Advertisement

“ நான் இங்கு அதாவது விவாகரத்துக்கு கோர்ட்டில் வர காரணம் எனக்கு இவரிடம் இருந்து விவாகரத்தோடு உங்களிடம் கேட்பது..இவரின் சொத்து..ஆம் சொத்து தான்.. அது அவரிடம் இருந்ததால் தானே..
அந்த திமிரில் இப்படி ஒரு  ஈன காரியம் செய்ய தோனுச்சி.. அவர் சொத்து அவருக்கு இருக்க கூடாது..அதே சமயம் அது எனக்கும் வேண்டாம்.” என்று சொன்னகீதாவை நீதிபதி புரியாது பார்த்தார்..
 “அவனே எனக்கு சொந்தம்  இல்லாத போது அவனுடையது எனக்கு சொந்த கிடையாது..சொந்தம் இல்லாத்தை பார்ப்பது கூட பாவம் என்று நினைப்பவள் நான்..” என்று அந்த வார்த்தையை கீதா சொல்லும் போது அவளின் கண் பத்ம ப்ரியாவின் மீது அருவெருப்புடன் சென்று மீண்டது..
கீதாவின் பேச்சில்.. நீதிபதி..
“அப்போ எதுக்கும்மா சொத்து கேட்குற..விவாகரத்தில் ஜீவான்சம் என்ற பெயரில் கணவனிடம் இருக்கும் சொத்து வருமானத்தை வைத்தும், அந்த்ஜ மனைவி இழந்ததை வைத்தும் தான் ஜீவான்ம்சம் தொகை நிர்ணயிக்க படுகிறது.” என்று சொன்ன நீதிபதி..
ஜெய்யை காண்பித்து…
“இவர் உங்களுக்கு செய்த அநீதியை வைத்தும், அவர் சொத்தை வைத்தும் கன்டிப்பாக அவருக்கு இருப்பதில் பாதிக்கு கொடுக்கலாம் கொடுக்கனும். ஆனால் நீங்க எனக்கு வேண்டாம் என்று சொல்றிங்க…
அதே சமயம் அவரிட்ம் இருந்து எனக்கு வேண்டும் என்று சொல்றிங்க… எனக்கு புரியல..அனைவருக்கும் புரியும் படி சொன்னா நல்லா இருக்கும்.” என்ற நீதிபதியின் பேச்சில்..
“எனக்கு தெரிஞ்சி பாதிக்கப்பட்ட பெண்களின் காப்பகம் நிறைய இருக்கு..அதோட லிஸ்ட் என் லாயர் கிட்ட இருக்கு..”
ஜெய்யை காண்பித்து,…
“அவருடையது பாதி இல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு எனக்கு ஜீவனம்சமா வேண்டும்.. ஆனால் அதை அவர் எனக்கு கொடுக்க தேவையில்லை..நான் சொல்லும் காப்பகத்தின் பெயருக்கு எழுதி வைத்தால் போதும்..”  என்று சொன்ன கீதா
கூடுதல் தகவலாய்…
“ அவங்களுக்கு டி.நகரில் ஒரு வீடு இருக்கு… அதில் நிறைய போஷன் இருக்கு..அது  கொடுத்தா காப்பகத்தில் இருப்பவங்க தங்குறதுக்கு வசதியா இருக்கும்.. 
பெரியவங்க செஞ்ச தப்புக்கு அந்த சின்ன குழந்தை பாவத்தில் இருந்து தப்ப குறைந்த பட்சம் அவங்க சொத்து இது போல் உதவினால் நல்லா இருக்கும்…” என்று சொன்ன கீதா கூடிதலாய்..
“ இன்னொன்னும்… “ ஜெய்யை காண்பித்து…
“இவங்க தனியார் ஐடி கம்பெனில ஒர்க் பண்றாங்க..அதனால நீங்கச் கொடுக்கும் தீர்ப்பை அவங்க ஏத்துப்பாங்களா.. இது பத்தி எல்லாம் எனக்கு விவரமா தெரியாது..
அதனால இதோ இப்போ இதை பத்திரைக்கை யாராவது இங்கு இந்த வழக்கை பார்த்தும் , கேட்டுக் கொண்டும் இருந்தா… “ என்று சொல்லிக் கொண்டே பார்வையாளர்கள் பக்கன் பார்வையை திருப்பிய கீதா…
இது வரை நீதிமன்றம் என்று ஜெய்யை அவர் இவர் எறு மரியாதையாக பேசிக் கொண்டு இருந்த கீதா அதை கை விட்டவளாய்…
“ இவன் போட்டோவை முதல் பக்கத்தில் பெருசா போட்டு…இவன் செய்த காரியத்தை போட வேண்டும்.. அதில் என் போட்டோ போட்டா கூட பரவாயில்ல எனக்கு ஒன்னும் இல்ல..
ஆனா இவன் முகத்திரை அனைவரும் பார்க்கனும். இதோ அழகு..நான் அறிவு.. என் பணம்.. இது எல்லாம் ஒன்னும் இல்ல என்பது போல பார்க்கிறவங்க எல்லாம் இவன் மூஞ்சில காறி உமிழனும்…
அப்போவாவது இவனுக்கு புரியும்.. அனைத்தையும் விட ஒழுக்கம் நல்ல சிந்தனை.. நன்னடத்தை இது தன் பெருசுன்னு .
அதே போல் இவன் அண்ணன்..திட்டம் போட்டு.. வெளியில் விளக்கு பிடிச்சிட்டு இருந்தவனுக்கு பார்க்கும்  உத்தியோகம் கவர்மென்ட் பேங்க. அதை அவனிடமிருந்து பறிக்க உங்களுக்கு அதிகாரம் இருந்தா..பறிக்கனும்… கூடவே .. அந்தம்மா போட்டோவையும் போடனும் .” 
அவ்வளவு தான் என்பது போல் நான் சொல்ல வேண்டியதை அனைத்தையும் சொல்லி விட்டேன்.. இனி ஒன்றும் இல்லை என்பது போல் இது வரை தைரியமாக கம்பீர குரலோடு பேசியவள்..
தான் நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்…
சிறுவயதில் தன் கண் முன் தன் அன்னையின் மரணம்.. அதன் பின் வாழ்க்கை ஓட்டத்தில் மனதில் ஆயிரம் கனவுகள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாது தங்கள் வீட்டின் நிலை பொருட்டு..எதையும்  வெளிக் காட்டாது அமைதியாக இருந்தவளுக்கு..
தனக்கு என்று ஒரு வாழ்க்கை தனக்கு என்று ஒரு குடும்பம். இனி என் கனவு,  கனவோடு முடியாது நினைவாக போகிறது என்று பல எதிர்ப்பார்ப்போடு அடி எடுத்து வைத்த தன் திருமண வாழ்க்கை..
தன் கைய்யாலேயே இதோ இன்று ஒரு முடிவுக்கு வரப்போகிறது… என்று நினைத்தும், கடவுளிடம் நான் என்ன பெருசா ஆசைப்பட்டேன்.. குடும்ப வாழ்க்கை இது தப்பா.. 
நான் இது சாதிக்கனும்… அதை ஆதிக்கனும்… என்று பெருசா கூட ஆசைப்படவில்லையே.. என் ஆசை எல்லாம் மிக மிக சின்ன அளவில் தானே இருந்தது..அதை கூட உன்னால் நிறைவேற்ற முடியவில்லையா….?
நினைவு தெரிந்த நாளில் இருந்து கடவுளுக்கு தீபம் ஏற்றி வந்த அந்த கடவுளிடம் முறையிட்டுக் கொண்டு கீதா கதறிய கதறலை அந்த நீதிமன்றமே பார்த்து கண்ணீர் வடிக்கும் போது..
அவள் வணங்கிய தெய்வம் அவளை விட்டு விடுமா என்ன…? உனக்கான வாழ்க்கை  இது அல்ல… நீ சாதரண வாழ்க்கை வாழ பிறந்தவள் கிடையாது..
நீ கேட்டாயே..? நான் என்ன பெரிதாக ஆசைப்பட்டேன்.. சிறிய ஆசை தானே என்று..
ஆனால் நான் உனக்கு பெரியதாக கொடுக்க நினைத்தேன்… பெரியது ஒன்று பெற இது போல் சிறு  இன்னல்கள் தாங்கி வந்தால் தான்.. உனக்கு கிடைத்த அந்த பெரிய கனவை கெட்ட வழியில் பயன்படுத்த மாட்டாய்… என்று அவள் வணங்கிய அந்த தெய்வம் நினைத்ததோ என்னவோ..
கீதா ஆசைப்பட்ட சின்ன கனவையும், கடவுள் அவளுக்கு கொடுக்க நினைக்கும் பெரிய கனவையும் தரப்போகும் கிரிதரன் அவள் கதறலை பார்த்து..
“நான் இருக்கேன் கீது..நான் இருக்கேன்… நீஅழ வேண்டியது எல்லாம் இன்றோடு அழுது விடு…  உனக்கு எல்லாமாக நான் இருப்பேன்.” என்று நினைத்தவனாய் கண் கலங்க அவளை பார்த்திருந்தான்.
நீதிபதியும் தன் உணர்ச்சியை வெளியில் காட்டவில்லை என்றாலும், அவரும் ஒரு பெண்ணின் தகப்பனாய் மனதில்  அவளின் வாதத்தை ஏற்று..
கீதாவுக்கு விவாகரத்து கொடுத்தோடு கீதா கேட்ட அனைத்தையும் செய்து கொடுக்க உத்தரவு கொடுத்தார்…
அனைத்தும் முடிந்து வெளியில் வந்த போது குருமூர்த்தி கீதாவின் தோள் மீது கை போட்டு..
“நீ ஏன்மா அழனும்… நீ என்ன தப்பு செஞ்ச அழ.. நீ அழக்கூடாது… என்ன தைரியமா பேசுன… நிஜமா நான் உன் கிட்ட இருந்த இந்த அளவுக்கு ஒரு போல்டா இருப்பேன்னு நானே  எதிர் பார்க்கல.. 
நிஜமா நீ சாதிக்க பிறந்தவம்மா ..இதை எல்லாம் நீ கடந்து வருவ…” என்று  கீதாவுக்கு குருமூர்த்தி  தைரியம் வழங்கினான்…
கிரிதரன் இதை அனைத்தையும்  பார்க்க மட்டும் தான் அவனால்  முடிந்தது..குறைந்த பட்சம்  குருமூர்த்தி  போல் தோள் அணைத்து கொடுத்த தைரியத்தையும் கூட… அவளுக்கு கொடுக்க முடியவில்லையே என்ற மனக்குறையோடு பார்த்துக் கொண்டு இருந்தாலுமே…
பரவாயில்லை.. அவளுக்கு யார் ஆறுதல் சொன்னால் என்ன…? எனக்கு தேவை அவளுடைய  அன ஆறுதலும், தைரியம் மட்டுமே… என்று நினைத்தவனாய் இவை அனைத்தும் பார்த்திருந்தானே தவிர அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
பத்மினி தான் கிரிதரன் அருகில் சென்று..
“ரொம்ப ரொம்ப தேங்ஸ் அண்ணா.. நீங்க மட்டும் எங்களுக்கு குருவை அறிமுகம் படுத்த வில்லை என்றால், இது எதுவுமே எங்களுக்கு சாத்தியம் இல்லை.” என்று பத்மினி கிரிதரனிடம் சொல்ல..
அதற்க்கு கிரிதரன்..
“ இது எதுவும் சாத்தியம் இல்லை என்று சொன்னியே பத்து இந்த எதிலும் குரு உன்னோட விசயமும் அடங்குமா…? “ என்று கேட்டான்..
இது வரை  அழுகை தைரியம்.. தன்னம்பிக்கை என்று பேசிக் கொடு இருந்த அந்த இடத்தில் கிரிதரனின் இந்த பேச்சு சிறிது மாற்றத்தை கொண்டு வந்த்து என்று தான் சொல்ல வேண்டும்.
அது என்னவோ இது வரை கிரிதரன் பக்கம் பார்வையை செலுத்தாத கீதா கூட இந்த பேச்சில் அவன்  முகத்தை பார்த்து லேசாக மிக மிக லேசாக அவனை பார்த்து புன்னகை செய்தாள்..
கீதாவின் அந்த புன்னகைக்கு காரணம்..
“அது என்னவோ இனி இந்த பேச்சு தேவையில்லை.. இனி தன் காதில் நடந்து முடிந்த அவளின் அந்த திருமணமோ.. இதோ இப்போது நடந்த  இந்த விவாகரத்தான பேச்சோ தன் காதில் விழ கூடாது என்று எண்ணினாள்..
இனி குருமூர்த்தியிடம் சொல்லி விட வேண்டும்… சட்டத்தின் படி ஜெய்யின் விசயத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. இனி என் காதில் எதுவும் விழ கூடாது.. ஜெய்யின் சம்மந்தமாய் இனி பேச கூட நான் விரும்பவில்லை..
குருமூர்த்தியை கூட இனி வக்கீலாய் பார்க்காது, தன் தங்கையின் வருங்காக கணவனாய் பார்க்க மட்டுமே விரும்பினாள்.. அதை குருமூர்த்தியிடம் சொல்லவும் நினைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதோ அந்த நீதிமன்றத்தில் வளாகத்தை விட்டு வந்த பின்னும் குருவே ஆனாலும், அதை பற்றி பேச பிடிக்கவில்லை..
அதற்க்கு என்று குருவிடம் மூஞ்சியில் அடித்தது போல் ..
“ இனி அந்த பேச்சு  பேசாதிங்க சொல்லவும் மனது இல்லை.. குரு தங்கையின் வருங்கால கணவன் என்ற முறையில் இல்லாது.  குருமூர்த்தி ஒரு தனி மனிதனின் மன இயல்பை தெரிந்தவளாள். அது போல் அவனை பேச அவளுக்கு மனது வரவில்லை என்று சொல்லலாம்…
அது மட்டும் இல்லாது அவள் இது போல் தைரியமாய் இந்த பிரச்சனையில் இருந்து கடந்து வந்தாள் என்றால், அதற்க்கு முக்கிய காரணம் குரு..
அவன் இல்லை என்றால் இந்த வெற்றி என்ன..இதில் இருந்து வெளி வந்து இருப்பாளா…? என்பதே சந்தேகம் தானே..
முதலில் அந்த வீடியோ..அதிலேயே அவள் பெரியதாக பயந்து விட்டாள் தான்.
ஆனால் அதை இந்த நீதிமன்றத்தில் கொண்டு வராது.. அவன் தன் மீது போட்ட பழியை சாமர்த்தியமாய் முறியடித்து இதை அனைஉவரின் முன்னும் தன்னை கெளரவமாய் நிற்க இவன் தானே காரணம்.. அதனால் கீதாவுக்கு குருவின் மீது ஏகாத்துக்கும் மரியாதை இருந்தது..
அத்னால் தனிமையில்  சொல்ல்லாம் என்று நினைத்தவளுக்கு.. அய்யோ இந்த பேச்சை விட்டு வேறு பேசுங்களே என்று அவள் எண்ணும் போது தான் கிரிதரனின்  இந்த பேச்சால் பேச்சு திசை மாறி அனைவரும் பத்மினி குருமூர்த்தையை கிண்டல் செய்துக் கொண்டு இருக்க..
அந்த கிண்டலை முகத்தில் மென்னகை புரிய  கீதா பார்த்துக்கொண்டு இருக்க..அதை கிரிதரன் ரசித்துக் கொண்டு இருந்தான்..
கீதா சொல்லாமலேயே அவளின் மனநிலைக்கு ஏற்ப பேசிய கிரிதரன் அவளின் புன்னகையை சிறிதே ஆனாலும் மீட்ட அவனால் முழுவதுமாய் இந்த சூழ்நிலையில் இருந்து வெளி கொணர்ந்து.. ஒரு மகிச்சியான குடும்ப வாழ்க்கையை கொடுக்க முடியுமா…? பார்க்கலாம்…
 
 

Advertisement