‘அவள் கேட்டது உண்மை தானே, 19 வருடங்கள் சும்மா இருந்தது உண்மைதானே, ஆனால் அவள் வந்த பிறகு இவள் போய் விட்டு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏதாவது முடிவெடுக்க வேண்டும்’, என்று நினைத்திருந்ததை இப்போது நினைத்துக் கொண்டான்.
அவனிடம் பேசி விட்டு போனை வைத்தவளுக்கோ ‘ஒரு புறம் அமைதியாக சொன்னதைக் கேட்டுக் கொண்டான்’ என்றாலும்., மற்றொரு புறம் யோசனையாகவும் இருந்தது.
‘ஃபோனில் எதுவும் சொல்ல முடியாமல் நேரில் போன பிறகு ஏதும் திட்டினால்’, என்று யோசித்தவள்., ‘பாத்துக்கலாம் அங்க போய் வாங்கிக்கலாம்., நாம வாங்காததா’, என்று நினைத்துக் கொண்டாள்.
அதே நேரம் வேண்டுமென்றே தஞ்சாவூர் பெரிய கோயிலில் அவனோடு நிற்கும் போது எடுத்த போட்டோக்களை அவனுடைய செல்லிற்கு அனுப்பி வைத்தாள்.
‘பதில் ஏதாவது வருமா’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பார்க்கவும் இல்லை பார்த்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை., லூசு என்ன செய்து ன்னு தெரியலையே’ என்று யோசித்தவள், மெயில் அனுப்ப சொன்னோமே., மெயில் ரெடி பண்ணுவாங்களா இருக்கும் ‘ என்று யோசித்தாள்.
பின்பு ‘சரி பார்த்துக்கலாம்’ என்று யோசனையோடு அவள் வேலையை தொடங்கினாள்.
அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் போய் வேலை விடுவது பற்றி சொல்லிவிட்டு., தன்னுடைய அக்கவுண்ட் எல்லாம் க்ளோஸ் செய்தாள்.
ஏனெனில் வேலைக்கு சென்ற பிறகு அவள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்தது தான்.,
இங்கு எல்லோரும் 18 வயதில் வேலைக்கு போய்விடுவார்கள்., அவர்களுக்கு தேவையானது அவர்கள் சம்பாத்தியத்தில் பார்த்துக் கொள்வார்கள்.,
பெற்றோரை அதிகமாக நாடுவதில்லை அதுபோலவே இங்கிருந்து சென்ற பிள்ளைகளும் இருந்தனர்.
சில பெற்றவர்கள் தான் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மறுத்தனர்.
ஆனால் இங்கு தான் வாழப் போகிறார்கள் என்றான பிறகு வேலையெல்லாம் பழக வேண்டும் என்று விட்டு வைத்திருந்தார்,
அது போல இவள் பள்ளி காலங்களில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
அதை அவ்வப்போது அவளுடைய செலவுக்கும். தாய் தந்தையின் திருமண நாளுக்கு பரிசு வாங்கி கொடுக்க என்று செலவு செய்தாலும்., மீதியை அப்படியே சேர்த்து வைத்திருந்தாள்.
அவள் கல்லூரி படிப்பிற்கு பிறகு., நல்ல கம்பெனியிலே வேலை பார்த்துக் கொண்டிருந்ததாள்.
அந்த பணமும் அவளுடைய அக்கவுண்டில் இருந்தது.
அதை எல்லாம் எடுத்து அக்கவுண்ட் க்ளோஸ் செய்தவள், அந்த பணத்தைக் கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானதை வாங்கினாள், மீதி பணத்தை தனக்கு போகும் போது இந்தியன் மணியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கைகளில் வைத்திருந்தாள்.
இங்கு வீட்டிலோ பெரியவர்கள் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
ராகவன் தான், தன் அம்மா அப்பாவிடமும், கலை அம்மா அப்பாவிடமும் கல்யாணம் எப்போ வைக்கலாம் ன்னு யோசிக்கனும் என்றார்,
பெரியவர்களோ “நம்ம பேசி என்ன செய்ய., கிருஷ்ணா கிட்ட பேசுவோம், கிருஷ்ணா என்ன சொல்லு தான்னு பார்ப்போம்”, என்று பேசிக் கொண்டிருக்கும் போதே., நவீனும் வீட்டிற்குள் வந்து சேர்ந்தான்.
“என்ன பேசுறீங்க”, என்று கேட்டுக்கொண்டே, “ஆமா அண்ணன் மெயில் அனுப்பிட்டானா, தெரியுமா”, என்று கேட்டான்.
“தெரியலடா, ஆனா துளசி கிட்ட இருந்து எந்த போனும் வரல, என்றனர்.
“அனுப்பி இருப்பான் என்று நினைத்துக் கொண்டோம்”, என்று சொன்னார்கள்.
“சரி சரி, எப்படியோ ஒத்துக்கிட்டா சரி, ஆமா துளசி எப்படி உங்க கிட்ட வந்து சொல்லி., நீங்க போய் மீடியேட்டர் வேலை எல்லாம் பண்ணி இருக்கீங்க.,
ஆனா பாருங்களேன் யாருக்குமே தெரியல., அவ கூட வெளியே காட்டிக்கில, ஆனா நீங்க ரெண்டு கப்புள்ஸ் இருக்கீங்களே., சரியான கிரிமினல் கபுள்ஸ், ஏன் நீங்களும் ஒரு வார்த்தை கூட சொல்லல”, என்று சொன்னான்.
“ஏண்டா ஏன்? எங்கள அவன் கிட்ட மாட்டி விடலாம் ன்னு பார்க்கிறாயா? பேசாம இரு., அவன் பிடி குடுத்தே பேசல., நீ ஹெல்ப் பண்றேன்னு சொன்ன, ஆனா அவன் ஒதுங்கி போறான்னு, நீ தான் அவன நான் கட்டாய படுத்த மாட்டேனு சொன்ன., அப்புறம் நாங்க என்ன தான் பண்றது., துளசியோ எனக்கு இந்த சர்டிபிகேட் வேணும் அப்படிங்கறா., அப்ப என்ன செய்ய முடியும் அதனால தான் இறங்கிட்டோம்”, என்று சொன்னார்கள்.
நவீன் தான், “அம்மா அக்கா மாம்ஸ் போய்ட்டாங்களா வீட்டுக்கு”, என்று கேட்டான் .
“ஆமாடா அப்பவே போய்ட்டாங்க, நாளைக்கு வாரேன்னு சொல்லிட்டு போயிருக்கா”, என்று சொன்னார்.
பாட்டி தான் “ஆமாடா இதுல பாரு, அகிலா தான் அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சிட்டு இருக்கா., மாமியார் வீட்லயும் உருப்படியா இருக்க மாட்டேங்குறா, இங்கேயும் இருக்க மாட்டா., ரெண்டு வீட்டுக்கும் அலையுறா, மாப்பிள்ளையும் சேர்த்து அலைய வைக்குறா” என்று சொன்னார்.
“சரி சரி அண்ணன் கல்யாணம் முடியுற வரைக்கும் அலையட்டும்”, என்று சொன்னான்.
“ஏன்டா இப்ப தான் பேசிட்டு இருந்தோம், அவனுக்கு கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாம் னு, அவன் என்ன சொல்லுவான் தெரியலையே”, என்றார்.
“ஐயோ அண்ணன்ட்ட கேட்டுட்டு செய்ங்க, ரிஜிஸ்டர் பண்ணிட்டு சொல்லாம கொள்ளாம இருந்ததே மூஞ்ச உர்ருனு வச்சிக்கிட்டு சுத்துறாப்புல., நான் லேசா தான் பேச்சு எடுத்தேன்.,
என்னன்னா அப்படின்னு, கேட்டேன், வரட்டும் அவ அப்படின்னு சொல்லிட்டு உட்கார்ந்து இருக்காப்ல., என்ன பிரச்சனை வர போகுது ன்னு தெரியல, அதனால அண்ணா கிட்ட கேக்காம எதுவும் முடிவு பண்ணாதீங்க”, என்று சொன்னான்.
அன்று இரவு உணவுக்குப் பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அப்போது தான் வந்து சேர்ந்தான் கிருஷ்ணா,
அவன் பாட்டி தாத்தாவும் அங்கு இருப்பதை பார்த்தவன் பேசுவதற்காக அவர்களோடு சேர்ந்தே அமர்ந்தான்.
“அந்த பாட்டி, தாத்தா போயாச்சா”, என்று கேட்டான்.
“போய்ட்டாங்கப்பா” என்று பேசிக் கொண்டிருக்கும் போது தான்.,
பாட்டி ராகவனிடம், “நீயே கேளு ராகவா”, என்று சொன்னார்.,
“என்ன விஷயம்”, என்றான் கிருஷ்ணா,
“ஒரு வாரத்துல துளசி வந்துருவாளாம்”, என்றார்.
“ஓ சரி அதுக்கு”, என்றான்.
“இல்லடா முறைப்படி கல்யாணத்தை முடித்துவிடலாம் ன்னு யோசிக்கிறோம் , துளசியோட அப்பா பாட்டி தாத்தாவும் அத தான் சொன்னாங்க., கோயில்ல வைக்கணுமா., மண்டபத்தில் வைக்கணுமா., இல்லை எப்படி பண்ணனும், உன்கிட்ட கேட்கணும் இல்ல”, என்று சொன்னார்கள்.
அவனும் அவர்களை பார்த்தபடி, “என்ன விளையாட்டுறீங்களா, அவதான் யாருக்கும் சொல்லாம, ஏன் என் கிட்ட கூட பெர்மிஷன் கேட்காமல் அவளவே ரிஜிஸ்டர் பண்ணிக்கிட்டான்னா., இப்ப நீங்களும் இவ்ளோ அவசரப்படுறீங்க”, என்று சொன்னான்.
“இல்லடா உனக்கும் வயசு ஆகுது, அவ வருவதற்காக தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணினோம், இப்ப அவளே ரெஜிஸ்டர் மேரேஜ் லெவலுக்கு போயிட்டா., இப்ப நம்ம கல்யாணத்தை பேசினா என்ன”, என்று கேட்டனர்.
“அப்பா புரிஞ்சுக்கோங்க, அவசர அவசரமா எல்லாம் கல்யாணம் பண்ண வேண்டாம்”, என்று சொன்னான்.
கேசவனும் “டேய் இதுல அப்பா சொல்றதுல என்னடா தப்பு இருக்கு, அப்பா சரியா தானே சொல்றாரு, ரிஜிஸ்டர் மேரேஜ் ஆயிட்டு, ஆனா ஊர் அறிய கல்யாணம் பண்ணலாம இப்ப அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு வா ன்னு இங்கே கூட்டிட்டு வர முடியாது., முறைப்படி கல்யாணம் ஆனா தான் அவளை முறைப்படி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியும்., அதுவரைக்கும் பாட்டி வீட்டிலேயே இருக்கணும்., நீ அங்கேயும் இங்கேயும் போயிட்டு வருவியா”, என்று கேட்டான்.
“நான் எதுக்கு அங்க போறேன்”, என்றான்.
“என்னடா இப்படி சொல்ற” என்று கேட்டனர்.
“இங்க பாருங்க அவ இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிட்டா, அதுக்காக எல்லாம் நான் என்னை மாத்திக்க முடியாது, வெயிட் பண்ணுங்க., கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்”, என்று சொன்னான்.