Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                                        அத்தியாயம்  –  17
 
ஸ்ருதியின் இதழில் இதழ் புதைத்திருந்த அஸ்வின் இந்த உலகை மறந்திருக்க சற்று பொறுத்து அவனை விட்டு விலகியவள்,” மாமா செம..” கண்ணடித்து உதட்டை சுருக்க,
 
அஸ்வின் தன்னை மறந்து வாய்விட்டு சிரித்துவிட்டான்.. செமயா.. எனக்கு ஒன்னும் தோனலையே..? வா மறுபடி டெஸ்ட் பண்ணுவோம்..
 
ஆசை ,தோசை ,அப்பள வடை ஒருதரம்தான்.. இது நான் லவ் சொன்னதுக்காக மட்டும்தான்.. நீங்க எப்ப சொல்றிங்களோ அப்ப இன்னொன்னு கொடுக்கிறேன்.. அப்புறம் இன்னொரு ப்ரீ அட்வைஸ்.. இப்படியெல்லாம் சிரிக்காதிங்க மாமா அப்படியே என்மனசு தாங்கல..!!”
 
அவளை இழுத்து தன் மடியில் அமரவைத்தவன் அவள் பின்கழுத்தில் முகத்தை புதைக்க இவள் வயிற்றிற்குள் ஒருமாதிரி குறுகுறுப்பாக இருந்தது..
 
 மனசு தாங்காம என்னடி பண்ணுது..??”
 
ம்ம் அப்படியே என் மனசு தடம் புரண்டு உங்க காலடியில விழுந்திரும் போல.. அப்புறம் இந்த ஸ்ருதி கெத்து என்னாகுறது..? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது மாமா .. ஒரு பொண்ணை லவ் பண்ணி பாருங்க.. இல்ல இல்ல என்னை லவ் பண்ணி பாருங்க அப்போதான் புரியும்..” தொண்டையை செருமிக் கொண்டவள் வைரமுத்துவின் குரலில்,
 
                                      “காதலித்து பார்
                                               உன்னைச் சுற்றி
                                      ஒளிவட்டம் தோன்றும்
                                               உலகம் அர்த்தப்படும்
                                       ராத்திரியின் நீளம்
                                              விளங்கும்….
                                      உனக்கும்
                                            கவிதை வரும்
                                       கையெழுத்து
                                            அழகாகும்…..
                                      தபால்காரன்
                                           தெய்வமாவான்
                                     உன் பிம்பம் விழுந்தே
                                            கண்ணாடி உடையும்
                                       கண்ணிரண்டும்
                                           ஒளிகொள்ளும்
                                         காதலித்துப்பார் !
 
எப்படி மாமா.. காதல்னா சும்மாவா..??” அவள் கவிதை சொல்லும் அழகை ரசித்தவன்,
 
அவளோடு சேர்ந்து ஊஞ்சலில் ஆடியபடி ,இப்ப என்ன சொல்ற உனக்கு மட்டும்தான் மாமா மேல லவ் வந்திருக்கு.. எனக்கு எதுவும் வரலைன்னு சொல்றியா..?”
 
தோளை குலுக்கியவள், யா யா ..
 
 போடி லூசு மாமா உன்னை ரொம்பநாளா லவ் பண்றேன்..
 
லவ்வா… அதுவும் நீங்களா..??”
 
அவளை பேசவிடாமல் கன்னக்குழியில் தன் இதழை புதைத்தவன் ப்பா இவளுக்கும் என்னை பிடிச்சிருச்சா கண்ணை மூடி அவளை உள்வாங்கினான்..
 
நீங்க ஒரு ஹிட்டலராச்சே மாமா.. எங்க அக்காக்கிட்டயே சம்மதம்னு ஒருவார்த்தை கேட்காம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்தினவராச்சே .. அப்புறம் எப்படி என்னை லவ் பண்ணியிருக்க முடியும்..??”
 
அஸ்வின் அமைதியாக இருக்கவும் அவன் முகத்தை பார்த்தவள்,” என்னாச்சு மாமா.. தப்பா எதாச்சும் சொல்லிட்டேனா..??”
 
இல்லை என தலையசைத்தவன் மீண்டும் யோசனையில் இருக்க அவன் கைவிரல்களோடு தன் விரல்களை சேர்த்தவள் அவன் மார்போடு பின்னால் சாய்ந்து தன் ஒரு காலை உந்தி ஊஞ்சலை ஆட்டியபடி அவ்வப்போது திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்தாள்..
 
ஒரு ஐந்தாறு நிமிடங்கள் கழித்து தன் கவனத்தை மனைவி பக்கம் திருப்பியவன் அவள் வயிற்றில் கைவைத்து தன்னோடு இறுக்கி அணைத்தான்..
 
என்னாச்சு மாமா ஏதாச்சும் பிரச்சனையா..?”
 
ஏன் ஸ்ருதி உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே..?”
 
அதத்தானே மாமா இவ்வளவுநேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ஐ லவ் யுன்னு..!!”
 
ப்பச் நீ இன்னும் சின்னப்பிள்ளையில்ல.. இந்த ஐ லவ் யு எல்லாம் விடு..நீ என்னை நம்ம ஸ்ரீக்குட்டிக்காகத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியும் .. இப்ப நான் தொடர்ந்து உன்கிட்ட பேசலைல.. அதான் அது உனக்கு லவ் மாதிரி தெரியுது..
 
இல்ல மாமா உண்மையிலே நான் உங்கள விரும்புறேன்.. அவள் வாயில் கைவைத்து பேசவிடாமல் தடுத்தவன்..
 
 இப்ப நீ சொன்ன பாரு உங்க அக்காக்கிட்ட நான் சம்மதம் கேட்காம கல்யாணம் பண்ணிட்டேன்.. குடும்பம் நடத்திட்டேன்னு.. உங்க அக்கா மனசில சம்மதம் இல்லாம நான் அவளோட குடும்பம் நடத்தினது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா.. அப்படியே நடுத்தெருவுல என்னைய சாட்டையால அடிக்கிற மாதிரி இருக்கு.. ஒரு பெண்ணோட மனசில அவ காதலன் இருக்கும் போது அது தெரியாம நான் செஞ்சது எவ்வளவு பெரிய தவறு.. அந்த உறுத்தல் எனக்கு எப்பவுமே போகாது..
 
எங்க அப்பா சாகும்போது எனக்கு பத்து வயசு அதுக்கப்பறம் நானும் அம்மாவும் மட்டும்தான்.. எனக்கு அப்ப லவ் பண்ண தெரியலயா.. இல்ல அதிலெல்லாம் நாட்டம் இல்ல.. புதுசா ஆரம்பிச்ச கம்பெனிய நல்லபடியா கொண்டு போகனும்னு ஒரே வெறி அதுமட்டும்தான் என் கண்ணுக்கு தெரிஞ்சிச்சு..
 
அம்மா உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்க கேட்டதுல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.. பொதுவா அப்ப எனக்கு கல்யாணத்திலேயே விருப்பம் இல்லை.. கல்யாணங்கிறது வாழ்க்கையில ஒரு முக்கியமான நிகழ்வா தெரியாம அப்ப எனக்கு ஒரு கடமையா தெரிஞ்சுச்சு.. அம்மாவ மீறி நான் எதுவும் செஞ்சதுமில்ல.. சொன்னதுமில்ல.. அவங்ககிட்ட பொறுப்பை ஒப்படைச்சதால நானும் எதையும் கண்டுக்காம விட்டுட்டேன்..நான் வெளிநாடு போனா அம்மாவுக்கு ஒரு துணை.. அப்படின்னு மட்டும்தான் நினைச்சேன்..
 
ஆனா நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்க மாதிரி என்னை நம்பி வர்ற பொண்ணோட மனதையும் புரிஞ்சுக்கனும்னு எனக்கு அப்ப தோனல.. நமக்கு என்ன குறைச்சல் நல்ல படிப்பு, வேலை , வசதி எல்லாம் இருக்கு அப்படின்னு ஒரு ஆண் திமிரோட இருந்துட்டேன்.. இது எல்லாத்தையும் விட ஒரு பெண்ணோட மனசு ரொம்ப முக்கியம்னு உங்க அக்கா கன்னத்தில அறைஞ்சமாதிரி சொல்லிட்டு போயிட்டா.. மனசு ஒத்து போகலைன்னா எவ்வளவு படிப்பு வசதி எல்லாம் இருந்தாலும் அதெல்லாம் ஒரு பொருட்டில்லைன்னு இப்ப நான் உணர்ந்திட்டேன்..
 
ப்பச்.. கல்யாணம் பண்ணி உங்க அக்காவோட குடும்பம் நடத்தும்போது லேசா அவ முகத்தை சுழிச்சிருந்தாக்கூட அவப்பக்கம் தலைவைச்சு படுத்திருக்க மாட்டேன்..
 
ஆனா இதுல முழுக்க முழுக்க என் தவறுதான் ஸ்ருதி.. நாம வெளிநாட்டுக்கு போறோமே.. இந்த பொண்ண தொடாம போனா அதுவேற அந்த பொண்ணு மனச பாதிக்குமேன்னுதான் நான் அவக்கூட குடும்பம் நடத்தினேன்.. என் மனசு முழுக்க அந்த பிஸினஸ் மட்டும்தான் இருந்ததே தவிர உங்க அக்காவோட நினைவே இல்ல.. அவளும் இப்படி உணர்வுகளை மறைச்சு என்னோட குடும்பம் நடத்திருக்கான்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அப்ப அதுவும் எனக்கு ஒரு கடமையாத்தான் இருந்திச்சு..
 
இப்ப இவ்வளவு பேசுறவன் அப்ப ஏன் அப்படி இருந்தேன்னு எனக்கு சத்தியமா தெரியல.. உங்க அக்கா இங்க இருந்த ஒரு வாரத்தில நாங்க ரெண்டு மூனுதரம் ஒன்னாயிருந்திருப்போமா அதுவே எனக்கு சரியா நியாபகம் இல்ல.. என்கிட்ட எந்த பேச்சுமே இருக்காது நானும் இப்ப உன்னோட சேர்ந்து இவ்வளவு பேசுறவன் அப்ப ரொம்ப அமைதி.. அதுனால எனக்கு எதுவும் புரிஞ்சுக்க முடியல.. என் மனச போட்டு அறுக்கிற ஒரே விசயம் இதுதான்.. உங்க அக்காவோட வாழாம இருந்திருந்தா இப்ப வந்தப்போ அவ நடவடிக்கையில இருந்து நானே புரிஞ்சிக்கிட்டு இருந்திருப்பேன்.. ஒதுங்கி அவ விரும்பின வாழ்க்கைய அமைச்சுக் கொடுத்திருப்பேன்.. ப்பச் இப்ப பேசி என்ன பண்ண..
 
அப்ப என்னோட அவசரம்.. கல்யாணம்னா என்னன்னு இப்ப புரிஞ்ச அளவுக்கு அப்ப புரியல.. அதோட ஒரு பெண் ஆண்மகனோட வாழ்க்கையில என்ன மாதிரி பேரையும் எடுத்துக் கொடுக்கலாம்னும் புரிஞ்சுக்கிட்டேன்.. எனக்கு முன்னாடி நல்லா பேசுறவங்களே என் பின்னால நான் ஆண்மை இல்லாதவன், கட்டின பொண்டாட்டிய கூட்டி கொடுத்தவன், மனைவிய அடக்க தெரியாதவன் அதான் அந்த பொண்ணு வேற ஆளாட ஓடிருச்சு.. இன்னும் என்காதல கேட்ககூடாததெல்லாம் கேட்டுட்டேன்..”
 
அவனை நெருங்கி அணைத்தவள்,” ஸாரி மாமா ஏதோ நான் விளையாட்டு பேசப்போய் உங்க மனச புண்படுத்திட்டேனோ..!!”
 
இல்ல நான் என் பக்கம் இருக்கிற தப்பையும் ஒத்துக்கனும்தானே.. உங்க அக்கா மனசில உள்ளத என்கிட்ட சொல்லியிருக்கலாம்.. நானே அவளுக்கு விவாகரத்து கொடுத்திருப்பேன் அப்படி ஒன்னும் நானும் அம்மாவும் உங்க அக்காக்கிட்ட எந்த கெடுபிடியும் வைச்சுக்கிட்டதில்ல.. நேரா சொல்ல ஒரு மாதிரி இருந்தா போன்லக்கூட சொல்லியிருக்கலாம்.. இப்ப எவ்வளவு பிரச்சனை வேதனை.. இன்னவரைக்கும் அது முடியிற மாதிரி இல்ல..
 
இப்ப என்ன மாமா பிரச்சனை..??”
 
ம்ம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி இப்ப என்னோட எண்ணத்தை சொல்லிருறேன்.. முதல்ல உன்னை பார்க்கும் போதுக்கூட எனக்கு எந்த அபிப்ராயமும் இல்ல..உன்னை பத்திய எந்த எண்ணமும் என் மனசுக்குள்ள இல்ல.. ஆனா எப்ப உன்னை முதல்முதலா ஸ்ரீக்கூட ஒன்னா தூங்கும்போது பார்த்தேனோ அப்பத்தில இருந்து நீ என் மனசுக்குள்ள மெதுவா அடியெடுத்து வைக்க ஆரம்பிச்சிட்ட…. கொஞ்சம் கொஞ்சமா வந்தவ இப்ப என் மனசு முழுக்க நீதான்.. அதே மாதிரிதான் உன் மனசுக்குள்ளேயும் நான் வந்தேன்..
 
எப்படி மாமா சொல்றிங்க.. இப்பத்தானே நான் லவ் பண்றேன்..??”
 
இல்லைன்னு நான் ப்ரூவ் பண்ணவா..??”
 
இடுப்பில் கைவைத்தவள்,” ம்ம் பண்ணுங்க பார்ப்போம்..
 
 அவளை தன்புறம் திரும்பியவன் மெதுவாக அவளுக்கு ஒரு இதழ் முத்தம் கொடுக்க ஸ்ருதி இதை எதிர்பார்க்காவிட்டாலும் விலகவும் இல்லை.. இருவரும் அதை நிதானமாக ஆழ்ந்து அனுபவித்தார்கள்.. இயல்பு போல ஸ்ருதி அவன் பின்தலையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்திருக்க ஆனந்தமாக அவளை நெருங்கியவன் அவள் இடுப்பில் கைகொடுத்து இறுக்கி அவள் இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தான்..
 
நொடிகளோ நிமிடங்களோ போய் கொண்டே இருக்க அவள் மூச்சு சிரமப்படுவதை கண்டு மெல்ல தன்னிலிருந்து விலக்கி அவளை பார்த்து கண்ணடிக்கவும் ,”ச்சு போங்க மாமா..!!” அவன் மார்பிலேயே தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்..
 
இங்க பாருடா இந்தம்மாவுக்கு வெட்கம் எல்லாம் வருது…?” அவள் சிவந்த முகத்தை பார்க்க..
 
அச்சோ போங்க..” அவள் இன்னும் அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்..
 
இதுமாதிரி முத்தம் நான் எப்பவாவது கொடுத்த நியாபகம் இருக்கா..?”
 
அவன் மார்பில் முக்த்தை புதைத்தபடி,” இல்லையே மாமா இப்பத்தானே கொடுத்திங்க..?”
 
அவள் தாடையை பிடித்து தன்னைப்பார்க்க செய்தவன்,” ஏற்கனவே இந்த மாதிரி ரெண்டுதரம் கொடுத்திருக்கேன்..?”
 
அவள் பேவென விழிக்கவும்,” இப்படியெல்லாம் பார்க்காதடி மாமா மனசு தாங்கல.. அவள் இருகண்களிலும் தன் இதழை பதித்தவன் இன்னைக்கு நான் முத்தம் கொடுத்தபோது கொடுத்தியே ஒரு ஒத்துழைப்பு.. அத அப்பவும் கொடுத்த.. முதல் முறை எங்க ஆபிஸ் பார்ட்டியில கொடுத்தேன்.. நல்லா அனுபவிச்சிட்டு என் மேல வாந்தியும் எடுத்து வைச்ச..
 
அப்புறம் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அப்ப நீதான் என்னை விடவே இல்லை.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் உன்கிட்ட இருந்து விலகினேன்.. இதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு வெட்கம் பிடிங்கி திங்க ..
 
போங்க மாமா..!!”
 
எங்க போறது.. போறதுக்கா அப்படி அவசர அவசரமா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது தாலிய கட்டினேன்.. அப்பக்கூட மேடத்துக்கு என்னை கல்யாணம் பண்ணினதுல குறையில்ல மருதாணி வைக்கல, பிரியாணி சாப்பிடல, பட்டு நகை போடலைன்னுதான் வருத்தம் இருந்திச்சு..??”
 
அவள் யோசிக்க ஆரம்பிக்கவும் அவளை இன்னும் நெருங்கியவன் ,”அன்னைக்கு உன்பிரண்ஸோட ஷாப்பிங்க வந்திருந்தியே அப்ப ஒருத்தன் பேண்ட்ல ஏன் காப்பிய ஊத்தின..??”
 
ம்ம் அவன் என்னோட பிரண்ட இடிச்சான்னுதான்..
 
நல்லா யோசிச்சு பாரு அவன் லேசா இடிச்சதுக்கே அவனுக்கு அந்த தண்டனை கொடுத்தியே நான் முதல்முறை உன்னை காருக்குள்ள பிடிச்சு இழுத்ததில இருந்து இப்ப வரைக்கும் உன்னை கட்டிப்பிடிச்சிட்டு, முத்தம் கொடுத்திட்டு, சாதாரணமா கையவாவது தொட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்.. அப்பல்லாம் உனக்கு ஏன் கோபம் வரலை..
 
ஏன்னா நீங்க என்னோட மாமா..??”
 
ச்சீ ச்சீ அபத்தமா பேசாத.. மாமாக்கிட்ட எல்லாரும் இப்படித்தான் நடந்துக்குவாங்களா… ஸ்ரீக்குட்டி மேல உனக்கு எப்படி தாய் இல்லாதவன்னு ஒரு பாசம் தோனுச்சோ அதே மாதிரி என் மேலயும் உனக்கு ஆரம்பத்தில இருந்தே அன்புதான்டி நீதான் அத புரிஞ்சுக்கல.. இல்லைனா நீ ஸ்ரீக்குட்டி உன்னை மட்டும்தான் அம்மான்னு கூப்பிடனும்னு என்னை கல்யாணம் பண்ணிக்குவியா.. நீதான் பேட்ட ரௌடியாச்சே.. பிடிக்கலைனா என்னை போட்டு தள்ளியிருக்க மாட்ட.. இப்படியா முத்தம் கொடுக்க சம்மதம் கொடுத்ததும் இல்லாம நல்லா என்ஜாய் பண்ணுவ..
 
ச்சு போங்க மாமா அதே சொல்லாதிங்க..?” அவள் சினுங்க ஏற்கனவே அவள் மேல் பைத்தியமாய் இருந்தவன் இப்போது அவளும் அவனை விரும்புவதில் உலகையே வென்ற உணர்வு.. அவள் சினுங்களில் தன்னிலை இழக்க மீண்டும் தன் ஆளுகைக்குள் அவளை கொண்டுவரப் போனான்..
 
அவளை தழுவிக்கொண்டிருந்த கைகளை தடுத்தவள்.. மாமா ஒன்னு சொல்லவா..??”
 
அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றின் வாசத்தோடு அவள் வாசத்தையும் உணர்ந்து கொண்டிருந்தவன்.. ம்ம்ம்..ஒரு கை அவள் இடுப்பின் மென்மையை ஆராய்ந்து கொண்டிருந்தது..
 
அவன் முகத்தை தன்னிடமிருந்து விலக்கியவள்..வாங்க மாமா கீழ போகலாம் எனக்கு பசிக்கிது.. அம்மா வேற இன்னைக்கு நான்வெஜ் செஞ்சு வைச்சிருக்காங்க.. இப்ப அது நியாபகம் வந்திருச்சா.. லவ் வர மாட்டேங்கிது.. சிக்கன் 65 யும் இறால் வறுவலும்தான் நியாபகம் வருது.. ப்ளிஸ்..ப்ளிஸ்..!!”
 
பக்கென சிரித்தவன்,” நீ நீதாண்டி நான்கூட கொஞ்சநேரம் நீ பொறுப்பா வந்திட்டியோன்னு கொஞ்சம் ஏமாந்துட்டேன்.. நீயாவது மாறுவதாவது..” அப்படியே அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் கீழே இறங்கத்துவங்கினான்..
 
தன்னை எந்த மன வெறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டதே அவனுக்கு பெரிதாக இருக்க அதுவே பெரிய நிம்மதியை தந்தது.. ஸ்ருதி உடல்நிலையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வந்த பிறகே அவளோடு வாழ்க்கையை துவங்க நினைத்திருந்தவன் இப்போது அவளது காதலை ஆழ்ந்து அனுபவிக்க நினைத்தான்..
 
அக்காவாகவே இருந்தாலும் ஒரு பெண்ணோடு வாழ்ந்தவனை ஏற்றுக் கொள்வதில் ஸ்ருதிக்கும் தயக்கம் இருக்கும் என்பதை உணர்ந்தே இருந்தான்.. என்ன ஆனாலும் இந்த முறை தன் வாழ்க்கையை முழுக்க முழுக்க காதலால் மட்டுமே துவங்க வேண்டும் அதில் அவளுக்கும் நூறு சதவீதம் சம்மதம் இருக்க வேண்டும் என்பதை முதலிலேயே நினைத்திருந்தவன் இப்போது அதற்கான காலம் வெகு அருகில் இருப்பதாகவே தோன்றியது..
 
இருவரும் கீழே வர சந்திரனும் கோகிலாவும் வந்திருந்தனர்.. குட்டி கற்பகத்தின் அறையில் தூங்கியிருக்க இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.. பரிமாற வந்தவர்களை தடுத்தவன் தாங்களே போட்டு சாப்பிட்டு கொள்வதாக சொல்ல ஸ்ருதியின் முகத்தில் இருந்த ஜொலிப்பு கோகிலாவுக்கு சந்தோசத்தை கொடுக்கவும் மூவரும் அவர்களுக்கு தனிமைக் கொடுத்து ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
 
அஸ்வின் அவளுக்கு ஊட்டிவிட்டபடி சாப்பிட அவள் போதும் என்று சொன்னாலும் விடவில்லை.. அவளும் அவ்வப்போது ஊட்டிவிட உணவோடு அவள் கைவிரல்களும் அவனுக்கு உணவாகிக் கொண்டிருந்தது..
 
இருவரும் சாப்பிடவும் ஹாலுக்கு வர சந்திரன் அஸ்வினோடு ஏதோ பேசவேண்டும் என அவனது அலுவலக அறைக்குள் அவனோடு நுழைந்திருந்தார்..ஸ்ருதி சந்தோசமான மனநிலையில் படுக்க சென்றவள் அஸ்வின் சொன்னவற்றை எல்லாம் மனதிற்குள் அசைப்போட்டு கொண்டிருந்தாள்..
 
நம்மள விட மாமாதான் என்னை நல்லா புரிஞ்சு வைச்சிருக்காரு.. அவன் சொன்னதையெல்லாம் யோசித்தவள் கடைசியில் இனி எக்காரணம் கொண்டும் தன் அக்காவின் பேச்சை மட்டும் எடுக்கவே கூடாது என்பதை முடிவு செய்தவளுக்கு உறக்கமும் தழுவியிருந்தது..
 
காலையில் கண்விழிக்கையில் நல்ல சுகந்தமான நறுமணம் அவள் மூக்கை துளைக்க அறைக்கண்ணை விழித்து பார்த்தவள் அங்கு கண்ணாடி முன்நின்றிருந்த அஸ்வினை பார்த்து அசந்து (அதிர்ந்து) விட்டாள்.. இத்தனை மாதங்களில் அவனை சட்டை இல்லாமல் இப்படி அரைகுறை ஆடையோடு பார்ப்பது இதுவே முதல்முறை.. இடுப்பில் துண்டோடு கண்ணாடி முன் நின்று தலைவாறிக் கொண்டிருக்க அவனை பார்க்கவும் ஸ்ருதிக்கு சிரிப்பு வேறு..
 
அவளின் சிரிப்பு சத்தத்தில்,” ஹாய் பேபி குட்மார்னிங் என்ன காலையில் எழும்போதே சிரிப்பு.. சொன்னா நானும் சிரிப்பேனே..?” கண்ணாடி வழியாக அவளை பார்த்தபடி சொல்ல..
 
ஒன்னுமில்ல மாமா.. சொன்னா உங்க இமேஜை டேமேஜ் பண்றமாதிரி இருக்கும் விடுங்க..
 
 ஒரே எட்டில் அவளருகில் வந்து,” என்னமோ என்னப்பத்தி வில்லங்கமா நினைச்சிருக்க.. மனசுக்குள்ள நினைச்சிட்டதானே சொல்லு அதையும் கேட்போம்..
 
மாமா நான் மாட்டேன்னு சொல்றேன் நீங்கதான் வலிய கேட்கிறிங்க.. படங்கள்ல ஒரு ஹீரோவை கவர ஹீரோயின் அரைகுறை ஆடையில வர்ற மாதிரி நீங்க என்ன கவர இப்படி போஸ் கொடுக்கிறிங்களா..!!”
 
அவள் காதை எட்டி பிடித்தவன்,” என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு..? உன்னை..!!” நறுக்கென அவள் கன்னத்தை கிள்ள..
 
அவனோடு சேர்ந்து எழுந்தவள்,” உங்கள பார்த்தா அப்படியே செம… சூப்பரான ஸ்ட்ரக்சர் மாமா உங்களுக்கு..?” அவன் வெற்று மார்பு வயிறு முதுகு என தடவிக் கொடுக்க அவன் ஜில்லென்றிருந்த உடலுக்கு அவளது வெப்பமான விரல்கள் தீக்குச்சி இல்லாமலே நெருப்பை பற்ற வைத்தது..
 
அவளை இறுக அணைத்தவன் அவனுடைய ஜில்லிப்பை அவளுக்கு கொடுத்து அவள் வெப்பத்தை வாங்கிக் கொண்டான்.. அப்படியே அவள் உடல் அவன் கைகளில் குழைந்து கொண்டிருக்க அவளும் விரும்பியே அவனுள் புதைந்து கொண்டாள்.. பேபி பேபி..” என்ற அவனது பிதற்றலோடு கூடிய அண்மை அவளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்க மெல்லிய கொலுசொலி அவர்கள் அறை நோக்கி வர அவளை இறுக்கி அணைத்து அவள் இதழை ஒரு கடி கடித்து விடவும் குட்டி உள்ளே வரவும் சரியாக இருந்தது..
 
தன் உதட்டை கைகளால் தடவிக் கொண்டவள் ,”பேட் மாமா.. போங்க வலிக்கிது..??” தன் மகனை தூக்கிக் கொண்டு அவனுக்கு உதட்டை சுழித்தவள் அவன் எட்டிப்பிடிப்பதற்குள் மகனோடு ஹாலுக்கு வந்திருந்தாள்..
 
ராட்சசி என்னை காலையிலே ஒருவழியாக்காம விடமாட்டா போல..!!” சீட்டியடித்தபடி தான் போட உடையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்..
 
அன்று இரவு மணி எட்டிருக்கும் மாமனாரும் மருமகனும் ஒன்றாக வந்தவர்கள் அனைவரையும் அழைத்து ஹாலில் அமர வைத்து.. எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்..??”
 
                                                                   இனி………..????

Advertisement