நாம வேறே எங்கையாவது போயிடலாம் .நீ அழுகாத கண்ணம்மா ” என்று அவளின் கண்ணீரை துடைத்தான்.
“நாம இல்லங்க நீங்க ரெண்டு பேரும் இப்பவே இந்த ஊரை விட்டு கிளம்ப தான் போறீங்க ” என்க
“என்ன சொல்ற நீ ” என்று கோபமாய் கேட்பவனை கண்ணீர் மல்க பார்த்தாள்.
“என்னால உங்களோட வர முடியாதுங்க .எனக்கு பயமா இருக்கு நான் செய்யாத தப்பா இருந்தாலும் அது என்னைய சுத்தியே தான் வரும். அது நம்ம பையனோட வாழ்க்கைக்கு நல்லது இல்லைங்க. என்னால உங்களோட வரமுடியாது. நான் ஒரு பாவப்பட்ட ஜீவன். அந்த பாவம் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில வரதை நான் விரும்பல “என்று சொன்ன அடுத்த நிமிடமே அவளின் கண்ணம் பழுத்திருந்தது பாரியின் அடியால்..
“என்ன பேசுற நீ ..?? நீ பாவப்பட்ட ஜீவனா..?? அது எங்க வாழ்க்கைய தொடர கூடாதா..?? நீ எனக்கு கிடைச்ச வரமா நான் நினைக்கிறேன். உன்னால மட்டும் தான் எனக்கு ஒரு குடும்பம் கிடைச்சிருக்கு. நீ இல்லைன்னா இது எதுவும் சாத்தியம் ஆகாது அதை புரிஞ்சிக்கோ முதல. உன்னோட குடும்பத்துக்கு தான் உன்ன பத்தியும் உன் தியாகத்தை பத்தியும் தெரியாது. ஆனா எனக்கு தெரியுமே நீ யாருன்னு. நீ இப்படி சொன்னதுக்கு எங்களைய நீ கொன்னு போட்டு இருக்கலாம் ” என்றவனின் கண்கள் கோவப் பழமாய் சிவந்திருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு தூரமா போய் தான் ஆகனும். அப்படி போக மாட்டேன்னு சொன்னீங்கன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் இது என்மேல சத்தியம் நானா கூப்பிடுற வரைக்கும் நீங்க என்னைய பார்க்க வரக்கூடாது. “என்று அவள் தலையில் வைத்து சத்தியம் செய்திட பாரியால் அவள் சத்தியத்தை உடைக்க முடியவில்லை.
“இப்போ நான் போறேன்.ஆனா நீ பண்றது ரொம்பவே தப்பு கண்ணம்மா” என்றவன் மகனோடு சேர்த்து நங்கையையும் இறுக அணைத்து அவள் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்தான்…
பின் பாரியையும் மகனையும் சத்தியத்தின் பேரில் அனுப்பி வைத்தவள் ,அவளும் பையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு ஊர் என தன் நாட்களை கழித்து எப்படியோ நான்காவது வருடத்தை அடி எடுத்து வைத்திருந்தாள். அந்த மாதிரி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் வழியில் தான் ஒரு இக்கட்டான சூழலில் ஆதினியின் தந்தையையும் தாயையும் சந்திக்க நேர்ந்தது.
பிரசவத்திற்கு சென்றபோது வண்டி பஞ்சராகி விட ,நங்கை தான் அவளுக்கு பிரசவம் பார்த்தாள். அதன்பின் ஆதினியின் ஊரிலே இருந்து அவள் நாட்களை கழிக்க துவங்கினாள்.
அதேப்போல் இங்கே பாரியும் குழந்தையுடன் சென்னை வந்தவன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தான். சிறிது சிறிதாக பணத்தை சேமிக்க துவங்கினான்.
காலங்கள் யாவும் வேகமாய் ஓடிட ,பாரியின் விடாமுயற்சியில் ஒரு சூப்பர் மார்க்கெட் துவங்கி ,அதில் வந்த வருமானத்தையும் சேமித்து வைத்து பிற்காலத்தில் ஒரு மாலையும் வாங்கி இன்றுவரை அது நன்முறையில் செல்கிறது….
************
அனைத்தையும் கூறி முடித்த பாரி ,சமையலறை சென்று தண்ணீர் குடித்து வந்தார்.
வசீகரனுக்கு தாய் மற்றும் தந்தையின் கடந்த காலத்தை கேட்டு கண்ணீர் வடித்தான்.
பின் ஓடிச்சென்று இருவரையும் அணைத்து ஆறுதல் கூறினான்.
” இத்தனை வருஷமா நீங்க பிரிஞ்சு இருந்துட்டிங்க. இனி நீங்க அப்படி இருக்க வேண்டாம் . அப்புறம் நான் என்னைக்குமே இந்த பாரி நங்கையோட மகனா தான் இருப்பேன் ” என்று இருவரின் நெற்றியிலும் இதழ் பதித்தான்.
“அப்புறம் நீங்க எப்படி மா என்னைய கண்டு பிடிச்சீங்க “என்க
“நான் உன்ன பெத்தவ தம்பி. பெத்தவளுக்கு தெரியாத தன் மகனை. அதுவும் இல்லாம உன்னோட வலது கையில ஒரு பெரிய மச்சம் இருக்கும். அது அன்னைக்கு நீ பேசும்போது தான் நான் பார்த்தேன். அது மட்டும் இல்லாமல் நீ நடந்துக்கிறது எல்லாமே உங்க அப்பா மாதிரியே இருந்தது டா. அவரோட பொருமை உனக்கு இருந்தது அதை வச்சி தான் கண்டு பிடிச்சேன் ” என்றவர் தன் மகனின் தலையை ஆசை தீர கோதி விட்டார்.
பின்னர் மூவரின் சபையும் கலைந்து போக ,அடுத்து செய்ய வேண்டிய வேலையை பற்றி சிந்திக்க துவங்கினான்.
அப்போது தூங்கி எழுந்த விபு வசீகரனிடம் வந்து “மச்சான் ” என்று அணைத்துக் கொண்டான்.
ஒரு நண்பணாய் அவனின் துக்கத்திலும் மகிழ்விலும் கூடவே இருந்து அவனை வழி நடத்தி செல்கின்றான்.
“மச்சான் எனக்கு நீ ஒரு உதவி பண்ணணுமே ” என்க
“சொல்லு டா என்ன பண்ணணும்னு. இந்த நண்பனோட வேலையே ஹீரோவுக்கு சேவை செய்யிறது தானே. சோ நீ சொல்லு நான் அதை செய்யிறேன் ” என்று அங்கலாய்த்து கொள்ள
” நீ இப்பவே ஆதினி ஊருக்கு போகனும் டா. சதாசிவம் அங்கில்க்கு நான் ஆரம்பிச்சி வச்ச பேக்ட்ரி பத்தி எதுவுமே தெரியாது. மிஷினரிஸ் மட்டும் தான் வாங்கி போட்டிருக்கு. நீ கொஞ்சம் அது என்னன்னு பாத்துக்கோ. சரியான சூப்பர்வைசரை வேலைக்கு போட்டு ஆதினிக்கு கொஞ்சம் எப்படி இதெல்லாம் பாத்துக்கணும் சொன்னா போதும் டா அவ பிக்கப் பண்ணிக்குவா.
அப்புறம் அம்மா இருந்த வீட்டை ரீனிவல் பண்ணணும் டா. அதுக்கு நீ சைட் மேனஜரை கூப்பிட்டு எப்படி மேக்கோவர் பண்றதுன்னு பார்த்து சொல்லு . இருக்கிற வீட்டை எந்த ஒரு சேஞ்சும் பண்ண வேணாம் சரியா ” என்று அடுக்கி கொண்டே போனவனை மலைப்பாக பார்த்தான் விபுனன்.
“மச்சான் இதோட நிறுத்திக்கோ டா .என்னால சத்தியமா முடியாது மீதியை நான் ஊருக்கு போன பிறகு சொல்லு ” என்று தலைக்கு மேல் கை வைத்தான்.
“தேங்க்ஸ் டா மச்சான் ” என்று கட்டிக்கொண்டான்.
“நீ போய் அங்க இருக்கிற வேலையை முடி எனக்கு இங்க கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு ‌அதை முடிக்கிறேன் ” என்றான் கூர்மையான பார்வையோடு…..

Advertisement