மறுநாள் காலை 11 மணி அளவில் கண் விழித்தவள்., தான் எங்கே இருக்கிறோம் என ஒரு நிமிடம் குழம்பி அப்போது தான் முழித்து பார்த்தாள்.
தூக்க கலக்கம் குறைய, அவளுக்கு புரிந்தது பாட்டி வீட்டில் இருக்கிறோம் என்று யோசித்தாள்.
‘நைட்டு, அய்யய்யோ பாவா ரூம்லயே தூங்கிட்டோமா., அப்புறம் எப்படி கீழே வந்தோம்”, என்று யோசித்தாள்.,
“தூக்கத்தில் எழுப்பி கூட்டிட்டு வந்து இருப்பாங்களோ., அவ்வளவு டிப் ஸ்லிப்லயா இருந்தோம்”,. என்று யோசித்துக் கொண்டாள்.
“ஓகே ஓகே அப்புறமாக கேட்போம்” என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டவள்.,
அப்படியே குளித்து, தன் வேலைகளை முடித்து வெளியே வரும்போது 12 ஆகி இருந்தது.
இவள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அத்தைகளும், பாட்டிகளும் அவளை பார்த்தவுடன் “ஏதாவது சாப்பிடுறீயா”, என்று கேட்டனர்.
“எஸ் சாப்பிடலாமே” என்று சொல்லி விட்டு வந்தாள்.
இவளை பார்த்த அலமேலு ஆன்ட்டி தான், இவளிடம் நலம் விசாரித்து விட்டு., “தோசை ஊத்தவா”, என்று கேட்டார்.
“லஞ்ச் ரெடி ஆயிட்டா, ஆன்ட்டி”, என்றாள்.
“இல்லமா இப்ப தான் ரெடி பண்ணிட்டு இருக்கேன், குழம்பு வச்சாச்சு, ஒரு பக்கம் காய் ரெடி ஆயிட்டு இருக்கு., எல்லாம் முடிச்சுட்டு தான் ரைஸ் வைக்கணும்”, என்றார்.
“ஓகே நான் அப்போ கொஞ்ச நேரம் வெயிட் பண்றேன், எனக்கு இப்ப ஒரு கப் காபி மட்டும் குடுங்க”, என்றாள்.
“வெறும் காபி மட்டும் எப்படிமா., வயிறு நிறைய ஏதாவது சாப்பிட்டுக்கோ”, என்று கட்டாயப்படுத்தி.,
“கொஞ்சமா சாப்பிட்ட பிறகு, காபி குடி”, என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
இவளோ, “எனக்கு வேண்டாம் பாட்டி”, என்று சொல்லும் போதே.,
அத்தை தான், “அதெல்லாம் இல்ல ஒரு தோசை சாப்பிட்டுட்டு., அப்புறமா காபி குடி”, என்று சொல்லி தோசை ஊற்றி கொடுக்க சொன்னார்.
தோசை ஊற்றி அவளுக்கு கொடுத்து அதன் பிறகு காபியும் போட்டுக் கொடுக்க சாப்பிட்டவள், “வயிறு ஃபுல் ஆயிடுச்சு, இப்போதைக்கு அடுத்து சாப்பிட முடியாது., அடுத்து நைட் தான் சாப்பிடுவேன்”., என்று சொல்லி விட்டு.
அவங்களோடு பேசிட்டு இருந்தேன், அங்கேயே தூங்கிட்டேன் நினைக்கிறேன்., அப்புறம் எப்படி கீழே வந்தேன்., என்று கேட்டாள்.
இவர்களோ ‘அவன் தான் தூக்கி வந்தான்’ என்று சொல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தனர்.
“தூக்கத்திலேயே நடத்தி கூட்டிட்டு வந்துட்டீங்களா., ஆனா நான் நடந்து வந்த ஃபீலே இல்லையே ,எப்படி., என்றாள்.
‘இவளே கற்பனை பண்ணி, இவளே ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்’, அப்பாடி கேள்வி கேட்க மாட்டா என்று கலை நினைத்தார்.
“உன் பிரண்ட் பேசுனா” என்று சொல்லி நேற்று பேசியதை சொன்னவர்.
“எதுவும் மெசேஜ் பண்ணி இருக்கலா, பாத்துக்கோ”, என்று சொன்னவர் அப்படியே பேச்சை மாற்றி திசை திருப்பி விட்டார்.
பின்பு அங்கு நடந்த கதைகளை பேசிக் கொண்டிருக்க, நேரம் போனதே தெரியாமல் இருக்க.,
அதற்குள் மதிய உணவு ரெடியாகி இருந்தது,
வீட்டிற்கு பெரியோர்கள் அனைவரும் சாப்பிட வந்தனர். நவீனும் கிருஷ்ணாவும் வருவதற்கு நேரம் ஆகும் என்று சொல்லி இருந்தனர்.
நாளைக்கு அவர்கள் வீட்டுக்கு செல்வதாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் பாட்டி, ‘அவன் கல்யாணம் இப்போது வேண்டாம்’ என்று சொல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
இவளோ “அது அவங்க இஷ்டம் விட்ருங்க., என்று சொன்னாள்.
“என்னம்மா நீ அவனை பேசி சம்மதிக்க வைப்ப ன்னு பார்த்தா, அது அவங்க இஷ்டம்னு சொல்ற”, என்று சொன்னார்.
“எனக்கு அங்க விசா பிராப்ளம் இருந்துச்சு., அதனால தான் அவங்களுக்கே தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணுனது, ஆனா அதுக்காக அவங்கள கட்டாயப்படுத்தி மேரேஜ்க்கு சம்மதிக்க வைக்க முடியாது”, என்று சொன்னாள்.
அதுவும் சரி தான் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.
“ஆனா அவன் கிட்ட பேசி பாறேன், ஒரே ஒரு தடவை நீ சொல்லு, ஏன் அப்படின்னு மட்டும் கேளு”, என்று கலை சொன்னார்.
“அகிலா காலையிலேயே அவ வீட்டுக்கு போயிட்டா., ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொல்லி இருக்கா”, என்றார் பாட்டி.
“ஓகே ,சரி”, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்திருந்தனர்.
இவளை சாப்பிடு என்று சொல்லும் போது., “கொஞ்ச நேரம் செல்லட்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் ஓய்வெடுக்க செல்லும் போது,
இவளோ தன் அறைக்கு சென்றவள், தான் வாங்கி வந்தவை எல்லாவற்றையும் பிரித்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய சூட்கேஷ் எதுவுமே திறக்கப்படாமல் அப்படியே ஒரு ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு., இவர்களுக்கு என வாங்கி வந்ததை மட்டும் பிரித்து எடுத்து,
கொடுக்க வேண்டியதை தனித்தனியாக எடுத்து வைத்தாள்.
அலமேலு ஆன்ட்டி தான் ஒருமுறை வந்து, “சாப்பிடுறீயா துளசிமா”, என்று கேட்டார்.
இவளோ “இப்ப வேண்டாம் ஆன்டி, பசியில்லை எனக்கு, காபி மட்டும் கொடுக்குறீங்களா., காபி அல்லது டீ எதுனாலும் ஓகே”, என்று சொன்னார்.
“சரிமா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஓய்வெடுக்க சென்றவர்கள் திரும்பி வர மணியோ நாலாகி இருந்தது.
” நீ இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கியா”, என்று கேட்டார்.
“பசிக்கல பாட்டி, அதுக்கு தான் சொன்னேன் ஒரேடியா லன்ச் சாப்பிடுறேன்னு, தோசை சாப்பிட்டு காபி குடிச்ச உடனே வயிறு கம்முனு இருக்கு”, என்றாள்.
“உன் பிரண்ட்ஸ் கிட்ட பேசிட்டியாமா”, என்று கேட்டார்.
“பேசிட்டேன் பாட்டி”, என்றாள்.
இவளுக்காகவே அலமேலு ஆன்ட்டி வடை செய்து., அதோடு டீ எடுத்துக் கொண்டு வந்தார்.
இவளும் அதை குடித்துவிட்டு, இவர்கள் அனைவருக்காகவும் வாங்கி வந்ததை எடுத்து கையில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“எதுக்கு இதெல்லாம்”, என்று சொன்னார்கள்.
“சும்மா தான், இன்னும் அங்க எல்லாம் போகவா போறேன்., போ போறதில்ல., அங்க போய் நான் வாங்க போறதும் இல்ல., அதனால தான் இது”, என்று சொல்லி அவர்களுக்கு எடுத்து கொடுத்தாள்.
“உங்க பிள்ளைங்க மூணு பேருக்கும் வாங்கிட்டு வந்தது எல்லாம் என்கிட்ட இருக்கு., அவங்க வந்த உடனே கொடுக்கலாம்”, என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
“பாரேன் இவள”, என்ற பாட்டி “பெரிய மனுசி மாதிரி எல்லாத்துக்கும் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு இருக்கா”, என்று சொன்னார்.
கலையிடம் “உங்க பெரிய பையன் எப்ப வருவாரு”, என்றாள்.
“வருவான், ஏன் கேட்குற”, என்றார்.
“கொஞ்சம் பேசணும்” என்று மட்டும் சொன்னாள்.
“என்ன கல்யாணத்தை பத்தி பேசுன்னு சொன்னதுக்கு., நான் பேச மாட்டேன் ன்னு சொன்ன”, என்றார்.
“இது கல்யாணத்தை பத்தி இல்ல அத்தை, வேற”, என்று சொல்லி விட்டு மற்ற பேச்சுகளுக்கு தாவினாள் .
எல்லா வேலையும் முடித்துவிட்டு இரவு தான் வருவான், என்று நினைத்திருந்தனர்.
அவனும் நவீனோடு 7 மணிக்கு எல்லாம் வந்து சேர்ந்திருந்தான்.,
அதன் பிறகு நவீனுடையதை எடுத்து நவீன் கையில் கொடுத்தவள்., கிருஷ்ணாவிற்குரியதை அவன் கையில் ஒப்படைத்தாள்.
“எதுக்கு இதெல்லாம்” என்றான். “நேரம் போகல, அதனால” என்று சொன்னவள்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், பேசலாமா”, என்று கேட்டாள்.
அவனும் காபியும், வடையும், வர அதை சாப்பிட்டபடி, “என்ன பேசணும்”, என்றான்.
அவனுக்கோ ‘இவ கல்யாணத்தை பத்தி பேச போற’,, ஏற்கனவே பாட்டி அம்மா எல்லாம் சேர்ந்து சொல்லி வச்சிருப்பாங்க”, என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
அவளோ தான் அங்கு பேசி வைத்திருந்த பிசினஸ் பற்றி பேச தொடங்கினார்.
பாட்டிக்களுமம். தாத்தாக்களும் .ஒரு ஓரமாக அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர்.
இவள் “பிசினஸ் பற்றி பேச வேண்டும் என்றதும்., அனைவருமே ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தனர்.,
“என்ன பிசினஸ்” என்று கலை கேட்டார்.
நவீனும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். “இவ என்ன பிசினஸ் பத்தி பேசுறா”, என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,
இவள் அங்கு நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி.,
“எனக்கு அங்க க்ளாத் வாங்குவதை விட ., இங்க பர்ச்சேசிங் ஈசியா இருக்கும் ன்னு தோணுச்சு., அது மட்டும் இல்லாம இங்க கிடைக்கிற மெட்டீரியல்ஸ், அங்க கிடைக்காது., அங்க கிடைக்கிற மெட்டீரியல்ஸ் எப்படி நம்ம வேற மாதிரி பார்க்கிறோமோ., அதே மாதிரி இங்க உள்ள மெட்டீரியல்ஸ்,
எக்ஸ்ஸ்பேலி காட்டன், அப்புறம் இங்க கிடைக்கிற சில்க் சாரீஸ், ஹேண்ட்லூம் காட்டன் சாரீஸ்., டிசைனர் சாரீஸ், இந்த மாதிரி இதெல்லாம் அங்க ரொம்ப வித்தியாசமா பார்ப்பாங்க., அது மட்டும் இல்லாம அங்க இருக்க இந்தியன் ஷாப்பில, இது கொஞ்சம் பெரிய ஷாப்., அவங்க இப்பதான் கிளாத் வாங்கி அங்க சேல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க., கிட்டத்தட்ட அவங்க வந்து ஒரு ஒன் இயரா தான், அங்க சேல் பண்றோம்னு சொன்னாங்க., ஆனா வாங்குறதுக்கு இந்தியா போக முடியல அப்படிங்கறனால., டிரஸ் மட்டும் நாங்க ரொம்ப வைக்கல அப்படின்னு சொன்னாங்க, மத்த திங்ஸ் எல்லாமே இருந்துச்சு., நானே பார்த்தேன்., அதெல்லாம் இருந்து அனுப்பி அவங்க வாங்கிக்கிறாங்க.,
பட் சாரீஸ், இந்த மாதிரி மெட்டீரியல்ஸ் அவங்க பார்த்து வாங்கணும் அப்படிங்கிறதுனால, ஜஸ்ட் இப்போ நம்ம இந்தியாவுல இருக்கிறனால, அவங்க கிட்ட நான் பேசி இருக்கேன் அவங்களும் அதை சந்தோஷமா தான் ஓகே சொன்னாங்க., இப்ப நீங்க சொல்றத வச்சு தான், நான் அவங்க கிட்ட கேட்கணும்”, என்றாள்.
அவனும் “எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்க”, என்றான்.
“மொத்த வியாபாரம் பண்ற ஒரு இடத்தில் இருந்தோ, அல்லது மேனுபேக்சரீங் பண்ற இடத்தில் நம்ம போய் செலக்ட் பண்ணி தான் அனுப்பனும்., அவங்களுக்கு தேவை வந்து அதிகம் கிடையாது., சாரீஸ், சில்க் சாரீஸ்னா அவங்களுக்கு நம்ம போட்டோஸ் அனுப்பியோ, இல்ல வீடியோ கால்ல காமிச்சோ., எந்த மாதிரி கேக்குறாங்களோ, அந்த மாதிரி சாரீஸ் செலக்ட் பண்ணனும்., செலக்ட் பண்ணிட்டு தான் அமௌன்ட் எவ்வளவு ன்னு சொல்லுவேன்., அது மாதிரி தான் பேசி இருக்கு”, என்று சொன்னாள்.
“இது எல்லாமே மேக்ஸிமம், அங்கு சேல் ஆகிறது ஃபெஸ்டிவல் டைம் சேல்ஸ் தான்., சோ ஃபெஸ்டிவல் டைம் மட்டும் நம்ம இங்க இருந்து அவங்களுக்கு வாங்கி அனுப்புற மாதிரி இருக்கும்.,
அதுக்கு பார்சல் சர்வீஸ் எல்லாம் அவங்க அவங்களுக்கு எப்பவும் பண்ற பார்சல் சர்வீஸ் காரங்களை., அவங்க போன் பண்ணி சொல்லி இருக்காங்க., அவங்க ட்ட நம்ம எடுத்து வச்சிட்டு சொன்னா., வந்து அவங்களே பேக் பண்ணி எடுத்துப்பாங்க”, என்றாள்,
“சரி பார்க்கலாம்” என்று சொன்னவன், நவீன் இடம் கடைகளை விசாரிக்கும்படி சொன்னான்.
ஏனென்றால் இவர்களுக்கும் துணி பிசினஸ்க்கும் சம்பந்தம் கிடையாது., இவர்களுடையது கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்.
“நம்ம கிளையண்ட் நிறைய பேர் இருக்காங்க, அவங்க கிட்ட விசாரிக்கலாம் நவீன்., நீ கொஞ்சம் விசாரிச்சு பாரு”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு திரும்ப இருந்தவனிடம்.,
“ஹலோ உங்களுக்கு வாங்கி கொடுத்ததை எடுத்துட்டு போங்க”, என்றாள்.
அவனும் அவளை திரும்பிப் பார்த்து, “திமிரு உனக்கு” என்று சொல்லி விட்டு பேக் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றான்.
இவளோ நவீனிடம், “என்னடா விசாரிச்சு எப்ப சொல்லுவ” என்று கேட்டாள்.
“சொல்கிறேன்” என்றான்.
“என்னடா சொல்ற, நீ இழுக்குறத பார்த்தா எனக்கு டவுட் ஆ இருக்கு, விசாரிப்ப தானே”,என்றாள்.