Advertisement

3
  விலகத் துடிக்கும் வினாடிகளில் 

  தான் விதி இன்னும் வலியதாய் 

  இறுக்குகிறது உன் நினைப்பை…

   தோற்றுத்தான் போகிறேன்

   ஒவ்வொரு முறையும்

    உன் நினைவுகளை

    துறக்க நினைத்து….

        முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்ததுஅங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய் கிடைத்ததே பெரிய காரணம்

         இவளுடைய நண்பர்களிடம் சூர்யாவும் பேசி அவர்களை பற்றி தெரிந்து கொண்ட பிறகு இவளை நன்கு பழக அனுமதித்தான்…  முதன்முதலாக வெளியே இருப்பதால்.,  நட்பு என்று சொன்னால் கூட  அலைபேசியில் சூர்யா பேசி விடுவான்.

              அவளுடைய கல்லூரி காலங்களில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து சூர்யா கவனித்ததை கண்டு அவளுக்குள் மனதிற்கு வருத்தமாக இருந்தது…  

       “சூர்யாவிடம் தன் மறைத்த ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாகவே இருந்தது.” எனவே அம்முறை ஊருக்கு சென்றிருக்கும் போது மூன்று மாத பிரிவில் அனைவரையும் பார்க்கும் போது அவளுக்கு கண்ணீர் தேங்கியது. அப்போதுசூர்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி பேசிக் பேச அனுமதி கேட்டாள்அவள்அனுமதி கேட்டதை பார்த்தவுடன் சூர்யாவிற்கு யோசனையாக இருந்தது.” இவள் எப்போதும் அனுமதி கேட்பதில்லை எந்த விஷயமாக இருந்தாலும் இதுவரை அவள் தொலைபேசியில் அனைத்தையுமே சொல்லியிருக்கிறாள். பின்பு இப்பொழுது என்ன தயக்கம் எதற்காக இந்த தனியே பேச வேண்டி அனுமதி கேட்டு நிற்கும் வெண்மதி புதிதாக தெரிந்தாள்…

         மாடியில் எப்பொழுதும் போல அவளுடன் பேசுவது போலவே பேசிக் கொண்டிருந்தான். அவளது பள்ளி கல்லூரி வாழ்க்கை பற்றி அவள் சொல்லிக் கொண்டிருப்பாள்.,  அதுபோலவே சொல்லிக் கொண்டிருப்பதாக அவளுடைய அம்மாவும் அப்பாவும் நம்பினர்., கீழே அமர்ந்து சூர்யாவின் பெற்றோரும் மதியின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்க இவள் சூர்யாவை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று பேச சென்றீருந்தாள்.,  “அண்ணா சாரி ரியலி சாரி ஃபர்ஸ்ட் நீங்க என்ன மன்னிச்சிட்டே ன்னு சொல்லுங்க என்று கேட்கவும்..”

    “ஏன் மதிம்மா..,  என்ன ஆச்சு என்று சூர்யா கேட்டவுடன்…

                  “அண்ணா ரியலி சாரி நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எந்த விஷயமும் மறைத்ததில்லை.,  ஒரே ஒரு விஷயம் மட்டும் இப்போ உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன். அது எனக்கு ஒரே கில்டி கன்ஸ்சியஸ் இருக்குஏதோ தப்பு பண்ற மாதிரியே ஒரு ஃபீலிங்.,  அதனாலதான் உங்க கிட்ட இப்ப சொல்லனும்னு நினைச்சேன்., கிட்டத்தட்ட இது நடந்து   அஞ்சு மாசமா என் மனசுல  தப்பு ன்னு தோணுச்சு., காலேஜ் சேர்ந்து இந்த மூணு மாசமும் இன்னும்  ஜாஸ்தியா இருக்கு…  அதனாலதான் உங்க கிட்ட சொல்றதுக்கு நினைச்சிட்டு இருந்தேன்.., போன்ல சொல்வதற்கு தயக்கமா இருந்துச்சு.., அதனால தான் நேரில் பார்த்து சொல்லனும்னு நினைச்சேன்.,என்னை மன்னிச்சிடுவிங்க இல்லன்னா என்று கேட்கவும்“……

 சின்ன பிள்ளையாக தன்னிடம் சொல்லிக் கொண்டு இருப்பவளை பார்க்கும் போது இன்னும் பத்து வயதில் தன்னிடம் கதை சொல்லும் குட்டி மதியாகவே கண்ணுக்கு தெரிந்தாள். “என்ன மதிம்மா அவ்ளோ பெரிய பிரச்சனையா“…

    “அண்ணா என்னோட ப்ளஸ் டூ எக்ஸாம் சமயத்துல., என்று அன்று முகிலன் உடன் நடந்த பேச்சுவார்த்தை அனைத்தையும் தெரியப்படுத்தினாள்.,”  

        அதைக்கேட்ட சற்றுநேரம் சூர்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….
அத அப்பவே என் கிட்ட சொல்றதுக்கு என்ன…, என்று சூர்யா வருத்தமான குரலில் கேட்கவும்.,”

      “நீங்க வருத்தப்பட கூடாதுன்னு தான் அண்ணா சொல்லல..,  அத்தை மாமாவுக்கு தெரிஞ்சா அவங்களும் வருத்தப்படுவாங்க., என்னால யாருக்கும் வருத்தம் வர கூடாதுன்னு நினைச்சேன்., அதனால சொல்லல., இருந்தாலும் என் மனசுல உங்ககிட்ட இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறைத்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு., அதனால தான் இப்ப சொல்லிட்டேன். ஆனா இதைப்பத்தி நீங்க பேச வேண்டாம். தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க.,  என்று சொல்லவும்.,” அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது

            முகில் இனியா மீது கொண்ட முட்டாள் தனமான அன்பை பற்றி யோசித்துக் கொண்டான். அதைப் பற்றி வெண்மதி இடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய பாசம் முட்டாள்தனமானது. அவள் எது செய்தாலும் சரி எனும் அளவிற்கு அவனுடைய கண்மூடித்தனமான பாசம் என்பதை பற்றி சொல்லிவிட்டு.,  வெண்மதியிடம்இதனால இப்போ அதாவது உனக்கு வெளியூரில் படிப்பது ஏதும் வருத்தமா இருக்காஎன்று கேட்கவும்…, 

       “இல்லை.,”  என்றுதான் சந்தோஷமாக இருப்பதாகவும்சொல்லிக் கொண்டிருந்தாள்….

           வாழ்க்கை வெளியூரில் இருந்ததைத் தவிர அவள் மிகவும்.     சந்தோஷமாக இருந்தாள்.,  கீதாவிடம்   அடிக்கடி பேசிக் கொண்டும்., ஊருக்கு வரும்போது அவளை பார்த்துக் கொண்டும் இருந்தாள்.,  அங்கு  அவளுக்கு கிடைத்த தோழமைகள் மிகவும் நல்லபடியாக இருந்ததால் அவளது படிப்பிலோ மற்றவற்றிலும் குறை ஏதும் அவளுக்கு வரவில்லை…, அவ்வப்போது சூர்யாவிடம் எப்போதும் சொல்லுவது  போல  அனைத்தையும் சொல்லி விடுவாள்அது எப்போதும் அவளுக்கு ஒருவிதமான மன நிம்மதியை கொடுக்கும்.,  அவளால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்., சிறு குழப்பம் வந்தாலும் அதற்கு தெளிவான முடிவை சூர்யா சொல்லிக் கொடுப்பான்.

       அப்படியே அவளும் நடந்து கொள்வாள். இன்று வரை சூர்யாவிற்கு அவள் ஒரு குட்டி தங்கை தான். பத்து வயது சிறுமியாக தன்னிடம் கதை சொன்னது  போலவே இப்போது அவள் சொல்லும் ஒவ்வொரு கதைகளுமே அவனால் அப்படித்தான் நினைத்துக் கொள்ள முடிகிறது

       சூர்யா இவள் பத்தாவது படிக்கும்போதே வேலைக்கு சென்று இருந்தான். அவனுக்கு திருமணத்திற்கு பேசத் தொடங்கும்போது இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று தள்ளி வைத்தான்.  “முகிலனிடம் அவன் மிரட்டி இதை பற்றி கேட்க சூர்யாவிற்கும் தயக்கமாகவே இருந்தது.., இதை பற்றி கேட்டு மீண்டும் பிரச்சினையை பெரிதாக்கி விடக்கூடாது. வெண்மதியே விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வந்து செல்கிறாள். அவள் வந்து செல்லும் இந்த சமயங்களில் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும்“., என்று நினைத்துக்கொண்டு முகிலன் இடம் இதைபற்றி எதுவும் பேசவில்லை

      ஆனால்பெற்றோரிடம் மட்டும் அவன் இனியாவின் மேற்கொண்ட கண் மூடித்தனமான பாசம் என்றும் சரி வராது, அது இனியாவிற்கு பிரச்சனை என்பதை விட முகிலனின் வாழ்க்கைக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தன் பெற்றோரிடம் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்“…

     
        இவள் கல்லூரிக்கு சேர்ந்த முதலாம் ஆண்டில் இவளுடைய கல்லூரி வாழ்க்கை மிக சந்தோஷமாகவே சென்றது

    முதல் வருடத்தின் கடைசி மாதங்களில் இருக்கும்போது சூர்யாவிற்கும் அவன் அத்தைமகள் கலைக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. கலையும் சூரியாவைப் போல அன்பானவள்.,  மிகுந்த அன்புடன் நடந்து கொள்வாள் திருமணத்திற்கு வர முடியாததால் அடுத்தமுறை வரும்போது அவர்களை பார்க்க வீட்டில் யாரும் இல்லாத நேரம் சென்று இருவரையும் பார்த்து விட்டு திரும்பி விட்டாள்.., அவள் வருவதும் போவதும் இனியா க்கும் தெரியாது.,

            இரண்டாம் வருடத் தொடக்கத்தில் முகிலன் வேலை கிடைத்து சேர்ந்து விட்டதாகத் தெரிந்தது. ஏனோ போலீஸ் என்றால் பிடிப்பதில்லை அது சிறுவயதிலிருந்தே அவளுக்கு பயம் என்று சொல்வதை விட ஏனோ பிடிக்காது அவர்களுடைய அதிகாரமான பேச்சு பழக்கம் அவளுக்கு பிடிப்பதில்லைஇப்போது  தேர்வெழுதி டிஎஸ்பி ஆக தேர்வாகி வேலைக்கு சேர்ந்து இருப்பது தெரிந்ததும்.., 

           ஒருமுறை கீதாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதுஏற்கனவே எனக்கு இந்த மூஞ்சை கண்டால் பயம்.., இதில் இந்த மூஞ்சி யூனிபார்ம் போட்டு இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு.., சுத்தம்  ஏற்கனவே பேசமாட்டேன் இனிமேல் சுத்தமா பேச போறது இல்ல., வந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.,  ஏற்கனவே அதிகாரம் பண்ணுவாங்க., இன்னும் அதைவிட  கொஞ்சம் அதிகாரம் பண்ண பார்க்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்“…

          “நீ ஏன் பாக்க போறே.., நீ தான் ஏற்கனவே திரும்பி கூட பாக்க மாட்டீயே., யார் எந்த வேலைக்கு போனாலும் நமக்கு என்ன நீ உன் படிப்பை மட்டும் பாரு“… என்றாள்… 

       ஏனோ மனதிற்குள் அவளறியாமல் ஒரு படபடப்பு வந்து நீங்கியது.., ஆனால் அதை கீதாவிடம் சொல்லவில்லை ஏன் என்று தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். அதன்பிறகு அவள் ஊருக்கு சென்றாலும் அதிகாலை நேரம்தான் சென்று இறங்குவாள்., ராஜன் வந்து அழைத்து சென்றதும் வீட்டிற்குள் சென்று இருப்பவர்தான் பின்பு கிளம்பும் அன்று தான் வெளியே வருவாள்., அப்போதும் அவளுக்கு ரயில் நேரத்தை பொறுத்து வெளியே வருவாள்., அவள் வீட்டிற்கு வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது சூர்யாவையும் அவன் பெற்றவர்களையும் தவிர., அவர்களும் அவளை இங்கு வந்துதான் பார்த்து செல்வார்கள்…

      
          முகிலன் இப்போது   வேறு ஊரில் வேலை பார்ப்பதால் அவனைப் பற்றிய பிரச்சினைகள் இங்கு இல்லை., இப்போது இனியா விற்கு சண்டை போடவும் ஆள் இல்லாததால் அவளும் அமைதியாகவே இருந்தாள்..

          இனியா கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது இனியா விற்கும் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.. தொல்லை விட்டது என்று நினைக்க., அவள் இரண்டு தெரு தள்ளி இருந்த அவர்களது அத்தை மகனையே திருமணம் செய்யப் போவதாக தெரிந்தது..,  

           அந்த முறை கீதாவிடம் பேசும் போதுஅவ இந்த ஊரைவிட்டு கல்யாணம் பண்ணி போயிட்டா நம்ம பிரியா நடமாடலாம் நினைச்சேன்…  இதே ஊர்ல இருந்து மறுபடியும் என் உயிரை வாங்க போற“…  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான்.. 

     “நீ எதுக்கு அவளை பற்றி யோசிக்க., அவ என்ன பெரிய இவளா பேசாமல் இருஎன்று சொல்லவும்..,

        “இல்ல நான் வந்து அவளுக்கு பயந்தோ இவ அண்ணனுக்கு பயந்தோ.,  நான் இத வந்து யோசிக்கல., சூர்யா ண்ணா இதனால வருத்தப்படக்கூடாது.,  அவ என்கிட்ட பிரச்சினை பண்ணும் போதெல்லாம் பாவம் சூர்யா ண்ணா தான் பீல் பண்றாரு.., அங்க பாலா மாமாவும்., வசந்தி அத்தையும் கூட ரொம்ப வருத்தப்படுவாங்க…, அதனாலதான் நான் ஒதுங்கி ஒதுங்கி போறேன்., நான் திருப்பி சண்டை போடுறது பிரச்சனை இல்ல., திருப்பி பேச  முடியாம இல்லஎன்று சொல்லிக் கொண்டிருந்தாள்….

     ஆனால் இனியா ஏனோ திருமண நேரம் கூடி வரவில்லை, என்று ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு இனியா விற்கு திருமணம் முடிந்தது

      அப்பொழுது வெண்மதி மூன்றாமாண்டு முடித்திருந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்., அந்த சமயத்தில் தான் இனியாவிற்கு திருமணம் முடிந்திருந்தது.. 

           திருமணம் முடிந்து., அவளது முதல் தீபாவளி இதற்கு இடையில் சூர்யாவிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவள் பெயர் அமிர்தா ஆனால் வீட்டில் அனைவரும் அம்மு என்றே அழைப்பார்கள். முதலில் அவளை அம்மு என்று அழைக்க தொடங்கியது வெண்மதி தான். அவள் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வீட்டிற்கு சென்று வந்தாள். அதன் பிறகு எப்போதும் இவள் விடுமுறைக்கு வரும் சமயமெல்லாம் சூர்யா குழந்தையை இவளிடம் கொண்டுவந்து விட்டு விடுவான்..

    ஒருவயது கூட ஆக வில்லை ஆனால் மதியைக் கண்டால் அவளுக்கு கொண்டாட்டம்….

    அம்முறை தீபாவளி அன்று அனைவரும் கோவிலுக்கு கிளம்ப அன்று மதியால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. செல்லக்கூடாத நாள்எனவே வீட்டில் இருந்து கொண்டாள் வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு கிளம்பவும்., “ஸ்ரீராம் சீக்கிரம் கோயிலிலிருந்து வந்துவிடுஎன்று சொல்லியே இவள் அனுப்பி வைத்தாள்…. ஏனெனில் நட்பில் உள்ள குடும்பத்தை பார்த்தால் பேசிவிட்டு எல்லோரும் தாமதமாக வருவார்கள்

            அவர்கள் தெருவில் இரண்டு தெரு தள்ளி உள்ள கோவில், அது அந்த பகுதியில் உள்ள அனைவரும் அந்த கோயிலுக்கு தான் நல்ல நாட்களில் சென்று வருவார்கள்., எனவே இவர்கள் அனைவரும் அங்கு செல்ல.,  அங்கு சூர்யாவின் பெற்றோரும் சூர்யா குடும்பத்தினரும் வந்திருந்தனர்..

    சற்றுநேரத்தில் இனியாவும் அவள் கணவனும் தலை தீபாவளி கொண்டாட அங்கு வந்தார்கள்., அவர்களும் கோயிலுக்கு வர அதேநேரம் முகிலனும் அங்கு வந்து சேர்ந்தான். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இருந்து இவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதே கீதா தன் கணவரோடு வந்திருந்தாள்…  கீதாவிற்கு இப்போது சூர்யா பெண் வயதில் ஒரு குழந்தை இருக்கிறது..

          கீதா நேராக மதியின் அம்மாவிடம் வந்தாள். “அத்தை மதி எங்க..? நா மதிய பார்ப்பதற்காக தான் ஊரில் இருந்து வந்தவ நேரா கோயிலுக்கு வரேன்.., நீங்க இங்க வர்றத பாத்துட்டு..” என்று சொல்லவும் 

           “மதி கோயிலுக்கு வர முடியாது டா..,  அதனால வீட்ல இருக்காஎன்று சொல்லி விட்டு நீ எப்படி இருக்க“.,  என்று பேசிக் கொண்டே கீதாவின் குழந்தையை வாங்கி கையில் வைத்துக்கொண்டார்

         ” அப்படியா.., என்று கேட்ட கீதா சரி அத்தை நான் வீட்டுக்கு வரேன் வீட்டுக்கு போயிட்டு குழந்தையை அம்மா கிட்ட விட்டுட்டு வரேன்…”  என்று சொல்லவும்., 

       “நீ குழந்தையை விட்டுவிட்டு வந்த னா.,  உனக்கு அடிதான் கொடுப்பா“..  என்று சொல்லிக்கொண்டிருந்தார்…, 

         “நேத்து நைட் பேசும்போது கூட., நீ வருவதை சொல்லலையே என்று சொல்லவும்…”  இல்ல த்த  நான் மதிய பார்க்கிறதுக்காக தான் மெனக்கெட்டு வந்தேன்…, இப்ப மத்தியானத்துக்கு மேல கிளம்பி வீட்டுக்கு போயிடுவேன்..” என்று சொன்னாள்

              “மத்தியானம் வரும்போது தனியா வந்திராத அவகிட்ட அடி வாங்கிருவ.,”  என்று சொல்லி அனுப்பினார்…, 

           கீதாவின் கணவரிடமும் நலம் விசாரித்துவிட்டு அனுப்பினர்…,  இனியா மட்டும் கீதாவை பார்த்தவுடன் முகத்தை திருப்பிக்கொண்டு தள்ளி நிற்பது போல நின்று கொண்டாள்., அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை,கவலைப்படவும் இல்லை, கடைசி வருட படிப்பு என்றவுடன்மதியின் திருமணத்தை பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார்கள்என்று சூர்யாவின் தாய் பேச்சை தொடங்கினாள்.

            “இல்ல., மா”  திருமணத்தை பற்றி பேச தொடங்கவும்., “அவள் ஏற்கனவே திருமணம் என்று சொன்னபோது அதைப்பற்றி இப்போது பேசக்கூடாதுஎன்று சொல்லிவிட்டாள்., கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக்கு முயற்சிக்கிறாள்., அதில் வேலை கிடைத்தால் இரண்டு வருடம் வேலை பார்த்த பிறகுதான்.,  திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விட்டதாக ராஜன் சொல்லிக்கொண்டிருந்தாள்., 

      அதே நேரம் பாலனும்அதுவும் சரிதான் பெண் பிள்ளைகள் அவர்கள் காலில் நிற்பது நல்லது தான்.,  இனியா  தான் பெயருக்கு படிச்சி இருக்கா அவ்வளவுதான்.,  வேலைக்கு போற டேலன்ட் இல்ல.,  ஆனா நல்ல படிச்சு நல்ல டேலன்ட் இருக்கிற புள்ள வேலைக்கு போட்டும்., அது நமக்கும் பெருமை தானே என்று  வசந்தாவை பார்த்து சொல்லவும்..,”  வசந்தாவும் அதை ஆமோதிக்க தலையாட்டினார்…,

      இதைப்பார்த்த இனியா விற்கு முகம் மாறுவதையும்.,  அவள் முகிலனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு செல்வதையும் பார்த்த சூர்யா அவர்கள் பின்னே இவனும் சென்று நின்றான்…


       கலைக்கு ஓர் அளவுக்கு அவர்களுக்குள் இருக்கும் பணிப்போர் தெரியுமாதலால் அவளும் பார்த்துக் கொண்டேதான் இருந்தாள்…, அவர்கள் பின்னே சென்ற சூர்யா நேரே இருவரையும் நிறுத்திதனக்கு எல்லாம் தெரியும் என்று விஷயத்தை சொல்லி…, அவள் படிப்பு விஷயத்தில்  இங்கு உள்ள கல்லூரியில் சேர முடியாமல் செய்ததை போல் இப்போது ஏதேனும் செய்தால் இருவரையும் தொலைத்து கட்டி விடுவேன்., என்று சத்தம் போடவும், வீட்டில் சொல்லிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டவும்..,  இனியா அமைதியாக நின்றாள்.,  இனியா விற்கு இவ்விஷயம் சூர்யாவிற்கு தெரியும் என்று தெரியாது., எனவே அவள் பயந்துபோய் முகிலனின் முகத்தை பார்க்க.., முகிலன் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பது போல நின்றான்., சூர்யா நேரடியாக முகிலன் இடம்  எச்சரித்துவிட்டு சென்றான்., இனியாவையும் சத்தம் போட்டு உனக்கு திருமணம் ஆகிவிட்டது.,  உன் குடும்பம் உன்னோட வேலையை பாரு தேவை இல்லாம மதி விஷயத்துல., நீங்க ரெண்டு பேரும் தலையிடுவதை நான் விரும்பல..,  அவளும் நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போக போற பொண்ணு..,  தேவை இல்லாம ரெண்டு பேரும் அவ வாழ்க்கை விஷயத்திலேயே  விளையாண்டீங்க ன்னு  தெரிஞ்சிருச்சு நா சும்மா இருக்க மாட்டேன்“.. என்று மிரட்டிவிட்டு சென்றான்..

           இனியா சூர்யா மிரட்டியதை கண்டுகொள்ளாமல் முகிலன் இடம்அவளை ஏதாவது செய்ய வேண்டும்..,  அவள் வேலைக்கு போகக்கூடாது., அவள் வேலைக்கு போனால் அதை அனைவரும் பெருமையாக பேசிக் கொள்வார்கள்.,  எனக்கு அவளை யாரும் பெருமையாகப் பேசுவது பிடிக்காது., நீ ஏதாவது செய் இப்போ நீ போலிஸ்ல தானே இருக்க வேற ஏதாவது பண்ண முடியாதா.,”  என்று கேட்கவும்

            முதல்முறையாக இனியாவின் எண்ணத்தை கண்டு அவனுக்குள் பயம் வந்தது.., “அவளின் பேச்சு போகும் பாதை சரியில்லைஎன்று அவனது உத்தியோகம் பார்க்கும் அறிவு சொன்னது.,”  எனவே இனியாவிடம் தன்மையாக பேசினான்.., 

          “இனியா  இது நமக்கு சரிவராது.., தேவையில்லாத வேலை நாளைக்கு ஏதும் பெரிய பிரச்சனை ஆச்சு., உனக்கு தான் அசிங்கம்.., அதை விட நம்ம அப்பாம்மா க்கு தலைகுனிவு.., அதனால இத பத்தி இனிமேல் பேசாத..,  அவ ஒன்னும் இங்க இருக்க போறவ  கிடையாது..,  அவளை கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு அனுப்பிடுவாங்க.., சோ நீ எதையும் கண்டுக்காத.,  இப்போ இந்த நிமிஷம் வரைக்கும்  அவளை நீ பார்த்தது கிடையாது..,  நானும் பார்த்தது கிடையாது..,  நான் அவளை கடைசியா பார்த்தது ப்ளஸ் டூ முடித்து  இங்க இருந்து வெளியூர் காலேஜ் போகும்போது தான்..,  நீயும் அப்பதான் பார்த்திருப்பே ன்னு நினைக்கேன்.., அவ இந்த நிமிஷம் வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குமே  கண்ல கூட படல..,  ஒரே தெருவில் தான் இருக்கோம்., அவளும் அப்பப்ப வந்துட்டு தான் போறா.,  ஆனால் பார்த்தது இல்ல., நீ பார்த்து இருக்கியா நானாவது வெளியூர் வேலைக்கு போயிட்டேன்…,  நீ பார்த்து இருக்கியா..,  சொல்லு,,  இல்ல இல்ல அவ ஒதுங்கி தானே போறா ஒதுங்கி போறவங்க ட்ட போய் எதுக்கு வம்பு இழுக்கனும்..,  இதோட பிரச்சினையை விடு அவ எப்படி இருந்தால் நமக்கென்ன.,  நீ கண்டுக்காத என்று சொல்லவும்“.., 

       எரிச்சல் வந்தாலும் சரி எப்படியும் வேறு ஒரு இடத்திற்கு செல்ல கூடியவள் தானே அவளைப் பற்றி நமக்கென்ன என்ற யோசனையோடு இனியா அமைதியானாள்…..

Advertisement