அத்தியாயம் – 32

சில்லாங் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தலைநகரம். கடல் மட்டத்தில் இருந்து 1525மீ உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம். பிரம்ம்புத்திரா மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதனால் ஆண்டு முழுவதும் இங்கு குளிர் தட்ப வெப்பநிலை தான். காலை விடிந்துவிட்டது. ஆனால் இன்னும் போர்வைக்குள் இருந்து எழும் எண்ணம் இல்லை. குளிருக்கு இதமாக, இருந்த இந்த கதகதப்பை இழக்க மனம் வரவில்லை, அதுமட்டுமா! என்றால் இல்லை, அந்த ரஜாய் அவளை மட்டும் அல்ல அவனையும் தனக்குள் கொண்டுள்ளது. ஆம் அவள் அவன் கை வளைவில் அந்த போர்வைக்குள் சுருண்டு இருந்தாள். 

கடந்த நாட்களை மனம் மெல்ல அசைபோட்டது, 6 மாதம் முன்பு வரை அவள் இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்து எடுப்பாள், அதில் அவள் மகிழ்ச்சியாக வாழ்வாள் என்ற கற்பனை கூட அவளிடம் இல்லை. ஆனால் அது சாத்தியமானது, அவனால் பரிதியால், அவன் வந்த பின் வாழ்வி்ன் வசந்த காலங்கள் தான் அவளுக்கு. 

அன்று அவள் வீட்டில் பரிதி, அன்பழகனுடன் பேசியது எல்லாவற்றையும் கேட்டு இருந்தாள். அவன் கீழே சென்ற சிறிது நேரத்தில் அவளுக்கும் தூக்கம் கலைந்து இருக்க, அவனை அறைகுள் காணாமல், வெளியே வந்து இருந்தால். கூடத்தில் பேச்சுக்குரல் கேட்கவும் அப்படியே படிகளில் நின்றுவிட்டவள், அவர்கள் பேச்சு முழுவதும் கேட்டு இருந்தாள். பரிதி என்னவெல்லாம் செய்து இருக்கிறான் என்று அவன் வாய் பொழியாக கேட்டபின் அவள் எப்படி உணர்ந்தாள் என்று சொல்ல முடியவில்லை. மனம் முழுவதும் ஒரு ஆசுவாசம். 

சிறு குழந்தைகள் பள்ளியில் எப்பொதும் தன்னிடம் வம்பு இழுக்கும் பிள்ளைகளை பற்றி வீட்டில் சொன்னாலும், பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்கள் வம்புக்கு போகாதே என்று தான் சொல்லுவார்கள். அவர்களை பெருந்த வரை அது பெரிய விஷயம் அல்ல. அந்த குழந்தையும் அப்படி ஒதுங்கி போனாலும், தன்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே, நான் சரியாக தானே இருக்கிறேன் என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் இருக்கும், அப்படி பட்ட நேரத்தில், வேறு யார் மூலமாகவோ, அல்லது ஆசிரியர் மூலமாகவோ அந்த பிள்ளைகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் போது, எப்படி அந்த பிள்ளை மனம் சந்தோஷ படுமோ, அப்படி ஒரு சந்தோஷம், அமைதி அவள் மனதில் என்ன தான் அன்பழகனை எதிர்ந்து வாழ்வில் ஜெயித்து இருந்தாலும், அவன் துனையில்லாமல் வெற்றி பெற்றாலும். எல்லாம் செய்துவிட்டு அவன் இன்றளவும் மகிழ்ச்சியாக தான்  இருக்கிறான், அவன் இழந்தது ஏதும் இல்லை. ஆனால் நான் எல்லாவற்றையும் இழந்து, துனை என யாரும் இல்லாமல், இப்படி ஒடிக்கொண்டே இருக்கிறேனே? நான் என்ன தவறு செய்தேன்……………… என்ற கழிவிரக்கம் அவளை எப்போதாவது ஆட்கொள்ளும். 

சற்று நேத்தில் அவள் தன்னை தேற்றிக்கொண்டாலும், மனம் கு.ழம்பி தவிக்கும், எதிர்காலம் என்ன என்ற அச்சுறுத்தல் இருக்கும். ஆனால் இன்று மனம் முழுமையாக சமன்பட்டது போல் இருந்தது. செய்யும் தவறுக்கு எப்போதும் காலம் கணக்கு வைத்து இருக்கிறது. வினை பயன் அவர்களை வந்து சேரும்…………………………… மேலும் ஏதும் செய்யாமல் அப்படியே நன்று விட்டாள். கதிர் வந்த போது தான் பரிதியும் அவள் அங்கு நிற்பதை கவணித்தான். அவள் நின்ற நிலையே அவனுக்கு உணர்த்தியது அவள் எல்லாவற்றும் கேட்டு இருக்கிறாள் என்று. 

அப்போது அறைக்குள் சென்றவன் தான் பின் அவர்கள் கிளம்பும் வரை அவன் வெளியே வரவில்லை. மகள் வீட்டுக்கு வந்த போது இருந்தைவிட, அவள் கிளம்பும் போது அவள் முகத்தில் குடிக்கொண்டு இருந்த மகிழ்ச்சி கனேசனுக்கும், ரத்தினத்துக்கும் நிறைவை தந்தது. அவர்களும் அவர்களை மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்த அடுத்த நாள் இரவு அவர்கள் கிளம்ப இருக்க, அங்கு மாறுபட்ட சூழல் மதிக்கும், கதிரழகிக்கும் சற்று சிரம்மாக இருந்தது. இருந்தும் 10 நாட்களில் ஒரளவு பழகி கொண்டனர், இப்போது தான் பரிதிக்கு சில்லாங்க்கு மாற்றல் வந்து இருந்தது. இப்போது தான் இந்த இடத்தில் ஒரளவு பெருந்தி இருக்க மறுபடியும் வேறு இடமா என்ற ஆயாசம் தான் அவளுக்கு, 

வீட்டில் தெரிவிக்க  பாக்கியாவோ, உனக்கே அது தெரியாத ஊர் அப்படி இருக்கும் பொது இவர்களை அழைத்து சென்று என்ன செய்வாய். முதலில் நீ போய் வீட்டில் எல்லாவற்றையும் செட் செய் பின் இவர்களை அழைத்து போகலாம் என்று விட்டார். மீண்டும் இருவரும் சென்னை வந்துவிட,பரிதி சல்லாங்க சென்றுவிட்டான். பாக்கியா சென்னது போல், குளிச்சியான வெப்பநிலை தான். இவனுக்கு குவாட்டர்ஸ் கிடைக்கவே 20 நாட்களுக்கு மேல் ஆனாது. அதுவரை பில்லட்டில் தான் இவன் வாசம். தினமும் வீட்டுக்கு அழைத்து பேசுவான். மதியிடம், அழகியிடம் என் எல்லோரிடமும். கதிருக்கும் அழைத்து அங்கு உள்ள நிலையை தெரிந்துக்கொள்ளுவான். 

இப்போது கதிர் மாமா வீட்டின் அருகில் வீடு ஒன்றை கட்டி இருக்கிறான் சென்னையிலும் இப்போது தொழில் இருந்தது. ஆனால் முன்பு போல் வெளியில் இல்லாமல் கதிரழகி இருந்த பகுதியில் இப்போது இவன் தங்கி இருந்தான். இந்த ஏற்பாடு பரிதியுடையது. தாய், தந்தைக்கு வயதாகிவிட்டது, அவர்களால் இவர்கள் இடத்தில் நிரந்திரமாக இருக்க முடியாது. அவர்களுக்கும் ஒரு துனை தேவைபட, கதிர் வாரத்தில் 3 நாட்கள் அங்கு தான். பாக்கியா அவனை தன் மகனாகவே பாவித்தார்.

சென்னை வந்த இறங்கினர் மதியும், கதிரழகியும், இப்போது பாக்கியாவீட்டில் மருமளாக அவள் வாசம். இவர்கள் வந்ததும், கனேசன் குடும்பத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்று இருந்தார். மணிமேகலை அந்த வருடம் தேர்வு முடித்துவிட்டு செல்ல சொல்ல, பரிதியும் சரி என்றான். அதனால் மேலும் 3 மாதம் அவர்கள் சென்னை வாசம் நீடித்தது. அதற்குள், பரிதி அங்கு வீடு  மற்றும் தேவையானவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து இருக்க, இந்த முறை மதியழகியையும் அங்கு உள்ள பள்ளியில் இடம் கிடைத்துவிட, இவர்கள் குடும்பமாக இங்கு வந்துவிட்டனர். வந்த புதிதில் பாக்கியா, ராகவன் மணிமேகலை மற்றும் கதிர் என்று எல்லோரும் வந்து ஒரு வாரம் ஊர் சுற்றி பார்த்து சென்று இருந்தனர். முதலில் இவர்கள் மூவரும் வருவதாக இருந்தது. பரிதி தான் இவர்களை தனியே வரவேண்டாம் என்றுகதிரையும் இவர்களுடன் வர வரவழைத்தான்.  அதன் பின் 20 நாட்கள் இடைவெளியில் கதிரழகியின் குடும்பம் வந்து சென்றனர். 

முற்றிலும் புதிய வாழ்க்கை முறை,நகரத்து ஒட்டங்கள் ஏதும் இங்கு இல்லாமல் இயற்கையோடு இனைந்த வாழ்வு, அருமையான சுற்று சூழல் எல்லாம் கதிரழகிக்கு இதமாக  இருந்தது. ஆனாலும் இன்னும் இவர்கள் வாழ்வு தொடங்க படவில்லை. அவ்வப்போது சிறு அனைப்புகளும், முத்தங்களும் பரிமாரிக்கொண்டாலும். முழுமையான தாம்பத்தியம் இன்னும் இல்லை. அது தானாக இயல்பாக வர வேண்டும் என்று பரிதி நினைத்தான். என்ன தான் கடந்த கால கசப்புகளில் இருந்து மீண்டு வந்து இருந்தாலும், பரிதி பற்றி தெரிந்தாலும்,புரிந்தாலும், அன்புவுடன் கடந்த இரவு  நிகழ்வுகள், இன்னும் அவள் மனதில் ஒரு பயத்தை ஏறபடுத்திக்கொண்டு தான் இருந்தது. மனதில் காதல் இருந்தும்,வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தும் அந்த முதல் அடியை எடுத்து வைப்பதில் தயக்கம் இருந்தது அவளுக்கு.

சில நேரம் பரிதி பார்வையில் தெரியும் வித்தியாசம் அவளை மூச்சடைக்க செய்தாலும், அதை கடந்து வரும் துணிவு மட்டும் இன்னும் அவளுக்கு வரவில்லை. ஆனால் அந்த தடையை உடைக்கும் நாளும் அவர்கள் வாழ்வில் வந்தது. அவர்கள் இங்கு வந்து 3 மாதம் கடந்து இருந்த நிலையில். மதிக்கு தேர்வுகள் முடிந்து பள்ளி விடுமுறை அளிக்கபட்டு இருந்தது. அதனால் மூவரும் சென்னை சொல்வதாக தீட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பரிதிக்கு விடுமுறை கிடைக்கவில்லை. அவர்கள் இருவரை மட்டும் போக சொல்ல கதிரழகிக்கு அவனை விட்டு செல்ல மனம் இல்லை. 

ஆனால் ஊருக்கு போவது பற்றி முன்பே குழந்தையிடம் கூறியிருக்க, அவளும் அதை தாத்தா, பாட்டியிடம் கடந்த ஒரு வாரமாக பேசி இருந்தாள். இப்போது போகவில்லை என்று அழகி கூறவும் ஒரே ரகளை தான். இவள் பன்னிய கலாட்டாவில் அடுத்த நாள் இரவு கதிர் வந்து இருந்தான், வந்தவன் மதியை மட்டும் அழைத்து சென்றுவிட…………… இவர்களுக்கு முதல் தனிமை. 

முதல் நாள் பரிதி பணிக்கு சென்றுவிட, மதியில்லாமல் மிகவும் போர் அடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் விடுமுறைக்கு சென்று இருக்க, இவளுக்கு நேரத்தை நகர்த்த முடியவில்லை. அவனுக்கு அழைத்துவிட்டாள். 

திருமணம் ஆனா இத்தனை நாட்களில் அவளிடம் இருந்து முதல் அழைப்பு, எப்போதும் இவன் தான் அழைத்து பேசுவான். அவள் ஏதும் கேட்க வேண்டும் என்றால் மெசேஜ் தான் செய்வாள். இன்று அழைக்கவும் பதறி தான் எடுத்தான். எப்போ வருவிங்க என்ற கேள்வி தான் முதலில்……………. கேட்டவனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. 

சிறிது அமைதிக்கு பின் நீயும் ஊருக்கு போரியா என்று கேட்டான். அவ்வளவு தான் இனைப்பை துண்டித்துவிட்டாள். இவன் பணி நேரம் முடிந்து வீடு வர சாப்பாடு மேஜையில் எல்லாம் சமைத்து வைக்கபட்டு இருந்தது. திறந்து பார்த்தவன் முகத்தில் புன்னகை. எல்லாம் கார சாரமான சமையல். பொதுவாக இ்ங்கு அவ்வளவு உரைப்பு இருக்காது. குழந்தைக்கும் சமைப்பதால் அழகியும், மிதமாகவே காரம் சேர்ப்பாள். ஆனால் பரிதிக்கு காரமான உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். இன்று சமைத்தவை எல்லாம் அவனுடைய விருப்ப உணவுகள்.