Advertisement

அதிரடிக்காரன்
மச்சான் மச்சான்
மச்சான்டி அவனுக்கெல்லாமே
உச்சம் உச்சம் உச்சம்டி
ரதீ தீ தீ தீ ஜக
ஜோதி ஜோதி ஜோதி
த ள ப தி வெடி ஜாதி
ஜாதி ஜாதி அடி பில்லா
ரங்கா பாஷாதான் இவன்
பிஸ்டல் பேசும் பேஷா
தான் ரதீ தீ
தலைவர் பாடலை தன் தலையணி கேட்பொறியில் (Headphone) சத்தமாக கேட்டப்படி படு ஸ்டைலாக ஐஜீ அலுவலகத்திற்குள்  நடந்து சென்றான் ரோஷன். அவர் அறைக்கு சென்று அவர் உத்தரவிற்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவர் அழைப்பதாய் தகவல் வர, உள்ளே சென்றான் 
ஸ்ரீ்தர் , “வாங்க ரோஷ்ன்”
விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தவன்,
“சார் கன்னியாகுமரி கேஸ் டீடைல்ஸ் , ரிப்போர்ட்ஸ் இதுல இருக்கு..” என கூறி இரு கோப்புகளை அவரிடம் கொடுத்தான்
“சரி.. அது என்னப்பா நீ விசாரிக்கும் முக்கால் வாசி கேஸில் ஒன்னு கைதி பாத்ரூமில் வழுக்கி விழறான் இல்ல சூசைட் ட்ரை பண்றான் இப்ப புதுசா நீ கைதிய கூட்டிட்டு போன வண்டி விபத்துல மாட்டிருக்கு? ஏன் இப்படி ஆகுது?”
“சார் அது எல்லாம் எதர்சியாக நடந்தது சார்.. எனக்கு எப்படி தெரியும்.. “
“ஷட் அப் யூ இடியட்.. பொய் சொல்லாத மேன்… நீ வெரும் டிசீபி ரோஷன் தான் ஜட்ஜ் இல்ல.. குற்றவாளிக்கு தண்டனை கொடுக்குற உரிமை உனக்கு யார் கொடுத்தது மிஸ்டர் ரோஷன்? இனி அடுத்த முறை இப்படி நடந்தது உங்க மேல ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும் ஜாக்கிரதை”
“சாரி சார்”
“டோன்ட் ரிபீட் திஸ்.. யூ மே கோ நவ்”
“யெஸ் சார்”
திரும்ப ஒரு சல்யூட் அடித்து விட்டு விடை பெற்று வெளியே வந்தவனை சந்தித்தாள் மானசி.. 
மானசி ஸ்ரீ்தரின் மகள், ஒரு ஐடி அலுவகத்தில் பணி புரிகிறாள்.
“ஹலோ ரோஷன் சார்.. என்ன பார்த்துட்டு கண்டுகாம போறீங்க?”
“ஹாய் மானசி.. சாரி நான் ஏதோ ஒரு நியாபகத்தில் கவனிக்கலை..  எப்படி இருக்கீங்க ? என்ன இந்த பக்கம் ?”
“அப்பாவை பார்க்க வந்தேன்”
“போங்க போங்க.. உங்க டாடி ரொம்ப ஹாட்டா இருக்ககார்” என்று பதில் சொல்லும் போதே அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி விழ, திரும்பி பார்த்தவன் முன் நின்றார் ஸ்ரீ்தர். 
“என்ன டா உளறி கிட்டு இருக்க?”
“நீங்க இப்ப ஐஜீயா இல்லை எங்க அப்பாவோட ப்ரண்டா ?”
“டேய் கேடி.. ரொம்ப பேசாதடா.. அங்க ரூமில் கேமரா வேற இருக்கு.. அப்பப்ப கொஞ்சம் ஐஜீ மாதிரி நடிக்க விடுடா”
“அப்படி உண்மைய ஒத்துக்கோங்க.. அது நல்ல பிள்ளைக்கு அழகு.. “
“அந்த பாபு எப்படி இருக்கான்”
“உயிர் மட்டும் இருக்கு.. அவன் பண்ணின குற்றத்திற்கு இன்னும் பெருசா அவனை செஞ்சிருக்கனும்” கோவத்தில் அவன் முகம் சிவந்தது..
“எஸ் ரோஷன் எனக்கும் அப்படி தான் இருந்தது.. 24 பொண்ணுங்க, பாவம் அதில் 8 பேரு ஸ்கூல் போற குழந்தைங்க.. இந்த சட்டத்தில் 1000 ஓட்டை இருக்கு அதில் அவன் தப்பிக்க வாய்ப்பிருக்கு.. ஆனால் நீ பண்ணினது தான் சரி.. பொண்ண பெத்த எனக்கு தான் அந்த வேதனை புரியும்”
“ஆத்தி.. அங்கிள் நீங்க அந்நியன் பார்ட்-2 ஆ.. உள்ள தப்புனு சொல்றீங்க வெளிய கரைக்டுனு பேசுறீங்க..?”
“அது ஐஜீ ஸ்ரீ்தர்.. இது மானசி அப்பா ஸ்ரீ்தர் டா”
“ஹாஹாஹா சரி சரி நான் அப்ப கிளம்புறேன்.. ஈவிநிங் அப்பா அம்மா வெட்டிங் டே பன்ஷனுக்கு வந்துடுங்க.. “
“டேய்.. இரு டா.. அந்த கேஸ்ல பாபுவோட அம்மா, தங்கை எங்க இருக்காங்க.. ஒருத்தர் கூட ஹாஸ்பிட்டல் வரலைனு கேள்வி பட்டேன்?”
“அவங்க காசிக்கு போய் விட்டதா ரிப்போர்ட்டில் எழுதி இருக்கேனே.. நீங்க பார்க்கலயா ?”
“நான் உண்மையை கேட்டேன் ரோஷன்”
“அங்கிள் நிஜமா தான் சொல்றேன்.. அவங்க காசிக்கு தான் போயிட்டாங்க.. இங்க இருந்தா பையன் பாசத்தில் ஏதாவது செஞ்சிடுவேனோனு கிளம்பிட்டாங்க”
அவனை நம்பாத ஒரு பார்வை பார்த்தவர், “சரி நீ கிளம்பு.. சாயங்காலம் பார்க்கலாம்”
இருவரிடமும்  விடை பெற்று தன் வீட்டிற்கு வந்தான். 
************************* 
காலையில் ரோஷன் கிளம்பியதிலிருந்து அறைக்கு வெளியில் வராமல் உள்ளே அடைந்து கிடந்தாள் நிவியா.. ஏன் ஒரு நாளில் என் திருமணம் நடந்தது, அம்மா ஏன் காசிக்கு சென்றார்கள்.. இதரற்கு முன் 2 தடவை ரோஷனை சந்தித்திருக்கிறாள். இருவருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான் ஆனால் திடீரென திருமணம் அவள் எதிர் பாராத ஒன்று.. 
தன் அலுவலகத்திடம் சென்னைக்கு ப்ராஜக்ட் மாற்றி வேண்டும் என ஒரு மெயில் அனுப்பி வைத்தாள், ஒரு வாரம் விடுமுறையும் எடுத்துக்கொண்டாள். சிறிது நேரம்  கழித்து அறை கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார் தெய்வா பாட்டி.. 
“நிவி என்னம்மா பண்ற தொல்லை பண்ணிட்டேன?”
“ஐயோ இல்லை பாட்டி.. வாங்க உட்காருங்க.. ரொம்ப போரா இருக்கு.. டிரஸ் எல்லாம் அடுக்கி வைக்கலாம்னு பார்த்தா கப்போர்ட் எல்லாம்  புல்லா இருக்கு.. “
“அவன் வரட்டும்.. 4 பேண்ட் 5 சட்டைக்கு கப்போர்ட் எல்லாம் புல்லா அடுக்கி வச்சிருக்கான்”
“ஹாஹாஹா பாட்டி நீங்க ஜாலியா பேசுறீங்க.. “
பாட்டியும் பேத்தியும் ரோஷனிடம் ஆரம்பித்து நிவியின் படிப்பு வேலை என பேசி தீர்த்தார்கள்
***************************** 
அவன் அறைக்கு சென்று குளித்து , உடை மாற்றி விட்டு தன் மனையாளை தேட, அவள் அவன் கண்ணில் தென்பட வில்லை.. நேரே கிட்சன் போய் பார்த்தான். அங்கு மீரா மதிய  உணவை சமைத்து கொண்டிருந்தார்
“அம்மா எங்க உன் மருமகளை காணும்”
“அதை ஏன் டா கேட்குற? போய் உன் பாட்டி ரூமை பாரு”
தெய்வாபாட்டி அறைக்கு “பாட்டி” என அழைத்து கொண்டே சென்றான்… நிவியா பாட்டியுடன் சேர்ந்து பரத நாட்டியம் ஆடி கொண்டிருந்தாள். வயசானாலும் மிக நலினமாக ஆடி கொண்டிருந்தார் பாட்டி.. 
ரோஷன் உள்ளே வந்ததும்  தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டாள் நிவியா.
“வாவ் பேபி உனக்கு டான்ஸ் கூட ஆட தெரியுமா ?”
நிவியா ரோஷனை பதில் பேசாமல் முறைத்து  பார்த்தாள்.. அதற்கெல்லாம் சலைக்கவில்லை அவன்.. 
“என்ன பாசமா பார்த்தது போதும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும் வா என் கூட.. “
“நான் வர மாட்டேன்.. இங்கயே சொல்லுங்க.. “
அவள் பதிலில் சிரித்த தெய்வா பாட்டி “போமா.. போய் என்னனு கேட்டுட்டு வா..“
“பாட்டி.. உனக்கு இருக்கும் அறிவு கூட உன் பேத்திக்கு இல்லை பார்த்துக்க… “
அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றான் ரோஷன்
“எப்ப பாரு என் கையை பிடிச்சு ஏன் இழுத்துட்டே ஒருக்கீங்க.. வலிக்குது.. “
“பேபி.. நான் கூப்பிட்டதும் வந்தா நான் ஏன் கையை பிடிச்சு இழுக்க போறேன்” என்று ஒரு மாதிரி குறலில் கூற
“என்னது???’’
“ச்ச்.. நான் சொல்ல வந்ததை பேச விடாமல் வம்பு இழுக்குறதே வேலையா போச்சு உனக்கு.. இன்றைக்கு எங்க அப்பா அம்மாவோட 30ஆவது  வெட்டிங் டே.. அப்கோர்ஸ் நமக்கும் தான் பேபீ.. ஈவிநிங் ஒரு சின்ன பார்ட்டி இருக்கு.. க்ளோஸ் ப்ரண்ட்ஸ் மட்டும் தான் வருவாங்க.. நீ என் மனைவினு அறிமுக படுத்த போறோம்.. அது மட்டுமில்ல நீ என் அத்தை பொண்ணு.. அப்படி தான் எல்லார் கிட்டையும் சொல்ல போறோம்.. உங்க அப்பா அம்மாவா நடிக்க 2 பேர் வருவாங்க ஓக இன்ன 2 வாரத்தில் நமக்கான வரவேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க போறோம்.. சீக்கிரம் வந்து கார்ட் செலக்ட் பண்ணு.. அப்ப தான் நைட் குள்ள அச்சடிச்சு வரும்.. “
“நீங்க என்ன லூசா?  எதுக்கு நம்ம கல்யாணத்தை எல்லாதுக்கும் சொல்லனும்.. “
“நீ தான்டி லூசு மாதிரி பேசுற.. என் கல்யாணம் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டாமா?”
“எப்படியும் 1 வருஷத்தில் பிரிய போறோம் அதற்கெதற்கு..” அவள் பேசி முடிக்கும் முன் அவள் கையை இறுக்கி பிடித்திருந்தான் ரோஷன்.. “
“என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு ம்ம்ம்.. வருஷத்துக்கு ஒரு பொண்டாட்டி கட்டுற மாதிரியா ம்ம்ம்?”
அவள் கையில் வலி எடுத்தாலும் “காதல் இல்லாத கல்யாணம் 2 பேத்துக்கும் நரகமா தான் இருக்கும்”
“காதல் இல்லைனு உனக்கு தெரியுமா? ப்ச்ச்ச்.. அதை விடு.. கல்யாணம் பண்ணியாச்சு.. அதற்கப்புறம் காதலிப்போம் என்ன சொல்ற” என்று மென்மையான குறலில் கேட்க, அவனது மென்மையான பார்வையில் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்,
“என் அண்ணன் பாபு ஹாஸ்பிட்டலில் இருக்க நீ தானே காரணம்.. நீ தான் வேணும்னு அவன் வண்டியில் இடிச்ச.. அது மட்டுமில்ல அவனை பார்க்கவோ பேசவோ கூடாதுனு சட்டம் வேற? எனக்கு உன்ன பார்த்தா வில்லன் மாதிரி தான் தோணுது அப்புறம் எப்படி உன் மேல காதல் வரும்.. “ அவள் அண்ணன் என்றதும் இருந்த மென்மை காணாமல் போக.. 
“ஏய்.. இங்க பாரு உனக்கு விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.. நீ என் அத்தை பொண்ணு , நமக்கு நெருங்கிய சொந்தம் மட்டும் கூப்பிட்டு கல்யாணம் முடிந்தது.. 2 வாரம் கழிச்சு ரிசப்ஷன் அவ்வளவு தான்.. “
“நான் ஒத்துக்க மாட்டேன்.. “
“அப்ப உன் அண்ணன் வீடு வந்து சேர மாட்டான்”
“ப்ச்ச்.. போடா பொறுக்கி”
“அடிங்க.. என்ன வாய் நில்லுது.. மரியாதையா வந்து கார்ட் செலக்ட் பண்ணு.. “
அவளை வற்புறுத்தி  கார்ட் செலக்ட் பண்ண வைத்தது மட்டுமில்லாமல், இன்று உடுத்த புடவையும், அதற்கு ப்ளவுசும் தைக்க ஏற்பாடு செய்து விட்டே நகர்ந்தான்
அவநை மனதில் திட்டி கொண்டே அனைத்தும் செய்து முடித்தாள் நிவியா.. ஆனாலும் ஒரு உண்மையை நினைக்க மறந்தாள்.. அப்படி ரோஷன் கெட்டவனாய் இருந்தால் எப்படி அம்மா தன்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைப்பார் அதுவும் ஒரு 2 மணி நேரத்தில் ஏற்பாடு செய்து? 
மதிய உணவு முடிந்து ரோஷன் வெளியே சென்றதும், யாரிடமும் பேச பிடிக்காது தோட்டத்தை சுற்றி வந்தாள் நிவியா, அப்போது அங்கு வந்த மீரா, 
“நிவி மா? என்ன ஆச்சு உன் முகமே சரி இல்லையே.. ரோஷன் எதாவது சொன்னானா? “
“இல்லை அத்தை.. அது வந்து..”
“என்ன விஷயம் சொல்லுமா நான் உன் அம்மானு நினச்சிக்கோ..”
“அது வந்து.. என் கிட்ட ரொம்ப கோப படுறாங்க.. மிரட்டுறாங்க.. எங்க கல்யாணம் நீங்க நினச்ச மாதிரி லவ் மாரேஜ் இல்லை.. எங்க அம்மா கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க.. என்ன நடந்தாலும் உன் கணவர் பேச்சை கேட்டு நட.. கொஞ்ச நாள் உன் அண்ணன் ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை ஊர் பக்கம் வர கூடாதுனு சொல்லிட்டாங்க..”
வெளிப்படயாய் பேசும் மருமகளை மிகவும் பிடித்தது அவருக்கு “அது தெரியுமா காலையிலே சொல்லிட்டான் ரோஷன்.. அவன் கோபக்காரன் தான் ஆனால் தப்பானவன் கிடையாது.. அது உனக்கு போக போக தெரியும்.. உனக்கு என்ன பிரச்சனை ஆனாலும் சொல்லு என் கிட்ட உனக்கு தான் என் சப்போர்ட்.. சரியா.. இன்னொரு விஷயம் யோசிச்சு பாரு ரோஷன் தப்பான ஆளா இருந்தா உங்க அம்மா ஏன் கட்டாய படுத்த போறாங்க..?”
“சரிங்க அத்தை.. எங்க அண்ணன் ஹாஸ்பிட்டலில் இருக்க அவங்க தான் காரணம்? அவங்க பேசி கிட்டு இருந்ததை கேட்டேன்”
“அவன் போலீஸ் காரன்மா.. ஏதாவது காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டான்… ரொம்ப நேர்மையானவன்.. நீ அவநை தாராளமா நம்பலாம்.. அவன கட்டாய படுத்தி எதுவும் செய்ய வைக்க முடியாது.. அவனுக்கு உன்னை பிடிச்சு தான் கட்டிருப்பான்.. கொஞ்ச நாள் பொறுமையா இருமா எல்லாத்தையும் சரி பண்ணுவான் அவன்”
“சரிங்கத்தை.. “
“சரி வா உள்ள போகலாம்.. ஈவிநிங் பங்ஷன் இருக்கு..”
அவளுக்கு அப்போது தான் தோன்றியது தான் எதுவும் விஷ் கூட பண்ணவில்லை என்று.. தன் மாமியாருக்கு வாழ்த்து தெரிவ்த்தவள் ,
“மாமா எங்க காணும்?”
“வெளியே போயிருக்கார் மா.. வந்திடுவார்.. “
இருவரும் கதை பேசியபடி உள்ளே வந்தனர். 4 மணி போல் ரோஷன் வந்தான். கையில் ப்ளவுஸுடன் சில நகைகளும் வாங்கி வந்தான்
நிவியா ரோஷன் மேல் கோவமாக இருந்ததால் எதுவும் பேசாது அவன் சொல்படி கேட்டு நடந்தாள்.
“இந்த நகை எல்லாம் போட்டுக்க நிவி.. ஐ அம் சாரி.. உன்னை ஹர்ட் பண்ணதுக்கு.. “
“ம்ம்ம்ம் “ 
அவள் முகம் தெளியாமல் இருந்தது.. ஆனாலும் இப்போது வேலை அதிகமாக இருப்பதால் சென்று விட்டான்
அழகான மெருன் சாரியில் ரெடி ஆனவள், அவன் கொடுத்த நகையையும் அணிந்து கொண்டாள். ரோஷன் மெருன் நிர ஷர்ட்டும் காக்கி பேண்ட்டும் அணிந்திருந்தான். 
ஏதோ அவளது கண்கள் ரோஷனை சுற்றி சுற்றி வந்தது.. அதை அவன் உணர்ந்தாலும், இரவு பேசிக்கொள்ளலாம் என நினைத்து கொண்டான்
மாலை 6 மணிக்கு விருந்தினர்கள் வர ஆரம்பித்தார்கள் அவன் சொன்ன மாதிரி இருவர் தந்தை தாயாக நடிக்க, நிவியா ஒரு வழியாக சமாளித்தாள்.  ரோஷன் அவள் அருகிலேயே இருந்தான்.. 
ஆநால் ரோஷன் உள் மனது ஏதோ தவறாய் நடக்க போவதாய் யோசிக்க,  ஒரு பதற்றத்துடன் சுற்றி கொண்டிருந்தான்
— தொடரும்

Advertisement