Advertisement

பத்து நாட்கள் ஓடியதே தெரியாமல் அன்று ஊருக்கு கிளம்புவதாக இருக்க காலையில் தன் கணவன் கையணைப்பில் கண்விழித்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இத்தனை ஆண்டுகள் இவங்க இல்லாமல் எப்படி இருந்தோம் என்று.. ஒவ்வொரு நொடியிலும் அவனது அன்பை அவளுக்கு உணர்த்தியவன் அவனுக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை தன் செய்கையாலே உணர்த்தினான்..
 
அவன் அவளை தன் கைவளைவிற்குள் இழுத்துக் கொள்ள அவளுக்கு ஊருக்கு கிளம்பவே ஏதோ போலிருந்தது.. அங்க போனா மறுபடியும் வேலை வேலைன்னு போயிருவாங்களோ அவனையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவளை தன் மேல் இழுத்து போட்டுக் கொண்டவன்,” என்னடி பொண்டாட்டி காலையிலேயே புருசன சைட் அடிக்கிற..??”
 
ஏங்க நீங்க தூங்கிட்டுதானே இருந்திங்க அப்புறம் எப்படி நான் பார்த்தது தெரியும்.”
அதெல்லாம் தெரியும்டி..!!  உன்கண்ணு எப்பல்லாம் என்னை பார்க்குதோ அது எனக்கு புரியும்டி..”
 
அவன் மேல் படர்ந்திருந்தவள் தலையை மட்டும் தூக்கி,” நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?’ தயங்கி தயங்கி ஆரம்பிக்க,
 
தன் வெற்று மார்பில் புரண்ட அவள் கூந்தல் முடிகளை ஒதுக்கிவிட்டவன் …அவள் முகத்தை தன் கைகளால் வருடியபடி,” ம்ம்ம் சொல்லு பேபி..
 அவனையே இமைக்காமல் பார்த்தவள்,” என் மேல இவ்வளவு அன்பை வைச்சிட்டு எப்படி முதல்நாளே டைவர்ஸ பத்தி பேசி அந்த பேப்பரையும் ரெடி பண்ணி வைச்சிங்க.. அத வக்கில்க்கிட்ட கொடுத்திட்டிங்களா..??”
 
நன்றாக ஆரம்பித்த அவள் குரல் அப்படியே உள்ளே போக அவளை தன்னை நோக்கி பார்க்கச் செய்தவன் ,”அத நீ கையெழுத்து போட்ட  அன்னைக்கே கிழிச்சு போட்டுட்டேன் பேபி.!!”.கண்களில் ஒளியுடன் கூடிய சந்தோசத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க பச் என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..
 
டைவர்ஸ் பத்தி கேட்ட தானே ..நம்ம கல்யாணத்தன்னைக்கு உன்னை மண்டபத்துக்கு கூட்டிட்டு போனப்ப மத்தவங்க எல்லாரும் என்னை நம்புறாங்களோ இல்லையோ எங்க தாத்தா என்மேல நம்பிக்கை வைக்காம ஒரு வார்த்தைகூட விசாரிக்காம உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க..என்னால அத தாங்கவே முடியல
 
அதோட கிஷோரை நீ விரும்பி அவன் உன்னை வேண்டாம்னு சொல்லவும் அழுதுகிட்டே வந்தியா.. உன்னை வற்புறுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி தோனுச்சு.. அதான் வக்கில்கிட்ட உடனே போன் பண்ணி டைவர்ஸ் பேப்பரை ரெடிபண்ணச் சொல்லிட்டுதான் உன்கிட்ட டைவர்ஸ பத்தியே பேசினேன்..
 
ஸாரி பேபி அன்னைக்குள்ள என்னோட மனநிலையையும் நீ புரிஞ்சிக்கனும்.. பல தடவை உன்முன்னாடி வந்திருக்கேன்.. ஒருதரம்கூட என்னை கவனிச்சு பார்த்ததில்ல.. அதை மீறி உன்னை கல்யாணம் பண்ணிவைச்சா நம்ம ரெண்டுபேரும் எப்படி ஒன்னா சேர்ந்து வழ முடியும் யோசிச்சு பாரு..ப்ளிஸ்டா.. அது அப்ப மட்டும்தான் உன்கிட்ட பேச ஆரம்பிச்ச ரெண்டு நிமிசத்திலேயே நான் உன்கிட்ட பிளாட் ஆகிட்டேன்..
 
அப்புறம் டைவர்ஸாவது ஒன்னாவது… அந்த வக்கில்தான் உடனே அந்த பேப்பர ரெடி பண்ணி கொடுத்திட்டாரு.. நான் அத உன் கண்ணிலயே காட்டாம கிழிச்சு போட்டுறலாம்னு நினைச்சிருந்தேன்.. ஆனா அத நீ பார்த்தது மட்டும் இல்லாம கையெழுத்தும் போட்டு கொடுத்திட்ட.. அப்ப என் ஹார்ட் எப்படி வலிச்சிச்சு தெரியுமா..??” தன் இதயத்தை தொட்டு காட்ட அதில் முத்தமிட்டவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
 
அப்புறம் எங்க தாத்தா மேல எனக்கு கொஞ்சம கோபம் இருந்திச்சு.. அவர் மட்டும் உங்க குடும்பத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு புகழாம இருந்திருந்தா நானே இந்த தயிர்சாதத்தை எப்படியாச்சும் கரெக்ட் பண்ணியிருப்பேன்.. அந்த கிஷோர கிராஸ்டாக் ஆகாம தடுத்திருப்பேன்.. அதான் அவர் மேல கொஞ்ச நாள் கோபமா பேசாமக்கூட இருந்தேன்..
 
அப்பத்தான் ஒரு நாள் எங்க தாத்தா என்னை கூப்பிட்டு வைச்சு பேசினாரு.. நான் முதல் முதலா உன்னை பத்தி எங்க தாத்தாக்கிட்ட கேட்டேன் பாரு அப்பவே நான் உன்னை விரும்புறேன்னு ஒரு டவுட் இருந்திச்சாம்.. ஆனா உங்க தாத்தாக்கிட்ட எப்படி உன்னை பெண் கேட்கிறதுன்னுதான் பேசாம இருந்தாராம்..
 
அப்புறம் நாம மண்டபத்துக்கு வந்தோம்பாரு.. அவருக்கு என் மேல முழுநம்பிக்கை இருந்தாலும் அப்ப அதபத்தி பேச ஆரம்பிச்சா நாம எங்க போனோம்ங்கிற விபரத்தை எல்லார்கிட்டயும் சொல்லனும் அது உன்பேர கெடுத்திரும்னுதான் ஒன்ணுமே விசாரிக்காம ஒரே ஒருவார்த்தைதான் கேட்டாங்க.. நைட்டெல்லாம் நாம ரெண்டுபேரும் ஒன்னா இருந்தோமான்னு ..!! நான் ஆமான்னு மண்டையை ஆட்டவும் இந்த சந்தர்ப்பத்தை விட்டா நமக்கு கல்யாணம் நடக்க வேற வழிக்கிடைக்காதுன்னுதான் உடனே கல்யாணத்தை வைச்சிட்டாங்களாம்..
 
அதோட விடாம இன்னொரு நியூஸையும் சொன்னாங்க.. அது என்னன்னா நான் உன்னை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா அங்க இருந்த என்னைவிட சூப்பரான மாப்பிள்ளைகள்ல இருந்து ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருப்பாங்களாம்.. அத நடக்கவிடாம தடுத்ததே எங்க தாத்தாதான்.. அதான் நல்லா யோசிச்சுக்கோ நான் பண்ணினது சரியா தப்பான்னு கேட்டாங்க..”
 
நீங்க என்னங்க சொன்னிங்க..?”
அப்புறம் ஏன் நான் வாயை திறக்கிறேன்… நமக்கு குழந்தை பொறந்தா அவரு பேரையே வைக்கிறேன்ணனு சொல்லிட்டேன் எப்படி நம்ம டீல்..??” அவளை பார்த்து கண்ணடித்தவனை இறுக அணைத்தவள்,
 
 நல்லவேளைங்க நீங்க உங்க தாத்தாக்கிட்ட கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சண்டைபோடாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.. இல்லைனா இந்த மாதிரி என் மேல இவ்வளவு லவ்வா, ஸ்வீட்டா, அழகா, கியூட்டா, கம்பீரமா எனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருப்பாரா..!!”
 
ஏய் ரொம்ப புகழாதடி மாமனுக்கு வெட்க வெட்கமா வருது ..”அவளை மெத்தையாக்கி அவள் மேலே உருள ஆரம்பித்தான்..
 
இருவரும் மதியத்திற்கு மேல் ஊட்டியை விட்டு கிளம்ப.” ஏங்க பாதி இடம்கூட நீங்க சுத்திகாட்டலை.. காரை மிதமான வேகத்தில் ஓட்டியவன் அதுக்கென்ன பேபி நம்ம எப்ப வேணும்னாலும் இங்க வரலாம் எப்பப்ப எனக்கு ப்ரி டயம் கிடைக்குதோ அப்பல்லாம் உன்னை இங்க கூட்டிட்டு வந்துற்றேன்..
 
அப்புறம் ஒரு முக்கியமான விசயத்தை சொல்லவே மறந்திட்டேன்.. எனக்கு உன் மேல பாசம் அன்பு எல்லாம் இருக்கிறது புரியுதுதானே .. தலையை ஆட்டியவள் தலையில் கைவைத்தவன்,” எனக்கு என்னோட தொழிலும் ரொம்ப பிடிக்கும்..
 
நான் ரொம்ப விரும்பி படிச்சு தேர்ந்தெடுத்த வேலை அது ஒரு வேலையை தொடங்கிட்டா நூறுசதவீதம் அதுல என்னோட உழைப்பு இருக்கனும்னு நினைக்கிறவன்.. இனிமே சீக்கிரமே வீட்டுக்கு வரப்பார்க்கிறேன். .ஆனா என்னோட வேலையில நேரம் காலத்த பார்க்க முடியாது வீட்டுக்கு வர முன்னபின்ன ஆகலாம்..
 
அதுக்காகவெல்லாம் உன்மேல லவ் இல்ல பாசம் இல்ல உன்னை நினைக்கலைன்னு சும்மா சும்மா கோவிச்சுக்க கூடாது.. அன்னைக்கு மாதிரி லெட்டர் எழுதி வைச்சிட்டு போற வேலை எல்லாம் வைச்சுக்க கூடாது.. கணவன் மனைவினா சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்..
 
அத நம்மளே பேசித் தீர்த்துக்கனும்.. சும்மா சும்மா உங்க அம்மா. தாத்தாவ தொந்தரவு செய்யக்கூடாது… முக்கியமா உன்னோட மூளையை பயன்படுத்தி அவசரமா எந்த முடிவும் எடுக்ககூடாது ..!!எதாயிருந்தாலும் நாம ரெண்டு பேரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் புரியுதா..??” சிறு குழந்தைக்கு எடுத்து சொல்வது போல சொல்லி புரியவைக்க
 
அவளோ காதை இங்கேயும் பார்வையை வெளியேயும் வைத்திருந்தவள் அங்கு பஞ்சு மிட்டாய் விற்பதை பார்க்கவும்,” மாமா அங்க பாருங்க பஞ்சுமிட்டாய் ப்ளிஸ் வாங்கி தாங்க..” அவன் கையை போட்ட உலுக்க அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தவன்,
 நான் இவ்வளவு நேரம சொன்னதை கேட்டியா இல்லையாடி..??”
புஸ்புஸ்ஸென்று மூச்சு வாங்கியவள்,” என்னை மண்டையில கொட்டாதிங்கன்னு முதல்லயே சொல்லியிருக்கேன்ல… இருங்க உங்கள அத்தைக்கிட்ட நல்லா மாட்டிவிடுறேன்..??” கோபத்தில் அவனை விட்டு தள்ளி கண்ணாடி பக்கம் நகர்ந்து போய் உட்கார தன் தலையில் அடித்து கொண்டவன் அவளை சமாதானப் படுத்துவதற்காக அந்த பஞ்சு மிட்டாய் கடை பக்கத்தில் காரை நிறுத்தியிருந்தான்
 
பத்துமாதம் கழித்து
 தன் அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு கண்விழித்தவள் கதவை திறக்க வெளியில் ப்ரியா,” அண்ணி இந்தாங்க காப்பி.. இதை குடிச்சிட்டு அம்மா குளிச்சிட்டு உங்க கல்யாணப்பட்டு புடவையை கட்டிட்டு வரச் சொன்னாங்க..  எட்டு மணிக்கு கெஸ்ட்டெல்லாம் வர ஆரம்பிச்சிருவாங்களாம்.. தன்னை பார்த்து பளிச்சென சிரிக்கும் ஸ்ரீயை பார்த்த ப்ரியா,” நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அண்ணி  கன்னத்தில் முத்தமிட்டு நிறைய வேலை இருக்கு  சீக்கிரமா வாங்க..” சொல்லியபடியே  மாடியிலிருந்து கீழிறங்க,
 
கதவை சாத்திவிட்டு டேபிளில் காப்பியை வைத்துவிட்டு பாத்ரூமில் முகம் கழுவி வந்தவள், கட்டிலில் உறங்கும் கணவனை காணவும் இப்படி அவன் தூங்குவதை பார்ப்பது என்றோதான் நடக்கும் இன்று தனக்கு வளைகாப்பு என்பதால்தான் வெளியில் போகாமல் வீட்டிலிருக்கிறான்..
 
முன்பு போலவே அதிகநேரம் வேலையில் இருந்தாலும் அடிக்கடி போன்செய்து மனைவியுடன் பேசிவிடுவான்..ஓய்வு நேரம் கிடைத்தால் அடுத்த ஐந்துநிமிடத்தில் மனைவியிடம் இருப்பான்.. இருக்கும் நேரத்தில்  மனைவியின் எல்லாத் தேவையும் பார்த்து பார்த்து செய்வான்..
 
 எவ்வளவு வேலை இருந்தாலும் அவள் ஹாஸ்பிட்டலுக்கு செக்கப்பிற்கு இவன்தான் அழைத்து செல்வான்.. அவர்கள் சொல்லும் ஸ்கேன், தடுப்பூசி எப்போது என்பதை நியாபகம் வைத்து எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக காத்திருந்து அழைத்து வருவான்..அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அவள் மேல் உள்ள காதல் அவன் சொல்லாமலே தெரியும் தூங்கும் தன் கணவன் அருகில் சென்றவள் அவன் தலையை கலைத்துவிட்டு எப்போதும் போல நெற்றியில் முத்தமிட தன் கையால் அவள் கழுத்தை வளைத்தவன்,
 
குட்மார்னிங் பேபிஸ்.. அவள் நெற்றியிலும் வயிற்றிலும் முத்தமிட்டவன் தனக்கு பெண்குழந்தைதான் வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தான்… இன்னைக்கு நைட் நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிருவதானே அப்ப நைட் நான் மட்டும் தான் இங்க படுக்கனுமா..” சினுங்கியவனை,
 
தோளில் குத்தியவள்,” வர்றது பதினோரு மணி அப்ப எப்படி படுத்தா என்ன..
எனக்கொன்னும் இல்ல பேபி நீதான் எப்பவும் என்ன கட்டிபிடிச்சிட்டே தூங்குவ இன்னையில இருந்து பாரு நீ கட்டிப்பிடிக்க ஆளில்லாம ரொம்ப கஷடப்படுவ..!!”
 
நான் எதுக்கு கஷ்டப்படுறேன் அங்கதான் எங்க அம்மா இருக்காங்கள்ல பத்து நாளைக்கு எங்கம்மாவ கட்டிப்பிடிச்சிப்பேன்.. அப்புறம் என்னோட பையனோ பொண்ணோ யாராச்சும் வந்திருவாங்க ..”கெத்தாக சொன்னவளை முறைத்தவன்
 
 அடிப்பாவி அப்படியாச்சும் நான் எங்க வீட்ல பேசுறேன் மாமா, நீங்க தூங்க மட்டும் அங்க வந்திருங்கன்னு சொல்லுவன்னு பார்த்தா கட்டிபிடிக்க ஆள் செட்பண்றியா உன்னை..!!!” தாய்மையின் பூரிப்பால் கொழுகொழுவென்றிருந்த கன்னத்தை கிள்ளியவன்  அதில் அழுந்த முத்தமிட அவன் அருகில் நெருங்கியவள்
 
“..”இன்னைக்கு நைட் நீங்க அங்க வரக்கூடாதாம், நாளைக்கு நைட் அங்க வந்திருங்க மாமா அவளின் வருத்தம தோய்ந்த குரலை கேட்டவன்
 
ஏய் பேபி மாமா எப்பவும் உன்கூடத்தான்டா இருப்பேன்.. சும்மா பீல் பண்ணக்கூடாது அப்பதான் குழந்தை என்னை மாதிரி சிரிச்சிட்டே பிறக்கும் உன்னை மாதிரி மூஞ்சை வைச்சிருந்தா அப்புறம் அழுத புள்ளதான் பிறக்கும்..” சிறுபிள்ளை போல கண்ணை கசக்கி அழுதவனை பார்த்து கலகலவென சிரித்தவள் வயிற்றில் தன்  குழந்தை அசைவை உணர்ந்து சிரித்தபடியே அவன் கையை பிடித்து குழந்தை மேல் வைக்க அசைவை உணர்ந்தவன் அப்படியே பூரித்து போய் அமர்ந்திருந்தான்..
 

Advertisement