Advertisement

அத்தியாயம்…3 
மூன்று பெண்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கும் போது ஒரு ஆண் மகனாய் அந்த வார்த்தைகளை கேட்கும் போது ஒரு வித சங்கடத்துக்கு ஆளாகி தலை குனிந்து அமர்ந்தது அவன் மட்டும் இல்லை…
மூன்று பெண்களுமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது ஒரு வித தர்ம சங்கடமான நிலை அங்கு நிலவியது… அந்த சங்கடத்தையும் தான்டி பத்மினியின் மனதில் பெண்கள் அதுவும் இது போல் பெண்களின் வழக்கை வாதடுபவனிடம் நம் பிரச்சனையை எடுத்துக் கொண்டு போனால் என்ன ஆகும்…? என்று ஒரு பக்கம் யோசித்தாள் என்றால்..
இன்னொரு பக்கம் இவன் எப்படி…? அவனின் நடத்தை எப்படியோ… தன் அக்காவின் லாயராய் இவனை வைத்தால், கன்டிப்பாக இவனை பார்க்கும் சூழ் நிலை உருவாகும்..அக்கா தனியாக எல்லாம் இது போல் இடத்திற்க்கு வர மாட்டாள்..
போக நானும் விட மாட்டேன்..அப்பாவை அழைத்துக் கொண்டு அலை கழிக்க முடியாது. இரு பெண்கள் தனித்து வர தகுந்த இடமா இது…? என்பது போல் மனதில்  யோசித்தவள்..
பின் தயங்கிய வாறே தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கிரிதரனிடம்…. “அண்ணா இவர்…” என்று பத்மினி  தன் பேச்சை ஆராம்பிக்கும் போதே கிரிதரன்.. 
“இவர் பேச்சை வைத்து இவரை எடை போடாதே…  நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நம்ம வீட்டு பெண் நமக்கு கிடைக்குனுமுன்னா… இவர் நம்ம கேச எடுத்தா கிடச்சிடும் என்று தைரியமா இருக்கலாம்.” என்று கிரிதரன்  சொல்லவும்..
இது வரை பத்மினி நாம் இவரிடம் நம்ம கேசை கொடுக்கலாமா…? வேண்டாமா…? என்று  யோசித்துக் கொண்டு இருந்தவள் கிரிதரன் சொன்ன நம்ம கேசை  எடுத்தா…
“ஏன் நம்ம கேசை  எடுத்துக்க மாட்டாரா…?” என்று ஒரு வித நைய்யான்டி தன்மையுடன் தான் பத்மினி கிரிதரனிடம் கேட்டாள்..அதன் மறை பொருள் அவன் என்ன அவ்வளவு  பெரிய அப்பா டக்காரா என்பதே…
கிரிதனுக்கு பத்மினியின் நைய்யான்டி புரிந்ததோ என்னவோ… “ நீ இப்போ அவர் பேச்சை கேட்டு என்ன நினைக்கிறியோ தெரியல..ஆனால் இவர் நம்ம கேசை  எடுத்துக்கிட்டா நல்லா இருக்குமே என்று நிறைய பேர் இவருக்காக காத்துட்டு இருக்கார்.. இவரிடம் வருபவர்கள் எல்லாம் பெரிய தலைங்க தான்…” என்று கிரிதரன் சொல்லி நிறுத்தவும்…
இது வரை இவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த கிரிஜா… “ அவ்வளவு பெரிய ஆள்..இது போல் சின்ன நம்ம கேசை  எடுத்துப்பாரா…?”  உங்க கேசை  எப்படி எடுத்தார்…?” நம்ம ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே என்ற அர்த்தத்தில் தன் அண்ணனிடம் கேட்டாள்.
இப்போது தயங்கி தயங்கி என்றாலும் கீதா கிரிதரனின் முகம் பார்க்க… அவள் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டே கிரிதரன்… “இவர் பெண்கள் கேசுன்னா முதல் முன்னுரிமை கொடுப்பார்..அதனால தான் இங்கு தைரியமா உங்கல கூட்டிட்டு வந்தேன். என் கேஸ் எடுத்ததிற்க்கு காரணம்..நான் வாங்கின இடத்தில் அரசியல்வாதி பிரச்சனை செய்தான்..
என் நண்பன் மூலம் தான் இவரிடம் வந்தேன்…  இவரும் அரசியவாதிங்களுக்காக வாதாடி இருக்கார்..நான் என்  பிரச்சனை சொல்லி  நான் என் சேமிப்பு மொத்தத்தையும் போட்டு தான் வாங்கினேன்.. இப்போ அந்த அரசியல் தலைவர் பிரச்சனை செய்யிறார்.” என்று என் நிலமையை சொன்னதும்..
என் எதிரில் தான் அந்த அரசியல் வாதியிடம் பேசியில்  குரு சார் பேசினார்… “நம்ம வாங்கின இடத்தின் பெயர் சொல்லி..நீங்க மோதும் அளவுக்கு எல்லாம் பெரிய இடம் இல்ல..பாவம்  அவர் இடத்தை அவர் கிட்ட கொடுத்துடுங்க…” என்று குரு சார் அந்த அரசியல் வாதி கிட்ட முதலில் மிக தன்மையா தான் பேசினார்..
ஆனால்  அவர் என்ன சொன்னாருன்னு தெரியல… இங்கு குரு சார்… “ஓ அப்படியா… என்னால என்ன கழட்ட முடியுது… பு**க முடியுதுன்னு கோர்ட்ல காட்டுறேன்னு.” சொல்லி பேசியை வெச்சிட்டார்…
“உங்க கேசை எடுத்துக்குறேன்னு அந்த அரசியவாதிக்கிட்ட சவால் விட்டதுக்காக தான் என் கேசை  எடுத்தார்…” என்று கிரிதரன் சொல்லவும்..
இப்போது தயங்கி தயங்கி கீதா…  “ என்னுடையத எடுத்துப்பாரா…?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
“ம் எடுத்துப்பார்..அவர் பெண்கள் கேசுன்னா முதல் சலுகை கொடுப்பாருன்னு வெளியில் பேச்சு இருக்கு..நானே கேசு விசயமா இரண்டு முறை  அவரை பார்க்க போன போது ரொம்ப சின்ன விசயம்..அந்த பெண்ணை இரண்டு பேர் கொஞ்சம் மேல எல்லாம் கை வெச்சி இருக்காங்க போல..பசங்க பெரிய இடம் கம்பிளையின்ட் கூட வாங்கிக்கலேன்னு இவர் கிட்ட வந்தாங்க..
அப்போ ஏதோ பெரிய இடம் போல அடுத்து அவர் வாதடனும்..இப்போ எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போக முடியாதுன்னு அவர் ஜூனியர் சொன்னதுக்கு  வாய்தா வாங்கு..” என்று சொல்லி விட்டு அவங்க கூட போயிட்டார்…
அப்போ தான் கேள்வி பட்டேன்..எவ்வளவு பெரிய கேசா இருந்தாலும் பெண்கள் இது போல் பிரச்சனை என்று வந்தா அதுக்கு தான் முன்னுரிமை கொடுப்பாருன்னு..நீங்க கவலை படாதிங்க . நம்ம கேசை .கண்டிப்பா எடுத்துப்பார்.” என்று கிரிதரன் கீதாவுக்கு தைரியம் வழங்கினான்.
அப்போது ஒருவர் வந்து.. “உள்ளே போங்க…” என்று சொன்னதும்..
கிரிதரன் மூன்று பெண்களுடன் உள்ளே நுழைந்தான்…  குருமூர்த்தி மூன்று  பெண்களுடன் உள்ளே நுழைந்த கிரிதரனை யோசனையுடன் பார்த்த வாறே யோசித்தவன்… பின் சிரிப்புடன்..
“நீங்க அந்த இடம் லாக் ஆன பார்ட்டில…” என்று கிரிதரனை வரவேற்க..கிரிதரன் இதை எதிர்பார்க்கவே இல்லை..எட்டு மாதம் முன் வந்தது..எத்தனையோ கேசில் நானும் ஒருவன் இன்னும் கேட்டால் என் கேஸ் எல்லாம் அவருக்கு ஒரே கேஸ்சே கிடையாது..
அந்த அரசியல்வாதி குருமூர்த்தியின் ஈகோவை தட்டி விட்டு விட்டார்..அதன்  பொருட்டே தன் கேசை எடுத்தது என்று குருமூர்த்தியின்  ஜூனியரில் ஒருவர் சொன்னார்..
அப்படி இருக்க தன்னை அடையாளம் தெரிந்து வரவேற்றதில் கிரிதரன் மகிழ்ந்து போய்… “ஆமாம் சார்.” என்று சொன்னதும்..
இப்போதும் குருமூர்த்தி யோசித்த வாறே… “என்ன திரும்பவும் லாக் ஆகிட்டிங்களா…?”  என்று கேட்ட வாறே மூன்று பெண்களையும் கண்ணால் காட்டிய வாறே குருமூர்த்தி  கிரிதரனிடம் கேட்டான்..
பெண்கள் இளம் பெண்கள் என்ற வகையில் தான் குருமூர்த்தி அவர்களை பார்த்தான்..பார்த்தான் தான் எந்த பெண்களையும் அவன் ஊன்றி கவனிக்கவில்லை..
கிரிதரன் அவசர அவசரமாக… “அய்யோ இல்ல சார்.” என்று பதறி கிரிதரன் குருமூர்த்திக்கு விடையளித்தான்.
“சரி சரி அதுக்கு எதுக்கு இப்படி பதற்றிங்க…” என்று கிரிதரனின் பதட்டத்தை தணித்து … “உட்காருங்க…” என்று சொல்லும் போது கூட குருமூர்த்தி எந்த பெண்ணின் முகத்தையும் கூர்ந்து பார்க்கவில்லை..
எப்போதும் குருமூர்த்தி அப்படி  தான்..இதே பெண்களிடம் பேசும் போது மட்டும் அவர்களின் முகத்தை பார்த்து பேசுவான்… அப்போது கூட அந்த பெண்களின் முகவடிவை கவனிக்க மாட்டான்..அவர்கள்  பேசும் பேச்சை தான் ஊன்றி கவனிப்பான்.. இப்போது அனைத்தும் கிரிதரன் பேச.. குருமூர்த்தியின் கவனம் மொத்தமும் கிரிதரனிடம் மட்டுமே….
ஆனால் பத்மினியோ  அந்த அறையின்  உள் நுழைந்தது முதலே அவளின் கண் குருமூர்த்தியிடம் மட்டுமே நிலைத்து இருந்தது..நிலைத்து இருந்தது என்றால் ஆசையாக அல்ல..ஆராய்ச்சியாய்…பார்த்து கொண்டு இருந்தாள்.
அவனின் முரட்டு தோற்றத்திலும், அந்த தழும்பு விழுந்த முக வெட்டிலும் முதலி ஒரு சுணக்கம்..அதுவும் குருமூர்த்தி  கிரிதரனை பார்த்து பேசிய பேச்சான… “என்ன லாக் ஆகிட்டியா…?” என்ற அந்த வார்த்தையில் முகம் சுளித்தவள்…
வேறு ஒன்றையும் கவனித்தாள்..அவனின் முகத்தின் கலை..அதோடு அவன் பார்வை தங்கள் பக்கம் திரும்பாது கிரிதரனிடம் மட்டுமே நிலைப்பெற்று இருந்ததை… 
இப்படியும் நினைத்துக் கொண்டாள்..கீதாவின் கணவன் ஜெய் பார்க்க அந்த அளவுக்கு தோற்ற பொலிவோடு பார்த்தலே..இவன் நல்லவன் என்று சொல்லும் படி இருந்த அவன் தோற்றமும்…பேச்சில் இருந்த நாகரிகமும்..அவனின் நடத்தையில் இல்லையே…
ஒருவனின் தோற்றத்தில் அதாவது நம் கண் அறிவிக்கும் அவன் அழகு பார்க்க நல்லவன்  போல தான் இருக்கிறான்..என்று நம் விழித்திரை கூறுவதை நம்பியோ.. நம்  சேவி கேட்கும் அவனின் நாகரிகமான பேச்சை நம்பியும் முடிவு செய்யும் நாம்… 
மற்றவர்களின்  கண்ணுக்கு  புலப்படாத அவனின் குணத்தை அதே போல் மற்றவர்களின் கண்ணுக்கு தெரியாத நம்மில் இருக்கு மூளை கொண்டு முடிவு செய்வது இல்லை..
அதாவது ஒருவரை பற்றி  மற்றவர்கள் சொல்வதை கேட்டு..பார்த்து… இவன்(ள்) இப்படி தான் என்று முடிவு செய்வது என்றால்  நமக்கு மூளை என்ற வஸ்த்தை  ஆண்டவன் நமக்கு  ஏன் கொடுத்து இருக்கிறான்…? என்று எப்போதும் அவள் அவளுக்குள் கேட்கும் கேள்வி இது..
..அந்த கேள்வி சரியாக இப்போது அவளுக்கு தோன்றியது..ஏன் இப்போது தோன்றியது என்று தெரியாமலே பத்மினி குருமூர்த்தியையே பார்த்திருக்க..கிரிஜா…
“பத்து… பத்து…” என்று இரண்டு முறை அழைத்த பின் தான் ஏதோ நினைவில் குரு மூர்த்தியையே பார்த்திருந்த  பத்மினி நடைமுறைக்கு வந்தவளாய் கிரிஜாவை திரும்பி பார்த்தாள்.
கிரிஜாவோ எதுவும் பேசாது அந்த பக்கம் பார்..அந்த பக்கம் பார் என்று ஜாடை காட்ட அவளின் ஜாடையை ஒரு முறைக்கு இரு முறை  பார்த்த பின் புரிந்த பத்மினி தன் பக்கத்திக் அமர்ந்திருந்த கிரிதரனையும், பின் எதிர் பக்கம் அமர்ந்திருந்த குருமூர்த்தியையும் மாறி மாறி பார்த்தாள்.
இது வரை வந்த பெண்களின்  முகத்தை கவனிக்காத முருமூர்த்தி கிரிதரன்   “பத்து பத்து…” என்று குறைந்தது பத்து முறை அழைத்தும் அவள் பக்கத்தில் இருந்து பதில் வராததை பார்த்து  அப்போது தான் குருமூர்த்தி பத்மினியை ஊன்றி கவனித்தான்..
பார்த்ததும் அழகான பெண்..அவ்வளவு தான் அவன் நினைத்தது…அதற்க்கு மேல் நினைத்திட அவன் பிறந்த ழூழல்.. வளர்ந்த சூழல் இடம் கொடுக்கவில்லை… மேலும் பத்மினியோடு அழகான பெண்களை எல்லாம் பார்த்திருந்தவனுக்கு  பத்மினியின் அழகு எல்லாம் அவனை பெரிதும் ஈர்க்கவில்லை என்பதா…?பாதிக்கவில்லை என்பதா…?தெரியவில்லை. 
அழகான பெண்களை பார்த்து இருக்கிறான் என்றால், தவறான முறையில் இல்லை. அவனிடம்  கேசை எடுத்துக் கொண்டு வரும் பெண்கள்  பெரும்பாலும் அழகான பெண்களாய் தான் இருப்பர்.
அந்த அழகு கொடுத்த ஆபத்தால் தான் அந்த பெண்கள் அவனை தேடியும் வந்திருக்கின்றனர்…  குருமூர்த்தி  அவர்களிடம் இருக்கும் பிரச்சனையை தான் பார்ப்பானே தவிர வேறு எதுவும் பார்த்தது கிடையாது.
பத்மினியை கிரிதரன் அழைத்தும் அந்த பெண் தன்னையே பார்த்திருப்பதை பார்த்து… என்னடா பெண் அழகா இருக்கு நம்மல பாக்குது…என் முகத்தில் இருக்கும் இரு வெட்டு காயத்தையும் மீறி பாக்குது…என்று நினைத்துக் கொண்டே இன்னும் பத்மினியை ஊன்றி கவனித்தான் குருமூர்த்தி…
இப்போது குருமூர்த்தி தன்னை கவனிப்பதை  பார்த்த பத்மினி நிலமையை சகஜம் ஆக்கும் பொருட்டு குருமூர்த்தியை பார்த்து  சிரித்து வைத்தாள்..பதிலுக்கு குருமூர்த்தியும் சிரிக்க… அவன் சிரிக்கும் போது கொஞ்சம் இந்த முரட்டு தோற்றம் காணாமல் போவது போல் அவள் உணரும் சமயம் குருமூர்த்தியின்  சிரிப்பு  மறைந்து  கிரிதரனிடம்..
“என்ன விசயம் கிரிதரன்…?” என்று நேராக விசயத்து வந்து வட்டான்..
கிரிதரனும் பத்மினியின் பக்கத்தில் அமர்ந்து இருந்த கீதாவை காட்டி… “இவங்களுக்கு ஆறு மாதம்  முன் தான் திருமணம் நடந்தது…  நேற்று நேற்று… விவாகரத்து ” என்று கொஞ்சம் பேச்சை இழுத்து நிறுத்த..
இப்போது  குருமூர்த்தி கீதாவின் பக்கம் பார்வையை திருப்பிய வாறே… “நீங்க சொல்லுங்க…” என்று இப்போது கீதாவின்  முகத்தை நேர்க் கொண்டு பார்த்த வாறு கேட்டான்..
கீதா தயங்கி தயங்கி பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினியை பார்த்தாள்..அக்காவின் பார்வையில் பத்மினி என்ன கண்டாளோ… பத்மினி… குருமூர்த்தியை பார்த்து…
“சார்…” என்று ஏதோ பேச ஆராம்பிக்கும் போதே தன் கை கொண்டு அவளின் பேச்சை தடுத்து நிறுத்திய குருமூர்த்தி…

Advertisement