காலை நேரத்தில் அனைவரும் கோயில் பூஜைக்கு என கிளம்பி கொண்டிருந்தனர்.
துளசியின் தாத்தா பாட்டி அங்கே தான் இருந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த இவளது சூட்கேஸ் திறந்து இன்று எந்த புடவை கட்டலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அடர் கத்திரிப்பூ நிற சேலை அகல ஜரிகை பார்டருடன் கூடிய சாப்ட் காட்டன் சேலையை தேர்ந்தெடுத்தாள்.
சேலையை கட்டி விட்டு கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவள், திருப்தியாகவே உணர்ந்தாள்,
‘நல்லா தானே இருக்கோம், ஆனால் பாவா யோசிக்கலையே, இல்ல யோசிக்க கூடாதுன்னு பிடிவாதத்தில் இருக்காரா, புரியலையே’, என்று கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திடமே பேசிக் கொண்டாள்.
‘மத்தியானம் பேசுவதற்கு., அவர் இன்னும் ஓகே கூட சொல்லல., ஆனா எப்படியாவது பேசியே ஆகனும், ஆனா என்ன பேச., என்ன பேசினாலும் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் தெரியலையே.,
நான் வேற லூசு மாதிரி மொட்டை மாடியில் வைத்து பேசுவோமான்னு வேற கேட்டேனே., இந்த வெயிலுக்கு மொட்டை மாடிக்கு வர மாட்டாங்க, அப்படிங்கிற தைரியம் தான், அவர் ரூம்ல வைச்சி பேச வரமாட்டார். அது கன்ஃபார்ம், வெளியே பேச பயந்து கூப்பிடுவேன் ன்னு நினைப்பாரு., இல்லாட்டி நேற்று மாதிரி கட்டி பிடிச்சிடுவேன்னு யோசிப்பரோ.,
பாத்துக்கலாம் துளசி., என்ன ஆனாலும் சரி, பாவாக்கு நீதான், உனக்கு பாவா தான்., அதுல ஸ்டெடியா இரு’, என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு தன் உருவத்தைப் பார்த்தவள்.,
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திடம் கேள்வி கேட்க தொடங்கினாள்.
“ஏன் துளசி, ஒருவேளை இங்க வளர்ந்து இருந்தா, இவரை பார்த்து உனக்கு லவ் ஃபீல் அப்பவே வந்திருக்குமா., இல்ல நீ லண்டன்ல யாரை பார்த்தாலும் லவ் பீலே வரல யாரைப் பார்த்தாலும் எனக்கு அப்படி தோணவே இல்ல அப்படின்னு சுத்திகிட்டு இருந்தியே., அந்த மாதிரி தோணி இருக்குமா”, என்று கேட்டுக் கொண்டாள்.
அவளை சற்று நேரம் யோசித்துக்கொண்டு “தெரியலையே” என்றவள்.
பின்பு மீண்டும் ‘நிறைய கொஸ்டின் இருக்கு இல்ல’ என்று நினைத்துக் கொண்டு ‘பாவா ட்டயே கேட்டுருவோமா’ என்றவள்.
‘ஒருவேளை நமக்கு இந்த கதை தெரியாமல் போய் இருந்தா, கடமைக்காக ஒரு கல்யாணம் பண்ணி, கடமைக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்போமா’, என்று யோசித்தவள்,
‘இல்ல இருக்காது. அப்படி இருக்கிறதா இருந்தா, அப்பா காட்டின மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லி இருக்கலாம்., ஆனா அப்ப தோணலையே, வாழ்க்கைன்னா எப்படி இருக்கணும் அப்படின்னு மத்தவங்க சொல்றதை கேட்டு இருக்கோம்., சினிமால சில ரொமான்டிக் சீன் பார்க்கும் போது, இந்த மாதிரி ஒரு ஹஸ்பண்ட் கிடைச்சா நல்லா இருக்கும் அப்படின்னு தோணுனது, எல்லாம் இருக்கு இல்ல’, என்று பிம்பத்திடம் பேசியவள்,
‘நான் இப்படி பேசுவதை பார்த்தால், என்னை லூசுன்னு நினைக்க மாட்டாங்க’, என்று நினைத்தாள்.,
‘நினைக்கிறது என்ன கன்ஃபார்மே பண்ணிருவாங்க’, என்று மீண்டும் கண்ணாடியில் ஒரு முறை பார்த்தவள்.,
‘பாவாவுக்கு இப்படி இருந்தா பிடிக்குமா’, என்று யோசித்தாள்.
லண்டனில் ‘யாருக்கு புடிச்சா என்ன, புடிக்காட்டி என்னன்னு, சொன்ன ஆளு, இப்ப இங்க வந்து பாவாக்கு பிடிக்குமா, பாவாக்கு பிடிக்குமான்னு யோசிக்கிற அளவுக்கு கொண்டு வந்து வைத்து இருக்காங்க., ஆனா இந்த மனுஷனுக்கு நம்மள பிடிக்குமா இல்ல., அவர் நேத்து சொன்ன மாதிரி உண்மையிலேயே அந்த துளசி ன்ற பேர் மட்டும் தானா., ஐயோ தெரியலையே, சரி பார்ப்போம், இரண்டு ஆள் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கு பாப்போம்., இந்த ரெண்டு பேர் ஹெல்ப் பண்றாங்களா., இல்ல டைரக்ட்டா பெரியவங்க கால்ல விழுந்து சரண்டர் ஆயிட்டனுமா., அப்படிங்கிறத போய் பேசிட்டு யோசிப்போம்,
சரி முதல்ல கோயிலுக்கு போவோம், கடவுளிடம் பெரிய அப்ளிகேஷன் போட்டுட்டு வருவோம், அதுக்கப்புறம் இன்னைக்கு பாவா ட்ட பேசிட்டு கன்ஃபார்மா ஒரு முடிவுக்கு வரணும்’, என்று மனதை தெளிவு படுத்திக் கொண்டவளுக்கு அவள் அறியாமல் முகத்தில் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
இதற்கு முன் அவள் இப்படி யாரிடமும் பேச வேண்டும் என்று கூட நினைத்தது கிடையாது., ஆனால் இன்று அவனின் முடிவு அவளுக்கு அத்தனை முக்கியமாகப்பட்டது.
காலம் எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று சிரித்துக் கொண்டாள்.
அதே சிரித்த முகத்தோடு அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலில் ஆங்காங்கே அனைவரும் நின்று பேசிக் கொண்டிருக்க.,
பெரியவர்கள் மட்டும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
இவளும் அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டாள்.,
பாட்டி தான், “பூ வச்சுக்கோமா”, என்றவர்.
“அலமேலு பிரிட்ஜில் பூ இருக்கும் பாரு, அதை எடுத்துட்டு வா துளசிக்கு, வெட்டியே எடுத்துட்டு வா, மீதி பூவ மத்தவங்க கைல கொடு”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பாட்டியே அவள் தலையில் பூவை வைத்து விட., இவளும் சிரித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
அதற்குள் வீட்டில் உள்ளவர்களுக்கு, அவள் மதியம் அவனோடு பேச கேட்டிருக்கிறாள் என்பது ஓரளவுக்கு தெரிந்ததால்., யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தாலும்,
பாட்டி மட்டும், “பார்த்து பேசுமா, டக்குனு கோவப்பட்டுருவான்”, என்று சொன்னார்.
இவளும் சிரித்தபடி தலையாட்ட,
துளசியின் அப்பா பாட்டி தான், “உங்க அப்பன் பேசி தான், அவன் இம்புட்டு கோபப்படுதான். அதனால நிதானமா பேசு”, என்று சொன்னார்.
“நான் பாத்துக்குறேன் பாட்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவீன் வருவது தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டாள்.
இவனும் வந்து சற்று தள்ளி அமர்ந்தவன், “என்ன பேசிடலாமா”, என்று கேட்டான்.
பெரியவர்களை பார்த்து விட்டு “தனியா சொல்றேன்” என்று மெதுவாக சொன்னாள்.
“எந்திருச்சு முதல்ல வா, பின்னாடி போய் சொல்லு இல்லாட்டி நானும் மறந்திடுவேன்., நீயும் மறந்துடுவ”, என்று சொல்லிவிட்டு பின் பக்கமாக சென்றான்.
இவளும் அவனோடு சென்றவள்., “பேசுறதுக்கு நேத்து உங்க அண்ணா கிட்ட கேட்டேன்., ஆனா வாயே திறக்கலையே, இப்போ எனக்கு எப்படியாவது பேசி ஆகணும்”, என்று சொன்னாள்.
” கோயில் போயிட்டு சீக்கிரம் வந்துருவோம்., எப்படியும் 11. 30 குள்ள நம்ம வீட்டுக்கு வந்துருவோம்., அதுக்கப்புறம் எப்படியாவது பிடித்து வைத்து பேசு., நீ தான் பேசிய ஆகணும்”, என்றான்.
“அது பேசிடுவேன், ஒருவேளை உங்க அண்ணன் நான் பேசுறதுக்கு ஒத்து வரலைன்னா”, என்றாள்.
“ஒத்து வரலைன்னா என்ன செய்யணும்”, என்று கேட்டான்.
“ஹெல்ப் பண்ணுவியா”, என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
கிருஷ்ணாவின் தங்கையும் வந்து சேர்ந்தவள், “நீங்க ஏன் கவலப்படுறீங்க., நான் ஹெல்ப் பண்றேன், அவனும் ஹெல்ப் பண்ணாட்டி போகட்டும்”, என்று சொன்னாள்.
“ஹலோ நானும் ஹெல்ப் பண்ணுவேன்” என்று சொன்னான்.
அகிலா கையை பிடித்துக் கொண்டு , தம்பியை பார்த்து திரும்பியவள், “நவீன் உன்கிட்ட நேற்றில் இருந்து கேட்டுட்டு இருக்கேன்”,என்று சொன்னாள்.
“இப்ப என்ன உங்களுக்கு பேசுவதற்கு ரெடி பண்ணனும், அவ்வளவு தானே, கோவிலுக்கு போயிட்டு வருவோம் முதல்ல”, என்று சொன்னவன்.,
“ஆமா இங்க வந்து இங்க உள்ள மாதிரி ட்ரெடிஷன் டிரஸ் பண்ணனும்னு ஏதாவது எய்ம் ஒட வந்தீங்களா”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லையே, ஏன் கேக்குற”, என்றாள்.
” இல்ல இங்க வந்ததுக்கப்புறம், புடவை கட்டிட்டு சுத்துறீங்களே, அன்னைக்கு கூட சேரி எடுக்க ன்னு கூட்டிட்டு வரும் போது கூட சுடிதார் ல வந்தீங்களே அது தான் கேட்டேன்”,என்றான்.