“கிளம்பிட்டேன் பாட்டி” என்று உள்ளே இருந்து மெதுவான குரலில் சத்தம் வந்தது.

    அது மட்டுமல்லாமல் அவள் வெளியே வரவும் அவளுடைய அப்பா பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தது.

     அவர்கள் வருவதை பார்த்தவுடன் கலையை நிமிர்ந்து பார்க்க.,  கலையோ அவள் அம்மா அப்பாவையே வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

      போனில்  பேசிக் கொண்டாலும்,  எப்போதாவது விசேஷங்களுக்கு வருபவர்கள் நின்று சரியாக பேசுவது கூட இல்லை,  எங்கேயாவது பார்த்தால் யாரோ போல் பேசிவிட்டு செல்லும் பெற்றவர்களை பார்க்க சற்றே மனதில் கோபம் வந்தது.,

     அது மட்டுமில்லாமல் அண்ணன் ஊரில் இருக்கிறான், அவன் இருக்கும் போது இவர்கள்  எப்படி  வந்தார்கள் என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

     அவர்களும் உள்ளே வந்தவர்கள்., அனைவரிடமும் பேசிவிட்டு “முத்தரசு முந்தாநாள் கிளம்பிட்டான்” என்று சொன்னார்.

   அனைவருக்கும் ஒரு நிம்மதி பெரும் மூச்சு வர., அவளுக்கோ ‘அப்பா கிளம்பிட்டார்னா ஏதும் பிரச்சினை இருக்குமோ’ என்று யோசனை வந்தது.

    அதை பார்த்த கலை தான், “ஏன் துளசி ஏதோமாதிரி யோசிக்கிற” என்று கேட்டார்.

    “இல்ல ஹிட்லர் அவ்வளவு சீக்கிரம் இந்த மாதிரி போற ஆள் கிடையாது., சம்திங் ராங் அவரு அங்க போய் ஏதாவது ஏற்பாடு பண்ணி என்னை இங்கிருந்து கிளப்ப ட்ரை பண்ணுவாரு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

      பாட்டியும் “ஆமாமா ஏதோ ஏற்பாடு பண்ணுவான் நினைக்கேன், அப்படி தான் தோணுது, யார்கிட்டயோ ஏதோ பேசிட்டு இருந்தான்,  அது மட்டும் இல்லாம உனக்கு மூணு மாசம் தான் வீசா  இருக்குதாமே.,  அது முடிஞ்ச உடனே நீ திருப்பி லண்டன் போகணுமாமே”, என்று சொன்னார்.

    அவள் அறியாமல் சற்று முகம் பதட்டத்தை தத்தெடுத்துக் கொள்ள.,

    “இதையும் அப்பா சொன்னாரா பாட்டி”, என்று கேட்டாள்.

  “உங்க அப்பா உங்க அம்மா கிட்ட இப்படித்தான் சொல்லிட்டு இருந்தான்., எப்படி மூணு மாசம் கழிச்சு அவ அங்க தானே வந்தாகணும், என்று சொன்னான்”, என்று சொன்னார்.

    கேட்டவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையோடு இருக்க.,  அதே நேரம் அவர்கள் வந்த காரில் இருந்து அவளுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு வந்து உள்ளே வைத்தார் டிரைவர்.

     பாட்டி அதை இழுத்துக் கொண்டு துளசியிடம் ஒப்படைத்து., “இது உன்னோட சூட்கேஸ், உங்கம்மா எங்கிட்ட விட்டுட்டு போயிட்டா., என்கிட்ட மட்டும் சொன்னா.,  இது துளசியுடையது அவ வந்தா கொடுத்துடுங்கன்னு சொன்னா., அதுதான் எடுத்துட்டு வந்தோம்”, என்று சொன்னார்.

      ஓ என்றவள் எதுவும் சொல்லாமல் தான்  தங்கியிருந்த அறைக்குள்  தள்ளிவிட்டு மீண்டும் வெளியே வந்தவள்.,  முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.

       “என்னம்மா ஏதோ யோசிச்சிட்டு இருந்த., இப்ப டக்குனு அமைதி ஆயிட்ட”, என்று பாட்டி கேட்டார்.

    சிரித்துக்கொண்டே “உங்க பையன் ஹிட்லர்னா, உங்க பையனை எப்படி டென்ஷன் பண்ணலாம் ன்னு எனக்கு தெரியும்., நான் பார்த்துக்கிறேன்”, என்றவள்.

      “அவர் என்ன பிளான் பண்ணாலும், அதை முறியடிக்க எனக்கு பிரண்ட்ஸ் இருக்காங்க பாட்டி.,  நான் பாத்துக்குறேன், நீங்க கவலைப்படாதீங்க”, என்று சொன்னாள்.

    “அப்ப மூணு மாசம் கழிச்சு நீ போக வேண்டாம் இல்ல”, என்று தாத்தா கேட்டார்.

     “அது தெரியல, நான் பாத்துக்குறேன் பாட்டி., நான் ப்ரண்ட்ஸ் ட்ட போன்ல கேட்டுட்டு அப்புறமா சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே.,

    அங்கு எதுவுமே கேட்காதது போல அனைத்தையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

பின்பு அனைவரும் கோயிலுக்கு கிளம்ப., இவளும் அவர்கள் தாத்தா பாட்டியோடு சென்றாள்.

   கோயிலுக்கு சென்ற பிறகு நல்லபடியாக அனைத்து விசேஷங்களும் நடைபெற.,

   வயதில் இளையவர்கள் அனைவரும் வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

    “நீயும் வாங்கிக்கோ” என்று கலை சொல்லும் போது இவளும் சென்று ஆசீர்வாதம் வாங்கினாள்.

    “சீக்கிரமே உன் புருஷனுடன்  வந்து கால்ல விழனும்”, என்று சொன்னாள்.

     எதுவுமே சொல்லாதவள் அவர்களை  பார்த்து லேசாக சிரித்து விட்டு., கண்ணைக் சிமிட்டினாள்.

பாட்டியோ அவளை ஆச்சரியமாக பார்த்தார்.

எதுவும் சொல்லாமல் அவளைக் கூர்ந்து பார்க்கவும்., மெதுவாக அருகில் சென்றவள்.,

     “அப்படியெல்லாம் பார்க்காதீங்க பாட்டி., ஒன்னும் இல்ல, நான் சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு அமைதியாக நின்றாள்.

    பாட்டியோ “இவ்வளவு தானா”, என்றார்.

    “தாத்தாவும் என்னாச்சு”, என்று கேட்டார்.

    “ஒன்றும் இல்லை” என்று அவரும் சளிப்போடு சொன்னார்.

இது அருகில் இருந்தவர்களுக்கு கேட்க தான் செய்தது.

  விசேஷம்  முடிந்து அங்கேயே உணவிற்கும் ஏற்பாடு செய்திருக்க.,  அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும் போது சரி.,

விஷேசத்திற்கு பிறகான நேரங்களிலும் சரி.,
கிருஷ்ணா யோசனையோடு அமர்ந்து இருந்தான்.,

அவன் முகமே அவன் யோசித்துக் கொண்டிருப்பதை அவனை நன்கு அறிந்தவர்களுக்கு புலப்படுத்தியது.

அதே நேரம் உறவினர்கள் நிறைய பேர் கோவிலுக்கு நேராக வந்திருக்க., அதில் சில உறவினர்களின்  முக்கிய உறவு முறையில் உள்ள சொந்தக்காரர்களின் பார்வை துளசியின் மேலே படிந்து மீண்டது.

   ‘சில விஷயங்கள் யார் கண்ணுக்கு படக்கூடாது என்று விதித்திருக்கிறதோ, ஆனால் அவர்கள் கண்களுக்கு தான் சரியாக படும், அப்படி தான் சிலர் அவளை பார்ப்பதையும் அவளைப் பற்றி வீட்டில் நேரடியாக விசாரிப்பதையும்., கிருஷ்ணாவும் சரி, நவீனும் சரி, பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

     கிருஷ்ணா முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாலும்.,  நவீனுக்கு சற்றுக் கோபம் தலைதூக்கியது.

‘அது எதுவுமே தெரிந்தும் தெரியாதவளா., இல்லை உண்மையிலேயே தெரியவில்லையா’ என்ற சூழ்நிலையில் பெரியவர்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தாள்.

     இவளுக்கு பிரச்சனை வந்துவிடும் என்பதை  விட.,

   அவளை விசாரித்தவர்களின் உறவு முறையும்., அவர்கள் எதற்காக விசாரிக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு அறிந்ததாலும்., நவீன் முகம் மாறியது. கிருஷ்ணா முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும்., அவ்வப்போது அவர்களை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

அதன் பின்பு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்,

    வந்தவர்களுக்கு அவர்களுக்கு  தகுந்தாற்  போல காப்பி, டீ,  ஜூஸ்  என ஆளுக்கு தக்கபடி பரிமாறப்பட்டது.

    அதே நேரம் துளசியின் போன் அடிக்க.,

      பாட்டி தான், “துளசிமா உன்னோட போன் அடிக்குது பாரு”, என்று அழைத்தார்.

    அதில் அழகான ஒரு மியூசிக் மட்டும் கேட்க.,  உள்ளிருந்த துளசியோ,
“பாட்டி அது உங்களுக்கு தான், என்னோட பிரெண்ட்ஸ் பேசுறாங்க, எடுத்துப் பேசிக்கோங்க”, என்று சொன்னாள்.

    பாட்டியோ சிரித்துக்கொண்டே, “அவளோட பிரண்ட்ஸ் அவரிடம் தினம் பேசுவாங்க”, என்று பெருமையாக சொல்லிக் கொண்டு சென்றார்.

நவீனும் பாட்டியிடம், “அப்போ லண்டன் பிரண்ட்ஸ் வச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க”, என்று கேட்டான்.

“இல்லையா  பின்னே என்னோட எல்லாம் நல்ல பேசுவாங்க., உன்ன மாதிரி நினைச்சியா”, என்று கேட்டார்.

     “ஹலோ ப்ரண்ட் பிடிக்கட்டுமா”, என்று அவன் கேட்டான்.

    “முதல்ல நீ துளசியை ப்ரண்ட் பிடிக்க முடியுதான்னு பாருடா,  அவகிட்ட வாய் வளர்த்துட்டு, அவ பிரண்ட்ஸ் அ இவன் பிரண்டு பிடிக்க போறானாம்”,என்று சொல்லிக் கொண்டே சென்றவர்.

      போனை எடுத்து பேச தொடங்கினார். அங்கே கேட்ட கேள்விகளுக்கு இவர் பதில் சொல்ல.,  இவர் ஏதாவது கேட்க அவர்களும் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

         பின்பு “இருங்க துளசி ட்ட கொடுக்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றவர். அவள் கையில் போனை கொடுத்துவிட்டு “பேசு ” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

      அதே நேரம் துளசியின் அப்பா பாட்டியும், கலை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்,

    “என்ன ஆச்சு, நீங்க ஏதோ பேசுறிங்க முகம் சட் ன்னு மாறிடுச்சு”, என்று கேட்டார்.

     அவரும் சிரித்தபடி,  “அதெல்லாம் ஒன்னுமில்ல, நீங்க காலையில சொன்னீங்க இல்ல, மூணு மாசம் தான் விசா இருக்குன்னு, அதை பத்தி இவ கோயில்ல இருக்கும் போதே போன்  பிரெண்ட்ஸ் கிட்ட பேசி இருப்பா போல, அதான் பிள்ளைங்க போன் பண்றாங்க, அவகிட்ட  எங்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு சொல்லி இருக்காங்க, அதுக்கு தான் இப்ப இந்த பொண்ணுங்க என்கிட்ட பேசினாங்க.,  வாழ்த்து சொல்லிட்டு, பாட்டி அவள தைரியமா இருக்க சொல்லுங்க., இந்த தடவை எந்த பிராப்ளமும் வராத அளவுக்கு நாங்க இங்க பாத்துக்குறோம்.,  அதுக்கு மேல விசா ப்ராப்ளம் அவ என்ன முடிவு பண்றா  என்பதை பொறுத்து தான் நாங்க அதுக்கு மேற்கொண்டு செய்ய முடியும்.,  நாங்க அவளிடம் பேசுகிறோம்.,

அவளும், நீங்க எல்லாரும் டென்ஷனாகாம இருங்க”, என்று இதை மட்டும் தான் சொன்னாங்க ன்னு சொல்லி பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார் .,

   கேட்டுக் கொண்டிருந்த நவீனோ‌ “என்ன பாட்டி லண்டன் இங்கே செட்டில் டா”, என்று கேட்டான்.

    “ஏண்டா இருந்தா என்ன, உன் சொத்தில் பங்கு எல்லாம் கேட்க மாட்டா போ”, என்று சொன்னார்.

       “அடடா பங்கு கேட்டா, கொடுத்துட்டு  தான் மறு வேலை பார்ப்போம்,  அதெல்லாம் கொடுக்க முடியாது, கொடுக்க முடியாது”, என்று சொன்னான்.

      கலையின் அம்மாவோ, “ஏண்டா, உனக்கு ஏண்டா இந்த வாய், அவளுக்கு என்ன சொத்து இல்லாமலா இருக்கா, என் சொத்து எல்லாம் அவளுக்கு தானடா”, என்று பாட்டி சொன்னார்.

      “பாட்டி மகளுக்கும் சம உரிமை உண்டு., மகனுக்கு மட்டும் அவ்வளவு சொத்தையும் கொடுக்கலாம் ன்னு முடிவு பண்ணுனீங்க நடக்கிறதே வேற”, என்று பேசிக் கொண்டிருந்தான்.

  அனைத்தையும் கேட்டும் கேட்காதது போல அமர்ந்திருந்தாலும், கிருஷ்ணாவிற்கு பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தான்.

  அனைவரும் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு உறவினர் பெரியவர்களிடம் ஏதோ கேட்டனர்.

   அனைவரின் முகமும் ஒரு நிமிடம் மாறி தான் போனது.,

அவர்களின் முகம் மாறுவதை கண்ட நவீன் தான், “என்ன பாட்டி”, என்று கேட்டான்.

    ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர யாரும் எதுவும் சொல்லவில்லை,

     அவரும் “பெரியவர்கள் பார்த்து விட்டு நீங்கள் சொல்வது தான்”, என்று சொன்னார்.

     மற்றவர்கள் அமைதியாக இருந்தாலும், துளசி அப்பா பாட்டி தான்,  “வாய்ப்பே கிடையாது”, என்று சொன்னார்.

     “ஒரு வார்த்தை பேசி பார்ப்போமே” என்று சொல்லும்போது தான் தெரிந்தது,  அவர்கள் வீட்டு உறவில் உள்ள ஒரு பையனுக்காக துளசியை பெண் தருவார்களா என்று கேட்டது,

    சற்று நேரத்தில் அனைவர் முகம் மாற, நவீன கோபமாக இருந்தாலும் கிருஷ்ணாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

     அவன் எதுவும் சொல்லாமல், “இன்னைக்கு போவோமா, நாளைக்கு போவோமா”, என்று கேட்டான்.

      பாட்டி தான், “உதை வாங்குவ, இன்னைக்கு இரு, நாளைக்கு தான் போகணும்”, என்று சொன்னார்.

     “பார்க்கலாம் பாட்டி, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு”, என்றவன்,

     எதுவும் சொல்லாமல் தன்னறைக்கு செல்வதற்காக மாடிக்கு போகும் போது, அவர்கள் பேசுவது அவனுக்கு கேட்க தான் செய்தது.

     துளசியை பெண் தருவார்களா என்று கேட்டு வந்தவர். “அந்த பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க, அந்த பொண்ணு லண்டன் மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு  தானே இங்க வந்து உட்கார்ந்து இருக்கு,  இப்ப நீங்க கேட்டு பார்த்தா என்ன தப்பு”, என்று சொன்னார்.

   அனைவரும் அமைதி காக்கும் போதே, ‘என்ன சொல்வது என்று தெரியாமல் யோசிப்பது புரிந்தது’,

      பெரியவர்களும் ‘அவள் அனைத்தும் தெரிந்தும், இன்னும் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசவில்லையே’ என்று தோன்றியது.

      நவீனுக்கோ,  ‘இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள கூட இல்லையே’ என்ற எண்ணம் வந்தது.

அதே நேரம் அவளை அழைத்து பேசிப் பார்க்கலாம் என்று பெரியவர்களும் முடிவு எடுத்தனர்.