Advertisement

அதற்கு மேல் தாங்க முடியாதவன், நேரே அவள் அருகே சென்று நின்று அவள் கரம் பற்றி எழுப்பினான். அவன் அவள் கரம் பற்றவும், நாட்சியா துள்ளி விலக முயன்றாள்,

உடனே அவள் காதின் அருகில் குனிந்தவன், “இதுவரைக்கும் உன்ன ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்ல. சும்மா தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி துள்ளிட்டே இருந்தேன்னு வையி…. இந்த ரூம் கதவை லாக் பண்ணிட்டு..’’ அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிர்ச்சியில் கண்கள் விரிய, நாட்சியா தன் துள்ளலை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.

அவள் கன்னத்தில் லேசாக தட்டியவன், “குட் கேர்ள்.’’ என அவளுக்கு சான்றிதல் கொடுத்துவிட்டு, அவன் பிடியை விடாமல் ஏறக் குறையை அவளை அந்த அறையை விட்டு இழுத்துக் கொண்டு சென்றான்.

வெளியே இருந்த ராஜேஷ் இவர்களை அதிசயமாய் பார்க்க, “மிஸ்டர் ராஜேஷ் நாங்க போர்த் ப்ளோர்ல இருக்கோம். ஏதாவது எமர்ஜென்சினா கால் பண்ணுங்க. பிரேமை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. உங்க மேம் ரெப்ரஷ் ஆனதும் கீழ வந்துடுவோம்..’’ என சொல்லிக் கொண்டே நாட்சியாவோடு லிப்டில் நுழைந்தான்.

கீழே இருந்த ஆரவாரத்திற்கு அப்படியே எதிர் பதமாய் நான்காம் தளம் பெரும் நிசப்தத்தில் இருந்தது. தளத்தின் காரிடார்களில் மங்கிய வெளிச்சம் மட்டுமே இருந்தது.

ஏற்கனவே வைதியலிங்கத்தை சந்தித்து அறை சாவியை பெற்றுக் கொண்டிருந்ததால், நேராய் 470 என்ற எண் கொண்ட அறையை திறந்தவன், நாட்சியோடு உள்ளே நுழைந்தான்.

இருவரும் உள்ளே நுழையவும், அந்த தானியங்கி கதவு தன்னைப் பூட்டிக் கொண்டது. அறையில் பெரிதாய் பொருட்கள் எல்லாம் இல்லை. ஒருவர் படுத்து உறங்கக் கூடிய கட்டில், அதில் பழையதாய் ஒரு மெத்தை, அருகில் ஒரு டீபாய், ஓரமாய் ஒரு குளிர்சாதனப் பெட்டி.

பரணி மனதிற்குள், ‘வெளிய பில்டிங் என்னவோ கோட் சூட்டு போட்ட மாதிரி அழகா தான் இருக்கு. ரூம் என்னடான்னா இத்துப் போன பட்டா பட்டி டிராயர் கணக்கா இருக்கு… கொடுமைடா சாமி…’

அவன் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருக்க, நாட்சியோ, “பிரேம் இருந்த ரூம் கூட ஓகேவா இருந்தது. நான் அங்கயே ரெப்ரெஷ் ஆகி இருப்பேன். நல்லது பண்றேன்னு எப்ப பாரு எதையாவது லூசுத் தனமா பண்றது.”

நாட்சியா தனக்குள் புலம்பிக் கொண்டே பரணி கட்டில் மேல் வைத்து இருந்த கவர்களை பிரித்து உள்ளே இருந்த உடைகளை வெளியே எடுக்க தொடங்க, பரணி தன் கவனத்தை நாட்சியாவின் புறம் திருப்பினான்.

ஏனோ அவளைக் கண்டால் மட்டும் பொங்கும் உணர்வுகள், வழக்கம் போல ரத்த ஓட்டத்தை எகிற வைக்க, பரணி நாட்சியாவை மெதுவாய் நெருங்கி அவளை பின்புறமாய் அணைத்தான்.

“டேய் மாமா… ஆ…. ராஸ்கல்… கையை எடு… அம்மா..’’ அதற்கு மேல் நாட்சியாவால் பேச முடியாமல் போனது. அவளைப் பின் புறம் அணைத்து இருந்த பரணி, தன் கூர்மையான நாக்கால் நாட்சியாவின் மென் காது மடல்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அதோடு அவள் எதிர்பாராத நேரம், அவன் நாக்கு அவன் காதிற்குள் சென்று ஓவியம் தீட்ட, நாட்சியாவின் வாய் பேச்சு முழுதும் அடங்கித் தான் போயிற்று.

கண்களை மூடிய நாட்சியா, அப்படியே அவன் பிடியில் சுகமாய் தன்னை தொலைத்து விட்டு நின்றாள். அந்த நேரம், வெண்ணிற உடை பறக்க அனைவர் முன்னிலையிலும் ஓடி வந்த தாராதத் பரணியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த காட்சி அவள் மன திரையில் விரிய, திடுக்கிட்டு விழித்த நாட்சியா தன பலம் மொத்தமும் திரட்டி பரணியை தள்ளினாள்.

பரணி சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தையாய், “மயிலு…’’ என அவளை ஏக்கத்தோடு பார்க்க, “டேய் மாமா மயிலு குயிலுன்னு கொஞ்சுன உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…. காலைல வந்து தாம் தூம்னு குதிச்ச.. இப்ப என்ன வந்து கொஞ்சல் வேண்டி கிடக்கு…

இன்னும் பெரிய மாமா, தாத்தா, சின்ன மாமா எல்லாரும் ஜெயில்ல தான் இருக்கங்க போலையே….உங்க அம்மா நல்ல காலத்துலையே நீங்க எல்லாம் சாப்பிடலேன்னா சாப்பிடாது… பாவம் என்ன செஞ்சிட்டு இருக்கோ.. மது அக்காவுக்கு இது தான் மாசம். இந்த நேரத்துல மாமா கூட இருக்கணும்னு ரொம்ப எதிர்பாப்பா…இல்ல..அவங்களை வெளிய எடுக்க சார் என்ன வெட்டி முறிச்சிட்டு வந்தீங்க..’’

அவனைப் பார்த்து அவள் நக்கலாய் கேட்கவும், “நாளைக்கு காலைல எல்லாரும் வீட்டுக்கு வந்துடுவாங்க மயிலு. அவங்களுக்கு பதிலா எங்க மாமா பரஞ்சோதிய சரண்டர் ஆக சொல்லி இருக்கேன். அந்த மனுஷனுக்கு கொஞ்ச நாள் உள்ள கிடந்தா தான் புத்தி வரும். உன் மாமான் ஆல் வேஸ் கிரேட் மயிலு.

எங்க வீட்ல எல்லாருக்கும் போன் போட்டு நாளைக்கு எல்லாரும் ரிலீஸ் அப்படிங்கிற நியூஸ் சொல்லிட்டேன். அதோட வீட்ல எல்லாரும் சாப்பிட்டா தான் நான் சாப்பிடுவேன்னு சொன்னதும் எங்க அம்மாவே மொதோ ஆளா எல்லாருக்கும் சாப்பாட்டை போட்டு தானும் உக்காந்து சாப்டாச்சி… மது அண்ணிக் கூட இப்போ தான் வீடியோ கான்பரன்ஸ் கால் பேசி முடிச்சேன். உனக்கு துணி எடுக்க போகும் போது…’’  சொல்லி முடித்தவன், அவளை எதிர்பார்போடு பார்க்க,

குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தவள், “சாரி மாமா… நீ இல்லாதப்ப நான் இப்படி பண்ணி இருக்க கூடாது…. ஆனா உங்க மாமா பரஞ்சோதி மேல இருந்த கோபம் முழுக்க, அவர் எது செஞ்சாலும் பொறுத்து போற நம்ம பெரிய மாமா மேல திரும்பிடுச்சி… வீட்ல எல்லாரும் என்ன திட்னாங்களா…?’’

அவள் சற்றே தவிப்போடு கேட்க, “ஹே மயிலு…. உன் மேல வீட்ல யாருக்கும் கோபம் கிடையாது. சொல்லப் போனா இந்த வகையிலயாச்சும் எங்க குடும்பத்து மேல இருக்கு பழிவெறி போனா போதும்னு தான் நினைக்கிறாங்க… இல்லனா இந்த பிசாத்து கேசுக்கு எல்லாம் அப்பா உள்ள போவார்னு நினைக்கிறியா…. எல்லாரும் உன் கோபத்தை மதிக்கிறாங்க மயிலு….

நான் காலைல கோபமா செங்கனை தேடிப் போய் அடிக்கும் போது கூட அவனை ஏன் அடிக்கிற அப்படிங்கிற மாதிரி தான் வீட்ல எல்லாரும் பாத்தாங்க. அம்மா கூட பிரேம்க்கு உடம்பு முடியாததால நீ ஹாஸ்பிடல்ல தனியா கிடந்து கஷ்டப்படுறேன்னு என்கிட்ட கூட புலம்பினாங்க…. சோ நீ எதை நினைச்சும் உன் மனசை கஷ்டப்படுத்திக்காத சரியா மயிலு….’’

பேசிக் கொண்டே இருந்தவன், மீண்டும் அவளை நெருங்க முயல, நாட்சியா மீண்டும் அவனிடமிருந்து தள்ளி நின்றாள். அதற்கு மேல் பொறுக்க முடியாதவன்,

“சை.. இன்னும் என்னடி… ஓவரா பண்ணிக்கிட்டு…’’ அவன் கடுப்பில் வார்த்தைகளை கடித்து துப்ப, “டேய் மாமா நீ சொன்ன விளக்கம் எல்லாம் சரி…. நட்ட நடு கிரௌண்ட்ல ஒருத்தி ஏதோ சினிமா சூட்டிங் மாதிரி ஸ்லோ மோசன்ல ஓடி வந்து உனக்கு முத்தம் கொடுத்தாலே அதுக்கு என்ன பதில்..?’’

என்று முகத்தை கோபமாய் வைத்துக் கொண்டு கேட்கவும், பரணியின் முகத்தில், டின் டின்னாய் அசடு வழிந்தது. “அது….. அது வந்து…. மயிலு..’’ அவன் திக்கலை சகிக்காதவள், போதும் என கை உயர்த்தி அவனை நிறுத்திவிட்டு,

“ரொம்ப திக்காத….எவ்ளோ தைரியம் இருந்தா எவளோ ஒருத்தி கொடுத்த முத்தத்துக்கு ஈன்னு கன்னத்தை காட்டிக்கிட்டு இருந்து இருப்ப… இருக்குது உனக்கு அதுக்கெல்லாம்…. நான் பர்மிசன் கொடுக்காம என் பக்கத்துல வந்த கடிச்சி வச்சிடுவேன். சொன்னா செய்வேன் தெரியும் இல்ல..’’ அவள் மிரட்டலில் பரணி சோர்ந்துப் போய் அமர்ந்துக் கொண்டான்.

அவனுக்கு முதுகுகாட்டி பையில் இருந்த நீண்ட துவாலையை எடுத்துக் கொண்டவள், குளிப்பதற்காய் குளியலறை நோக்கி நடந்தாள். அப்படி நடந்தவள், அடுத்த ஐந்தே நிமிடங்களில் பரணியின் முன் வந்து அமர்ந்தாள்.

அவள் வந்து நின்ற கோலத்தை பார்த்த பரணியின் மூச்சு தாறு மாறாய் எகிறியது. குளிப்பதற்காய் எடுத்துச் சென்ற துவாலையை உடலில் சுற்றிக் கொண்டு வந்தவள், அவள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து,

“மாம்ஸ்… கொஞ்சம் எனக்கு நகம் வெட்டி விடு..’’ என்று கூலாக கேட்க, பரணியோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே, “இங்க நெயில் கட்டர் இல்லையே மயிலு…’’ என பதில் தந்தான்.

அவன் கண் முன் தன் தந்த விரல்களை நீட்டியவள், “அதான் உன் பல்லு இருக்கு இல்ல… கடிச்சி துப்பு..’’ என அவனுக்கு அடுத்த கட்ட சோதனையை வைக்க, பரணி நடுங்கும் கைகளால் அவள் கரத்தை பற்றினான்.

விரல் தாண்டி சற்றே நீண்டு இருந்த நகங்களை மிக மிக ஜாக்கிரதையாய் அவன் ஒவ்வொரு நகமாய் கடித்து துப்ப, நாட்சியா விழிகளை அவன் மேல் இருந்து விலக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஷப்பா…. விரலை கடிக்கிற மாமா..’’ என வேண்டும் என்றே அவன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி அவனை அடிக்கடி நிமிர்ந்து பார்க்க வைத்து அவன் இதய துடிப்பை எகிற வைத்தாள்.

ஒரு வழியாய் அவன் கை விரல் நகங்களை சுத்தப்படுத்தி முடித்த விடுதலை உணர்வோடு நிமிரவும், கொஞ்சமும் யோசிக்காமல் நாட்சி அவள் கால் விரலை அவன் முகத்துக்கு நேரே உயர்த்தினாள்.

பரணியின் உடல் முழுவதும் சூடேற, “வேண்டாம் மயிலு… அப்புறம் தப்பு தண்டா ஏதாச்சும் நடந்து போச்சுன்னா நான் பொறுப்பில்ல…’’ என அவளை எச்சரிக்க முயல,

“எல்லாம் எங்களுக்கு தெரியும்…. நான் சொல்ற வேலையை மட்டும் பாரு…. எவளோ ஒருத்திகிட்ட கன்னத்தை காட்ட தெரிஞ்சதுல்ல இப்போ ஒழுங்கா என் கால் நகத்தை கட் பண்ணு..’’ என முறைக்க,

பரணி வேறு வழியில்லாமல், மெதுவாய் அவள் முயல் குட்டிப் பாதங்களைப் பற்றி ஒவ்வொரு நகமாய் கடித்து துப்ப தொடங்கினான். பத்து கால் விரல் நகமும் தரையை தொட்டு இருக்க, பரணியின் ஆசைகளோ அவன் மன உச்சியில் நின்று பேயாட்டம் போட்டன .

அவள் தந்த கால்களை பிடித்துக் கொண்டவன், தன் சூடான இதழ்களை அங்கே புதைத்துவிட்டு, “மயிலு ப்ளீஸ்… மாமா பாவம்ல..’’ என்று அவளிடம் கெஞ்ச தொடங்க,

ஆசை வழியும் அவன் கண்களை பார்த்தவள், உள்ளே பொங்கிய சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு, “மயிலாவது… குயிலாவது… நான் குளிக்கணும் காலை விடுங்க… இந்த நியாபகம் எல்லாம் உலகமே பாக்க ஒருத்திகிட்ட இருந்து முத்தம் வாங்கும் போது யோசிச்சி இருக்கணும்….’’

வார்த்தைகளை கடித்து துப்பியவள், சந்தன சோப்பில் குளித்துவிட்டு வெளிவரும் போது அவளோடு சேர்ந்து அந்த அறையே மணந்தது. சளி பிடித்த குழந்தை அம்மா வாங்கி தரமாட்டாள் எனத் தெரிந்து குச்சி ஐஸ்காரனை ஏக்கத்தோடு பார்பதைப் போல, பரணி தற்சமயம் நாட்சியா மலை இறங்கப் போவதில்லை என்று உணர்ந்தும், அவளை கொஞ்சம் கூட லட்சையின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement