Advertisement

அதனால இதுக்கு ஒரே தீர்வு என்னனா இனி என் பணத்துல, நான் வாங்கிப் போடுற மளிகைப் பொருள்ல சமச்சி போடுறதா இருந்தா நான் இந்த வீட்ல சாப்பிடுறேன். மாச மாசம் அநாதை ஆசிரமத்துக்கு, முதியோர் இல்லத்துக்கு எல்லாம் எவ்ளவோ செய்யிறேன் இதை செய்ய மாட்டேனா என்ன…? இந்த டீலுக்கு ஒத்து வந்தா காலைல இங்க இருங்க. இல்ல நீங்க எல்லாரும் கிளம்பி வேற வீடு பாத்து போயிடுங்க. ஏன்னா ஐ லவ் திஸ் பிளேஸ்.’’ என்றாள்

பரணியைப் பார்த்து, “டேய் மாமா மறுபடி உண்ணா விரதம்அது இதுன்னு எதுனா சீன் காட்ட பாத்த…’’ என்றவள் அரை நொடிக்குள், உணவு மேஜையில் இருந்த கத்தியை எடுத்து மின்னல் வேகத்தில் கையைக் கிழித்துக் கொண்டாள்

பெண்கள், “அச்சோ…’’ என அவளைப் பிடிக்க வர, பின்னே நகர்ந்தவள், அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த பரணியைப் பார்த்து,  “வெறும் தோலை மட்டும் தான் கீறி இருக்கேன்நானே வைத்தியம் பாத்துக்குவேன்இனி என்னை யாராச்சும் எமோசனல் ப்ளாக் மெயில் பண்ண ட்ரை பண்ணீங்க…. நான் இதுக்கும் மேல போவேன்….’’ என்றாள்

செங்காகார்ல இருக்க பஸ்ட் எய்ட் கிட் கொண்டுவா….’’ என்றபடி தன் அறையை நோக்கி நடக்க தொடங்கினாள். விக்கித்துப் போய் நின்றுக் கொண்டிருந்த, பரணியை தொட்டார் ராசுமதுரவன்.

எல்லாம் சரியாப் போகும் போய் படுய்யா…’’ என அவனுக்கு சேர்த்து மொத்தக் குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல, பரணிக்கு அன்றே அவன் நம்பிக்கை அஸ்திவாரம் ஆட்டம் கண்டு இருந்தது

அடுத்தடுத்து வந்த நாட்களிலும், பரணி அவளிடமிருந்து ஒதுங்கிப் போக முயல, எல்லா வகையிலும் நாட்சியா வீட்டில் இருந்தவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தாள்

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வருபவள், “சாப்பிடுங்கசாப்பிடுங்க நல்லா சாப்பிடுங்க….காசா பணமா…. ஹும்…’’ என்று நக்கல் தொனியில் சொல்லும் போதே அங்கே யாருக்கும் உணவு இறங்காது

அவளிடமிருந்து தப்பிக்க பரணி மைதானத்தில் பழி கிடந்தால், உடலை ஒட்டிப் பிடித்த உடையோடு நாட்சி, அங்கே ஜாகிங் செய்ய வந்ததாய் சொல்லிக் கொண்டு அவனைக் கடுப்பேற்ற வந்து சேர்வாள்

வருபவள், அவனைத் திரும்பியும் பார்க்காமல், அவன் பயிற்சியாளரோடு சற்று நேரம் அரட்டையடிப்பவள், மொத்த ஊரும் கூடி நின்று ஜொள் விட மூன்று சுற்று பயிற்சியை முடித்துவிட்டு, தன் காவலர்கள் பின் தொடர மீண்டும் வீட்டிற்கு கிளம்புவாள்.

அவன் பயிற்சியாளரோ, “வீட்ல இம்புட்டு அம்சமா பொண்டாட்டி இருக்கையில எவனாவது காலங் காத்தால ட்ரைனிங் வருவானாலே…. அதையும் தாண்டி நீ வறேன்னா உனக்கு ஸ்போர்ட்ஸ் மேல இருக்க லவ்வ என்னால புரிஞ்சிக்க முடியுது பரணி…. கண்டிப்பா நீ இந்த விட்டம் சாதிச்சே தீருவலே….’’ 

என அவனைக் கட்டிப்பிடித்து பாராட்டுகிறேன் பேர்வழி என்று அவன் கடுப்பை கிளம்பிக் கொண்டிருப்பார். “யோவ் அவ பெட் ரூம் வாசலுக்கு கூட நான் போக முடியாதுய்யா. அவ மட்டும் என் கூட குடும்பம் நடத்தி இருந்தாகாலங்  காத்தால உன்ன விசில் அடிக்க சொல்லி ஓடிட்டா இருப்பேன்…. என் பொண்டாட்டி கூட…’’ சுகமான கற்பனையில் அவன் முகம் மலர, அடுத்த நொடி அது நிறைவேறாத எரிச்சலில் அவன் முகம் சுருங்கவும் செய்தது

ஹும் நமக்கு விடியல் இந்த கிடா மீசைக்காரர் விசில் சத்தத்தோட தான் தொடங்கனும்னு இருக்கு. வேற வழி….’’ என்று மனதை தேற்றிக் கொள்பவன், “சார் நாம ப்ராக்டிஸ் போலாமா..’’ என அவரைக் கேட்க, அதற்கும் அவர், “நீ என் வாரிசுலே’’ என புளங்காகிதப்பட்டுப் போவார்

யோவ் காலங் காத்தால ப்ராக்டீஸ் வரச் சொன்னா வந்தே ஆகணுமா பரணின்னு ஆயிரத்தெட்டு  லொள்ளு நொரநாட்டியம் பேசிட்டு காலைல லேட்டா வர்றதோட மட்டுமில்லாம, மண்டையை சொரிஞ்சிட்டு தூங்க கொஞ்சம் லேட் ஆயிட்டுலேன்னுஒரு அசட்டு சிரிப்போட சொல்லுவ.நான் உன்னோட வாரிசாய்யா பூமி தாங்காதுடா சாமி…. நாப்பத்தி எட்டு வயசுலயும் நீ ஜகதலப் பிரதாபனா சுத்துறநான் கல்யாணமாகியும் கன்னிப் பையனா சுத்துறேன்என் பாவம் எல்லாம் உன்ன சும்மா விடும்…’என்று அவரை மனதிற்குள் வறுத்தெடுத்தான்

சும்மா இருந்தப் பயல இந்த பசங்க வேற டுயூசன் எடுக்குறேன்னு சொறிஞ்சி விட்டாய்ங்க…. இப்போ உடம்பெல்லாம் கட்டெறும்பு கடிக்கிற மாதிரியே இருக்கு…. எந்தப் பக்கிக் கிட்டையும் இனி டவுட் கேக்கவும் முடியாது.’ என்று எண்ணியவன்

கல்யாணம் ஆகியும் கன்னிப் பையனா சுத்துறேன்னு தெரிஞ்சா என் வம்சத்தையே ஓட்டி தள்ளிடுவானுங்களேநெல்லையப்பா எப்போ தான் எல்லாம் சரி ஆகுமோ..’என்று தனக்குள் புலம்பிக் கொள்பவன், கடைசியாய் அவர் அன்புப் பிடியில் இருந்து வெளியேறி மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவான்.   

நடந்தவற்றை அசைபோட்டதின் பலனாக பெரு மூச்சொன்று வெளியேற, அதே நேரம் அவன் அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. பரணி தன் தாயார் தான் வந்திருப்பார் என்ற எண்ணத்தில், “வாம்மா’’ என குரல் கொடுத்துவிட்டு தொடர்ந்து தன் பணிகளை செய்துக் கொண்டிருந்தான்

ஆனால் உள்ளே வந்தது அவன் தாய் இல்லை. எவளைக் கண்டாலே அலறியடித்து ஓடிக் கொண்டிருந்தானோ, அந்த நாட்சியா தான் அவனைத் தேடி அவன் அறைக்கு வந்து இருந்தாள்

புதிதாய் என்ன பிரச்சனை செய்ய வந்து இருக்கிறாளோ, என அவன் அவளை பீதியோடுப் பார்க்க, அவளோ ஒய்யாரமாய் அவன் படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள்

டெல்லி கிளம்பிட்ட போல மாமா. ஊருக்கு போறதுக்கு முன்னாடி பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு போறது இல்லையா…?’’ என சிங்காரமாய் கேட்டாள்

அவள் அப்படிக் கேட்ட உடனே பரணிக்கு பீதி இருமடங்காய் ஏறியது. “அது வந்து மயிலு…. நான்…. நீ…. உனக்கு டியூட்டி….’’  எனத் திக்கி திணற சுவாதீனமாய் எழுந்து அவன் அருகே வந்து நின்றவள்

என்ன திக்குறவந்துபோயிஅப்புறம்…. நீ என்ன சொன்னாலும் உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்தே ஆகணுமே….’’ என்றவள் அவன் முகத்தை மேலும் நெருங்க, பரணிக்கு பயத்தில் வேர்க்கவே தொடங்கிவிட்டது

நம்ம வழக்கத்துல புருஷன் மேல பொண்டாட்டி கை நீட்ட மாட்டா மயிலு…. வேண்டாம் எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம்….’’ அவன் பேசிக் கொண்டே மேலும் பின்னால் நடந்தான்

இது வேலைக்கு ஆகாது என்று உணர்ந்தவள், அவன் டீஷர்ட்டின் காலரை கொத்தாக பற்றி அவன் முகத்தை தன் முகத்தின் அருகே இழுத்தாள். பரணி என்ன நடக்கிறது என்று உணரும் முன்பேநாட்சியின் மென் இதழ்கள், பரணியின் வன் உதடுகளை சந்தித்து இருந்தன

முதலில் நடப்பது என்ன வென்றே புரியாதவன், திகைத்துப் போய் அப்படியே இருக்க, நாட்சி மிகவும் போராடியே அவனை முத்தமிடுதலின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றாள்

முத்தக் கலையை கற்று கை தேர்வதில் நான் சிறந்த மாணவன், என்று அடுத்த நொடி அவன் நிரூபிக்க, உதடுகள் நான்கும் அழகிய முத்தக் கவிதையை நீண்ட நேரம் அரங்கேற்ற தொடங்கின

மூச்சு விடுதலின் அவசியத்திற்கு கூட புதிதாய் ஒன்று சேர்ந்த கூட்டாளிகள் பிரிய மனமற்று, முத்த கவிதையை சற்று நேரம் ஒத்திப்போட்டு, ஒருவரோடு ஒருவர் இணைந்த நிலையிலேயே அவசர அவசரமாய் பிராணவாயுவை உள்ளே அனுப்பிவிட்டு தங்கள் பிரேம வேலையை தொடர்ந்தனர்

முழுதாய் பத்து நிமிடங்கள் கழித்தே நாட்சி பரணியிடமிருந்து விலகினாள். அவள் முகத்தில் வெட்கத்தின் சாயல் சிறிதும் இல்லை. காலங் காலமாய் கணவனுக்கு முத்தம் கொடுத்து பணிக்கு அனுப்பும் மனைவியின் சாயலோடு முகத்தில் புன்னகை மிளிர நின்றுக் கொண்டிருந்தாள்

பரணியின் முகம் தான் முழுக்க முழுக்க சிவந்து போய் இருந்தது. அது முதல் முத்தத்தின் சந்தோஷ வெளிப்பாடா, இல்லை ஒரு முத்தத்தைக் கூட தனக்கு ஒழுங்காய் கொடுக்க தெரியவில்லையே என்ற அறியாமை வெட்கமா அவனுக்கே புரியவில்லை

தன் வாயைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்தவன், “மயிலு..’’ என்று அவனைப் பார்த்து சிணுங்க, நாட்சியா வாய் விட்டு அழகாய் சிரித்தாள். “மாமா நான் செய்ய வேண்டியதை எல்லாம் நீ செஞ்சிட்டு இருக்க.. ஹாஹா….ஒரு பிரெஞ்ச் கிஸ் கூட எப்படிக் கொடுப்பாங்கன்னு தெரியாத….’’கேட்டவள் மீண்டும் வாய் விட்டு சிரித்தாள்

ஏய்…. நீ பக்கத்துல வந்ததும் முத்தம் கொடுக்க வரன்னு எனக்கு ஜோசியமாடி தெரியும்…. நானே எதையாவது தூக்கிப் போட்டு மண்டையை உடைப்பியோன்னு பயந்து போயிட்டேன்அப்ப நீ இப்படி படக்குன்னு முத்தம் கொடுத்துட்டியா ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் நடுங்கிப் போச்சு மயிலு. அடுத்து என்ன செய்யன்னே தெரியல. கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஷ் படம் பாத்து இருக்கேன் தான். பட் எல்லாமே ஹால் டிவியில தான் பாப்போமா. இந்த மாதிரி சீன் எல்லாம் வந்தா சேனல் மாத்திடுவோம். தனியா தியேட்டர்ல போய் பாக்கணும்னு இதுவரைக்கும் தோனல. இனி நீயும் நானும் ஜோடியா போலாம்..’’என்றவன் மீண்டும் அவளை தன் கைப் பிடிக்குள் கொண்டுவர முயன்றான்

அவனிடமிருந்து சற்றே தள்ளி நின்றவள், மீண்டும் பெரிதாய் சிரித்தபடி,“இப்படி ஒரு பச்ச பிள்ளையா உன்ன என் அயித்த வளத்தி வச்சி இருக்கே…. ஐயோ ஐயோ…. சிங்கம் கர்ஜனை எல்லாம் புட் பால் கோர்ட்ல தானா…. இங்க நீ மியாவ் கேஸ் தானா…’’சொல்லிவிட்டு அவள் அடக்க முடியாமல் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்கவும், அவளை வேகமாய் தன் அருகில் இழுத்தவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவளின் புன்னகையை தன் இதழ்களால் அடக்கினான்

முதன் முதலில் நாட்சி அவனுக்கு கொடுத்த முத்தம் மெல்லின வகையை சேர்ந்ததாய் இருந்தது. இம்முறை முரட்டு வீரனின் வேக முத்தம் வல்லின வகையை சேர்ந்ததாய் இருக்க, நாட்சி பரணியின் பிடியில் கைப்பாவை போல அடங்கி இருந்தாள்

Advertisement