நவீனோ, “சரி அம்மாவும் நானும் வர்றோம்”, என்று சொல்லி விட்டு மேலே செல்லலாம் என்று நினைக்கும் போதே.,
பாட்டி அம்மா பெரியம்மா என அனைவரும் கூட வர, “இத்தனை பேருமா”, என்று சொல்லி மாடிக்கு வந்தான்.
அவர்கள் வந்து பார்க்கும் போது சாய்ந்து படுத்திருந்தவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அவளுடைய போன் மெதுவான இசையில் ஒலிக்க., அவசரமாக போனை கைப்பற்றிய நவீன் பார்த்துவிட்டு அவள் தோழிகள் என்று தெரிந்தவுடன், அவனே அட்டென்ட் செய்தான்.
” ஹலோ” என்றான்.
“மறுபுறம் இருந்த தோழியோ, நீங்க”, என்று கேட்டாள்.
” நான் நவீன்”, என்று சொன்னான்.
“ஓ சரி சரி, ஓகே, வந்துட்டேன் ன்னு மெசேஜ் பண்ணி இருந்தா., சரி கூப்பிடலாம்னு பார்த்தேன், வேற ஒன்னும் இல்ல”, என்றாள்.
“தூங்கிட்டாங்க, எழுப்ப வா”, என்றான்.
“எழுப்பாதீங்க” என்று வேகமாக அந்த பக்கம் இருந்து மறுப்பு வந்தது,
“ஏன்” என்றான்.
“இங்க வந்ததிலிருந்து, சரியா தூங்கல, ஒழுங்கா சாப்பிடல., ஏனோ தானோ ன்னு ஒரு சாப்பாடு சாப்பிட்டா., விசா விஷயம்., மற்ற விஷயமா அலைஞ்சது., அது மட்டும் இல்லாம அவ வொர்க் பண்ற இடத்துல 3 மன்த்ஸ் தான் லீவு போட்டுட்டு வந்திருந்தா., சோ அந்த வேலையை விடுறது., அதுக்கப்புறம் அவளோட ஷாப்பிங்., அது தவிர இன்னொரு வொர்க் அப்படின்னு சொல்லி எல்லாம் அலைஞ்சு மொத்தமா டயர்டு ஆகிப்போய் தான் வந்தா., நாங்க கூட பிளைட்ல போகும் போது நல்ல தூங்கிட்டே போ அப்படின்னு சொன்னோம்., எந்த அளவுக்கு தூங்குனான்னு தெரியல., இன்னும் டயர்டோ என்னவோ., தூங்கினா தூங்கட்டும்., எங்களுடைய காலை டைம்க்கு கூப்பிடுறேன்.,
அப்படின்னா உங்களுக்கு மத்தியானம், ஆகி இருக்கும் கண்டிப்பா இவ தூங்குறதுக்கு நல்ல தூங்கி எந்திரிப்பா, வந்துட்டாங்கற நிம்மதிலே நல்லா தூங்குவா., பார்த்துக்கோங்க.,
முடிஞ்சா இடையில் எழுப்பி ஏதாவது குடிக்க மட்டும் குடுங்க., ஏன்னா புட் எடுக்க மாட்டா, தூங்கும் போது”, என்று சொன்னாள்.
“சரிங்க நான் எந்திரிச்ச உடனே பேச சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு நவீன் போனை வைத்தான்.
இங்கு கேட்டவர்களுக்கு தான், இவள் அந்த அளவுக்கு தூங்காமல் அப்படி என்ன இவளுக்கு வேலை என்று நினைத்தனர்.
கிருஷ்ணாவின் பாட்டி தான், “என்னது வேலைக்கு போனாளா, வேலையை விடுறதுக்காக அது வேற கொஞ்சம் அலைஞ்சானு சொன்னாளே”, என்று கேட்டார்.
துளசியின் பாட்டியோ, “ஆமா லதா சொல்லி நான் கேட்டு இருக்கேன்., வேலைக்கு போய் இருக்கா அத்தைன்னு சொல்லுவா., படிச்ச படிப்பு வீணாக கூடாதுன்னு வேலைக்கு போறா ன்னு சொன்னா., இங்க உள்ள பிள்ளைங்க எல்லாம் 18 வயசுல இருந்தே வேலை பாப்பாங்க, அதே மாதிரி இவளும் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே சின்ன சின்ன வொர்க் எல்லாமே பண்ணுவா ன்னு சொன்னா., இங்க வளர்ந்தா இப்படித்தான் இருக்கணும்., வேலை செய்வது தப்பு கிடையாதுன்னு சொல்லுவா., அதனால நாங்களும் ரொம்ப பெருசா அதை கண்டுக்கல, ன்னு லதா சொல்லி நான் கேள்விப்பட்டு இருக்கேன்”, என்று துளசியின் பாட்டி சொன்னார்.
வீட்டில் உள்ளவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க., அவளோ நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
“இப்ப என்ன செய்றது” என்று பாட்டி கேட்டார் .
“அவளை எழுப்பி கீழே கூட்டிட்டு போய்ருவமா”, என்று துளசியின் பாட்டி சொன்னார்.
கிருஷ்ணாவின் பாட்டி தான், “சச்ச தூங்குற பிள்ளையை எழுப்பக்கூடாது., தூங்கட்டும்”, என்று சொல்லி விட்டு என்ன செய்யலாம் என்பது போல் யோசனையோடு பார்த்தார்.
நவீன் தான் “அம்மா வேணும்னா இங்க இருங்க., நானும் அண்ணாவும் வேணா கீழ போய் படுத்து கொள்கிறோம்”, என்று சொன்னான்.
கிருஷ்ணாவோ யோசனையோடு அவளை பார்த்தபடி நின்றான்.
பின்பு சிறிது நேரம் கழித்து, “அவ கீழ அவ தங்கியிருந்த ரூம் நீட்டா இருக்கா பாட்டி”, என்று கேட்டான்.
“ஆமாடா, ஏன்”, என்று கேட்டார்.
“பெட் ரெடியா இருக்கா”, என்று கேட்டான்.
“ஆமா, இருக்கு”, என்றார்.
“சரி நான் இவளை கீழ கொண்டு வந்து படுக்க வைக்கிறேன்., யாராவது அவள் கூட படுத்துக்கோங்க”, என்று சொன்னான்.
“இல்லடா, இங்க படுக்கட்டுமே, இங்கு யாராவது துணைக்கு படுக்கலாம், நீயும் இரு., நவீனுக்கு இருக்கட்டும்”., என்று அவர்கள் ஐடியா சொன்னார்கள்.
அவனோ மனதிற்குள் “இவ சும்மா இருந்தா பரவாயில்ல., பாவா ன்னு ,இவ எல்லாத்தையும் உளறி வச்சான்னா., நான் என்ன செய்வது”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,
” இல்லம்மா அதெல்லாம் சரிப்பட்டு வராது., அவ அங்கேயே தூங்கட்டும்., அங்கே தூங்கினான்னா., காலையில கூட கொஞ்ச நேரம் தூங்குனா கூட பிரச்சினை இல்ல., இங்கன்னா, யாராவது மாடிக்கும் கிழைக்குமா ஏறிக்கிட்டே இருக்கணும்., அதெல்லாம் செட் ஆகாது”, என்று சொல்லியவன்
“நீங்க போய் ரூம்ம ரெடி பண்ணுங்க”, என்று சொல்லி மற்றவர்களை அனுப்ப, மற்றவர்கள் கீழே செல்லும் போது நவீனை மட்டும் “இருடா” என்று சொன்னவன்.
“அவ போன் எடுத்துக்கோ”, என்று சொன்னான்.
போனை எடுக்கவும்., அவளை அப்படியே திருப்பி, அவன் கையில் ஏந்தியபடி தூக்கினான்., அவளோ நன்றாக சாய்ந்து மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தாள்.
நவீன் தான் அவள் தலையை சாயாத அளவுக்கு பிடித்துக் கொண்டான்.
மெதுவாக கீழே தூக்கி வரவும் கிருஷ்ணாவின் அம்மா தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.
நவீன் சும்மா இல்லாமல், “பெரியம்மா இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க., இந்த மீம்ஸ்ல எல்லாம் போடுற மாதிரி., இந்த பையன் ஒரு சிலிண்டரை கூட நகட்டி வைக்க மாட்டான். இப்ப இந்த பிள்ளையை தூக்கிட்டு வாறானே ன்னு நினைக்கிறீங்களா”, என்று கேட்டான் .
“நீ வேற சும்மா இருடா” என்று சொல்லி விட்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன், மூணு மாசம் போகட்டும், நாலு மாசம் போகட்டும் ன்னு , சொன்னான். இப்ப சின்ன பிள்ளையை தூக்குற மாதிரி., கையில தூக்கிட்டு சுத்துறானே ன்னு பார்த்தேன்., வேற ஒன்னும் இல்ல”, என்று சொன்னார்.
கிருஷ்ணாவோ திரும்பி அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளின் அறைக்குள் சென்று., அவளை அப்படியே பூ போல படுக்க வைத்தவன்., அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு., ஏசியை சரியான அளவில் வைத்து விட்டு வெளியே வந்தான்.
“கூட யாராவது படுத்துக்கோங்க”, என்று சொல்ல.,
இரண்டு பாட்டிகளும், “நாங்க ரெண்டு பேரும் படுத்துக்கிறோம்” என்று சொன்னார்கள்.
“பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு தன்னறையை நோக்கி சென்றான்.
கலையும் “அக்கா நீங்களும் போய் படுங்க”, என்று சொல்லி விட்டு.
“நீ போய் ஏன்டா இங்கே நிக்குற நவீன்.,போய் தூங்கு போ”,என்று சொன்னார்.
அவர்கள் சென்றவுடன் கலையும் கிருஷ்ணாவின் அம்மாவுமாக சேர்ந்து கதவை எல்லாம் சாத்திவிட்டு படுக்கப் போகும் முன்.,
கிருஷ்ணாவின் அம்மா தான், “அவளுக்கு தூக்கத்திலேயே எழுப்பி ஒரு டம்ளர் பால் வேணும்னா கொடுத்துடுவோமா”, என்று கேட்டார்.
“ஆமாக்கா மறந்துட்டேன் பாத்தீங்களா”, என்று என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்றவர்கள்.,
பாலை சூடு செய்து தேன் கலந்து பாலை ஆத்தினர். “கலை இதை கொடுத்தா, இன்னும் கொஞ்சம் தூக்கம் வரும்” என்று சொன்னார்.
“அந்த பொண்ணு போன்ல சொன்னாளே, சரியாவே தூங்கல, சரியாவே சாப்பிடலன்னு, சொன்னாளே, தூங்கட்டும், நல்ல தூங்கி எந்திரிச்சா பசி எடுக்கும், அதுக்கப்புறம் அவளுக்கு நல்ல சாப்பாடு கொடுத்துக்கலாம்”,என்று சொல்லி விட்டு.,
“இந்த பையன் சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதிச்சானா, வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம்., இவ அங்க வந்தா அத்தை மாமாவுமே நம்ம கூட வருவாங்க., அப்பப்போ வந்து தோட்டத்தை பார்த்துக்கலாம் ., இல்லாட்டி அப்பப்ப இதே மாதிரி எல்லாரும் சேர்ந்து இங்கு வந்து இருந்துக்கலாம்.,
இவன் கல்யாணத்தை இன்னும் மூணு மாசம் தள்ளிப்போடுறானே”, என்று சொன்னார்.
“முதல்ல நாளைக்கு சொல்லுவோம், இவ பேசுவா”, என்று கலை சொன்னார்.
இருவரும் பாலை கொண்டு வர அதன் பிறகு தான் பாட்டிக்கும் நினைவு வந்தது.,
லைட்டை மட்டும் போட்டு. விட்டு அவளை தாங்கி பிடித்தார் போல கலை நின்றார்.
கிருஷ்ணாவின் அம்மா அவளுக்கு தூக்கத்தில் லேசாக கன்னத்தை தட்டி., “பாலைக் குடி” என்று சொல்லி வாயில் வைக்கவும்.,
மிதமான சூட்டில் சாதாரணமாக பாலை குடிப்பது போல தூக்கத்தில் குடித்துவிட்டு படுத்து விட்டாள்.
கலை தான் தன் சேலை முந்தானையை வைத்து அவள் வாயை துடைத்து விட்டு, அவளுக்கு மீண்டும் போர்வையை சரி செய்து விட்டார்.
பாட்டி தான்., “பாவம் எத்தனை நாள் தூங்காமல் எப்படி கஷ்டப்பட்டாளோ”, என்று தலையை தடவி கொடுத்துக் கொண்டிருந்தார்.