“அன்னைக்கு அப்பா அம்மா கூட நாங்க மூணு பேருமே சேர்ந்துதான் கிளம்பினோம். ஆனா கடைசி நிமிஷத்துல ஆஃபீஸ்ல இருந்து எனக்கு கால் வரவும் ஜீவாவும் சக்தியும், அக்காக்கு துணையா இங்கேயே இருந்துக்குறோம்னு சொல்லி என்கூடவே தங்கிட்டாங்க.
அப்பா அம்மா ரெண்டு பேரும் திருத்தனிக்கு தனியா கார்ல கிளம்பினாங்க. ட்ராவல் ஏஜென்சில தான் கார் புக் பண்ணிருந்தேன்.
கிளம்பி ரெண்டு மணி நேரம் இருக்கும். அம்மா கால் பண்ணாங்க. நான் தான் பேசிட்டு இருந்தேன் ரகு. திடீர்னு அம்மா பேசிட்டு இருக்கும்போதே அம்மா….அம்….அம்மா…..” என்று அவள் திக்கி திணறினாள்.
அவள் தாய் தகப்பனை பற்றி பேச ஆரம்பித்தபோதே அவளை மார்போடு அணைத்திருந்தவன், இன்னும் இறுக்கத்தைக் கூட்டி அவளுக்குத் தான் இருக்கிறேன் என்று உணர்த்திக் கொண்டிருந்தான்.
மீண்டும் அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “அம்மா பேசிட்டு இருக்கும்போது திடீர்னு அம்மாவோட அலறல் மட்டும் கேட்டுச்சு. என்ன நடக்குது ஏது நடக்குதுன்னே புரியல ஒரு செகண்ட் ஒறஞ்சு போய் உட்கார்ந்து இருந்தேன்.
அடுத்து நொடி அம்மா அப்பாவ தேடணும்ங்கற எணண்ம் மட்டும்தான் எனக்குள்ள இருந்தது. அம்மா எங்க போயிட்டு இருக்கோம்னு தான் முதல் போன் எடுத்த உடனே பேச ஆரம்பிச்சாங்க. அதனால அம்மா இப்ப எங்க இருப்பாங்கன்னு எனக்கு தெரியும்.
வேகமா ஜீவா சக்தி இரண்டு பேரையும் கூட்டிட்டு அங்க போனே. நாங்க போறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல்ல அம்மா அப்பா சேர்த்துட்டாங்கன்னு சொன்னாங்க. அங்க போய் தேடுனோம். ஆனா எங்களுக்கு முன்னாடி அங்க போலீஸ் இருந்தாங்க.
அம்மா அப்பாவை பத்தி கேட்டோம். அப்பா ஆக்சிடன்ட் நடந்த இடத்திலயே…..அம்மா ஆம்புலன்ஸ்ல……….” மீண்டும் சில நொடி பேச முடியா அழுகை மட்டும்.
“என்ன பண்றது எது பண்றது எதுவும் புரியல. அன்னைக்கு நாங்க மூணு பேரும் யாரும் இல்லாத அனாதை மாதிரி நின்னுட்டு இருந்தோம் ரகு.
அம்மா பார்க்க ஆக்சிடென்ட்ன்னு புரிஞ்சு நாங்க கிளம்பி வரும்போது மனசுல இருந்த திடம், அவங்க பூமியில் இல்லைன்னு சொன்னப்போ இல்ல.
மூணு பேரையும் சமாளிக்க முடியாம, அங்கிருந்து கான்ஸ்டபிள் எங்க கிட்ட என்னென்னமோ பேச்சு கொடுத்து, எப்படியோ எங்ககிட்ட இருந்து சரண்யா மேடம் போன் நம்பர் வாங்கி அவங்க மூலமாகத்தான் ஃபார்மலிட்டிஸ் முடிச்சாங்க.
அதுக்கப்புறம் வீட்ல என்ன நடந்தது எது நடந்ததுன்னு புரியல. அப்பா அம்மா மொத்தமா எங்களை விட்டு போயிட்டாங்கன்னு மட்டும் புரிஞ்சது”, இப்போது மொத்தமாக உடைந்து கதற தொடங்கினாள் மதி.
ரகு அவளிடம் ஆறுதலாக எதுவும் பேச முயற்சிக்கவில்லை. அவள் மனதில் இருக்கும் இறுக்கங்கள் எப்படியாவது வெளிவர வேண்டும் என்பது மட்டும் தற்சமயம் அவன் எண்ணமாக இருந்தது.
அதனால் அழுது முடித்துக்கட்டும் என்று அவளை இறுக்கிப்பிடித்த வண்ணம் அப்படியே அமர்ந்திருந்தான். கல்லாக இறுகி இருந்தது அவன் முகம்.
அழுது ஓய பல நிமிடங்கள் தேவைப்பட்டது அவளுக்கு. ஏற்கனவே தூக்கமின்மையால் துவண்டு இருந்த அவள் உடல் இப்போது இன்னும் துவண்டு விட அரை மயக்க நிலைக்கு சென்றிருந்தாள்.
ஆனால் இப்போதும் தூக்கம் என்பது அவள் கண்ணில் இல்லை என்பதை ரகு உணர்ந்து கொண்டான். வேகமாக அவளை படுக்கையில் படுக்க வைத்தவன்.
கீழே சமையல் கட்டுக்கு அழைத்து பழச்சாறு கொண்டு வர சொல்ல, அது வந்ததும் அவளுக்கு புகட்ட, அவள் உடல் சற்று தெம்பு பெற்றது.
எழுந்து அமர்ந்தவள் ரகுவின் முகம் பார்த்து சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தாள். இப்போது மீண்டும் அவளே பேச ஆரம்பித்தாள்.
“ரகு, கல்யாணத்துக்கு முன்னாடி நான் சொன்னேனே சக்தி, ஜீவா ரெண்டு பேரும் எப்படி எங்க வாழ்க்கைக்குள்ள வந்தாங்கன்னு, உனக்கு ஞாபகம் இருக்கா”, என்று கேட்க
“நல்லா ஞாபகம் இருக்கு. இப்ப எதுக்கு அந்த விஷயம்”, என்றான் அவன்
“நம்ம கல்யாணம் பண்ணி வந்த இத்தனை நாள்ல, என்னைக்காவது நீ அவங்களை என் தங்கச்சிங்க இல்லைன்னு நினைச்சு இருக்கியா?”
“அவங்களை எனக்கு 15 வயசு இருக்கும் போது அப்பா அம்மா தத்து எடுத்துட்டு வந்தாங்க. இப்ப எனக்கு 26 வயசு ஆகுது. இத்தனை வருஷமும் என் தங்கச்சிக்களா என் கைய பிடிச்சிட்டு என் கூட நடந்திட்டு இருக்காங்க.
எங்களுக்கு நெருங்கின சொந்தங்கள் கூட அப்பா அம்மாவ இந்த விசயத்துக்கு பெருமையா பேசுவாங்க. ஆனா அப்பாக்கு இதெல்லாம் பெருமையா தெரிந்தது இல்ல. ஏன்னா அப்பா எங்க மூணு பேரையும் தான் அவரோட பெருமையா, உலகமா பாத்தாரு.
நாங்க மூணு பேருமே அவருக்கு ஒரே மாதிரி தான். அது அவரு சாகுறவரை மாறால. நான் ஆசைப்பட்டேங்கிறதுக்காக தான் தத்தெடுத்து வந்தாங்க அம்மா அப்பா. ஆனா உண்மையான அன்போட என் தங்கச்சிகளை பார்த்துக்கிட்டாங்க.
அப்பா அம்மா இருந்த வரை ஒரு மாதிரி பேசுன சொந்தக்காரங்க எல்லாரும், திடீர்னு அன்னைக்கு வந்து எப்படி நடந்துக்கிட்டாங்க தெரியுமா? ‘இவங்க எல்லாம் தத்தெடுத்தவங்க தானே. போதும் அவங்கள நீங்க வீட்டை விட்டு விரட்டி விடு.
உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கோம் கல்யாணம் பண்ணிக்கோ’ ன்னு சொன்னாங்க. எப்படி நான் ஏத்துக்க முடியும் என் தங்கச்சிங்கள என்னை விட்டு விரட்ட சொல்றாங்க ரகு.
எங்க அப்பா அம்மா இறந்த நிலையில் இருந்து நாங்க மீள முடியாம இருந்தோம் அப்போ. அந்த சமயத்தில எனக்கின்னு இருக்கிற உறவுகளையும் மொத்தமா இழக்க சொல்றாங்க.
அந்த வலியை தாங்க முடியல. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா. அடிமேல அடி மனசுல பலமா பட்ட மாதிரி இருந்துச்சு. அப்பா அம்மாவ பெருமையா பேசினவங்க எல்லாம் அன்னைக்கு இப்படி பேசுனது என்னால ஏத்துக்கவே முடியல. ஆனா நான் பொறுமைய இழக்கல.
அவங்ககிட்ட நிதானமா ஒன்னு தான் சொன்னேன், ‘எனக்கு எல்லாரையும் விட, உங்க யாரையும் விட என் தங்கச்சிக்கு மட்டும் தான் முக்கியம். அப்படி நினைக்காதவங்க யாரும் இங்க இருக்க வேணாம்’
அதுக்கப்புறம் ஒருத்தர் கூட இல்லை. எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க. எங்களுக்கு அவங்க பாதுகாப்பு தேவை இல்ல தான்.
ஆனா மூன்று பொண்ணுங்க இருக்க வீட்ல குறைஞ்சபட்சம் நாங்க இருக்கோங்கற ஒரு தைரியத்தை கூட அவங்க யாரும் கொடுக்க தயாராக இல்லை.
அதுக்கப்புறம் அவங்களாம் என்ன சொந்தக்காரங்கன்னு நினைப்பு எனக்குள்ள வந்துருச்சு ரகு”
‘நான் பொறுமை இழக்காமல் அவர்களிடம் பதில் அளித்தேன்’ என்று அவள் கூறிய போது மனதிற்குள் ரகுவிற்கு,
‘இந்த ஒரு வாரமா பொறுமை இழக்கமா, என்னை நீ மொத்தமா சோதிச்சயே, உன் பொறுமைய கேட்க தான் செய்யணுமா?’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இந்த ஒரு வார காலமாக அவள் மனதில் எவ்வளவு பெரிய விஷயத்தை பூட்டி வைத்து இருக்கிறாள். இதற்கு நடுவில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உடலுறவு வேறு அவனை வாட்டி வதைக்காமல் இல்லை.
இருந்தும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவளையும் அவள் பிரச்சனையையும் சரி செய்யும் எண்ணத்தில் தன்னை மூழ்கடித்தவன். மீண்டூம் கவனத்தை மதி புறம் திருப்பினான்.
அவள் சொல்லி முடித்ததும் அவன் தோன்றிய கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.
“எம் எல் ஏ மகன் கேஸ், அப்புறம் ஆக்சிடென்ட். நீ சொல்றத வச்சு பார்த்தா அது ஆக்சிடென்ட் இல்லையா சிதம்பரம் பண்ணதா?இந்த விஷயத்துக்கு நீ அப்பவே ரியாக்ட் பண்ணி இருக்கணுமே. ஆனா இந்த ஒரு வாரமா ஏன் நீ இப்படி இருக்க? பதில் சொல்லு மதி”, என்று அவன் கேட்க,
“நீ நினைக்கிற மாதிரி இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கு ரகு. அம்மா அப்பா இழப்பிலிருந்து மீண்டு வரதுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. ஆனா தங்கச்சிங்களுக்காக திடமா இருக்கும் முயற்சி பண்ணேன்.
அந்த திடம்தான் எங்கள மீட்டு கொண்டு வந்துச்சு. நாங்க சந்தோஷமா இருந்தாதான் அப்பா அம்மா சந்தோஷமா இருப்பாங்கிற எண்ணம் எங்கள சிரிக்க வச்சது. எப்படியோ அவங்கள தேத்தி சிரிக்க வச்சு காலேஜ் அனுப்பினேன்.
நானும் ஆபீஸ் கிளம்பி போனேன். ஆனா அப்பதான் எனக்கு நான் மறந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அம்மா அப்பாக்கு நடந்த ஆக்சிடென்ட் பத்தி நான் விசாரிக்கவே இல்லையே.
அடுத்து நேரடியா சரண்யா மேம் கிட்ட தான் போய் நின்னேன். அவங்க நிறைய சொன்னாங்க. ஆக்சிடன்ட் நடந்த ஏரியால இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிச்சேன், அங்க இருந்த இன்ஸ்பெக்டர் இது பாக்க ஆக்சிடன்ட் மாதிரி தான் இருக்கு.
ஆனா அந்த லாரி டிரைவர் இடிச்சிட்டு பயத்துல அங்கிருந்து ஓடிட்டான்னு நினைக்கிறேன்னு சொன்னாரு. எனக்கும் அந்த டிரைவர கண்டுபிடிச்சா மட்டும் தான்.
இது ஆக்ஸிடென்ட்டா? இல்ல கொலை முயற்சியான்னு தெரிய வரும்னு புரிஞ்சிது. அது மட்டும் இல்ல அப்ப இதுல சிதம்பரம் சம்பந்தப்பட்டிருப்பாரு நாங்க யோசிக்கவே இல்ல.
ஏன்னா சிதம்பரம் மட்டும் கிடையாது எங்களுக்கு பல பேர் கிட்ட இந்த மாதிரி பிரச்சனை இருந்திருக்கு. அந்த சமயத்தில் பார்த்தால் அது சிதம்பரமா இருக்கலாம் என்பது அதுக்கப்புறம்தான் எனக்கு புரிஞ்சது.
அப்பா அம்மாக்கு 30 நாள் சாமி கும்பிடுவதற்கு இரண்டு நாள் முன்னாடி சரத் சார் என்னைமீட் பண்ணும் போது, என்கிட்ட ஒன்னு சொன்னாரு.
‘இந்த விஷயம் கண்டிப்பா ஆக்சிடென்ட்டா இருக்கலாம்?ஒருவேளை அப்படி இல்லாம இருந்தா? உன்ன தான் கொலை பண்ணனும் முயற்சி பண்ணி இருக்கணும்’னு சொன்னாரு.
அந்த விஷயம் எனக்கு ரொம்ப உறுத்த ஆரம்பிச்சிருச்சு ஒருவேளை அப்பா அம்மா என்னால தான் இறந்தாங்கன்னா என் தங்கச்சிங்களுக்கும் அந்த நிலைமை வரக்கூடாதுன்னு முடிவு பண்ணேன்.
அதான் அங்க இருந்து தங்கச்சிகளுக்கு தைரியத்தை மட்டும் கொடுத்துட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்.
சரத் சாரும் வாசுவும் சேர்ந்து அவங்களுக்கு தூரமா இருந்து பாதுகாப்பு கொடுக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணாங்க.
கல்யாணத்துக்கப்புறம் அது கூட தேவைப்படல. ஏன்னா நீ தான் அவங்களுக்கு எல்லா பாதுகாப்பும் ஏற்பாடு செஞ்சு கொடுத்துட்டியே? அப்புறம் ….”
என்று அவள் ஆரம்பித்து அவன் முகத்தை இன்னும் ஆழமாக பார்த்தவள்,