கூடு – 11

ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்

பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது

ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க…’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தன

கடைசியாய் நான் அவளைப் பார்க்கும் போது அவளுக்கு ஒரு பதினாலு வயது இருக்குமா…?’’ பரணி தன் மனதிடம் தானே கேள்விக் கேட்டுக் கொண்டான்

அந்த வயசுல அவளுக்கு என் மேல லவ் வந்து இருக்குமா…? இத்தனைக்கும் அவளை நான் அதிகம் பாத்தது கூடக் கிடையாது. கடவுளே என்னை சுத்தி என்ன நடக்குது….’’ 

பரணி செங்கன் பேசிச் சென்ற வார்த்தைகளுக்கு தன் மனதிற்குள் விளக்கம் தேட முற்பட்டு, அது முடியாத காரணத்தால் அது அவனுக்கு தீராத தலைவலியைக் கொடுத்தது.

பரணி அவர்கள் குடும்பத்திலேயே கோபத்திற்கு பேர் போனவன். அவர்கள் ஊர் திருவிழாவில் எப்பொழுதும் அங்காளி பங்காளிகள் சண்டை பட்டையைக் கிளப்பும்

அப்பொழுது எல்லாம் அவன் தந்தை எந்தப் பக்கம் நின்று குரல் உயர்த்திப் பேசுகிறாரோ, அந்தப் பக்கம் போய் நிற்பவன், வார்த்தைகள் சற்று தடிக்கும் போதே எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரு கைப் பார்த்துவிடுவான். யார் பக்கம் நியாயம் என்று எல்லாம் நின்று விசாரித்துக் கொண்டிருக்க மாட்டான்.  

அவர்கள் வழக்கத்தில் பேச்சுவார்த்தையோ, அடிதடியோ இரு தரப்புமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்கக் கூடாது என்று ஒரு வரன் முறை இருந்ததால் மட்டுமே பரணி இதுவரை சுதந்திரமாய் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான்

அவன் முரட்டு வீரம் அப்படி. அவன் எதிராளிக்கு முதல் அடிக் கொடுக்கும் போதே கையில் எதிராளியின் ரத்தக் கரையோடு தான் அவன் கரம் திரும்பும்

முதல் நாள் நாட்சியை பார்க்கும் போதே, அவளின் நிறம் மாறும் அந்த அடர் பழுப்பு நிறக் கண்களைப் பார்க்கும் போதே, பரணியின் மனம் அவனிடம் அனுமதிக் கேட்காமலேயே அவள் காலருகில், “நான் உன் சேவகன்..’’ என்ற ரீதியில் மண்டியிட்டு அமர்ந்திருந்தது

இதுவே வேறு யாரவாது அவர்கள் குடும்பத்தோடு இந்த அளவிற்கு மோதி இருந்தால், பரணியே அவர்களை ஒரு வழி செய்திருப்பான். ஏன் என்றால் அந்த அளவிற்கு பரணி தன் குடும்பத்தை நேசித்தான்

அதே சமயம் நாட்சி வந்து குமுறிவிட்டு சென்ற தினம் தான் முதன் முதாலாய் தான் எதையும் விசாரிக்காமல் அவர்களோடு சேர்ந்து நிற்பது தவறோ என்று சிந்திக்கத் தொடங்கினான்

பதினாலு வயது பெண் குழந்தையை தந்தை அடைத்து வைத்து சித்ரவதை செய்திருப்பார் என்பதையும் பரணியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை

எது எப்படி இருந்தாலும் இனி தான் மட்டுமே அவளுடன் துணை நின்று அவளுக்கான நியாயத்தை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்

தன் தந்தையின் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கை ஒரு புறம் அவனை வெட்கப்பட வைத்தது. அவளுக்கு இருக்கும் நம்பிக்கை 17  வருடம் தோழனைப் போல தாங்கி வளர்ந்த மாமனின் மீது தனக்கு ஏன் இல்லாமல் போயிற்று என்று வேறு ஒரு புறம் வேதனைக் கொண்டான்

இனி என்ன நடந்தாலும் அவன் அவள் புறமே நின்றுப் போராட விரும்பினான். அதனாலேயே அவள் மீதான வரன் முறையற்ற உரிமைக்காக மட்டுமே அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தான்

அதே சமயம் தன் குடும்பத்தை வெளி சமூகத்தின் முன்பும் அவனால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அதனாலேயே அவசர அவசரமாய் அவள் அவர்களுக்கு ஏற்படுத்திய சிக்கல்களுக்கு தீர்வு கண்டவன், உடனே தன்னை மணந்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவளுக்கு ஏற்படுத்தினான்

இன்றைக்கு இரவு அவள் குடியிருப்பிற்கு அவளைச் சென்று சந்தித்து அது பற்றி பேசவும் எண்ணி இருந்தான். உனக்கு யார் எல்லாம் என் குடும்பத்துல கொடுமை பண்ணினாங்களோ அவங்களுக்கு நீயே தண்டனைக் கொடுஉனக்கு துணையா நான் நிக்குறேன்…’ என்று தன் நிலையை அவளுக்கு உணர்த்த எண்ணி இருந்தான்

ஆனால் திருமணம் முடிந்ததும், அவள் கரத்தை பிடித்ததற்கே வேலு நாட்சியா பார்த்த பார்வையில் முற்றிலும் சிதைந்திருந்தான். அடேய் அற்பனேஎன்னைத் தொடும் தகுதி உனக்கு இருக்கிறதா..?’ என்று கேட்காமல் கேட்டது அவள் பார்வை.  

இப்படியே அவன் தெளிவாய் குழம்பிக் கொண்டிருக்க, அவன் செல்லிடைபேசி அவனை அழைத்தது. தன்னை அழைப்பது பயிற்சியாளர் சிதம்பரம் என்றதும், அலைபேசியை இயக்கி காதில் வைத்தவன், மரியாதையாய், “சொல்லுங்க.. சார்…’’ என்றான். அவரோ அந்தப் பக்கம் மிக மகிழ்ச்சியாய் பேசினார்

லே பரணி….இந்தியால நடக்குற லீக் ட்வென்டி புட் பால் பெஸ்டிவல்ல டைகர்ஸ் அணி சார்பா விளையாட உன்னை ஏலம் எடுத்து இருக்காங்கலே…. நீ தாம்லே கேப்டன்…. இந்த வாட்டி நம்மக் கூட வெளிநாட்டு ப்ளேயர்ஸ் விளையாடுறதால நமக்கு நல்ல ட்ரைனிங் கிடைக்கும்லே….. வர வெள்ளிக்கிழமை டெல்லிக்கு போகணும்லேஅங்க கான்ட்ராக்ட் சைன் பண்ணிட்டு அப்படியே அங்கயே ப்ராக்டிஸ் ஜாயின் பண்ணிடனும்லே…’’ 

அவர் பேசப் பேச அவனுள்ளும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து. “கண்டிப்பா மாஸ்டர்.. இந்த வாட்டி நம்மளை புறம் பேசின வடநாட்டுக்காரங்க முகத்துல கரியைப் பூசியே ஆகணும் மாஸ்டர்….’’ விளையாட்டை பற்றிய பேச்சை தொடங்கியதும் புது உற்சாகம் அவனுக்குள்

அந்தப்பக்கம் அவரும், “சரிலே…. சரிலே…” என உதட்டில் மலர்ந்த முறுவலோடே அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “மாஸ்டர்…. இப்போ கிரௌண்டுக்கு வர முடியுமா…?’’ என அவன் கேட்கவும்,

 

லே பரணி…. இந்நேரத்துல க்ரவுண்டுக்கு வந்து என்ன செய்யப்போறோம்.’’ அவர் அப்படி வினவியதும், “தெரியல…. மாஸ்டர்இப்போ நீங்க சொன்ன விசயத்தைக் கேட்டதும், ரொம்ப சந்தோசமா இருக்கு மாஸ்டர்…. எனக்கு உடனே 400 மீட்டர் ரன்னிங் ஓடனும் போல இருக்கு…’’ 

அவன் அப்படி சொன்னதும் மேலும் பலமாய் சிரித்தவர், “லேய் உன் பிடிவாதம் இருக்கேசரி சரி வா நானும் வறேன்’’ என்றவர் போனைத் துண்டிக்கவும், பரணி பயிற்சிக்கு தனக்கு தேவைப்படும் உடை மற்றும் காலணிகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு தன் வண்டிச் சாவியை ஆள்காட்டி விரலில் வைத்து சுழற்றிய படியே வேக வேகமாய் படிகளை தாவி இறங்கிச் சென்றான்.

மாலை நான்கு மணிக்கு பயிற்சி மைதானத்தை சென்றடைந்தவன், கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டான். அவன் நிர்ணயித்த இலக்கிற்கு பத்து நொடிகள் மட்டுமே தாமதம் என்ற அளவிற்கு முன்னேறி இருந்தான்

அவனைப் பார்த்த பயிற்சியாளர், “கலக்குறலே பரணி…. இந்த வாட்டி 400 மீட்டர் ரன்னிங்ல ரெக்கார்ட் ப்ரேக் பண்ணிடுவ போல…’’ என்று அவனை  பாராட்ட, மேலும் முனைப்பாக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்

சூரியன் மறைந்து மாலை மயங்க தொடங்கவும், சிதம்பரம் அவனைப் பார்த்து, “லே பரணிகிளம்புலேநாளைக்கு மீதி ப்ராக்டிஸ் பாத்துக்கலாம்…’’ என்று சொல்ல, சரி என்பதாய் தலை அசைத்தவன்,  

நாளைக்கு காலையில பாக்கலாம் மாஸ்டர்..’’ என்றபடி தன் டுகாட்டி வண்டியை நோக்கி நடந்தான். மனதில் மீண்டும் நாட்சியாவின் நினைவுகள் உலா வரத் தொடங்கின

தற்சமயம் டெல்லி செல்வதும் நல்லது தான். திடீர் கல்யாணத்தை சுவீகரிக்க அவளுக்கும் நேரம் தேவைப்படுமே.கொஞ்ச நாட்கள் அவளிடம் இருந்து தள்ளி இருந்தால் அவளுக்கே என்னை தேட தோன்றலாம்..’’ 

இப்படி பலவாற சிந்தித்தவன், வீடு வந்ததும் தன் யோசனையை எல்லாம் தள்ளி  வைத்து விட்டு புன்னகை மன்னனாக வீட்டிற்குள் நுழைந்தான். வரவேற்பறையில் மொத்தக் குடும்பமும் அமர்ந்து ஏதோ தமிழில் டப் செய்யப்பட்டு ஒலி பரப்படும் ஹிந்தி சீரியலை உச்கொட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சோபாவில் இருந்த ரிமோட்டை கையில் எடுத்தவன், செய்தி சேனலுக்கு தொலைகாட்சியை மாற்ற, மொத்தக் குடும்பமும் யார்டா அந்த வில்லன் என்பதைப் போல இவனை நோக்கி திரும்பியது

மகனைக் கண்டதும் செல்வாம்பிகையின் முகம் மட்டும் புன்னகையில் விரிய, “எங்கையா சொல்லாம கொல்லாம சாயங்காலம் வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பீட்டீக போல…. சத்துக் கஞ்சி போட்டு வந்து உன்னை தேடினா ரூம்ல ஆளையே காணோம் தம்பி…’’ 

அவனிடம் பேசிக் கொண்டே அவர் எழுந்துக் கொள்ள, சீரியல் தடைப்பட்ட எரிச்சலில் அவன் அருகில் வந்த மதுஸ்ரீயோ, “என்னக் கொழுந்தனாரே…. என் தங்கச்சிக் கூட குடும்பம் நடத்த போகாமாஇங்க உக்காந்து செய்தி சேனல் பாத்துட்டு இருக்கீகஒரு வேளை என் தங்கச்சி வாசலோட உங்களை விரட்டி விட்ருச்சோகீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத பரம்பரை தான உங்கப் பரம்பரை…. அதுதான் சத்தம் போடாம வீட்டுக்கு வந்துட்டீறோ…’’ 

செல்வாம்பிகை மகனுக்கு சத்துமாவுக் கஞ்சி கொண்டுவர செல்ல, மதுஸ்ரீ அத்தை அருகில் இல்லாத தைரியத்தில் தன் கொழுந்தனை கலாய்க்கத் தொடங்கினாள்.  

மதுஸ்ரீ அப்படி சொல்லவும் விழுந்து விழுந்து சிரித்தவன், “மயினி மயினியாரு நானு போயி அவ வீட்டு வாசலோட திரும்பி வந்தேன்அதை நீங்க கண்டீகசும்மா அம்மா வருத்தப்படக் கூடாதேன்னு எல்லார் முன்னாடியும் நான் அப்படி சொன்னேன் மயினி… 

இந்த பரணியோட ரேஞ்சே இனி வேற…. இன்னும் ஒரு வாரத்துல டெல்லி போறேன் மயினி டைகர்ஸ் அணி தெரியுமாஹுஹும் உங்களுக்கு எங்க ஸ்போர்ட்ஸ் பத்தி தெரியப் போகுது….ஹிந்தி சினிமாவோட கனவுக் கன்னி தாராதத் தெரியுமில்ல…. அவங்க ஏலம் எடுக்க போற புட் பால் டீமுக்கு கேப்டன் நாந்தேன்.

இனி ஐயாவுக்கு ஒரே மஜாதான் ஒவ்வொரு கோல் விலுகுறப்பவும் கட்டிப் பிடிப்பாளோ முத்தம் கொடுப்பாளோ யார் கண்டா? ஆனா எதுக் கொடுத்தாலும் வஞ்சனை இல்லாம வாங்கிக் கிட வேண்டியதுதேன். ஏன்னா ரொம்ப நல்லவனா இருந்தா உலகம் நம்மை மதிக்க மாட்டேன்கிது மயினி…’’

அவன் அப்படி சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கவும், மதுஸ்ரீ, ‘..’ என ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அவன் தாய் சத்துமாவுக் கஞ்சி கொண்டுவர, சிவாத்மிகா அவனிடம் இருந்து ரீமோட்டை பறித்து மீண்டும் ஹிந்தி தொடரை வீட்டில் அலற வைத்தார்

அவரிடம் இருந்த டம்ளரைப் பெற்றுக் கொண்டே, அவருக்கு புரியும் விதத்தில் தான் டெல்லி செல்லப் போவதை அவருக்கு தெரிவித்தான். அவரும் மகிழ்ச்சியில், “சரி ஐயாகொஞ்ச நாள் நீங்களும் தூரம் தொலைவு இருந்துட்டு வாங்க. அப்பதான்  பிரச்சனைக் கொஞ்சம் ஓயும்…’’ என்றபடி மகனின் அருகில் அமர்ந்துக் கொண்டார்

தாயும், மகனும் சம்பாசனையில் மூழ்க, மதுஸ்ரீ நாடகத்தில் மூழ்கினாள். அப்பொழுது தீடீர் என அவர்கள் வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்க, அனைவரும் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் வாயிலுக்கு விரைந்தனர்

முதலில் புகை மூட்டத்தில் அவர்களுக்கு எதுவும் கண்ணனுக்கு புலப்படவில்லை. சற்று நேரம் கழித்து புகை கொஞ்ச கொஞ்சமாய் மறைய, உருவம் வெளிப்பட்டது

கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன் உலகத்துல இவன் போல ஒரு கிறுக்கனும் பொறக்கவில்ல…’’ என்ற பாடல் உச்சஸ்தாயிலில் ஒலிக்க, அடர் நீல உடையணிந்து, கண்களில் குளிர்க் கண்ணாடி அணிந்த நாட்சியா தன்னுடைய, ஆல்பா ரோமியோ காரில் ஸ்டைலாக சாய்ந்து நின்றபடி இருந்தாள்.பாடல் தாளத்திற்கு ஏற்ப, தலை லேசாய் இடமும் வலமும் ஆடிக் கொண்டிருந்தது.      

அருகில் ராஜபாளைய வகையை சார்ந்த நாய் ஒன்று காளியின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல, அவள் காலடியில் மடங்கி அமர்ந்திருந்தது

அவளின் பின்பக்கம் கைகையைக் கட்டிக் கொண்டு செங்கன் நின்றுக் கொண்டிருந்தான். நாட்சியா தலைக்கு குளித்த முடியை சுதந்திரமாய் விரித்து விட்டு இருந்தாள். நெற்றியில் அடர் நீல நிற ஒற்றைக் கல் போட்டு.

ஒரு காலை மடக்கி காரிலும், மறு காலைத் தரையிலும் ஊன்றி நின்றிருந்தவள், பட்டாசின் ஒலி முழுமையாய் நிற்கவும், காரில் ஊன்றி இருந்த காலை மெதுவாய் இறக்கி, கண்களில் இருந்த குளிர்க் கண்ணாடியை வலக் கரத்தால் ஸ்டைலாக கழற்றிய படியே அவர்கள் வீட்டை நோக்கி நடந்தாள்

பரணி முழுதாய் திகைத்திருந்தான். அது அவளைக் கண்டா, அவள் தோரணையைக் கண்டா, அல்லது அவள் வந்து இறங்கிய உயர் வகை ஸ்போர்ட்ஸ் காரைக் கண்டா அவனுக்கே விளங்கவில்லை

ஒரு டுகாட்டி பைக் வச்சிக்கிட்டு என்ன அலப்பறை கொடுப்பேன்இவ ரேஞ்சே வேற போலையே…. அசலாட்டா வந்து ஆல்பால இறங்குறா….இவ புடவை கட்டினாலே கண்ணை இவ மேல இருந்து திருப்ப முடியாதுஇப்ப கவுனை வேற போட்டுட்டு வந்து நிக்குறா…. எம் பிரம்மச்சர்ய விரதத்தை முடிச்சி வைக்காம அடங்க மாட்டா போலையே…’’ 

அவன் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே நாட்சி அவனை நெருங்கி இருந்தாள். வழக்கம் போல அவன் முன் உச்சி முடியை ஆள்காட்டி விரலால் கலைத்து விளையாடியவள்

காலைல நீ காட்டினது ஆக்சன் படம்இப்ப நான் காட்ட வந்து இருக்குறது ஹாலிவுட் படம்…. என்ன மாமோய் படம் பாக்க ரெடியா…?’’ அவள் தொடுகையில் உறைந்திருந்தவன், அவள் கேள்வி புரிந்து நிமிரும் போது வலது காலெடுத்து அவன் வீட்டிலும், வாழ்க்கையிலும் நுழைந்திருந்தாள் வேலுநாட்சியா

பந்தமாகும்.