Advertisement

மழை 19:
CSE வகுப்பு :
வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின்  உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின்  இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில்  இருந்த  இருக்கையின்  ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.  
[இருவர் மட்டுமே இருந்தனர். இருவரும் அமர்ந்திருந்த இடத்தை சற்று தொலைவில் இருந்து ஜன்னல் வழியாகவோ வாசல் வழியாகவோ பார்த்தால் தெரியாது]
ஜெனிஷா, “இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு இருக்க தான் என்னை சீக்கிரம் வர சொன்னியா?”
ராஜசேகர் கண்ணில் காதலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, ஜெனிஷா, “நீ சரி வர மாட்ட.. நான் என் ப்ளேஸ்க்கு போறேன்” என்று கூறி இறங்க,
ராஜசேகர், “நீயே சொல்லிட்ட.. இப்போ என் கைக்கு வேலை கொடுக்கவா வாய்க்கு கொடுக்கவா?” என்று கேட்டபடி ஒற்றை விரலால்  அவளது இடது கன்னத்தை  வருடியபடி அவளை பார்த்து கண் சிமிட்டினான்.
ஜெனிஷா சற்று திணறித் தான் போனாள். ஒருவாறு தன்னை சமாளித்து, அவன் விரலை தட்டிவிட்டுவிட்டு, “உன் கைக்கு ஒன்னும் வேலை தர வேணாம்”
ராஜசேகர் கண்கள் மின்ன“அப்போ வாய்க்கு வேலை தரவா நிஷு”
‘வாயை திறந்து பேசு’ என்ற அர்த்தத்தில் ‘ஆமா’ என்று சொல்ல வந்த ஜெனிஷா அவன் கண்கள் சொன்ன செய்தியில், “ஏய்!” என்று கூறி ஆள்காட்டி விரலால் மிரட்டியபடி பின்னால் நகர சுவற்றில் முட்டி நின்றாள்.
ராஜசேகர் அவளது இருபுறமும் சுவற்றில் தனது கைகளை பதித்து, கண்களை பார்த்து, கிசுகிசுப்பான குரலில், “என்ன நிஷு.. ஸ்பெஷல் கிப்ட் வேணாமா?”
ஜெனிஷாவின் நெஞ்சம் படபடத்தது, எழும்பாத குரலில், அவனது தோளைப் பார்த்து, “ராஜ்.. இது கிளாஸ் ரூம்”
ராஜசேகர் மென்னகையுடன், “யாராது வந்தா குரு விசிலடிப்பான்” என்று கூறியபடி அவளை சிறிது நெருங்கினான், ஆனால் தொடவில்லை.
ஜெனிஷாவின் இதயத்துடிப்பு அதிகரித்தது, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.
ராஜசேகர் புன்னகையுடன் “கண்ண திற நிஷு”
ஜெனிஷா கண்களை திறக்காமல் மறுப்பாக தலையை ஆட்டினாள்.
ராஜசேகர் புன்னகையுடன்  ஜெனிஷாவின் முகத்தை நெருங்கி, இதழை குவித்து அவளது மூடிய இரு கண்கள் மேலும் லேசாக காற்றை ஊதி, “நிஷு.. ஐ லவ் யூ டா” என்று கூறி அவளது வலது கரத்தில் ஒரு ப்ரேஸ்லட்டை அணிவித்தான்.
ஜெனிஷா கண்களை திறக்க, ராஜசேகர் அவளது வலது கை மணிக்கட்டை அவளது முகத்திற்கு முன் கொண்டு வந்து கண்ணில் குறும்புடன்  புருவம் உயர்த்தினான்.
ராஜசேகரின் முத்தத்தை எதிர்ப்பார்த்த ஜெனிஷாவிற்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதை பெளிப்படையாக கூற முடியாமல், தன் மனதை மறைத்து அந்த ப்ரேஸ்லட்டை பார்த்தாள். சங்கிலியின் நடுவே இரு இதயங்கள் இணைந்திருக்க, அவை இணைந்த இடத்தில் சிறிய வெள்ளைக் கல் இருந்தது. ஜெனிஷாவிற்கு மிகவும் பிடித்தது. அதை அவள் கண்கள் மின்னியத்தில் இருந்து அறிந்த ராஜசேகர்,
“இமிடேஷன் தான்.. நம்ம என்கேஜ்மென்ட்க்கு தங்கத்தில் போடுறேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.
“எனக்கு பிடிச்சிருக்கானே கேட்கலை.. அதுக்குள்ள என்கேஜ்மென்ட்.. கோல்ட் ப்ரேஸ்லட் னு………………….”
“உனக்கு பிடிச்சிருக்கு னு எனக்கு தெரியும்”
“நான் அப்படி சொல்லவே இல்லையே!”
“நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும்”
“அது எப்படி……………”
“உன் காதலை கூட தான் நீ சொல்றதுக்கு முன் கண்டுபிடிச்சேன்” என்று கூறி வழக்கமான வசீகர புன்னகையை உதிர்த்தான்.
ஒரு நொடி தன்னை மறந்து ரசித்தவள், தன்னை சுதாரித்து, “பட் இது கரெக்ட் இல்லை”
ராஜசேகர் புன்னகை மாறாமல், “அப்படியா!”
“ஆமா”
“எங்க..என் கண்ணை பார்த்து சொல்லு.. உனக்கு பிடிக்கலை னு”  
ஜெனிஷா அவன் கண்களை பார்த்து, “நான் பிடிக்கலை னு சொல்லலையே பட் நீ சொன்னது கரெக்ட் இல்லை”
ராஜசேகர் புருவம் உயர்த்த, ஜெனிஷா புன்னகையுடன், “எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குது”  என்று புன்னகையுடன் கூறி தலை சரித்து, இரண்டுமுறை புருவம் உயர்த்தினாள்.
ராஜசேகர் மென்மையாக சிரித்தான், ஜெனிஷாவும் சிரித்தாள்.
ராஜசேகர் ஜெனிஷாவின் இடதுப்புற  நெற்றியில் இருந்து நாடிவரை ஒற்றை விரலால் வருடியபடி, “ஆனா நீ எதிர்பார்த்தது இது இல்லை தானே நிஷு” என்று கிறக்கமான குரலில் கூற,
ஜெனிஷவின் சிரிப்பு மறைந்து இதயத்துடிப்பு அதிகரித்தது, ராஜசேகரின் விரல் அவளது நாடியில் இருக்க, அதை தட்டிவிடும் எண்ணம் கூட இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது விசில் சத்தம் கேட்க, இருவரும் சட்டென்று விலக, ஜெனிஷா அவசரமாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள். முதல் வரிசையிலேயே அமர்ந்த ராஜசேகர் ஜெனிஷாவின் பை அடுத்த இருக்கையில் இருந்ததை பார்த்து, அவசரமாக அதை எடுத்து, “நிஷா….பக்” என்று கூறி அதை வீச, அதை சரியாக பிடித்த ஜெனிஷா, அதை தன் மேஜை மேல் வைத்து, அதை திறந்து, உள்ளிருந்து எதையோ எடுப்பது போல் பாவனை செய்ய, ராஜசேகர் மேஜையில் தாளம் போட ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் கழிந்தும் யாரும் வராமல் போக, ராஜசேகர் ஜெனிஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெல்ல எழுந்து வெளியே சென்றான்.
வெளியே சிவகுருவை தவிர வேறு யாரும் இல்லை. 
ராஜசேகர், “என்ன டா.. எதுக்கு விசில் அடிச்ச”
“நான் எப்போ டா அடிச்சேன்?”
“இப்போ தானே டா அடிச்ச!”
“அப்படியா!”
“டேய்!”
“மச்சான்.. கூல்.. நான் விளையாடலை.. நிஜமாவே நான் தெரியாம தான் அடிச்சேன்”
“அது எப்படி டா தெரியாம அடிப்ப?”
“அது வந்து டா.. பிருந்தா கேன்டீன் போறதை பார்த்தேனா! அதான் என்னை அறியாம.. ஹி ஹி ஹி” என்று சிரிக்கவும், ராஜசேகர் கடுப்புடன் அவனை முறைத்தான்.
சிவகுரு, “என்ன மச்சான்.. கிஸ் மிஸ் ஆகிருச்சோ!”
ராஜசேகர் இன்னமும் கடுப்புடன் முறைக்க, சிவகுரு அவனது தோளில் கை போட்டு,
“விடு டா மச்சான்.. நாளைக்கு கிஸ் அடிச்சுக்கலாம்”
ராஜசேகர் பல்லை கடித்துக் கொண்டு, “உன்னை போய் காவலுக்கு நிக்க சொன்னேன் பாரு…………”
சிவகுரு அலட்டிக் கொள்ளாமல் “பட்டா செருப்… இல்ல பட்டா ஷு வச்சு உன்னை நீயே அடிச்சுக்கோ”
“இரு டா.. எனக்கு ஒரு காலம் வரும்.. அப்போ உன்னை கவனிச்சுக்குறேன்”
“எங்க டா! இங்க லுக்குக்கே வழியை காணும்.. இதுல எங்க”
“நீ இப்படியே ஏறுக்கு மாறா பேசிட்டே இருந்தா!”
“ச்ச்.. என்ன பண்றது கூடவே பிறந்தது”
“பிறக்கும் போதே பேச ஆரம்ச்சிட்டியா!”
“நீ கூட நல்ல கடிக்குற டா மச்சி”
“என்ன பண்றது.. சகவாச தோஷம்”
சிவகுரு சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, “அது தான் அய்யாவோட ஸ்பெஷல்”
ராஜசேகர், “தூ”
“சரி.. விடு.. விடு.. வரியா.. கேன்டீன் போய் ஒரு டீ அடிக்கலாம்”
“என்னவோ சரக்கு அடிக்க கூப்பிடுறது போல் கூப்பிடுற..”
சிவகுரு புன்னகையுடன்“அதை விட இது அதிக கிக் தரும் டா”
ஒரு நொடி யோசித்த ராஜசேகர் புன்னகையுடன், “ஓ உன் ஆள் கேன்டீன் போனதா சொன்னியே.. இரு நிஷா கிட்ட சொல்லிட்டு வரேன்”
“தேவியார் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டீங்களோ” என்று சிவகுரு கலாட்டா செய்ய, ராஜசேகர் புன்னகையுடன், “இரு டா.. உன்னையும் பார்க்க தானே போறேன்”
“பாரு டா.. நல்லா பாரு”
“பார்க்கிறேன்” என்று கூறிய படி வகுப்பறை உள்ளே சென்று ஜெனிஷாவிடம் சொல்லிவிட்டு வந்தான்.
மாலினி வருவதை கேன்டீன் உள்ளே இருந்து பார்த்த பிருந்தா அவசரமாக ‘மாலினி’ என்று அழைத்தபடி ஓடி வந்தாள்.
திரும்பி பார்த்த மாலினி, புன்னகையுடன் நின்றாள். பிருந்தா அவள் அருகே வந்ததும்,
“குட் மார்னிங் ஜில்ஸ்.. எங்க நேண்டியை காணும்!”
“அவ இன்னைக்கு வரலை.. தலை வலி னு சொன்னா”
“என்ன திடீர் னு?”
“தலை வலி என்ன சொல்லிகிட்டா வரும்?”
“அது இருக்கட்டும்.. நீங்க என்ன மேடம் கேன்டீன் உள்ள இருந்து வரீங்க! நேத்து ஏதோ சொன்னதா நியாபகம்!”
“நான் ஒன்னும் சாப்பிடல போகலை”
“அப்பறம்!”
சிவகுரு, “என்ன டா சொல்லிட்டு வந்த?”
ராஜசேகர், “PT வந்துட்டு இருந்தாராம்.. அப்பறம் திரும்பி போயிட்டாராம்.. அதான் விசில் அடிச்சிருக்கான் னு சொல்லிட்டு வந்தேன்”
“எதுக்கு டா பொய் சொன்ன?”
“ஆமா நாமலாம் அரிச்சந்திரன் பரம்பரை! பேசாம வா டா..”
“பொய் சொல்ல கூடாது னு சொல்லலை டா.. எதுக்கு சொன்ன னு தான் கேட்டேன்”
“ஏற்கனவே முதல் நாளே  நீயும் அவளும் சண்டை போட்டீங்க.. இப்போ தான் அதை மறந்துட்டு இருக்கா, இதுல இதை சொன்னேன்!”
“முதல் நாள் இல்லை டா ரெண்டாவது நாள்”
“எங்களுக்கு அது தானே முதல் நாள்”
“ஓகே.. பட் அவ மறந்திருக்க மாட்டா… உன் பிரெண்ட் னு விட்டுருப்பா”
“ஏதோ ஒன்னு.. சமாதானம் ஆனா சரி..”
“பட் உன் ஆளு அத்தோட விட்டுருக்க மாட்டாளே!”
“ஹ்ம்ம்… இவ்ளோ நேரம் இதையா பேசிட்டு இருந்தீங்க னு கேட்டா.. நீ என்னை ஓட்டிட்டு இருந்த னு சொன்னேன்… ‘நீ என்ன பைக் ஆ காரா ஓட்டுறதுக்கு’ னு கேட்டா..’ஆஷா உன்னை ஓட்டுனா னு சொன்னியே.. அப்போ நீ என்ன பைக் ஆ காரா?’ னு கேட்டு, ‘கேன்டீன் போயிட்டு வரேன்’ னு சொல்லிட்டு வந்தேன்”
“ஹ்ம்ம்.. இதுக்கு உண்மையையே சொல்லி இருக்கலாம்”
“அது இல்ல டா  மச்சி.. பிருந்தா பத்தி நீயே இன்னும் ஒழுங்கா முடிவு பண்ணலை……”
“யாரு சொன்னா?”
“அட பாவி.. நீ தானே டா நேத்து சொன்ன”
“அது நேத்து சொன்னது..”
“அப்போ இன்னைக்கு?”
“அது.. அது வந்து.. நான் அவள.. லவ் பண்றேன் டா”
சிவகுரு சொன்னவிதத்தில் ராஜசேகர் நின்றேவிட்டான்.
ராஜசேகர், “டேய் மச்சி.. என்ன டா பொண்ணு மாதிரி வெக்கப் படுற!”
“என்ன பண்றது.. என் ஆளு கண்டிப்பா வெக்கப் பட மாட்டா..”
ராஜசேகர் புன்னகையுடன்“அதுனால நீங்க படுறீங்கலாக்கும்”
“ஹி ஹி ஹி”
மாலினி குரலில் இருந்தே அவள் தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்த பிருந்தா சிறு கடுப்பு கலந்த குரலில், “நிஜமா தான் மாலு.. நான் சாப்பிட போகலை.. நான் வரும் போது அந்த குரங்கு காரிடரில் நிக்குறதை பார்தேனா, சும்மாவே கிண்டல் பண்ணி கடுப்பேத்துவான், இதுல தனியா போனா.. சொல்லவா வேணும்! அதான் கேன்டீன் போனேன்.. நீ வந்ததும் உன் கூட ஜாயின் பண்ணிட்டேன்”
மாலினி புன்னகைக்கவும், பிருந்தா, “எதுக்குடி சிரிக்கிற?”
“சிவாக்கு பயப்படுறியா?”
“அந்த குரங்குக்கு யார் பயந்தா?”
“அப்பறம் எதுக்கு மேடம் கேன்டீன் போய் ஒளிந்தீங்க”
“அது பயம் இல்லை.. அவன் எதையாது பேசி என்னை டென்ஷன் பண்ணுவான்”
“இப்போ மட்டும் பண்ண மாட்டானா?”
“பண்ணுவான் தான்.. நீ ஏதாவது சொல்லி ஆஃப் பண்ண மாட்ட!”
“பார்க்கலாம்” என்றவள் சிரிப்புடன், “நூறாயுசு”
“யாருக்கு?”
“இவ்ளோ நேரம் யாரை நீ புகழோ புகழ் னு புகழ்ந்துட்டு இருந்தியோ அவனுக்கு தான்”
பிருந்தா மாலினியை பார்க்க, மாலினி, ‘அங்க பாருஎன்று கண்ணால் செய்கை செய்தாள்.
மாலினி சுட்டிக்காட்டிய திசையில் சிவகுரு வருவதை பார்த்த பிருந்தா எரிச்சலுடன்,
“மாலு.. நாம அந்த வழியா போகலாம்” என்றாள்.

Advertisement