Advertisement

பகுதி – 07

வளர்மதியின் தங்கை வனிதாவும்  அவளது மகளும் காரில் வந்து இறங்கினார்கள்.

“பெரியம்மா லவ் யூ” என ஓடி வந்து வளர்மதியை கண்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தால்.

“ஆர்விகா ஓடி வந்து அனி டியர் வெல்கம்” என வரவேற்றாள்.

“சித்தி எப்படி இருக்கிங்க” என சித்தியை கண்டிக்கொண்டு அவளிடம் இருந்த சூட்கேஸை வாங்கி கீழே வைத்தாள்.

“வனிதா இவரு தான் நம்ம அருக்காணிய கட்டிக்க போற மாப்ள” என பாட்டி யாஷ்மிதனைக் காட்ட.

“மாப்ள சூப்பரா இருக்காரு” என வனிதா கூறிவிட்டு,  “வாங்க மாப்ள” என மரியாதைக்கு பேசினாள்.

ஹாஸ்! வருங்கால மாம்ஸ். “ஐ ம் அனிஷா,  ஃப்ரம் லண்டன்” என கைகளை நீட்ட.

யாஷ்மிதன் ஒரு கணம் தடுமாறி கைகளை நீட்ட. மெதுவாக பற்றி குலுக்கினாள்.

“இதைப்பார்த்த ஆர்விகா அவனை முறைக்க. கைகளை வெடுக்கென்று இழுத்துக் கொண்டான். இந்த லண்டன் ஹார்ஸ் சூப்பரா இருக்காளே. முன்னாடியே இவள பார்த்து இருந்தா ஓகே பண்ணிருக்கலாம் போலவே” என நினைத்தான்.

“ஹலோ! நேரமாகுதுனு சொன்னிங்க. சீக்கிரம் கிளம்புங்க. நிச்சயதார்த்த வேலை நிறைய கிடக்கு” என ஆர்விகா யாஷ்மிதனை விரட்ட முயற்சி செய்கிறாள்.

இதற்குள் டுமீல் ஒரு பக்கம் வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வந்து யாஷ்மிதனை கொஞ்சத் தொடங்கினான்.

இங்க பாருங்க அக்கா. இவ்வளவு நாள் கழிச்சு வரோமே எங்கள கண்டுக்காம புது மாப்ளைய கொஞ்சறான்.

“யாஷ்மிதன் அவனின் தலையை வருடிவிட்டு நான் கிளம்பறேங்க” என கூற.

பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க என யாஷ்மிதனை வழியனுப்ப.

யாஷ்மிதனின் கண்களோ ஆர்விகாவையும், அனிஷாவையும் மாறி மாறி பார்த்து விழிகளுக்குள் உள்வாங்கிக் கொண்டது.  ‘லண்டன் ஹார்ஸ் செமையா இருக்குடா யாஷ்’ என தனக்குள் சொல்லிக்கொண்டே காரில் அமர்ந்து ஸ்டார்ட் பண்ணினான்.

ஆர்விகா முறைத்துக்கொண்டு அனிஷாவை உள்ளே அழைத்து சென்றாள்.

“ஆர்வி செல்லம். என்ன இது கிராமத்து தேவதையாவே முழுசா மாறிட்டியா? எங்க போனது உன்னோட ஃபேஷன்” என கிண்டலடிக்க.

“கூடிய விரைவில் பழைய ஆர்விகா வருவா அனிமா.. கொஞ்சம் வெயிட் பண்ணு டார்லு” என்றாள்.

“பழைய ஆர்வியாக வலம்வர வாழ்த்துகள் டியர். எனக்கு இப்போ செம பசி. நான் போய்ட்டு முதல்ல சாப்பிட்டு வரேன்” என சமையல் அறைக்குள் ஓடினாள்.

அன்று இரவு அனிஷாவும் ஆர்விகாவும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆர்வி  நிஜமாவே  என்னால நம்பவே முடியல.  இலட்சிய்ம் அது இதுனு சொன்னவ இப்போ இவ்வளவு ஹாப்பி மேரேஜ் பண்ணிக்க போற. அப்போ உன் கனவு அவ்வளவு தானா?

என்னோட இலச்சியத்துக்காக தான் என்னோட முடிவையே மாத்திக்கிட்டேன் அனிஷா.

அதுக்கு வர மாப்பிள்ளை சம்மதிக்கணும் முதல்ல.

இவரை பார்க்கும்போது கல்யாணம் வேணாம்னு தான் நானும் நினச்சேன்.  சில விஷயங்கள் அவர் கிட்ட பேசினது வெச்சும் அவரோட  ஃபேமிலி பார்த்தும்  என்னுடைய லட்சியத்தை நிறைவேத்த இவர் தான் சரியான ஆளுனு  முடிவு  பண்ணிட்டேன்.

இது உன்னோட லைஃப் ஆர்வி.  விளையாட்டு இல்ல.  பொண்ணுக்கு கல்யாணம் ஒருமுறைதான்.  அதுதான் நம்ம கலாச்சாரம்.

அனிஷா!  என்ன பத்தி உனக்கு தெரியாதது இல்ல.  முதல்ல கல்யாணம் வேண்டாம்னு நான் நெனச்சது என்னமோ உண்மைதான்.  ஆனா இவரோட விளையாட்டுத் தனமான பேச்சும்,  குறுகுறுன்னு பாக்குற பார்வையும்,  சமயத்தில அவருடைய தடுமாற்றமும் ரொம்ப பிடிச்சிருக்கு.  என்னோட லட்சியத்துக்கு ஒத்துப்போனா சேர்ந்து வாழலாம்.

இல்லைங்கிற சூழ்நிலை வந்தா என்னடி பண்ணுவ.

பிரிஞ்சி போக யோசிக்க மாட்டேன்.  இந்த வீட்ல இருக்க வரைக்கும் இப்படி சேலைய கட்டிக்கிட்டு அப்பா பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒரு கிராமத்து பொண்ணா என் வாழ்க்கை முடிஞ்சு போயிடும்னு பயமா இருக்கு அனி. என்னோட கனவு லட்சியம் எல்லாமே  போய்டும்.  அதை என்னால நினச்சிக்கூட பார்க்க முடியாது.  அவர் படிச்சவர் தானே.  புரிஞ்சி நடந்துப்பாருனு  நம்பறேன் அனிஷா.

அவரும் எம்.பி. ஏ படிச்சிருக்காரு.  சொன்னா நிச்சயமா புரிஞ்சுக்குவாங்கனு நானும் நம்புறேன்.  உனக்காக நான் இருக்கேன் ஆர்வி.

“பேய் மாதிரி விடிய விடிய பேசிகிட்டே இருக்கிங்களே. நேரம் காலமா போய் தூங்குங்க” என பாட்டு அதட்ட.  இருவரும் தூங்க சென்றார்கள்.

யாஷ்மிதன் வீட்டில் முக்கியமான சொந்தபந்தங்கள் ஒன்று சேர. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.

யாஷ்மிதனின்  தங்கை சமீரா தன் கணவனுடன் சபரீசுடன் வந்திருந்தாள். வீடேகளை கட்டியிருந்தது.

சமீரா யாஸ்மிதனிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள். “பொண்ணோட போட்டோவ கேட்டா இப்போ வரை இல்லனு சொல்ற. வர வர ரொம்ப பொய் பேச கத்துக்கிட்ட. உன்னோட மொபைல குடு. நானே பாத்துக்கறேன்” என அவனது மொபைல் வாங்க ஆட்டம் போட்டு கொண்டு இருக்க.

சமீரா! சத்தியமா பொண்ணோட போட்டோ என்கிட்ட இல்ல. அதான் நேரிலேயே பார்க்க போறியே.

இருந்தாலும் ஒரு ஆர்வம் தான் அண்ணா.

ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்து போயிடாத சமீ.  ஆனா அங்க ஒரு லண்டன் ஹார்ஸ் வந்திருக்கு.  அது சூப்பரா இருக்கு  சமீரா.

அப்போ  உனக்கு புடிச்சிருந்தா அந்த லண்டன் ஹார்ஸையே  பாத்துடுவோம் அண்ணா.

ஆமாடி.  அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி. இதுக்குதான் உன்னை காணோமேன்னு நினைச்சேன். கட்டிக்க போற பொண்ண விட்டுட்டு லண்டன் ஹார்ஸ்னு எவளையோ  வர்ணிக்றிங்க. நல்லதுக்கு இல்லடா.

அம்மா,  இதெல்லாம் சும்மா ஜாலிக்கு தானே. கோவப்படாதம்மா.

ஹிக்கும். இதெல்லாம் உங்களுக்கு ஜாலியா இருக்கா. நல்ல புள்ளைங்க தான்.. பாத்து பொண்ணு வீட்டில போய் இப்படி பேசிடாதிங்க.

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம் மம்மி” என்றாள் சமீரா.

“நேரமாகுது எல்லாம்  கிளம்புங்க” என சங்கரின் குரல் ஒலிக்க.

யாஸ்மிதன், கையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தையும், வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன யாஷ்.  யாரையோ எதிர் பார்க்கிற மாதிரி இருக்கே” என சபரிஷ் கேட்டுக்கொண்டே வர.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. இந்த விஷ்வா வரேன்னு சொல்லி இருந்தான். இன்னும் ஆள காணோம்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே விஷ்வா காரில் வந்து இறங்கினான்.

“சாரிடா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என காலரை தூக்கி விட்டுக் கொண்டு வர.

“ரொம்பவே லேட் தான். சீக்கிரம் கிளம்புவோம்” என்று சங்கர் சொல்ல.

அனைவரும் அங்கிருந்து ஆர்விகாவின் அவர்கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

என்னடா இவ்வளவு அவசரமா திடீர்னு கல்யாணம். எதிர்பார்க்கவே இல்ல.  எனக்கே தெரியாம லவ் எதுவும்  பண்ணிட்டியா?

நீ வேற கடுப்பேத்தாதடா.  எங்க அம்மா ஆசைப்படி எல்லாம் நடக்குது.

அப்போ  உனக்கு ஆசை இல்லையா? யாஷ்.

யாஷ்மிதன் மௌனத்தையே பதிலாக கொடுத்தான்.

ஏண்டா உனக்கு பொண்ணு பிடிக்கலையா?

பொண்ணு நல்லா தான் இருக்காடா. இருந்தாலும் கொஞ்சம் மனசுக்கு நெருடலா இருக்குடா.

அப்புறம் என்னடா? படிப்பு குறைவா?

அவ பி.பி.ஏ படிச்சிருக்காடா.

இன்னும் என்னடா.  உன்னுடைய ஈகோ புத்திய மட்டும்  கொஞ்சம் தள்ளிவை. எல்லாமே சரியா போகும்.

எனக்கு பொண்டிட்டியா வரவ  எனக்கு கீழதான் இருக்கணும். அதே சமயம் என்னோட வாழ தகுதியானவளா மாடர்ன் கல்ச்சருக்கு ஏத்தவளா இருக்கனும். அந்த எண்ணத்தை என்னால மாத்திக்க முடியாதுடா விஷ்வா.

நீ தான் எம்.பி.ஏ படிச்சிருக்கியே. அவங்க பி.பி.ஏ  தான. அப்புறம் என்ன?

சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் எனக்கு பொண்டாட்டிய வரவ எனக்கு கீழ தான் இருக்கணும். எனக்கு அடங்கி இருக்கனும். இவ பட்டிக்காடு வேற. பி.பி.ஏ படிச்சா போதுமா? நாகரீகம் தெரிய வேணாமா.

உன்னோட மனசு எனக்கு தெரியாதா? பொண்ணுங்க அழுதா தலேகீழா நீ இறங்கி வந்துடுவ. அதெல்லாம் கல்யாணம் நடந்தா தானா சரியா போகும். நீ சொல்லி கொடுத்து மாத்திக்கோடா.

பொண்டாட்டி பின்னாடி சுத்துற உன் கிட்ட போய் சொல்றான் பாரு. அவ  நிறைய பொய் பேசறாடா. நிறைய விஷயத்தை மாத்தி மாத்தி சொல்றா. அவ பேரு டிகிரி முதல் கொண்டு என்கிட்ட மாத்தி சொன்னா. ஆரம்பமே இப்படி இருந்தா  இவளை எப்படி நம்ப முடியும்.

நீங்க மட்டும் பொய்யே சொல்லாம தான்  பண்றீங்களா? எனக்கு தெரியாதாடா.

டேய்! நாங்க சொல்ற பொய்யும், அவ சொல்ற பொய்யும் ஒன்னா?

“யாருக்குத் தெரியும். கடவுள் என்ன எழுதி வச்சிருக்கானோ. பார்த்துக்கலாம் வாடா” என யாஷ்மிதனை அமைதிப்படுத்தினான். இதற்குள் ஒரு ஆர்விகா வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

எளிமையான முறையில் அழகான வரவேற்பை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்து  வரவேற்றனர்.  உள்ளே நுழைந்தவுடனேயே விஷ்வா, “இதுல யாருடா பொண்ணு” என கேட்டான்.

ஆர்விகாவை கை நீட்டி காட்டினான்.

“இவங்கதானா?  நிஜமாவே சூப்பரா இருக்காங்க டா. உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க. ரொம்ப அழகா இருக்காங்க.  லக்கிடா” என்றான்.

போதும்.  ஆடங்குடா.

நிஜமா தான் சொல்றேன் யாஷ்.  உன்னோட மனச மாத்திக்கோ.  உனக்கு இவங்க பொருத்தமான ஜோடியா இருப்பாங்க.

போதும்டா.  கொஞ்சம் உன் திருவாயமூடு. அப்படியே கொஞ்சம் திரும்பி பாருடா.

விஷ்வா அமைதியாக திரும்பி பார்க்க. அங்கு அனிஷா நின்றாள்.  இவங்க  யாரு?

“எனக்கு  ஒய்ஃபா வரப்போறவளோட  சிஸ்டர்.  லண்டன்ல இருந்து வந்து இருக்காங்க. பேரு அனிஷா” என யாஷ்மிதன் சொல்ல.

அனிஷா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு  யுவர் ஸ்வீட் நேம்?” எனக் கேட்க.

மை நேம் விஷ்வா.

நைஸ் நேம். எனக்கு உங்கள மாதிரி சிம்பிளா இருக்கிறது தான் ரொம்ப பிடிக்கும்.

“எனக்கும்தான் அனிஷா” என விஷ்வா அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“நல்ல நேரம் போகுது பொண்ணு மாப்பிள்ளைய கூட்டிட்டு வாங்க” என ஒரு குரல் ஒலிக்க.

குறிப்பிட்ட  நல்ல நேரத்தில் ஆர்விகா வின் மென்மையான விரலில் யாஷ்மிதன் மோதிரத்தை போட்டான்.

அப்போது தான் ஆர்விகாவை அந்த பட்டுபுடவையில் முழுமையாக பார்த்தான்.  அத்தனை அழகாக தெரிந்தாள். ‘நிஜமாவே ரொம்ப அழகா தான் இருக்கா’ என மனதில் நினைத்துக் கொண்டான். ‘நமக்கு அடங்கிப்போவாளானு  தெரியலையே.  இல்லனாலும் அடக்க வேண்டியதுதான். இதுக்கு மேல வேணாம்னு சொன்னாலும் அம்மா விடவா போறாங்க.  இவ்வளவு தான் நம்ம லைஃப்’ என நினைத்துக்கொண்டான்.

“அண்ணா நிஜமாவே பொண்ணு சூப்பரா இருக்கு.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என் பேரு சமீரா  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

“நான் தான் உங்க வருங்கால நாத்தனார்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“அது என்ன நாத்தனார்?. நல்ல  ஃப்ரண்டா  இருக்கலாமே” என்றாள்.

“சரிங்க ஆர்விகா” என தலையாட்டினாள்.

‘இப்பவே பாரு மாடு மாதிரி தலை ஆட்டுது.  இவ  அதிகாரம் பண்றா. இது சரியில்லையே’ என யாஷ்மிதன்  நினைத்தான்.

“மிகக் குறைந்த நாட்களிலேயே திருமண தேதி குறிக்கப்பட்டது.   திருமண வேலைகள் வேகமாக நடக்கத் தொடங்கியது. பத்திரிக்கை படிக்கவும் அடிப்பது  முதல் பந்தல் நடப்பது வரை அனைத்துமே கான்ட்ராக்ட் ஆக பேசப்பட்டது.

“வள்ளி பாட்டியால் ஆர்விகாவின் இந்த மாற்றத்தை சிறிதளவும் நம்ப முடியவில்லை.  இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே” என  மனதிற்குள் பயத்தோடு காணப்பட்டார்.

எத்தனை தான் காலங்கள் மாறினாலும் அம்மா பேச்ச மீறி நடக்கற சக்தி மட்டும் இன்னும் இந்த கடவுள் கொடுக்கலையே.  இவ தான் நம்மோட தலையெழுத்துனு ஆகிடுச்சி.  ‘இதுக்கு மேல இவ இஷ்டத்துக்கு எதையும் செய்ய விடக்கூடாது.  இப்பவே அடக்கி வைக்கணும்’ என நினைத்தான்.

சாரல் தொடரும்…

Advertisement