Advertisement

நாட்சியா அணிந்து இருந்த காட்டன் டாப்ஸ் மீறி அவன் பார்வை பயணிக்க, தன் நீண்டக் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

அந்த செய்கையில் தன்னிலை மறந்த பரணி, அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து அவள் வாசம் பிடித்தபடி, “ம்…’’ மயிலு மாமன் வாங்கின ட்ரெஸ் உனக்கு சும்மா நச்சுன்னு இருக்குடி..’’ என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ள,

அவனிடமிருந்து சற்றே விலகி அமர்ந்தவள், “நல்லா தூங்கி மூணு நாள் ஆச்சு மாமா…. ப்ளீஸ்… என்ன தூங்க வையேன்..’’ என்றவள் அமர்ந்து இருந்தவன் மடி மீது தன் தலைசாய்த்து கண் மூடிக் கொள்ள, பரணி நொந்தே போனான்.

“ஹும்… கூட விளையாடுன வடநாட்டுப் பயலுகளை கடுப்பேத்த அந்த தாராகிட்ட வாங்கின முத்தம் இப்படி என் வாழ்க்கையிலேயே விளையாடும்னு தெரிஞ்சி இருந்தா… அவளை கிரவுண்ட்ல தள்ளிவிட்டு நல்ல பேர் வாங்கி இருப்பேனே… சின்ன முத்தம்… அதைக் கொடுத்தது பெரிய குத்தம் மாதிரி பேசிட்டு இருக்காளே என் பொண்டாட்டி..’’

என பரணி வெளிப்படையாக புலம்ப, நாட்சியா விலுக்கென அவன் மடியில் இருந்து எழுந்து அமர்ந்தாள். “எதுடா சின்ன விஷயம்…. அன்பை வெளிப்படுத்த கொடுக்குறது முத்தம்னு அந்த தாரா ஓவரா பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கா…

இரு இரு என் பர்சனல் பாடிகார்ட் ராஜேஷ் மேலயும் எனக்கு ரொம்ப அன்பு இருக்கு… இப்போ வேணா போய் நானும் அவன் கன்னத்துல ஒரு முத்தத்தை கொடுத்து என் அன்பை நிரூபிச்சிட்டு வரவா…?’’

நாட்சியா அந்த கேள்வியை கேட்டு முடித்த அடுத்த நொடி, பரணியின் கைகள் நாட்சியின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது. “என்ன வாய் ரொம்ப நீளுது. கொன்னு புதச்சிருவேன். யாரு யாருக்கு முத்தம் கொடுக்குறது….?’’

அவளிடம் உறுமி முடித்தவன், அங்கிருந்த ஜன்னலின் திரைச்சீலையை விளக்கி விட்டு, முதுகு காட்டி நின்றுக் கொள்ள, நாட்சியா சற்றே அழுகை குரலில்,

“உனக்கு இருக்க அதே பொசசிவ்னஸ் தானே எனக்கும் இருக்கும். நீ மட்டும் இன்னொருதிக்கிட்ட முத்தம் வாங்கலாமா…? போடா மேல் சாவனிஸ்ட்… நான் கீழ போறேன்..’’

நாட்சியா அங்கிருந்து கிளம்ப முயல, வேகமாய் அவள் புறம் திரும்பியவன், அதே வேகத்தோடு அவளை அணைத்துக் கொண்டான். “சாரி மயிலு… நீ இந்த அளவுக்கு பீல் பண்ணுவன்னு எதிர்பாக்கலடி… அந்த நேரத்துல என்னோட ஆபோசிட் டீம் கேப்டன் அந்த ரோஷன் மூஞ்சி, தாரா எனக்கு  முத்தம் கொடுக்கவும் உடஞ்சி போன முட்டை மாதிரி கேவலமா மாறுச்சா….

நான் அந்த சந்தோசத்துல வேற எதையும் பெருசா எடுத்துக்கல…. எங்க டீம் ஜெயிக்கிறப்ப எல்லாம் தாரா பார்டி கொடுத்தா… நான் தான் டீம் கேப்டன் நானே போகலைனா எப்படி… ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் மயிலு…. உன் விரல் நகம் கூட எனக்கு பித்து பிடிக்க வைக்குது மயிலு…

அந்த தாரா முத்தம் கொடுத்தப்ப அடிபட்ட கன்னத்துல யாரோ ஸ்பான்ஞ் வச்சி துடச்சி விட்ட பீலிங் தான் இருந்தது. வேற ஒரு மண்ணும் தோணல. ப்ளீஸ் இந்த மாமாவ புரிஞ்சிக்க மயிலு… இனி என் லைப் முழுக்க அந்த மாதிரி ஒரு தப்பை நான் பண்ணவே மாட்டேன் மயிலு… என்ன நம்புடி..’’

அவன் பேசிக் கொண்டே நாட்சியாவின் மீது இருந்த தன் அணைப்பை இறுக்க, நாட்சியாவும் பதில் பேசாமல் அவனை அணைத்து தன் மன்னிப்பை தெரிவித்தாள்.

அவளின் இறுகிய அணைப்பில் தன்னை மன்னித்து விட்டாள் என்றதை உணர்ந்துக் கொண்ட பரணி, அவளின் காதருகில் குனிந்து, “தாங்க்ஸ் மயிலு…’’ எனப் போதையாய் கூறினான்.

நாட்சியா அவன் மார்பில் தன் முகத்தை மறைக்க முயல, அவளை அப்படியே அள்ளிப் படுக்கையில் விட்டவன், அவளை போதையாய் பார்த்துக் கொண்டே,

“எனக்கு ஒரு முத்தம் கூட ஒழுங்கா கொடுக்க தெரியலைன்னு சொன்ன இல்ல… இப்ப பாரு உன் மாமனுக்கு என்ன என்ன தெரியும்னு….? கல்யாணம் ஆகி இத்தனை நாள் என்னை கன்னிப் பையனா சுத்த விட்ட இல்ல…. உனக்கு இருக்குடி பனிஷ்மென்ட் அதுக்கு எல்லாம்..’’

அவளிடம் சரசமாய் பேசிக் கொண்டே இருந்தவன், அவள் அருகில் அமர்ந்து கண் இமைக்கும் நொடிக்குள், அவள் பாதத்தை தன் கைகளில் ஏந்தியவன், கால் கட்டை விரலை தன் வாய்க்குள் அனுப்பி இருந்தான்.

நாட்சியாவிற்கு  எங்கேயோ எப்போதோ, மொத்த மூளை நரம்புகளும் முடியும் இடம் பாதத்தின் கால் கட்டை விரல் என்று படித்தது நினைவிற்கு வந்து தொலைத்து.

காலையில் எழுந்ததும், முதலில் இருகால் பெருவிரல்களில் நீர் விட்டால் போதும் மொத்த தூக்கமும் பறந்து விடும் என்ற தகவலையும் அறிந்து அதை படிக்கும் காலத்தில் செயல் படுத்தியும் இருக்கிறாள்.

இப்பொழுது பரணியின் சூடனா வாய்க்குள் சிக்கி இருந்த அவளின் கால் கட்டை விரல் அவள் உடல் முழுவதையும் அனலில் இட்ட புழுவாய் துடிக்க செய்ய, அவன் செய்கையை தடுக்கும் வகை தெரியாமல்,

“மா….. மா..’’ என்று அதிகரித்துவிட்ட இதயத் துடிப்போடு திக்கி திணறி அழைத்தாள். “இதுக்கே இப்படித் திக்கினா எப்படி மயிலு… இன்னும் நீ பாக்க வேண்டியது எவ்வளோ இருக்கு….உன் மாமன் பனிஷ்மென்ட் கொடுக்குறதுல உன்னை விட கெட்டிக்காரன் மயிலு..’’

என்றவனின்  உதடுகள் மேலும் முன்னேற, நாட்சியா மெல்ல மெல்ல வேறு உலகில் சஞ்சரிக்க தொடங்கினாள். அவன் கைவிரல்கள் கொண்டு அல்லாமல், பூவை அவள் உடலை பரணி தன் வன் உதடுகள் கொண்டு படித்தான்.

நாட்சியாவின் வெற்று முதுகில் இவன் இதழ் பதித்ததும் கூசி சிலிர்ந்து அடங்கிய பூனை முடிகளை வியப்பாய் கண்டவன், மீண்டும் மீண்டும் அந்த முடிகள் குத்திட்டு எழுந்து பின் அப்படியே சரிவதைக் தொடர்ந்து அவன் வெண் முதுகில் முத்தமிட,

ஒரு கட்டத்திற்கு மேல், கூச்சம் தாங்க முடியாத நாட்சியா, புரண்டு படுத்து, விடாமல் தன்னை இம்சித்துக் கொண்டிருந்த பரணியின் வன் உதடுகளை தன் மென் உதடுகளால் சிறை செய்தாள்.

யார் தொடங்கியது, யார் முடித்தது எனப் புரியாமலேயே அங்கே அழகிய தாம்பத்தியம் ஒன்று உதயமாகியது. பரணி தன்னால் முடிந்த மட்டும் நாட்சியாவை இன்பத்தின் வாயிலில் நிறுத்தி துடிக்க வைத்தான்.

தாங்க முடியாத தருணங்களில் நாட்சியும், தன் பற்களால் அவன் உடலில் தன் தடம் பதித்து அவன் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கினாள்.

அவள் அன்பு மணாளனும் அவளின் இனிய தண்டனைகளை சொக்கும் சிரிப்புடனே பெற்றுக் கொண்டான். இருவரும் மீண்டும் பூமிக்கு வர கிட்ட தட்ட மூன்று மணி நேரங்கள் கடந்து இருந்தது.

நாட்சியா முற்றிலும் கலைந்து இருந்தாள். அவளின் நீண்ட கூந்தல் மட்டுமே ஆடையாய் அவள் மேனி தழுவி இருந்தது. சோர்வு உடலை ஆக்கிரமித்து இருந்தாலும், அவள் முகத்தில் உலகையே வென்ற மகிழ்ச்சி மிளிர்ந்துக் கொண்டிருந்தது.

பரணியின் முடியடர்ந்த மார்பில் தன் தலையை சாய்த்திருந்தவள், “கலிங்கா…. ஐ… லவ் யூடா..’’ என மார்பில் முத்தமிட்டு சொல்ல, அவளை இறுக்கிக் கொண்ட பரணியும், அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, “மீ டூ மயிலு..’’ எனக் காதலாய் உளறினான்.

“அவன் மார்பில் இருந்த தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள்..சற்றே கலங்கிய கண்களோடு… “எப்பவுமே..’’ என சொல்ல பரணி துடிக்கும் அவள் இதழ்களில் வன்மையாய் ஒரு முத்தத்தை பதித்தவன்,

“என்னை அப்படி பாக்காத மயிலு… உன்ன விட்டு இந்த மாமன் எங்கயும் போக மாட்டேன்… இந்த நிமிஷம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா…? அப்படியே சந்தோசத்துல செத்து போகலாம்னு இருக்கு…. பரணி இப்போ இப்போ ஒண்ணுமே இல்ல மயிலு… உன் வெள்ளையான உள்ளங்கால் நடுவுல கருப்பா சின்னதா ஒரு மச்சம் இருக்கே….

அந்த மச்சம் மாதிரி உனக்கே தெரியாம உன் உடம்புல கரைஞ்சி நுழைஞ்சிட்டேன் மயிலு… உசுருகுள்ள நுழைஞ்ச பொண்ணோட உடம்புக்குள்ள நுழையும் போது…அப்பா….. இங்க உடம்பை மனசு ஜெயிக்குது மயிலு…. காதலோட ஒரு பொண்ணோட கூடும் போது சொர்க்கம் இப்படி தான் இருக்கும்னு கண்ணு முன்னாடி வந்து போகுது….இல்ல மயிலு…. மாமன் ரொமான்ஸ் எப்புடி….?’’

அதுவரை உணர்சிகளின் பிடியில் உளறிக் கொண்டிருந்தவன், கடைசி வார்த்தைகளை முடிக்கும் போது சற்றே நகைச்சுவை ரசத்தை தன் சொல்லாடலில் கொண்டுவர,

அவன் மூக்கை பிடித்து திருகியவள், “ஜஸ்ட் பாஸ் மாமா… நான் படிச்ச ரொமான்ஸ் புக்ல எல்லாம் ஹீரோ ஹீரோயினை விடிய விடிய புரட்டி எடுப்பான்… நீ கொஞ்சம் ஸ்லோ பிக் அப் தான்… பட் இட்ஸ் ஓகே நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்….’’

அவள் சற்றே சலிப்பாய் சொல்வதைப் போல நடிக்க, “ஏய் புரட்டி எடுக்க நீ என்ன கொத்துக் கறியா..? அதென்ன விடிய விடிய…. உங்க கதைல வர ஹீரோ எல்லாம் மனுசனா இல்ல மிசினா…. எனக்கு இப்பவே தூக்க தூக்கமா வருது மயிலு ப்ளீஸ் தூங்கலாம்…’’

எனக் கெஞ்ச துவங்க, அவன் மார்பில் வாகாய் சாய்ந்துக் கொண்டவள், “ஓகே… ஓகே பஸ்ட் நாள் ரொம்ப டயடா இருக்கேன்னு தூங்க அலோ பண்றேன். தினமும் இது தான் சாக்குன்னு… டயடா இருக்குன்னு டயலாக் சொல்லிட்டு சீக்கிரம் தூங்க கூடாது சரியா..?’’

அவள் அவனை வார துவங்க, “பாவம் என் பொண்டாட்டி மூணு நாளா சரியா தூங்கலையேன்னு என் ஆசையை எல்லாம் அடக்கிட்டு தூங்க சொன்னா  என்னையவா சீண்டி பாக்குற… உன்ன எல்லாம்….’’

“ஆ… முரட்டு மாமா மெதுவா….ஐயோ…’’ அதற்கு மேல் அங்கே நாட்சியின் சிணுங்கல் ஒலி மட்டுமே அந்த அறை எங்கும் ஒலித்தது. இந்த முறை நாட்சி தன்னை மீறி பரணியின் மார்பில் உறங்கி இருந்தாள்.

அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த பரணியும் கைக்குள் தன் உலகத்தை அடக்கிவிட்ட திமிரில் அப்படியே உறங்கிப் போனான்.

இருவரும் சூழல் மறந்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க, புலரப் போகும் விடியல் இருவரின் மன நிம்மதியை மொத்தமாய் சுருட்டி ஏப்பம் விட காத்துக் கொண்டிருந்தது.

கூடு நெய்யும்.

Advertisement