‘இவர் பொண்ண கல்யாணம் பண்ணினோம் னா, நாளைக்கு இந்த ஆளு இன்னும் அதிகமா பேசுவான், வேண்டாம்’, என்று நினைத்து அவன் உடையை மாற்றி விட்டு அப்படியே படுத்து விட.,
மதிய உணவிற்கு தான் நவீன அழைக்க வந்தான். அதற்குள் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்திருந்தான்.
இங்கே துளசியோ புடவை கூட மாற்றாமல் நகம் கடித்த படி பின்வாசலில் உட்கார்ந்திருந்தாள்.
அகிலா தான் சொன்னாள், “இப்பதான் பேசிட்டீங்க இல்ல, சொல்ல வேண்டியது சொல்லிட்டீங்க ல்ல அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷன்”, என்றாள்.
“ஒன்னுமே பதில் சொல்லலையே”, என்று சொன்னாள்.
“சொல்லுவான், சொல்லுவான், பொறுங்க உடனே பதில் கிடைக்காது”, என்றாள்.
“அதுவும் சரிதான், ஆனா நீங்க எல்லாரும் இன்னைக்கு போயிருவீங்களே, நான் எப்படி பதில் கேட்டுக்கிறது”, என்று கேட்டாள்.
“நீங்களும் உங்க வீட்டுக்கு போயிடுவீங்களா”, என்று கேட்டாள்.
“போவேன்., போயிட்டு வாரத்தில் இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு வருவேன்.,
மீதி நாள் மாமியார் வீடு”, என்று சொன்னாள்.
“ஓஓ அப்படியா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அனைவரும் உணவுக்கு வர,
பாட்டி தான், “துளசி இன்னும் ஏன் பின்னாடியே உக்காந்துட்டு இருக்க வா., சாப்பிட வா”, என்று அழைத்தார்.
இவனும் பார்க்காதது போல பார்த்தவன்., ‘இன்னுமா இந்த லூசு பின்னாடி உட்கார்ந்துகிட்டு இருக்கு’, என்று யோசனையோடு பார்த்துவிட்டு அமர்ந்து கொண்டான்.
அனைவரும் உணவு உண்ண அமர்ந்தனர்,
“நீயும் சாப்பிட வா உட்காரு”, என்று சொல்லி பாட்டி அழைக்க.,
“பசிக்கல பாட்டி, நீங்க சாப்பிடுங்க ,நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுகிறேன்”, என்று சொல்லி விட்டு அறைக்கு சென்றவள், அப்படியே படுத்து விட்டாள்.
“கடவுளிடம் நான் என்ன பண்ணுவேன் கடவுளே, நான் சரியா சொன்னே னா தெரியலையே, என்ன பேசினேன் னா தெரியல., இதுக்கு மேல, ஏதாவது பிளான் பண்ணு கடவுளே”, என்று புலம்பினாள்.
அரை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது., எழுந்து வந்து கதவை திறந்தாள்.
நவீன் தான்., “சாப்பிட வா, எல்லாரும் தோட்டத்துக்கு போறாங்களாம், நம்மளும் சாப்பிட்டு தோட்டத்துக்கு போலாம் வா வா” என்று சொன்னாள்.
“போடா, அந்த மனுஷன் கிட்ட பேசுறதும் ஒன்னு தான்., பேசாததும் ஒன்னு தான்”, என்று டல்லாக பேசினாள்.
“அச்சச்சோ கஜினி முகம்மது மாதிரி இருக்கணும்”, என்று சொன்னான்.
“யாருடா அந்த கஜினி முகமது”, என்றாள்.
“இது இந்தியன் ஹிஸ்டரியில் உள்ளது., நீ லண்டன் ஹிஸ்டரி தான் படிச்சிருப்ப”, என்று சொன்னான்.
“இந்தியன் ஹிஸ்டரியில் முக்கியமான ஆளா”,என்று கேட்டாள்.
“கஜினி முகமதுங்கிறவரு எத்தனை தடவை படை எடுத்து வந்திருக்கிறார் தெரியுமா?, ஒரு தடவை தோற்றுப் போயிட்டாருன்னு அவர் தூங்க ஓடிப்போகல., திரும்பத் திரும்ப படையெடுத்து வந்தார்”, என்று சொன்னான்.
“டேய், அந்த கதையை சொல்லேன்”,என்றாள்.
“இது கதை இல்ல, ஹிஸ்டரி, வா நீயும் இப்ப அந்த கஜினி முகமது மாதிரி திரும்ப திரும்ப படையெடுத்து எங்க அண்ணன்ட்ட போ”, என்றான்.
“கடைசில ஜெயிச்சிடுவாங்களடா”, என்று கேட்டாள்.
“ஜெயிக்கிற ஜெயிக்கணும். அதை ஞாபகம் வைத்துக்கொண்டு போ”, என்றான்.
“சரிடா, அப்புறமா அந்த கஜினி முகமது கதையை சொல்லு”, என்று சொன்னான்.
“அய்யய்ய லண்டன் ஹிஸ்டரி வா., இந்தியன் ஹிஸ்டரி, அதை அப்புறமா படி”, என்று சொல்லிவிட்டு சாப்பிட அழைத்து சென்றான்.
பின்பு ஆளாளுக்கு பேசியபடி சாப்பிட, இவள் அமைதியாக யோசனையோடு சாப்பிட்டாள்.
சாப்பிட்ட படி யாரும் பார்க்காத நேரம் அவளை லேசாக பார்த்தவன்., ‘எதோ பிளான் பண்ணுது போல, சிக்கிக்கிற கூடாது’, என்று யோசித்துக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்து, சற்று நேரத்தில் அனைவரும் தோட்டத்திற்கு கிளம்ப வீட்டிலிருந்து மற்றொரு காரில் கிளம்பினர்.
‘ஐயோ மொத்த கூட்டமும் வருதே’, என்று யோசித்தவள்,
நவீனை பார்க்க, நவீனோ “வா என் கூட” என்று சொல்லி அவளை நேற்று போலவே கிருஷ்ணாவின் காரில் அவர்கள் ஏறிக்கொள்ள பெரியவர்கள் எல்லாம் வேறு காரில் வந்தனர்.
நவீன் நேற்று போல, ‘இருவரும் பார்க்கிறார்களா’ என்று யோசித்துக் கொண்டே அவ்வப்போது கண்ணாடியை பார்க்க துளசியோ நிமிர்ந்து பார்க்கவில்லை.,
ஆனால் பார்த்தும் பார்க்காதது போல , அவள் என்ன செய்கிறாள், என்பதை பார்த்துக் கொண்டே தான் வந்தான் கிருஷ்ணா,
‘மேடம் உற்சாகம் குறைஞ்சிடுச்சு போல’, என்று நினைத்துக் கொண்டு, இப்படியே லண்டனுக்கு பேக் பண்ணி அனுப்பி விடனும்., என்று நினைத்துக் கொண்டான்.
அங்கு இறங்கி தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். பின்பு தோட்டத்தை சுத்தி பார்த்துவிட்டு, பெரியவர்கள் எல்லாரும், தோட்டத்தில் வேலை செய்பவரிடம் அமர்ந்து பேசிக்கொண்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறியவர்கள் எல்லாம் அப்படியே நடக்க தொடங்கினர்., அப்போது கிணற்று பக்கம் வந்து சேர பம்பு செட்டில் தண்ணீரை பார்த்து., வேடிக்கை பார்த்துக் கொண்டுஅகிலா இடமும், நவீன் இடமும் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“தலையில் விழுந்தால் வலிக்காதா”, என்று கேட்டாள்.
தள்ளி நின்ற கிருஷ்ணாவோ, திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.
அதே நேரம் அகிலாவின் கணவன் வந்து கிருஷ்ணா வோடு சேர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.
இங்கு இவர்களுடைய பேச்சு தொடங்கியது., பின்பு மெதுவாக கிணற்றை எட்டிப் பார்க்க, “நவீன் தான் நீச்சல் தெரியுமா? தள்ளிவிடவா”, என்று கேட்டான்.
அவசரமாக பின்னுக்கு வந்தவள், “என்னை கொல்ல பாக்குறியா”, என்றாள்.
“அது இல்ல” என்று சொல்லவும், இவளோ முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசிக்க..,
“என்ன “என்றான்.
நவீன் அவளும் மெதுவாக பின்பக்கம் கிருஷ்ணா இருந்த இடத்தை திரும்பி பார்க்க அவன் கவனமாக முக்கியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் .,
அகிலாயை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நவீனிடம் ‘கூடவே வாடா’ என்று சொன்னாள்.,
“உங்க ஊருக்கு போயிட்டு எப்ப வருவீங்க”, என்று கேட்டாள்,
“ஏன் எப்பவாவது நினைச்சா வருவோம், பிளான் இல்லன்னா, பாட்டி தாத்தா அங்க வருவாங்க, ஏன் கேக்குற”, என்று கேட்டாள் ,
“அடுத்த வாரம் வரிங்களா” என்றாள்.
“ஏன் திடீர்னு அடுத்த வாரம் கேக்குற”, என்று நிதானமாக கேட்டனர்.
“டேய் , இப்ப நீ தான் ஒரு செம ஐடியா கொடுத்த”, என்று சொன்னாள்.
அகிலாவும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “என்ன ஐடியா” என்று கேட்டனர்.
” இப்ப சொல்ல வேண்டாம், நான் அதுக்கு பக்கவா பிளான் பண்றேன்., ஆனா நீ உங்க அண்ணன தள்ளிட்டு வந்துடனும்., வந்துருவியா”, என்று கேட்டாள்.
அகிலாவோ, “ரிஸ்க்கியான எதுவும் எடுக்காதீங்க., எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க”, என்று சொன்னாள் .
“பயப்பட எல்லாம் செய்யாதீங்க, உங்க அண்ணன கவுக்கறது எப்படிங்கறது மட்டும் தான் இப்ப பிளான் பண்ணனும்., வேற எதைப்பத்தியும் யோசிக்க கூடாது”, என்றவள்.
“டேய் உங்க அண்ணனுக்கு நல்ல ஸ்ம்விங் தெரியுமா”, என்றாள்.
“தெரியும்” என்றான்.
” ஏய் அப்ப இது சூப்பர் ஐடியா”, என்று சொல்லவும்.
“என்ன ஐடியா”, என்றான்.
“அடுத்த வாரம் நீ வா., நான் கிணத்துக்குள்ள ஜம்ப் பண்ணுறேன்”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே.,
“ஏய்”, நவீன் சத்தம் போட.,
“எருமை கத்தாதேடா”., என்றவள்., “ஜம்ப் பண்ணிருவேன்., நீ என்ன பண்ணு., நான் குதிக்க மாட்டேன்னு சொல்லிரு., நீங்களும் குதிக்க மாட்டேன்னு சொல்லிருங்க., இந்த நேரத்துல பெரியவங்க யாரும் இருக்கக்கூடாது., நீ என்ன பண்ற உங்க அண்ணன புடிச்சு உள்ள தள்ளி விட்டுறு., காப்பாத்தி கூட்டிட்டு வான்னு சொல்லி., சரியா”, என்று சொன்னாள்.
“ஓஹோ மேடம் அப்படி பிளான் பண்றீங்க”, என்றான்.
“டேய் அனுப்புடா, அப்படியாவது உங்க அண்ணன் வழிக்கு வராரான்னு பார்ப்போம்”, என்று சொன்னாள்.
“கடைசில நீ என்னை மாமா வேலை பார்க்க வைப்பேன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னான்.
“டேய் தம்பி தானே, உங்க அண்ணன நான் பார்க்கல., இத்தனை வருஷமா பேசலன்னு., மட்டும் கோவப்பட்ட தானே.,
எனக்கு அப்பவே தெரிஞ்சிருந்தா., நான் வந்து இறங்கி இருப்பேன் சரியா., எனக்கு தெரியாது, நான் வரல, இப்ப தெரியாம தான் வந்தேன்., வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுச்சு., தெரிஞ்ச உடனே நான் தான் பிளான் பண்ணிட்டு இருக்கேன்., உங்க அண்ணா எந்த பிளானும் பண்ணல சரியா.,
உங்க அண்ணன் இப்ப அங்க என்ன பிளான் பண்ணிட்டு இருப்பாங்க தெரியுமா, பத்திரமா என்னை என்னைக்கு லண்டன் பேக் பண்ணலாம்னு பிளான் பண்ணிட்டு இருப்பாரு., அதைத்தான் செய்வாரு, சீக்கிரம் பிளான் பண்ணுங்க., த்ரீ மந்த் டைம் தான்., த்ரீ மன்த்ஸ்குள்ள நான் உங்க அண்ணன் மனச மாத்திட்டு தான் இங்க இருந்து கிளம்பனும்., போய் லண்டன் விசாவை என்ன பண்றதுன்னு பிளான் பண்ணனும்.,
அதையும் விசாரிக்கிறேன்., விசாரித்து அப்புறம் பேசுவோம்”, என்று சொன்னாள்.
நவீன் வாயில் கையை வைத்தபடி இவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்.,
“இவ்வளவு தைரியமா கிணத்துல குதிக்கிறியே, உள்ள கல்லு இருக்கலாம், பாம்பு இருக்கலாம், சரி ஏதும் தலையில இடிச்சிருச்சு னா”., என்றான்.
“எந்த பக்கம் கல்லு இல்லங்குறத, கரெக்ட்டா பார்த்து நீ தான் சொல்லணும்., சரியா, இதுக்கு இடையில நான் பாட்டி தாத்தாவோட வந்து, கிணத்துல எந்த பக்கமாக இறங்கினால் கல்லு இருக்காதுன்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன்., சரியா, அதுக்கு இடையில நீ கேட்டு வை, கரெக்டா பிளான் பண்ணி சக்சஸ் பண்றோம் சரியா., நான் பாதி தூரம் இறங்கி அதுக்கப்புறம் தண்ணிக்குள்ள குதிக்கிறேன்.,
நீ என்ன பண்ற உங்க அண்ணன் எப்படியாவது கூட்டிட்டு வந்து இறக்கி விடுற”, என்று சொன்னவள்.,
“டேய் ப்ளீஸ் டா, மாட்டேன்னு சொல்லிராத இதுதான் இருக்கிற கடைசி வழி”, என்று அவள் பிளான் செய்து கொண்டிருந்தாள்.