அப்பவே  நீங்க எல்லாம் எங்களை சுத்தி பாதுகாப்பு வளையம் போடுறதுலயும் எங்களுக்கு சிதம்பரத்தால் ஏதாவது பிரச்சனை வந்திரும்மோன்னு ஒரு குழப்பத்திலேயும் இருந்திருக்கீங்க உங்கள மேலும் குழப்ப வேண்டாம்னு தான் அக்கா அப்படி சொல்லாம இருந்திருக்கா.

இப்பதான் எனக்கே அந்த விஷயம் புரியுது. நீயும் புரிஞ்சுக்கோ இப்ப அக்காக்கு ஒரு பெரிய ப்ராப்ளம் அதை நீங்கதான் சால்வ் பண்ணனும். என்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணாம, அத்துக்கு ஹெல்ப் பண்ணுங்க”, என்று அவள் கூறியதும்

வாசு, “நீ என்ன சொன்னாலும் எனக்கு கன்வின்ஸ் ஆகல.  நான் நேரா வந்து உன்னை திட்டிக்கிறேன். இப்ப ஃபோன வை”, என்று உடனே அழைப்பை துண்டித்தான்.

அவர்கள் அழைப்பு ஒலிப்பானில் ஒலிக்காவிட்டாலும் அமைதியாக இருந்த அந்த அறையில் சந்திரனுக்கும் மற்ற இருவருக்கும் சக்தி பேசியது தெளிவாகவே கேட்டது.

வாசு அவளை திட்ட ஆரம்பித்தபோதே ரகு அவனை தடுக்க தான் நினைத்தான். ஆனால் அவள் ‘வாசுண்ணா’ என்று உரிமையாக பேசும் போதும் தான் அவர்களிடையே செல்வது சரியாக இருக்காது என்று அமைதியாக இருந்து கொண்டான்.

அவள் முழுதாக பேசி முடிக்கும் வரை அவன் முகத்தில் புன்னகை தான் இருந்தது.  இங்கு சந்திரனுக்கும் கூட முகத்தில் புன்னகை தான் என்ன இருந்தாலும் தங்களிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இருந்த போதும் தங்களையும் நினைத்து தான் மதி அப்படி சொல்லி இருப்பாள் என்று அவரும் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டார்.

இது குறித்து சரண்யாவிடமும் தாங்களே பேசி அவரையும் சமாதானம் செய்ய வேண்டும் என்பதையும் மனதில் குறித்துக் கொண்டார்.

இப்போது ரகுவை நேராக பார்த்த சந்திரன், “உங்களை மீட் பணண்துல எனக்கு ரொம்ப சந்தோஷம், மிஸ்டர். ரகுநந்தன். சக்தி இவ்ளோ உரிமையா உங்கள ‘அத்து’ன்னு கூப்பிடுறான்னா, அதுக்கு காரணம் நீங்க அவங்களுக்கு கொடுத்த நம்பிக்கையா தான் இருக்கணும்னு எங்களுக்கு புரியுது.

மதியோட பிராப்ளம் சால்வ் பண்ணனும்னு நீங்க இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க.  அதுவே அவ மேல உங்களுக்கு இருக்க அக்கறைய சொல்லுது. எங்களுக்கு இதுவே போதும். சொல்லுங்க என்ன பிரச்சனை “,என்றார்.

அனைத்தையும் கனகவேல் வெறும் பார்வையாளராக மட்டும் பார்த்து  இருக்க, சந்திரன் கேள்வி எழுப்பிய அடுத்த நொடி ரகுவின் முகத்தில் இருந்த புன்னகை மொத்தமாக துடைத்து எடுத்தது போல் ஆனது.

தானாக முகத்தில் ஒட்டிக் கொண்ட இறுக்கம் குரலிலும் பிரதிபலிக்க, “மதிக்கு இன்சோம்னியா(insomnia)” என்று கூறினான் ரகு. .

உடனே கனகவேல், “‘இன்சோம்னியா’னா இந்த தூக்கம் இல்லாம இருக்கிற வியாதி தான ணா”, என்று கேட்க,

ரகுவிடம், “ம்” என்று மட்டும் பதில் வந்தது.

“என்ன சொல்றீங்க? எப்படி? எதனால?” என்று என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறி சந்திரன், வாசு இருவரும் கேள்வி எழுப்பினர்.

அவர்கள் இருவரிடமும் பிரதிபலித்த அதிர்ச்சியை உள்வாங்கியவன், முதலில் மதிக்கு இவர் அழைத்ததிலிருந்து ஏற்பட்ட பாதிப்பையும் கடைசியாக அவள் தன்னிடம் கூறிய விசயங்கள் வரை  அனைத்தையும் மேலோட்டமாக கூறி முடித்தான்.

பின்னர், “மிஸ்டர் சந்திரன் மதி மனசுல இப்ப ரெண்டு விஷயம் இருக்கு. ஒன்னு அவங்க அப்பா அம்மாவோட மரணம் தன்னால அப்படிங்கிற வருத்தமும் குறற் உணர்ச்சியும்.

ரெண்டாவது விஷயம் அவளுக்கு தன்னை சுத்தி இருக்க எல்லாரும் இப்போ பாதுகாப்பு இல்லாமல் இருக்காங்கற எண்ணம்.  அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம்  இன்னும் அதிகமாயிடுச்சு.

மதிக்கு இப்போ உடனே ட்ரீட்மென்ட் தேவை. அதை மருந்து மாத்திர பண்ண முடியாது. நான் சொன்ன முதல் விஷயம் மெல்ல மெல்ல தான் சால்வ் பண்ண முடியும். அதை நான் பார்த்துப்பேன். ஆனா ரெண்டாவது விஷயம் அது பாதுகாப்பு.

அந்த பாதுகாப்பு உணர்வை அவளுக்குள்ள குடுத்துட்டாலே போதும் அவ சரியாகிடுவா. அப்பா அம்மா விஷயத்துல அவளுக்கு இருக்குற குற்ற உணர்ச்சியை விட இப்போ அவளுக்கு தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற எண்ணம் தான் ரொம்ப அதிகமான பயத்தை கொடுக்குது.

அந்த பயத்திலிருந்து அவ மீண்டு வரணும். என்னதான் நான் ஜீவா சக்தி ரெண்டு பேரையும் பார்த்துப்பேன்ங்குற எண்ணம் அவளுக்குள்ள இருந்தாலும், எனக்கே ஏதாவது ஆயிடுமோ இல்ல இந்த குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு மனசுல வலுவா ஒரு எண்ணம் இருக்கு அவளுக்கு.  அதை அவ பேசுனத வச்சே என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது.

வெளிய சும்மா ‘தைரியமா இருக்கேன். என்னை நானே சரி பண்ணிடுவே’ன்னு சொன்னாலும் உண்மையிலேயே ரொம்ப பயந்து போய் இருக்கா.

இப்போ அவ மனசுல அந்த பாதுகாப்பு உணர்ச்சியை ஆழமா விதைச்சாலே போதும். தன்னால அவ மனசு அதை புரிஞ்சுக்க ஆரம்பிச்சிடும். அப்புறம் அந்த நோயிலிருந்து அவளே வெளியே வந்துவிடுவா.  அதுக்கு முதல்ல சிதம்பரம் இதுக்கப்புறம் நம்ம மதிக்கு எந்த பிரச்சினையும் பண்ண மாட்டாங்கிற உறுதி வேணும்.

அதனால தான் கேட்கிறேன்.  நடந்த ஆக்சிடென்ட் பத்தி நீங்க விசாரிச்சு இருக்கீங்க, இல்லையா? அத பத்தின ஃபுல் டீடைல்ஸ் எனக்கு வேணும்.  அன்னைக்கு அவரோட பிஏவை புடிச்சு நீங்க அவர்தான் அந்த விஷயத்தை பண்ணிருக்காருன்னு கண்டுபிடிச்சதா சொன்னீங்க.

அப்புறம் என்ன நடந்திச்சு?மதிய அதுக்கு அப்புறம் அவர் பாலோ பண்ணலையா?  மதிக்கு வேற எந்த பிராப்ளமும் கிரியேட் பண்ணனும்னு நினைக்கலையா? இல்ல அவர் கவனம் முழுக்க அவர் குடும்ப பிரச்சனைல திரும்பிருச்சா? இந்த விஷயம் எனக்கு தெரியணும்”, என்று அவன் கேட்டு நிற்க,

சந்திரன் அனைத்தையும் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தவர், அவனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் உள்வாங்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தார்.

“நீங்க சொல்றது சரிதான் ரகுநந்தன்.  மதியோட அப்பா அம்மாக்கு நடந்த விஷயங்கள பத்தி சர்ச் பண்ண ஆரம்பிச்சோம். மதி இந்த ஊர்ல  இருந்தா தங்கச்சிங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்லிட்டு இங்கிருந்து கிளம்பி போயிட்டா.  அது எங்களுக்கும் சரின்னு தான் தோணுச்சு.

ஏன்னா மதி கொஞ்ச நாளைக்கு இந்த ஊர்ல இருந்து தள்ளி இருந்தா அவளுக்கு பாதுகாப்பா இருக்கும்னு நாங்களும் நினைச்சிட்டோம்.  சிதம்பரம் தான் இதை பண்ணானான்னு நாங்கள் முழுசா ஆராய ஆரம்பிச்சோம்.

அவன் பிஏவ பிடிச்சு கேட்டதும் அவன்  சிதம்பரம் தான் அட்டாக் பண்றதுக்காக லாரி அனுப்பினான்.  அனுப்புன ஆளுங்களும் வேலைய முடிச்சிட்டாங்க. வயசானவங்க ரெண்டு பேரும் இறந்துட்டாங்கன்னு சொல்லி இருக்காங்க.

மதி மிஸ் ஆயிட்டான்னு சிதம்பரம் ரொம்ப கோவப்பட்டதா சொன்னான், அந்த பிஏ. ஆனால் சிதம்பரம் அடுத்து மதி பக்கம் திரும்ப முடியாத அளவுக்கு அவன் வீட்டில ஒரு பெரிய பிரச்சினையாச்சு.

சிதம்பரத்துக்கு ஒரு பையன் மட்டும் கிடையாது ஒரு பொண்ணு இருந்தா.  அந்த பொண்ணு வேற ஜாதி பையன  விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா.  அதனால அந்த ஜாதிக்காரங்க அந்த பொண்ண வெட்டிட்டாங்க.  அந்த பொண்ணு இறந்து போயிட்டா. அவ சோகத்திலேயே சிதம்பரம் வேற எத பத்தியும் யோசிக்காமல் விட்டுவிட்டார்.

இப்ப மில் எல்லாம் கூட வேற வேற ஆட்களோட கண்ட்ரோல்ல தான் இயங்கிக்கிட்டு இருக்கு. அவர் வெறும்  சைன் மட்டும் தான் போடுறாரு.

மதிய பத்தி அதுக்கப்புறம் யோசிக்கலாம் இல்லை.  ஆனா செல்வராஜ் கேஸ்ஸ ஒருவேளை மேல் முதலீடு பண்ற மாதிரி இருந்துச்சுன்னா, அப்போ அவன் மதி பக்கம் மட்டும் இல்லாம எங்க எல்லார் மேலையும் பார்வைய திருப்பலாம்னு எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு” என்று முடித்தார்.

ரகுவின் முகம் யோசனையில் இருக்க, கனகவேல் “அந்த ஆளு ஊரில இருக்க எல்லாரையும் கொல்லுவான். ஆனா தான் பிள்ளைங்க மேல மட்டும் அவ்ளோ பாசமா?”, என்று கேட்க, அதற்கு வாசு பதில் அளித்தான்.

“ஆமாம் அவருக்கு பிள்ளைங்க மேல ரொம்ப பாசம்.  குடும்பத்து மேல அளவுக்கு அதிகமான அன்பு வச்சிருக்க மனுஷன்.   அந்த வீட்ல அவங்க மனைவில ஆரம்பிச்சு பிள்ளைங்க வரை சிதம்பரத்தை சுத்தியே வாழறவங்க.  அந்த அளவுக்கு அவர் மேல பாண்டிங் உள்ள ஃபேமிலி.

ஆனா அந்த பொண்ணு செல்வராஜ் மாதிரி கிடையாது, ரொம்ப நல்ல பொண்ணு.  காலேஜ்ல தான் படிச்சிட்டு இருந்தா. அதே காலேஜ்ல தான் அந்த பையனும் படிச்சான்.

அவன லவ் பண்ணிட்டு இருந்தபோதே அவங்க வீட்ல தெரிஞ்சிடிச்சு, வீட்ல பிரச்சனை பண்ணுவாங்கன்னு பயந்து ரிஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க.

அது தெரிஞ்சதும் அந்த வீட்டு ஆளுங்க பொண்ண வெட்டிட்டாங்க.  இவர் என்னதான் பதவியில இருந்தாலும்  அவங்கள எல்லாம் இவரால் ஒன்னும் பண்ண முடியாது ரொம்ப பவர்ஃபுல்லான ஆளுங்க.

ஆனா குடும்பம்னு வந்துட்டா இவரு அமைதியா அடங்கி போற ஆள் எல்லாம் கிடையாது. இந்நேரத்துக்கு பொண்ண வெட்டின ஆளுங்கல்ல ரெண்டு உயிராவது பலியாகி இருக்கணும் ஆனா இவர் அமைதியா இருக்கறத பார்த்தா எனக்கே அதிசயமா தான் இருக்கு”

ரகு ஒரு பக்கம் மேலோட்டமாக தெரிந்த விசயத்திற்கு பின் இத்தனை இருக்கிறதா என யோசனையில் இருந்தாலும் மறுபுறம் அவன் மனதிற்குள் ஒரு அதிர்வு தோன்றி மறைந்தது.

அதற்கு காரணம் அவன் காதுகளில் விழுந்த அந்த கௌரவ கொலை குறித்த வார்த்தைகள் தான்.  அப்படி என்ன பிள்ளைகளை கொல்லும் அளவிற்கு இவர்களுக்கு கௌரவம் என்று சிந்தித்தான்.

அந்த பையன் இப்போது உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் போல் ஒரு உந்துதல் அவன் மனதில்.

அதனால் வேகமாக, வாசுவிடம், “அந்த பையன்?..” என்று கேட்க,

“அவனும் தான் அந்த பொண்ணு மட்டுமா.  அவன வீட்டிக்கு கூட்டிட்டு போனாங்க. தற்கொலை பண்ணிகிட்டான்னு சொன்னாங்க.  ஆனா எனக்கு தெரிஞ்சு கண்டிப்பா தற்கொலை பண்ணி இருக்க மாட்டான். விஷம் வச்சு இவங்களே கொன்றுப்பாங்க.

ஏன்னா அந்த பொண்ணு சாகறத பாத்திட்டு அவள வெட்டின எல்லாரையும் திருப்பி வெட்ட பாஞ்சான்னு சொன்னாங்க.  அவனுக்கு அவங்கள சும்மா விடக் கூடாதுனு ஒரு எண்ணம் இருந்திருக்கனும்னு எனக்கு தோனுச்சு. அதனால அவங்க தான் கொன்றுக்கனும்”,   என்று அவன் கூறியதும் அதிர்வு இன்னும் கூடியது மனதிற்குள்.

இப்படி கௌரவக் கொலைகள் செய்யும் மனிதர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது. இவர்கள் என்ன மாதிரியான பிறவிகள் என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இப்போது அந்த கசப்பான உணர்வுகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு தன் மதி பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.

இப்போது சிதம்பரத்தால் அவன் மதிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி இருந்தது. சிறிது நேர யோசனைக்கு பின் சந்திரனிடம் திரும்பி,

“சந்திரன் சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்னு சிதம்பரத்தோட மனநிலை இப்போ எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்.  அவருக்கு நெருக்கமா யாராவது? அவருக்கு நம்பிக்கையான ஒரு நபர் கண்டிப்பா இருக்கனுமே. அவங்க கிட்ட பேசுனும் நான்.  அப்படி யாராது தெரியுமா?”, என்றான் ரகு.

சில நொடிகள் யோசித்த சந்திரன் , “ஒருத்தன் இருக்கான் வக்கீல் சிவனேசன்.  அவனோட பேமிலி வக்கீல் தான்.  அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் பிரண்ட்ஸ்னு சொல்லுவாங்க.   அவனோட நிறைய சொத்து பத்து விவரம் எல்லா விஷயமும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.  குடும்பத்துல நடக்கிற சின்ன பங்க்ஷனாலும் இவனை தான் முதலில் கூப்பிடுவான்.  எனக்கு தெரிஞ்சு அவன்தான் நம்பிக்கையான ஆளா இருக்கணும்

அந்த சிவனேசன் கிட்ட எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் வேணும். பர்சனலா வேணும். சீக்ரட்டா இருந்தா இன்னும் பெட்டர்”

“சிவனேசன் முன்னாடி ஜூனியரா வேலை பார்த்த வக்கீல் நாராயணமூர்த்தி எனக்கு பழக்கம்.  அவர் இப்போ ரிட்டயர் ஆயிட்டாரு.  ஆனா சிவனேசன் கூட இன்னும் அவருக்கு பழக்கம் இருக்கு”

“நாராயண மூர்த்தி எப்படி?”

“ரொம்ப நல்ல மனுஷன் தான்.  நேர்மை அதிகமாவே எதிர்ப்பார்க்கிற ஆள்.  தப்பா காசு வாங்கி யாருக்கும் வாதாட மாட்டார்.  சிவனேசனோட திறமையை பார்த்து அவனுக்கு நிறைய கத்து கொடுத்தாரு. ஆனால் அவனுக்கு சிதம்பரத்தோட இருக்க பழக்கம் மட்டும்தான் அவருக்கு சுத்தமா  பிடிக்காது.  இருந்தாலும் அவன்  திறமைய நினைச்சு எப்பவும் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லுவாரு”

“அப்போ நாராயணமூர்த்தி அவரோட வீட்டிலயோ, இல்ல  அவருக்கு சொந்தமான ஏதாவது ஒரு இடத்திலயோ எங்க மீட்டிங் அரேஞ்ச் பண்ணா இன்னும் பெட்டரா இருக்கும்”  ரகு கேட்க,

“நிச்சயமா.  நான் கண்டிப்பா பண்றேன். ஆனா ரகு எனக்கு ஒரு சந்தேகம் சிவனேசன் கிட்ட பேசினா சிதம்பரத்தோட மனநிலை புரிஞ்சிக்க முடியும்னு நீங்க நெஜமாவே நினைக்கிறீங்களா?”.

“சிவனேசன் கிட்ட கேட்டா சிதம்பரத்தோட மனநிலைய முழுசா புரிஞ்சுக்கவும் முடியாது.  அதை நம்மளால நம்பவும் முடியாது.  ஆனால் நேரடியா சிதம்பரத்து கிட்டயே பேசினால் முடியும் இல்லை”,

“அப்போ சிவனேசன் கிட்ட பேசி அப்புறம் சிதம்பரத்தை கிட்ட பேச போறமா?”

“இல்ல சிவனேசன் கிட்ட சிதம்பரம் பேச போறாரு அதை நம்ம தெரிஞ்சுக்க போறோம்.  நம்ம இதை பொறுமையா ஹேண்டில் பண்ணலாம் மிஸ்டர் சந்திரன்”

ரகு கூறியதை கேட்டதும் மற்றவர்களுக்கு அவன் திட்டம் பளிச்சென புரிந்துவிட, “இவர் நமக்கு மேல இருப்பாரு போல இருக்கே. இவர் டைரக்டரா? டிடெக்டிவா?” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் வாசு.

“சரி, நான் இப்போவே நாராயணமூர்த்தி சார்கிட்ட பேசிறேன்” என்று கூறியவர் தனியே எழுந்து செல்ல,

கனகவேல் அவ்வளவு நேரம் அவர்களின் அத்தனை விவாதங்களையும் யோசனையோடு கேட்டுக் கொண்டிருந்தவன், இப்போது ரகுவிடம் மெல்ல,

“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் கேட்கவா?” என்று கேட்க,

“என்ன சந்தேகம்?”

“இல்ல அண்ணிக்கு அவங்க அப்பா அம்மா இறந்ததில் தான் இவ்வளவு பிரச்சனைன்னு சொன்னீங்க இல்ல. ஒருவேளை அப்பா அம்மாவ கொன்னவங்கள அவங்களே தண்டிச்சிட்டா  பிரச்சனை சால்வ் ஆயிடுமா?”

“சிதம்பரத்துக்கு தான் ஏற்கனவே பெருசா தண்டனை கிடைச்சிருச்சேடா? அது மட்டும் இல்லாம உண்மையாவே மதி தண்டிக்க நினைச்சாலும் சிதம்பரத்துக்கு கிடைத்த மாதிரி தண்டனை எல்லாம் கொடுக்கணும் நினைக்க மாட்டா.

இது கேட்டா மனசுல வருத்தம் தான் படுவா.  இன்னும் இதைக் கேள்வி பட்டான்னா அந்த காதலர்களுக்காக அவளே இறங்கி அந்த குடும்பத்து ஆட்களுக்கு தண்டனை வாங்கித் தரதா நினைப்பா”,சற்று குரலில் மனைவியின் குண இயல்பில் பெருமிதம் மின்னியது.

“அண்ணா சிதம்பரம் ஏவுன ஆளு.  ஆனா செஞ்சவங்கன்னு ஒருத்தர் இருப்பானுங்கள்ல. அவங்கள தண்டிச்சா ஒருவேளை அண்ணி அமைதி ஆகலாம் இல்லை.

காசுக்கு கூலி வாங்கி இப்படி ஒரு பெரிய வேலையை செஞ்சிருக்காங்கன்னா அவங்கள தண்டிக்கும்போது கண்டிப்பா  அண்ணிக்கு  மனசுல அமைதி வரும். நிச்சயம் சரி ஆகிடுவாங்க”,

“டேய் என்ன பேசுற? அவங்களைப் போய் நம்ம எங்க பிடிக்கிறது?”

“நான் ஆல்ரெடி புடிச்சிட்டேன் ணா”, என்றதும் அவ்வளவு சற்று அசட்டையாக அந்த பேச்சை கவனித்திருந்த வாசுவும் ரகுவும் அவனை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தனர்.

காவல் புரிவா (ள்)ன்…..

மகா ஆனந்த் ✨