அத்தியாயம் 15

 

“மீராகு என்ன நடந்ததுன்னு சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா   பண்ண முடியல கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்து விட்டா, உன்ன மொத மொத பர்தவ ஊட்டி காலேஜ் ல தான் படிப்பேன்னு ஆடம் பிடிச்சு சேர்ந்தவ தான்  ஊட்டி காலேஜ் கு ஏன் போனேன். என்ன எப்படி போக விட்டிங்கனு என்னையே தாறுமாறா கேள்வி கேக்க ஆரம்பிச்சா நா அங்க போனதால நீயும் வந்தேன்னு சமாளிச்சுட்டேன்.

“என்ன எங்க பார்த்தா? காலேஜ் ல தானே மொத மொத பார்த்தா” சைதன்யன் ஆச்சரியமாக  கேட்க மீரா சைதன்யனா முதல்ல எங்க பார்த்தா என்பதை தேவ் சொன்னான்.{மீராவுடையா கனவு பா நியாபகமிருக்குள்ள}   

அவளுக்கு உன் நியாபங்கள் இல்ல தான் ஆனாலும் தனஞ்சயனா இருக்குற உன்ன தான் இப்பவும் லவ் பண்ணுறா”தேவ் சொல்ல

ஒரு கீற்றுப்புன்னகை சைதன்யன் முகத்தில் “உனக்கு அவ தான்னு கடவுளே முடிவு பண்ணிட்டான் உன்ன மறந்தாலும் உன்னையே லவ் பண்ணுறது எல்லாம் அவ ஆழ்மனதில் நீ இருக்க என்பதால் தான். இப்போ தனஞ்சயன் என்று உன்ன லவ் பண்ணுறாளே! வேறுயாரையும் கல்யாணம் பண்ணா சாத்தியமா அவ நல்ல இருக்க மாட்டா.

அவ நியாபகங்கள் வந்தா அவ வேதனை படுவா என்று நீ  பயப்படுவது அர்த்தமற்றது.உன் அன்பு தான் அவளை வாழவைக்கும். உன் காதலை நீ புரிய வை.  அவளுக்கான டிரீட்மென்ட் டே அது தான்.  எல்லாம் நல்லதாகவே நடக்கும்.” தேவ் சொல்லி முடிக்க ஆமோதிப்பதாய் தலை ஆட்டினார் சரவண சார்.

தேவ் பேசப்பேச கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மலர்ந்தாலும் அன்னைக்கு நடந்த சம்பவத்தினால் அவள் உயிர் போயிருக்கும் தீரன்{ஸ்} மட்டும் இல்லயெனில்  அவள் இன்று உயிருடன் இல்லை என்பதை நினைத்தவன்  கவலையாகவும்  கொஞ்சம் குழப்பத்திலேயே இருந்தான் சைதன்யன்.

இயல்புக்கு வந்த லட்சுமி அம்மாவும் “அப்போ கல்யாண வேலைய ஆரம்பிக்கலாமா?” சிரித்த முகமாய் கேட்க “சின்ன சிக்கல் இருக்கு மா!” தேவ் நிமிர்ந்து அமர இவ்வளவு நேரம் கேட்டவைகளே  போதும் போதும் என்றளவுக்கு இருக்க ‘இன்னும் என்ன’  என்ற பார்வை தான் அனைவரிடமும். “நீங்க என்ன காரணம் சொன்னாலும் சைதன்யன் தனஞ்சயனா மீரா கிட்ட அறிமுகமாகி இருக்கக் கூடாது. தனஞ்சயனுக்கு யாருமில்ல என்பது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு உடனே போய்  தனஞ்சயன் தான் சைதன்யன் என்று சொல்லி புரிய வைக்க முடியாது இப்போ அவ இருக்குற மனநிலைக்கு அது இன்னும் சிக்கலை ஏற்படுத்துமோனு பயமா இருக்கு.

அவளுக்கு அம்னீசியா மட்டுமல்ல சைதன்யன் பேசினதால ரொம்ப மனசு பாதிச்சிருச்சு அத எப்படி சொல்லனும்னா!

தாங்க முடியாத வேதனை வந்தா!! இப்படி  நடந்திருக்க கூடாது! காலத்தை மாத்தி அந்த சம்பவம் நடந்தத நடக்காம பண்ணா நல்ல இருக்கும் இல்லாட்டி அந்த வேதனைய மறந்தா நல்ல இருக்கும் னு நினைப்போமே அதே மாதிரி அந்த வேதனையை மறக்கணும்னு அதையே நினைச்சி நினைச்சி மனசுல பதிய வச்சுட்டா  இப்போ அது கனமா ஆழ் மனசுல இருக்கு  எல்லாமே நியாபகம் வந்தாலும் எக்சிடண்ட் அன்று நடந்தது நியாபகம் வருமா என்று தெரியல {வரும் ஆனா வராது எங்குறீங்க}  உடம்புல ஏற்படும்  காயம் மாதிரி இல்ல மனக்காயம் அத ஆத்துறது ரொம்ப கஷ்டம்

தேவ் சொல்ல சரவணன் சாரையும் சைதன்யனையும் மாறி மாறி முறைத்தார் லட்சுமி அம்மா. “சொன்னேன்ல சட்டுபுட்டுனு போய் கல்யாணத்த பேசுங்கன்னு பந்தயம் காட்டுறேன்னு இன்னும் சின்ன பசங்க மாதிரி பண்ணி சிக்கலை இழுத்து வச்சிருக்கீங்க” கடுப்பாய் மொழியை தாடையில் கை வைத்து  “மீராகு குணமாகும் வர  ம்ம்ம்ம்ம் யோசிக்கலானார் சரவணன் சார்.

அவர் யோசிப்பதை பார்த்து மூன்று பெரும் மூன்று விதமா யோசித்தனர் லட்சுமி அம்மா ‘இப்போ என்ன ஏழரைய கூட்ட போறாரோ’ என்றும் ‘குணமாகும் வர கல்யாணத்த தள்ளி வைக்க சொல்வாரோ’ என்று தேவும். ‘அன்னைக்கி லிப்ட் ல நடந்தத வச்சி ஏதாவது ஏடாகூடமாக முடிவெடுப்பாரோ ‘ என்று சைதன்யனும் நினைக்க

“மீரா குண மடையும் வரை தனு தான் தனஞ்சயன் என்று யாருக்கும் தெரியவேண்டியதில்லை.அவன் தனஞ்சயனாகவே இருக்கட்டும்.”  சொல்லி முடிக்க விடாமல் இடை மரித்த லட்சுமி அம்மா “முடியாது முடியாது என் பையன பிரிக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சு தனஞ்சயனா வாழட்டும்னு சொல்றிங்களே! அதுல எவ்வளவு சிக்கல் இருக்கு எங்க குடும்ப முறை படி கல்யாணம் பண்ண முடியுமா?  யாரோ மாதிரி தனியா வாழ விட முடியாது

மீரா வந்தா அவள எப்படி எல்லாம் பத்துக்கணும்னு ஆசையா இருந்தேன். கலங்கிய குரலில் சொல்ல அவரின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த சரவண சாரும்  தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்த சைதன்யன்,  இடது பக்கமாக  அமர்ந்து கையை பிடித்து ஆறுதல் படுத்தினர்.  

“லட்சு…. தேவ் தம்பி சொன்னது புரிஞ்சதில்ல இப்போ என்ன பொண்ணா பொறந்தா கட்டி குடுத்து அனுப்ப மாட்டோமா?    இவன் தனிக்குடித்தனம் போய்ட்டானு நினைச்சிக்குவோம்.” “இவன் போறதுக்கு யார் அழுதா மீரா இந்த வீட்டுக்கு வர மாட்டாளேனு  தான் கவலையா இருக்கு சின்ன வயசுல இருந்தே என்ன விட்டுட்டு இருந்தவனில்ல” சமயம் பார்த்து தனது மனத்தங்களை வெளிப்படுத்தினார்.

 

லட்சுமி அம்மாவை கட்டியணைத்து அவர் கன்னத்துல முத்தம் வைத்தவன்.அவரை இலகுவாக்கும் பொருட்டு “அப்போ என்ன தத்துடுத்துக்கோ மா” என்று சொல்ல அவன் முதுகில் ரெண்டு அடி போட்டவர்.புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு ” இருங்க நா போய் எல்லாருக்கும் சாப்பிட ஏதாச்சும் எடுத்து வரேன்.” எழுந்துசெல்ல தேவ் பக்கம் திரும்பிய சரவணன் சார் மீராவின் நிலை பற்றி அவருக்கெழுந்த சந்தேகங்களை கேட்டு அறிந்துக்கொண்டார்.

எல்லாவற்றையும் சைதன்யனும் கேட்டுக்கொண்டிருக்க சந்தோஷமும் துக்கமும் ரெண்டும் கலந்த  கலவையான  உணர்வில் இருந்தான்.

சாப்பிட டீ யோடு ஸ்னாக்ஸ் கொண்டு வந்த லட்சுமி அம்மா இப்பயாச்சும் கல்யாண விஷயம் பேசுவோமா? சிரித்தவாறே கூற எல்லா சம்பிரதாயமும் எங்க குடும்ப வழக்கப்படி முறைப்படி நடக்கனும் கறாரா சொல்ல “எல்லாம் ஒழுங்கா நடக்கும் லட்சு” சரவணன் சார் அவரை சமாளித்துக்கொள்ளலாம் என  சொல்ல ” அப்போ நாளைக்கே பொண்ணு பாக்க போலாம்.”

‘இவ புரிஞ்சி பேசுறாளா! புரியாம பேசுறாளா! இவ்வளவு நேரம் என்ன சொன்னோம் பிடிவாதக்காரி’ மனசுல தான் பா வாய தொறந்து சொல்லி லட்சு கிட்ட வாங்கி கட்டிக்க சரவணன் சார் என்ன லூசா

“என்ன பாக்குறீங்க மீராகு எல்லாம் நியாபகம் வந்தா நம்மள கை விட்டுட்டாங்கனு  வருத்தப்படுவால்ல” சரவணன் சாருக்கு ‘ஐயோ!’ என்றானது.

“நீங்க ஒன்னும் கவல  பட வேனாம் மா நா மீராவை சமாளிச்சிக்கிறேன்.” தேவ் சொல்ல அப்பட்டமான சந்தோசத்துடன் “அப்போ நாளைக்கே பொண்ணு பாக்க போறோம்” கறாரா சொல்லியவர் அதற்கான ஆயத்தங்களை செய்ய சென்று விட்டார்.

“அப்போ நா கிளம்புறேன் சார் நாளைக்கு ஈவினிங் வாங்க நா வீட்டுல பேசுறேன் ஒன்னும் பிரச்சினை இல்ல” தேவ் விடை பெற்று செல்ல சந்தோச வானில் பறந்தான் சைதன்யான். இனிமேல் தான் உனக்கு இருக்கு னு விதி சிரித்தது.

அறைக்கு வந்த தேவ் தூங்கிக்கொண்டிருக்கும் வினுவை முத்தமிட்டவன்.ப்ரியா வரும் வரை நாளைய பெண் பார்க்கும் படலத்தை எப்படி செயல் படுத்துவதென்று யோசிக்கலானான். ப்ரியா வரவும் அவளை இழுத்து தனது கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் முத்தமிட,என்ன டாக்டரே! ஹாப்பி மூட்ல இருக்கீங்க போல “என்ன விஷயம்னு கரெக்ட்டா சொல்லடா? தனஞ்சயன மீட் பண்ணீங்க சரியா?

“எப்படி டி பொண்டாடி கரெக்ட்டா தப்பா சொல்ற” சிரிக்காம சொல்லா “அப்போ எதுக்கு பெளர்ணமி நிலா மாதிரி முகம் பிரகாசமா இருக்கு” “அதுவா சையுவ பார்த்து கல்யாணம் பேசி முடிச்சிட்டேன்” அதிர்ச்சியான ப்ரியா  “என்ன சொல்றீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க? அவரே வந்தாரா?” ஹேய் ஹேய் ஸ்டாப் என்ன இப்படி கேள்வி கேக்குற ஒன்னொன்னா கேளு” “தனஞ்சயன் பாக்க போனேனா சையுவ பாத்து பேசிட்டேன்” ” என்ன  தேவ் குழப்புறீங்க” அவளை சீண்டியது போதுமென நடந்தவைகளை விவரித்தவன் சைதன்யன் மீராவை திட்டியதை மாத்திரம் காதலை ஏற்க மறுத்து விட்டான் என்று   மட்டும் திரித்து கூறினான். குடும்பத்துக்கு வரும் மாப்பிள்ளையை பத்தி தவறான எண்ணம் வேண்டாம் என சொல்லாமல் மறைத்து விட்டான்.  நாளை மீராவை பெண் பார்க்க வருவதையும் கூற “என்ன தேவ் சொல்றீங்க எப்படி பண்ண போறோம்” சாதாரணமாகவே மீரா கேள்வி கேப்பா அவங்க குடும்ப முறை படி கல்யாணம்னா தாறுமாறால்ல கேப்பா” “பண்ணித்தான் ஆகனும் சைதன்யன் அவங்களுக்கு ஒரே பையன்” “அது சரி சொந்தபந்தமெல்லாம் வருவாங்க யார் வாய் வழியாகவும் மீராவுக்கு தெரிஞ்சா?” ” நீ அவ கூடயே இரு” ” ம்ம்ம் எனக்கென்னவோ மீரா கிட்ட பக்குவமா எடுத்து சொல்லலாம்னு தோனுது தேவ்” “இவ்வளவு நாளும் அவளுக்கு என்ன ஆச்சுன்னு சரியா தெரியல இப்போ  அவ சம்பந்தமான சின்ன விஷயம் நாளும் சொல்ல பயமா இருக்கு” “எல்லாம் சரியாகும் தேவ் டோன்ட் ஒர்ரி”

தேவ் வாய் மூடி குலுங்கி சிரிக்க அவன் தோளில் மாரி மாரி அடித்தவள் “எதுக்கு சிரிக்கிறீங்க சொல்லிட்டு சிரிங்க நா என்ன காமடி ஷோ வா காட்டுறேன். “நீ சொன்னதுக்கில்லடி தனஞ்சயன் தான் சைதன்யன் சரவணன் சார் பையன்னு மீரா கிட்ட சொன்னா ஒன்னும் ஆகாது அவ அத புரிஞ்சிப்பா” “தேவ் என்ன சொல்றீங்கா அப்போ எதுக்கு அப்படி சொன்னீங்க” கேள்வியாய் அவனை பார்க்க பழிவாங்கத்தான் என்றான் தேவ் கண்கள் சிவக்க.