‘இவ எதுக்கு என்னை கூட கூப்பிட்டான்னு எனக்கு தெரியல, ஆனா கோயிலை சுத்தி வந்தாச்சு.,  மறுபடியும் சாமி கும்பிட கூப்பிட்டான்னு போயிட்டு வந்தாச்சு., எதுக்கு இதெல்லாம் பண்றான்னு தெரியல.,  நல்லவேளை சாமி கும்பிட போகும் போது நவீன்  அகிலா  கூட வந்தாங்க .,

      தனியா கூட்டிட்டு போனா, அங்கேயும் வைத்து கோயிலுக்குள் வைத்து ஏதாவது சொல்லி இருப்பா., ஆனா மேடம் ஏதோ சாமிகிட்ட மும்மரமா வேண்டினாளே என்ன வேண்டிருப்பா’, என்று யோசித்துக் கொண்டே வந்தான்.

    ‘லண்டன் போறத பத்தி வேண்டிருப்ப, இல்ல லண்டனில் இருந்து திரும்பி வருவதை பற்றி வேண்டியிருப்பா’, என்று நினைத்துக் கொண்டிருக்க..,

    அவளோ ‘முதல் முதலாக அவனோடு இந்த கோயிலுக்கு வந்திருக்கிறேன்., அடுத்த முறை கழுத்தில் தாலியோடு வரவேண்டும்., இப்போது வெறும் கையெழுத்து மட்டும் போட்டு கணவன் மனைவி என்று ஒப்புதல் வாங்கி இருக்கிறோம்., அதுவும் அவனுக்கு தெரியாமல், அடுத்த முறை அவனுடைய முழு சம்மதத்தோடு என் கழுத்தில் தாலி ஏறிய பிறகு இதுபோல வந்து நிற்க வேண்டும்’, என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

   இது அறியாதவனோ, ‘அவ என்ன வேண்டி இருப்பா’, என்று யோசனை பண்ணியவன்.

   பின்பு ‘லண்டனுக்கு போன பிறகு எந்த பிரச்சினையும் வரக்கூடாது அப்படின்னு வேண்டி இருப்பா’, என்று நினைத்துக் கொண்டான்.

    இதற்கிடையில் அகிலாவின் கணவரிடம்., “அண்ணா எனக்கு ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ வேணுமே, நான் என்ன செய்ய”, என்று கேட்டாள்.

   “ஒன்னும் பிரச்சனை இல்ல வெயிட் பண்ணு எடுத்திடலாம்”, என்று சொன்னவன்

   கோயிலில் வைத்தே அனைவரும் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுப்பது போல எடுக்கும் போது.,

இவளோ புகைப்படம் எடுத்து முடித்து கொஞ்ச நேரத்தில் அகிலாவின் கணவரிடம் கண்ணை காட்டி விட்டு அவனோடு சேர்ந்து  நிற்கும் வண்ணம் போய் அருகில் நின்றவள்.,

     “பாவா”, என்றாள் மெதுவாக,

   அவனும் அவளை மெதுவாக திரும்பிப் பார்த்து, “என்ன”, என்றான்.

“பாவா நான் வரதுக்கு கொஞ்சம் டைம் ஆனாலும் வெயிட் பண்ணுவீங்க இல்ல, வேற ஒரு துளசியை பார்க்க மாட்டீங்களே”, என்று கேட்டாள்.

   அவனும் மீண்டும் அவள் இதே கேள்வியை கேட்க அதிர்ச்சியாக  தான் பார்த்தான்.,

      “உண்மையிலே நீ லூசா”, என்றான்.

    “அங்கிருந்து வரும்போது நான் ஒழுங்கா தான் பாவா வந்தேன்., இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இப்படி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னவள்.

   “மேபி லூசா இருக்கலாம்., ஆனா அது உங்க மேல மட்டும் தான்”, என்று சொன்னாள்.

   இவனும் “இப்ப நீ கிளம்புறியா”, என்று கேட்டான்.

   “ஏன் என்கூட கொஞ்ச நேரம் இருந்தா, நான் உங்கள கடிச்சு முழுங்கிடுவேன் பயமா இருக்கா”, என்று மீண்டும் அருகில் சென்று நிற்பது போல நிற்க.,

   அதற்குள் அகிலாவின் கணவரோ அழகாக போட்டோ எடுத்து முடித்திருந்தார்.

    இதில் வீட்டின்  பெரியவர்களுக்கு மட்டும் தெரிய, மற்றவர்களோ ‘இவள் அவனுடன் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள்’ என்று மட்டும் தான் நினைத்தார்கள்.

    நவீனும் “ஊருக்கு கிளம்பறதுக்குள்ள எங்க அண்ணனை கரெக்ட் பண்ணனும்னு தான் பார்க்கிறாங்க பாவம் முடியல., இவன் பிடி கொடுக்கவே மாட்டான்”, என்று சொன்னான்.

    பாட்டியோ “ஆமாடா அவள் லண்டன் போயிட்டு படிக்கறதுக்கு திருப்பி வருவாளா., வரும் போது உங்க அண்ணனுக்கு காவி வேஷ்டி வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்கா”, என்று கிண்டலாக சொன்னார்.

   “பாட்டி நீங்களே அண்ணனை இப்படி கேலி பண்ணலாமா”, என்று அவன் கேட்டான்.

  “எனக்கென்னமோ அப்படித் தான்டா நடக்க போகுதுன்னு தோணுது” என்று அவரும் சிரித்துக்கொண்டே சொன்னார்.

    நவீன் தான், “இருந்தாலும் நீங்களும் ரொம்ப மோசம் பாட்டி., அந்த லண்டன்காரி வந்த உடனே அவ கூட சேர்ந்து அண்ணனையே கிண்டல் பண்றீங்க”, என்று கோபம் கொண்டான்.

    அகிலாவோ “இதுங்க என்னமோ பிளான் பண்ணுது., ஆனால் வெளியேவே தெரிய மாட்டேங்குது”, என்றாள்.

    நவீனோ “பெரிய பிளான் எல்லாம் ஒன்னும் இல்ல., நீ எதுக்காக  யோசிக்க”, என்று சொன்னாள்.

இவளோ “இல்லடா ஏதோ பிளான் பண்ணி இருக்காங்க., என் வீட்டுக்காரர் என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறாரு, ஆனா இவங்க எல்லாம் சேர்ந்துதான் பிளான் பண்ணி இருக்காங்க.,  பாட்டி தாத்தாக்கும் ஏதோ விஷயம் தெரிஞ்சு இருக்கு”, என்று சொன்னாள்.

    “பாட்டி தாத்தாக்கு விஷயம் தெரிஞ்சா, நம்ம கிட்ட சொல்லாம இருப்பாங்களா”, என்று சொன்னான்,

     “அம்மா அப்பா கிட்டையே சொல்ல மாட்டாங்க., உன்கிட்டயும் என்கிட்டயும் தான் சொல்லுவாங்களா”, என்று சொன்னாள்.

    நவீனும் “பாட்டி எதும் எங்களுக்கு தெரியாம காரியம் நடந்துச்சா, என்ன”, என்று கேட்டான்.

   “டேய் உங்களுக்கு தெரியாம, எப்படிடா என்ன காரியம்  நடக்கும்., போய் கிருஷ்ணா கிட்ட கேளு, என்ன நடந்துச்சுன்னு, அவன் ஒன்னும் நடக்கலன்னு சொல்லுவான், அது தான் சரியும் கூட”,என்றார்.

       “ஆமா பின்ன எங்க அண்ணனுக்கு தெரியாம எதுவும் நடந்திருமா என்ன”, என்றான்.

பாட்டி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி நின்று., ‘உங்கள எல்லாம் நம்புனா அவ சொன்ன மாதிரி கல்யாணம் நடக்காது டா’, என்று நினைத்துக் கொண்டவர், “எல்லாம் சிவன் செயல் தான்”, என்று கோயில் கோபுரத்தை பார்த்து சொன்னார்.

    “பாட்டி சிவனா சொன்னார்., கிருஷ்ணாவுக்கும் துளசிக்கும் சண்டை வரும்.,  இரண்டும் இப்படி எதிரும் புதிருமா நிக்கும் ன்னு, அவ திரும்பி லண்டனுக்கு போவான்னு சிவனா சொன்னார்”, என்று கேட்டான்.

   “நீ ஒருத்தன் போதும்டா.,  உங்க அண்ணனுக்கு  ஏதாவது நடக்கனும் னா அவனை பேசி சரி பண்றியா., அதெல்லாம் கிடையாது.,  அவன் என்ன சொன்னாலும் அது தான் சரி ன்கிற., பின்னே எப்படி உங்க அண்ணனுக்கு கல்யாணம் நடக்கும்., கவலையே படாத துளசி ன்ற பேர்ல இல்ல,  வேற எந்த துளசியும் வரமாட்டா.,  வந்தா இந்த துளசி தான் வரணும்”, என்று சொன்னார்.

     “பாட்டி நெஜமாவே அவ படிக்க வரேன்னு சொல்றாளா”, என்று கேட்டான்.

   “அப்படித்தான்டா நினைக்கிறேன், என்னமோ பைல்  எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தா,  அன்னைக்கு நீ எங்கேயோ காலேஜுக்கு எல்லாம் கூட்டிட்டு போயிட்டு வந்தியே., அந்த காலேஜ் புக் எல்லாம் எடுத்துட்டு இருந்தா”, என்று சொன்னார்.

    “ஓஹோ” என்றான்.

   ஏனெனில் அவன்தான் ஸ்ரீரங்கம் போயிட்டு வந்த இரண்டு நாளில்., அவளை இரண்டு மூன்று கல்லூரிகளுக்கு அழைத்து சென்று  வந்திருந்தான்.

    சற்று நேரத்தில் கோவிலில்  இருந்து கிளம்ப, இவளுக்கு தேவையான புகைப்படங்கள் இவளுடைய வாட்ஸ் அப்பில்  சேகரிக்கப்பட்டது.

    “இரண்டு ஃபோட்டோ காபி வேணும்” என்று  அகிலாவின்  கணவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

    அவனும் “நாளைக்கு காலையில உன் கைல இருக்கும்” என்று பதில் மெசேஜ் அனுப்பினான்.

   பிறகு இவர்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல எப்போதும் போல இவர்கள் மட்டும் ஒரு காரில் செல்லும் போது அகிலாவிற்கும் நவீனுக்கும் நடுவில் அமர்ந்தவள்,  நவீன் இடம் பேசிக்கொண்டே அவ்வப்போது ரிவர்ஸ் மிரர்  ல் அவனை அவ்வப்போது பார்த்துக் கொண்டு வந்தாள்.

    அவள் பார்ப்பது தெரிந்தாலும், லேசாக திரும்பிப் பார்ப்பவன் மீண்டும் பார்ப்பதில்லை., ஆனால் அவள் பார்ப்பதை அவனால் உணர முடிந்தது.

  மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றவுடன் இவளோ எப்போதும் போல  தாத்தா பாட்டி இடம் தான் இருந்தாள்.

   இன்னும் கிளம்புவதற்கு நாட்கள் குறைவாகவே இருக்க அதைப்பற்றிய யோசனையில் இருந்தவள்.

   தாத்தா பாட்டியிடம், “எந்த பிரச்சினை வந்தாலும் ரெஜிஸ்டர் மேரேஜ் ஆனது இப்போதைக்கு சொல்ல வேண்டாம் பாட்டி., நான் மேக்சிமம் அங்க எல்லாம் முடிச்சிடுவேன்., அதுக்கு மேல எதுவும் பேச வேண்டும் என்ற மாதிரி நிலை வந்தா மட்டும் தான், நான் உங்களுக்கு கால் பண்றேன், நான் டெய்லி பேசுவேன்., வந்துருவேன் பாட்டி”, என்று நம்பிக்கையாக உரைத்தாள்.

   பின்பு அவரிடம் “எங்க அப்பா பண்ண தப்புக்கு, என் மேல எதுவும் கோவப்படாதீங்க., நிஜமா எனக்கு தெரியாது.,  எனக்கு ஏதாவது லேசா தெரிஞ்சி இருந்தா கூட.,  நான் இதைவிட சீக்கிரமாவே வந்து சேர்ந்திருப்பேன்.,

     எதுவா இருந்தாலும், நல்லதுக்கு தான் நினைச்சுக்கணும் இல்ல.,  நான் லேட்டா வர போய் தான், இப்ப நானே யோசித்து நானே முடிவு பண்ணி ஒவ்வொரு காரியமும் பண்ண முடியுது., இது கொஞ்சம் சீக்கிரமா வந்து இருந்தா., கொஞ்சம் நான் பயந்து  இருந்திருந்தா, நான் இந்த அளவுக்கு இறங்கி எல்லாமே செஞ்சி இருப்பனான்னு தெரியல., பட் எனக்கு எல்லா விதத்திலும் ஹெல்ப் ஃபுல்லா இருந்தீங்க பாட்டி.,  ரொம்ப தேங்க்ஸ் உங்க பேரன  பத்திரமா பாத்துக்கோங்க,  நான் வந்ததுக்கு அப்புறம் உங்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்”, என்று சொன்னாள்.

   “வாயாடி”, என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளிய பாட்டி., அவளை தன்னோடு சேர்த்து பிடித்து கொஞ்சி கொண்டவர்.

   ” நல்லபடியா போய்ட்டு நல்லபடியா திரும்பி வாடா, அங்க எதுவும் பிரச்சினை வராது, நல்லபடியா நடக்கும் கடவுள்ட்ட வேண்டிக்குவோம்.,  எதுனாலும் அங்க இருந்து போன் பண்ணு.,  நாங்க பார்த்துக்கிறோம்”, என்று சொன்னார்.

     “நிச்சயமா பாட்டி இப்ப பிரண்ட்ஸ்க்கு மட்டும் தான் தெரியும், நான் போறேன் ன்னு., அப்பா  மூணு மாசம் கம்ப்ளீட் ஆகும் போது தான் நான் வருவேன் அப்படின்னு நினைச்சிட்டு இருப்பார்.,  அதனால தான் மூணு மாசம் கம்ப்ளீட் ஆகுறதுக்கு முன்னாடியே நான் போறேன்., அப்படின்னா தான்., நான் இந்த டைம்ல வருவேன்னு அவர் யோசிக்க மாட்டாரு”, என்று சொன்னாள்.

      “சரிமா போயிட்டு வா, பத்திரமா போயிட்டு வா”, என்று சொன்னார்.

   “பாட்டி என்னோட சூட்கேஸ் இங்கே இருக்கட்டும், அது ரொம்ப பெருசு, நான் மூன்று மாதம்,  இவ்வளவு நாள் இருக்க போறோம் அப்படிங்கற மெண்டாலிட்டில நிறைய எடுத்துட்டு வந்ததனால எல்லாமே இங்க தான் இருக்கு., நான் இப்போ எனக்கு தேவையானதை மட்டும் ஒரு சின்ன சுட்கேஸ்ல ஃபில் பண்ணிட்டு போறேன் ., முக்கியமான பைல் பேப்பர்ஸ் அதெல்லாம் என்னோட ஹாண்ட் லக்கேஜ் ல எடுத்துட்டு போறேன், மற்றது இங்கே இருக்கட்டும் பாட்டி”, என்று சொன்னாள்.

      “நிச்சயம் மா, இப்ப என்ன நீ தான் போயிட்டு வந்துடுவ இல்ல”, என்று சொன்னாள்.

   “நிச்சயமா திரும்பி வருவேன் பாட்டி”, என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.

   ஆனால் இவளுக்கு பதில் சொல்ல வேண்டியவனோ அமைதியாக இருந்தான் அவனிடத்தில்.