அத்தியாயம் -31

மீனா வாழ்க்கையையே வெறுத்தது போல் சுற்றி வர துவங்கினாள்.

கணவன் தன்னை முற்றிலும் வெறுத்துவிட்டான் என்ற நினைப்பே அவளை கொல்லாமல் கொல்ல, அறையில் இருந்து வெளியில் வருவதையே தவிர்த்தாள்.

வந்த இரண்டு நாட்கள் சமையல் அறையில் எதாவது செய்வது. அசோக்கிடம் பேசுவது என்று இருப்பவள் கணவனிடமும் பேச முயற்சிப்பாள். ஆனால் அவனோ முகத்தில் அடித்தார் போல் எதாவது சொல்லிவிட்டு சென்றுவிடுவான்.

ஒரு நாள் அப்படிதான் கணவனுக்காக டீ எடுத்து சென்றாள். ஆம், டீதான். அன்று மனைவி வைக்கும் டீயின் கை பக்குவம் தெரிந்தவன் வேண்டுமென்றே குடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தான்.

வந்த ஒரு நாளிலேயே அவன் டீ குடிப்பதை தெரிந்து கொண்டவள் அவனுக்கு எடுத்து செல்ல, கப்பை தூக்கி போட்டு உடைத்தவன் அவளை திட்டி அனுப்பிவிட, அவளோ அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல்தான் இருந்தாள்.

ஆனால் எதை அவன் சொல்ல கூடாது என்று பயந்து போய் இருந்தாளோ, அதே வார்த்தையை அவன் சொல்லவும் மனமுடைந்து போனவள், மேலும் அவன் கூறிய வார்த்தையான ‘எனக்கு நீ வேண்டாம்.
அன்னைக்கு பிரிய நினைச்சவ இன்னைக்கு சேரணும்னு நினைக்கறது ஏன்’ என்ற வார்த்தை அவளுள் திரும்ப திரும்ப ஒலிக்க மனதுள் நொறுங்கி போனாள்.

‘நான் அவருக்கு வேண்டாமாம். அவ்வளவுதானா, எல்லாமே முடிஞ்சதா. எதுவுமே பண்ண முடியாதா’ என்று தனக்குள் அவள் பேசி கொண்டிருந்த சமயம் “வாங்க…. வாங்க…”என்ற குரல் கேட்க, தங்கை வந்துவிட்டாள் என்பதை தெரிந்து கொண்ட மீனா முகத்தை அழுந்த துடைத்துவிட்டு வெளியில் வர,

அக்காவை கண்டவுடன் அவள் அருகில் சென்ற கண்ணம்மா “நல்லா இருக்கியாக்கா. ஏன் டல்லா இருக்க”என்று கேட்டாள்.

அவளோ கண்களை எட்டாத சிரிப்பை உதிர்த்து “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்கேன். ஆமா…. எங்க தீரன் அண்ணா, ஸ்ரீ அக்கா வரலையா”

“அவங்களுக்கு ஏதோ வேலை வந்துடுச்சாம். அதான் எங்களை போயிட்டு வர சொன்னாங்க. இன்னொரு டைம் அவங்க வர்றாங்கலாம்”என்று சொல்ல,

“ஓ…..” என்றவள் “மலை….
அவன் காலேஜ்க்கு போயிட்டானா”.

“இல்ல. மாமாக்கூட வெளிய பேசிட்டு இருக்கான். காலேஜ் டூர்னு வீட்ல சொல்லிட்டு வந்துருக்கான். அதான். ஆமா குட்டீஸ் எங்க”.

“தூங்கறாங்க”என்று இருவரும் பேசி கொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்த லதா “வாம்மா. நல்லா இருக்கியா. டீ எடுத்துக்கோ”என்று சொல்ல,அதை எடுத்து கொண்டவள் அக்காவிடம் “எல்லாம் ஓகே ஆயிடிச்சா அக்கா. மாமா கோபம் போயிருச்சா” என்று ஆர்வமாக கேட்க,

அதே நேரம் சத்யா, அஷ்வின் இருவரும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்தவுடன் அப்புறமாக அக்காவிடம் பேசலாம் என்று அதைவிட்டவள் மற்றவர்களுடன் அமர்ந்து பேச துவங்கினாள்.

வந்தவர்களுக்கான உணவை மூன்று பெண்களும் சேர்ந்தே சமைத்தனர்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வாக நேரத்தை போக்க, அவர்கள் சந்தோஷத்தை கெடுப்பதற்கென்றே சென்னப்பன் குரல் கொடூரமாக வெளியே கேட்டது.

“ஓடுகாலி நாயே வெளிய வாடி. உன்னை கண்ட துண்டமா வெட்டி போட்டாதான் எனக்கு நிம்மதி. என் மானத்தை வாங்கிட்டு, நீ நிம்மதியா இருக்கியா வெளிய வாடி” என்ற குரலில் கண்ணம்மா அரண்டு போய் நிற்க,

சத்யா இறுகி போனான். மீனாவோ ஏற்கனவே தன்னால்தான் வீடு மாறினேன் என்றவன் இப்போது என்ன சொல்ல போகிறானோ என்று பயந்து கணவனை பார்க்க, அவன் தோற்றம் அவளுள் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியது. உடனே கண்களை இறுக மூடி திறந்தவள்.

ஒரு முடிவுடன் வெளியே செல்ல போக, அதே நேரம் அப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தைகள் தாயின் பின்னோடு சென்றனர்.

அனைவரும் கவனிக்கும் முன் குழந்தைகள் மீனாட்சியுடன் வெளியே சென்றுவிட,

கண்ணில் வெறியுடன் குழந்தைகள் அருகில் செல்ல போன சென்னப்பன் முன் வந்து நின்றான் சத்யா.

கணவன் தன்னை காக்க வந்துவிட்டான் என்று மகிழ்ந்து போன மீனா அவனையே பார்த்து கொண்டிருக்க, அடுத்து அவன் சொன்ன வார்த்தைகளில் அவள் முகத்தில் சுடு நீரை ஊற்றியது போல் துடித்து போனாள்.

“ இது என் வீடு. இங்க பிரச்சனை பண்ணுன்னா என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கறேன்” என்றவன் அவர்களை ஜெயிலுக்கு அனுப்பியதை நினைவுப்படுத்த, சென்னப்பன் முகம் அந்த அவமானத்தை நினைத்து இன்னும் விகாரமானது.

உனக்கு தேவ உன் பொண்ணுதானே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாம கூட்டிட்டு போ. இவங்க என் பசங்க. இவங்க மேல உன் நிழல் கூட பட கூடாது. உன் பொண்ண நீ என்ன வேணா பண்ணிக்கலாம்”என்றுவிட்டு குழந்தைகளை தூக்கி கொண்டு செல்ல, கண்ணம்மா, மலை இருவருக்கும் விக்கித்து போய் நின்றனர்.

ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் தகப்பன் இருக்கும் கோவத்திற்கு அக்காவை கொல்லவும் தயங்க மாட்டார் என்று.

லதா, ஜெகன், கண்ணம்மா, அஷ்வின் என அனைவரும் அவனிடம் பேச வர அவனோ இது என் தனிப்பட்ட விஷயம் இதுல நீங்க தலையிட வேண்டாம். அவரு பொண்ண அவரு கூட்டிட்டு போறாரு. அவரை தடுக்க எனக்கென்ன உரிமை இருக்கு” என்றுவிட,

அனைவரும் மீனாட்சியை பாவமாக பார்த்தனர் “போடா செத்த நாயே. உன்னை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்லடா, வீட்டவிட்டு ஓடி போனாளே இந்த ஓடுகாலி இவளை வெட்டி போட்டா எல்லாம் சரியா போயிடும்” என்றவர் மீனாட்சி முடியை கொத்தாக பிடித்து இழுக்க,

மலை, கண்ணம்மா இருவரும் தந்தையிடம் இருந்து அக்காவை காப்பாற்ற போராடினர்.

“டேய் நீ இவன் வீட்ல என்ன பண்ற. ஓஹோ…. நீங்க எல்லாம் கூட்டு களவாணிங்களா. உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன். ஏன்டி தரங்கெட்ட கழுதை நீயும் இங்கதான் இருக்கியா. உன்னையும் கொல்லதான்டி போறேன்” என்று கத்த,

மலையோ “ஐயோ…. அப்பா கொல்லுவேன்.. கொல்லுவேன்னு சொல்லிட்டு இருக்கீங்களே. இவங்க யாரோ இல்ல. உங்க பிள்ளைங்க. அதை மறந்துட்டு பேசாதீங்க”என்று தந்தையை அக்காவிடம் இருந்து பிரித்து இழுக்க,

“என்ன இந்த நாய்ங்க என் புள்ளைங்களா எப்போ அப்பனோட மானம் மறுவாதிய சந்தி சிரிக்க வச்சாங்களோ அப்போவே இவங்கள தலை முழுக்கிட்டேன். எனக்கு என் புள்ளைங்கள விட, மானம்தான் முக்கியம். இவளுங்க ரெண்டு பேரையும் கொன்னாதான் எனக்கு நிம்மதி. என்ன விடு ..” என்று தந்தையின் மற்றொரு கையை பிடித்திருந்த கண்ணம்மாவை உதறி தள்ளியவர் அவளை ஓங்கி அறைய,

அடித்த அடியில் சுழன்று கீழே விழ போனவளை தாங்கி கொண்ட அஷ்வின் “ச்சி….. நீ எல்லாம் மனுஷனாய்யா. மிருகம். தான்ங்கற அகங்காரம் புடிச்ச மிருகம். இவ என் பொண்டாட்டி இவ மேல உன் கை பட்டது. கையே இல்லாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ”என்று முறுக்கி கொண்டு வர,

மீனாட்சி கணவனை திரும்பி பார்த்தாள். அடித்த அடியில் சென்னப்பனின் ஐந்து விரல்களும் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது. ஆணவனோ கொஞ்சமும் இறங்காமல் அப்படியே இரும்பாக நின்றிருந்தான்.

உங்களை அப்புறம் பார்த்துக்கறேன். முதல்ல இவளை ஒரு வழி பண்றேன்’என்று கண்ணம்மாவை பார்த்து நினைத்தவர்,

அவள் மேல் இருக்கும் கோபத்தையும் சேர்த்து மீனா மேல் காட்டிய அந்த மிருகம் அவளை எட்டி உதைக்க,

“ம்மா……”என்ற கதறலோடு தள்ளி விழுந்தவள் பார்வை கணவனைவிட்டு நகரவில்லை.

சென்னப்பன் அடியை உதடு கிழிந்து, நெற்றி பிளந்து இரத்தம் வரும் வரை வாங்கியவள் பார்வை முழுதும் அவளவனே நிறைந்திருந்தான்.

மலையை சென்னப்பனின் ஆட்கள் வந்து பிடித்து கொள்ள,

தந்தை அடியை தொடர்ந்து வாங்கியவள் மயங்கும் சமயம் மீண்டும் அடிக்க கை ஓங்கிய தந்தை முன் தன் கையை நீட்டி நிறுத்துமாறு சொல்லி “உ….உன் பேச்சை கேட்டு எ…என் புருஷனை குறைவா எடை போட்டதுக்குதான் இ….இவ்ளோ அடியையும் வாங்கி, எ….எனக்கு நானே த….தண்….தண்டனை குடுத்துக்கிட்டேன். இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.

எனக்கு என் புருஷன்தான் முக்கியம். அவருக்காக நான் என்ன வேணா செய்வேன். அவரை அடிப்பேன், கொல்லுவேன்னு மிரட்டிதானே என்னை உன் இஷ்டத்துக்கு ஆட்டி வச்ச. நீ சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்ட காரணம் என் உயிர் மேல நான் வச்ச ஆசைல இல்ல. அவர் மேல எனக்கிருக்க காதலால. குழந்தைங்கள அவர்கிட்ட சேர்க்கனும்ன்னுதன் மறைஞ்சு வாழ்ந்தேன். அதை செஞ்சுட்டேன்.

அவரு சொன்ன மாதிரி உன் பொண்ண, நீ என்ன வேணா பண்ணலாம். ஆனா அவரு புள்ளைங்க பக்கத்துல கூட உன்னால போக முடியாது.

பொம்பளைங்கள அடிச்சு வீரத்த காட்டுற உன்ன மாதிரி ஒருத்தனுக்கு நான் பிறந்திருக்கேன்னு நினைக்கும்போதே எனக்கு அசிங்கமா இருக்கு.

என்னால என் புருஷன் பட்ட கஷ்டம், அவமானம் எல்லாம் போதும். நான் இருக்கறதுனாலதானே கால சுத்துன பாம்பு மாதிரி அவரையே சுத்தி வர, உன்னோட உசுரு உனக்கு வேணும்னா வா இப்படியே போயிடலாம் .

இல்ல நீ ஊரு போய் சேரமாட்ட. என் புருஷன் அமைதியா இருக்கும்போதே போயிடு……”என்றவள் சொல்லும்போதே அவள் முடியை பிடித்து ஆட்டிய சென்னப்பன்.

“என்னடி அதிகமா பேசுற. உன் புருஷன் என்ன கிழிச்சுடுவான். ரெண்டு வருஷம் முன்னாடியே அவனை தோக்கடிச்சவன் நான். அதுவும் சொத்த ஆள். அவன்லாம் எனக்கொரு ஆளா.

நான் நினைச்சிருந்தா அவனை புதைச்ச இடத்துல இப்போ புல்லு மொளச்சுருக்கும். ஏற்கனவே செத்த பாம்ப அடிச்சு எதுக்குன்னுதான் அவனை விட்டதே.அவன் என்னை என்ன பண்ணிடுவான்.

ரொம்பதான் புருஷன்…. புருஷன்னு உருகற, ஆம்பளைய எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டல்ல. உன்னை என்ன பண்றேன் பாரு” என்று அவள் கழுத்தை நெறித்தவர் “என்ன அப்பான்னு சொல்லிக்கறதுல உனக்கு என்னடி அசிங்கம்.

இத்தனை வருஷம் நான் கட்டி காப்பாத்தி வச்ச என்னோட மானம் போக காரணமா இருந்த உன்னை மகன்னு சொல்றதுக்கு எனக்குதான்டி அசிங்கமா இருக்கு.

எனக்கு அவமானத்தை ஏற்படுத்தின நீ இனி உயிரோட இருக்கவே கூடாது”என்று கையில் வைத்திருந்த கத்தியால் குத்த,மீனா கண்களை இறுக மூடி கொண்டாள்.

“அக்கா……ஐயோ.,…இல்ல……”என்ற குரல்கள் பதற,

‘என்ன வலியே இல்ல’ என்று நினைத்த மீனா கண்களை திறக்க, சென்னப்பனின் கைகளை தடுத்து பிடித்தவாறு கண்கள் கோபத்தில் சிவக்க, நின்றிருந்தான் சத்யா.

“டேய்……”

“என்ன டேய் அதான் என் பொண்டாட்டி சொல்லிட்டால்ல, அவளுக்கு நான்தான் முக்கியம்னு. அவ சொன்ன மாதிரி உன் உசுரு வேணும்னா இப்போவே ஓடிடு இல்ல…”

“இல்ல….. இல்ல….. என்னடா பண்ணுவ சொத்தை பயலே. உன்னையெல்லாம் போனா போகுதுன்னு நான் விட்டு வச்சுருக்கேன். என் பொறுமைய சோதிகக்காம விலகு” என்று கத்தியவன் முகம் முழுதும் கொலை வெறி தாண்டவம் ஆட,

சத்யாவோ முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் அவன் கையை முறுக்க,

“ஆஆஆஆ……”என்று அலறியவன் கத்தல் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பது போல் மேலும் கைகளை முறுக்க,

வலி தாங்க முடியாத சென்னப்பன் “டேய் என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.வாங்கடா”என்று உடன் வந்த ஆட்களை அழைக்க,

சத்யாவோ “இந்த நம்பிக்கை வர இவ்ளோ நாள் ஆச்சா” என்று கேட்பதை போல் மீனாவை பார்த்தான்.

அவளோ கையெடுத்து கும்பிட்டு “என்னை….மன்னிச்சு….டுங்க”என்றவாறு மயங்க.

அவளை தாங்கி பிடித்தவன் தன் தாயிடம் அவளை ஒப்படைத்துவிட்டு, அழுத குழந்தைகளை உள்ளே தூக்கி செல்ல சொல்லி ஜெகனிடம் சொல்லிவிட்டு, தன் கை சட்டையை மடக்கி கொண்டு வந்தவன் கொடுத்த ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்க, அஷ்வினும், அசோக்கும்கூட வந்தவர்களை புரட்டி எடுக்க ஆரம்பித்தனர்.

மலை அக்காவை பார்க்க ஓடினான். தன்னிடம் இருக்கும் மெடிக்கல் கிட்டில் இருந்து மருந்துகளை எடுத்து அவள் காயத்தை சுத்தம் செய்தவன் கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டே இருந்தது.

வந்திருந்தவர்கள் அனைவரையும் அடித்து விரட்டியவர்கள். இறுதியில் சென்னப்பனை சூழ்ந்து நிற்க,

அவனோ அப்போதும் திமிர் குறையாமல் “என்னடா எல்லாரையும் அடிச்சு துரத்திட்டோம்னு சந்தோஷப்படறீங்களா, நான் இருக்கேன்டா. அவங்க இல்லைனா என்ன. இன்னும் நூறு பேரை இறக்குவேன்.

என் மரியாதையை கெடுத்த உங்களை நிம்மதியா இருக்க விட மாட்டேன்டா” என்று கத்தியவன் கையை முறுக்கிய சத்யா “இது என் பொண்டாடிய மிரட்டுனதுக்கு” என்று சொல்லி அவன் வாயில் குத்த, வாயில் இருந்து பொல, பொலவென்று இரத்தம் கொட்ட துவங்கியது.

அஷ்வின் தன் பங்கிற்கு சென்னப்பன் வயிற்றில் குத்த, “ஆஆஆ….” என்று அலறியவனுக்கு இறக்கம் பார்க்க அங்கு யாரும் இல்லை.

“இது என் புள்ளைங்கள கொல்ல பார்த்ததுக்கு”என்றவன் அவன் மூக்கில் தொடர்ந்து குத்த மூக்கில் இருந்தும் இரத்தம் வர துவங்கியது.

“அப்புறம் இது…..”என்றவன் தன் முழங்காலை மடக்கி அவன் ஆண் குறியை பார்த்து இடித்தவன் “ஆம்பளைங்கற திமிர்லதானே என் பொண்டாட்டிய இவ்ளோ அடி அடிச்ச. அதுக்கு”என்று சொல்ல,

“ப்ரோ…. எனக்கு ஒரு சான்ஸ்” என்று அஷ்வின் கேட்க,

முகம் முழுவதும் இரத்த களரியாக இருந்த சென்னப்பனை சத்யாவிட,

நிற்க முடியாமல் தள்ளாடி கொண்டு இருந்தவன் கைகளை பிடித்த அஷ்வின். தன் கைகளை சுழற்றி கற்று கொண்ட வர்ம கலை வித்தையை காட்ட, கை, கால்கள் இழுக்க அப்படியே மடங்கி விழுந்தான் அந்த மிருகம்.

“அச்சச்சோ போட்டு தள்ளிட்டீங்களா ப்ரோ”. என்ற அசோக்கிடம் “ச்ச…. ச்ச…இவனை மாதிரி மிருகம் எல்லாம் உடனே சாக கூடாது. அதான் கை, கால் வராத மாதிரி நரம்பை சுருக்கி விட்டுருக்கேன். இனி இந்த ஆள் அடுத்தவங்க உதவி இல்லாம பாத்ரூம் கூட போக முடியாது”என்று சொல்ல,

அங்கு ஓடி வந்த கண்ணம்மா “போதும் வாங்க. முதல்ல அக்காவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்”என்க,

சத்யா வேகமாக உள்ளே ஓடியவன். அடி வாங்கி முகம் வீங்கி உதடு கிழிந்து கிடந்தவளை பார்த்து அவனுக்கும் கண்கள் கலங்கியது. அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டவன் மருத்துவமனை நோக்கி ஓடினான்.

சென்னப்பன் பார்க்க ஆள் இல்லாமல் ரோட்டில் அப்படியே கிடக்க, தெருவில் போவோரில் ஒருவர் போன் செய்து சொன்னதால் ஆம்புலன்ஸ் வந்து அவனை தூக்கி சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மீனாவை செக் செய்த டாக்டர் காயம் ஆழமாகவும் அதிகமாகவும் இருப்பதாக சொல்லி சிகிச்சை அளிக்க தயங்க, அசோக் தான் பார்த்து கொள்வதாக சொல்லி ட்ரீட்மண்ட் பார்க்க சொல்ல,

அதன்பின்பே மீனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெளியில் முகம் இறுக நின்றிருந்த சத்யா என்ன நினைக்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை.

கண்ணம்மாவும், மலையும் சத்யா மீது கோபமாக இருந்தனர். முன்பே இதை செய்திருந்தாள் அக்கா அவ்ளோ அடி வாங்கி இருக்க மாட்டாளே என்று.

மற்றவர்களும் அதே எண்ணம் இருந்தாலும் அந்த கேள்வியை கேட்க, தைரியம் இல்லாதவர்கள், மீனாவை கேட்க சொல்லலாம் என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

மீனா மயக்கம் தெளிந்து முதலில் என்ன கேட்க போகிறாள். யாரை பார்க்க விரும்புவாள் கணவனையா, குழந்தைகளையா காத்திருந்து பார்ப்போம்.