அவன் மனசாட்சியோ அவனைப் பார்த்து, ‘டேய் நீ ரூம்ல என்னென்ன நெனச்சிட்டு இருந்த ன்னு  எனக்கு தானடா தெரியும்’, என்று கிண்டல் செய்தது.

    அவனும் ‘அதெல்லாம் இல்ல, நான் ஸ்ட்ராங்கான ஆளு, ஸ்ட்ராங்கா தான் இருக்கேன், அவங்க அப்பா என்கிட்ட போட்ட சண்டை எதுவும் மறக்கல., இவ வந்து  பேசினா அப்படின்னு நான் மயங்கிடுவனா, இல்ல இவர் பின்னாடியே வால் புடிச்சிட்டு துளசி துளசி ன்னு போவேனா, அதெல்லாம் எதுவும் நடக்காது’, என்றான்  மனசாட்சியிடம்,

   அவன் மனசாட்சியோ ‘டேய் அவ்வளவு தைரியமான ஆளுன்னா., இங்க வீட்டு ஆட்கள் தானே இருக்காங்க, இந்த பிள்ளையை வேணா விரட்டி விடுவோம் ன்னு சொல்லு, எங்க சட்டைய கழட்டி காட்டு பாப்போம்.,

     நீ எத்தனை வருஷமா சட்டையை போட்டு மறைச்சு வச்சிருக்கேன்னு இங்க எல்லாருக்கும் தெரியும்டா.,

   உங்க வீட்டுல உள்ளவங்களும் ஓரளவுக்கு கெஸ் பண்ணிட்டாங்க., அதனாலதான் துளசிங்கற பேர்ல பொண்ணா பாப்போம்னு பேச ஆரம்பிச்சது., ஆனால் கடவுளா பார்த்து உனக்கு துளசிய அனுப்பி வச்சிருக்கான்., சத்தமே இல்லாம சரின்னு சம்மதம் சொல்லு., அந்த பிள்ளைய கபால் ன்னு பிடிச்சி வை’, என்று மனசாட்சி கேலி செய்தது.

     அவனும் ‘அப்படில்லாம் இவ வந்த உடனே, நான் ஓகே எல்லாம் சொல்ல முடியாது,  இவ மட்டும் என்ன விஷயம் எதுவும் தெரியாம தானே வந்தா’, என்று பதிலுக்கு இவன் மனசாட்சியோடு வாதிட்டான்.

     மனசாட்சியோ ‘ஏன்டா அறிவு கெட்டவனே, அந்த ஆளு தான் அந்த பிள்ளை கிட்ட எதுவுமே சொல்லி வளர்க்கலைன்னு, அந்த புள்ள சொல்லுது இல்ல., சொல்லி வளர்க்காத பிள்ளையை போய், அவளுக்கு தெரியும் தானே., அவளுக்கு இது பண்ண தெரியும் தானே,  கேட்டிருக்காத,  அந்த பிள்ளைக்கு விஷயம் எப்படிடா தெரியும்.,  யாராவது கோடு போட்டாவது காட்டி இருக்கணும்., ஏன் நீ ஏதாவது ஸ்டெப் படுத்தியா,  இல்ல இல்ல நீ எந்த முயற்சியும் எடுக்கல தானே,

     நல்லவனா இருந்தா அவ்வளவு ஸ்ட்ராங்கா யோசிச்சிருந்தா., அந்த பிள்ளையை போய் பார்த்து பேசி இருக்கணுமா, இல்லையா, ஏன் போய் பார்த்து பேசல, ஒரு வாரம் கழிச்சு அந்த புள்ளையா வீட்டை விட்டு தப்பிச்சு வரப்போய் சரியா போச்சு., இல்லன்னா என்ன பண்ணி இருப்ப, இந்நேரம் அந்த பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு, கல்யாணத்துக்கும் நாள் நெருங்கியிருக்கும், சொல்ல முடியாது கல்யாணமே பண்ணி வச்சாலும் பண்ணி வச்சிருப்பான்’, என்று மனசாட்சி சொன்னது.

இவனோ எதுவும் சொல்லாமல் பேப்பரில் மூழ்குபவன் போல அமர்ந்திருந்தான்.

இவளோ மீண்டும் பாயசத்தில் முத்தெடுப்பவள் போல மூழ்கி இருந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

     ‘சரி நம்ம அவ்வளவு பேசிட்டு வந்தோமே, இவர் ட்ட எந்த ரெஸ்பான்ஸ் ம் இல்லையே., எப்படி காய் நகர்த்த என்று யோசித்தவள்.,

   மீண்டும் நவீனை பார்த்தபடி இல்லை என்றாள்.

     யோசித்தவள்,  “பேசி பார்ப்போம், இல்லாட்டி பெரியவங்க கிட்ட ஹெல்ப் கேட்டுருவோம்”,. என்று யோசித்தபடி நவீனை பார்த்தாள்.

     நவீனோ இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

    இவளோ பாயாசத்தை வாயில் வைத்தபடி என்னவென்று கண்ணால் கேட்டாள்.

   அவனும் பதிலுக்கு என்ன என்று கேட்டான்.

   இவளோ ‘ஒன்னும் இல்ல’ என்று சொன்னாள்.

     “எதுக்கு கூப்பிட்ட” என்று செய்கையால் கேட்டுக் கொண்டிருந்தான்.

இவளோ மீண்டும் செய்கையில் “பேசணும்” என்று மட்டும் செய்கை காட்டினாள்.

   அவனோ தன் அண்ணனை காட்டி விட்டு ‘அப்புறமா பேசலாம்’ என்று சொன்னபடி வீட்டினரை திரும்பிப் பார்த்தான்.

    வீட்டினர் யாரும் என்ன செய்வதென்று தெரியாமல் அவரவர் வேலையில் மூழ்கத் தொடங்கி இருந்தனர்.

  வீட்டிலிருந்த பெரியவர்களும் ‘என்ன கண்ணாமூச்சி ஆட்டம் நடக்குது’, என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

    இவளோ ‘இல்ல இல்ல இது சரிப்பட்டு வராது., நேரடியா நாளைக்கு வீட்ல எல்லார் முன்னாடியும் பாவா ன்னு கூப்பிட வேண்டியது தான்’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

  அவனும் ‘இவள் வீட்டினர் முன்னாடி எதுவும் கிறுக்குத்தனம் பண்ணாமல் இருக்க வேண்டும்’, என்று நினைத்தவன்.,

     சற்று நேரத்தில் ‘இவள் இன்னும் மூன்று மாதத்திற்குள் விசா முடிந்து அவளுடைய ஊருக்கு செல்ல வேண்டியது வரும் தானே ‘ என்று நினைத்தவன்.,

       ‘பாதியில் வந்தவள் பாதியில் போவது பற்றி யோசிக்க கூடாது’ என்று மனதிற்குள் சில தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அமைதி காத்தான்.

       சற்று நேரத்தில் எழுந்தவன், நவீனிடம் “வெளியே வறியாடா” என்று கேட்டான்.

     அவனோ “எங்கே” கேட்க,

     “கிளம்பு”, என்று சொல்லவும்.,

      பாட்டி தான்., “எங்க கிருஷ்ணா இந்த நேரத்துல”, என்று கேட்டார்.

       “சும்மா அப்படியே தோட்டத்து வரைக்கும் கார்ல போயிட்டு வந்துடறோம்”, என்று சொன்னான்.

      பாட்டியோ, “ரெண்டு பேரும் தான் போக போறீங்களா”, என்றவர்.

     அவரோ கிருஷ்ணாவின் தங்கையை காட்டியவர்., “மாப்பிள்ளை  இருக்காங்க பிள்ளையை நாங்க பார்த்துக்கிறோம்., அவங்களுக்கும் கூட வரட்டும்”, என்று சொல்லும் போது.,

      தாத்தா தான், “அப்போ எல்லோரும் சேர்ந்து போய்ட்டு வாங்க”, என்றவர்.,

   “அகிலா நீயும் மாப்பிள்ளையும் கூட போங்க., அப்படியே துளசியும் கூட்டிட்டு போங்க”, என்றார்.

   ஒரு நிமிடம் தயங்கியவன் வேகமாக வெளியே சென்றான்.

   டிரைவிங் சீட்டில் அமரவும்., அவன் மனசாட்சியோ அவனை கேலி செய்தது. பக்கத்திலேயே இருந்து “பார்க்க நல்ல வாய்ப்பு அப்படித்தானே, அதனால தான் பேசாம வந்துட்ட பெருசா மூணு மாசம் தான் விசா போய்டுவா என்று சொன்ன, இப்ப எதுக்குடா உங்க தாத்தா சொன்ன உடனே அமைதியா வந்த,  அதெல்லாம் கூட்டிட்டு போக முடியாது ன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே”, இன்று மனசாட்சி கேள்வி கேட்கும் போது.,

       ‘இல்ல இங்க இருக்கிற வரைக்கும் சுத்தி காமிக்க போறோம், லண்டன் போனதுக்கப்புறம் இதெல்லாம் எங்க பாக்க போறா’, என்று மனசாட்சியோடு வாக்குவாதம் செய்தான்.

   அதுவோ அவனை பார்த்து காறித் துப்பியது.,  மனசாட்சி துப்பியதை வெளியே காட்டிக் கொள்ளாமல்., தன்னை சாதாரணமாக வைத்துக் கொண்டவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

     வீட்டில் இருந்த சாதாரண உடையிலேயே அனைவரும் கிளம்பி வர, துளசியை அப்படியே இழுத்துக் கொண்டு வந்தாள் அகிலா.,

  அகிலாவின் கணவர் முன்னாள் ஏறிக்கொள்ள., பின்பக்கம் நவீனுக்கும் அகிலாவிற்கும் இடையில் துளசி அமர.,  முதலில் சற்று படபடப்பாகவே உணர்ந்தாலும்.,

    அகிலா அவள் இடது கையை பிடித்த படியே அமர்ந்திருக்க.,  கார் ஸ்டார்ட் ஆகவும் மெதுவாக நிமிர்ந்து ரிவர்ஸ் மிரர் ல் கிருஷ்ணாவின் முகத்தை பார்க்க.,  அவனும் அதே நேரம் பின்பக்கம் பார்க்க இருவர் கண்களும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டது போல உணர்ந்தவள்,வேகமாக தலையை திருப்பிக் கொண்டாள்.

     தற்செயலாக இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த நவீனுக்கு இது நன்றாகவே புரிந்தது.

    ‘என்னடா நடக்குது, ஐயோ இவ என்னமோ பேசணும் நம்மகிட்ட சொன்னாலே., அப்பவே போய் பேசி இருந்திருக்கணுமோ’, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்.,

    ‘விடக்கூடாது தோட்டத்தில் பேசிய ஆகணும்’, என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

    இவளோ மனதிற்குள்., ‘இது சரிப்பட்டு வராது, இந்த ஊமை விளையாட்டை விளையாண்டா, நம்மை இவனை பேக் பண்ணி கொண்டு போய் லண்டனில் விட்டுட்டு வந்துருவான், இந்த பாவாவை இப்படியே விட்டா செட்டாகாது’, என்று முடிவு செய்தவள், மெதுவாக அகிலாவிடம் பேச வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள்.

      ‘நவீன் வேஸ்ட் ஃபெல்லோ’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள், ‘இல்லை எல்லாருமே தேவைப்படுவாங்க  இந்த விஷயத்துல,  கிருஷ்ணா இறங்கி விளையாண்டிருந்தா எப்பவோ கல்யாணம் முடிந்திருக்கும்., இந்த மனுஷன நம்புனா இன்னும் ஒரு பத்து வருஷம் ஆனாலும் கல்யாணம் நடக்காது., எப்ப இந்த அளவுக்கு விரும்புற ஒரு ஆள் கிடைத்தானோ, அப்போவே நம்ம முடிவு பண்ணிடனும்., தமிழ் சினிமாவில் ரஜினி சொன்ன மாதிரி.,

    நம்மள விரும்புறவங்கள நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா., லைப் நல்லா இருக்கும் இல்ல., இதே மாதிரி அவர் யோசிச்சா.,ம்ச் இப்பதான் நானும் விரும்ப ஆரம்பிச்சுட்டேன் இல்ல”, என்று மனதிற்குள் தனியாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவள்,

    ‘அகிலாவிடம் இதை சொல்லிரனும்’ என்ற முடிவோடு அவள் பிடித்திருந்த கையை பார்த்துக் கொண்டிருந்தவள்,

மெதுவாக தானும் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

     அவ்வப்போது அவன் பார்க்கும் போதெல்லாம் அவள் தலை குனிந்து இருப்பதும் அங்கும் இங்கும் பாராக்கு பார்ப்பது தெரிந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.

ஓஹோ மேடமுக்கு தனியா தான் எல்லா பேச்சும்., இத்தனை பேருக்கு நடுவில் இருக்கும் போது பேச்சு எல்லாம் வராது போல., நல்ல டென்ஷன் ஆகுறா போல, இது தான் நான் எதிர்பார்த்தேன்.,  இப்ப தோட்டத்துக்கு கூட்டிட்டு போறது சேஃப்தான்’, என்று அவனும் மனதிற்குள் நினைத்துக் கொண்டே தோட்டத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்.