Advertisement
மழை 18:
ஜெனிஷாவின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது..
“உயிரோடு இருக்க
ஒரு பிறவி போதும்..
உன் அன்பின் ஸ்பரிசத்துடன்
வாழ பல ஜென்மம் வேண்டும் :-)”
அதை படித்ததும் ராஜசேகர் அனுபியிருப்பானோ என்று தோன்றியது ஜெனிஷவிற்கு.
ஜெனிஷா ஆஷாவை அழைத்தாள்.
ஆஷா, “சொல்லு ஜெனி”
“ராஜ் என் நம்பரை உன்னிடம் வாங்கினானா?”
“அது யாரு ராஜ்?”
“விளையாடாம பதிலை சொல்லுடி”
ஆஷா புன்னகையுடன், “சேகர் உன் நம்பரை எப்பவோ வாங்கிடானே! ஏன் கேட்கிற?”
“எப்போ வாங்குனான்?”
“எப்போ உன்னிடம் அவன் காதலை சொன்னானோ அப்போ”
“நீ எப்படி என்னிடம் கேட்காம குடுக்கலாம்?”
“எதுக்கு கேட்கணும்?”
“எதுக்கு கேட்கணுமா?”
“ஆமா… எதுக்கு கேட்கணும்?”
“ஓஹோ! அப்போ சரி.. வினோத் உன் நம்பரை ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்கான்.. நாளைக்கே குடுத்துறேன்”
“ஹே.. அந்த லூசு கிட்ட என் நம்பரை குடுத்துறாத ஜெனி.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நீயும் சேகரை லவ் பண்ற னு தெரிஞ்சதால் தான் குடுத்தேன்.. அதுவும் சேகர் டீசென்ட் guy.. ப்ளீஸ் டி”
“அது! அந்த பயம் இருக்கட்டும்.. ஏதோ ராஜ் டீசென்ட் guy னு சொன்னதால் விடுறேன்..”
“அப்ப்பா” என்று நிம்மதி மூச்சு விட்ட ஆஷா, “எதுக்கு திடீர் னு கேட்கிற?”
“உன் கிட்ட ராஜ் நம்பர் இருக்கா?”
“எப்பவாது நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கியா நீ?”
“நம்பர் இருக்கா னு கேட்டேன்”
“அதானே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா! அது ஜெனி இல்லையே!”
“தெரிது ல.. பதிலை சொல்லு”
“இருக்கிறது.. நம்பர் **********”
ஜெனிஷா சிறிது வேறுபட்ட குரலில், “மனப்பாடமா தெரியுமா?”
“அம்மா தாயே உன் ஆள் நம்பர் எனக்கு மனப்பாடமா லாம் தெரியாது.. இயர்-போனில் பாட்டு கேட்டுட்டு இருக்கும் போது உன் போன் வந்தது.. அப்படியே அட்டென்ட் பண்ணேன்.. உன் நம்பர் சேகர்க்கு தெரியுமா னு நீ கேட்டப்பவே காண்டக்ட்ஸ் போய் அவன் நம்பர் சர்ச் பண்ணி எடுத்துட்டேன்.. போதுமா விளக்கம்.. என்னை ஆளை விடு” என்று கூறி அழைப்பை துண்டிக்க நினைக்க,
ஜெனிஷா, “ஹே! எதுக்கு கேட்டேன் னு தெரிய வேண்டாமா?”
“நான் கேட்டா.. சொல்லிட்டு தான் நீ மறுவேலை பார்ப்ப!”
“அது ஒன்னும் இல்லை.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது அதான் அது ராஜ் தானா னு தெரிஞ்சுக்க கேட்டேன்”
“ஹ்ம்ம்.. இனி.. டெய்லி
‘சங்கீத சுவரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்‘ ” என்று பாடவும், ஜெனிஷா,
“சும்மா இருடி”
“பார்டா சேகர் பத்தி பேசினாலே ஜெனிக்கு வெக்க வெக்கமா வருது”
“ஹே! நீ அடி வாங்க போற”
“நீ சைக்கோ கிட்ட அடி வாங்காம இருந்தா சரி”
“என்னடி சொல்ற?”
“பின்ன இனி டெய்லி நைட் டுயுட்டி பார்த்துட்டு காலேஜில் தான் தூங்க போற..”
“போடி.. மாட்டிக்காம தூங்க எனக்கு தெரியும்”
“அப்போ இனி நிஜமாவே டெய்லி,
‘சங்கீத சுவரங்கள்
ஏழே கணக்கா…………….”
“போடி.. உன் வேலையை பாரு”
“இப்போ உன் வீடுக்குலாம் வர முடியாது மா.. அப்பறம் மிஸ்டர் சுரேஷ்(ஆஷாவின் தந்தை) என்னை பிச்சுடுவார்”
“என்னடி உளறுற?”
“நீ ‘உன் வேலையை பாரு‘ னு சொன்னாலே தனி அர்த்தம் தானே!”
ஜெனிஷா புன்னகையுடன், “காலேஜில் வச்சு னா தான் உனக்கு வாட்ச்-வுமன் வேலை.. இப்போ சொன்னது உன் சொந்த வேலை தான்”
“நேரம் தான் டி”
“நேரம் இப்போ 9.20″
“அது எங்களுக்கும் தெரியும்.. நீ போய் கடலை போடு.. பை” என்று கூறி ஆஷா அழைப்பை துண்டித்தாள்.
புன்னகையுடன் சற்று யோசித்த ஜெனிஷா குறும்புடன் ராஜசேகர் எண்ணை அழைத்தாள்.
ஜெனிஷா கைபேசியில் ‘voice-modulator’ என்று ஒரு வசதி உண்டு, அதன் மூலம் பெண் குரலை ஆண் குரலாக மாற்றவும், ஆண் குரலை பெண் குரலாக மாற்றவும் முடியும்.
அந்த வசதியின் உதவியுடன் ராஜசேகருடன் ஆண் குரலில் பேசும் திட்டத்துடன் அழைத்தாள்.
ராஜசேகர் ஜெனிஷாவின் எண்ணை பார்த்ததும் மகிழ்ச்சியுடன், “ஹலோ நிஷு” என்று கூற,
ஜெனிஷா ஆண் குரலில்(அதவாது அவள் எப்பொழுதும் போல் தான் பேசினாள் ஆனால் ‘voice-modulator’ on செய்து இருந்ததால் ஆண் குரல் போல் ராஜசேகருக்கு கேட்டது)
“ஹலோ..கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது.. நீங்க யார் சார்? உங்களுக்கு யாரு வேணும்? “
ராஜசேகர் அதிர்ச்சியுடன் திணறவும், இங்கே ஜெனிஷா வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
ராஜசேகர் கைபேசியை காதில் இருந்து எடுத்து பெயரை பார்த்தான்.
பிறகு, குழப்பமும் அதிர்ச்சியுமாக, “மே ஐ ஸ்பீக் டு நிஷா.. ஜெனிஷா?”
ஜெனிஷா கறாரான குரலில், “ஜெனிஷா வோ நிஷா வோ அப்படி யாரும் இல்லை.. ராங் நம்பர்” என்று கூறி பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டு பலமாக சிரித்தாள்.
பெரும் குழப்பத்தில் இருந்த ராஜசேகர் ஆஷாவை அழைக்கலாம் என்று யோசித்தவன், மணியை பார்த்தான். மணி 9.25 என்பதால், ‘இந்த நேரத்தில் ஆஷாக்கு போன் செய்யலாமா?’ என்று தயங்கியவன், குறுஞ்செய்தி அனுப்பினான்.
“தொந்தரவிற்கு மன்னிக்கவும்.. உடனே ஒரு சந்தேகத்தை தீர்த்துக்கணும்.. ********** இது நிஷா நம்பர் தானே?”
ஆஷாவிடமிருந்து பதில் வருவதற்குள் ராஜசேகர் நிலைமை திண்டாட்டமாக தான் இருந்தது.. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. தலை வெடித்துவிடுவது போல் இருந்தது.
ஐந்து நிமிடங்களில் ஆஷா ராஜசேகரை அழைத்தாள்.
“ஹலோ ஆஷ்! அது நிஷா நம்பர் தானே!”
“ஆமா! ஏன் சேகர் என்ன ஆச்சு?”
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன் மெசேஜ் அனுப்புனேன்.. அந்த நம்பரில் இருந்து போன் வந்துது.. ஒரு ஆண் தான் பேசினாங்க, ஜெனிஷா னு யாரும் இல்லை.. ராங் நம்பர் னு சொல்லி வச்சுட்டாங்க”
ஆஷா புன்னகையுடன், “இப்போ தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி ஜெனி பேசினா.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது னு சொல்லி அது உன் நம்பர் தானா னு செக் பண்ண போன் பண்ணேன் னு சொல்லி உன் நம்பர் வாங்கினா..
ஸோ ஜெனி தான் ஏதோ விளையாடுறா னு நினைக்கிறேன்”
“எப்படி ஆண் குரலில்?அவளுக்கு மிமிக்கிரி தெரியுமா?”
சிறிது யோசித்த ஆஷா சிரிப்புடன், “மிமிகிரி தெரியாது பட் அவ செல்லில் வாய்ஸ் மாடுலேடர் உண்டு”
ராஜசேகர் புன்னகையுடன், “ஓ! ஓகே ஆஷ்.. இனி நான் பார்த்துக்கிறேன்.. தேங்க்ஸ்”
“ஆல் தி பெஸ்ட்”
“தன்க் யூ”
“சேகர் உன்னிடம் ரெண்டு விஷயம் சொல்லணும்”
“என்ன?”
“சொன்னா ட்ரீட் தரனும்”
“உனக்கு இல்லாததா?”
“ஜெனி முன்னாடி இப்படி சொல்லிடாத”
ராஜசேகர் சிரிப்புடன், “நிஷா இருக்கும் போது நீ யாருனே எனக்கு தெரியாதே!”
“அட பாவிகளா!”
ராஜசேகர் புன்னகையுடன், “சரி சரி விஷயத்தை சொல்லு”
“என்னை யாரு னு தெரியாதவங்களிடம் சொல்ல முடியாது”
“அது நிஷா முன்னாடி தான்.. இப்போ நீ யாரு! என் பெஸ்ட் பிரெண்ட் ஆச்சே!”
“ஏதோ பழகி தொலைச்சுட்டேன்.. அதனால் சொல்றேன்.. அப்ட்டர் நூன் நீ போனதுக்கு அப்பறம் நாங்க பேசிட்டு இருந்தப்ப ஜெனி.. ‘இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு னு கிடையாது.. இந்த நிஷா எப்போதும் ஒரே பேச்சு தான்‘ னு சொன்னா.. புரிதா!”
ராஜசேகர் புன்னகையுடன், “புரியுது”
“தென்.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் போன் பண்ணப உன்னை ராஜசேகர்-னோ சேகர்-னோ அவ கூப்பிடலை”
ராஜசேகர் எதிர்பார்ப்புடன், “அப்பறம்!”
ஆஷா புன்னகையுடன், “அதை உன் நிஷா கிட்டயே கேட்டுகோ”
ராஜசேகரும் புன்னகையுடன், “ஓகே.. தேங்க்ஸ் ஆஷ்..”
“உன் தேங்க்ஸ் யாருக்கு வேணும்.. ஒழுங்கா ட்ரீட் குடு”
“கண்டிப்பா! எங்க வேணும்?”
“ஹ்ம்ம்.. பெருசா என்ன கேட்டுற போறேன் சின்னதா ஒரு டின்னர் ‘Royal Le Meridien’ னில்”
“ஹலோ.. ஹலோ.. சிக்னல் இல்லை னு நினைக்கிறேன் ஆஷ்.. நாளைக்கு பார்க்கலாம் பை” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
ஆஷா புன்னகையுடன், ‘ரெண்டும் நல்ல ஜோடி தான்‘ என்று நினைத்ததுக் கொண்டாள்.
ராஜசேகர் ‘என்னிடமே உன் வேலையை காட்டுறியா நிஷு டார்லிங்!‘ என்று கூறி புன்னகையுடன் ஜெனிஷாவை அழைத்தான்.
தன் அறைக்குள் சென்ற மாலினி, நந்தினி மற்றும் பிருந்தாவிற்கும் கான்ப்ரன்ஸ் காள் செய்து முன்தினம் நிகழ்த்த கடத்தல் சம்பவம் மற்றும் மோகனாவுடன் பேசியதை பற்றி கூறினாள்.
பிருந்தா, “அப்போ கிருஷ்ணமூர்த்திக்கு ‘காவலன்‘ னு நிக் நேம் வச்சிறலாம்”
நந்தினி, “ஏய் லூசு.. இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாது”
மாலினி புன்னகையுடன், “நமக்குள்ள பேசும் போது அப்படி கூப்பிடலாம்.. பட் மோனி முன்னாடி கூட யூஸ் பண்ணிடாத ஜில்ஸ்”
பிருந்தா, “sure..sure.. அப்பறம் அவளிடம் மல்லுகட்ட என்னால் முடியாதுடா சாமி.. ஆனா ஒன்னு மாலு.. நீ நேண்டி(nandy)க்கு சொன்ன பழமொழி நம்ம செல்லம்ஸ்க்கு தான் பொருந்தும்”
நந்தினி, “ஸ்ஸ்ப்பா.. எப்ப பார்த்தாலும் இதே பேச்சு தானாடி உங்களுக்கு!”
பிருந்தா, “போடி ஔவையார்”
நந்தினி, “இந்த பேச்சுக்கு பதில் நான் ஔவையாராவே இருந்துட்டு போறேன்”
மாலினி சிரிப்புடன், “ஜில்ஸ்.. இப்பவும் சொல்றேன் அந்த பழமொழி நந்துக்கு தான் அப்ட் ஆ பொருந்தும்.. மோனி பொறுத்தவரை.. அவ காதலை அவளே உணரலை..”
பிருந்தா, “உணர்ந்தா மட்டும் என்ன செஞ்சுட போறா!”
மாலினி, “அந்த கவலை ஷங்கரோடது.. அவன் பார்த்துப்பான்”
பிருந்தா, “சரி அதை விடு.. அது மோனி பாடு ஷங்கர் பாடு.. எனக்கு ஒரு டவுட்” என்று ஒருமாதிரி குரலில் கேட்கவும், மாலினி, “ஜில்ஸ் உன் சந்தேகத்தை அப்பறமா கேளு”
“என்னடி எஸ்கேப் ஆகுற!”
“நான் ஏன் எஸ்கேப் ஆறேன்! நந்து இருக்காளே.. நீ ஏடாகூடமா கேட்டா……….”
“ஹலோ… ஸ்டாப்.. ஸ்டாப்.. நான் அப்படி எதுவும் கேட்க வரலை.. இன்பாக்ட் நான் அதை பற்றியே யோசிகலை.. உன் நினைப்பு தான் அதுலேயே இருக்குது..
ஏய் ஔவையார் லைனில் தான் இருக்கிறியா! எப்போதும் என்னை மட்டும் சொல்லுவ! இப்போ உன் செல்ல மாலுவை ஒன்னும் சொல்லமாட்டியே!”
மாலினி அவசரமாக, “ஹே! நீ அதை பற்றி தானே பேசிட்டு இருந்த அதான்………”
பிருந்தா, “அதுலாம் செல்லாது செல்லாது.. ஹே ஔவையார் லைனில் இருக்கியா இல்லையாடி?”
நந்தினி, “இருக்கேன்.. இருக்கேன்.. நான் சொல்லிட்டா மட்டும் ரெண்டு பேரும் திருந்திறவா போறீங்க!”
பிருந்தா, “திருந்துற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்றோம்?”
நந்தினி, “ஓகே மாலு.. நாளைக்கு பார்க்கலாம்”
பிருந்தா அவரசமாக, “ஹே! இருடி.. என் சந்தேகத்தை கேட்டுறேன்”
நந்தினி, “கேட்டுத் தொலை”
பிருந்தா, “என்…டவுட்….என்னனா……..” என்று இழுத்து இழுத்து பேச, மாலினி, “ஹேய் இழுவை.. பில்ட்-அப் போதும்.. விஷயத்துக்கு வா”
“இல்லை.. இப்படி ஹீரோஹிசம் பண்ணி உன்னை காப்பாத்தி இருக்கானே கிருஷ்ணமூர்த்தி.. அவன் மேல்…………”
மாலினி, “பிருந்தா.. ஹீ இஸ் மை பிரெண்ட்”
பிருந்தா, “அப்படியா!”
“தேவை இல்லாம ஓட்டாத பிருந்தா..”
“ஒன்னும் இல்லாமையா ‘மூர்த்தி‘ னு கூப்பிடுற”
“லூசு.. எனக்கு அந்த ‘கிருஷ்ணா’-ங்கிற பெயரே அலர்ஜியா இருக்குது”
“அது மட்டும் தான் காரணமா!”
“பின்ன!”
“பார்க்கலாம்டி”
“என்னத்தை பார்க்க போற?”
“எதை னு உனக்கே தெரியும்”
மாலினி பேசும் முன் நந்தினி, “பிருந்தா” என்று சிறு கடுமையுடன் அழைக்க,
பிருந்தா, “வந்துட்டாங்க பா டீச்சரம்மா”
மாலினி தீவிரமான குரலில், “பிருந்தா அம் சீரியஸ்லி டெல்லிங்………….”
பிருந்தா சிறு புன்னகையுடன், “ஓகே மேடம்.. ஓகே..”
மாலினி மனதினுள், ‘இவ எதை சொன்னாலும் இப்போ ஒத்துக்க போறதில்லை கொஞ்ச நாளில் அவளே புரிஞ்சுப்பா‘ என்று நினைத்துக் கொண்டாள்.
மாலினி, “ஓகே பிரெண்ட்ஸ்.. நாளைக்கு பார்க்கலாம்.. பை” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
ஜெனிஷா தான் தன்னிடம் பேசியது என்பதை அறிந்ததும் அவளது குறும்பை ரசித்து புன்னகையுடன் அவளை அழைத்தான் ராஜசேகர்.
ராஜசேகரின் எண்னை பார்த்ததும் ‘வாய்ஸ் மாடுலேடர்‘ ‘ஆன்‘ செய்துவிட்டு, ஜெனிஷா,
“ஹலோ”
“ஹலோ நிஷா..“
“என்ன சார் இப்போ தானே ராங் நம்பர் னு சொல்லிட்டு வச்சேன்”
“ஓ! சாரி சார்.. எப்படி னு தெரியலை சார்.. நான் என் வைஃப் நிஷா நம்பரை தான் காள் பண்றேன்.. பட்………………”
“வைஃப் ஆ!”
“அதில் உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ ஷாக்?”
“எனக்கு.. எனக்கு ஒன்னும் ஷாக் இல்லையே!”
“அப்படியா!”
“ஹலோ மிஸ்டர்…………..”
“ஓகே சார்.. நான் லண்ட் லைன்க்கு போன் பண்ணி என் வைஃப் கிட்ட பேசிக்கிறேன்.. தொந்தரவுக்கு மன்னிச்சிருங்க” என்று கூறி அழைப்பை துண்டிப்பது போல் பாவனை செய்ய,ஜெனிஷா அவசரமாக, “ஹலோ.. ஹலோ”
“என்ன சார்?”
“லண்ட் லைன் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?ஆஷா கிட்ட பேசுனியா?”
ராஜசேகர் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அறியாதவன் போல், “என் வைஃப் பிரெண்ட் நேம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”
“நான் உன் வைஃப் ஆ?”
“ச ச.. என்ன சார் ஒரு ஆம்பளை எப்படி என் மனைவியா இருக்க முடியும்?”
“டேய்!”
“என்ன சார் மரியாதை குறையுது.. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட் னு கேள்விபட்டது இல்லையா!”
“நீ ஆஷா கிட்ட பேசுனியா!”
“என் வைஃப் பிரெண்ட் கிட்ட நான் பேசுனா என்ன பேசலைனா உங்களுக்கு என்ன சார்?”
ஜெனிஷா வாய்ஸ் மாடுலேடரை அணைத்து விட்டு, “டேய் நான் உன் வைஃப் ஆ?”
ராஜசேகர் ஆச்சரியம் மிகுந்த குரலில், “வாவ்! வாட் அ மஜிக்! எப்படி நிஷா?”
“டேய் ரொம்ப நடிக்காத.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
ராஜசேகர் காதல் மிகுந்த குரலில், “எந்த கேள்விக்கு நிஷு?”
ஜெனிஷாவின் வேகம் குறைந்தது.
“உனக்கே தெரியும்”
ராஜசேகர் புன்னகையுடன், “ஆஷா கிட்ட இப்போ தான் பேசினேன்.. ஏன் நான் பேச கூடாதா?”
“நான் அதை கேட்கலை”
“அப்பறம்?”
“…”
“சொல்லு நிஷு.. எதை கேட்கிற? நீ சொன்னா தானே எனக்கு தெரியும்?”
ஜெனிஷா மனதினுள், ‘நிஷா இவன் சரியான திருட்டு பையன்.. நீ வெக்கப்பட்ட வேலைக்கு ஆகாது.. இவன் ஓட்டிட்டே தான் இருப்பான்‘ என்று கூறிக் கொண்டு, “ஹ்ம்ம்.. நான் என்ன உன் வைஃப் ஆ?”
ராஜசேகர் நிதானமாக அழுத்தமாக, “ஆமா” என்றான். இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு ராஜசேகரே பேசினான், மென்மையாக காதலுடன், “நீ எப்போ என் காதலை அக்செப்ட் பண்ணியோ அப்பவே நீ மனசளவில் என் மனைவி ஆகிட்ட நிஷா.. இதை மாற்ற யாராலும் முடியாது”
ஜெனிஷாவிற்கு பேச்சே வரவில்லை..
சின்னச்சிறு காரியத்திற்காக தன்னிடம் வழியும் பசங்களை மறைமுகமாக ஊக்குவித்து காரியம் சாதித்து இருக்கிறாள், பசங்களின் சைகாலஜி அறிந்தவள் தான்.. சில நல்ல பசங்கள் அவளிடம் உண்மையாக காதலை கூறியிருக்கிறார்கள் தான் ஆனால் அவர்களில் யார் மீதும் வராத காதல் உணர்வு எப்போதும் தன்னை சீண்டிய ராஜசேகர் மேல் வந்தது.. இந்த காதல் அனுபவம் அவளுக்கு முற்றிலும் புதுமையானது.. ராஜசேகரின் காதலில் கரைந்தாள்..
ஜெனிஷா காதலுடன், “ஐ லவ் யூ ராஜ்” என்றாள்.
ராஜசேகர் விண்ணை தொட்ட உணர்வை பெற்றான். அவனுக்கு மகிழ்ச்சி தொண்டையை அடைக்க வார்த்தையே வரவில்லை.
சில நொடிகள் இனிமையான மௌனத்தில் கழிய, ராஜசேகர் தொண்டையை சீர் செய்துக் கொண்டு, “நிஷு இன்னொரு தடவ சொல்லேன்” என்று கரகரத்த குரலில் கூற,
ஜெனிஷா சிறு வெக்கம் கலந்த புன்னகையுடன் தலையை ‘முடியாது‘ என்று ஆட்டினாள்.
[இது என்ன வீடியோ காள் ஆ ஜெனி! நீ தலையை ஆட்டினா அவனுக்கு எப்படி தெரியும்!]
ராஜசேகர், “நிஷு.. லைனில் தானே இருக்க?”
“ஹ்ம்ம்”
“என்ன அமைதியா மாறிட்ட!”
ஜெனிஷாவிற்கே தன் அமைதி ஆச்சரியமாக இருந்தது. ‘தானா இப்படி மெளனமாக இருப்பது! இவனின் குரலுக்கே வெக்கப் படுவது!‘ என்று பெரிதும் ஆச்சரியம் கொண்டாள், ஆனால் இது அவளுக்கு மிகவும் பிடித்தது.
“நிஷு.. பதில் சொல்லு”
“நீ தான் மாத்திட்ட”
கர்வம் கலந்த மகிழ்ச்சியுடன் ராஜசேகர், “அப்படியா!”
“எதுக்கு போன் பண்ண?”
“என் வைஃப் கிட்ட பேச காரணம் வேணுமா?”
“ராஜ்”
“என்ன நிஷு டார்லிங்”
“என்னை.. ஹ்ம்ம்.. எப்படி என் மேல் லவ் வந்துது?”
“உனக்கு என் மேல் எப்படி லவ் வந்தது?”
“நான் தான் பஸ்ட் கேட்டேன்”
“நீயே பஸ்ட் பதிலும் சொல்லிடு”
“இது சீடிங்”
ராஜசேகர் சிரிப்புடன், “சொல்லு நிஷு.. எப்படி என் மேல் லவ் வந்தது?”
“தெரியலையே! எனக்கே அது ஆச்சரியமா தான் இருக்குது”
“அடி பாவி”
ஜெனிஷா சிரித்தாள்.
ராஜசேகர், “என்ன சிரிப்பு?”
“ஓகே நீ சொல்லு என் மேல் எப்படி லவ் வந்துது?”
“லவ்க்கு காரணம் கிடையாது நிஷு.. காரணம் இருந்தா அது லவ்யே இல்லை”
“இந்த இத்து போன வசனத்தை மாத்துங்க டா”
“ஓல்ட் இஸ் கோல்ட் நிஷு.. அண்ட் இட்ஸ் ட்ரூ டூ”
“தாங்கலை”
ராஜசேகர் புன்னகையுடன், “இன்னொரு முறை சொல்லு நிஷு”
அவன் எதை சொல்கிறான் என்பதை நன்கு அறிந்த ஜெனிஷா புன்னகையுடன், “தாங்கலை”
“ஏய்! நான் இதையா சொன்னேன்?” என்று சிறு ஏமாற்றத்துடன் ராஜசேகர் கூற,
“சொல்லு ராஜ்.. எதை கேட்கிற? நீ சொன்னா தானே எனக்கு தெரியும்” என்று அவன் கூறியதையே திருப்பி கூறினாள்.
ராஜசேகர் புன்னகையுடன், “எனக்கே வா!”
“அது என்ன உனக்கே வா!”
“சரி அதை விடு.. நான் கேட்டதை சொல்லு..”
“எப்படி விட முடியும்?”
“ஓகே ஓகே.. நான் ஒன்னும் பெரிய இவன் இல்லை.. போதுமா”
“என்னடா இப்படி பட்டுன்னு சரெண்டர் ஆகிட்ட.. சப்புன்னு போச்சே!”
“உன்னிடம் தானே சரெண்டர் ஆனேன்..” என்று காதலுடன் கூற, ஜெனிஷா, “இப்படி பேசியே என்னை மயக்குற டா நீ”
ராஜசேகர் புன்னகையுடன், “அப்படியா!”
“ஹ்ம்ம்..”
“அப்படியே மயக்க கிறக்கத்துடன் அந்த நாலு வார்த்தையை சொல்லு டா செல்லம்”
“நாலு வார்த்தையா!”
“ஆமா.. என் பெயரையும் சேர்த்து சொன்னேன்”
ஆஷா சொன்னது போல் அவர்களின் பேச்சு காலைவரை நீடித்தது. என்ன பேசினார்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் பதில் ‘தெரியாது‘ அல்லது ‘ஒன்றுமில்லை‘ என்பதாக தான் இருக்கும்.
காலை 6 மணிக்கு பேச்சை முடித்த போது ராஜசேகர், “இன்னைக்கு அரை மணி நேரம் முன்னாடியே காலேஜ் வந்துரு நிஷு செல்லம்..” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
மழை தொடரும்….
Advertisement