“ஹலோ என்ன போயிரு போயிருன்னு சொல்றீங்க., எப்பவோ எங்க அப்பா சொன்னத வச்சு 19 வருஷம் நான் வருவேன்னு நம்பிக்கையில் வெயிட் பண்ணீங்க இல்ல., இப்ப நானே சொல்றேன், அதிகபட்சம் 20 நாள், அதை விட அதிகமா போனா கூட பத்து நாள் ஆகும், அவ்வளவு தான் நான் வந்துருவேன்., ஏதாவது கோல்மால் பண்ணுனிங்க தெரிஞ்சுச்சு., அப்புறம் தான் இந்த துளசி யாருன்னு உங்களுக்கு தெரியும்., எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கா., அமைதியா இருக்கா ன்னு நினைக்காதீங்க., நான் டெரர் தான்., டெரரா தான் இருப்பேன்., அது உங்க விஷயத்துல ரொம்ப ரொம்ப டெரரா தான் இருப்பேன்.,
ஏன்னா நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம்., எங்கேயாவது திரும்பி பார்த்தீங்கன்னு கேள்விப்பட்டேன்., கண்ண குத்திடுவேன்”, என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவள்.,
பின்பு “ஏன் பாவா நான் நல்லா இல்லையா, அசிங்கமா இருக்கேனா, நீங்க எதிர்பாக்குற மாதிரி பொண்ணு இல்லையா., அந்த மாதிரி எதுவும் யோசிக்கிறீங்களா பாவா”, என்று சொல்லி விட்டு
“அப்படியே யோசிச்சாலும் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது பாவா., நான் தான் நான் மட்டும் தான்”, என்று சொன்னாள், அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
இவளோ “ஹலோ இங்க திரும்பி பாருங்க, என்னை பாருங்க”, என்று சொன்னாள்.
“என்ன”, என்றான்.
“நான் வருவேன் பாவா, நீங்க 19 வருஷம் என்னைய நினைச்சிட்டு இருந்ததாகவும், என்னை தான் விரும்புனதாகவும், நவீன் சொன்னான் சரியா, நல்ல கவனிங்க, வருவேன் நீங்க போதும் போதும் சொல்ற அளவுக்கு நான் லவ் பண்ணுவேன், பண்ண தான் செய்வேன், உங்க வீட்ல ரெண்டு பேபி, எங்க அத்தை ஒரே பையன், எங்க நான் ஒருத்தி, சோ நோ வே , நான்லாம் குறைந்தது ஆறு பிள்ளையாவது பெத்துக்குவேன்., சோ எல்லாத்துக்கும் ரெடியா இருங்க”, என்று சொன்னாள்.
அவனுக்கு வெட்கமே வந்தது, எங்கே சாதாரணமாக பேசினால் குரல் காட்டிக் கொடுத்து விடும் என்று., “லூசு மாதிரி பேசாத” என்று கத்தினான்.
“என்ன கத்துறீங்க வர்றேன் மேன் ரெடியா இருங்க., அதுக்கும் சேர்த்து சம்பாதிக்க ஆரம்பிங்க இப்பவே”., என்று சொல்லிவிட்டு செல்ல திரும்பியவள்.,
மீண்டும் வேகமாக வந்து அவனை இப்போது இறுக்கமாக அணைத்து கொண்டாள், அவன் நெஞ்சில் முகம் புதைத்து அப்படியே நின்றாள்.
அவனுக்கு தான் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை., சற்று நேரத்தில் தன் நெஞ்சில் ஈரத்தை உணர்ந்தவன், ‘ஐயோ அழுறாளா’ என்று நினைத்துக் கொண்டே குனிந்து பார்க்க, அவளோ முகத்தை மட்டும் அவன் மேல் நன்றாக புதைத்திருந்ததாள்.
அவனுக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் அவள் அழுவது நன்றாகவே தெரிந்தது. இவனோ மெதுவாக அவள் முதுகில் கையை வைத்து லேசாக தட்டினான், சில வினாடிகளுக்கு பிறகு, கிளம்பு ஏன் இப்படி, எதுக்கு இந்த அழுகை”, என்றவன் குரல் அமைதியாக இருந்தது,
“இப்ப ஏன் இதெல்லாம், கிளம்பு போ”, என்று சொன்னான்.
“இல்ல பாவா, நான் உங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்க நினைக்கலை, அப்படி ஒருவேளை நான் கட்டாய படுத்துற மாதிரி ஃபீல் பண்ணீங்கன்னா., நீங்க இப்படியே இருங்க., ஆனா அதுக்காக நான் வரமாட்டேன்னு நினைக்காதீங்க ., வருவேன் கண்டிப்பா வந்துருவேன்”, என்று சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்.,
“பாவா ஒன்னே ஒன்னு கேட்கனும்”, என்று சொன்னாள்.
“என்ன” என்று அவன் கேட்டான்.
“ஒரே ஒரு ஆசை”, என்றாள்.
“என்ன”, என்றான்.
அவனை பார்த்துக் கொண்டிருந்தவள்.,
அவன் உயரத்திற்கு எக்கி அவன் நாடியில் அழுத்தமாக முத்தம் பதித்தவள்., பின்பு மீண்டும் அப்போது போல நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவனுக்கு தான் இவள் செய்ததை நம்ப முடியாமல் நாடியை மெதுவாக தடவி பார்த்துவிட்டு குனிந்து அவள் தலையை பார்க்க., அவளோ அவனின் நெஞ்சில் முகம் புதைத்த படி அப்படியே நின்றாள்.
“என்ன பண்ணனு தெரிஞ்சு தான் பண்ணியா”, என்று கேட்டான்.
“ஆமா பாவா ஃபர்ஸ்ட் நாள் உங்களை வந்து மேல இதே மாதிரி பார்த்து, இதே மாதிரி ஹக் பண்ணிட்டு போனேனா., அன்னைக்கு தோணிச்சி உங்கள கிஸ் பண்ணிட்டு ஓடிப் போய்ட்டா என்னன்னு., ஆனா அன்னைக்கு பண்ணலையா., அதான் இன்னைக்கு பண்ணினேன்”, என்று சொன்னாள்.
அவன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
மனதிற்குள் ‘இது சரியான லூசு குட்டி தான்., பேக்கு குட்டி’ என்று மனதிற்குள் செல்லமாக கொஞ்சிக் கொண்டான்.
அவன் மனசாட்சியோ “தூஊஊ” என்று அவனை காரி துப்பியது,
“வெளியே எவ்வளவு பந்தா காட்டுற, பிடிக்காத மாதிரியே ஆக்ட் விட்டியே டா., ஆனா அவ ஒரு கிஸ் பண்ணினதும்., உன்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியாம பல்ல கடிச்சுட்டு நிக்கிறியே, நீ எல்லாம் மனுசனா”, என்று மனசாட்சி கேட்டது.
“காதல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா., இதெல்லாம் நீ கண்டுக்காத”, என்று சொன்னான்.
“அப்போ அந்த பிள்ளையை பிடிச்சிருக்காடா உனக்கு”, என்று மனசாட்சி கேட்டது.
“பிடிக்காமல் தான், இவ்வளவு நேரம் அவளை கட்டி பிடிக்க விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கேனா., என்ன என்னுடைய ஈகோ விட்டுக் கொடுக்க மாட்டேங்குது., அதனால நான் அவளை இன்னும் ஹக் பண்ணாம இருக்கிறேன்., பட் போயிட்டு வர வரைக்கும் நான் இப்படித்தான் இருந்தாகணும்., இல்ல னா எங்க வீட்ல உள்ளவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க., அவ வரதுக்கு லேட் ஆச்சுன்னாலே., எங்க வீட்ல உள்ளவங்க டென்ஷன் ஆயிடுவாங்க., அப்புறம் என் முகத்தை முகத்தை வேற பார்ப்பாங்க., இது தேவையா நான் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருந்துக்குறேனே”, என்று மனசாட்சியிடம் சமாதானம் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் அசையாமல் அப்படியே நிற்பதை கண்டவள்., அவனில் இருந்து பிரிந்து அவன் முகத்தை பார்த்து நின்றாள்.
“சாமியாராக போறதா இருந்தா பர்ஸ்டே சொல்லிடனும்., வரும்போது காவி வேஷ்டி, ருத்ராட்சம் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன் சரியா., வந்து பேசிக்கிறேன் உங்க கிட்ட”, என்று சொல்லிவிட்டு மீண்டும் அருகில் வந்தவள்.,
மற்றொரு கன்னத்திலும் அழுத்தமாக முத்தமிட்டு., “கேள்விப்பட்டதில்ல ஒரு கன்னத்தில் அறைஞ்சா., மறு கன்னத்தையும் காட்டணும்னு., ஒரு கன்னத்தில் கொடுத்தா அடுத்த கன்னத்தையும் காட்டணும்”, என்று சொன்னவள்.
“எனக்கும் குடுங்க”, என்றாள்.
“மாட்டேன்” என்று என்னும் விதமாக தலையை அசைத்தான்.
இவளோ “நீங்க கொடுக்காட்டி என்ன, மறுபடியும் நான் கொடுப்பேன், நெற்றியிலாவது குடுங்க”, என்றாள்.
அவன் அமைதியாக நிற்கவும்.
“கொடுக்கப் போறீங்களா, இல்லையா, உங்க அம்மா கிட்ட உங்க பையன கடிச்சு முழுங்கிட மாட்டேன் ன்னு தான் சொல்லி இருக்கேன்., இப்ப நீங்க கொடுக்கல”, என்று சொன்னாள்.
“லூசு மாதிரியே பேசுவியா, நீ எங்க அம்மாட்ட போய் ஏன் இப்படி பேசின., என்று கேட்டான்.,
“உங்க சித்தி தான் சொன்னாங்க,அவனை கீழே வர சொல்லவா, அப்படின்னு கேட்டாங்க., ஏன் நான் மேல போய் பேசினா உங்க பையனை என்ன கடிச்சு முழுங்கவா போறேன்னு கேட்டேன்”, என்றாள்.
“அப்பப்போ லூசு ன்னு நிரூபிக்காத போ”, என்று சொன்னான்.
“வரும் போது ஒழுங்கா தான் வந்தேன், இங்க வந்ததுக்கப்புறம் தான் எல்லாம் மாறி போச்சு “, என்று சொல்லிவிட்டு அருகில் வந்தவள்.,
“கொடுத்தே ஆகணும் குடுங்க, அப்பதான் இங்கிருந்து கிளம்புவேன்”, என்று சொல்லி அவன் முன்னே கண்ணை மூடிக்கொண்டு நின்றாள்.
அவனோ மனசாட்சியிடம் “ஈகோவ கைவிடணுமா இப்போ”, என்று கேட்டான்,
மனசாட்சியோ, “அது உன் இஷ்டம் பா, பாவம் அந்த புள்ள ரொம்ப நேரமா உன் முன்னாடி கண்ண மூடிட்டு நிக்குது”, என்று சொன்னது,
“அது நான் தொடங்கினா, அவ ஃப்ளைட் போயிரும், அதுனால கொடுக்க வேண்டாம்” என்றான் மனசாட்சியிடம்.
அவளோ மீண்டும் கண்ணை திறந்து அவனையே பார்த்தாள்., அவன் முடியாது என்னும் விதமாக தலையாட்டினான்.
“இப்ப கொடுக்கலைன்னா என்ன, இப்ப கொடுக்காததுக்கு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க, பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு அவன் எந்த இடத்தில் டாட்டூ போட்டு இருந்தானோ., சரியாக அந்த இடத்தில் அவளது வலது கையை வைத்து அவன் மேல் தட்டியவள்.,
“வருவேன் வந்து பேசுகிறேன் உங்களை”, என்று சொல்லி அவன் உச்சி தலை முடியை பிடித்து இழுத்தவள்.,
அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்துவிட்டு “போய்ட்டு வரேன் பாவா”, என்று சொல்லும் போது, அவள் கண் நிறைய கண்ணீர் தேங்கி நின்றது.
அதை பார்த்தவனுக்கு என்னவோ போல் இருந்தாலும் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றான்.,
அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டு வாசலுக்கு செல்வதை பார்த்தவனுக்கு., ‘எங்கே தன் கண்ணும் கலங்கி விடுமோ’, என்ற பயமே வந்தது.
அவள் கதவை திறந்து கொண்டு வெளியே செல்வதை பார்த்தவன் அமைதியாக அப்படியே நின்றான்.
அவள் செல்லவும் அப்படியே தளர்ந்து ஜன்னலில் சாய்ந்து நின்றவன், மனம் என்னென்னவோ நினைத்தது., ஆனால் எதையும் வெளியே காட்ட முடியாது., அதுவே அவனுக்கு மனதை பாரமாக்கியது.,
கீழே சென்றவள் “ஓகே கிளம்பலாம்” என்று சொல்லும் போதே நவீன் மற்றும் அகிலாவின் கணவர் இருவரும் அவளை ஏர்போர்ட்டில் கொண்டு விடுவதாக கிளம்பினர்.
கலையிடம் சென்றவள் அவளை அணைத்துக் கொண்டு, “வந்துருவேன் வந்து உங்ககிட்ட சண்டை போட வேண்டியது நிறைய இருக்கு, எங்க அப்பா உங்க கிட்ட பேச விடல, உங்ககிட்ட பழக விடல, எங்களை கூட்டிட்டு வரலன்னு, தெரிஞ்ச உடனே நீங்க ஏதாவது ஸ்டெப் எடுத்து இருக்கணும், கடைசி வரைக்கும் நான் யாரோட அன்பும் இல்லாமலே வளர்ந்து இருக்கேன் இல்ல”, என்று சொன்னாள்.
அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடியவும்., கலையும் சேர்ந்து கண்ணீர் வடிக்க., கேசவன் தான் திட்டினார்.
“நீயும் சேர்ந்து அழுதா எப்படி சந்தோஷமா அனுப்பி வை”,என்று சொன்னார்.
வீட்டில் உள்ளவர்களுக்கும் கண்கலங்கியது, கிருஷ்ணாவின் அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டவள், “உங்க பையன நான் வர்ற வரைக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க, நான் வந்த உடனே என்ட்ட தந்திடனும்”,என்றாள். அழுகையோடே,
“இப்பவே அவன் உனக்கு தான், பத்திரமா பார்த்துக்கிறேன் போதுமா”,என்றார்.
பாட்டிகள் இருவருக்கும் இவள் நல்ல தோழி போல இருந்ததால், இரண்டு பாட்டிகளும் அவளை கண்ணீரோடு நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தனர்.
காரில் ஏறியவளுக்கு தான் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடிய அமர்ந்திருந்தாள்.
அகிலாவின் கணவர் கார் ஓட்ட , முன்புறம் உட்கார்ந்து இருந்த நவீன் தான்,
“ஏன் அழுதுகிட்டு இருக்க”, என்று கேட்டான்.
அவனுக்குமே கண் கலங்குவது போல தான் இருந்தது, திரும்பி அவன் கையை நீட்டி இவள் கையை பிடித்துக் கொள்ள, இவளும் அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“உங்க அண்ணாவை பார்த்துக்கோ”, என்று சொன்னாள்.
“ஹலோ இத்தனை நாள் நான் தான் பாத்துட்டு இருந்தேன், என்னமோ நீங்க பாத்துட்டு இருந்த மாதிரி சொல்றீங்க”, என்று சொன்னாள்.
“ஆமா இத்தனை நாள் நீ பாத்துக்கிட்ட, இனிமேல் நான் வந்து பாத்துக்குவேன். அதுவரைக்கும் நீ பாத்துக்கோ”, என்று சொல்லி இருவரும் முன்பு போல வாயாட தொடங்கினர்.
அகிலாவின் கணவர் தான்., “அது தானே பார்த்தேன், ரெண்டு பேரும் எங்க சென்டிமென்டா ஆகிட்டீங்களோ ன்னு நினைச்சேன்., நீங்க ரெண்டு பேரும் செண்டிமெண்டா பேசினா., மழை கீழ இருந்து மேல பாத்து போயிறாது., உங்க ரெண்டு பேருக்கும் ஆர்க்யூ பண்ணாம இருக்க முடியல”, என்று சொன்னார்.
இருவரும் சிரித்துக் கொண்டே பேச்சை மாற்ற., இவளோ தன் முகத்தை துடைத்து சரி செய்து கொண்டாள்.
ஏர்போர்ட்டில் அவளை உள்ளே அனுப்பி விட்டு இருவரும் கூடவே நின்றனர்.,
அவளுக்கு உரிய பிளைட்டுக்கான அறிவிப்பு வந்தவுடன் அவர்களிடம் கையாட்டி விட்டு தன்னுடைய லண்டன் பயணத்திற்காக பிளைட்டில் ஏறினாள் துளசி.,
‘பெற்றோரோடு வரும் போது, இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்றும், இப்படி ஒரு உறவுகள் இங்கே இருக்கும், என்று நினைக்காதவளுக்கு இப்போது இங்கு இருந்து கிளம்புவதற்கு அத்தனை வருத்தமாக இருந்தது., எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேர்ந்துவிட வேண்டும்’, என்ற எண்ணத்தோடு ப்ளைட்டில் தன்னிடத்தில் அமர்ந்தாள்.
‘லண்டனில் அவளுடைய நாட்கள் எப்படி கடக்கும்’ என யோசித்துக் கொண்டாள். ‘இவள் போகும் காரியம் வெற்றி அடையுமா’ என்று மனம் கிடந்து தவித்தது.