பொறுமை இழந்தபிருந்தா, “மாலு இப்போ நீ அதை கம்ப்ளீட் பண்ண போறியா இல்லையா”
மாலினி, “அதுவா.. ஒன்னும்……………………”
நந்தினி “ப்ளீஸ் மாலு” என்ற சிணுங்கலுடன் மீண்டும் மாலினியின் வாயை மூடினாள்.
நந்தினியின் கையை எடுத்துவிட முயற்சித்த பிருந்தாதோல்வியடைய, ஆர்லிநந்தினியின் இடையில் கூச்சமூட்டினாள். “ஏய்” என்ற அலறலுடன் நந்தினி சிறிது துள்ளினாள்.
மாலினி, “இவ்வளவு கூச்சமா? ஒருத்தர்ரொம்ப பாவம்” என்று பரிதாபப்பட,
ஆர்லிஅறியாபிள்ளையை போல், “யாரு மாலு?”
“வேற யாரு எல்லாம் மிஸ்டர் நந்தினி தான்”
பிருந்தா மெய்யான அதிர்ச்சுயுடன், “யாரு புழாவா?”
நந்தினி பிருந்தாவை அடிக்க ஆரம்பித்தாள்.
பிருந்தா, “சொன்னவளை விட்டுவிட்டு என்னை ஏன்டி அடிக்கிற?”
நந்தினி, “நீ தானே லூசுதனமா உளறுற?”
“நானா உளறினேன்.. இவ தானே மிஸ்டர் நந்தினி னு சொன்னா”
நந்தினி மீண்டும் அடிக்க ஆரம்பிக்க, பிருந்தா அடியில் இருந்து தப்பிக்க நந்தினியின் இடையில் கூச்சமூட்ட நந்தினி அலறலுடன் துள்ளி குதித்தாள். அவளது அலறலில் புழா திரும்பி பார்க்க நந்தினி கூச்சத்துடன் இடத்தில் அமர்ந்து பிருந்தாவின் கையை நறுக்கென்று கிள்ளினாள்.
பிருந்தா, “பிசாசே வலிக்குதுடி.. இதை எல்லாம் மிஸ்டர் நந்தினி கிட்ட வச்சுக்கோ” என்றதும் நந்தினியின் கண்கள் சிறிது கலங்கிவிட்டது.
மாலினி, “ஹே நந்தினி.. என்ன இது.. சும்மா விளையாட்டுக்கு தானே”
நந்தினி, “எதுடி விளையாட்டு?” சிறு கோபத்துடன் கேட்டாள்.
மோகனா, “என்ன நந்தினி நீ என்ன குட்டி பாப்பாவா?” (இதை ஒரு பாப்பா சொல்வது தான் வேடிக்கையே!)
பிருந்தா, “அதானே நீ என்ன மோகனா வா?”
மோகனா, “நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்லை”
பிருந்தா ஆச்சரியத்துடன் மோகனாவை பார்க்கவும் மாலினி சிறு புன்னகையுடன், “விடு விடு.. எப்பவாது இப்படி அதிசயம் நடக்கும்”
(பிருந்தா தன்னை ‘குட்டி பாப்பா’ என்று குறிப்பிட்டதை மோகனா புரிந்து கொண்டது தான் அந்த அதிசயம்)
மோகனா, “என்ன அதிசயம் மாலு?”
பிருந்தா ஆச்சிரியத்தில் இருந்து சட்டென்று மீண்டு, “அதானே பார்த்தேன்!”
மோகனா, “எதை பார்த்த?”
மோகனா கேள்வி மேல் கேள்வி அடுக்க நந்தினி சிரித்துவிட்டாள்.
மாலினி நந்தினியின்தோளைதட்டி, “குட்.. இப்படி தான் சிரிச்சுட்டு இருக்கணும்..” என்று கூறியவள் சிறு இடைவெளி விட்டு, “ஆனா நண்டு.. நீ இப்படி உணர்ச்சிவசபட்டால் உன்னை ஓட்டுறதை விட்டுருவோம் னு நினைக்காதே” என்றதும் நந்தினி முறைத்தாள்.
(ஆனால் மனதினுள் ‘இனி நந்தினியை ஓட்ட கூடாது, யாரையும் ஓட்ட அனுமதிக்க கூடாது’ என்று முடிவெடுத்தாள் மாலினி)
மாலினி, “ஓகே..ஓகே.. உடனே நெற்றி கண்ணை திறக்காதே”
மோகனா, “ஓகே நந்து.. இப்ப சொல்லு”
நந்தினி, “எதை?”
“அந்த பழமொழிக்கு அர்த்தத்தை”
ஆர்லி, மாலினி, மற்றும் பிருந்தா பலமாக சிரித்தார்கள்.அவர்களை முறைத்தநந்தினி, “நானா சொன்னேன்?”
“மாலு தான் சொன்னா, ஆனா உன்னிடம் தானே அர்த்தம் கேட்க சொன்னா”
“எனக்கு தெரியாது”
“மாலு நீ அழகா அர்த்தம் சொல்லுவ னு சொன்னாளே!”
நந்தினியை பார்க்க மாலினிக்கே பாவமாக தோன்றியது, உடனே, “மோனி.. நந்துக்கு அர்த்தம் தெரியும் ஆனா அதை உனக்கு புரிற மாதிரி சொல்ல தெரியாதாம்”
“அப்போ நீ சொல்லு”
“எனக்கு அர்த்தம் தெரியாதே”
“ஓ”
பிருந்தா, “இருந்தாலும் நீ இவ்ளோ நல்லவளா இருக்க கூடாது மோனி..”
(மாலினி எதை சொன்னாலும் நம்புகிறாளாம் மோகனா.. அதை தான் இப்படி சொல்கிறாள் பிருந்தா)
மோகனா, “ஏன் அப்படி சொல்ற பிருந்து?”
பிருந்தா தலையில் கை வைத்து ‘ஐயோ’ என்றாள்.
இதை பார்த்த ஷங்கர் தன்னவளை நினைத்து ரசித்து சிரித்தான். இவர்கள் பேசியது காதில் விழாவிட்டாலும் மோகனாவிற்கு பதில் சொல்ல முடியாமல் தான் பிருந்தா நொந்து கொண்டாள் என்பதை புரிந்து கொண்டான். அதே நேரத்தில் மோகனா ஷங்கரை பார்த்தாள். அவனது சிரிப்பை பார்த்ததும் இவளும் சிரித்தாள்.
ஷங்கர் தன்னையும் அறியாமல் தன் இதழ்களை குவித்து சிறு முத்தம் ஒன்றை தன்னவளை நோக்கி காற்றில் பார்க்க விட்டான்.அந்த செய்கையில் மோகனா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். மோகனாவின் பேய்யரைந்த முகத்தை பார்த்து தான் தன் தவறை ஷங்கர் உணர்ந்தான். தன் தலையில் தானே அடித்துக் கொண்டான். மோகனா அவசரமாக தன் பார்வையை திருப்பினாள். இவற்றை பார்த்த ஆர்லியின் மனதினுள் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
அதன் பிறகு நிகழ்ந்த பேச்சுகள் மோகனாவின் காதில் விழுந்தாலும் எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. ஏதோ இனம் புரியாத பயம் அவளை சூழ்ந்தது. மாலினியின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.
மாலினி ரகசிய குரலில், “என்ன மோனி?”
“மாலு.. மாலு”
“என்னடா?”
“பயமா இருக்கு”
‘இவளுக்கு திடீர்னு என்ன ஆச்சு?’ என்று குழம்பினாள் மாலினி. மற்றவர்கள் முன் மோகனாவை விசாரிப்பது நல்லதல்ல என்று மாலினிக்கு தோன்றியதோ என்னவோ, மோகனாவின் கையை அழுத்தி, “நான் கூடவே இருக்கிறேனே டா.. அப்பறம் என்ன?”
“..”
மோகனாவின் பார்வைமேல் சிறு பீதியுடன்ஷங்கர் பக்கம்திரும்பியது. மோகனாவின் முகத்தையும் செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்த ஷங்கருக்கு தன் மீதே கோபம் வந்தது. மோகனாவை தேற்ற முடியாமல் தவித்தான்.
மோகனாவின் பார்வையை தொடர்ந்து மாலினி ஷங்கரை பார்க்கவும் ஷங்கர் அவசரமாக தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
மோகனாவின் பயத்தின் காரணத்தை யூகிக்க முடியாமல் மாலினி,“எதுக்கும் பயப்படக்கூடாது” என்று கூறி தேற்ற முயற்சித்தாள்.
“..”
“நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. ஓகே” என்றவள் தன் நிழலை விட்டு பிரிந்து மோகனா கஷ்டப்பட போகிறாள் என்பதை இப்போது அறிய மாட்டாள்.
“ஹ்ம்ம்”
முதல் முறையாக மோகனாவின் மனதில் இருப்பதை அறிய முடியாமல் தவித்தாள் மாலினி.ஒருவேளை ஷங்கர் தன் பார்வையை திருப்பாமல் இருந்திருந்தால், அவனது பார்வையில் இருந்த தவிப்பை மாலினி பார்த்திருந்தால் பின் நாளில்மோனாவின் பூ போன்ற மனம் கசங்காமல் தவிர்த்திருக்கலாமோ!
பிருந்தா மாலினிக்கு மட்டும் கேட்கும் குரலில், “மாலு.. பேச்சை சாமர்த்தியமா மாத்திட்டதா நினைப்பா?” என்றாள்.
மாலினி புரியாது போல், “என்ன ஜில்லு சொல்ற?”
“நான் மோனி இல்லை.. ஸ்ரீராம் தான் போட்டு குடுத்தான் னு உனக்கு தெரியும் தானே” என்றதும் மாலினி புன்னகைத்தாள்.
பிருந்தா ஏதோ கேட்க வரவும் மாலினி, “ஷ்.. அப்பறம் பேசலாம்” என்றாள்.
ஆர்லி, “என்ன ஜில்ஸ் லாஸ்ட் ரோ பசங்க யாரையும் காணுமே!”
“எப்படி விடுவாங்க! ஒரு staff-யை ‘போடி’ னு சொன்னா சும்மா விட்டுருவாங்களா?”
“அதான் யாரு னு தெரியலையே.. விட்டுற வேண்டியதானே!”
பிருந்தா அமைதியாகிவிட்டாள். மாலினியை பார்த்தாள், ஆனால்மாலினியின் கவனம் இவர்களின் பேச்சில் இல்லை.அவள் மூளையில் மோகனாவின் பயத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதே ஓடிக் கொண்டிருந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் –
ஆஷா முன்தினம் பார்த்த திரை படத்தை பற்றி சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தாள் ஆனால் அது எதுவுமே ஜெனிஷாவின் காதில் விழவில்லை.
அவள் சிந்தனை அவள் வசமே இல்லை! அது ராஜசேகரை பற்றி யோசித்து கொண்டிருந்து.
ராஜசேகர் கூறிய ‘உரிமையா ‘நீ எப்படி இன்னொரு பொண்ணு கூட சிரிச்சு பேசுவ?’ னு கேட்டுருப்ப..இப்படி பொறாமையினால் கோபம் கொண்டு என்னை வெறுப்பேத்த கண்டவனுடன் சிரிச்சு பேசி…..’ என்ற வார்த்தைகளே அவள் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.. அதன் விளைவாக தன் மனதை ஆராயத் தொடங்கினாள் ஜெனிஷா.
‘கரெக்ட் தானே அவன் மாலினி கூட பேசினதில் எனக்கு பொறமை தானே வந்தது. அவன் காதலை மறுத்த எனக்கு அவன் யாரிடம் பேசினால் என்ன! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியலையே! அவனை வெறுப்பேத்த தானே ஸ்ரீராம் கூட பேசுனேன்.. அதை இவன் கண்டுக்கலை என்றதும் கோபம் வந்துதே! அவன் சொல்வது உண்மை தானோ அவனை நான் காதலிக்குறேனோ!’
ஓரளவு தன் மனதை புரிந்து கொண்ட பிறகு ‘எப்படி?’ என்ற கேள்வி எழுந்தது.