அத்த்யாயம் 11
‘அதற்கிடையில் எங்கே சென்றார்கள்’ என்று சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தவள் போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரைபூட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
பல்லைக்கடித்து கோவத்தை அடக்கியவள். அவ்விடம் செல்ல அவனோ இன்னுமொரு வழியாக காபி ஷாப்பினுள் நுழைந்தான்.
அவனை பின்தொடர்ந்தவள் அவன் பெண்கள் கழிவறை முன் நின்றபடி குரல் கொடுக்க எந்த சத்தமும் வராது போக பதட்டமடைந்தான்.
அங்கே வந்த ப்ரியாவிடம் கையில் இருந்த பையை கொடுத்தவன் “உள்ள…. ‘அம்மு’ கொஞ்சம் பாக்குறீங்களா! ப்ளீஸ். அவள் யோசிக்கும் முன் அவளை தள்ளிவிடாத குறையாய் கதவை திறந்து உள்ளே அனுப்பினான்.
உள்ளே சென்றவள் ஒரு கழிவறை மூடி இருக்கவே கதவை தட்டி மீராவிடம் பையை கொடுத்து அங்கு என்ன நடந்ததென்று புரிந்துக்கொண்டவள் தன் அவசர புத்தியை நொந்தபடி மீராவுடன் வெளியே சென்றாள்.
அவளை திரும்பியும் பாராமல் மீராவிடம் கேள்விகளை கேட்டவாறே அழைத்துக்கொண்டு சென்று விட்டான்.
“ஹாஹாஹா அந்த சிடுமூஞ்சி நீதானா?”
தேவ்வை முறைத்தவள் “உங்க நல்ல நேரம் நா உங்கள அறைய முன்பே நீங்க பேசிடீங்க அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் நீங்க தான் என் ஆளுன்னு” அவன் நெற்றியில் முட்டியவள்.
“அப்பொறம்” ” அப்பொறம் உங்க பின்னாடி வந்து வீடு எங்கன்னு பாத்துக்கிட்டேன் 5 , 6 மாசமா உங்க பின்னாடி அலஞ்சி உங்கள பத்தி முழுசா தெரிஞ்சி கிட்டேன்.
இதுல வேடிக்க என்னவென்றால் நா உங்க பின்னாடி சுத்துனதா மீரா பாத்துட்டு என் பின்னாடி சுத்தி என்ன பத்தி புள் டீட்டைளையும் கலெக்ட் பண்ணிட்டா.
ஒருநாள் திடீரென என் முன்னாடி வந்து “என்ன என் வேத் அத்தான லவ் பண்ணுறியா?” னு கேட்டு எனக்கே சோக் கொடுத்து அதுக்கு அப்பொறம் என்ன கோவிலுக்கு வர சொல்லி உங்கள அறிமுகப்படுத்தினா!
” இவ்வளவு வேல பாத்திருக்காளா?”
“நீங்க தான் என்ன கண்டுக்கவே இல்லையே! முறைத்தாள் ப்ரியா.
“சாரி டி பட்டு மீராகு நடந்த இன்சிடெண்ட்டால ஒன்னும் தோனவே இல்ல” “ம்ம் புரியுது தேவ். ” மீராவையும் என்னையும் பல தடவ ஒன்னா பாத்திருப்ப தப்பா தோனலயா?”
புன்னகைத்தவள் ” உங்க ரெண்டு பேரையும் பாக்கும் போது அப்பா பொண்ணா தான் தோனுச்சி”
ரவிக்குமார் கேட்டை திறந்துகொண்டு வரவே அவர்களின் பேச்சு தடை பட்டது.
“என்ன பா ரெண்டு பேரும் இன்னும் தூங்கலையா? ஒரு மணி தாண்டுருச்சே” “பேசிகிட்டு இருந்ததுல டைம் போனது தெரியல மாமா” “சரி சரி பொய் தூங்குங்க” ” என்ன மாமா நாலு கால்ல வருவீங்கன்னு பாத்தேன் மிலிட்டரி சரக்கு எதுவும் கிடைக்கலையா?
“சின்ன பசங்க அத பத்தி பேசக்கூடாதுப்பா” என்றவர் அவன் தோளில் தட்டியவாரே உள்ளே சென்றார்.
உள்ளே வந்த தேவ் அம்மாவின் அறையை பார்க்க அவர் கீழே விழுந்திருந்தார். “அம்மா” என்று கத்தியவன் அவர் அருகில் செல்ல மற்றவர்களும் ஓடிவர, அவரை செக் பண்ணியவன் உடனே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றான்.
காரில் அவரை கிடத்தி மீரா அவர் அருகில் அமர ப்ரியா குழந்தையுடன் முன் இருக்கையில் அமர வண்டியை வேகமாக கிளப்பினான். தூக்கம் கலைந்த வினுக்குட்டி என்ன நடக்குதுனு ஒன்னும் புரியாம மலங்க மலங்க விழித்தாள். ப்ரியா போன் மூலம் மருத்துவமனைக்கு தகவல் தர மீரா அழுதவாறே வந்தாள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த மீராவின் கண்ணீரை துடைக்கவென முன் இருக்கையிலிருந்து எம்பி எம்பி முயற்சி செய்த வினுக்குட்டியும் அழுதாள். ரவிக்குமார் அவர் வண்டியில் வந்து சேர்ந்த போது சரஸ்வதி அம்மாவிற்கு டிரிட்மென்ட் நடை பெற்றுக்கொண்டிருந்தது.
அதிக மன அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்தார் என்றும் வேறு எந்த பிரச்சினை இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சொல்ல,
வீட்டில் நடந்த கலவரத்தை ப்ரியா சுருக்கமாக ரவிகுமாரிடம் சொல்ல மீரா தன்னையே நொந்துகொண்டாள். ‘வீட்டில் இவ்வளவு நடந்து இருக்கு ஒன்னும் தெரியாம வேற உலகத்துல இருந்தேனே’ அழுதவாறே அத்தையின் கையை பிடித்திருந்தவள் அவர் கண் முழிக்கும் வரை அவரை விட்டு நகரவே இல்ல.
ரவிக்குமாரும் மீராவுடன் இருக்க ப்ரியா தேவ் குழந்தையுடன் வீடு சென்றனர்.
கண் முழித்தவர் மீராவின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்டிநின்றார். அவரின் நிலைக்கு தானே காரணம் என மீரா கலங்கி அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவளே ஏற்றுக்கொண்டாள்.ப்ரியா கேட்டுப்பார்த்தும் தானே இருப்பதாக சொல்லிவிட்டாள்.
நான்கு நாட்களாக தேவுக்கும் ப்ரியாவுக்கும் வினுவை சமாளிக்க முடியாமல் திணறினர். வீட்டில் சரஸ்வதி இல்லாததால் வினுவுக்கு கொண்டாட்டம். ” அதைத்தொடாதே இடைத்தொடாதே” என்ற அவரின் அதட்டல் இல்ல இஷ்டத்துக்கு கலர் சோர்க் எடுத்து வீடு முழுவதும் படம் வரைந்தாள். வெளியே சுற்றிக்கொண்டு பூச்சிகளை பிடித்து பாட்டில்களில் அடைக்கவென சமயலறையில் உள்ள மசாலா டப்பாக்களை தேர்ந்தெடுத்தாள். அதை கொட்டத்தெரியாமல் கொட்டி உடம்பிலும் கண்ணிலும் பட வினுவின் அலறல் கேட்டு ப்ரியா வந்து பாக்க சமையலறை சூறையாடப்பட்டிருந்தது. அவளை குளிக்க வைத்து க்ரீம் தடவி ஒரு வாறு சமையல் அறையை சுத்தம் செய்து இடுப்பை நிமிர்த்த, பில்டிங் பாக்ஸ் விளையாடுறேன்னு வாசல் முழுவதும் பரப்பியிருந்தாள். அதை ஒரு வாறு அவளுடனையே அடுக்க தனியே சாப்பிடுகிறேன் என அடம்பிடித்து பாதி சாப்பாட்டை சிதறவிட்டிருந்தால் தேவ் வரவும் அழுதே விட்டால் ப்ரியா. நான்கு வயதில் சேர்த்தால் போதும் என்றிருந்தவர்கள் அவளை பிளே ஸ்கூலில் சேர்க்க முடிவெடுத்தனர்.
முதல் நாள் மீரா ஆபீஸ் வராது போகவே நேசமணியை விட்டு விசாரித்த சரவணன் சரஸ்வதியின் நிலை அறிந்து லட்சுமி அம்மாவுடன் வந்து பார்த்து விட்டு சென்றார். அவரை பார்க்க வந்தவரிடம் ” ஏன் லட்சுமி போட்டிக் பக்கம் இப்போல்லாம் வர்ரதில்ல” என விசாரிக்க ஏதோ சொல்லி சமாளித்தார்.
உண்மையான காரணம் மீரா!
லட்சுமி அம்மா மீராவை முதலில் சந்தித்தது சரஸ்வதியின் போட்டிக்கில் தான் அவளை பார்க்கவென அடிக்கடி வரும் அவர், அவள் வேலைக்கு செல்கிறாள் என்றதும் எங்கே என விசாரித்தவர். “எங்க வீட்டு மஹாலட்சுமி எங்க இடத்துக்கே வந்துட்டா” என மனதுக்குள் சொல்லிக்கொண்டார். சரவணன் சாருக்கு சாப்பாடு கொண்டுவருகிறேன் என்ற பேரில் மீராவை சந்தித்து பேசிவிட்டு செல்வார்.சரவணன் சார் ஆபீஸ்ல தான் தரமான உணவு கிடைக்குதே எதுக்கு வீனா அலையுற” கடிந்துக்கொள்வார்.
ரவிக்குமார் மீராவுக்கு துணையாய் ஹாஸ்பிடலிலேயே இருக்க இரண்டு நாளில் வீட்டுக்கு வரவேண்டியவரை எல்லா டெஸ்ட்டும் எடுக்கணும்னு தேவ் கறாறாராய் சொல்லா நாங்கு நாட்களில் சரஸ்வதி அம்மா வீடு வந்து சேர்ந்தார்.
இந்த நான்கு நாட்களும் மீராவுக்கு சைதன்யனின் நியாபகம் வந்தாலும் அவனை தொடர்ப்பு கொள்ள முயலவில்லை. இவள் நம்பர் சந்துருவிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடும் என்றிருந்தவளுக்கு அவன் தொடர்ப்பு கொள்ளாதது உறுத்தியது.
இருந்த டென்ஷனில் சந்துருவிடம் கேட்க தோன்றவில்லை. சௌமியா ஒரு நாள் வந்து சரஸ்வதியை பார்த்துவிட்டு சென்றாள்.
நான்கு நாட்களுக்கு பிறகு ஆபீஸ் சென்ற மீராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.சைதன்யன் வரவில்லை.விசாரித்து பார்த்ததில் அன்று லன்ச் ஹவரில் சென்றவன் எங்கே சென்றான் என்பது யாருக்கும் தெரியவில்லை.சந்துருவை கேட்டாலே முதல் நாள் “மொபைல் ஆப் இல் இருக்கு எங்க போனானென்னு தெரியலையே ” என்றவன். அடுத்தடுத்த நாட்களில் அவளுடைய காலை ஏற்கவில்லை.
சரவணன் சார் இடம் மட்டுமே பாக்கி, அவரிடம் போய் என்னவென்று கேப்பது? வேலை சம்பந்தமாக விசாரிக்க முடியாது அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சௌமியாவிடம் சொல்லி கேட்க சொல்லலாம். முதலில் அவளிடம் என்ன வென்று சொல்வது கனவு கண்டேன், முத்தமிட்டான் என்றா! அவன் காதலை சொல்லாமலேயே சென்று விட்டான். மொத்தமாக சித்தம் கலங்கி நின்றாள் பேதைப்பெண்.
பலவற்றை சிந்தித்தவண்ணம் மனதில் உழன்றவள் கால் போன போக்கில் நடந்துகொண்டிருக்க எதிரேவந்த தீரமுகுந்தனின் மேல் மோதி நின்றாள். ” பார்த்து பார்த்து” என்று அவளை நேராக நிறுத்தியவன். ” யோசனையா எங்க வச்சிட்டு போற?” என்று கேட்க அவனை விட்டு இரண்டடி பின்னுக்கு நகர்ந்தவள். எதுவும் கூறாது அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அவளை முதல் முதலாக பார்க்கும் போதே உரிமையாக ஒருமையில் பேசியதால், ஏனோ மீராவுக்கு ஆரம்பத்திலிருந்தே தீரமுகுந்தனை பிடிக்கவில்லை.
தனதறைக்கு வந்த தீரமுகுந்தனின் போன் ரிங்டோனை எழுப்பவே பிரத்தியேகமான ஒலியினால் யாருடைய கால் என்பதை அறிந்தவன்.
ஒரு நிமிடமும் தாமதிக்காமல் “தீரன்” என்றான். வெவ் வெவ் வென நாய் குறைக்கும் சத்தம் தெளிவாக கேட்டது. அப்பக்கம் என்ன கூறியதோ! “நா அனுப்பிய பென்ட்ரைவ் கிடைச்சதா?? அவன் பண்ண வேலைக்கு அவன் உயிரோடு இருக்கணும் பட் ஏன்டா உயிரோடு இருக்கோம்னு நொடிநேரமும் சாகனும்” என்றவன் போனை அமர்த்தினான்.
அங்கே சைதன்யன் நிலைமையோ பரிதாபமாக இருந்தது.