9
துளசியை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.
பாட்டி வந்தவர்களை உறவினர் என்று அறிமுகப்படுத்தி விட்டு.,
“உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்”, என்று சொன்னார்.
அவர்களும் அவர்கள் வந்த விஷயத்தை உடைத்து பேச தொடங்கினர். “உனக்கு லண்டன்ல பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு கல்யாணத்தை நிறுத்திட்ட ன்னு கேள்விப்பட்டோம்.,
இப்ப லண்டன் போற வரைக்கும் இங்க இருக்க போறதா வெளியே சொன்னாங்க”, என்று சொன்னார்.
அவர்களை கேள்வியாக நோக்கியவள்., “இதெல்லாம் யார் சொன்னா”, என்று சற்றே கோபமாக கேட்டது போல் இருந்தது, அவளது குரல்.
மீண்டும் தன்னை அமைதிப்படுத்திக் கொள்ள அவள் முனைவது சுத்தி இருந்தவர்களுக்கு தெரிந்தாலும்., வந்தவருக்கு புரியவில்லையோ என்னவோ மீண்டும் பேச தொடங்கினார்.
“இல்லம்மா கோயில்ல பார்க்கும் போது சொன்னாங்க, சரி அதான் எங்க உறவு பையன் சிங்கப்பூர்ல ஒர்க் பண்றான்., அவனும் இப்ப கோவிலுக்கு வந்திருந்தான், எங்க வீட்டுக்கு ரொம்ப சொந்தக்கார பையன்ம்மா., செட்டில் ஆனது சிங்கப்பூர்ல அதான் கேட்டோம், அவனுக்கும் பிடிச்சிருக்குன்னு சொன்னான் அதான்., பொண்ணு கேட்டு வந்தோம்”, என்று சொன்னார்.
அமர்ந்திருந்தவள் வேகமாக எழும்பவும்,
நவீன் தான் அவள் கையைப் பிடித்து அமர வைக்க முயற்சி செய்தான்,
“விடு” என்று அவனிடம் சத்தமாக சொன்னவள்.,
“ஓ அப்புறம்” என்று அவரிடம் நக்கலாக கேட்டாள்.
அவரும் “என்னம்மா” என்று அன்பு பொழிய கேட்டார்.
“இல்ல உங்க வீட்டு பையனுக்கு பிடிச்சிருக்கு, ஓகே அப்புறம்”, என்று மீண்டும் ஒருமுறை கேட்டாள்.
அவரோ, “இல்லம்மா அதான் ஜஸ்ட் உங்க வீட்ல வந்து கேட்கலாம்னு”,என்றார்.
“யாருக்கு புடிச்சிருந்தாலும் வீட்டில் வந்து கேட்க வந்துவிடுவீர்களா?, என்ன நெனச்சிட்டு இருக்கீங்க, எனக்கு புடிச்சிருக்கா, பிடிக்கலையா ன்னு நான்தான் முடிவு பண்ணனும்., அடுத்தவங்களுக்காக நான் என்னோட லைஃபை சாக்ரிஃபைஸ் பண்ண முடியாது., அது மட்டும் இல்லாம இது என்னோட வாழ்க்கை., நான்தான் முடிவு பண்ணனும், எங்க அப்பா பார்த்த மாப்பிள்ளைவே நான் வேண்டாம் ன்னு சொன்னவ.,
அதுக்கான ரீசன் எதுவாக கூட இருந்திருக்கலாம் இல்லையா., எதுவுமே தெரியாம நீங்க எல்லாம் வந்து உங்க இஷ்டத்துக்கு கேக்குறீங்க., எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க., பார்த்த உடனே பொண்ண புடிச்சிருந்தா, அதுக்கு கல்யாணம் ஆகாத பொண்ண போய் கேக்கணும்., கல்யாணம் ஆன பொண்ண கேக்க கூடாது”, என்றாள்.
அவரோ அதிர்வோடு பாட்டியை திரும்பி பார்க்க., மற்றவர்களும் ஒருவரை ஒருவர் அதிர்வோடு பார்த்துக் கொண்டனர்.
இவளோ எதுவும் பேசாமல்., “சரி உங்களுக்கு வீட்ல வந்து கேக்குற ஐடியாவை யார் கொடுத்தா” என்று நிதானமாக கேட்டாள்.
அவரும் பாட்டியை பார்த்தபடி, “தப்பா எடுத்துக்காதீங்க, நான் வந்து இந்த விஷயத்தை கோவில்ல வச்சே கிருஷ்ணா தம்பி கிட்ட பேசினேன்., கிருஷ்ணா தான் வீட்ல வந்து பாட்டி ட்ட பேசிக்கோங்க ன்னு சொன்னாப்ல, அதனால தான் வீட்டுக்கு வந்தேன்”, என்று சொன்னார்.
அதுவரை முந்தனையை கையில் பிடித்த படி அமர்ந்து இருந்தவள்., எழுந்து சொறுகியபடி “எங்கடா அவரு” என்று நவீனை பார்த்து வேகமாக கேட்டாள்.
குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அவளது டென்ஷனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைவரும் அவளை யோசனை பார்வையோடு பார்த்தனர், அவளோ, அத்தனை கோபத்தையும் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றாள்.
அவளோ நவீனை பார்த்துக் கொண்டிருக்க., நவீன் தான் “மாடியில் லேப்ட் சைட்ல இரண்டாவது ரூம்”, என்று மெதுவாக சொன்னான்.
“தப்பா எடுத்துக்காதீங்க, அவங்க அப்படித்தான் பேசுவாங்க, ஆனா நீங்க வந்தது தப்பு., சோ சாரி,
ப்ளீஸ் நீங்க சொந்தக்காரங்களா பாட்டி வீட்டுக்கு என்ன வேணாலும் வாங்க., ஆனா என்ன பத்தி பேசுறதுக்கு இங்க யாருக்கும் நான் உரிமை கொடுக்கல”, என்று சொன்னவள்,
“நீங்க பாத்துக்கோங்க பாட்டி, சாரி உங்க வீட்டுக்கு வந்தவங்கள நான் கோபமா பேசுனது தப்பு தான்., அகைன் சாரி, சாரி சார் நீங்க என்ன பத்தி என்னோட அனுமதி இல்லாம பேசுறது தப்பு தான்றத நீங்க புரிஞ்சுக்கணும் என்பதற்காக தான் இந்த கோபம்., சோ ரியலி சாரி”, என்று சொன்னவள்.
வேக வேகமாக மாடி ஏறுவதை பார்த்தவர்கள்,
நவீனிடம் “ஏண்டா ரூமை சொன்ன”, என்று கேட்டனர்.
“இப்பவாவது அவங்க ரெண்டு பேரும் பேசட்டும் பாட்டி., பேசாம இருங்க, ஒரு வகையில இந்த அங்கிள் வந்தது கூட நல்லது தான் போல., தேங்க்ஸ் அங்கிள்”, என்று சொன்னான்.
அவரோ இவர்களை பார்த்து என்ன விஷயம் என்று தெரியாமல் முழித்தபடி அமர்ந்திருந்தார்.
பாட்டியிடம் “அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்ன”, என்று கேட்டார்.
நவீனும் “இருக்கலாம் இல்லையா, நமக்கு தெரியாம கூட இருக்கலாம், லண்டன்ல இருந்தவங்க, லண்டன் மாப்பிள்ளை எதுக்கு வேண்டாம்னு சொன்னாங்கன்னு தெரியாது தானே, மே பி அவங்க சொன்ன மாதிரி கல்யாணம் ஆன பொண்ணா இருந்தா வேண்டாம்னு சொன்னது கரெக்ட் தானே”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அனைவரும் குழப்பத்தோடு நவீனை பார்க்க., “எனக்கு ஒன்னும் தெரியாது, அவங்க சொன்னத வச்சு சொல்றேன்”,
என்று சிரித்தபடி சொன்னவன்.
“அலமேலு ஆன்ட்டி சூப்பரா ஸ்வீட்ட அதிகமா போட்டு ஒரு பாயாசம் ரெடி பண்ணுங்க”, என்று சொன்னான்.
வீட்டிற்கு வந்தவர்கள் சொல்லிக் கொண்டு கிளம்பிய பின்னர்.,
அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.,
“எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்” என்று அனைவரையும் பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
கதவை திறந்த கலையோ,
“டேய் நீ போய் என்னன்னு பாத்துட்டு வாயேன்”, என்று சொன்னார்.
அவனும் “வருவாங்க வருவாங்க, பேசாம இருங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையை போய் பாருங்க, அலமேலு ஆன்ட்டி நல்ல பாயாசமா வைங்க”, என்று சொன்னான்.
மீண்டும் அவனது அறைக்கு சென்றவன், கை கூப்பி கண்ணை மூடி., ‘கடவுளே எதுவாக இருந்தாலும், நல்ல முடிவை கொடு, அவங்க எதுக்கு மேல போனாங்கன்னு தெரியாது, நான் அவங்ககிட்ட என்னோட மாமா பொண்ணு அப்படிங்கற உரிமை இருந்தாலும், அவங்க எங்க எங்க அண்ணனுக்கு இல்லாம போயிருவாங்களோ ன்ற பயம் தான் அவங்க கிட்ட என்ன சிடுசிடு ன்னு பேச வச்சது, பட் நான் அவங்களுக்கு நல்ல பிரண்டா இருப்பேன்., அவங்க சொன்ன மாதிரி அவங்களுக்கு தம்பியா கூட இருப்பேன்., ஆனா அவங்க எங்க அண்ணனுக்கு வொய்ப்பா வரணும் அதுதான் முக்கியம் கடவுளே, எப்படியாவது சேர்த்து வைத்திரு, பாட்டி கதை சொல்லியும் ஒரு ரியாக்ஷன் இல்லையே என்று நினைத்தேன்., ஆனா இன்னைக்கு ஒரு ரியாக்ஷன் வந்திருக்கு., அந்த ரியாக்ஷனுக்கான முடிவு நல்ல முடிவா இருக்கணும்’, என்று கை கூப்பி வேண்டியவன்.,
‘கடவுளே கடவுளே, இது மட்டும் நடந்துச்சுன்னா, நாளைக்கு மறுபடியும் ஒரு பூஜை கொடுத்துடுவோம், ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் இதை மட்டும் செஞ்சி கொடுங்க கடவுளே, பாட்டி ட்ட பூஜைக்கு கொடுக்க சொல்றேன்”, என்று மறுபடியும் புலம்பிக்கொண்டே வெளியே ஓடி வந்தவன்.,
“பாட்டி நாளைக்கு எதுக்கும் கோயிலில் ஒரு பூஜைக்கு கொடுத்துடுவோமா”, என்று கேட்டான்.
“ஏன்டா” என்று பாட்டி கேட்டார் .
“ப்ளீஸ் பாட்டி ஏன் எதுக்கு ன்னு எல்லாம் கேட்காதீங்க, பூஜைக்கு மட்டும் ரெடி பண்ணுங்க”, என்று சொன்னவன் மீண்டும் அறைக்குள் ஓடி சென்றான்.
‘கடவுளை கடவுளை உனக்கு லஞ்சம் எல்லாம் கொடுக்கிறேன், எப்படியாவது இப்போ மேல போன ஆளு தெளிவா பேசி ஒரு முடிவோட வரணும்’, என்று கடவுளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான்.
அங்கே மேலே சென்றவளோ, அறை வாசல் வரை வந்த பிறகே சற்று பதட்டமாக உணர்ந்தாள்.
அவள் நேரடியாக இப்படி அவனிடம் பேச வர வேண்டும் என்று நினைக்கவில்லை., பாட்டியிடம் பேசிவிட்டே அதன் பிறகு வரவேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு இன்று நடந்த விஷயங்கள் கோபத்தை உண்டு பண்ணியது.
கிருஷ்ணா தான் அவர்களை வீட்டில் வந்து பேச சொன்னான் என்று தெரிந்தவுடன் சற்று அதிகமாகவே கோபம் வந்தது.,
‘ஏற்கனவே காலையில் உணவு அவள் தான் செய்து கொடுத்திருக்கிறாள் என்று தெரிந்தும், ஒரு வார்த்தை அதைப்பற்றி இல்லை., வேறு எதுவும் சொல்லவில்லை, சரி எதுவுமே இல்லை, அட்லீஸ்ட் ஒரு பார்வை அதுவும் இல்லை., இவனெல்லாம்’, என்று மனதிற்குள் நினைக்கவும்.,
மனசாட்சியோ ‘ஏன் நீ மட்டும் அவன பார்த்தியா, பாக்கல இல்ல., எல்லாரும் பாக்குறாங்களான்னு லேசா பார்வை பாத்துட்டு ஓரக் கண்ணால லேசா தானே பார்த்த., நீ மட்டும் நேருக்கு நேரா அவன் மூஞ்ச பாத்தியா இல்ல தானே’, என்று கேட்டது.
‘எனக்கு வெட்கமாக இருக்கும் இல்ல’, என்று மனசாட்சியிடம் பேசிக் கொண்டிருந்தவளோ,
‘அய்யோ ரூம் வாசல் வரை வந்து விட்டோம், கதவை தட்டுவோமா, வேண்டாமா’, என்று யோசித்தவள்.,
மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘இல்ல இவனை இப்படியே விட்டா, அடுத்து இன்னொரு மாப்பிள்ளை வீட்டுக்காரன் வந்து நிப்பான்., அதெல்லாம் சரிப்பட்டு வராது., இவங்க ட்ட இன்னைக்கு பேசிய ஆகணும்’, என்ற முடிவோடு கதவை தட்டினாள்.
“கதவு திறந்தாண்டா இருக்கு”, என்று சத்தம் கொடுத்தான். தன் தம்பி என்ற நினைவோடு.
ஆனால் கதவைத் திறந்து கொண்டு வந்து நின்றவளை பார்த்தவுடன்.,
அவனுக்கு ஒரு நிமிடம் ‘தன் முன்னால் நிற்பது அவள் தானா’ என்றும் தோன்றியது. கண்ணை மூடி திறந்து மீண்டும் அவளை பார்த்தான்.
அவளோ எதுவும் பேசாமல் கதவை சாத்தினாள்,
அவனோ, “இல்ல இப்ப எதுக்கு கதவு சாத்துற, வெளியே போ முதல்ல”, என்று சொன்னான்.
அவளோ நிதானமாக அருகில் வந்தாள்.