அவசரமாக நேரத்தை பார்த்து அங்குள்ள நேரத்தை கணக்கிட்டு அழைத்து பாட்டிக்கு சொன்னாள்.
இரண்டு பாட்டி வீட்டுக்கும் தெரியப்படுத்தவும், “சரி நாங்க பார்த்துக்கிறோம்” என்று சொல்லியிருந்தனர்.
“நாளைக்கு எதுக்கும் அங்க வீட்டுக்கு போயிருங்க , அங்க இந்த மெயில் பாத்துட்டு எதுவும் பிரச்சனையாச்சுன்னா நீங்கதான் பேசணும்”, என்று இரண்டு பாட்டி, தாத்தாவிடமும் கோரிக்கை வைத்தாள்.
அதே நேரம், ‘எப்படியும் வீட்டிற்கு தெரிந்து விடும், தெரிந்த பிறகு தவறாக எண்ணக்கூடாது, அதற்கு முன் சொல்லி விடுவோமா என்று யோசித்தவள்.,
வீட்டிற்கு போன் செய்தாள், பொதுவாக நலம் விசாரித்து விட்டு, “கிருஷ்ணாவின் மெயிலுக்கு ஒரு லெட்டர் வரும், அதற்கு கிருஷ்ணாவை பதில் சொல்ல சொல்லுங்கள்., அது மட்டும் அல்லாமல் அதை பார்த்த பிறகு என்னிடம் பேச சொல்லுங்க., எனக்கு இன்னொரு லெட்டர் வேண்டும்., கிருஷ்ணாவிடமிருந்து அந்த லெட்டர் வந்தால் நான் திரும்பி கிளம்பி விடுவேன்”, என்று சொல்லி இருந்தாள்.
அவளுக்கு அங்கே அது மாலை நேரமாக இருக்க, இங்கு இரவு நேரமாக இருந்தது.
போன் செய்து சொன்னவள், ‘எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில், ஒன்று போன் வரும், அல்லது மெசேஜ் வரும்’, என்று காத்திருந்தாள்.
வீட்டில் உள்ளவர்கள் “ஏதோ லெட்டர் பார்த்து பதில் அனுப்ப வேண்டுமாம்”,என்றனர்.
வெளியில் இருந்து வந்த அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்தார் போல, “அவன் வெளி வேலையாக போய் இருக்கிறான்., இப்போது உடனே வேண்டும் என்று சொன்னாளா”, என்று கேட்டனர்.
கலை தான், “இல்லை நாளைக்கு அனுப்புனா போதும்னு சொன்னா, அவனை நாளைக்கு தான் பார்க்க சொன்னா, இப்ப அனுப்ப சொல்லல”, என்று சொன்னார்.
“சரி காலையில பாத்துக்கலாம்., ஏதாவது லெட்டரா இருக்கும்., இங்க யார்ட்டயாவது வாங்க வேண்டியது இருக்கோ என்னவோ”, என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இரவு கிருஷ்ணா லேட்டாக வர., வீட்டில் அனைவரும் தூங்கி இருந்தனர்.
யாரும் அவனுக்கு விஷயத்தை தெரியப்படுத்தவில்லை., அவனும் வந்தவுடன் நவீனிடம் முக்கியமான விஷயங்களை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டு போய் படுக்க போய் விட்டான்.
ஏற்கனவே காலையில் பார்த்து பதில் அளித்தால் போதும் என்று அவளும் சொல்லியிருந்தாள், அங்கு திரும்ப கிளம்புவதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்,அவனுடைய பதில் வந்தால், இன்னும் ஒரு வாரத்திற்குள் அவளுக்கு விசா கைக்கு வந்து விடும்., அதன் பிறகு அவள் கிளம்பலாம் என்று காத்திருந்தாள்.,
காலை அவன் என்ன அனுப்பப் போகிறான் என்று தெரியவில்லை, அதே நேரம் “அவங்களுக்கு அங்கு நடுஇரவாக இருக்குமே, ஏதும் பிரச்சினை என்றால் என்ன செய்ய என்று யோசித்தவள்.,
‘சரி எதுவாக இருந்தாலும் நம்மளுடைய அதிகாலை நேரத்தை கணக்கிட்டு அழைத்து பேசுவோம், அப்படி என்றால் அவர்களுக்கு எப்படியும் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரமாக தான் இருக்கும்’, என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
பாட்டி தான், “நாங்க இங்க வீட்டுக்கு வந்துட்டோம் மா, உன்ன கூப்பிட்டு பார்த்தேன்”, என்று சொன்னார்.
“பாட்டி இப்ப தான் எந்திரிச்சேன், இங்க இப்பதான் விடிஞ்சிருக்கு”, என்று சொன்னாள்.
“சரி நீ பாரு, நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்”, என்று மெதுவாக பேசினார்.
“என்ன ஆச்சு பாட்டி”, என்று கேட்டார்.
” இங்க அவனுக்கு தெரிஞ்சு போச்சு, வீட்ல உள்ளவர்களுக்கும் தெரிஞ்சு போச்சு, எல்லாம் தலையை பிடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கு, எப்படி இப்படி ஒரு மெசேஜ் வந்துச்சு, எப்படி இப்படி ஆச்சுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க, நீ வை, நான் அப்புறம் கூப்பிடுறேன்”, என்று சொன்னார்.
“ஏதும் பிரச்சனை னா சொல்லுங்க பாட்டி, நான் பேசுறேன்”, என்று சொன்னாள்.
“கொஞ்ச நேரம் கழிச்சு பேசு”, என்றார்.
இங்கு கிருஷ்ணாவின் வீட்டிலோ அனைவரும் சற்று அதிர்வோடு தான் அமர்ந்திருந்தனர்.
கிருஷ்ணாவின் அம்மா தான், அந்த பொண்ணு கேட்ட என்கிட்ட., கேட்டுட்டு அத்தை நான் இப்ப அங்க போயி விசா எக்ஸ்டெண்ட் பண்ணிட்டு வந்து, இங்க வந்து நான் இந்தியனா மாறுவதற்கு எனக்கு சில வேலைகள் இருக்கு, ஆனா உங்க பையன் அதுக்கு ஒத்து வரமாட்டாரு அத்த ன்னு சொன்னா, நான் கூட அது என்னம்மா அப்படின்னு கேட்டேன் ., ஒன்னு இல்ல அப்படின்னு சொல்லிட்டா”, என்று சொன்னார்.
கலையோ, “இது எப்ப அக்கா சொன்னா, என்கிட்ட எதுவும் சொல்லலையே”, என்று விசாரித்தார்.
அப்போதுதான் கிருஷ்ணாவின் அம்மா, “அவளுக்கு காய்ச்சல் வந்துச்சுல்ல, அப்பதான் சொல்லிக்கிட்டு இருந்தா”, என்று சொன்னார்.
அகிலாவின் கணவர் தான், ‘அட அந்த பொண்ணு அப்பவே பிளான் பண்ணிவிட்டதா, நமக்கு தான் தெரியாம இருந்த தா, ஆனா நம்ம கிட்ட கேட்கும் போது எல்லாம் யோசித்து முடிச்சிட்டு தான் கேட்டு இருக்கு இல்ல’, என்று யோசித்தான்.
அதே நேரம் நவீன் தான், “பாட்டி நீங்க தான் ஹெல்ப் பண்ணி இருக்கீங்க”, என்று சொன்னான்.
தாத்தாவோ, “நானும் பாட்டியும் தான் ஹெல்ப் பண்ணினோம், இப்ப என்ன., அவங்க பாட்டி தாத்தாவும் சேர்ந்து தான் ஹெல்ப் பண்ணாங்க., எங்க நாலு பேரிடமும் தான் துளசி பேசினா., கிருஷ்ணா தான் எந்த பிடியும் கொடுக்கலையே., அவ பேசி பார்த்தா., விரும்பறது தெரிஞ்சு தான் விசாரிச்சா., கேட்டா., ஆனா இவன் ஏதாவது பதில் சொன்னானா., சொல்லல தானே அதுதான் யாருக்கும் தெரியாம ரிஜிஸ்ட் மேரேஜ் பண்ணனும் னா”., என்றார்.
நவீனோ, “யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றவங்கள பாத்திருக்கேன்., ஆனா சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றத இப்ப தான் கேட்கிறேன்”, என்றான்.
கிருஷ்ணாவோ அவனை முறைத்து பார்த்தான்.
“அண்ணா ஆனாலும் நீ இப்படி ஏமாந்து போயிருக்க கூடாது, பாட்டி தாத்தா, அந்த பாட்டி தாத்தா, பத்தாதுக்கு மாம்ஸ் வேற சேர்ந்து ஹெல்ப் பண்ணி இருக்காரு”, என்று அப்போது தான் அகிலாவின் கணவரை இழுத்தனர்.
அவரோ “ஆமாடா உன்கிட்ட சொன்னா நடக்காது ன்னு அவளுக்கு தெரிஞ்சிருச்சு., அதான் என் தங்கச்சி என் கிட்ட கேட்டா., நானும் சரின்னு சொன்னேன்., இப்ப என்ன உங்க அண்ணனுக்கு கல்யாணத்த தான பண்ணி வச்சாங்க, வேற எதையுமா பண்ணிவெச்சோம்”, என்று சொன்னார்.
கிருஷ்ணாவோ திரும்பி அவரை பார்க்க, “சும்மா முறைச்சு பாக்காதீங்க மச்சான், எல்லாம் நல்லது தான் பண்ணி இருக்கோம்., இப்ப என்ன என் தங்கச்சிய போன் பண்ணி திட்டணுமா”, என்று கேட்டார்.
இவனோ வாய்க்குள் முணுமுணுத்த படி, “அவள திட்டிட்டாலும்” என்றான்.
அவனுடைய மனசாட்சியோ. “டேய் உண்மையை சொல்லு”,என்றது.
அவனுடைய ஈகோவையும்., கெத்தையும் விடாமல் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தான்.
மனசாட்சியோ, “டேய் மரியாதையா உண்மையை பேசு”, என்று சொன்னது.
‘நான் எல்லாம் சரியா தான் இருக்கேன்’, என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
“ஈகோவ காப்பாற்ற ஏன் நீ பொய் சொல்ற “,என்று மனசாட்சி அவனை திட்டிக் கொண்டிருந்தது.
ராகவனும் கேசவனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இப்ப என்ன பண்றது., சரி பெரியவங்க பார்த்து பண்ண வேண்டியது, ஜாதகம் பார்க்கணும் ,எவ்வளவோ இருக்கு, ஆனா ஏன் இவ்வளவு அவசரமா”, என்று நிறுத்தினார்.