Advertisement

அத்தியாயம்….10
“நான் மறுத்து போய் விட்டேன். இனி என் மனதும் சரி, உடம்பும் சரி காயம்  பட வேறு ஒன்றும் இல்லை. என்று நான் நினைத்திருந்தேன் அந்நாள் வரும் வரை…” என்று பூஜா சொல்லி விட்டு கண் மூடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள்…
“அக்கா…” என்று  சொல்லி குருமூர்த்தி பூஜாவின் கரம் பற்ற…அவனை பார்த்து ஒரு புன்னகை சிந்தினாள். புன்னகை தான். கன்னம் கொஞ்சம் இழுத்தது போல் பல் இரண்டும் காட்டி விட்டு சிரிக்கும் அனைத்து சிரிப்பும் புன்னகையின் வகையில் சேரும் என்றால்..
இதோ பூஜா கண்ணில் கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தாலும், ஒரு சகோதரனாய்  உனக்கு அனைத்துமாய் நான் இருக்கிறேன் என்று தைரியம் கொடுக்கும் வகையாக அவன் கை பற்றலில், அவ்னை பார்த்து பூஜா சிந்திய புன்னகையும்  புன்னகை தான்.
ஆனால் அந்த புன்னகையின் பின் அவளின் ரணம்…அவளின் வலி, இதோ இப்போது  ஜீவனே இல்லாமல் புன்னகைக்கிறாளே இந்த புன்னகை… இதை இனம் அறிய..அது போல் ரணப்பட்டவர்களால் மட்டும் தான் முடியும்.
அந்த ரணத்தை குருமூர்த்தி அனுபவிக்க  வில்லை என்றாலும், பார்த்து இருக்கிறான்..அந்த கொடுரத்தை பார்த்து இருக்கிறான்… அவளின் வலி அவனுக்கு தெரியும். அதனால் தன் சகோதரியின் கை பற்றிய குருமூர்த்தியின் கையிலும் லேசான நடுக்கம் தான்.
அவள் அவனின் கை பிடியில் தைரியம் காண்கிறாளா…? அவன் அவளின் கைய் பிடியில் தைரியம் அடைந்தானா…? என்று தெரியாது ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் என்ற வகையாக இருவரும் கையை இறுக்க பிடித்து இருக்க..
அதை கேட்டுக் கொண்டு இருந்த கீதாவும், பத்மினியும் இன்னும் இன்னும் மனதில் கிலி பிடித்துக் கொண்டது..அடுத்து என்ன நடந்து இருக்கும்…?  அதுவும் குருமூர்த்தியின் முகத்தில் தெரிந்த அந்த பாவனையில், பத்மினி கொஞ்சம் ஆடி தான் போய் விட்டாள்.
குருமூர்த்தியின் முகத்தில் அவள் பார்த்தது எல்லாம் தெனவெட்டு, அலட்சியம், கிண்டல், கேலி,,, நீ எனக்கு இணையா என்பது போல் செருக்கு இது போல் தான்  குருமூர்த்தியின் முகத்தில் பத்மினி  பார்த்தது..
ஆனால் இந்த முகம்..அது சோகமா..? இல்லை கலக்கமா..? இல்லை அருவெறுப்பா… என்று இனம் காண முடியாத ஒரு பாவனை குருமூர்த்தியின் முகத்தில் தெரிந்தது.
அதுவும் பூஜாவின் முகத்தில் மேலும் விரக்தி புன்னகை கூட… “இதோ இப்போது கூட என் கண்ணில் இருந்து கண்ணீர் வருது… நிஜமா ஆச்சரியமா தான் இருக்கு.. இன்னுமா அது வத்தலேன்னு..இதே போல் தான் அன்றும் இனி ஒன்றும் இல்லை…
இதே போல் காலம் கடந்து விடும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது… ஒருவன் வந்தான்..என் அறைக்கு..எப்போதும் வரும் வாடிக்கையாளர் என்ற வகையில்  தான் நடக்கும் என்று நினைத்தேன்..
வருபவர்கள் ஒன்று போல் இருக்க மாட்டார்கள்..வயது இளையவர்கள் முதியவர்கள், மத்தியவயது உடையவர்கள், என்று வயது வேறுப்பாட்டோடு..அவர்களின் அணுகு முறையும் வேறு வேறாய் தான் இருக்கும்..
வர்றவங்க பெரும் பாலோனர் கொடுத்த காசுக்கு  சுகம் அனுபவிக்க தான் பார்ப்பாங்க…அவங்க சுகம் தான் அவங்களுக்கு பெருசு..நாங்க எல்லாம்..காசு கொடுத்து வாங்கப்பட்ட பொருள்..
இதமா பதமா நடந்துக்க நாங்க என்ன அவனுங்க பெண்டாட்டியா….? அதனால் கொஞ்சம் வெறியா தான் நடந்துப்பாங்க… ஒரு சிலர் அந்த வெறி கொஞ்சம் கம்மியா இருக்கும். இல்ல அதிகமா இருக்கும்… அவ்வளவு தான் வித்தியாசம்.
ஆனால் அன்று வந்தவன் முதலில் அவன் கைய் பையில் இருந்து நான்கு கயிற்றை எடுத்து என்னை கட்டிலில் வைத்து இரு கை இரு கால் கட்டி வைத்தான்.
அப்போவே எனக்கு உதறல் தான்.. இவன் என்ன செய்கிறான்….?என்னை என்ன செய்ய போகிறான் என்று…
பின் நடந்தது எல்லாம். என்னால் கத்த கூட தெம்பு இல்லாத அளவுக்கு என் உடம்பில் ஆடி தீர்த்து விட்டான்.. மதுவை என் வாயில்  ஊற்றி அதை அவன் வாயில் உறிஞ்சிறேன் என்று… நிஜமா..அது என்னால் தாங்க முடியவில்லை.
உதடு கிழிந்து விட்டதோ…இல்ல உதடே அவன் வாயில் போய் விட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு உதடு வலி…அந்த உதட்டு வலி என் முகம் முழுவதும் பரவி இருக்க..
இது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் அவன் அடுத்து  செய்த செயல்… குழந்தையின் பசியாற உதவும் வழி அவனின் வாயில் பியித்து எடுத்து விட்டான்..
அவனை அதிர்ச்சியா பார்க்கும் போது தான் அவன் வாயில் இருந்து ரத்தம் கொட்ட ரத்தம் கொட்டலுக்கு இடையே அது வந்து உன் முகத்தில் விழுந்தது…
அடுத்து மயக்கம் அவ்வளவு தான் நான் என்னும் போது தான் மீண்டும் என் முகம் முழுவதும் ரத்தம்..ஆனால் இந்த தடவை என் ரத்தம் கிடையாது அவன் ரத்தம்..
ஆம் அவன் ரத்தம் தான்… பின்னால் அலங்கார பித்தளை விளக்கினை கையில் பிடித்துக் கொண்டு என் குரு..என் குரு…நின்றுக் கொண்டு இருந்தான்.
நாங்க ஒரே அம்மாவுக்கு பிறக்கல..ஆனா நாங்க அங்கு ஒன்னா வளர்ந்தோம்.அங்கு  இருக்கும் பெண்களுக்கு  பெண்  குழந்தை  பிறந்தால் என் போலவும்..ஆண் குழந்தை பிறந்தால்..அங்கு வரும் ரவுடிகளை சமாளிக்கவும்..வரும் வாடிக்கையாளர்கள் ஒரு சிலர்.. நாங்க வெளியில் அழச்சிட்டு போறோம் என்று சொல்லிட்டு கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு விட வர மாட்ட்டாங்க..
அப்போ அவங்கல அடிக்க..உதைக்க அடியாள் மாதிரி வளர்ப்பாங்க.. அப்படி அங்கு வளர்ந்தவன் தான் என் குரு…குருவை அங்கு இருக்கும் பெண்கள் அனைவருக்கும் பிடிக்கும்..அதே போல் தான் எனக்கும் இவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
குரு அப்போ பத்தாவது படிச்சிட்டு இருந்தான்.. படிக்கும் போது அவன் இஷ்ட்டம் போல் எந்த அறையில் வேண்டுமானலும் அவன் படிப்பான்..
அது போல் அவன் படிக்க வரும் போது அப்போ நான் குளியல் அறையில் இருந்தேன்..கஸ்டமர் என் அறைக்கு வந்ததை பார்த்துட்டு குரு கட்டிலுக்கு கீழே படுத்துட்டான்..
இது போல் வாடிகையாளர்கள் வரும் போது அவன் இருக்க கூடாது. அப்படி இருந்தால் இவனை போல் வளர்க்கப்பட்டவன் இவனோடு பெரியவனாய் இருப்பவன் அடித்து விடுவான்.
ஒரு தடவை இது போல் அவன் அடி வாங்கியதால், பயந்து கட்டில் அடியில்  ஒளிந்துக் கொண்டான்.. அதுவும் நல்லது போல் ஆனது அன்று. கட்டில் மேல் என்ன நடக்கிறது என்று தெரியாது படுத்து இருந்தவன் போக போக பூஜாவின் கத்தல் கதறல் கேட்க கேட்க..என்னவோ ஏதோ  என்று இருந்தவன்..
என்ன என்று வெளியில் வந்து பார்க்க பயந்தான் அந்த சிறியவன்..முதலில் வாங்கிய அடி அப்படி..ஆனால் கடைசியில் அவன் கட்டிலில் அடியில் சிதறிய ரத்தத்தை பார்த்து தன்னால் எழுந்து வெளியில் வந்தவனின் கண்ணில் பட்ட விசயம்…
டீன் ஏஜில் இருந்தாலுமே..அவனுக்கு அனைத்துமே தெரியும்..நாம் வளர்ந்த இடம். வளர்க்கும் சூழல்… இதை  பொறுத்து தானே குழந்தைகளின் மனநிலையும், குணநலன்களும் இருக்கும்..
சிறு வயதில் இருந்து அவன் கண்ணில் கண்ட காட்சிகள்..காதில் கேட்ட விசயங்கள் அனைத்தும் வயதுக்கு மீறிய விசயங்களே..அதனாலேயே அவனுக்கு அந்த வயதுக்கு தெரிய வேண்டிய விசயங்களுக்கும் மீறி அவனுக்கு  தெரியும்.
தெரிந்ததையும், புரிந்ததையுமே சேர்த்து அவன் பார்த்த அந்த காட்சியில் முதலில் மிரண்டு பின் ஏதோ ஒரு முடிவு எடுத்தவனாய் அருகில் இருந்த அலங்கார பித்தளை விளக்கை கொண்டு அவனை அடித்து விட்டு..பின் அங்கு இருந்து பூஜாவோடு செல்ல முடிவு எடுத்து..
“நாம இங்கு இருந்து போய் விடலாமா…?” என்று குருமூர்த்தி பூஜாவை பார்த்து  கேட்டான்.
“முடியுமா…?” என்று பூஜா தன் உடல் உபாதையையும் மீறி கண்களின் ஆசை கொண்டு  கேட்டாள்.
“முடியும்.” என்று சொன்ன குருமூர்த்தி அடுத்து செய்தது அனைத்தும் மின்னல் வேகம் தான்..அவன் அங்கு இருந்து அக்காவோடு மட்டும் வரவில்லை..
பிழைக்க காசு வேண்டும் என்று தெரிந்தவனாய்..அங்கு சிறுவயது முதலே அனைத்து அறைக்கும் சென்று வந்த அவனுக்கு தெரியாதா…?நகை எங்கு இருக்கும். பணம் எங்கு இருக்கும் என்று…
துணியில் மூட்டை கட்டி கொண்டு வரும் அளவுக்கு நகையும் கோனிபையில் பாது துணியும் மீதி பண கட்டுக்களாய் தான் குருமூர்த்தி அந்த சோனாகாச்சி இடத்தில் இருந்து உள்நுழைந்தால், அங்கு இருந்து வெளியில் வருவது அவ்வளவு கஷ்டம் என்று சொல்லும் இடத்தில் இருந்து பூஜாவை ஆண் வேடம் இட்டு… தான் எப்போதும் போவது போல்..
போகும் போது எதிர்ப்பட்டவர்களை சகஜமாய்… “என்ன…?ஏது…?” என்று பேசியவனாய்..
ஆண் வேடம் இட்ட பூஜாவை பார்த்து.. “யார் இந்த பைய்யன்…?” என்று கேட்டதற்க்கு…
“நம்ம தோஸ்த்து…”  என்று  சொல்லி பதினான்கு வயதிலேயே வயதுக்கு மீறிய வளர்த்தியில் இருந்த குருமூர்த்தி பூஜாவின் தோளில் கை போட்டவனாய் மற்றவர்களிடம் சொல்லி.. யாருக்கு எந்த சந்தேகமும் எழாத வகையாக அங்கு இருந்து சென்னை வந்து..பின் அவன் படித்து…முடித்து இதோ உங்கள் முன்…” என்று அனைத்தும் சொல்லி முடித்தாள் பூஜா…
அதை பூஜா சாதரணமாக சொல்லி முடித்து விட்டாள். ஆனால் அதை கேட்ட இரு பெண்கள்…இடிந்து போய் உட்கார்ந்து விட்டனர்..என்ன கொடுமை இது…? என்பது போல்…
பத்மினி கொஞ்ச நேரத்திலேயே  திக் பிரமையில் இருந்து விடுப்பட்டு விட்டாள்.ஆனால் கீதாவோ..இது வரை தன்னுடையது தான் பெரிய பிரச்சனை என்று இருக்க..உன்னுடையது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் பூஜாவின் விசயம் அவள் கண் முன் வந்து நின்றது.
அடுத்து பேச கீதாவுக்கும் தெம்பு இல்லை..பத்மினிக்கும் தெம்பு இல்லை.. எதுவும் பேசாது இருவரும் போய் வருகிறேன் என்று விடைப்பெறும் போது..
குருமூர்த்தி கீதாவை பார்த்து… “அந்த வீடியோ…” என்று மேலும் ஏதோ பேச வந்தவனை தடுத்து நிறுத்திய கீதா…
“உங்க கிட்டயே இருக்கட்டும்… அது மட்டும் இல்ல..இந்த காப்பியோடு வேறு பிரதி இருந்தா கூட எனக்கு கவலை இல்லை… இதில் என் தவறு எதுவும் இல்லை..அதனால் நான் எதுக்கும் பயப்படவும் மாட்டேன்..தலை குனியவும் மாட்டேன்.” என்று சொன்ன கீதாவின் பேச்சில் அவ்வளவு தைரியம்..
ஒரு சிறு கோட்டின் பக்கத்தில் ஒரு பெரிய கோடு இட்டால் என்ன நடக்குமோ இப்போது கீதாவின் விசயத்திலும் அது தான் நடந்தது…
கீதாவும் ,பத்மினியும் வருகிறேன் என்று சொன்னதும் குருமூர்த்தி அவர்களின் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ இருவரையும் பார்த்து…
“நானே உங்களை  வீட்டில் விட்டு விடுகிறேன்.” என்று சொன்ன குருமூர்த்தியிடம் இரு பெண்களும்  எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காது அவனோடு சென்றனர்…
அதுவும் கீதா இது வரை குருமூர்த்தி முகத்தை ஒழுங்காக பார்த்து பேசியது கிடையாது. வழக்கு பற்றி அவன் ஏதாவது கேட்டால் கூட, சுவற்றையோ கதவையோ பார்த்து தான் பதில் அளிப்பான்.
ஆனால் இப்போது சிரித்த முகத்துடன்.. “சரி…” என்று சொன்னவளின் முகம் அவ்வளவு அழகாக. இருந்தது…யார் கருப்பு அழகில்லை என்று சொன்னது…இதோ இவள் சிரிக்கும் போது அவளின் உதட்டையும் மீறி தெரியும் அந்த தெத்து பல்லை பார்த்து சொல்லட்டும் இவள் அழகு இல்லை என்று…
இப்படி நினைத்தது  குருமூர்த்தி இல்லை. கிரிதரன்… அரை மணி நேரம் முன் பத்மினிக்கு அழைத்து… “எல்லோரும் எப்படி இருக்கிங்க…?வேறு எந்த பிரச்சனையும் இல்லையே…?  கீதா எப்படி இருக்காங்க…?” என்று கேட்கும் போது பத்மினி ..
“இப்போ நாங்க லாயர் வீட்டில் இருக்கோம்.” என்று சொன்ன பத்மினியின் குரல் மாறுப்பாட்டில் ..
“பத்தும்மா ஏதாவது பிரச்சனையா..? கீதாவுக்கு ஒன்னும் இல்லலே…?” என்று பதறி போய் கிரிதரன் விசாரித்தான்.
கிரிதரன் அப்படி விசாரிக்கவும் காரணம் இருக்கிறது..உண்மையில் பத்மினியின் குரல் அழுகையை அடக்கிய குரலாய் தான் கிரிதரனிடம் பேசும் போது இருந்தது. ஏன் என்றால் அப்போது பூஜா தன் கதையை சொல்லிக் கொண்டு இருந்தாள்.
கிரதரனின் அழைப்பை பத்மினி  ஒரு முறைக்கு இரு முறை நிராகரித்து விட்டாள். மூன்றாம் முறை அழைக்கும் போது கிரிதனுக்கு ஏதாவது பிரச்சனையோ…? நமக்கு பிரச்சனை என்னும் போது தங்களுக்கு உதவிக்கு வந்தவரின் அழைப்பை நிராகரிப்பது தவறு என்று தான் கிரிதரனின்  அழைப்பை  பத்மினி ஏற்றது..
கிரிதரனுக்கு ஒன்றும் இல்லை..தங்களை விசாரிக்கவே அழைத்தது என்று தெரிந்ததும்… “பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா…அக்கா தான் இங்கு வரனும் என்று சொன்னாள்.. வேறு எதுவும் இல்லை.” என்று கிரிதரனை அடுத்து பேச சந்தர்ப்பம் கொடுக்காது  பத்மினி பேசியை அணைத்து விட்டாள்.
பத்மினி ஒன்றும் இல்லை என்று சொன்ன போதும்..கிரிதரனின் மனதில் அக்கா தான் லாயரை பார்க்கனும் என்று சொன்னாள் அந்த வார்த்தையே அவனை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது.
கீதா குருமூர்த்தியை பார்த்து சிரிக்கும் போது தான், சரியாக கிரிதரன் அங்கு வந்து நின்றது..அப்போது கீதாவின் சிரிப்பை பார்த்து கிரிதனின் மனது இவ்வாறு எண்ணிக் கொண்டே கீதாவையே பார்த்துக் கொண்டு இருந்து விட்டான்..
“கிரிதரன் கிரிதரன்…” என்று ஒரு முறைக்கு இரு முறை அழைத்த குருமூர்த்தி… “என்ன…?” என்பது போல் சைகையில் கேட்டான்.
“ஒன்னும் இல்ல…” என்று சொல்லி விட்டு தன் பின்ன தலையை  கோதியவனின் முகத்தை பார்த்த குருமூர்த்திக்கு…  கிரிதரன் சொன்ன ஒன்னும் இல்லை  என்றதில் ஓராயிரம் இருப்பது போல் தோன்றியது.

Advertisement