Advertisement

                                                 அத்தியாயம் 16

தனதறைக்கு வந்த வசுந்தராதேவி ஆடும் கதிரையில் அமர்ந்து பலமாக ஆடியவாறே பைத்தியம் பிடித்தது போல் சிரிக்க ஆரம்பித்தார்.

“அந்த பொண்ணு பேர் என்ன? ம்ம்…. ஆன்ஷி ஆன்ஷி… அப்பாவி பொண்ணு. அப்பன் தப்பானவனா இருந்தா என்ன பால் வடியும் முகத்தை பார்த்தாலே தெரியுது உசுரே போனாலும் தப்பான வழியில போக மாட்டான்னு.

ஷரப் உன் இஷ்டப் படி ஆட நீ சாதாரண பணக்கார குடும்ப வாரிசில்ல. இந்த சமஸ்தானத்துக்கே ஒரே வாரிசு. உனக்கு பிறகு  உன் வாரிசுகள் ஆளனும். அவங்கள சுமக்குரவல நான் தான் தீர்மானிப்பேன். என் சொல் படி கேட்டு நடக்கும்,  என் கைப்பிடிக்குள் இருக்கும் ஒருத்திதான் வரணும்.

அவள பயங்காட்டினாலே உன் வாழ்க்கையிலிருந்து ஓடிடுவானு நினச்சேன். நான் பெத்த என் பொண்ணு பத்மா எனக்கு மேல இருக்கா. ஹா ஹா ஹா அவளே தற்கொலை பண்ணிகிட்டு இருப்பா  உன்ன பத்தின உண்மையைச்சொல்லி நீயே அவளுக்கு கொள்ளி வச்சிட்டியே! இனி அவளே உன் வாழ்க்கையிலிருந்து போய்டுவா. போகலானா நான் போக வைப்பேன்.

நீ பேசப் பேச அவ முகம் மாறிச்சே அத கவனிக்காம விட்டிட்டியே! பேராண்டி.  என்ன சொன்ன என்ன சொன்ன நீ உசுரோட இருக்கும் வர அவ தான் உன் பொண்டாட்டியா? ஹா ஹா ஹா  அவ உன்ன விட்டு விலகுரதுலேயே குறியா இருப்பா,வாழ்க வெறுத்து போய் நரகமாகி, அவ கூட வாழ முடியாம  ஒரு கட்டத்துல நீ அவள் கொன்னுடுவாய். அதற்க்கு பிறகு நீயே என்ன தேடி வருவ. உனக்காக காத்திருப்பாள் இந்த வசுந்தராதேவி” என்று ஆணவமாய் அரண்மனை முழுக்க எதிரொலிக்கும் படி சத்தமாக கத்தினார்.

வசுந்தராதேவி ஒருத்தரை பார்த்த உடனேயே கணித்து விடுபவர் தேஜ்வீர் ஒரு கைப்பொம்மை என்று அறிந்தே தனது மகள் பத்மாவுக்கு மணமுடித்து வைத்தார்.

ஆன்ஷியையும் சரியாக கணித்தவர். அவளை அவமானப் படுத்தினால் அவள் ஷரப்பை விட்டு போய் விடுவாள் என்று முடிவு செய்திருக்க தேஜ்வீர் சொன்ன விஷயம் அல்வா போல் இனிக்க உடனே காரியத்தில் இறங்கி விட்டார்.

இதில் அவர் எதிர் பார்க்காதது பத்மாவின் புது அவதாரத்தை.

வசுந்தராதேவியின் எண்ணம் பலிக்குமா? ஆன்ஷி ஷரப்பை விட்டு செல்ல முடிவெடுப்பாளா?வசுந்தராதேவியின் எண்ணம் போல் ஆன்ஷியின் காதலால் தூங்கிய ஷரப்பின் உள்ளுக்குள் இருக்கும் ராட்சசன் ஆன்ஷியின் புறக்கணிப்பால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டு ஆன்ஷியை கொள்ளுமா?  

*******************************************************

“வெளியிலிருந்து பாக்குறவங்களுக்கு அரண்மனை வாழ்க்கை, ராஜவாழ்க்கையா தெரியுது. கிட்ட போய் பார்த்தா தானே உண்மை தெரியும். முதுகுல குத்துறவங்களும், குழி பறிக்கிறவங்களும்” புலம்பியவாறே வ்ருஷாத் ஜீப்பை சரி செய்து இயக்க  அவன் முன் வந்து நின்றாள் அவனின் கூர்விழியழகி.

ஒயிலாக அவன் முன் நின்றவளை கடுப்பாக பார்த்தான் வ்ருஷாத். “அங்குட்டு போடி” என்று கையால் செய்கை செய்தவாறே சொல்ல

“உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”

“எனக்கு உன் கிட்ட பேச ஒன்னும் இல்ல. பேசாம போறியா இல்ல டைகர் உன் மேல ஏத்தவா?”

“நா வயசுக்கு வந்த நாள்ல இருந்தே! உன்னைத்தான் நெனச்சிக்க கிட்டு இருக்கேன். அப்படி என்னடா என் கிட்ட இல்ல. என்ன நீ லவ் பண்ணுறியா? இல்லையா? ஒரு நேரம் ஆசையா பாக்குற ஒரு நேரம் வெறுப்பா பாக்குற இதுல எது உண்ம?” என்ற வாறே அவனின் அருகில் வந்து அமர்ந்து அவனின் தோளில் சாய

அவளை தள்ளி விட்டவன்.”பொம்பளைங்களாடி நீங்க? பொண்ணுன்னு கூட பாக்காம இந்த அடி அடிச்சி இருக்கீங்க?” வ்ருஷாத் கண்கள் சிவக்க சொல்ல

“யாரு நான் அடிச்சது நீ பாத்தியா?” என்று கோவமாக அவன் சட்டையை பிடித்தவள். ” அப்படி என்ன உனக்கு ஷரப் மேல விஷுவாசம் பொங்குது? நாய்க்கு போடுற மாதிரி ரொட்டித்து துண்டை வீசி இருக்கான், நீயும் கவ்விக்கிட்டு போய் நாய் மாதிரியே நன்றி காட்டிக் கிட்டு இருக்க. இப்போவாச்சும் முழிச்சிக்க, அவன் ஒரு சுயநலவாதி அவன் உசுர காப்பாத்திக்க, உன் உசுர பணயம் வைப்பான்”

” வாயகழுவு யாரை பாத்து என்ன பேச்சு பேசுற. சின்ன வயசுல ஏதோ விளையாட்டு தனமா தான் ரொட்டியை வீசினாரு அதையே சாப்பிட்டு நானும், தாத்தாவும் உயிர் வாழ்ந்தோம். என்ன கூட பொறந்த தம்பியா தான் பாக்குறாரு. நீ ஒன்னும் எங்க நடுவுல வர வேணாம்”

அவன் பேச்சில் புன்னகை வர ” தம்பியாம் தம்பி ஏன் சொத்துல பங்கு கேளேன் கொடுக்குறானு பாக்க” மேலும் வெறுப்பேத்த

“பொத்திக்கிட்டு போடி” என்று சையையால் சொன்னவன் நியாபகம் வந்தவனாக “என்ன லவ் பண்ணுறேன்னு ராஜஸ்தான் வந்தா சொல்லிக் கிட்டு என் பின்னாடி சுத்துறவ, டில்லி போனதும் எவன் கூடயோ சுத்திரியே அதுவும் குட்ட கவுன் போட்டு கிட்டு பாதி உடம்பு வெளிய தெரிய” என்று அவளை கண்களால் எரித்தான்.

“அட ஐயாவுக்கு இதனால தான் கோவமா? நீ தான் என் லவ் வ அக்செப்ட் பண்ணவே இல்லையே! இப்போவே ஓகே சொல்லு புர்கா போட்டு முழுசா மூடிக்கிறேன். உனக்கு மட்டும் காட்சி தாரேன்” என்று கண் சிமிட்டி சிரிக்க

“நான் சொல்லலைனாலும் உனக்கு தெரியல பாரு நான் உன்ன மட்டும் தான் லவ் பண்ணுறேன்னு” கோவம் அனல் கக்க அவளை முறைத்தவன்.

“இது எப்போ இருந்து” மோவாயில் கை வைத்து ஆச்சரியமாக கேக்க

“ஆ அன்னக்கி வந்து சொன்னியே! ஷரப் கூட சுத்தினத்துக்கு பரவால்ல, அவன மாதிரி பொண்ணுங்க கூட கூத்தடிச்சேன்னு கேள்விப்பட்டேன். மவனே கத்திய எடுத்து ஒரே சொருகு சொருகிடுவேன்னு”

“அட பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்னதையே அப்படியே நியாபகத்துல வச்சிருக்கியே” என்று சிரித்தவள்  உடனே அழ ஆரம்பித்தாள்.

“ஏய் வைஷு இங்க பாருடி” என்று அவள் புறம் திரும்பி அவளின் கண்ணீரை துடைத்து விட்டான் வ்ருஷாத்.

ஆம் சாத் சாத் வைஷ்ணவிதேவியை தான் வ்ருஷாத் காதலித்துக் கொண்டிருந்தான்.

“எதுக்கு இப்போ கண்ண கசக்குற பாக்க சகிக்கல” என்று அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன். “சொல்லு என்ன பிரச்சினை காதல் வழியும் குரலில் கேக்க

அவனை விட்டு விலக்கியவள் “நாம ரெண்டு பேரும் தப்பு பண்ணலாமா?” என்று தலையை குனிந்தவாறே கேக்க கோவம் வருவதற்க்கு பதிலாய் வ்ருஷத்துக்கு சிரிப்பு வந்தது.

அவன் சிரிப்பதை கடுப்பாய் பார்த்த வைஷ்ணவி “எதுக்கு இப்போ சிரிக்கிற” என்று அவனை அடிக்க

“இந்த அடாவடி வைஷ்ணவிக்குள்ள வெக்கம் எல்லாம் இருக்கா” என்று மீண்டும் சிரிக்க

“ஐம் டாம்ன் சீரியஸ்” என்றவள் அவனை நேருக்கு நேர் பார்க்க விளையாட்டை கை விட்டவன்.

“அரண்மனை வாரிசுன்னு நிரூபிக்கிறீயா? ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை உனக்கு சரியாக இருக்கலாம். எனக்கு அது சரியாகாது.

அவனது பேச்சில் கோவம் தலைக்கேற ” ஆமாம் நீ ரொம்ப ஒழுங்கு? இருக்குறது பூரா பொண்ணுங்க கூட கூத்தடிக்கிற ஷரப் கூட பேச்சு மட்டும் பெரிய ஒழுக்க சிகாமணி மாதிரி பேசுற” என்று வைஷ்ணவி எகிற

“பளார்” என அவள் கன்னத்தில் அறைந்தவன் “உன் அப்பாவாலதாண்டி அவரு இப்படி ஆனதே. சரியான வழிய காட்டி இருந்தா அவர் எதுக்கு உன் கிட்ட பேச்சு கேக்கணும்” என்று ஜீப்பில் இருந்து இறங்கியவன். அவளின் கையை பிடித்து இழுத்து கீழே இறக்கி விட்டு வண்டியை எடுக்க வண்டியின் முன் வந்து நின்றவள்.

“அப்பா வெறும் அம்பு தான், வில்லே  எங்கம்மா தான்” வைஷ்ணவி வெறுப்பாய் சொல்ல

அதிர்ச்சியாக அவளை பார்த்தவன் “என்ன சொல்லுற”

“சொல்லுறாங்க சொரைக்காய்க்கு உப்பில்லைனு. நல்லா வாயில வருது. எங்க அம்மா உலக நாயகனையே மிஞ்சும் அளவுக்கு நடிக்குது. அத கண்டு பிடிக்க தெரியல. நீயும், உன் அண்ணனும் வேஸ்டு. அத கண்டு பிடிக்க டில்லியில் இருந்து நானே வர வேண்டி இருக்கே! இந்த ஜென்மத்துல நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர முடியாது. அதுங்க மூஞ்சில கரிய அப்பனும். அதுக்கு ஒரே வழி நான் கல்யாணம் ஆகாம வயித்த தள்ளுறது தான். இளிச்ச வாயன்னு உன்ன கட்டி வச்சிடுவாங்க. ஒரே கல்லுல ரெண்டு மங்கா. எப்படி என் ஐடியா, வைஷ்ணவியா கொக்கா” என்று மார்தட்டி பெருமை பாட

அவள் செய்கையில் சிரிப்பு வந்தாலும். பத்மாவா இப்படி என்று ஆச்சரியமாக  இருக்க “இறங்கு நான் உடனே அண்ணன் கிட்ட இத சொல்லணும்” என்று வ்ருஷாத் வைஷ்ணவியை இறக்கி விட்டு செல்வதிலேயே குறியாய் இருக்க

“போடா போடா. ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டேன்”

“இது எப்போ”

“ஆன்ஷிக்கு உள்ள டிரீட்மென்ட் நடக்குறத யாரு போன் பண்ணி சொன்னது நான் தான்” குரலில் வெறுமை இருக்க அவளை இழுத்து அணைத்தவன்

“யோசிக்காம போய் தூங்கு எல்லாம் நல்ல படியா நடக்கும்”

“லூசாப்பா நீ இன்னும் நான் இந்த அரண்மனையில இருக்கணுமா?”

“இனிமேல் தான் உன் உதவி பாய்க்கு தேவைப்படும். உங்க அம்மா, அப்பா, பாட்டி மூணு போரையும் கண்காணிக்கிற பொறுப்பு உன்னது” என்றவன் மென்மையாக அவளின் இதழை முற்றுகையிட்டு “போ” என்று தலையை ஆட்டி சொல்ல

“சரியான கன்ஜூஸ் டா நீ” என்று வன்மையாக அவனின் இதழில் முத்தமிட்டு விட்டே இறங்கி  ஓடினாள் வைஷ்ணவிதேவி.

“ஹப்பா இவள சமாளிக்க நா எஸ்ட்ராவா உடம்ப தேத்தனும் போல இருக்கே” என்று முணுமுணுத்தவன் விருந்தினர் மாளிகையை நோக்கி டைகரை கிளப்பின்.

***************************************************

ஆன்ஷியை பார்த்த பெண் மருத்துவருக்கோ என்ன சொல்வதென்று புரிய வில்லை. முதுகிலும் கையிலும் கூட அடி விழுந்து கன்றிச் சிவந்தது மற்றுமன்றி  உடம்பு பூரா உள் காயமாகி இருக்க. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று தோன்றியது. ஆன்ஷியை பார்த்ததும் அவர் நினைத்தது அவள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி விட்டாள் என்றே.

முகத்தில் அடி வாங்கியதில் இன்று டிவியில் பார்த்த ஆன்ஷி என்று அடையாளம் இல்லாத அளவுக்கு முகம் வீங்கி இருக்க, யாரோ ஒரு பெண்ணை ஷரப் கூட்டிட்டு வந்து மருத்துவம் பாக்குறதாக நினைத்தவர்,

“என் மனைவிக்கு ஒன்றுமில்லையே” என்று ஷரப் கேட்டதில் அதிர்ச்சியடைந்த மருத்துவர் அவளை ஊன்றி கவனித்து அது ஆன்ஷி என்று உறுதி செய்தவர். ஷரப் தான் அவளிடம் இப்படி நடந்து கொண்டிருப்பானோ என்று சந்தேகம் கொள்ள அவனின் வலி நிறைந்த  கண்களை கண்டு திகைத்து நின்றவர் ஆன்ஷிக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்று அறியும் ஆவல் வந்தது.

“மிஸ்டர் சௌதாகர். இவங்களுக்கு என்ன நடந்தது? என்று விட்டு ” இல்ல உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா ட்ரீட்மெண்ட்டுக்கு உதவும்” என்று இழுக்க

“இது  அவளுக்கு புது இடம். இங்க நாய் இருக்கிறத தெரியாம சுத்திப் பாக்க போய் இருக்கா. நான் வேற வெளியே போய் இருந்தேன். நாய்கள் துரத்த ஓடினவ பள்ளத்துல விழுந்து.” என்று நிறுத்த

“ஓஹ் எனக்கு புரியுது” என்றவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து, இத சாப்பிட வைங்க, இத காயத்துக்கு பூசுங்க, தூங்க இன்ஜெக்ஷ்ன போட்டு இருக்கேன். நல்லா தூங்கினாலே சரியாகிடும். நான் ரெண்டு நாள்ல வந்து பாக்குறேன்” என்றவர் விடை பெற்று செல்ல வெளியே சுத்திக்கு கொண்டு இருந்த கூறிய பற்களுடைய வேட்டை நாய்களை கண்டு அரண்டவர் காவலாளியின் துணையுடன் வெளியேறினார்.

ஆன்ஷியின் கையை பிடித்துக் கொண்டு அவள் அருகிலேயே! சாய்ந்து அமர்ந்தவன். “நாய்களை விட உன்ன குதறி எடுத்துட்டாங்களே!” கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாது. அவளையே பாத்திருந்தான்.

வ்ருஷாத் வந்து ஷரப்பிடம் பத்மாவை பற்றி வைஷ்ணவி கூறியதை கூற பல்லைக் கடித்தவன்.

“பாசத்தை கூட வேஷமா காட்ட என் குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு அத்துப்புப்படி” என்று வெறுமையான குரலில் கூற

மருந்தின் வீரியத்தில் தூங்கி கொண்டிருந்தவள் பாதி விழிக்கும் போதே வ்ருஷாத் பேச ஆன்ஷி ஷரப் சொல்லியதை மாத்திரம் கேட்டு விட்டு கலங்கிய கண்களோடு மனம் சோர்வடைய ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றாள்.

இரண்டு நாளாக ஷரப்பை அச்சத்தில் ஆழ்த்திய ஆன்ஷி கண்திறந்தாள். அவளுக்கான எல்லா பணிவிடைகளை பார்த்து பார்த்து ஷரப் செய்ய அவனின் காதலை புரிந்த்துக் கொள்ளாது, ஆன்ஷி அவனிடமிருந்து ஒதுங்கியே இருந்தாள்.

அவன் அணைக்கும் போதெல்லாம், அருவறுப்போடு ஆன்ஷி திமிர, உடல் வலியால் அவதியடைகிறாள் என்று எண்ணியவன். “சாரி ,சாரி” என்று அவளை விட்டு விலகுவதும், மீண்டும் அணைப்பதுமாக அவளின் விலகலை உணராமலையே நாட்களை கடனத்தினான்.

வாய் பேச முடியாததால் வார்த்தையால் அவனை வதைக்க முடியாமல் ஆன்ஷி தன்னையே வெறுத்தாள். கத்திக் கூப்பாடு போட்டு, அவனிடம் சண்டை பிடிக்கணும் என்று தோன்றினாலும் உடம்பிலும் வலு இல்லாது ,மனமும் சோர்வடைந்து, மருந்தின் வீரியத்தால்  நாள் முழுக்க தூங்கியே நாட்களை கடத்தினாள். ஆன்ஷி படிப்படியாக குணமடைய இரண்டு வாரங்கள் எடுத்தன.

பிரதாப்பின் மூலம் ஹரிலாலின் எல்லா சட்ட விரோதமான விஷயங்களையும், ஆவணங்களுடன் பெற்றுக் கொண்ட ஷரப், வ்ருஷாத்தின் உதவியோடு பிரதாப்பை அவனின் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டான். மினிஸ்டர் ஹரிலாலுக்கு செக் வைக்க நல்ல நேரம் ஷரப் பார்த்துக் கொண்டிருக்க, ஹரிலால் ஷரப்பை வீழ்த்த தேஜ்வீருக்கு ஆலோசனை வழங்கி இருந்தான். அதன் படி விருந்தினர் மாளிகையை அடைந்தாள் சில்பா.

சில்பா ஒரு நாட்டியாக்காரி. நடனமாடவென்று வந்தவளை தேஜ்வீர் ஷரப்பின் படுக்கை வரை செல்ல வழி வகுத்து கொடுத்திருக்க, ஷரப்பின் அழகு, பணம், செல்வாக்கில் மயங்கியவள் அவனை தன்வசப்படுத்தும் முயற்சியில் மிக தீவீரமாக  இருந்தாள். ஷரப் தன் தேவை தீர்ந்த பின் ஒவ்வொரு தடவையும் கறிவேப்பிலை போல் தூக்கி எறிய,  விடாது அவனையே சுற்றி வந்தவளின் திட்டமெல்லாம் ஷரப்பை மணந்து அரண்மனையை ஆளும் அடுத்த ராணியாவதே.

ஆன்ஷியை அவன் திருமணம் செய்ததை டிவியில் பார்த்து கொத்தித்துக் கொண்டிருந்தவளுக்கு, மினிஸ்டர் அழைத்து ஆன்ஷியை ஷரப்பிடம் இருந்து பிரிக்க அடுத்த கட்ட வேலையை அவளிடம் கொடுக்க ஆன்ஷியை துரத்தி விட்டு, ஷரப்புடன் தனது எதிர்கால வாழ்க்கையை நிலை நிறுத்த விருந்தினர் மாளிகைக்குள் பிரவேசித்தாள்.

ஷரப் வெளியே கிளம்பும் வரை பொறுமையாக இருந்தவள் வாயில் காவலாளியிடம் வந்து ஷரப் வர சொன்னதாக சொல்ல. அந்த விருந்தினர் மாளிகையில் ஷரப்பை காண பெண்கள் வந்து செல்வது ஒன்றும் புதிதில்லை என்று அறிந்திருந்த காவலாளி,

“கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் தான் ஆகுது அதுக்குள்ளே புத்துப் பொண்டாட்டி கசந்தாதா” என்று முணுமுணுத்தவாறே  வாயிற்கதவை திறந்து விட சில்பா உள்ளே நுழைந்தாள்.

தனக்கும் ஷரப்புக்குமான உறவை பற்றி சொல்லி ஆன்ஷியை சீண்டி அவளின் வெறுப்பை ஷரப்பின் மேல் ஏத்தி விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே ஹரிலாலின் கட்டளையாக இருக்க சில்பா என்ன பேசியும் ஆன்ஷியின் அமைதி அவளை கோபமூட்ட  ஆன்ஷிக்கு பேச வராது என அறியாத சில்பா அவளின் அமைதியில் வெகுண்டெழுந்த்து ஆன்ஷியின் கழுத்தை இறுக்க அக்கணமே கழுத்து அறு பட்டு கீழே சரிந்தாள்.

சில்பா கழுத்தை இறுக்கவும் மூச்சு விடமுடியாமல் திணறிய ஆன்ஷி அவளின் கழுத்து வாளால் வெட்டப்பட்டு தலை வேறு முண்டம் வேறாக கீழே சரிய சில்பாவின் குருதியும் ஆன்ஷியின் முகத்தில் தெறித்திருக்க, குருதியை கண்ட அதிர்ச்சியில் “அம்மா” என்று கத்தியவாறே மயங்கிச் சரிந்தாள் ஆன்ஷி.

Advertisement