நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 4
“அஞ்சலி.. நீ எப்போ என்னதான் சொல்ல வர, ஊருக்கு வரியா..? இல்லையா..? அதை
மட்டும் சொல்லு”, என்ற மீனாட்சியின் கோவமான கேள்வி, அஞ்சலிக்கு
வருத்தத்தை கொடுத்தாலும், “அவளால் எவ்வாறு ஊருக்கு செல்ல முடியும்..?,
அதுவும் இன்னும் இரண்டு நாளில் கதிரின் திருமணம் எனும் நிலையில்..
வாய்ப்பே இல்லை”,
“ம்மா.. ப்ளீஸ் புரிச்சுக்கோங்க, எனக்கு இன்னும் இங்க லண்டன்
கிளம்புறதுக்கு கொஞ்ச வேலை பெண்டிங்க் இருக்கு, அதுக்கு நான் இங்க
இருந்தா தான் முடியும்”,
“அப்போ.. ஊருக்கே வராம அப்படியே லண்டன் கிளம்பலாம்ன்னு முடிவு
பண்ணிட்டியா..?” என்ற மீனாட்சியின் நியாயமான கோவத்தை புரிந்து கொண்ட
அஞ்சலி,
“ம்மா.. நான் வரலைன்னா என்ன..? நீங்க எல்லாம் இங்க வாங்க, இன்னும் நாலு
நாள்ல நான் கிளம்பனும், நீங்க எல்லாம் கிளம்பி இங்க வந்தா நானும் கொஞ்ச
நாள் உங்களோட எல்லாம் இருந்த மாதிரி இருக்கும் இல்லை”, என்று
கெஞ்சலுடன் கேட்க, மறுக்க மீனாட்சியால் முடியுமா..?
“சரி.. வரோம், நீ ஹாஸ்டெல் இருந்து கிளம்பி நம்ம சென்னை வீட்டுக்கு
வந்துரு, நாங்களும் நாளைக்கு காலையில அங்க இருப்போம்..” என்று
மனத்தாங்கலாக மீனாட்சி சொன்னாலும், பிரச்சனை முடிந்ததில் அஞ்சலிக்கு
நிம்மதியானது,
“அசோக்.. பேசினதை கேட்ட இல்ல, நாளைக்கு காலையில சென்னை கிளம்பனும்,
ரெடியா இரு” என்று மகனுக்கு சொல்லிவிட்டு மீனாட்சி சென்றுவிட,
அஷோக்கிற்குத்தான் கதிரின் திருமணம் பாக்க முடியாதது வருத்தத்தை
கொடுத்தது,
“இங்கேயே இருந்தாலும் கண்டிப்பாக கதிரின் திருமணத்திற்கு சென்றிருக்க
முடியாதுதான்”, அதை நினைத்து மனதை தேற்றி கொண்டவன், அவனுடைய ரூமிற்குள்
செல்ல, அங்கு லதா சென்னை செல்வதற்கு துணிகளை பேக் செய்து கொண்டிருந்தார்,
இவன் உள்ளே செல்லவும்,
“ஏங்க.. உங்களுக்கும் எடுத்து வச்சிட்டேன், நீங்க உங்க.. என்று லதா
சொல்லிக்கொண்டிருக்கும் போதே அசோக்கின் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவன்
கதிரின் எண்ணை பார்த்துவிட்டு கட் செய்தவன், “ம்ம்.. என்ன லதா..?”
என்று மனைவியிடம் கேட்கும் போதே மறுபடியும் கதிர் போன் செய்ய,
இம்முறையும் கட் செய்தவன், மனைவியை பார்க்க, அவளோ இவனை சந்தேகமாக
முறைத்து பார்த்தவள்,
“யாரு போன்ல..?” என்று இடுப்பில் கையை வைத்து தீயாக பார்த்தவாறு
கேட்கவும், நொந்து போன அசோக், “ஏய்.. நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல,
என் சென்னை ஜூனியர்ன்னு”,
“அதுதான் யாருன்னு நானும் கேக்கிறேன், இப்பவரை சொல்ல மாட்டேங்குறீங்களே”,
“அது யாரா இருந்தா உனக்கென்ன..?, விடுடி,
“என்னது எனக்கென்னவா..? ஓஹ்.. அவ்வளவு ஆச்சா..? அப்போ எனக்கு இல்லாம
வேற யாருக்கு இருக்கணும்ங்கிறீங்க..?”
“ஏய்.. ஏய் இது அநியாயம்டி நான் சாதாரணமா சொன்ன விஷயத்தை இப்படி திருப்புற”,
“எது சாதாரணமான விஷயம், பாருங்க இப்போகூட போன் வந்துட்டே தான் இருக்கு,
உங்க மேல எந்த தப்பும் இல்லன்னா அட்டென்ட் செஞ்சு பேச வேண்டியது தானே..?,
நானும் கல்யாணமான நாள்லயிருந்து பாக்கிறேன், அந்த போன் வந்தா மட்டும்
என் முன்னாடி பேசறதில்லை, இதுல அப்பப்போ எங்கேயோ வேற நீங்க மட்டும் தனியா
போயிட்டு வரீங்க, கேட்டா ஜூனியர்ங்கிறீங்க, இன்னிக்கு உங்க ஜூனியர்
யாருன்னு நான் கண்டுபிடிக்காம விட்றதில்லை..”, என்று ஆவேசமாக கத்தி
கொண்டிருந்த லதா,
சட்டென அஷோக் எதிர்பார்க்காத போது பாய்ந்து அவனிடமிருந்து போனை
பிடிங்கி அட்டென்ட் செய்து காதில் வைத்தவள், பக்கத்தில் அசோக் “போனை
கொடுடி”, என்று பிடுங்க பார்க்க, விடாமல் இறுக்கி பற்றியவள்,
“யாரு நீங்க..? அடிக்கடி என் புருஷனுக்கு போன் பண்ணிட்டே இருக்கீங்க..?”
என்று கத்த, மறுபுறமிருந்து “ஹலோ..” என்று பெண்குரல் ஒலிக்கவும்,
அவ்வளவுதான் பத்ரகாளியாக மாறிய லதா, மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்க,
கண்ணாலே அசோக்கை பொசுக்க, அவளின் கோவத்தை புரியாமல் பார்த்த அசோக்,
“ஏய் என்னடி..? எதுக்கு இந்த முறை முறைக்கிறவ..?”
“நான் கேட்டப்ப எல்லாம் என்ன சொன்னீங்க..? உங்க ஜூனியர் ஒரு
பையன்தான்னு..?” என்று கேட்டவாறே கண்களில் நீர் மிதக்க முறைத்தவளை,
“ஆமா.. அவன் பையன் தானே”, என்று அவளின் கண்ணீரில் சந்தேகமாக கேட்டவனை,
“இப்பவும் பொய், நீங்க என்னை ஏமாத்திறீங்க..? நான் எங்க அம்மா
வீட்டுக்கு போறேன்”,
“நான் என்னடி பொய் சொன்னேன்..?”
“என்ன பொய் சொன்னீங்களா..? கையும் களவுமா மாட்டுன பின்னாடியும் பொய்,
உங்களை.. இருங்க” என்றவள் போனின் ஸ்பீக்கரை ஆன் செய்து, “பேசுங்க” என,
அவளை குழப்பமாக பார்த்த அசோக், “ஹலோ..” என, எதிர்புறமிருந்து
“ஹலோ..” என்ற பெண் குரல் கேட்கவும், பதறி போன அசோக் லதாவிடம் இருந்து
போனை பிடிங்கி நம்பரை பார்க்க, அது கதிரின் நம்பர் தான்,
“டேய்.. என்னடா பண்ற..? வேண்டாம்டா..” என்று அவனின் விளையாட்டை
நொடியில் புரிந்து கொண்ட அசோக் கத்த,
“என்னங்க, என்ன ஆச்சு..?” என்று கொஞ்சி கேட்ட படி மறுபடியும் பெண்குரலே
ஒலிக்க, லதாவின் தீப்பார்வையில் பயந்து போன அசோக்,
“டேய் ப்ளீஸ்டா.. உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன், நல்லா இருக்கிற
குடும்பத்துல கும்மி அடிச்சிடாதடா..”
“ஏங்க.. என்ன ஆச்சு..? நம்ம உறவை உங்க பொண்டாட்டி
கண்டுபிடிச்சிட்டாங்களா..?” என்று மெலிதான பதட்டமான பெண் குரலே
கேட்கவும், அதற்கு பிறகு சொல்லவும் வேண்டுமா அசோக்கின் நிலையை,
“லதா கோவை சரளாதான்.. அசோக் வடிவேலுதான்”, சிலபல
கும்மாங்குத்துகள்.. சிலபல ஜம்புகள்.. சிலபல மொத்துகள்.. சிலபல
கதறல்கள் தான், “சம்சாரம் அது மின்சாரம்..” அசோக்.. “பாய்ஞ்சு
தூக்கி அடிச்சிர மாட்டோம்..”
பார்ம் அவுசின் வெளி திண்டில் அமர்ந்திருந்த கதிர், இடைவிடாது சிரித்து
கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வேகமாக வந்த இன்னோவா க்ரிஸ்டா காரிலிருந்து
இறங்கிய அசோக், அங்கு இவனை பார்த்து மேலும் சிரித்து கொண்டிருந்த
கதிரின் மேல் எல்லையில்லா ஆத்திரத்தோடு பாய்ந்தவன்,
“டேய்.. மனுஷனோட நீ..? என்ன வேலை பாத்து வச்சிருக்க..?” என்று
கத்திக்கொண்டு உருண்டு புரண்டு இருவரும் சண்டையிட, அந்த வழியாக சென்று
கொண்டிருந்த “மோகனும், சேகரும்”, திறந்திருந்த பார்ம் அவுசின் கேட்டின்
வழியே அசோக்கின் காரை காணவும், “அவன் ஏன் இங்கு வந்தான்..?” என்ற
சந்தேகத்தோடு வேகமாக இறங்கி வந்தவர்கள், இவர்களின் சண்டையை பார்க்கவும்,
“டேய் அவன் நம்ம தம்பியை அடிச்சிட்டு இருக்காண்டா..?” என்று
தங்களுக்குள் பிரச்சனை இருந்த போதும், “எதிரி” என்று வரும் போது ஒன்று
சேர்ந்து கொள்ளும் வழக்கமான அண்ணன், தம்பிகள் போல் இருவரும் தம்பிக்காக
கோவமாக செல்ல.. செல்லத்தான் கவனித்தார்கள், அசோக் அடிக்க அடிக்க கதிர்
கோவப்படாமல், ஏன் திருப்பியும் அடிக்காமல் மகிழ்ச்சியாக சிரித்து
கொண்டிருப்பதை,
பார்த்தவுடனே அவர்களின் பழக்கத்தை இருவருமே புரிந்து கொண்டு ஆத்திரம்
அடைந்தவர்கள் நேரே தன் தந்தையிடம் சென்று தாங்கள் நேரில் கண்டதை சொல்ல,
மாறனோ கூலாக, “எனக்கு ஏற்கனவே தெரியும்..” என்றுவிட்டார், அதில்
அதிர்ச்சியடைந்த இருவரும் அவரை கோவமாக பார்க்க,
“அவங்களுக்குள்ள இருக்கிற பழக்கம் இப்போ வந்த பழக்கம் இல்லை, அவங்க
மெட்ராஸ்ல காலேஜ்ல படிக்கும் போதே வந்த பழக்கம்”, என, மோகனும், சேகரும்
தந்தை சொல்வதை புரிந்தும் புரியாமலும் பார்த்தனர்,
“ரெண்டு பேறும் ஒரே காலேஜ் தான், அந்த அசோக் பையன் நம்ம கதிரோட சீனியர்.
நம்ம பகையால முதல்ல ரெண்டு பேறும் பேசமாதான் இருந்திருக்காங்க,
அப்போ உங்க தம்பி, அவன் கிளாஸ் பொண்ணை கலாட்டா செஞ்சு மிரட்டுன
பிரச்சனையில ரெண்டு சீனியர் பசங்களை அடிச்சிட்டான்”,
“அப்பறம் என்ன.. எல்லாம் சீனியர்ஸும் ஒன்னு சேந்துக்கிட்டு இவனை
அடிக்க பிளான் செஞ்சி, ஒரு நாள் நைட் காலேஜ் கேம்பஸ்க்கு வெளியே ஒரு
அம்பது பசங்க சேர்ந்து தனியா வந்த இவனை சுத்து போட்டுட்டாங்க, அது
முதல்லே அந்த அசோக் பையனுக்கு தெரியும் போல, அவனுக்கு என்ன தோணுச்சோ..?
அவனும் ஒரு அம்பது பசங்களோட வந்து, உன் தம்பியை காப்பாத்திருக்கான்,
அதுக்கு அப்பறம் இருந்து தான் ரெண்டு பேறுக்கும் நல்லா பழக்கம், இது
அந்த சுந்தரத்துக்கும் தெரியும்”, என்று முடிக்க,
“ஓஹ்.. இவ்வளவு நடந்திருக்கா..? ஆனா அவங்க ரெண்டு பேறும் வெளியே பேசி
நாங்க பாத்ததேயில்ல..” என்று மோகன் கேட்க, நான் தான் வேண்டாம்ன்னு
சொன்னேன்,
“ஏம்ப்பா..?” என்று சேகர் புரியாமல் கேட்க, “நாம ரெண்டு பேறும் வேற
வேற ஜென்ம எதிரி கட்சி, அதுகூட பரவாயில்லை, நம்ம இனத்துக்கும், அவங்க
இனத்துக்கும் சுத்தமா ஆகாது”,
“நாம சாதராண மனுஷனங்களா இருந்தா கூட பரவாயில்லை, ரெண்டு குடும்பமும்
பெரிய குடும்பம், நம்ம பின்னாடி நம்மளை நம்பி ஒரு பெரிய கூட்டமே இருக்கு,
கட்சியிலும் சரி.. நம்ம இனத்திலும் சரி, இது ரெண்டாலதான் நம்ம அரசியல்
வாழ்க்கையே இருக்கு, இவங்க பழக்கம் வெளியே தெரிஞ்சா அது நமக்கு தான்
பிரச்சனை, ஏன் நம்ம மேல இருக்கிற நம்பிக்கையே குறைய வாய்ப்பு இருக்கு”,
“அதான் நான் முதல்லே கதிர்கிட்ட கிளியரா சொல்லிட்டேன், அது போல தான்
அங்க அந்த சுந்தரனும் அவன் மகன்கிட்ட சொல்லிருப்பான்”, என்று சொல்லி
சென்றிட, “இதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? சூப்பர் அப்போ இதை வச்சி
கதிரை எதாவது செய்யலாமா..?” என்று குறுக்கு வழியில் அண்ணண் தம்பிகள்
இருவரும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அது தெரியாமல் அங்கு
அசோக்கும், கதிரும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்,
“சரி கதிர் நான் கிளம்புறேன். நாளைக்கு சென்னை போறேன், உன் கல்யாணத்தை
தான் பாக்க முடியாது, என்ன செய்ய..?” என்ற அசோக்கின் குரலில் வருத்தத்தை
உணர்ந்த கதிர்,
“இப்போ என்ன..? உனக்கு மட்டும் லைவ் டெலி காஸ்ட் பண்ணிடுறேன் விடு” என,
“ஏய் செமடா.. இதுவும் நல்ல ஐடியா தான், மறக்காம பண்ணிடு, நான்
எதிர்பார்த்து காத்திட்டுருப்பேன்”, என்றவன் காரிலிருந்து ஒரு கிப்ட்
பார்சலை கொடுத்து, கதிரை பாசமாக தழுவி “திருமண வாழ்த்து” சொன்னவன்
கிளம்பிவிட, கதிரும் தன் வீட்டிற்கு வந்தவன் எப்போதும் போல் நேரே தன்
அம்மாவை பார்க்க சென்றான்.
“ம்மா.. சாப்பிடலாமா..?” என்று கேட்டபடி, அங்கு கேர்டேக்கர் அம்மா
கொண்டு வந்த உணவை, தன் கையாலே தாய்க்கு ஊட்டி முடித்தவன், தன் உணவையும்
வழக்கம் போல் அங்கேயே முடித்து கொண்டான், அவனுக்கு எப்போதும் அவனின்
அண்ணன்களும் சரி அவர்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமான அவர்களின்
மனைவிகளும் சரி ஆவதேயில்லை.
அவர்களின் பிள்ளைகள் மட்டும் இவனிடம் “சித்து.. சித்து” என்றே
திரிவார்கள், இவனுக்கும் அவனின் பின் பாசமாக திரியும் பிள்ளைகள்
என்றால் பிடிக்க தான் செய்யும், இருந்தாலும் ஒரு அளவோடே இருந்து
கொள்வான், அவனுக்கு அவனின் அண்ணன்கள் மேலும் அண்ணன் மனைவிகள் மேலும்
நம்பிக்கையே இருப்பதில்லை,