அகிலாவின் கணவர் தான், “அங்க அலைச்சல் ஜாஸ்தி போல, அது மட்டும் இல்லாம சரியா தூங்கலைன்னு வரும் போது சொல்லிட்டு தான் இருந்தாங்க”, என்று சொன்னார்.

       “சரி வரட்டும், ஏதாவது சாப்பிடுறால ன்னு  கேட்டுட்டு, அப்புறம் நம்மளும் சேர்ந்து படுக்க போலாம்”, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே

இவளோ, மேலே சென்றவள், நேராக கிருஷ்ணாவின் அறையின் கதவை லேசாக தள்ள அது திறந்து தான் இருந்தது.

   சப்தமே இல்லாமல் கதவை சாத்தி தாழிட்டாள்,
அமைதியாக அவனைப் பார்க்க, கிருஷ்ணாவும் தலைக்கு கீழே ஒரு கையை வைத்து படுத்திருந்தவன், மற்றொரு கையை பக்கவாட்டில் நீட்டி படுத்திருந்தான்.

    கண் மூடியப்படியே இருந்தது, நிச்சயமாக தூங்கி இருக்க மாட்டான் என்று தெரியும்., இவள் சத்தம் செய்யாமல் அருகில் சென்றவள்.,

கட்டிலில் அமரவும், அவன் கண் விழித்தான்., அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ அவனையே சற்று நேரம் பார்த்து இருந்தவள்., பின்பு அவன் நீட்டிய கையிலேயே தலை வைத்து சாய்ந்து விட்டாள்.

    எதுவும் சொல்லாமல் அமைதியாக அப்படியே இருக்க, இவள் தான் அவன் கையில் நன்றாக தலையை வைத்து அவன் மார்பில் கையை வைத்துக் கொண்டவள்,

     “வந்துட்டேன் பாவா, உங்க கிட்ட சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டேன்.,  நீங்க என்ன நினைச்சீங்க, நான் வரமாட்டேன்னு தானே நினைச்சீங்க”, என்று கேட்டாள்.

    அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்., அவன் கையில் இருந்து தலையை நிமிர்த்தி அவன் முகத்தைப் பார்க்க., அவனோ மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக படுத்திருந்தான்.

    இவளோ அவன் மார்பில் கையை வைத்திருந்தவள், அவன் மேலே இரண்டு அடி அடித்து,  “கேட்கிறேனே பதில் சொல்றீங்களா., இப்படியே இருந்தீங்கன்னா, என்ட்ட நீங்க நிறைய அடி வாங்குவீங்க  ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னாள்.

   கண்ணைத் திறந்து குனிந்து தன் கையில் படுத்திருக்கும் அவளை தான் பார்த்தான்., அவள் முகமோ  அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

    ” ஹலோ என்ன பார்வை”, என்றாள்.

     “உன்னை யார் இங்க மேல அனுப்புனா”, என்றான்.

   “எப்ப வந்த ன்னு கேக்குறீங்களா”, என்று இவள்  கேட்டாள்.

    “அதான் வந்துட்ட இல்ல, அப்புறம் என்ன., காலையிலிருந்து இந்த வீட்ல மொத்த பேரும் வந்துருவா., வந்துருவா ன்னு சொல்லிட்டே இருந்தாங்க, நீ இங்க தான் நேரா வருவ ன்னு மொத்த குடும்பமும் என்னையும் சேர்த்து இங்க தள்ளிட்டு வந்து இருக்கு., உனக்கு இப்ப என்ன”, என்றான்.

     “ஓஹோ அதுல சாருக்கு ரொம்ப வருத்தம் போல”, என்று கேட்டாள்.

   அவனும், “ஆமா வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு உன்னால சீக்கிரமா இங்க வர வேண்டியது இருந்துச்சுல்ல”, என்று சொன்னான்.

      “ஓ அப்ப எந்திரிங்க சார், கிளம்பி உங்க வேலையை பார்க்க போங்க”, என்று சொன்னாள்.

   “ஹலோ இது எங்க பாட்டி வீடு, நீ ஒன்னும் என்னை அதிகாரம் பண்ண வேண்டாம்”, என்று சொன்னாள்.

   அவளோ உங்க பாட்டி வீடுனா, எனக்கும் பாட்டி வீடுதான் சரியா., நான் அப்படித்தான் அதிகாரம் பண்ணுவேன்., எனக்கு அதிகாரம் பண்ண உரிமையை அன்னைக்கே நீங்க கையெழுத்து போட்டு கொடுத்துட்டீங்க”, என்று அவனைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள்.

     அவனும், “அப்படியா உரிமை கொடுத்துட்டேனா”, என்றான்.

   ” ஆமா குடுத்துட்டீங்க”, என்றாள்.
“அப்ப எனக்கும் சில உரிமைகள் கிடைத்திருக்கும் இல்ல”, என்றான்.

     இவளோ “என்ன உரிமை”, என்றாள்.

    அவள் படுத்திருந்த கையை சட்டென்று மடக்கி, அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., அவளை அப்படியே இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.,

     சற்று அதிர்வோடு பார்த்தாலும்., அவன் மேலே தலை வைத்து படுத்து இருந்தவள்., மெதுவாக தலையை மட்டும் தூக்கி அவன் முகத்தைப் பார்த்தாள்.

     அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “என்ன இவ்வளவு தைரியமாக ரூம்க்கு வந்து இருக்க, நீ வேற என்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்க., நான் வேற 19 வருஷமா உனக்காக காத்துகிட்டு இருக்கேன்., அப்படித்தானே சொன்ன”, என்று கேட்டான்.

      இவளும் “ஆமா அப்படித்தான் சொன்னேன்”, என்று சொன்னாள்.

    “பின்ன ஏதாவது கசமுசா நடந்துருச்சுன்னா”, என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவளும் சிரித்துக் கொண்டே,  “நான் கதவெல்லாம் லாக் பண்ணிட்டேன். ஆனா உங்க அம்மாவுக்கு ஒரு வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கேனே”, என்றாள்.

     “என்ன சொன்ன, ஏதாவது மறுபடியும் சொதப்பி வச்சியா”, என்றான்.

   அவசரமாக அவளை தன்னில் இருந்து கீழே தள்ள பார்த்தான்.

    அவளோ அவன் மேல்  கையை வைத்து.,நாடியை கையில் பதித்து சுகமாக தலையை தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    “அதாவது  அவங்க ட்ட சொல்லி இருக்கேன், உங்க பையன் கற்புக்கு நான் கேரண்டினு”, என்று சொன்னாள்.

     “லூசு என்ன பேசணும், தெரிஞ்சுதான், பேசுறியா, இப்படி பேசி வச்சிட்டு வந்து இருக்க, நாளைக்கு என்ன பாத்தா அவங்க என்ன நினைப்பாங்க”, என்றான்.

     “ஒன்னும் நினைக்க மாட்டாங்க பாவா”, என்றாள்.

அவன் மேல் அப்படியே தலையை சாய்த்து படுத்துக் கொண்டாள்,

     “நான் இல்லாம எப்படி இருந்துச்சு, இந்த 20 நாள் ஜாலியா இருந்தீங்களோ” என்றாள்.

     எதுவும் பதில் வரவில்லை என்றவுடன் தலையை தூக்கிப் பார்க்க, அவளைப் பார்த்து சிரித்தவன்,

    அவள் கன்னத்தில் கைகளை வைத்து பிடித்தவன், அவனும் லேசாக தலையைத் தூக்கி அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். இவளோ கண்ணை விரித்து ஆச்சரியமாக பார்த்தாள்.

   “பாவா”என்று குரல் கமற அழைத்தவள், அவன் நெஞ்சில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.,

   அவன் எதுவும் சொல்லாமல் அவள் முதுகில் மேல் கையை படர விட்டு அழுத்தமாக தன்னோடு  சேர்த்து பிடித்துக் கொண்டான்.

இவளும் எதுவும் சொல்லவில்லை, அவனுடைய அணைப்பு என்ன சொல்கிறது என்பதை யோசிக்க தொடங்கினாள்.

அவன் அணைத்த வாக்கியிலேயே அவளை பக்கவாட்டில் சரித்துக் கொண்டு, அவனும் சரிந்து படுக்க , அவன் கையில் சாய்ந்திருந்தவள், சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.,

   பின்பு “பாவா நான் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டுமா”, என்று கேட்டாள்.

  அவன் எதுவும் சொல்லாமல் அவள் தோளைத் தட்டி கொடுக்க., பேச்சே வரவில்லை.,

  “என்ன இவ்வளவு நேரம் பேசாம இருக்க மாட்டாளே” என்று குனிந்து பார்க்க நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கோ அதிர்ச்சி தான்., ‘இவ்வளவு நேரம் பேசிட்டு தானடா இருந்தா’ என்று நினைத்தான்.

   பின்பு எமெதுவாக கன்னத்தை தட்டி, ‘ஒருவேளை நம் அதிரடியா முத்தம்  கொடுத்தது, கட்டிப்புடிச்சது இதுல பயந்து போய் மயங்கிட்டாளோ’, என்று யோசித்தவன்.

    “சீச்சீ இருக்காது, இவளாவாது., பயப்படுறதாவது”, என்று நினைத்தவன் மெதுவாக கன்னத்தை தட்டி அவளை எழுப்ப முயற்சிக்க.,

      அவளோ “பாவா கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்”, என்று தனது தூக்கத்தை தொடர்ந்தாள்.

   சற்று நேரம் அவளை அப்படியே பார்த்திருந்தவன்., மெதுவாக அவளை தன் கையில் இருந்து இறக்கி தலையணையில் தலையை விட்டவன்., தன் மேல் இழுத்து திரும்ப, கீழே சரித்து படுக்க வைத்ததில் நகர்ந்திருந்த டாப்பை சரி செய்து விட்டான்.

   நவீனுக்கு போன் செய்தான்., கட்டிலில் இருந்து எழுந்து கதவையும் திறந்தான்.,

   நவீனோ “என்ன பிரச்சனை தெரியலையே, சண்டை வந்துருச்சோ, என்னவோ தெரியலையே” என்று சொல்லிக் கொண்டே போனை எடுக்க வீட்டில் உள்ளவர்கள்., “என்னடா” என்று பதட்டமாக கேட்டனர்.

      அவனும் போனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டு., “என்ன அண்ணா”, என்றான்.

    “தூங்கிட்டா டா”, என்றான்.

“என்ன தூங்கிட்டாங்களா”, என்றான்.

     “நவீன் யாரையாவது கூட்டிட்டு நீ மேல கொஞ்சம் வா”,என்றான்.

    “என்ன அண்ணா, உன்கிட்ட பேசணும் வந்தாங்க,  நீ ஏதாவது சொன்னியா பயத்துல மயங்கிட்டாங்களா”, என்று கேட்டான்.

    “டேய் அடி வாங்க போற., அவளாவது, பயப்படுறதாவது அவளை பார்த்து தான் நாம பயப்படணும்”, என்று சொன்னவன்.

    கீழே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல்,  “வந்ததடா, நான் வந்துட்டேன் பாவா, நான் சொல்லிட்டு போன மாதிரியே திரும்பி வந்துட்டேன்னு, சொல்லிட்டு பக்கத்துல வந்தா, ஒன்னு ஒன்னா லொட லொட ன்னு சொல்லிட்டே இருந்தா, என்ன சத்தமே இல்ல ன்னு பார்த்தா அப்படியே தூங்கிட்டா., நான் என்ன பண்றது”, என்றான்.