“ரொம்ப சுத்தம் இன்னைக்காவது முகத்தை பார்த்துட்டு வா”,என்று நவீன் சொன்னான்.

   “முயற்சி பண்றேன் டா., டேய் போட்டோ இருந்தா காட்டுடா”, என்று கேட்டாள்.

   “அடிப்பாவி இந்தா எட்டுற தூரத்தில் இருக்கான்., போய் பாத்துட்டு வா போ” என்று சொன்னான்.

    “பேசணும்டா முதல்ல”, என்றாள்.

    “நீ முதல்ல மூஞ்ச பாரு, அப்புறமா பேசறத பத்தி யோசிக்கலாம்”, என்று நவீன் சொன்னான்.

     இவளோ அகிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “பாருங்க அவன் என்னை கிண்டல் பண்ணுறான், ஹெல்ப் பண்ணவே மாட்டேங்குறான்”, என்றாள்.

      “நவீன் சொன்ன மாதிரி, நீங்க முதல்ல முகத்தை பாருங்க, அதுக்கப்புறம் முகத்தைப் பார்த்து பேசுங்க, அப்படின்னா தான் உங்களால பேச முடியும், அப்பதான் உங்களுக்கு நினைத்ததை சொல்லவும் முடியும்”, என்று சொன்னாள்.

  “அதுவும் கரெக்ட் தான், சரி எனக்கு டைம் ஒதுக்கி தர சொல்லுங்க”, என்று சொன்னாள்.

    நவீன் தான், “சரி எல்லாம் வீட்டுக்கு கிளம்புவாங்க, வீட்டுக்கு போன உடனே ஒன்னு பாட்டி வீட்டு தோட்டத்தில் வைத்து பேசுங்கள், மொட்டை மாடி”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,

    “மொட்டை மாடியில் வெயிலு அடிக்கும்”., என்றாள்.,

    “சரி அப்போ தோட்டத்துல வச்சு பேசுங்க, இல்லாட்டி ரூமுக்கு போய் பேசுங்க”, என்றான்.,

     இவளுக்கோ படபடப்பாக இருந்தது, ‘ஐயையோ ரூம் கா வேண்டாம், நேத்திக்கு வேற ஹக் பண்ணிட்டு வந்துட்டோம், இதுக்கு வேற சேர்த்து வச்சு பளார்னு கன்னத்துல விட்டுட்டாருன்னா, என்ன பண்ண’, என்று நினைத்தவள்.,

      “நவி நீ உங்க அண்ணா கிட்டயே கேளு, பேசணும் எங்க வச்சு பேசலாம்னு மட்டும் கேளு, ப்ளீஸ்” என்றாள்.

     “கிளம்பு எல்லாரும்  வீட்டுக்கு கிளம்புறாங்க, முதல்ல கைல இருக்குறத சாப்பிடு”, என்று சொன்னாள்.

    இவளும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சிறு ஓடையில் கையை கழுவி விட்டு அங்கேயே நின்றவள்.,

    ‘இங்கேயே வச்சு பேசுனா என்ன’., என்று யோசித்து விட்டு நவீ என்று சத்தமாக கூப்பிட்டாள்.

    “என்ன”, என்றான்.

     “இங்கே பேசலாமாடா?, இடம் சூப்பரா இருக்கு”, என்று சொன்னாள்.

       “நீ இடத்தை பார்க்க வந்தியா, எங்க அண்ணன் கிட்ட பேச வந்தியா”, என்று கேட்டான்.

     “பேசணும்”, என்றாள்.

   ” இங்கே பேசினா ரொம்ப நேரம் பேச முடியாது., எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க னா, இன்னும் வரலையா இன்னும் வரலையா,  வீட்டுக்கு போயிட்டா, தோட்டத்தில் போய் பேசலாம், எவ்வளவு நேரம் பேசினாலும் யாரும் ஏன்னு கேட்க மாட்டாங்க., என்ன ஓகேவா”, என்று சொன்னாள்.

     ” ஓகே” என்று அவள் தலையாட்டி கொண்டிருக்க.,

    பின்பு அனைவரும் வீடு நோக்கி கிளம்பினர்.

     நேராக வீட்டிற்கு வந்து இறங்கியவர்கள்., வீட்டிற்குள் வந்து பூஜை பொருட்களை சாமி அறையில் வைத்து விட்டு, அனைவரும் ஹாலில் அமர்ந்து கொண்டனர்.

     அலமேலு அத்தனை பேருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

    எல்லோரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்க., இவளோ, ஜூசை எடுத்துக் கொண்டு பின்வாசலை நோக்கி சென்றாள்.

     அவள் செல்வதை பார்த்த நவீன், மெதுவாக  கிருஷ்ணாவிடம் வந்து நின்றான்.

    நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணா, “என்ன” என்று கேட்டான்.

     “அங்க ஒரு ஆள் வெயிட்டிங், பேசணுமாம் கூப்பிடுச்சி”, என்று சொன்னான்.

    “இப்ப எல்லாம் பேச முடியாது”, என்று சொன்னான்.

     “அப்போ ரூமுக்கு தான் வருவாங்க, நான்  போய் சொல்லுறேன்,  இப்ப பேச முடியாது  ன்னு சொன்னாங்க ன்னு சொல்லுறேன்”, என்று சொன்னான்.

பின்னாடி ஜூஸ் உடன் நின்று யோசனையோடு நின்று கொண்டிருந்தவளிடம்.,  “அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க” என்று சொன்னான்.

  இவள் திரும்பிப் பார்க்கும் போது அவனும் சரியாக இவளை நிமிர்ந்து பார்த்தான்., இவளோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் வேறு புறமாக முகத்தை திருப்பிக் கொண்டான்.

   “உங்க அண்ணன ரூமுக்கு போக சொல்லு டா,  நான் ரூமுக்கு போகிறேன்”, என்று சொன்னாள்.

     “ஏய் உங்க ரெண்டு பேருக்கும், நான் என்ன தூதா”, என்று அவன் கேட்டான்.

  “அப்ப போன் நம்பர் குடு, நான் போன் பண்றேன்”, என்றாள்.

     “அம்மாடி, நான் தான் போன் நம்பர் குடுத்தேன்னு  தெரிஞ்சுச்சு என்ன தொலைச்சுட்டான்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

அகிலாவும் அவள் கணவனும் வர,

    இவள் “உங்க அண்ணன் பேச வருவாரா, இல்லையான்னு கேளுங்க, இவன் ட்ட பேச முடியாதுன்னு சொல்லி இருக்காங்க”, என்று சொன்னாள்.

      அகிலாவின் கணவர் தான், “என்னம்மா  தடாலாடியா  இறங்கிட்ட”, என்று கேட்டார்.

      “இது சரிப்பட்டு வராது, இருங்க நான் பேசிட்டு வந்து சொல்றேன், நீங்க எனக்கு அண்ணன் தானே”, என்று கேட்டாள்.

        “ஆமா மா ஆமா”, என்றான்.

     “ஓகே வெயிட் பண்ணுங்க, பேசிட்டு வந்து சொல்றேன்., ஹெல்ப்புக்கு நீங்க எல்லாம் இருக்கீங்க ன்ற நம்பிக்கையில தான் போறேன்., ஒருவேளை வீல்  ன்னு சத்தம் கேட்டுச்சுன்னா வந்து காப்பாத்துங்க., அந்த மனுஷன் கோவத்துல அடிச்சாலும் அடிச்சிட கூடாது”, என்று சொன்னாள்.

   அகிலா தான், “அவ்வளவு பயம் இருக்காங்க, அண்ணன் மேல”,என்று கேட்டாள்.

     “உங்க அண்ணனை பார்க்கவே டெரர் பீஸ் மாதிரி தெரியுது, திரும்பி பார்க்காமலேயே முறைச்சு பார்க்கிறார் ன்னு ஃபீல் ஆகுது, இந்த  அழகில் அவரு மூகத்தை பார்க்க சொல்றீங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அதே நேரம் அகிலா போய் அவனை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தவள், “போ ண்ணா போய் பேசிட்டு வா, இல்லாட்டி அவங்க எங்க மூணு பேரையும் உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க போ”, என்று சொல்லி பின்வாசலுக்கு இழுத்துக்கொண்டு வருவதை வீட்டினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

    “சரி எப்படியோ அவங்களுக்குள்ள பேசி முடிவுக்கு வரட்டும்”, என்ற எண்ணத்தோடு இருந்தனர்.

    இவன் தோட்டத்தில்  இறங்கி வேகமாக நடக்க தொடங்கினான்.

இவளோ அகிலாவின் கையை பிடித்து, “தேங்க்யூ சோ மச், இந்தா வந்துட்டேன்” என்று சொல்லி வேகமாக அவன் பின்னே சென்றாள்.

   வேகமாக வந்து சரியாக ஒரு பெரிய மரத்தின் மறைவில் வந்து நின்றான்.

    ஏனென்றால் பின்வாசலில் இருந்தோ, வேறு எங்கிருந்து பார்த்தாலும் இவன் அந்த இடத்தில் நிற்பது தெரியாது, ஏனெனில் அவன் மனதிற்குள் ‘இந்த பேக்கு குட்டி, என்ன வேலைனாலும் பார்த்து வைக்கும்., யாரும் பாத்துட்டாங்கனா ஒன்னும் பண்ண முடியாது’, என்று நினைத்துக் கொண்டே தான் அங்கு வந்து நின்றான்.

        ‘என்ன பேசணுமாம் இப்போ அவளுக்கு., நேத்து  தான் ஏதோ உளறிட்டு போனா., இப்ப என்ன பேசணும் ன்றா,  என்ன தெரியும் அவளுக்கு, இங்கு உள்ள ஃபேமிலி சிட்டுவேஷன்., அவங்க அப்பா பேசியது எதுவுமே தெரியாது.,  அதுவா வந்து பேசணும் ன்னு நிக்குறா’,என்று யோசித்து பெருமூச்சு விட்டபடி நின்றான்.

    அவளும் வேக வேகமாக அவனோடு வந்து சேர்ந்து கொண்டாள்.

    நேற்றும் புடவையில் தான் நின்றாள், ஆனால் இன்று சற்று வித்தியாசமாக தெரிந்தாள்,  அவன் அவளை ஒரு முறை பார்த்ததோடு சரி திரும்பிக் கொண்டான்.

       இவளோ அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

    அப்போது தான் அவன் நெற்றி, கண், மூக்கு, அவன் மீசை, காது, கன்னம் என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே இருந்தாள்.

   ‘வந்து நின்னு இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் ஒரு வார்த்தை கூட பேசலையே’, என்று எண்ணிய படி திரும்பியவனுக்கோ,

அவள் தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.

    “ஏய் என்ன பேசணும் தானே கூப்பிட்ட, இப்ப முகத்தை அப்படி  பார்த்துகிட்டு இருக்க”, என்று கேட்டான்.

   இவளோ அவனைப் பார்த்து லேசாக சிரித்தபடி.,  “அழகா இருக்கீங்க பாவா” என்று கண்ணை சிமிட்டியை படியே சொன்னாள்.

   இவனுக்கோ ஒரு நிமிடம், ‘இவ என்ன சொன்னா இப்போ’, என்று தான் தோன்றியது.

   மறுபடியும் அவனையே பார்த்தவள், “நிஜமா பாவா, என் லைஃப்ல நான் ஒரு ஆள இந்த அளவு  பார்த்திருக்கேன் அப்படின்னா, அது உங்களை மட்டும் தான், நிஜமா எனக்கு இப்படி யாரையும் பார்க்கத் தோணவே இல்லை,

     ஆக்சுவலா நேத்து உங்க முகத்தை பார்த்து பேச, எனக்கு அவ்ளோ பயமா இருந்துச்சு, ஏதோ ஒரு கோபத்துல உங்க ரூம் வாசல் வரைக்கும் வந்துட்டேன்., அப்புறம் உள்ள வரவா வேண்டாமா தோணுச்சு.,  ஆனா வந்ததுக்கப்புறம் நீங்க கோவமா பேசின பிறகு கூட எனக்கு உங்களை விட்டுட்டு வரணும்னு தோணல.,  அதனாலதான் ஹக் பண்ணிட்டேன்., நீங்க என்ன தப்பா கூட நினைச்சிருப்பீங்க.,  நான் தொட்டு பேசினேன்னு, என் பிரண்ட்ஸ்க்கு அப்புறம் நான் தொட்டு பேசின ஆள் நீங்க மட்டும் தான்”, என்று சொல்லியவள், சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

    இப்போ இந்த அளவுக்கு உங்க மீசை, உங்க கண்ணு, உங்க காது, உங்க தலை முடி,  அப்படின்னு உங்கள இப்போ இப்படி பார்க்கிறதும் இதான் ஃபர்ஸ்ட் டைம்”, என்று சொன்னாள்.

   அவனுக்கோ, ‘அய்யய்யோ இவ என்ன இப்படி பேசிட்டு இருக்குறா, இதுக்கு ரூம்கே கூட்டிட்டு போய் இருக்கலாமோ’, என்று யோசித்தவன்.

    ‘இங்க பாரு இப்ப என்ன பேசணும்னு வந்த, அதை மட்டும் சொல்லு’, என்று சொன்னான்.

   “பேசணும் பாவா, பேசியே ஆகணும்”, என்று சொல்லி தான் இதுவரை யோசித்து இருந்ததை பேசத் தொடங்கினாள்.