பாட்டி தாத்தா வெளியே சென்றவுடன்., தன் வேலைகளை கை தன்போல செய்தாலும், மனம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி சொன்ன விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் முகத்திலோ எதுவும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி வளைய வந்தாள்.
அவர்கள் சென்ற சற்று நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவள், வீட்டை சுற்றி எப்போதும் போல நடக்க தொடங்கி, அப்படியே நிழலான தோட்டத்து பகுதியில் நடந்தவள், ஒரு மரத்தடியில் இருந்த கல் போன்ற திண்டில் அமர்ந்தாள்.
கால் சோர்வாகவில்லை என்றாலும்., மனம் தன் போல சோர்வடைந்து இருந்தது.
கிட்டத்தட்ட அவர் சொல்லிய நாளிலிருந்து அவள் மனதில் சொன்ன கதைகள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது, மற்ற எதுவும் யோசிக்கக்கூட விடவில்லை அவளது மனது, இப்போதும் மரத்தில் சாய்ந்தபடி அமர்ந்தவள் அவர் சொன்னதை நினைக்கத் தொடங்கினாள்.
துளசி உன்கிட்ட பேசணும் என்று பாட்டி கேட்கும் போது,அவளுக்கு தலை சீவி பூ வைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்க பாட்டி” என்றாள்.
“வந்த அன்றே, எங்க அப்பாவுக்கும், அத்தைக்கும் என்ன பிரச்சினை, ஏன் இரண்டு ஃபேமிலியும் பேசலை ன்னு கேட்ட இல்ல, அத பற்றி உன் ட்ட சொல்லனும்”,என்றார்.
லேசான சிரிப்போடு “சொல்லுங்க பாட்டி முழுமையாக சொல்லுங்க”, என்றாள்.
அவளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டவர் ,அவள் கையை பிடித்த படி., உனக்கும், இந்த வீட்டுக்கும், உங்க அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?”, என்று கேட்டார்.
“இல்லை” என்ற படி தலையாட்டினாள்.
“உங்க அத்தையை எப்படி இங்க கல்யாணம் பண்ணி கொடுத்தாங்கன்னு எதுவும் தெரியுமா”, என்று கேட்டார்.
அப்போதும் “இல்லை” என்று மறுப்பான தலையசைப்பே அவளிடம் இருந்து கிடைத்தது.
பெருமூச்சு விட்டபடி பாட்டியோ தாத்தாவை பார்த்தார்.
தாத்தாவோ சொல்லும் படி தலையை அசைத்தார்.
“உங்க அப்பாவும், என் மகன் பெரியவனும் ரொம்ப பிரெண்ட்ஸ்., ராகவனும் முத்தரசுவும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் பிரிக்க முடியாதுன்னு சொல்ற அளவுல பிரெண்ட்ஸ்., இங்க தாத்தா ஏற்கனவே பிசினஸ் பாத்துட்டு இருந்ததால, ராகவன் காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே பிசினஸ்ல இறங்கிட்டான்., உங்க அப்பா கவர்மெண்ட் ஜாப் ல இருந்தான்.,
அப்பதான் உங்க அம்மாவை பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோம்., எங்களுக்கு பெரியவன் ராகவனுக்கு அதுக்கு முன்னாடியே நாங்க கல்யாணம் முடிச்சிட்டோம், ஏன்னா ராகவனுக்கு அவன் அத்தை பொண்ணு இருந்ததினால் படிப்பு முடிச்சிட்டான், பிசினஸ்ல தான் இருக்கானோனே கல்யாணம் ஆச்சு., உங்க அப்பா கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணினான்.
எல்லாரும் வீட்டுக்கு வந்து போய் தான் இருப்போம், குடும்பமா பேசுவோம் எத்தனையோ இடங்கள் எல்லாம் ஒண்ணா பார்த்து இருக்கோம்., உங்க அம்மாவை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமா அதே பிரண்ட்ஷிப் அப்படியே இருந்துச்சு.,
அப்ப நான் சின்னவன் கேசவனுக்கு பொண்ணு பார்த்தோம், அப்பதான் முத்தரசு தங்கச்சி கலைய கேட்கலாம் அப்படின்னு சொல்லி ராகவன் சொன்னான், எங்களுக்கும் அது சரியாவே இருக்க நாங்களும் கேட்டோம்.,
எல்லாம் பேசி முடிச்சு வச்சிருந்தோம்., அப்பதான் நீ பொறந்த நீ பொறந்த.,
நீ பொறந்தா பிறகு உங்க அப்பாக்கு பிசினஸ் பண்ணனும்னு ஆசை வந்துச்சு., அவனும் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சான்., பிசினஸ் இங்க நல்லா தான் போயிட்டு இருந்துச்சு, அந்த நேரத்துல அவன் வேலையை விட்டுட்டான்.,
நாங்க எவ்வளவோ சொன்னோம்., பிசினஸ் சைடா இருந்தாலும்., வேலை பார்க்கிறத விடாதன்னு சொன்னோம், இல்லன்னு சொல்லி முழுமூச்சா இறங்கினான்.
சரி ன்னு அத பெருசா எடுத்துக்கலை, அவனுடைய விருப்பம் ன்னு நினைச்சோம்., இடையில கொஞ்சம் நஷ்டம் ஆச்சு அப்போ ராகவன் தான் உதவி பண்ணினான். நீ பிறந்த வீட்டுக்குள்ள தான் ராகவன் உங்க அப்பா கிட்ட கேட்டான், எனக்கு உன் பொண்ண மருமகளா கொடுத்துடனும் அப்படின்னு சொல்லி கேட்டான்.
உங்க அப்பாவும், இதுல என்னடா இருக்கு இப்பவே சொல்றேன், அவ தான் உன் மருமக அப்படின்னு சொன்னான்.
நானும் அந்த நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கனும் ன்னு நினைச்சி தான், ஏற்கனவே கலைய கேசவனுக்கு கேட்டதே, இப்ப இரண்டு பேரும் இப்படி பேசின உடனே, இந்த உறவும் நீடிக்கும் நினைச்சோம், அப்படித்தான் ரொம்ப நாள் நம்பிகிட்டு இருந்தோம்., உங்க அப்பா இடையில் பிசினஸ்க்காக வெளிநாடு போறேன்னு சொல்லும் போது,
நாங்க எல்லாம் சொன்னது, நீ போ லதாவும் பிள்ளையும் இங்கே இருக்கட்டும் ன்னு தான், பஸ்ட் ஒரு வருஷம் அப்படித்தான் இருந்தான்.,
கரெக்டா உன்னோட மூணு வயசு முடிந்து, நாலாவது வயசுல தான் உங்கள கூட்டிட்டு போனான். அப்ப கூட நாங்க சொல்லும் போது என்னைக்கு இருந்தாலும் இவ உங்க வீட்டு மருமகளா இங்க தான வரப்போறா, இப்ப கொஞ்ச நாள் என் கூட அங்க இருக்கட்டுமே ன்னு கேட்டான்.
நாங்களும் அப்படி நம்பி தான், உன்ன அவன் கையில கொடுத்து விட்டோம்., அவனும் கொஞ்ச நாள் போன்ல பேச வைக்கன்னு எல்லாம் இருக்கத்தான் செய்தான்.
சின்னதுல போன புதுசுல, உன் கிட்ட அடிக்கடி பேசி இருக்கேன், ஆனா அதுக்கு அப்புறமா உன் கிட்ட பேசுற வாய்ப்பு இங்க உள்ள யாருக்குமே கிடைக்கல.,
ஏன்னா உங்களுக்கும் இங்கேயும் உள்ள நேர வித்தியாசம் ஒன்று, உங்க அப்பாவோட மாற்றம்., உங்க அப்பாவோட சம்பாத்தியம் கூடவே வெளிநாட்டு ஆசை எல்லாம் சேர்ந்து மாற தொடங்கி இருக்கலாம் ன்னு நினைக்கிறேன்.,
அப்பவும் இடை இடையில பேசுவோம், ஆனா ஊருக்கு வந்ததே இல்லை., உனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது தான் உங்க அத்தைக்கும் மாமாவுக்கும் கல்யாணம் ஆச்சு., அந்த நேரத்தில் கூட இங்க தானே இருந்தீங்க., அத்தைக்கு நவீன் பிறந்தப்ப தான் உங்களை இங்கிருந்து கூட்டிட்டு போனது., அதற்கு அப்புறம் கலை அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு தான் இருந்தா, இடையில உங்க அப்பா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்து இருக்கும் போது., அவன் வந்திருக்கிறான் என்று நாங்களும் போய் பேசிட்டு தான் இருந்தோம், அப்பதான் ராகவன் கேட்டான், என்னடா என் மருமகளை எனக்கு எப்ப தரப்போறேன்னு கேட்டான்., அப்ப தான் உங்க அப்பாவோட பேச்சு மாறுபட ஆரம்பிச்சிடுச்சு”,…
அமைதியாக நிமிர்ந்து பாட்டியை பார்த்தவள், மீண்டும் குனிந்து கொள்ள பாட்டி மீண்டும் தொடர்ந்தார்.
“நாங்களும் அவன் வாயிலிருந்து வர்ற பதிலுக்காக காத்திருந்தா., அவன் ஒரே வார்த்தையில் சொல்லிட்டான்., அவ அங்கேயே வளர்ந்துட்டா., அங்க உள்ள முறைப்படி, அங்க உள்ள கல்ச்சர் ல தான் வளர்ந்து இருக்கா., அதனால அவளுக்கு இங்க உள்ளதெல்லாம் ஒத்து வராது., இங்க உள்ள பழக்கவழக்கமும் சரி., இங்க உள்ள டிரெஸ்ஸிங் எதுவுமே அவளுக்கு செட் ஆகாது., ன்னு நினைக்கிறேன்., நாங்களும் அவளை எவ்வளவோ இந்திய பொண்ணு மாதிரி வளர்க்க தான் முயற்சி பண்ணினோம், அவ ஸ்கூல்ல இப்படித்தான் இருக்கணும்ங்கற மாதிரி சில டிரஸ்ஸிங் போடலாம் பர்மிசன் கொடுத்ததினால் அவளோட மாற்றங்கள் அங்கேயே ஆரம்பிச்சுடுச்சுன்னு சொன்னான்.,
ஆனா அத சொல்லும் போது உங்க அப்பா கிட்ட ஒரு சின்ன தயக்கமும் தடுமாற்றம் இருந்துச்சு., அப்பவே என்னால அதை புரிஞ்சிக்க முடிஞ்சுச்சு, உங்க அப்பா எதையோ எங்ககிட்ட மறைக்கிறான் ன்னு., உங்க அப்பாக்கு கொடுக்க இஷ்டம் இல்லை ன்னு புரிஞ்சதுக்கு அப்புறம் ராகவன் எதுவும் பேசல.,
ஆனா கிருஷ்ணா கேட்டுட்டான். ஏன்னா? கிருஷ்ணாவ எப்படி சொல்ல”, என்று சற்று நேரம் அமைதியாக இருந்தவர்., அவளை நிமிர்ந்து பார்த்தவர்.
உனக்கு துளசி ன்னு பெயர் வைத்ததே, நீ அவனுக்கு தான் முடிவு பண்ண அந்த நிமிஷம் செலக்ட் பண்ண பேரு, அதாவது துளசி எங்க இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு தான் அப்படி ன்ற எண்ணத்தில் தான் பெயரை வச்சோம்”, என்று சொன்னவர்.
அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொள்ள, அவள் கண்களிலோ கண்ணீர் கோர்த்தது மூச்சு விட சற்று சிரமப்படுபவள் போல தோன்றியது, குனிந்து இருந்தவள் அமைதியாக மூச்சை இழுத்து விட்டு., கண்ணை மூடி தன் கண்ணில் தேங்கிய கண்ணீரை அடக்கி கொண்டாள்.
” உங்க அப்பா இப்படி மாறுவான் ன்னு நாங்கள் நினைக்காததால, கிருஷ்ணா கிட்ட துளசி உனக்கு தான் சொல்லி சொல்லி வளர்த்தோம்., அவ என்ன படிச்சாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி, வேற எதையும் நெனச்சு நீ மாறிடாத அப்படின்னு சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ., கிருஷ்ணா இப்ப வரைக்கும் அந்த துளசி ன்ற பேர் தவிர அவனுக்கு மத்த பெண்களோட பேரை கூட அவன் யோசிச்சது கிடையாது”, என்று சொன்னார்.,
‘என்ன சொல்வது’, என்று தெரியாமல் அமைதியாக நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை., பாட்டியும் தாத்தாவும் தன் முகத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது புரிந்தாலும்.,
‘இதை எப்படி ஏற்றுக் கொள்வது, எப்படி தன்னை சம நிலைக்கு கொண்டு வருவது’ என்று தெரியாமல் திணறியவள் சற்று நேரத்திலேயே மீண்டும் அமைதியாக தொடங்கினாள்.
அவளின் அமைதியை பார்த்த பாட்டியும், தாத்தாவும் அவளிடம் மீண்டும் சொல்ல தொடங்கினர்.
“கிருஷ்ணா காலேஜ் படிக்கும் போதும் சரி, அதுக்கப்புறம் பிசினஸ் எடுத்து நடத்தும் போதும் சரி, அவ மனசுல வேற யார் மேலேயும் நினைப்பு கிடையாது, அது எங்க எல்லாருக்குமே தெரியும்., அப்பதான் உங்க அப்பா இப்படி சொன்னதுக்கு அப்புறம் நாங்க அவனிடம் சொன்னோம்,
உலகத்துல பொண்ணே இல்லையாடா? நம்ம குடும்பத்துக்கு பொண்ணு கிடைக்கும், அப்படின்னு சொல்லும் போது., பொண்ணு கிடைக்கும், ஆனால் துளசி கிடைக்காது, என்று சொன்னவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.,
ஆனால் அவன் மனதில் துளசி என்ற பெயர்தான் ஆளப் பதிந்து இருக்கிறது என்பது எங்களை பொறுத்தவரை நினைப்பு., அதனால் தான் வீட்டில் எல்லோரும் சேர்ந்து துளசி என்ற பெயரில் உள்ள பெண்ணையே தேடினோம்.,
நம்ம சொந்தத்துல வேற யாரும் துளசி ன்ற பேரில் சீக்கிரம் இருக்காங்களான்னு தெரியல., அப்பத்தான் நவீன் சொன்னான்,
நம்ம அண்ணனுக்கு பொண்ணு துளசி ன்ற பேர்ல பாப்போம்., அப்படி பேரில் கிடைக்கலை னா அவங்க பேரை துளசி ன்னு மாற்றி வைத்துவிடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அதைக் கேட்ட போது எங்களை ஒரு பார்வை பார்த்தானே ஒழிய அதற்கு சரி என்றும் சொல்லவில்லை., வேண்டாம் என்றும் சொல்லவில்லை.,
அவன் மனதில் இப்போது வரை துளசி ன்ற பெயர் தான்., உருவமோ நிறமோ அழகோ அவன் என்ன கொடுத்து வைத்திருக்கிறான்., எப்படி நினைத்து வைத்திருக்கிறான்., என்பது கூட எங்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது வரை அவன் வாய் திறந்து எதுவுமே சொல்லாததால் நாங்களும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
ஆனால் பெண் பார்க்கும் படலம் இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.
அவனிடமிருந்து சரி என்ற ஒற்றை வார்த்தை கூட இதுவரை வந்ததில்லை”, என்று சொன்னார்.
அப்போதும் அமைதியாகவே இருந்தவள், சற்று பொறுமையோடு, “ஏன் பாட்டி இதெல்லாம் எங்க அப்பா பாட்டி என்ட்ட பேச தானே செஞ்சாங்க., ஒரு நாள் கூட சொல்லலையே”, என்று கேட்டாள்.
“உங்க அப்பா இத பத்தி பேச கூடாதுன்னு சண்டை ன்னு கலை சொன்னா,
உங்க அப்பா பாட்டி நான் பேத்தி ட்ட பேசுறேன் ன்னு சொன்னதுக்கு தான்., என் பொண்ணு ட்ட எதை பத்தியும் பேசக்கூடாது”, என்று சொல்லி தான் சண்டை போட்டான்.