Advertisement

அத்தியாயம்…2
“நான் உன் சொல் பேச்சை கேட்டு இருக்கனும்… நான் தப்பு பண்ணிட்டேன் பத்து..தப்பு பண்ணிட்டேன்.” என்று சொல்லி அழும் சகோதரியை  தேற்ற முடியாது அப்படியே நின்று விட்டாள்.நம் நாயகி பத்மினி…
தேற்ற பிடிக்கவில்லை என்பதை விட சற்று முன்  தன் சகோதரி கீதா  சொன்ன விசயத்தை அவளாளேயே ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவள் அதை ஏற்று பின் தெளிந்தால் தானே சகோதரியை சமாதானப்படுத்துவதோ…இல்லை…
 “நான் தான் அப்போவே வேண்டாம் என்று சொன்னேன் கேட்டியா…?” என்று திட்டுவதோ முடியும்…
அவள் சொன்னது உண்மையா..?என்பது போல் தன் சகோதரியிடம் ஒரு தடவைக்கு இரு தடவை கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டாள்…இது ஒன்றும் ராம ஜெயம் இல்லையே சொல்ல சொல்லவும்..கேட்க கேட்கவும் புன்னியம் கிட்ட…
தான் ஒருவனிடம் என்பதை விட ஒரு குடும்பத்திடம் பெண்ணை கொடுத்து ஏமாந்த கதையை சொல்ல..அதுவும் அந்த ஏமாத்து என்ன மாதிரியானது…? இப்படியும் இருப்பார்களா…? இது போல் ஆனா விசயத்தை அவள் சினிமாவிலும் பார்த்தது இல்லை..கதைகளிலும் படித்தது இல்லை… 
அப்படி இருக்க  நிதர்சனத்தில் அதுவும் தன் குடும்பத்தில் எனும் போது தைரியமான பெண்ணான பத்மினியே அக்கா சொன்னதை கேட்டு கிடு  கிடுத்து விட்டாள் என்றால் தன் சகோதரி…
தன் சகோதரியை நினைத்த  உடன் அவள் பக்கம் தன் பார்வையை செலுத்திய பத்மினி… தன் சகோதரியின் ஓய்ந்த தோற்றத்திலும், கலங்கிய முகத்தையும் பார்த்து மற்றதை எல்லாம் மறந்தவளாய்.. 
இப்போது தான் தன் சகோதரி தைரியமாக இருக்க வேண்டும். இது நிலை தடுமாறும் சமயம் இல்லை..அவளுக்கு  தைரியம் நான் தான் கொடுக்க வேண்டும்..அவளுக்கு மட்டும் இல்லை தன் தந்தைக்கும்  இப்போது தைரியம் தேவை என்று நினைத்தவளாய்..
கீதா அருகில் சென்ற பத்மினி… “அக்கா இதோ பார்..பார்…” என்று  அவளை அழைத்த வாறே  கீதாவின்  கன்னத்தை தட்டி அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பிய பத்மினி…
“உன் கணவனை விரும்புறியா…?” என்று கேட்டாள்..
“சேச்சே…” என்னவோ விரும்புறியா என்ற அந்த வார்த்தையே கேட்க கூடாத வார்த்தை போல் அருவெறுத்து கீதா காட்டிய முகபாவனையில் …
“ரொம்ப நல்லது…ரொம்ப நல்லது.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்..
அவள் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து  காட்டி… “இதில் சென்டி மென்ட்  ஏதாவது இருக்கா…?” என்று பத்மினி திரும்பவும் கேள்வி எழுப்பினாள்.
“இல்லை…” 
இப்போது கீதாவிடம்  இல்லை என்பது போல் தலையாட்டல் மட்டுமே பதிலாய் கிடைத்தது… பத்மினி தன் கணவர்..இல்லை இல்லை அந்த உறவு சொல்ல என்ன நினைக்க கூட அவளுக்கு அருவெறுப்பை இருந்த்து.
அதை வைத்து பத்மினி பேச பேச தான் கேட்டது…பார்த்தது… என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர..அவள் உடம்பு  கூசி போனது..அவனோடவா ஆறுமாதம் குடும்பம் நடத்தினேன் என்பதில்… 
கீதாவின்  உடல் உதறலில்… “அக்கா இனி இது போல் எல்லாத்துக்கும் பயந்தா எல்லாம் வேலைக்கு ஆகாது..சாக்கடையில் காலை வைத்து விட்டோம்..அதை எப்படி எடுக்கனும்…அதை மட்டும் தான் இப்போ யோசிக்கனும்… நடந்ததை நினைப்பதை விட .. நடக்க போவதை தான் இனி பார்க்கனும்.” என்று சகோதரிக்கு மட்டும் அல்லாது தன் தந்தைக்கும் தைரியம் அளித்தாள் பத்மினி..
பாவம் அவளுக்கு தெரியவில்லை தன் சகோதரி காலை விட்டது சாக்கடையில் இல்லை..அது ஒரு கூவம் என்று… அதில் விழுந்தவர்கள்  தன் உடல் முழுவதும் நாறி தான் எழுந்துக் கொள்ள முடியும் என்று…
தந்தைக்கும் சகோதரிக்கும் தைரியம் அளித்ததோடு உணவையும் கொடுத்து தானும் உண்டு முடித்தவள்… வீட்டின் முன் இருக்கும் தன்  ஜெராக்ஸ் கடையில் போய் அமர்ந்தாள்.
கை பாட்டுக்கு மாணவ மாணவியர்கள் கொடுத்து சென்றதை நகல் எடுத்துக் கொண்டு இருந்தாலும்,  மனது முழுவதும் நாம்  இந்த இடம் வேண்டாம் என்று சொல்லோடு விட்டு இருக்க கூடாதோ..இன்னும் அழுத்தமாக.. “இந்த இடம் வேண்டாம் என்று சொல்லி இருக்கனுமோ…” என்று அவள் மனது நினைக்கும்  போதே அவளுக்கு அவளே…
 நடந்ததை நினையாதே.. இனி நடப்பதை தான் பார்க்க  வேண்டும்..முதலில் ஒரு நல்ல லாயரா பார்க்க வேண்டும்..முறைப்படி விவாகரத்து நோட்டிஸ் அனுப்ப… முதல் அடி நம்மடோதா தான் இருக்குனும்..
நம் நேரம் கடத்த கடத்த அதுவே அவங்க சாதகமா மாத்தவும் செய்வாங்க..இப்படி பட்டவங்க எதுக்கும் துணிவாங்க… என்று நினைத்து ஒரு முடிவு செய்தவளாய்… கொஞ்சம் வெளிவட்டாரத்தில் நல்ல பழக்கம் உள்ள தன் தோழியை தொடர்பு கொண்டவள்..
எடுத்த உடன்… “எனக்கு ஒரு நல்ல லாயர் அட்வைஸ் தேவைப்படுது..உனக்கு யாரையாவது தெரியுமா…?” என்று கேட்டாள்…
ஒரு நிமிடம் யோத்தவள் பின்… “எனக்கு ஒரு லாயரை தெரியும்…உனக்கே தெரியும்  என் அண்ணன்  ரியல் எஸ்டேட் பிசுனஸ் பண்றாருன்னு..ஒரு இடம் விசயத்தில் வில்லங்கம் ஏற்பட்டு அப்போ ஒரு வக்கீல் தான் அதை ஒன்னும் இல்லாம ஆக்குனார். அப்போ அண்ணன் அந்த லாயரை பத்தி  நல்ல திறமையானவர் என்று ரொம்ப நல்ல விதமா தான் சொன்னார்… ஆனா பேச்சு தான் நாகரிகம் இல்லாம இருக்கும்.” என்று பத்மினியின்  தோழி கிரிஜா சொன்னதும்..
“பேச்சு எப்படி இருந்தாலும் பரவாயில்ல கிரி…எனக்கு திறமையான வக்கீல் வேண்டும்.” என்று  பத்மினி கேட்க…
“கொஞ்ச நேரம் கழித்து நானே  போன் பண்றேன் பத்து..அண்ணனுக்கு தான் அந்த லாயரோட போன் நம்பர் தெரியும். கேட்டு  சொல்றேன்.”  என்று சொல்லி போனை அணைத்து விட்ட பின்   சொன்னது போலவே  சிறிது நேரம் கழித்து அவள் கைய் பேசிக்கு அழைப்பு  வந்தது கிரிஜாவின் பேசியில் இருந்து…
“சொல்லு கிரி..அண்ணா கிட்ட இருந்து  லாயர் நம்பர் வாங்கிட்டியா…?” என்று பத்மினி கேட்டதும்…
“நான் கிரிஜா அண்ணன் கிரிதரன் பேசுறேன்மா…” என்று  சொன்னதும்..
சிறிது தயங்கிய பத்மினி… “சொல்லுங்க அண்ணா…” என்று பத்மினியின் குரல் மெல்ல ஒலித்தது…
பத்மினிக்கு நட்பு வட்டம் என்பது மிக சிறியதே…அதில் கிரிஜா முக்கியமானவள்…கிரிஜா வீட்டுக்கு சென்ற போது ஒரு சில முறை  அவள் அண்ணன் கிரிதரனை பார்த்து இருக்கிறாள்.
பார்த்தால் சிரிப்பது.. கூடுதலாய்… “எப்படி இருக்கேம்மா…?வீட்டில் அப்பா அக்கா நல்லா இருக்காங்களா…?” என்ற கேள்வியோடு  தன் பதிலை பெற்றுக் கொண்டு போய் விடுவான்.
இவள் அவனை அண்ணன் என்று தான் அழைப்பாள்..கிரிஜாவின் அண்ணனும்  நாகரிகமானவன் தான்..தப்பான இரு பார்வை பார்த்தது கிடையாது பேசியது கிடையாது.
ஆனால் இப்போது கிரிதரனே பேசவும்..பத்மினிக்கு கொஞ்சம் தயக்கம்.. எதுக்கு லாயர் என்று கேட்டால் என்ன சொல்லுவாள்…இனி சொல்லி தான் ஆகவேண்டும்… விவாகரத்து என்று வரும் போது அனைவருக்கும் இந்த விசயம் தெரிய தான் போகிறது.
ஆனால் கிரிஜா கேட்டால் சொல்லி விடுவாள்..ஆடவன் இவனிடம் எப்படி என்று அவள் யோசிக்கும் போதே கைய் பேசியில் அழைப்பில் அந்த பக்கம் இருந்த கிரிதரன்…
“என்னம்மா நம்பர் நோட் பண்ணிட்டியா…?” என்ற கேள்வியில் தான் நிகழ் உலகத்துக்கு வந்த பத்மினி…
“சாரிண்ணா சாரி..நான் கவனிக்கல..இருங்க அண்ணா நான் பேப்பர் பேனா எடுத்துக்குறேன்.. .” என்று சொல்லி தன் கடையில் டேபுல் மீது  எப்போதும் இருக்கும் பேப்பரை தான் எழுதும் வாகாக வைத்தவள்.. அங்கு இருந்த பென்னையும்  எடுத்துக் கொண்டு…
“ஆ சொல்லுங்க அண்ணா…?” என்று கேட்டு கிரிதரன் எண்கள் சொல்ல சொல்ல அந்த பேப்பரில் எழுத்திக் கொண்டதும்.. திரும்ப ஒரு தரம் எண் சரி தானா என்று கிரிதரனிடம் கேட்டு  தெளிவு படுத்திய பின்…
“சரிம்மா நான் வெச்சிடுறேன்.” என்று அழைப்பில் அந்த பக்கம் இருந்த கிரிதரன் சொன்னதும்…
பத்மினி கொஞ்சம் தயங்கி… “அண்ணா நீங்களும் சரி..கிரியும் சரி..நான் ஏன் லாயரை கேட்டேன்னு கேட்கவே இல்லையே…” என்று தன் மனதில் தோன்றியதை கேட்டாள்.
“லாயர பார்க்கனும் என்றால அது முக்கால் வாசி நல்ல விசயத்துக்கு இருக்காது…அது தான் சொல்ல கூடிய விசயமா இருந்தா நீயே சொல்லி இருப்ப…” என்று சொல்லி நிறுத்திய கிரிதரன்..
“தப்பா எடுத்துக்கலேன்னா நான் ஒன்னு சொல்றேன்மா…கிரி சொல்லி இருக்கா உங்க அப்பா உடம்பு முடியாதவர் என்று… உன் அக்காவுக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியும்..ஏதாவது பிரச்சனை என்றால் அக்கா வீட்டுக்காரரை கூப்பிட்டுக்க..
இல்ல அது வசதி படாதுன்னா..இப்போ நீ பேச்சுக்கு பேச்சு அண்ணா போட்டு அழைக்கிறிய அந்த முறையில்  ஏதாவது பிரச்சனை என்றால் என்னை கூப்பிடு.” என்று கிரிதரன் சொன்ன விநாடி பத்மினி கதறி அழுது விட்டாள்.
பத்மினி தைரியமான பெண் தான்.. அவள் தாய் அவளின் பன்னிரெண்டாவது வயதில்  ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதுவும் மருத்துவமனையில் இருக்கும் கணவருக்கு உணவு சமைத்து எடுத்துக் கொண்டு செல்லும் போது விபத்தில் போய் சேர்ந்து விட்டார்.
அந்த விபத்து அவளின் அக்கா கீதா கண் எதிரில் நடந்ததாலோ என்னவோ கீதாவுக்கு எதை பார்த்தாலும் பயப்படுவாள். தைரியம் என்பது அவளிடம் துளியும் கிடையாது.
இவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தந்தை கொஞ்சம் சுகவீனம் அற்றவர் தான். சிறிய வயதில் தாயை பரிகொடுத்து விட்டு பயந்த சுபாவம் உள்ள அக்காவை பார்த்ததாலோ என்னவோ… நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவள்  தான் அனைத்தும் முன் நின்று நடத்துவாள்.
இன்னும் கேட்டால் அவளுக்கும் அவள் அக்காவுக்கு ஆறுவயது வித்தியாசம்..ஏதாவது ஒன்னு என்றால்  கீதா தான் பத்மினியிடம் வருவாள்..சிறுவயதிலேயே   பெரிய மனுஷியாய் தன்னை உணர ஆரம்பித்தாளோ…
இல்லை அப்படி மற்றவர்களிடம் காட்டிக் கொண்டாளோ..என்று தெரியாது.ஆனால் அவ்வீட்டின் அனைத்து முடிவுகளும் பத்மினி தான் எடுப்பாள். தந்தை தொடர்ந்து வேலை செல்ல முடியாத நிலையில் அவர்  உடல் நிலை இருந்ததால்…
போரூரில் மெயின் இடத்தில் இருந்த அவர்கள் இடத்தை விற்று செங்கல்பட்டில்  கொஞ்சம் குறைந்த விலையில் கிடைத்த ஒரு கிரவுண்டில் இடம் வாங்கி… அதில்  முன் பக்கம் மூன்று கடையும் பின் பக்கம் மூன்று போஷனாக வீடு கட்டியும் அங்கு சென்றார்கள்.
மூன்று போஷன் என்றால் பெரிய அளவில் எல்லாம் இல்லை..சிறிய அளவில்  தான்..அதாவது ஒரு படுக்கை அறை கூடம்..சமையல் கட்டு அவ்வளவு தான்..மூன்று போஷனும் அப்படி தான் இருக்கும். அதில் ஒரு பகுதியில் இவர்கள் இருக்க மற்ற இரு பகுதியோடு கடையும் வாடகைக்கு  விடப்பட்டது…

Advertisement