அவன் எழுந்து  கட்டில் அருகேயே  நிற்க., இவளோ கட்டிலில் நிதானமாக அமர்ந்தாள்.

     “ஏய் எந்திரி, வெளியே போ”, என்று சொன்னான்.

     இவளோ “நான் உங்ககிட்ட சண்டை போட வரல., நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க.,

      யாரைக் கேட்டு கோவில்ல உங்ககிட்ட என்னை பத்தி பேசின ஆட்களிடம்,  வீட்டுக்கு வந்து பாட்டி கிட்ட பேசுங்கன்னு ஏன் சொன்னீங்க”, என்று கேட்டாள்.

     அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக பார்க்க.,

     இவளோ நிமிர்ந்து சற்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்., “என்ன அமைதி ஆயிட்டீங்க”, என்றாள்.

நிதானமாக எழுந்து அவன் அருகே சென்றவள்,  இருவருக்கும் இடையே சிறு இடைவெளி விட்டு நின்றவள், அவனது சட்டை காலரை அழுத்தமாக இழுத்துப் பிடித்தாள்,

     சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்,

   “பாவா” என்று நிதானமாக அழைத்தவள், மீண்டும் ஒருமுறை பாவா என்று அழைக்கும் போதே அவன் கண்ணை இறுக மூடிக்கொண்டான்.

    இவளோ நிதானமாக அவன் இடதுபுறத்து தோளையும் மார்பையும் சேர்த்து தட்டி., “இந்த இடம் எனக்கு மட்டும் தான் சொந்தம்., அதே மாதிரி என்னை தவிர யாரும் இந்த இடத்தில் வர முடியாதோ, அதே மாதிரி தான்”, என்று தன்னை சுட்டிக்காட்டி, “இங்கேயும் உங்களைத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது, சத்தியமா எனக்கு லவ்வு ன்கிற கான்செப்ட் மேல நம்பிக்கை எல்லாம் இல்லாம தான் இருந்தேன்., அது ஏன் அந்த நம்பிக்கை வரல அப்படிங்கறத இங்க வந்ததுக்கப்புறம் தான் என்னால பீல் பண்ண முடிஞ்சிடுச்சு., என்னை மட்டுமே நினைச்சுட்டு இருக்க நீங்க தான் காரணம்., ஒருவேளை நீங்க உண்மையா என்ன விரும்பாம இருந்திருந்தா., நல்ல நோட் பண்ணுங்க நீங்க உண்மையிலேயே என்ன விரும்பாம இருந்திருந்தா., எனக்கு ஒரு வேலை வேற யார் மேலயாவது அட்ராக்சன் வந்திருக்கலாம்.,

    ஆனால் எனக்கு என்னுடைய லைஃப்ல, என்னோட டீனேஜ் ல அதாவது பசங்க அழகா கண்ணுக்கு தெரியுற அந்த ஸ்டேஜ்ல கூட., என்னை யாரும் அட்ராக்ட் பண்ணல., என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை நிறைய கிண்டல் பண்ணி இருக்காங்க.,

        ஆனால் எனக்கு எதுவுமே தோணல.,  ஏன் அப்பா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது கூட யாரையுமே பிடிக்கல.,  அப்பா என்னெல்லாமோ சொல்லுவாங்க., அம்மா எப்படி எல்லாமோ என்ன கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க.,  பட் எனக்கு பெருசா யாரு மேலயும் ஈர்ப்பு வரல., அட் தி சேம் டைம் இங்க வந்து நான் தப்பிச்சு வரும் போது கூட எனக்கு உங்க பேமிலி கிட்ட ஹெல்ப் கேட்கும் போது கூட., இவங்க கண்டிப்பா எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க அப்படின்னு மட்டும் தான் தோணுச்சு.,

   பட் என்னால அஃபெக்ஷனா பேச முடிஞ்சிச்சு., யாரோ தெரியாதவங்க தானே அப்படின்னு நினைக்க தோணல., அதே சேம் டைம் நவீன் கிட்ட நான் பேசும் போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா பீல் பண்ண முடிஞ்சது, ஒருவேளை அவன் கூட வளர்ந்து இருந்தா.,  மே பி அவனை தம்பி மாதிரி ட்ரீட் பண்ணி இருக்கணும் அப்படிங்கிற எண்ணம் தான் மனசுல ரொம்ப இருக்கு.,

    “நான் அவன தம்பின்னு தான் சொன்னேன்., பட் உங்க கூட கார்ல ஏறும் போது,  ஐ திங்க் அண்ணா எதுக்காக சொன்னாங்கன்னு தெரியாது.,

அந்த அண்ணா என்கிட்ட சொன்னது, அவன் கோபக்காரன் அவன் கிட்ட எதுவும் பேசிறாத, கோவப்பட்டுருவான் அப்படின்னு சொன்னாங்க., அது மட்டும் இல்லாம நீ யாருன்னு தெரியாது., அதனால எதுவும் பேசாதன்னு சொன்னதால நானும் பேசல., பட் இங்க வந்து  மறுநாளுக்கு மறுநாள் பாட்டி என்கிட்ட எல்லாம் சொல்லும் போது.,

     ஜஸ்ட் உங்க முகம் கூட எனக்கு நிழலா தான் தெரிஞ்சுச்சு.,  பட்  நான் இப்ப சொல்றேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு., நீங்க சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டிலும் என் மனச பொறுத்த வரைக்கும் நீங்க தான் என்னோட ஹஸ்பண்ட் அப்படின்னு முடிவுக்கு நான் என்னைக்கோ வந்தாச்சு.,

    நீங்க சொல்ற முடிவுல தான் எல்லாமே இருக்கு,  நீங்க ஓகே சொன்னீங்கன்னா.,  மேரேஜ் பண்ணிக்கலாம், இல்ல அப்படின்னா நான் வெயிட் பண்றேன்”, என்று அவள் சொல்லும் போதே அவள் கையை அவனிலிருந்து பிரித்து விட்டவன்.,

      “நீயா எல்லா முடிவும் பண்ணா போதுமா., நான் எதுவுமே முடிவு பண்ண வேண்டாம் ன்னு நினைக்கீற, எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க தோணலை,  எனக்கு உன்னை பிடிக்கலை, மே பீ அந்த துளசி ன்ற பேரு தான் எனக்கு புடிச்சிருந்துச்சு., பாட்டி கதை சொன்னாங்க.,  அவங்க கதை சொன்னாங்க ன்னு இன்னொரு தடவை வந்த  இருக்கு, பாவா ன்னு கூப்பிட்ட பல்ல கழட்டிடுவேன்”, என்று கோபமாக அவன் சொன்னான்.

இவளோ அவனே பார்த்தபடி மீண்டும்,  அவன் சட்டையை இழுத்து பிடித்தவள்.,  “நான் அப்படித்தான் சொல்லுவேன், பாவா பாவா பாவா” என்று மூன்று முறை சொன்னாள்.

       அவளையே முறைத்துப் பார்த்தவன்., “உனக்கு பைத்தியம் எதுவும் பிடிக்கலையே., ஒழுங்கா லண்டன் கிளம்பி போற வழிய பாரு”., என்று சொன்னான்.

       அவன் அருகில் மீண்டும் நெருங்கி நின்றவள், “பாவா நீங்க சொன்னாப்ல நான் போக மாட்டேன்., நீங்க சொல்லியா நான் இங்க வந்தேன், இல்ல இல்ல,

    நம்ம விதி என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கு. எங்க அப்பா நினைச்சிருந்தா லண்டனில் கல்யாணத்த பேசி இருந்திருக்கலாம்.,  பட் என்னோட வீதி தான் என்ன இந்தியா கூட்டிட்டு வந்ததா நானும் என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கேன்,

       பிரெண்ட்ஸ் கூட நான் கிளம்புவதற்கு முன்னாடி, இந்தியா போறது கூட  நல்லதுக்கு தான் அப்படின்னு சொன்னாங்க., அது எவ்வளவு பெரிய உண்மைன்னு இங்க வந்ததுக்கப்புறம் தான் புரிஞ்சுகிட்டேன்., சோ நீங்க என்ன சொன்னாலும் சரி நான் பாவா ன்னு தான் கூப்பிடுவேன்”, என்று அழுத்தி சொன்னாள்.

     மீண்டும் அவள் கையை தட்டி விட்டவன்., லூசு மாதிரி உளராதே,  எனக்கு அந்த துளசிங்கற பேரு தான் என்னோட மைண்ட்ல நிக்கிற பெயர்., இந்த உருவம் கிடையாது, அதே பெயரில் பொண்ணு கிடைக்கும்.,

    அப்படியே கிடைக்கலைன்னா கூட, என் மைண்ட்ல ஒரு பொண்ண பார்த்தவுடனே இதுதான் பொண்ணு ன்னு பிக்ஸ் ஆச்சுன்னா., அந்த பொண்ணு பேரை வேணா துளசி ன்னு மாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்., கண்டிப்பா உன்ன பண்ண மாட்டேன்”, என்று சொன்னான்.

சற்று முகம் மாறினாலும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்.,

      சிரித்தபடி “அப்படின்னாலும் ஓகே பாவா, இவ்வளவு நாள் உங்க மனசுல துளசி அப்படிங்கற ஒரு பேர் இருந்த மாதிரி., இனிமேல் என்னோட மனசுல கிருஷ்ணா ன்ற பெயர் மட்டும் தான் இருக்கும்., அதுக்காக என் மனசுக்கு புடிச்ச ஒருத்தர பார்த்து, கிருஷ்ணா ன்னு பேர் மாத்தி எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.,  நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த கிருஷ்ணா மட்டும் தான்., வேற எந்த கிருஷ்ணாவும் பக்கத்துல கூட வர முடியாது”, என்று சொன்னாள்.

அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்,  “லவ் யூ பாவா” என்று சொல்லிவிட்டு, “சீக்கிரம் நீங்கள் நல்ல முடிவு எடுப்பீங்க ன்னு  நம்புறேன்”, என்று அழுத்தமாக சொன்னவளை பார்த்தவன்.

  “பேக் பண்ணிட்டு லண்டன் கிளம்புற வழிய பாரு” என்று சொன்னான்.

     “அத நீங்க சொல்லக்கூடாது பாவா, இந்த வீட்டு தாத்தாவும் பாட்டியும் சொல்லணும்., சரிங்களா பாவா”, என்று பேச்சுக்கு பேச்சு பாவா பாவா என்று அழைக்க தொடங்கி இருந்தாள்.

      அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து திரும்பப் போனவள்., மீண்டும் அருகில் வந்து அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு., அவன் நெஞ்சில் தலை சாய்த்து நின்று கொண்டாள்.

   சற்று நேரம் அப்படியே அமைதியாக இருந்தவள், “லவ் யூ பாவா” என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

     லேசாக எம்பினால் அவனை முத்தமிட்டு விடலாம் என்ற நிலையில் இருக்கும் போது, அவள் யோசனையோடு நின்றாள்.

    அவளை காயப்படுத்தும் நோக்கத்தோடு, அவன் அவளை தள்ளிவிட்டு இதெல்லாம் உங்கள் லண்டன் பழக்கம்., இந்த ஊர் பொண்ணுங்க பழக்கம் கிடையாது .,எனக்கு இந்த மாதிரி பொண்ணுங்க தேவையில்லை”, என்று சொன்னான்.

     ஒரு நிமிடம் மனசு சோர்த்து நின்றாலும்,  அவனை நிமிர்ந்து பார்த்தவள்,  சிரித்தபடி சொன்னது, “பாவா நீங்க சொன்ன மாதிரி, நான் லண்டன்ல வளர்ந்த பொண்ணு தான், ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் என் கை என் பிரண்ட்ஸ் கையைத் தவிர யார் கையும் தொட்டது கூட கிடையாது., தொட்டு பேசினது கூட கிடையாது, நான் மொத மொதல்ல கையைத் தொட்டு பேசின ஜென்ஸ் அப்படின்னா, அது நீங்க மட்டும் தான், ஏன்னா உங்களை மட்டும் தான் என்னால தொட முடியும், வேறு யாரையும் என்னால தொட்டு பேச முடியாது, வேற யாரையும் கட்டி பிடிக்க முடியாது ,வேற யார் நெஞ்சில் ம் தல சாய்ச்சிக்க முடியாது.,  இதுதான் உண்மை,  எனக்கு  அப்ப புரிந்தது, அது மட்டும் இல்லாம இப்ப நல்லாவே புரிஞ்சது., எனி ஹவ் பாவா நீங்க விலகி  போனா கூட நான் இப்படியே தான் வருவேன்.,  நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க.,  நீங்க சொன்னீங்களே வேற ஒரு பொண்ண பார்த்து பேர் மாத்தி கல்யாணம் பண்ணுவேன் ன்னு, அப்படி இன்னொரு பொண்ண நீங்க கல்யாணம் பண்ற வரைக்கும் நான் இப்படியே தான் இருப்பேன்”, என்று சொன்னாள்.

அவனும் அவளைப் பார்த்து  நக்கலாக சிரித்தபடி,  “உன்னோட வீசா மூணு மாசத்துல முடிஞ்சிடும், பெட்டிய கட்டிட்டு கிளம்புற வழியை பாரு”, என்று சொன்னான்.

      “என்னோட விசாவை என்ன பண்ணனும் எனக்கு தெரியும்., நான் மொத்தமா லண்டன் சிட்டிசன்ஸிப் இப்பவே கேன்சல் பண்ணிட்டு இந்தியாவுக்கு வந்துருவேன்., அதை நான் எப்படி பண்ணனுமோ, அப்படி பண்ணிக்கிறேன், நீங்க உங்க வேலைய பாருங்க பாவா, அப்புறம் பாவா ஐ லவ் யூ, நீங்களும் என்னை லவ் பண்றத பத்தி நல்லபடியா ஒரு முடிவுக்கு வாங்க., நான் கொஞ்சம் நல்ல பொண்ணு தான், ஆனா உங்க விஷயத்துல ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு எல்லாம் இல்ல, கெட்ட பொண்ணு பாவா, நீங்க எனக்கு மட்டும் தான் அப்படின்னு நான் எப்பவோ  முடிவுக்கு வந்துட்டேன்., சோ நீங்க தான் இனிமேல் கொஞ்சம் உங்களை மாத்திக்க ட்ரை பண்ணனும்., ஓகே பாவா பய்”, என்று  ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டவள்., கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

      இறங்கி வந்தவளை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க,  அவளோ எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

    அவள் இருந்த  நிலையில் யாரிடமும் பேசும் மனநிலை இல்லை என்பது அவளுக்கே புரிந்தது.

   அவன் சில வார்த்தைகள் கடுமையாக பேசி, இவளை ஒதுக்க நினைத்த நேரங்களில் இவள் மனது அடி வாங்கினாலும், 19 வருட அவனது காத்திருப்பின் வலி அவனை கோபப்பட வைக்கிறது, நாம் தான் பொறுமையாக போக வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

    வெளியே வீட்டு பெரியவர்கள், ‘என்ன ஆச்சுன்னு தெரியலையே’ என்று பதட்டமாக இருந்தனர்.

    “ஒன்னு அவன் மேல இருந்து கீழ வந்து பேசணும்., இல்ல இவ ரூமுக்குள்ள இருந்து வெளியே வந்து பேசணும்., யார் பேசுவா ன்னு தெரியலையே”, என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

     அவளோ அறைக்குள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பெரியவர்களிடம் யாரிடம் எதுவும் பேசப் போவதில்லை, எதுவும் சொல்லப் போவதில்லை.,

   ஆனால் அதற்கு தகுந்தார் போல, முடிவு எடுக்க அவள் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.,