12

     “பாவா நிறைய பேசணும்., அந்த ஸ்டோன் பென்ஜ் ல உட்கார்ந்துக்கலாம்”, என்று கேட்டாள்,

   அவன் திரும்பி பார்க்க நல்ல மர நிழல் தான், அந்த மரத்தடியில் திண்டு போல கட்டி விட்டிருந்தார்கள்,

      கல் திண்டு  நல்ல சுத்தமாகவே இருந்தது, உட்காரு என்றான்,

     அவனும் அவளுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான்.

    எங்கிருந்தாலும் அவர்கள் அமர்ந்திருப்பது தெரியாது., சுற்றிமூற்றி பார்த்துவிட்டு “சரி சீக்கிரம் சொல்லு”, என்றான்.

   “பாவா” என்று தொடங்கியவள், லண்டனில் அவளுடைய படிப்பு, வீட்டு வளர்ப்பு முறை, அவளுடைய உடை, பழக்க வழக்கம், சமையல் என அனைத்தையும் சொன்னாள்.

     இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை அப்பா அதிகபட்சமாக வாங்கி கொடுத்தது புடவை தான் என்பதையும் அவனுக்கு சொல்லியவள்,

    “அதற்குப் பிறகு உன் இஷ்டம், இனிமேல் எப்படினாலும் டிரஸ் பண்ணிக்கோ, அப்படின்னு சொன்னாங்க”, என்பதையும் தெரியப் படுத்தினாள்.

   பிறகு தன்னுடைய நட்புகளை பற்றி அதிகமாக சொன்னவள், இப்போதும் அவர்கள் தான் தனக்கு உதவி செய்வதாக சொல்லி இருப்பதையும் சொன்னாள்.,

     கல்யாண விஷயத்தில் அப்பாவின் பிடிவாதத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தவள்,

     “பாவா எனக்கு ஒரு முடிவு நீங்க தான் சொல்லணும், ஏன்னா இதுதான் நான், இதுவரைக்கும் உள்ளது தான் என்னோட லைஃப், அங்க எனக்கானது எதுவுமே கிடையாது, உங்கிட்ட மறைக்கிற அளவுக்கோ, உங்ககிட்ட சொல்லக்கூடாத விஷயங்கள் அப்படின்னு எனக்கு அங்க எதுவுமே கிடையாது,

     நான் உன்கிட்ட நேத்தே சொல்லிட்டேன், எனக்கு லவ் ங்கிற ஃபீல் அங்க இருக்குற வரைக்கும் வரல., இப்பவும் நான் லவ் அப்படிங்கிற  ஃபீல் எனக்கு வந்துருச்சா அப்படின்னு தெரியாது.,

ஆனா உங்களை பிடிச்சிருக்கு, உங்களை பார்க்க பிடிச்சிருக்கு, உங்க கிட்ட பேச புடிச்சிருக்கு, இங்க இருக்க புடிச்சிருக்கு, எல்லாமே புடிச்சிருக்கு”,
அவன் இடையில் பேச வர அவனை கையை காட்டி நிறுத்தியவள்.

     “தயவு செய்து தடங்கலா, எதுவும் சொல்லிடாதீங்க பாவா,  நான் பேசி முடிச்சிடுறேன்”, என்று சொன்னவள்,

    “நீங்க இப்ப என்ன கேட்க போறீங்கன்னு தெரியும்., வெறும் பிடிச்சதை வைத்து லைப்ல வாழ முடியாதுன்னு சொல்லுவீங்க, கண்டிப்பா இது வாழ்க்கை.,  நம்மளுடைய தமிழ் பேமிலி அங்கே இருக்கிறவர்களை பார்த்து இருக்கேன்., எனக்கு எப்படி ஒரு ஃபேமிலி லைப் வேணும் அப்படிங்கறது என் மைண்ட்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி இருந்தே தோணுச்சு.,

   லவ் ஃபீல் வரலை, ஆனால் தோணுனது லைஃப்  உண்மையான அன்பு  வேண்டும் ன்னு நினைத்தேன்., அது மட்டும் இல்லாம ஒழுக்கம் முக்கியமான விஷயம்., ஒழுக்கம் வேணும் அப்படின்னு நினைச்சேன்.,

     சீரியஸ்லி அங்க  லைஃபை வந்து ஈஸியா எடுத்துக்கிறாங்க., வாழ்க்கையில அதை எப்படி எனக்கு  பேசுறதுன்னு தெரியல., பட் அவங்களோட கலாச்சாரம் வேற., அந்த கலாச்சாரம் எனக்கு ஒத்து வராது, எனக்கு தெரியும்.,

     இங்க இருந்து போனவங்க நிறைய பேர் ஒழுக்கமா இருக்கிறவங்களும் இருக்காங்க., அதை  தாண்டி அவங்க கலாச்சாரத்தில் வாழ்றவங்களும் இருக்காங்க., நான் அதுல மட்டும் ஸ்டெடியா இருந்தேன்.,  எனக்கு அங்கு உள்ள கலாச்சாரம் வேண்டாம் அப்படிங்கிறதுல, என்னோட கலாச்சாரம் இத வந்து நான் மாத்திக்க கூடாது., அம்மா எனக்கு நிறைய சொல்லுவாங்க ., நான் ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே., இந்த ஊர்ல உள்ளவங்க  வேற, நம்ம ஊரோட பழக்க வழக்கம் இப்படித்தான் இருக்கும்., அப்படின்னு சொல்லி தான் வளர்த்தாங்க.,

     மே பி பாட்டி சொன்ன மாதிரி டூ இயர்ஸ் பிபோர் வரைக்கும் அப்பா நல்லா தான் இருந்தாங்கன்னு சொன்னாங்க.,  ஐ திங்க் சோ அதுவரைக்கும் அப்பா அப்படித்தான் இருந்திருப்பார் ன்னு எனக்கு தோணுது.,

       ஏன்னா அதுவரைக்கும் என்னை சமையல் கத்துக்க சொன்னாங்க., புடவை கட்டிக்கணும்னு சொன்னாங்க., கோயில் போனா கூட புடவை கட்டி தான் கூட்டிட்டு போவாங்க., குளிர் அதிகமாக இருந்தால் மட்டும்தான் ஜீன்ஸ் மாதிரி எல்லாம்.,  குளிர் இல்லாத நேரம்.,  நான் வெளியே கிளம்பினா மேக்சிமம்  சுடிதார் சாரி  தான்.,

    இங்க பாட்டி சொன்னத வச்சு பார்க்கும் போது அப்ப தான் அப்பாவோட மைண்ட் மாறி இருக்கலாம், அப்படின்னு தோணுது.,

     ஆனா ஏன் என்னையே இந்தியா கூட்டிட்டு வரல., எனக்கு ஏன் இங்க யாரையும் அறிமுகப்படுத்தி வைக்கல, அப்படின்னு எனக்கு இப்ப வரைக்கும் புரியல., சோ அப்பா பண்ணதுக்கு நான்  எதுவும் எக்ஸ்க்யூஸ் கேட்கவோ.,  எதுவும் சொல்லவோ போறது இல்ல.,

   ஆனா எனக்கு இங்க உள்ள லைஃப் தான் வேணும் பாவா., என்ன விரும்பற ஒருத்தரோட வாழ்வதை நான் சந்தோஷமா தான் நினைக்கிறேன்., மே பி எனக்கு உங்கள தெரிந்திருந்தால் எனக்கும் லவ் இருந்திருக்கும்.,

    அதுக்காக இப்ப விருப்பம் இல்லையா ன்னு கேட்காதீங்க., எனக்கு உங்கள புடிச்சிருக்கு., பிடிக்கப் போய் தான் நேத்திக்கு நான் வந்து உங்க கிட்ட பேசினேன்., உடனே நேத்து தான பார்த்த எப்படி புடிச்சுச்சுன்னு கேட்காதீங்க.,

     நம்மள விரும்புறவங்க கிடைக்கிறது எல்லாம் ஒரு வரம்னு சொல்லுவாங்க இல்ல.,  அந்த வரம் எனக்கு கிடைச்சிருக்கு ன்னு நினைக்கிறேன்., அதுக்காக நீங்க உடனே சொல்லிடாதீங்க., அப்போ உனக்கு புடிக்கல இல்ல., எனக்கு வரம் கிடைக்கலை ன்னு சொல்லிடாதீங்க.,

    எனக்கும் பிடிக்கும், ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க அளவுக்கு நான் விரும்பல அப்படின்னு நீங்க நினைச்சாலும், கண்டிப்பா உங்க அளவுக்கு என்னால விரும்ப முடியும்,
வந்து எப்படி சொல்றது, கலாச்சாரம் , கலாச்சாரம் சொல்லி சொல்லியே வளர்த்தால ஒரு கட்டுப்பாடோடு தான் வளர்ந்தேன்., சோ எடுத்த உடனே என்னால மாற முடியுமான்னு தெரியல., அது மட்டும் இல்லாம எப்படி சொல்றது பாவா.,

    நான் நல்ல வைஃப்பா இருப்பேன்., அது மட்டும் நான் சொல்றேன்.,  கண்டிப்பா உங்களுக்கு நல்ல வொய்ப்பா, உங்க வீட்டுக்கு நல்ல மருமகளா நிச்சயமா இருப்பேன்னு நம்புறேன்”, என்று இவள் பேசிக்கொண்டே சென்றவள்.

அவன் முகத்தை பார்க்க அவனும் அமைதியாக குனிந்து இருந்தான்.

இவள் பேசுவதை நிறுத்திவிட்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  “பாவா” என்றாள்., அவன் பதிலே சொல்லவில்லை என்றவுடன் மெதுவாக கல் திண்டில் கை வைத்திருந்த, அவன் கையை மெதுவாக தட்டவும்., என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்.

   அவளைப் பார்க்க, அவளோ அவனே பார்த்துக் கொண்டே “பாவா நான் சொன்னதை கேட்டீங்களா, தூங்கிட்டீங்களா”, என்றாள்.

    அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு  “ம்ம் இப்ப என்ன”, என்றான்.

   “இத சொல்ல தான் கூப்பிட்டயா”, என்று கேட்டான்.

     ம்ம் ம்ம் தலையாட்டினாள்.

        அவனோ “போ இடத்தை காலி பண்ணு”, என்றபடியே  பார்க்க, நகராமல் இருக்க, “சொல்லுறேன் இல்ல”, என்றவன்,

       அவன் எழுந்து போக முயற்சிக்கவும், அவசரமாக அவன் கையை பிடித்தவள் “பாவா நீங்க ஒண்ணுமே பதில் சொல்லல”, என்றாள்.

     “என்னத்த சொல்லணும், எனக்கு இந்த துளசி ன்ற பேர் தான் புடிச்சிருந்துச்சு”, என்று சொன்னான்.

  “பாவா நான் இதையும் சொல்ல மறந்துட்டேன், கொஞ்சம்  நில்லுங்க”, என்று சொன்னாள்.

     ‘சரியான லூசா இருக்குமோ’, என்று மனதிற்குள் நினைத்தாலும்,  அவளை திரும்பி பார்க்க.,

     “துளசி ன்ற  பேர் மட்டும் தான் சொன்னீங்க இல்ல, அவளுக்கு உருவம் கொடுக்கல இல்ல., இப்போ இந்த உருவம் தான், அந்த துளசி சரியா”, என்று தன்னை சுட்டிக்காட்டியவள்.,

    பின்பு “நான் என்னமோ சொல்ல நினைச்சேன் பாவா, ஆனா என்னால சொல்ல முடியல., பட் எனக்கு உங்கள புடிச்சிருக்கு பாவா., அவ்ளோ தான் இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லுன்னு தெரியல”, என்று சொல்லி பேச்சை முடித்து விட்டாள்.

அவன் அங்கிருந்து நகர தொடங்கினான், அவள் அதே கல் திண்டில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

  சற்று தள்ளி சென்று நின்றவன்.,  திரும்பி பார்த்து “இங்கே எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க போற., எழுந்து வீட்டுக்குள்ள போ” என்று சொல்லி விட்டு வேகமாக முன்பு நடக்க தொடங்கினாள்.

    அவனையே சற்று நேரம் பார்த்து இருந்தவள், அவன் சென்று சற்று நேரத்திற்கு பிறகு மெதுவாக எழுந்து வீட்டிற்கு வந்தாள்.

    பின் வாசலில் தான் நவீனும் அகிலாவும் நின்று கொண்டிருந்தனர்.

நவீன்  தான், “என்ன ஆச்சு, என்ன சொன்னாங்க”, என்று கேட்டான்.

  “ஒன்னும் சொல்லல, இவ்வளவு நேரமா பேசி எனக்கு தொண்டை வலிக்கிறது தான் மிச்சம், போடா”, என்று சொன்னவள்.

   “ஆமா இப்ப போகும் போது அவங்க பேஸ் எப்படி இருந்துச்சு பாத்தியா”, என்று கேட்டாள் மெதுவான குரலில்.

    அவன் தங்கையோ, “தெரியல, அண்ணே குனிச்சிட்டே விறு விறுன்னு உள்ள போய்ட்டாங்க”, என்று சொன்னாள்.

    மூவரும் பின் வாசலிலேயே உட்கார்ந்து விட., அவன் தான் அலமேலு ஆண்டியிடம் இங்கிருந்து தண்ணீர் வேண்டும் என்பது போல் கையை காட்டினான்.

    அவர்களும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க.,

“இந்தா முதல்ல இதை குடி”, என்று நவீன் கொடுத்தான்.

      வாங்கி தொண்டையில் சரித்தவள், “ஐயோ இவ்வளவு நேரம் பேசினதெல்லாம் வேஸ்ட்டாடா”, என்றாள்.

அவனும் ஹாலில் கூட அமராமல் நேராக தன் அறைக்கு சென்றவன்., கதவை சாத்தி விட்டு கட்டிலில் சாய்ந்தான்.

     “பேக்கு குட்டி எல்லாத்தையும் உளறுது, உண்மையிலேயே இந்த பொண்ணு அவங்க ஏன் இப்படி வளர்த்திருக்காங்க, ஒன்னு முழுசா லண்டன்ல உள்ள மாதிரி வளர்த்து இருக்கணும்., இல்ல முழுசா இந்தியன் கல்ச்சர் ஓட வளர்த்திருக்கணும்., இந்த பிள்ளையை இந்தியன் கல்ச்சர் கல்ச்சர் என்று சொல்லி, அங்க உள்ளவங்களோட ஒட்டவும் விடாம.,  திடீர்னு இந்தியன் கல்ச்சர் எல்லாம் வேண்டாம் சொல்லி பிரீடம் மாதிரியும் கொடுத்து.,  அது அங்கேயும் போக முடியாமல், இங்கேயும் போக முடியாம இரண்டுக்கும் நடுவுல திணறிட்டு நிக்குது.,

    இதுல வேற அதுக்கு சரியா சொல்ல கூட தெரியல.,  எனக்கு  லவ் பீல்ங்கற ஒன்னே இல்ல அப்படின்னு சொல்லுது.,  சோ அந்த மனுஷன் இருக்காரே’ என்று சொல்லி துளசியின் அப்பாவை நினைத்து திட்டியவன்.,

    ‘அவருக்கு பேச தான் தெரியாது நினைச்சேன்., பிள்ளை வளர்க்கவும் தெரியல பாரேன்’,என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.

    அவனுக்கு ஒரு புறம் சிரிப்பும் வந்தது. அவள் பேச்சையும், அவள் பேசும் போது அவ்வப்போது அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்ததையும் நினைத்து.

   லேசாக சிரித்து கொண்டவன்., அவள் சொன்னதைப் போல சொல்லி வேறு பார்த்துக் கொண்டிருந்தான்.,

   ” பாவா அழகா இருக்கீங்க”, ‘பேச்ச பாரு’ என்று நினைத்தவன்.,

    ‘பாவம் தான், திடீர்னு போய் உனக்கு இவ்வளவு சொந்தம் இருக்கு , இது தான் உனக்காக ஏற்படுத்தப்பட்ட லைப்.,  இவன் உன்ன நெனச்சிட்டு இருக்கான்., அப்படின்னு எல்லாம் சொல்லும்போது அவளோட மைண்ட் செட் எப்படி இருந்திருக்கும்’, என்று யோசித்தவன்.

    ‘வேண்டாம், அவங்க அப்பா ஹிட்லர்னு அவளே சொல்றா., அந்த மனுஷன் எப்ப வேணாலும் மாறுவாரு., வேண்டாம், வேண்டாம் , பேக் பண்ணி லண்டனுக்கு அனுப்பிடுவோம்’, என்று யோசித்தவன்.

     ‘இதுல வேற மேடம் நமக்கு அட்வைஸ், இதுவரைக்கும் துளசி ன்ற. பேர்தான் உங்களுக்கு ஞாபகம் இருந்துச்சு.,இனிமேல் இந்த துளசி ன்ற பெயருக்கு., என் உருவம் தான் ஞாபகம் இருக்கணும் ன்னு , பேச்ச பாரு’, என்று யோசித்தவன்.,

    ‘அது என்ன பேசும் போதே திக்கி பேசுறா, தமிழ் தெரியாதோ’ என்று நினைத்தவன்.

    “இல்லையே நல்ல தமிழ்ல தானே பேசுறா, வீட்ல சாதாரண தமிழ்ல தான் பேசி இருக்காங்க., அதனால தான் சாதாரணமா பேசுறா, அப்புறம் என்ன’, என்று யோசித்தவன்.,

     “பயப்படுறாளா,  ஒருவேளை”, என்று நினைத்தவன்., இருக்குமோ அதான் நவீன துணைக்கு கூட்டிட்டு நின்றாளோ’, என்று யோசித்தவன்,

    ‘பயப்படுதீயா என்னை பார்த்து, அப்ப பயந்துக்கிட்டே இரு, நான் உன்னை அப்படியே பயம் காட்டிட்டே இருக்கேன்’, என்று நினைத்தவனுக்கு,

    ஒரு புறம் சிரிப்பு வந்தாலும்,  இன்னொரு புறம் துளசியின் அப்பாவை நினைத்து கோபமும் வந்தது. ‘என்ன எல்லாம் பேசினாரு மனுஷன்’, என்று நினைத்துக் கொண்டான்.