21

   வீட்டில் விளக்கேற்றி, ஒரு மருமகளாக வந்தவளை செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வைத்தனர்.

    பின்பு அவர்களுக்கான தனிமை நேரத்திற்காக, அகிலாவிடம் சொல்லி அவளை தயார் செய்ய சொன்னார்.

   அவள் புடவையில் அழகாக கிளப்பி இருக்க., பெண்கள் அனைவரும் அந்த அறைக்கு வந்தனர்.

     பாட்டி தான், “என் பேரன் பத்திரமா”, என்று சொன்னார்.

   இவள் முதலில் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தவள், பின்பு ஆளாளுக்கு ஏதாவது சொல்லி கிண்டல் செய்தனர்.

      பத்தாதற்கு உறவினர் பெண்களும் இருந்து கிண்டல் செய்யவும்,

    “ஹலோ எல்லாரும் அமைதியா இருங்க”, என்றாள்.,

       அவள் அனைவரையும் அதட்டுவது வெளியில் இருபவர்களுக்கு லேசாக கேட்டது,

    “எல்லாரும் ரெண்டு ரெண்டு பிள்ளை பெத்து இருக்கீங்க தானே, ரெண்டு பிள்ளை இல்ல ன்னு சொல்லக் கூடாது, ஒரு பிள்ளையாவது பெத்து வச்சிருக்கீங்க இல்ல., கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு இல்ல., என்னமோ ஒண்ணுமே தெரியாத மாதிரி.,  உங்களுக்கெல்லாம் புள்ளைங்க வானத்திலிருந்து கையில் வந்து குதிச்ச மாதிரியே பேசுறீங்க.,  அப்படியெல்லாம் பேசக்கூடாது.,  எல்லாரும் அமைதியா இருங்க., இப்ப என்னை கிண்டல் பண்ணனும் ன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா”, என்று சொல்லி அதிட்டி பேசினாள்.

    அனைவரும் “ஆத்தாடி இவை என்ன பேச்சு பேசுறா”, என்று சொன்னார்கள்.

    பாட்டியோ, “என் பேரன் பாவம் தான்”, என்று சொன்னார்.

     “உங்க பேரன் பாவம்.,  இதை நீங்க தான் நம்பனும் போங்க போங்க”, என்றாள்.

   கிருஷ்ணாவின் அம்மா தான், இவளை தோளோடு அணைத்துக் கொண்டு., “அவன் பாவம் எல்லாம் இல்லை., அவன் சரியான ஆளு, இத்தனை நாள் நல்ல பிள்ளை மாதிரி அமைதியா இருந்துட்டு, இன்னைக்கு பாருங்க தாலி கட்டி முடிச்ச உடனே எல்லார் முன்னாடியும் நெத்தியில முத்தமே வேற கொடுக்குறான்”, என்று சொன்னார்.

    இவளுக்கு தான் வெட்கமாகி போனது, ‘ஐயையோ கிணத்துக்குள்ள இவங்க பையன் குடுத்த முத்தத்தை பார்த்து இருந்தாங்கன்னா, என்ன சொல்லி இருப்பாங்க’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

   அவனுடைய அறைக்கு சென்று அப்படியே அமைதியாக நின்றாள்.

  வாசல் வரை வந்தவன், கதவை சாத்தி தாழ் இட்டு விட்டு அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்.

    “பாவா” என்றாள் அதிர்வாக.,

   “நானும் கேட்க நினைச்சேன்., அது என்ன இந்த பாவா இங்க வந்ததுக்கு அப்புறம் காணாம போச்சு, என்னை அப்படி கூப்பிடவே இல்லை., அதுக்கு முன்னாடி அப்படித்தானே கூப்பிட்ட”, என்றான்.

   “ஆமா கூப்பிட்டேன், ஆனா நீங்க தான் ஒழுங்காவே ரெஸ்பான்ஸ் பண்ணலையே”,என்றாள்.

     “நான் ரெஸ்பான்ஸ் பண்ணாம இருந்தேனா, நீ தான் எல்லாத்தையும் கண்டுபிடித்த இல்ல, ஏன் என்னோட ரெஸ்பான்ஸ் கண்டுபிடிக்க முடியலையா உன்னால”, என்று கேட்டான்.

      “நான் போனதுக்கு அப்புறம் ஒரு போன் ஒரு மெசேஜ் ஏதாவது ம்ஹும்”, என்றாள்.

   அவனோ, “நீ எத்தனை போன் பண்ணுன மேடம்”, என்று  கேட்டான்.

    “நான் போன் பண்ண, எனக்கு பயமா இருந்துச்சு., அதனால பண்ணல., நீங்க ஏதும் திட்டிருவீங்களோனு., சரி உங்க கிட்ட இருந்து ஒரு மெசேஜ் ஆவது வரும்னு பார்த்தேன்., ஒரு மெசேஜ் கூட இல்ல”, என்றாள்.

    “அன்னைக்கு பேசுன்னு சொல்லி நவீன் மூலம் சொன்னேன்ல, அன்னிக்கு பேசுன இல்ல, அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு., ஏன் அதுக்கப்புறம் கூப்பிடல”, என்றான்.

   “நான் போட்டோ அனுப்பினேன், ஏன் நீங்க பார்த்ததுக்கப்புறம் கூட மெசேஜ் பண்ணல”, என்றாள்.

   “என் பொண்டாட்டி எவ்வளவு பெரிய கேடி ன்னு யோசிச்சிட்டே இருந்தேன் அது தான்”, என்றான்.

     பேசிக் கொண்டே தூக்கி வந்திருந்தவன்.,  அதன் பிறகு அவளிடம் பேசி விளையாண்டு அவளை மொத்தமாக தன்னுடையவளாக மாற்றி இருந்தான்.

    அவன் மார்பில் தலை சாய்ந்து படுத்து இருந்தவளை பார்க்கும் போது, ‘இது கனவில்லையே, நிஜமாவே இவள் என் கைக்குள்ள இருக்காளா’, என்ற எண்ணம் தான் அவனுக்கு தோன்றியது.

   அவளின் சோர்வான முகத்தை கண்டவன்., மெதுவாக அவள் தலையை கோதிக் கொடுத்து.,

   “என்ன ஆச்சு, சும்மா எல்லாம் வாய் பேச்சு தான் இல்ல”, என்று கேட்டான்.

      “பாவா, நான் உங்களை ரொம்ப நல்ல பையன் ன்னு நினைச்சேன் பாவா”, என்றாள்.

   “நான் எப்போ அப்படி சொன்னேன்”, என்றான்.

    அதன் பிறகான நேரங்கள் அனைத்தும் அவர்களுக்கானதாக மாறி இருந்தது.

அதன் பிறகான வாழ்க்கை எல்லாம் அழகானதாக மாறி இருந்தது.,

அவர்கள் இருவரின் அன்னியோன்யம் அதிகரித்து இருந்தது,

வீட்டில் பார்ப்பவர்களுக்கு தான், எந்த அளவு இருவரிடமும் மாற்றம் என்பதை உணர்ந்தார்கள்.

   அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து அவள் கருவுற்று இருப்பதை அறிந்த குடும்பத்தினர் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டனர்.

    அன்று வேலை முடிந்து வந்தவன், “என்ன பார்சல் அனுப்பியாச்சா”, என்றவன்.

    “உனக்கும், நவீனுக்கும் ரொம்ப அலைச்சலா, வொர்க் முடிஞ்சது தானே”, என்று கேட்டான்.

    “அதெல்லாம் அனுப்பி முடிச்சாச்சு”, என்றவள்.,

    சோர்வாக தெரிவது கண்டவன்.,  “ஏன் இவ்வளவு டயர்டா இருக்குற, சாப்டியா”, என்று கேட்டான்.

    “எல்லாம் உங்களால தான் பாவா, உங்களால மட்டும் தான் இந்த டயர்னெஸ் எல்லாம் வருது”, என்று சொன்னாள்.

   “நான் என்ன பண்ணுனேன் குட்டி, நேற்று தான் சீக்கிரம் தூக்கிட்டீயே”,என்று சொன்னான்,

     “மைன்ட் போறத பாரு, நான் இத சொன்னேன்”, என்று தன் வயிற்றை தட்டி காட்டினாள்.

அவனும் சிரித்துக்கொண்டே  “நீ அலைந்து வர்றது தான் ரீசன், பேபி இல்லை”, என்று சொன்னான்.

     அவளும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டு,  “பாவா ஆறு பிள்ளை சொன்னேனே, ஒன்றுக்கே இவ்வளவு டயர்டு ஆகுதே”, என்று சொன்னாள்.

   “நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்., ஆறு கேட்ட, பர்ஸ்ட் க்கே இவ்ளோ டயர்டா இருக்கே, நல்லா யோசி”, என்றான்.

” என்ன ஆனாலும் 6 பெத்துக்கணும் பாவா”, என்றாள்.

    அவனும் சிரித்து விட்டு “கொஞ்சம் ரெஸ்ட் எடு”, என்று அவளின் சோர்வை போக்கும் விதமாக பேசி அவளை சாதாரணமாக மாற்றிக் கொண்டிருந்தான்.

           ஏழாம் மாதத்தில் வளைகாப்பு சிறப்பாக நடந்தது, அங்குள்ள போட்டோக்களை துளசியின் அப்பா பாட்டி.,  துளசியின் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

துளசியின் அம்மா,  அவள் பாட்டி இடம் தான் எல்லாத்தையும் விசாரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஏனெனில் ஒரு முறை அவள் அம்மா வைக்கும் குழம்பு போலவே பாட்டி செய்து கொண்டு இருந்தார்.

   அவள் இரண்டு வாய் சாப்பிட்ட உடனேயே அந்த குழம்பின் ருசியை கண்டுபிடித்தவள்,  யோசனையோடு பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “இந்த குழம்பு உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தா”, என்று கேட்டாள்.

    வீட்டில் அனைவரும் அவளை தான் பார்த்து இருந்தனர்.,  “கண்டிப்பா இந்த குழம்பு நீங்க பண்ணல, சொல்லுங்க”, என்று கேட்டாள்.

     அவரும், “இல்லமா உங்க அம்மா தான் சொன்னா, உனக்கு இந்த குழம்பு ரொம்ப பிடிக்கும்னு.,  அதனால அவ சொல்ல சொல்ல நான் செய்தேன்.,  வீடியோ கால்ல வந்தா”, என்று சொன்னார்.

       “ஏன் பாட்டி தேவையில்லாம அவங்க கிட்ட எல்லாம் சொல்றீங்க”, என்று கேட்டாள்.

    “இல்லம்மா, இந்த நேரத்தில் வாய்க்கு ருசியா இருக்கும் ன்னு”,என்றார்.

     “அதுக்காக கண்டிப்பா இதெல்லாம் சாப்பிடணும் கட்டாயம் கிடையாது”, என்று சொன்னாள்.

       “உங்க அம்மா ஆசைப்பட்டா, உனக்கு இந்த குழம்பு இருந்துச்சுன்னா கூட ரெண்டு வாய் சாப்பிடுவேன்னு,  சொன்னா கூடவே அப்பளம் பொரிச்சு கொடுத்தா, நல்லா சாப்பிடுவேன்னு சொன்னா,  அதுக்காக தான்,  நானே குழம்பு வச்சு கொண்டு வந்தேன், இங்க வந்து உங்க அத்தைய அப்பளம் பொரிக்க சொன்னேன்”, என்று சொன்னார்.

   “அத்தையை நிமிர்ந்து பார்க்க ,அவரோ எனக்கு தெரியாது மா.,  அம்மா தான் குழம்பு வச்சு கொண்டு வந்தாங்கன்னு,  நான் நினைச்சேன்”, என்று கலை சொன்னார்.