Advertisement

     அவன் தனக்காக தான் செல்கிறானோ என்ற சந்தேகத்தில் படுத்தவள் அப்படியே தூங்கி விட்டாள். அவன் வேலை முடிந்து வரும் போது கட்டிலின் ஒரு ஓரத்தில் அவள் படுத்திருக்க சிறு சிரிப்புடன் அவள் அருகே படுத்தவன் அவளது தோளைப் பற்றி தன்னருகே இழுத்தான்.

     “தூங்க வீடு அண்ணா”, என்று சிணுங்களுடன் அவன் புறம் திரும்பியவள் அவன் கைக்குள் சுருண்டு கொண்டாள். அவளை லேசாக விலக்கி அவள் முகம் நன்கு தெரியுமாறு அவளை படுக்க வைத்தான். அவள் முகம் மறைத்த கூந்தலை அவள் காதோரம் ஒதுக்கி விட்டவன் அவள் கன்னத்தை வருடினான். பட்டு கூட இவ்வளவு மென்மையாக இருக்குமா என்று தோன்றியது.

     அவன் விரல்கள் கன்னம், காது மடல், புருவம் என்று அவளை வருட ஆரம்பித்தது. இரவு விளக்கின் ஒளியில் அவள் முகம் நன்றாக தெரிய அவளையே இமைக்க மறந்து பார்த்தவன் தன்னையே கட்டு படுத்த முடியாமல் அவள் நெற்றியில் முத்தமிட்டான். பின் அவள் தூங்கும் போது இப்படி நடந்து கொள்வதற்காக தன்னையே கடிந்து கொண்டவன் அவள் முகத்தைப் பார்த்த வண்ணமே உறங்கிப் போனான்.

     அடுத்த நாள் காலையில் முதலில் கண் விழித்த பவி அபியின் அணைப்பில் இருக்கவும் திடுக்கிட்டு தான் போனாள். பின் சிறு சிரிப்பில் அவள் உதடுகள் மலர்ந்தது. இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

     சீராக மூச்சு விட்டு தூங்கிக் கொண்டிருப்பவனின் முகத்தை அவ்வளவு அருகில் கண்டதும் சிறு சந்தோஷமும் கூடவே தயக்கமும் எழுந்தது. ஆனாலும் அவள் கண்கள் அவன் தலைமுடி, கண்கள், மூக்கு, இதழ்கள் என பயணிக்க “அழகா இருக்க டா அபி. இவ்வளவு நாள் உன்னை சரியா பாக்கலை பாரேன்”, என்று வெளிப்படையாகவே கொஞ்சிக் கொண்டாள்.

     அவளை அறியாமலே அவள் கைகள் அவன் சிகைக்குள் நுழைந்து வருடத் துவங்கியது. அவன் லேசாக புரண்டு படுக்கவும் திடுக்கிட்டுப் போனவள் வேகமாக எழுந்து பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். முன்பும் அவன் சிகையை கோதியிருக்கிறாள் தான். ஆனால் இப்போது ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது.

     அடுத்த நாள் இருவரும் அதே போல அருகருகே படுத்தார்கள். ஆனால் இருவருக்கும் உறக்கம் தான் வரவில்லை. கதை பேசவும் மனதில்லை. அந்த அமைதியையும் அருகாமையும் ரசித்த படி அந்த இரவைக் கடந்தார்கள்.

     அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அபி பவித்ரா இவரும் பவியின் வீட்டுக்கு வந்தார்கள். இருவர் முகத்தில் இருந்த சந்தோஷம் மற்றவர்களுக்கும் நிறைவைக் கொடுத்தது. ரவிக்கும் தான்.

     “என்ன டா ரிஷி, ரெண்டும் சரியாகிருச்சா இல்லையா? முகம் டால் அடிக்குது? அதுவும் உன் மச்சான் முகத்துல முன்னாடி இருந்த இறுக்கம் இல்லையே?”, என்று கேட்டான் ரவி.

     “எங்க? அவன் அப்ப அப்ப அவளை ஆர்வமா பாக்குறான். ஆனா ரெண்டும் எப்பவும் போல தான் இருக்காங்க. பாக்கலாம். சரியாகிரும். ஆமா உன் லவ் எப்படி போகுது மாமா? எப்ப கல்யாணச் சாப்பாடு போடப் போற?”, என்று கேட்டான் ரிஷி.

     “எது லவ்வா? உனக்கு எப்படி தெரியும்?”

     “எனக்கு என்ன? ஊருக்கே தெரியும்?”

     “ஐயையோ நீயும் அந்த ராதா போட்ட வீடியோவைப் பாத்துட்டியா?”

     “அதையும் பாத்தேன் தான். ஆனா ஆச்சியும் உன் ஆளும் சேந்து தான் இன்டர்வியூ கொடுத்துருக்காங்களே”

     “என்ன டா சொல்ற? அது என்ன இன்டர்வியூ?”

     “மாமியார் மருமகளா ரெண்டு பேரும் பேசிருக்காங்க. அந்த வீடிவோக்கு கமெண்ட்ஸ் பாக்கணுமே? நீ கிரேட் மாமா. அந்த வீடியோ வைரல் தான். அந்த வீடியோவுக்கு வரும் பைசா வச்சி ஆச்சி எனக்கு பிரேஸ்லெட் வாங்கி தறேன்னு சொல்லுச்சு”

     “என்னை வச்சு சம்பாதிச்சு உனக்கு பிரேஸ்லெட்டா? ஆனாலும் இவங்க ரெண்டு பேருக்கு இடையில எப்படி, சிக்கிருக்கேன் பாருடா”, என்று ரவி பரிதாபமாக சொல்ல “என்ன பண்ண விதியை மாத்த முடியுமா? ஆமா மாமா, நீ எப்படி ராதாவுக்கு ஓகே சொன்ன?”, என்று கேட்டான் ரிஷி.

     “நான் எங்க சொன்னேன்? அவளே லவ்வரா கமிட் ஆகிட்டா?”

     “என்னது? அப்ப உனக்கு அவளை பிடிக்கலையா?”

     “பிடிச்சிருக்கு தான்”, என்று சொல்லி ரவி ஒரு மாதிரி சிரிக்க “ஐயோ என் மாமா வெக்கம் எல்லாம் படுறானே? எல்லாரும் வாங்க”, என்று அழைக்க அவன் சத்தம் கேட்டு அங்கே வந்தது அபி மட்டும் தான்.

     “என்ன ரிஷி?”, என்று கேட்ட படி வந்த அபி ரவியையும் ஒரு பார்வை பார்க்க

     “இங்க பாரு மாப்பிள்ளை, என் மாமா வெக்கப் படுறான்?”, என்று சொல்லி ரவியைக் காட்டினான். அவனை திரும்பி பார்த்த அபி “கருமம், நாலு நாளைக்கு நல்ல சோறு இறங்காது”, என்று சொல்லி விட்டுச் செல்ல அவனைக் கொலை வெறியோடு முறைத்தான் ரவி.

     “என்ன மாமா இது? நீங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா ஆகிப் போறீங்க? இன்னும் முறைச்சிக்கிட்டு திரியுறீங்க?”

     “பின்ன இவனை பாசமாவா பாக்க முடியும்? பவி புருசனா போய்ட்டான். அதான் பேசாம இருக்கேன். இருந்தாலும் இந்த காண்டா மிருகம் கொஞ்சம் ஓவரா தான் டா போறான். பவியை விட்டு தட்டி வைக்கச் சொல்லணும்”, என்று சொல்லி விட்டுச் சென்றான். ரிஷியும் சிறு சிரிப்புடன் நகர்ந்தான்.

     அன்று இரவு தான் தங்கள் வீட்டுக்குச் சென்றார்கள் அபியும் பவியும். அன்று இரவில் தனது இடத்தில் படுத்திருந்த பவித்ரா கழுத்தில் கிடந்த தன்னுடைய தாலியை சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு புன்னகையுடன் அறைக்குள்ளே நுழைந்தவன் “தூங்கலையா டி?”, என்று கேட்டான்.

     “தூக்கம் வரலை அபி”

     அவள் அருகே படுத்தவன் அமைதியாக இருக்க “என்ன ஆச்சு அபி?”, என்று கேட்டாள்.

     “இல்லை, அன்னைக்கு பேசினது அப்படியே இருக்கு”, என்று அவன் தயக்கத்துடன் சொல்ல “நான் எதையும் வேண்டாம்னு சொல்லலையே?”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.

     “ஆமால்ல”, என்றவன் அவள் புறம் திரும்பி படுக்க அவளோ கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

     அவள் இடையைப் பற்றி தன் பக்கம் திருப்பியவன் மூடிய இமைகளில் முத்தமிட்டான். அவள் உடல் லேசாக நடுங்க ஆரம்பிக்க அவன் இதழ்கள் அவள் கன்னம் காது என்று பயணித்தது.

     அதில் அவள் உடல் இன்னும் நடுங்க ஆரம்பிக்க “இன்னைக்கு இது போதும். தூங்கு. அதுவும் இப்படி”, என்றவன் அவளை இழுத்து அனைத்து கண்களை மூடிக் கொண்டான். அவளும் அவன் மார்பில் வசதியாக முகம் புதைத்துக் கொண்டாள். ஆனால் வெகு நேரம் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை. அடுத்த கட்டத்துக்கு போகச் சொல்லி இருவரின் உணர்வுகளும் சொன்னது.

     அடுத்த நாள் அவள் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அன்று பிங்க் கலர் சேலையில் தேவதை போல நிற்க அவனால் அவளிடம் இருந்து பார்வையை திருப்பவே முடிய வில்லை. இருவருக்கும் உணவை அடைத்தவள் டேபிள் மீது வைத்து விட்டு “போகலாமா அபி?”, என்று கேட்ட படியே அவன் புறம் திரும்பினாள்.

     அவன் பார்வை எதுவோ செய்ய “ஏன் அபி இப்படி பாக்குற?”, என்று கேட்டாள் பவித்ரா.

     “இந்த சேலைல நீ ரொம்ப அழகா இருக்குற பவி”, என்று ஆழ்ந்த குரலில் ரசனையாக சொன்னதும் அவள் முகம் சிவந்தது.

     “ஏன் இந்த சேலைல என்னைப் பாத்ததே இல்லையா நீ?”

     “பாத்துருக்கேன் தான். ஆனா இப்ப ரொம்ப வித்தியாசமா தெரியுற”, என்று கேட்டவனின் குரலையும் பார்வையையும் தாங்க முடியாமல் முகம் சிவந்து போனாள். அவளது சிவந்த முகத்தைப் பார்த்தவன் அவள் கை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.

     அவன் செய்கையைக் கண்டு அவள் திகைத்து விழிக்கும் போதே அவளை இறுக அணைத்துக் கொண்டான். முதலில் தடுமாறினாலும் பின் அவன் அணைப்பில் ஒன்றிப் போனவளின் கைகளும் அவன் முதுகை வளைத்துக் கொண்டது. அவன் கரங்கள் அவள் இடையில் பதிந்திருக்க அவள் உடல் முழுக்க சிவந்தது.

     மெதுவாக அவளை விட்டு விலகியவன் அந்தக் அணைப்பை விலக்காமலே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவன் செய்கையை நம்ப முடியாமல் அவள் தன்னுடைய பெரிய விழிகளை விரிக்க அவள் முகத்தை மேலும் அருகே இழுத்து இரண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். ஒரு நொடி அதிர்ச்சியாக பார்த்தவள் பின் கண்களை மூடி அவன் முத்தத்தை அனுபவித்தாள்.

     அவள் முகத்தில் இருந்த வெட்கமே அவனுக்கு போதுமானதாக இருக்க அவளை மேலும் இறுக அணைத்தான். தன்னை நினைத்து அவன் தயங்குவது புரிய முதல் முறையாக தயக்கத்துடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் பவித்ரா.

     “பவி”, என்றவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.

     “இனியும் என்னால நல்ல பையனா இருக்க முடியும்னு தோணலை டி. இன்னைக்கு லீவ் போடுறியா டி பிளீஸ்” என்று கேட்டவனின் குரலில் இருந்த ஏக்கம் அவளை அசைத்துப் பார்க்க “ம்ம்”, என்றாள்.

     “சரி லீவ் சொல்லிட்டு ரூமுக்கு வா”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல அவளுக்கு தான் உடல் எல்லாம் நடுங்கியது.

     உடனே ரிஷியை அழைத்தவள் “அண்ணா எனக்கு லீவ் சொல்லிரு”, என்றாள்.

     “சரி அம்மு, ஆனா எதுக்கு லீவ்? உடம்பு சரி இல்லையா? இல்லைன்னா ஆபீஸ் போறியா?”

     “இல்லை, இன்னைக்கு அபியும் லீவ் தான்”, என்று ஒரு மாதிரி தயக்கத்துடன் சொல்ல அடுத்து எந்த கேள்வியும் கேட்காமல் “சரி ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி விட்டு வைத்த ரிஷியின் முகம் சிரிப்பால் மலர்ந்தது. தங்கை வாழ்க்கை நல்ல படியாக மலரட்டும் என்று எண்ணிக் கொண்டான்.

     பவித்ரா பின்னிய கால்களுடன் அறைக்குள் வரும் போது அபி பால்கனியில் போன் பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு கண்ணாடி முன்பு போய் நின்றவள் சேலை பின் கழட்டி தலையில் இருந்த கிளிப் எல்லாம் கழட்டிவிட்டு மாற்றுடையை தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அபி உள்ளே வந்தான்.

     அவள் அணிந்திருந்த சிவப்பு நிற சேலை அவள் நிறத்தை தூக்கிக் காட்ட எச்சில் விழுங்கிய படியே அவளை நெருங்கினான். மாற்றுடையை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் அவன் அருகில் வந்ததும் திகைத்து நின்றாள். அவள் கையில் இருந்த உடையை பிடுங்கி கபோர்டில் போட்டவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

Advertisement