Advertisement

                                                                           அத்தியாயம் 16

தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா “என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா!”

“பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனாஅவளை தனியா எங்கயும் நா அனுப்பியதே இல்ல ஊட்டி வரைக்கும் அவனுக்காக போனவள சாகுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான்.?”

 

“எனக்கு பயமா இருக்கு தேவ் என்னென்னமோ சொல்றீங்க! அதான் மீராகு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிசே அவள குணப்படுத்திடலாம் தேவ்” ” பழி வாங்குறேன்னு மீராவ அவருக்கே கல்யாணம் பண்ணி குடுக்க போறீங்க”

‘ ஹாஹாஹா’ வில்லச்சிரிப்பு சிரித்தவன் ப்ரியா பயந்து அவனை  விட்டு தள்ளி நிற்க ” என்னடி பொண்டாட்டி புருஷன் சொல்றானே சரி மாமா உங்களுக்கு உறுதுணையா நா இருக்கேன் வெட்டுங்க மாமானு அருவாவ கைல தர வேணாமா? இதுவல்லவோ நல்லா பொண்டாட்டிக்கு அழகு” அவன் ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு வில்லன் {நடிகர்கள்} போல் சொல்ல அவன் மேல் பாய்ந்ததவள் அவனை கை வலிக்கும் வரை மொத்த ஆரம்பித்தாள்.

அவள் அடிப்பதை “வினு இத விட நல்ல அடிப்பா நீ வேஸ்ட் பொண்டாட்டி” என்று சிரிக்க விளையாட்டை கை விட்டவள் “எதுக்கு தேவ் அப்போ பொய் சொன்னீங்க” அவள் முகத்தை ஏறிட்டு    “ரெண்டு பேரும் கொஞ்சம் நாள் தனியா இருக்கட்டும் இது சைதன்யனுக்கும் சவால் தான். தனியா அவள சமாளிக்கணும் அவள புரிஞ்சிக்கணும் அது போல அவளும் அவன் அன்ப உணரட்டும் பழைய நியாபகங்கள் வந்தாலும் அவங்க ஒன்னா இருப்பங்கள்ல.

“அதுக்காக லட்சுமி அம்மா பாவமில்லையா” “பாவம் தான் ஒரு வருஷமாவது தனியா இருக்கட்டும் அதுக்கு அப்பொறம் உண்மையா சொல்லிடலாம்”

“இத சரவணன் சார்கும் லட்சுமி அம்மாக்கும் சொல்லி செய்ய வேண்டியது தானே! எதுக்கு மறைச்சீங்க ” “அந்தம்மா மீரா விசயத்துல ஆர்வக்கோளாறா இருக்காங்க மீராட உயிர்க்கு ஆபத்துனு சொன்னதால தான் அடங்கி இருக்காங்க.நாளைக்கு வருவங்கள்ல நீயே பாரு” “தேவ் அப்போ அப்போ நீங்க மனநல மருத்துவார்னு ப்ரூப் பண்ணுறீங்க. வினு தூக்கத்தில் சினுங்க “இவ என்ன இங்க தூங்குறா மீரா கூட தூங்க வைக்க வேண்டியது தானே!

“உங்க மூத்த பொண்ணு லவ் மூட்ல இருக்கா! அதான் டிஸ்டர்ப் பண்ணல” “இன்னைக்கு வினு என்ன பண்ணா!”

“மீராகூட சேர்ந்து  அவ பண்ணுற சேட்டை தாங்க முடியல” என்று சிரிக்கா “அப்படி என்ன பண்ணாங்க “அத ஏன் கேக்குறீங்க தேவ் நீங்க வர முன்னாடி கண்ணாமூச்சி விளையாடினோமா! ப்ரியா கண்ணை உருட்ட “அப்பொறம்” தேவ் கதை கேக்க ஆரம்பிச்சான். அங்கே மீராவும் சைதன்யனிடம் இன்று பார்க்கில் நடந்ததை சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அத்து தான் எங்களை பார்க் கூட்டிட்டு போனா” “அத்துவா யாருடா அது” “அது வேத் அத்தான் வைப் ப்ரியா” “ப்ரியாக்கு செல்ல பேர் எப்படி அத்துவாகும் யோசிக்கும் பாவனையில் சைதன்யன் கேக்க, ” ஓஹ் அதுவா அத்தான் வைப் அத்து” அசால்ட்டா சொல்லா என்னமா பேர் வைக்கிறா நமக்கு புள்ள பொறந்தா வித விதமா பேர் வைப்பா போலயே தலையணையை சரிபண்ணி சாய்ந்தமர்ந்தவன் ஹெட் போனை மாட்டிக்கொண்டான்.

“ஹலோ கேட்டுகிட்டு இருக்கீங்களா!” “இருக்கேன் சொல்லு ஸ்ரீ” “அப்பொறம் கண்ணாமூச்சி விளையாடினோமா!’ அவள் சொல்ல சொல்ல ‘ம்ம்ம்’ கொட்டினான் சைதன்யன்.” அத்து கண்ண கட்டி நானும் வினுவும் போக்கு காட்டி கிட்டு இருந்தோம். அங்க ஒரு காதல் ஜோடி மர நிழல்ல குடை பிடிச்சு கிட்டு இருந்தாங்களா!’ சைதன்யனுக்கு சுவாரஸ்யம் கூடியது “ஆ அப்பொறம் வினு அவங்க கிட்ட  போய் குடைய இழுத்து எடுத்துட்டா” ” ஹாஹாஹா அப்பொறம்”

“அந்தாளு வேற அங்குட்டு போ பாப்பா போ பாப்பா னு துரத்திக்கிட்டு இருந்தான். என் பக்கத்திலேயே இருந்ததால நானும் அவ போறத கவனிக்கல அந்தாளு கத்துறத பாத்து தான் அங்க திரும்பி பாத்தேன் அத்து கிட்ட சொல்லிட்டு நடையை எட்டி போட்டா நம்ம வினு குட்டி கேட்டாலே ஒரு கேள்வி” “அப்படி என்ன கேட்டா?” ” எல்லாரும் மழைல அம்ரெல்லா எடுத்து போவாங்க பாட்டி வெயில்ல போற போ எடுத்து போறாங்க நீங்க ஏன் நிழல்ல பிடிக்கிறீங்க”

“ஹஹஹஹ” சைதன்யன் சிரிப்பை நிறுத்த முடியாமல் திணற இங்கே மீரா போனை சார்ஜில் போட்டவாறு “இதுல அப்படி என்ன சிரிக்க இருக்கு வினு குட்டி சமத்தா  சரியா தானே கேட்டா அவன் சிரித்ததுக்கான உண்மையான அர்த்தம் புரியாமல் மீரா நொடித்துக்கொள்ளா. ஒருவாறு தன்னை சமாளித்தவன் “நாம எப்போ மர நிழலில் குடை பிடிக்கலாம் ஸ்ரீ” என்று சைதன்யன் கேட்க அவன் கேட்ட தொனியிலேயே வெக்கத்தில் முகம் சிவந்தவள் “எனக்கு தூக்கம் வருது ஜெய்” என்று காலை கட் செய்தாள். “ஜெய்… இது வேறயா” அவளின் சையு என்ற அழைப்புக்கு ஏங்கியது அவன்  மனது.

” ஆமா தேவ் வினு அப்படி கேட்கவும் அந்தாளு திட்ட ஆரம்பிச்சுட்டான். பப்லிக் பிளேஸ்ல இப்படி நடந்துக்கிறியேனு லெப்ட் ரைட் வாங்கிட்டேன்.

“என் பிலேசுல நா இருக்கலாம் ல” ” என்ன பிளேஸ்” ப்ரியா புரியாமல் அவனை ஏறிட “ம்ம் என் மக்கு பொண்டாட்டி நீ தாண்டி என் பிரைவேட் ப்ரோபர்டி உன் லிப்ஸ் தான் டி என் பிரைவேட் பிளேஸ்” என அவளை இழுத்து அணைக்க அவனிடமிருந்து திமிறி வெளி வந்தவள் “என்ன பேச்சு மாறுது பேசாம தூங்குங்க நாளைக்கு நெறய வேல இருக்கு, மீரா என்ன டிரஸ் போடா போறாளோ!” ” நீ கனவு காணாம தூங்கு” கடுப்பாய் தேவ் மொழிந்து அவளை அவன் கையணைப்பில் கொண்டுவர கண்ணயர்ந்தாள் அத்தானின் அத்து.

மீரா சைதன்யனை சந்தித்தது காதல் வயப்பட்டது சரஸ்வதிக்கும் ரவிக்குமாருக்கு தெரியாது.அம்னீசியா என்பது மாத்திரம் அறிந்தவர்கள் இந்த கல்யாண விஷயத்தை தேவ் சொல்லவும் லட்சுமி அம்மாவை தெரியும் என்பதால் சரஸ்வதி அம்மா நிம்மதி அடைந்தவராக தனது சம்மதத்தை சொல்ல.ரவிக்குமாரோ “மீரா பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா பா” என்று தேவ்வை கவலை நிறைந்த விழிகளால் நோக்க

“எல்லாம் சொல்லிட்டேன் மாமா ஒரு சின்னா பிரச்சின” “என்னப்பா அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி பெருசா ஏதாச்சும் செய்ய சொல்றாங்களா?” “ஐயோ என்ன மாமா நீங்கா விட்டா கல்யாண செலவெல்லாம் தனியாவே பத்துப்பார் நான் தான் மீரா எங்க வீட்டு  ஒரே பொண்ணு எங்க ஆசையையும் செய்ய விடுங்க னு கெஞ்சாத குறையா சொல்லிட்டு வந்துட்டேன்.” ” அப்போ என்னப்பா?” சரஸ்வதி அம்மாவும் கொஞ்சம் பதட்டப்பட “பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்ல” என்று

சைதன்யனும் சரவணன் சாரும் போட்ட பந்தயத்தையும் மீரா பேர் வைத்து இருப்பதையும் சொன்னவன் இப்போ உண்மையா சொன்னால் மீராவின் மனது தாங்காதென்று கூறி அவர்களை சம்மதிக்க வைத்தவன் மாலை பெண் பார்க்கும் படலத்துக்கு வேண்டியவைகளை வாங்க சரஸ்வதி அம்மா உடன் சேர்ந்து பட்டியலிட ஆரம்பித்தான்.

ப்ரியா மருத்துவ மனைக்கும் மீரா ஆபீசுக்கு சென்றிருக்க வினு குட்டி ரவிக்குமாரை இழுத்துச் சென்றிருந்தாள் அவளின் பிலே ஸ்கூல் சாமான்களை காட்ட.

லன்ச் அவரில் சைதன்யனை சந்திக்க மீரா லிப்டினுள் புக அன்றைய நியாபகம் வந்து வெட்கப்புன்னகை சிந்த லிபிட்டினுள் இருந்த சிலர் வித்தியாசமாக பார்க்கவே முகத்தை இயல்பாக வைக்க முயன்றும் தோற்றவளாக தலையை பணித்து உதடுகளை மடித்து புன்னகைத்துக்கொண்டாள்.

உணவகத்துக்கு செல்ல அங்கே சௌமியா மாத்திரம் அமர்ந்து இருந்தாள்.”எங்க த்ரூ அண்ணா வரலையா?”    ”இல்லடி”   “அவர் பிரெண்டு…”     “அதோ வராரே”         எங்கே என திரும்பி ஆர்வமாக பார்க்க சைதன்யனை காணாது அசடு வழிந்தாள். “எனக்கு நீ சொல்லாட்டி  என்ன சந்துரு எல்லாம் சொல்லிட்டான்.” சௌமியாவை பாவமாக பார்த்தவள் “நாங்க இன்னும் லவ்வே சொல்லலைடி” என கைப்பிடிக்க, கையை இழுத்துக்கொண்டவள் ” லவ்வே சொல்லாம தான் லவ் பண்ணுறீங்களோ!” இன்னும் கிண்டலாக என்னவோ சொல்ல வந்தவள் நிறுத்தி “வாங்கண்ணா” என பம்ம

சௌமியா நடிப்பதாக நினைத்த மீரா “இல்லடி உண்மையா நா அவர்கிட்ட என் லவ் வ சொல்லவே இல்ல” அதை கேட்டு   துணுக்குற்ற சைதன்யன் மனதுக்குள் “நீ தான் அழுது அழுது சொன்னியே! என வருந்த “ஏய் லூசு” என சௌமியா எழுந்து “நீங்க பேசுங்க” என ஒதுங்கி செல்ல அவளை நன்றியுடன் பார்த்த சைதன்யன். ஒரு தலை அசப்பில் அவளுக்கு விடையளிக்க அவன் நிஜமாகவே வந்து விட்டான் என உணர்ந்த மீரா அவனை ஆர்வமாக பார்க்க அவளருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான். ஸ்வீட் நத்திங்ஸ் பேசியவர்கள் மணியாகவே “சரி நா சீட்டுக்கு போறேன்” என  மீரா  கிளம்ப “ஈவினிங் வீட்டுக்கு வரேன்” என சொல்லியவன் மொபைல் ஐ நோண்ட ஆரம்பித்தான்.

அவன் முன்னாடி அசைவு தெரியவே தலையே நிமிர்த்திப் பாக்க அங்கே தீரமுகுந்தன் நின்றுகொண்டிருந்தான்

 

பொண்ணு பாக்க போக யார் யாரெல்லாம் வர போறீங்க?

 

Advertisement