அத்தியாயம் – 30

ஊரைவிட்டு  வந்த இந்த 5 வருடங்களில் ஒரு நாள் கூட அவள் ஊருக்கு போவதை பற்றி யோசித்தது கிடையாது. அந்த அளவுக்கு மனம் வெறுத்து தான் அவள் அங்கு இருந்து வெளியேறி இருந்தாள். நேற்றுவரை அவளுக்கு அப்படி ஒரு எண்ணமும் இருக்கவில்லை. ஆனால் பரிதி இப்படி தீடீர் என்று கூறிவிடுவான் என்று அவள் எதி்ர்பார்க்கவில்லை.

ஒரு பக்கம் அவன் சொல்வது சரி என்றாலும், இன்னோரு பக்கம் மனம் அதை ஏற்க மறுத்தது. ஏற்கனவே இன்று காலை முதல் நடந்தவற்றில் மனம் சோர்ந்து இருந்தாள். இப்போது தான் ஒரு விடுதலை உணர்வு வந்து இருந்தது. அதற்குள் அதே போல் ஒரு சூழ்நிலையா? அதுவும் அந்த ஊர், அந்த வீடு இது எல்லாம் அவள் மனக்காயங்களை மீண்டும் கிளறிவிட போதுமானது. இதுவரை நடந்தது தெரியாத மனிதர்கள், தெரியாத இடம், அவர்களுக்கு தன் வாழ்வில் நடந்தவை எதும் தெரியாது. ஆனால் அதுவே மூச்சு முட்டுவது போல் இருக்க. இப்போது எல்லாம் தெரிந்தவர்கள், அவள் பிறந்து, வளர்ந்த ஊர், பார்த்து பழகிய மனிதர்கள், அவள் வாழ்வில் நடந்தவை அத்தனையும் அறிவார்கள், அவர்களின் பார்வை எப்படி இருக்குமோ, என்ன கேட்பார்கள், மதியை பற்றி, என்னை பற்றி, பரிதியை பற்றி, இந்த திருமணத்தை பற்றி, என்று எண்ணங்கள் எங்கோ பயனிக்க அவள் வதனமும், மனமும் இறுக துவங்கியது.

காலையில் சீக்கரம் எழுப்பிவிட கலைப்பில் குழந்தை கார் கிளம்பிய சிறிது நேரத்தில் உறங்கிவிட அவளை பின் இருக்கையில் வசதியாக படுக்கவைத்தவன். முன்னால் வண்டி ஒட்டிக்கொண்டே, அவளை தான் பார்த்து இருந்தான். இவர்கள் ஊருக்கு வருவதாக முடிவு செய்த உடன் கதிர் அவன் நன்பன் மூலம் வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்க, டிரைவர் வேண்டாம் என்று விட்டான் பரிதி, அதனால் அவர்கள்  மூவர் மட்டுமே அந்த காரில், பயனம் ஆரம்பித்தில் இருந்து கதிரழகியின் அமைதி அவனுக்கு புரியதான் செய்தது. ஆனாலும் ஏதும் கேட்கவி்ல்லை. பேசவும் இல்லை.

அவளும் பேசும் எண்ணம் இல்லாமல் சாலையை வெறித்தபடி அமர்ந்து இருந்தாள். ஏதாவது பேசினால் பரிதியின் மீது வார்த்தைகளை வீசிவிடுவோம்மா? என்ற எண்ணம் அவளுக்கு,   ஆம் அவளுக்கு பயம் தான் ஆதங்கமாக இருந்தது. அவள் அப்பா ஊருக்கு வாருங்கள் என்றவுடன், இவள் உடல் மொழியில் இருந்த எதிர்ப்பு தெரிந்தும், அதை கண்டுகொள்ளாமல் அப்பாவிடம் சரி என்று சொன்னது அவளுக்கு அத்தனை ஆற்றாமையாக இருந்தது. 

இது நாள் வரை இருந்த போராட்ட வாழ்க்கை மறந்து தான் தோள் சாய்த்துக்கொள் ஒருவர் கிடைத்த நிம்மதி முழுவதும் கிடைக்கும் முன்னே இந்த பயனம், அடுத்து அவள் வீடு, கலங்கி இருக்கும் மனம் எதிர்மறை சந்தனைகளில் தறிகெட்டு ஒட, எல்லாமே தவறாக பட்டது அவளுக்கு அந்த நிமிடம். அதைவிட அருகில் இருப்பவன் எல்லாவற்றையும் அறிந்தாலும், வாய் திறக்காமல் வருவது இன்னும் எரிச்சலை கிளப்பி இருந்தது அவளுக்கு, இப்போது யார் கிடைப்பார்கள் பாயலாம் என்ற நிலையில் மனதில் குமுறிக்கொண்டு இருந்தாள் அவள்.

அருகில் இருப்பவன் அனைத்தும் அறிந்தாலும், இப்போது போய் தனோ அவளிடம் சீக்கிக்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக அந்த பயனம் முடிவடைந்து கார் அவர்களின் வீதியில் நூழைந்தது. என்ன தான் சற்று வளர்ந்து ஊர் என்றாலும், கார் இன்னும் அந்த ஊரில் அவ்வளவு சாதாரணம் ஆகவில்லை. அதனால் அந்த வீதியில் இருந்தவர்கள், நின்று திரும்பி பார்த்து சென்றனர். கார் அவள் வீட்டின் முன் நிற்க, அதுவரை வேடிக்கை பார்த்து இருந்தவர்கள் முகத்தில் சுவாரசியம் வந்து அமர்ந்து இருந்தது. அட நம்ம கனேசன் வீடுக்கு யார் வரது? என்ற கேள்வியுடன் அவர்கள் நடையும் அவள் வீட்டை நோக்கி இருந்தது. வீட்டின் முன்னால் கார் வந்து நின்றதும். அதுவரை இருந்த இறுக்கம் எல்லாம் மாறி, ஒரு பதற்றமும்,பயமும் வந்து ஒட்டிக்கொள்ள, வண்டியை நிறுத்தியவன் அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் கைக்குள் பெத்தி வைத்துக்கொண்டான். 

இதுவரை மனதில் எவனை வறுத்து எடுத்தாளோ இப்போது அவனிடம் தான் ஆறுதலும் தேடினாள். அவன் கைகள் கொடுத்த அழுத்தம் அவளின் மன இறுக்கங்களை குறைத்துவோ. அவளும் அந்த கைகளை பற்றிக்கொண்டாள்.

கதிர் வந்து கார் கதவை திறந்து குழந்தையை தூக்கிக்கொள்ள, அவள் தூக்கம் கலைந்து எழுந்தவள், அவன் தோள் மீது சாய்ந்துக்கொண்டு சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள். அதற்குள், அகிலனும், முகிலனும் வெளியில் வந்துவிட, ரத்தினம் ஆரத்தி தட்டுடன் வாசலில் நின்று இருந்தார். சூழ்நிலையை உணர்ந்தவன், அவள் கைகளை விடுவித்துவிட்டு, கார் கதவை திறந்து இறங்கியவன், மறுபக்கம் வந்து அவளுக்கும் கதவை திறந்து விட்டு இருந்தான். அவள் கைபற்றி இருவரும் அந்த வீட்டின் வாசலில் ஜோடியாக நின்று இருக்க, இருவருக்கும் ஆலம் சுற்றி, திருஷ்டி கழித்தார் ரத்தினம்.  கனேசன் இருவரையும் வீட்டுக்குள் அழைக்க, இருவரும் வலது கால் வைத்து வீட்டில் நுழைந்தனர். இது தான் அந்த பையனா என்று அங்கு இருந்தவர்கள் கீசுகிசுக்க அவர்களை கண்டுக்கொள்ளாமல் வீட்டிற்குள் நூழைந்தனர். 

கதிரும் இவர்கள் பின்னாடி மதியுடன் நுழைய சிறியவர்கள் இருவரும் குழந்தையுடன் ஜக்கியமாகவிட்டனர். அவர்கள் இருவரும் அவளை இப்போது தான் நேரில் பார்க்கிறார்கள், இதுவரை விடியோ காலில் தான் இவர்களின் சந்திப்பு, இப்போது தான் முதலில் நேரில் பார்க்கிறார்கள்  குழந்தை தயங்கினாலும், சிறிவர்களுடன் ஒட்டிக்கொண்டாடு மாமா மாமா என்று அவர்களை வைத்து செய்துக்கொண்டு இருந்தாள். 

காரைவிட்டு இறங்கும் போது பற்றிய கதிரழகியின் கையை பரிதி இன்னும் விடவில்லை, அவளும் விலக்கவில்லை, விட்டிற்க்குள் வந்தவர்கள் பார்வை வீட்டை சுற்றியது. அவளுக்கு, இத்தனை வருடத்திற்க்கு பிறகு இந்த வீட்டில் அவள் வாசம். பழையவை மனதை அலைகிழித்தாலும், பக்கத்தில் இருக்கும் நிகழ்காலம் அவளை கட்டுபடித்தியது, ஏதும் முகத்தில் தெரியாமல் இருக்க பெரிதும் பாடுபட்டாள். கனேசனுக்கும், ரத்தினத்திற்க்கும் மகள் இத்தனை வருடம் சென்று வீட்டுக்கு வந்து இருப்பது அத்தனை மகிழ்ச்சி, அதுவும் அவள் வாழ்க்கை சீராகியதில் இன்னும் மனநிம்மதி அடைந்து இருந்தனர். இருவரும் மகளையும் மருமகனையும் பார்த்து பார்த்து பூரித்தனர். இப்படி ஒரு நாளுக்காக தானே அவர்கள் வேண்டுதல், இன்று அது பிரபூரணமானதில், அதிலும் மகள் மனதிற்க்கு பிடித்தவனை கைபிடித்து இருப்பது அவர்கள் மனதில் என்றும் இல்லாத நிம்மதியை விதைத்து இருந்தது.

என்ன சாப்பிடுறீங்க மாப்பிள்ளை என்றார் கனேசன். இப்போ ஒன்னும் வேணாம் மாமா. காலையில் கோயிலில் சாப்பிட்டது இன்னும் அப்படியே இருக்கு, மத்தியானம் பார்த்துக்கலாம், உங்களுக்கு எது வசதியோ, அழகிக்கு எது புடிக்குமோ அதை செய்ங்க போதும் என்றான். சரி என்று தலையாட்டிய ரத்தினம், சமையல் அறைக்குள் போய் இருந்தார் சமையலுக்கான ஏற்பாடுகளை கவணிக்க. சிறிவர்கள் அக்கா அருகில் வந்தவர்கள், எப்படி க்கா இருக்க என்று கேட்க அதுவரை இருந்த ருக்கம் குறைத்து அவர்களுடன் பேசினாள், கதிர் அங்கே தான் அமர்ந்து இருந்தான். 

நந்தினி வீட்டில் இல்லை, அவளின் அம்மா வீட்டிற்க்கு சென்று இருந்தாள். ஆனால் அன்பழகன் வீட்டில் அவர்களின் அறையில் தான் இருந்தான். வெளியில் நடக்கும் அனைத்தும் அவனுக்கு கேட்டுக்கொண்டு தான் இருந்தது. ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாத நிலை. அறையை விட்டு கூட வெளியேற முடியாமல் அமர்ந்து இருந்தான். 

இத்தனை வருடங்கள் அவள் இல்லாமல் அந்த வீட்டில் எல்லா உரிமையுடனும் வலம்வந்தவன். ஆனால் இன்று யாரும் ஏதும் சொல்லாமல் இருக்க அவனாகவே அவனை அறைக்குள் அடைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தான். யாரை தன் காலடியில் விழ்த்த வேண்டும் என்று எண்ணி இருந்தானோ, யாரை இந்த வீட்டை விட்டு தூரநிறுத்தி இருந்தானோ, இன்று அவள் அந்த வீட்டில் மகாராணியாக இருக்க, தான் இருக்கும் நிலை கண்டு வெறுத்தான். எங்காவது வெளியில் சென்றுவிடலாம் என்று நினைத்தால், இப்போது அவர்களை கடந்து தான் போகவேண்டும். நான் ஏன் அவர்களுக்கு பயந்து ஒட வேண்டும் என்ற இறுமாப்பும் வேறு அவனை கொன்றது. அவர்கள் எப்போது கூடத்தை காலி செய்வார்கள் தான் வெளியேறலாம் என்று காத்து இருந்தான். இப்போது  அவனும் நந்தினியும் இருக்கும் அறை முன்பு கதிரழகியின் அறையாக இருந்தது, அவர்களுக்கு திருமணம் ஆன பின் அவன் அந்த அறையில் இருந்துக்கொள்ள, அவன் தன் தாய் இருந்த அறைக்கு மாறிக்கொண்டாள் அங்கு இருக்கும் வரை. 

அவள் வெளியேறின பின் கூட அவனும் அவன் மனைவி நந்தினியும் அதே அறையில் தங்கிவிட, அப்போது இருந்த சூழலில் அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் இப்போது கதிரழகி தன் கணவனுடன் வந்து இருக்கையில், அவளை எங்கு தங்க வைப்பது என்று கனேசன் யோசனையாக இருக்க. கதிரழகிக்கும் அந்த சூழல் மூச்சு முட்டுவதாய் இருந்தது. 

அவள் வீட்டிற்குள் வந்ததும் பார்வை தன் அறை பக்கம் தான் போனது, பார்தவுடன் தெரிந்தது அது இப்போது வேறு ஒருவரின் புழக்கத்தில் இருப்பது, அதிலும் அது யாராக இருக்கும் என்றும் அவளுக்கு தெரியும். அதனால் சற்று இளகி இருந்தவள் மீண்டும் இறுகினால். கனேசனுக்கு அவளை எங்கு இருக்க சொல்லுவது என்று தெரியவில்லை. காலையில் இருவர்ரையும் அழைக்கும் போது இது எல்லாம் தோன்றவில்லை, அவர்களை அழைத்துவிட்டு இவர்கள் வீட்டுக்கு முன்பே வந்துவிட்டனர் தான், வந்த உடன் மகள் வரும் சந்தோஷத்தில் மகளுக்கு பிடித்தவைகளை எல்லாம் சமைக்க சொல்லி அதற்கான ஏற்பாடுகளை பார்த்தவர் இதை யோசிக்கவில்லை. 

முன்பு கதிரழகி தங்கி இருந்த அறையில் ஒரு ஒற்றை கட்டில் மட்டுமே இருக்கும்,அவள் போன பின் அந்த அறையில் எந்த பெரிய மாற்றமும் செய்யவில்லை, இன்னும் சொல்ல போனால் அந்த அறையில் தான் அவள் உடமைகள் எல்லவற்றையும் போட்டு வைத்து இருந்தனர்.அதனால் அந்த அறையில் அவர்களை தங்க வைக்க முடியாது. கீழே இருக்கும் இன்னும் ஒரு அறையை தயார் செய்ய எப்படியும் 1 மணிநேரமாவது ஆகும். அதனால் அவர் தயங்கியபடி இருக்க,   எல்லோரையும் பார்த்து இருந்த கதிருக்கு சூழ்நிலை புரிந்தது. உடனே பரிதியை பார்த்தவன், காலையில் சீக்கரம் எழுந்தது களைப்பா இருக்கும்,இரண்டு பேரும் போய் ஒய்வு எடுங்க என்றவன் கனேசன் ஏதோ சொல்ல வருவதற்க்கு முன். மேல இருக்க ரூமுக்கு கூட்டி போ அழகி என்றவன், போய் சத்த நேரம் படுங்க, சமையல் முடியவும் நான் வந்து எழுப்புறேன் என்றான். 

அவன் சொன்னது அங்கு இருந்த எல்லோருக்கும் ஒரு விடுதலை உணர்வு,அன்பு உட்பட அவனுக்கும் அவர்கள் மேல சென்றுவிட்டாள் வெளியில் எங்காவது போய்விட்டு இரவு வீட்டுக்கு வரலாம் என்ற நினைப்பு, ப்பா கிளம்புகடா முதல என்று வாய்விட்டு புலம்பியவன், அவர்கள் போவதற்காக காத்து இருந்தான். ஆனால் அவன் நேரம் அன்று சரியில்லை போலும், அவர்கள் இருவரும் மேல சென்று இருக்க, கனேசனும் கதிரும் அங்கேயே அமர்ந்து விட்டனர். 

இன்னும் அவர்களுக்கு சகஜமான பேச்சுவார்த்தை இல்லை என்றாலும், இன்று சூழ்நிலை உணர்ந்து கதிர் செய்தது அவருக்கு, பெரும் நிம்மதியை கொடுத்து இருந்தது. கதிர் எழுந்திருக்க போக அவன் கையை பற்றிக்கொணாடார். அந்த பிடியில் அவன் உணர்ந்தது, அவனை எல்லாமாவும் இருந்து பார்த்துக்கொண்ட கனேசனை தான். இந்த தொடுகை அவனுக்கு பழைய ஞாபகங்களை கிளறிவிட்டு இருக்க அவனும் அந்த இருக்கையில் அப்படியே அமர்ந்துவிட்டான். இருவரும் ஏதும் பேசவில்லை. ஆனால் அவர்களின் உணர்வு பறிமாற்றம் அல்கே நடந்துக்கொண்டு இருந்தது. 

இவனுக்கு நான் என்ன செய்துவிட்டேன், ஆண் பிள்ளை அவன் செய்யும் எல்லாவற்றிக்கும் அவன் கூட இருந்தேன். அவன் வளர்ந்து என் தெழிலையும் வளர்த்தான். அதை விட என் மகளுக்கு எல்லாமாகவும் இருந்து இருக்கிறான். அன்று அவன் இல்லை என்றால் என் மகள் எனக்கு இப்படி திரும்ப கிடைத்து இருக்கமாட்டாள் என்று எண்ணும் போதே அவருக்கு மனம் பாரமானது. அவரின் மன ஒட்டத்தை உணர்ந்தவன் போல் ஏதும் பேசாமல் அப்படியே அமர்ந்து இருந்தான் கதிர்.

ஆனால் உள்ளே இருந்த அன்புக்கு தான் தலை வேதனையாக இருந்தது. அவர்கள் சென்றுவிட்டார்கள் என்று வெளியேற வந்தவன் இவர் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான். உங்க பாசத்தை பெழிய நல்ல நேரம் பாத்தீங்க………….. ஐய்யோ………… என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

மேல போனவர்களுக்கு, அந்த அறை சற்று ஆசுவாசத்தை கொடுத்தது. முக்கியமாக கதிரழகிக்கு. இந்த அறை அவளுக்கு பரிச்சியமானது தான். முன்பு கதிர் அவர்கள் வீட்டில் இருக்கும் போது இந்த அறையில் தான் நங்கி இருந்தான். நல்ல வசதியான காற்றோட்டமான அறை அவன் வீட்டில் இருந்தால் இவளும் கூட பெரும் பொழுதுகளை இங்கு தான் கழிப்பாள் அதனால் அவளுக்கு அந்த அறை அன்னியமாக தெரியிவில்லை. மனதில் எழுந்த நிம்மதியில் அங்கு இருந்து குளியல் அறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தபடுத்திக்கொண்டு வந்தாள். அவள் வந்ததும். பரிதி நீ டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கு, என்றவன் குளியல் அறைக்குள் நுழந்தான்.

அவளும் கொண்டு வந்து இருந்த பையில் இருந்து இளகுவான ஒரு காட்டன் புடவையை எடுத்து உடுத்திக்கொண்டவள், கட்டி இருந்த பட்டு புடவையை அங்கேயே இருந்த நாற்காலியில் விரித்து போட்டாவள். பரிதிக்கான மாற்று உடையை எடுத்து வைத்துவிட்டு, தலையை விரித்து இருந்தாள். விடியற்காலையில் தலைக்கு குளித்து இருந்தால், இன்னும் ஈரம் இருக்க, தலையை உலர்த்தியபடி வெளியில் நின்று இருந்தாள். 

வெளியில் வந்தவன் உடைகளை மாற்றிக்கொண்டு, அறையை பார்வையிட்டன் அவள் இல்லை என்று தெரிந்தும், வெளியில் வந்தவன் அங்கு தலை உலர்த்திக்கொண்டு இருந்தவளை பார்த்தான். அவள் இந்த இரண்டு நாட்களாக புடவையில் தான் இருக்கிறாள், அம்மா சொல்லி இருப்பார்கள் போல என்று நினைத்தவன், அவள் அருகில் வர, அதுவரை நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு இருந்தவள், அவன் அருகாமை உணர்ந்து, வந்துட்டிங்களா, கொஞ்ச நேரம் தூங்குங்க, நான் தலையை காயவைச்சிட்டு வரேன், என்றாள். ம்மம்ம தூங்கலாம் நீயும் வா என்றவன் அங்கேயே நின்றுக்கொள்ள, தான் வராமல் அவன் செல்ல மாட்டான் என்று உணர்ந்தவள், சிறிது நேரம் இருந்துவிட்டு, போகலாம் என்பது போல் தலை ஆட்டியவள் உள்ளே செல்ல இவனும் அவள் பின்னால் சென்றாள். 

உண்மையிலே அவளுக்கு தூக்கம் கண்களை சூழற்ற படுத்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள். சிறிது நேரம் தன் மொபைல் போனை பார்த்துக்கொண்டு இருந்தவன். அதுவும் சலித்து போக, அவளை பார்க்க அவள் நல்ல உறக்கத்தில் இருக்க,  வெளியில் வந்தான் அறையை மெதுவாக சாற்றியவன், கீழே செல்ல, அப்போது தான் கதிர் கிளம்பி இருக்க, அதை பாரத்துக்கொண்டு இருந்த அன்பழகன் அறையை விட்டு வெளியேவர, சரியாக கீழே வந்த பரிதியிடம் சீக்கிக்கொண்டான்…………………….

தொடரும்…………….