14

     இரண்டு நாளில் காய்ச்சல் ஓரளவுக்கு சரியாக இவளே அனைவரையும் கிளப்பி அனுப்பினாள்.

    அவர்களது வேலை தடைப்படக்கூடாது என்பதற்காக.,  கலைக்கூட “நான் வேண்டுமானால் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமா” என்று கேட்டார்.

    “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை, சரியாயிடுச்சு தல தான் கொஞ்சம் பாரமா இருக்கு, சரியாயிடும்”, என்று சொன்னாள்.

     “இப்போதைக்கு தலைக்கு ஊத்தாத, உன் முடி அடர்த்தியா இருக்கு, நல்ல தலை காய்வதற்கு டிலே ஆகுது போல”, என்று சொல்லி அவள் தலையை தடவி கொடுத்து விட்டு, “கிளம்புறோம் பாத்துக்கோ”, என்று சொல்லிவிட்டு சென்றார்.

     அவளோ அமைதியாக அமர்ந்து அவர்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

காலையிலேயே கிருஷ்ணாவும் நவீனும் கிளம்பி இருந்தனர்.

   அதற்கு பிறகு அகிலா அவள் கணவனோடு கிளம்பும் போது அவர்களுக்கும் கையசைத்து வழி அனுப்பினாள்.

   இது என்னோட பிரச்சனை நான் தான் சந்தித்து ஆகணும்,

காய்ச்சலோடு இருக்கும் போதே ,அவளது தோழிகள் போன் செய்திருந்தனர். “உங்க அப்பா ரிட்டன் ஆனதால, உன் விசாவை கேன்சல் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தாரு, பாஸ்போர்ட்  உன்கிட்ட இருக்கு, விசா காப்பியும் உன்கிட்ட இருக்குறதால அவரால எதுவும் பண்ண முடியாதுன்னு நினைக்கிறேன்.,

    த்ரீ மந்த்ஸ் வீசங்குறனால நீ த்ரீ மன்த்ஸ் வரைக்கும்  அங்க இருக்கலாம்,

நிறைய விஷயம் விசாரித்து தெரிஞ்சிருக்கு, நீங்க வந்து எம்பஸில் எழுதிக் கொடுக்கணும், ஆனா அதுக்கு நீ அங்க ஹையர் ஸ்டேடஸ் பண்ணனும், இல்லாட்டி உனக்கு அங்க வேலை கிடைக்கணும்., இல்லன்னா நீ அங்க மேரேஜ் ஆகி போகணும்,இந்த ஏதாவது ஆப்ஷன் இருந்தா தான் நீ எழுதிக் கொடுத்து கேட்டு வாங்க முடியும்., அது மட்டும் இல்லாம உனக்கு இந்தியன் சிட்டிசன்ஷிப் வாங்கணும் அப்படின்னு சொல்லியாச்சுன்னா, உன்னோட பர்த் சர்டிபிகேட் உன்னோட பழைய, அதாவது நீ குழந்தையா இருக்கும் போது அங்கதான் இருந்தீங்க அப்படிங்கறதற்கான ஆதாரமா ஏதாவது கிடைச்சுச்சுனா,  அந்த ஐடி இருந்தாலும் நீ அங்க ஈசியா உன்னுடைய சிட்டிசன்ஷிப்பை திருப்பி வாங்கிக்கலாம்., அங்கு உள்ள எம்பஸிலையும் நீ கேட்டுக்கோ, உனக்கு போன் நம்பர் அனுப்புறேன்”, என்று சொன்னார்கள்.

       “அங்க எம்பசில போன் ல டிடெயில்ஸ் சொல்லுவாங்களா   ன்னு தெரியலை, முடிஞ்சா நேர்ல போய்ட்டுவா”, என்று சொன்னார்கள்.

   “சரி முயற்சி பண்றேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

  பின்பு ‘இதற்கு கலை அத்தையை தான் துணைக்கு கூப்பிடனும், மாமா வருவாங்களான்னு தெரியல, இல்லாட்டி நவீனையும் அத்தையும் கூட்டிட்டு போய் பாத்துட்டு வந்துட வேண்டியது தான்’,என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

     ‘ஆனா கிருஷ்ணாக்கு தெரியக்கூடாது, கிருஷ்ணாவுக்கு தெரியாம எப்படி போறது’, என்று யோசித்துக் கொண்டிருந்தவள்.

    அதற்காக இங்கு உள்ள நடைமுறைகளை விசாரிக்க தொடங்கினாள். பின்பு ஒருநாள் கலையிடம் அனைத்தையும்  பேசினாள்,

    “நீங்க உங்க பெரிய பையனுக்கு தெரியாம வருவிங்கனா, என்கூட வாங்க, நவீன் ஓட்ட வாய் உளறிருவான் அத்தை”, என்று சொன்னாள்.

   “சரி என்ன பண்ணலாம் நீயே சொல்லு”, என்று கேட்டார்.

   “பாட்டி தாத்தா வயசானவங்க, அவங்களை கூட்டிட்டு போக முடியாது, அது மட்டும் இல்லாம எனக்கு இங்க எதுவுமே தெரியாது, சோ நீங்க யாராவது வந்தீங்கன்னா பெட்டரா இருக்கும்”, என்று சொன்னாள்.

  “சரி நான் மாமாகிட்ட பேசிட்டு, உனக்கு சொல்றேன்”, என்று கலை சொல்லி இருந்தார்.

    அது போலவே அவர்கள் இருவரும் இவளோடு செல்வதாக இருந்தது.

      திருச்சியில் இருந்து சென்னைக்கு காரிலேயே சென்றுவிட்டு காரிலே வருவதாக பிளான் செய்து கொண்டவர்கள், அதற்கு ஏற்பாடு செய்து கொண்டனர்.

     அது போலவே முதல் நாள் மதியத்திற்கு மேல் இங்கு இருந்து கிளம்பி, இரவு அங்கு போய் சேர்ந்தவர்கள், அங்கே தங்கி விட்டு மறுநாள் காலை இவளுக்கான வேலையை இந்தியன் எம்பசி, பிரிட்டிஷ் எம்பஸியில்  முழுவதும் விசாரித்துவிட்டு அவள் வெளியே வரும் போது மதியம் தாண்டி இருந்தது.

    பின்பு உணவை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி வந்து சேர்ந்தனர்.

    காரில் வரும்போது கலையிடம் சொல்லி இருந்தாள்,  “ஓரளவுக்கு ஓகே அத்தை, எல்லாம் ரெடி பண்ணிடலாம், நான் ஒரே ஒரு தடவை மட்டும் லண்டன் போயிட்டு வர வேண்டியது இருக்கும்., அங்க போய் நான் எழுதி கொடுக்கணும் பார்க்கலாம், இன்னும் டைம் இருக்கு,  கிட்டத்தட்ட ரெண்டு மாசம் டைம் இருக்கு அத்தை முடிச்சிடலாம்”, என்று சொன்னாள்.

   கலை கணவர் கேசவன் தான் ‘எது செஞ்சாலும் ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சுக்கோமா.,  உங்க அப்பாகிட்ட பதில் சொல்லி முடியாது”, என்று சொன்னார்.

    “இல்ல மாமா,  நான் முடிவோட தான் இருக்கேன்”, என்று சொன்னவள்,

    “இதுக்கு அப்புறம் நான் மேனேஜ் பண்ணி விடுவேன்”, என்று சொல்லிவிட்டு அவர்கள் என்னென்ன சொன்னார்களோ அதைப்பற்றி யோசித்துக் கொண்டே வந்தாள்.

    பாட்டி வீட்டில் வந்து அவளை விட்டு விட்டு இவர்கள் அங்கு சென்றனர்.

   வீட்டில் இருந்த நவீனும்  கிருஷ்ணாவும்”ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க கிளம்பி போனீங்க”, என்று கேட்டான்.

அதற்கு கிருஷ்ணாவின் அப்பா தான்., “ஒரு ஃபேமிலி ஃபங்ஷன், அப்புறம் தெரிஞ்சவங்க வீட்டு பங்க்ஷன் அதான்.,  அவங்க ரெண்டுபேரையும் அனுப்பி வச்சேன், எனக்கு அலைய முடியாதுல்லடா.,  ஒன்ன அனுப்பலாம்னு பார்த்தா உனக்கு அவங்களே தெரியாது.,

    அதனால தான் உங்க சித்தப்பாவையும் சித்தியும் அனுப்பி வெச்சேன்., ஏன் உனக்கு இப்ப என்ன ., என்று கிருஷ்ணாவை கேட்டவர்.

    நவீன் இடமும் “உனக்கு என்னடா பெரிய மனுஷா”, என்று கேட்டார்.

     “ஒன்னும் இல்ல பெரியப்பா” என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான்.  அவர்கள் எம்பஸிக்கு அவளுடைய விசா விஷயமாக சென்றது பெரியவர்களை தவிர யாருக்கும் தெரியாது.

வீட்டிற்கு வந்து சேர்ந்தவளோ யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

    பின்பு அகிலாவின் கணவன் எண்ணிற்கு அழைத்தவள்,   “அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”, என்று சொல்லி, தான் என்ன ஹெல்ப் எதிர்பார்க்கிறாள் என்பதை சொல்லவும் அந்த புறமும் இருந்த அகிலாவின் கணவனோ “இது சாத்தியமாகுமா மா” என்று கேட்டார்.

      “எனக்கும் தெரியலண்ணா,  ஆனா எனக்கு இப்படி ஒரு, சர்டிபிகேட் கிடைச்சா, என்னோட வீசா பிராசஸ நான் மாற்ற முடியும், அது மட்டும் இல்லாம இங்க ஈசியா நான் இந்தியன் சிட்டிசன்ஷிப் வாங்க முடியும்., அந்த சர்டிபிகேட் இருந்துச்சுன்னா நல்லா இருக்கும்., டூ மந்த்ஸ் எனக்கு இன்னும் இங்க இருக்குறதுக்கு டைம் இருக்கு.,

    அந்த டூ மன்த்க்கு அப்புறம் நான் லண்டன் போய், அங்க கிட்டத்தட்ட எனக்கு ஒன் வீக் ஆர் 15 டேஸ் ஒர்க் இருக்கும்., அந்த ஒர்க்குகாக இந்த சர்டிபிகேட்ஸ் எல்லாம்.,  நான் கேட்கிற இது எல்லாம் கிடைச்சுச்சுனா., நான் ஈசியா அங்க இருந்து  வெளியே வர முடியும்.,  எங்க அப்பா என்ன பண்ணாலும் ஒன்னும் நடக்காது”, என்று சொன்னாள்.

    “சரிமா நான் விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்”,என்று சொன்னவன், “நீ எம்பஸி போயிட்டு வந்தது நவீனுக்கு தெரியுமா மா”, என்று கேட்டான்.

   “அய்யோ அண்ணா, சொல்ல மறந்துட்டேன், நவீனுக்கும் தெரியாது., உங்க வீட்டுல அக்காக்கும் தெரியாது, தயவு செய்து சொல்லிடாதீங்க, ஏன் அத்தை மாமாக்கு  கூட தெரியாது., அவங்க கூட தான் எம்பஸி போயிட்டு வந்தேன்., ஆனா அவங்களுக்கு கூட தெரியாது, அத்தை மாமா  தூரத்து சொந்தம் ஃபேமிலி ஃபங்ஷன் அப்படின்னு மட்டும் தான் சொல்லி இருக்காங்க, என்ன வெளியே கூட்டிட்டு போனது யாருக்கும் தெரியாது”, என்று சொன்னாள்.

    “சரிமா, நான் பாத்துக்குறேன், உனக்கு ஏற்கனவே ஃபீவர் இப்பதான் முடிஞ்சிருக்கு, இதோட அலைஞ்சுட்டு வந்திருக்க, ரெஸ்ட் எடு”, என்று சொல்லி, “நான் பார்த்துக்கிறேன்”  என்று சொன்னவன் அழைப்பை துண்டித்தான்.

    வீட்டில் அமைதியாக அவள் வேலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பாட்டி தான் ‘இவள் போய் வந்ததிலிருந்து என்னவோ போல் இருக்கிறாளே’ என்று  அங்கு வீட்டிற்கு அழைத்து கேட்டார்.

  “எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாள், உள்ளே போனது அவள் மட்டும் தானே”, என்று கலை தன் மாமியார் இடம் தெரிவித்தாள்.

    “அவ ஏதோ யோசனையா இருக்கா, அது தான் என்னன்னு கேட்டேன்”,என்றார்.

     “அதெல்லாம் ஒன்னும் இருக்காது அத்தை”,என்றார்.

   “ஆனா அவ யோசிச்சிட்டு இருக்கிறதை பார்த்தா எதுக்கு இவ்ளோ யோசிக்கிறா ன்னு தோணுது”, என்றார் பாட்டி.

   “அத்தை என்ன சொன்னாங்கன்னு சொன்னாங்க ன்னு நானும் கேட்டேன்.,  இல்ல எல்லாம் சரியாயிடும் சரியாக அதற்கு வாய்ப்பு இருக்கு,  எல்லாம் நம்ம கைல தான் இருக்கு, அப்படின்னு மட்டும் தான் சொன்னா, சரி பண்ணிடலாம்  மட்டும் தான் சொன்னா., வேற எதுவும் சொல்லலையே”, என்று அவரும் சொன்னார்.

    ‘என்ன யோசிக்கிறா என்று தயங்கி இருந்தனர். அவளிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.

     அந்த வாரம் இறுதியில் அகிலா கணவர் வீட்டிற்கு வர.,

அகிலா கணவரும் துளசியும் பின் பக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு பாட்டி தான்., “என்ன பிரச்சினைனாலும் என்கிட்ட சொல்லுமா., எங்களால முடிஞ்சா என்ன ஹெல்ப் வேண்டுமானாலும் நாங்க பண்றோம்”, என்று சொன்னார்.

     அகிலாவின் கணவர் தான் “கேட்டு பார்ப்போமா இவங்ககிட்ட”,என்று சொல்லி “தனக்கு கிடைத்த தகவலை வைத்து பாட்டியிடம் பேசலாம்”, என்றார்.

அவளும் சரி என்று தலையாட்டினாள், “ஆனா இவங்க மட்டும் வந்து பிரயோஜனம் இல்ல, இன்னொரு ஆள் வேணும்ல, அது யாரை கூப்பிடலாம்”, என்று கேட்டாள் .

“உங்க பாட்டி தாத்தாவை கூப்பிடுவோம்”, என்று அவன் சொன்னான்.

    “அதுவும் நல்ல ஐடியா தான்”, என்று சொன்னாள் .

  “என்ன ஐடியா” என்று பாட்டி கேட்டார்.

    அவர்களது பிளானை எல்லாம் துளசியும் அகிலாவின் கணவரும் சேர்ந்து பாட்டியிடம் விளக்கினர்.

     பாட்டியோ வாயில் கை வைத்தபடி “இதற்கு  கிருஷ்ணா சம்மதிக்கணுமே”, என்றார்.

   இவளோ பாட்டி “தப்பா எடுத்துக்காதீங்க, உங்க பேர சம்மதிக்கனும்னா, அவரு சம்மதிக்கவே மாட்டார்.  நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல, உங்க பேரனுக்கு காவி வேஷ்டி கட்டுவதற்கு தான் ஆசை இருக்கு., சோ தயவு செய்து இந்த பிளானுக்கு ஒத்துழைப்பு கொடுங்க, உங்க பேரன என்ன பண்ணலாம்னு நான் முடிவு பண்ணுகிறேன்”,. என்று சொன்னாள்.

   “அம்மாடியோ லண்டனில் இருந்து வந்தாலும் வந்த, இந்த அளவுக்கு முடிவெடுக்க”, என்றார் .

  பின்ன உங்க பேரன மாதிரி 19 வருஷம் காவல் காத்திட்டே உட்கார்ந்து இருக்க சொல்றீங்களா., அதெல்லாம் கிடையாது., உங்க பேரன் நினைச்சிருந்தா இதுக்குள்ள நீங்க கொள்ளு பேரனே எடுத்திருக்கலாம்”, என்று சொன்னாள்.