என்ன தான் மனதில் அலைபுறுதல்கள் இருந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவள் முகத்தில், மனதில் இந்த பிடித்தம் வந்த நாள் முதல், இருந்த சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து, லேசான உணர்வு. திருமணம் மிக எளிமையாக கோவிலில் நடந்தாலும், கதிரழகியின் சார்பாக, கனேசன்,ரத்தினம், அவர்களின் பிள்ளைகள், கதிர்வேலன் மற்றும் நன்பர்கள் வந்து இருந்தார்கள்.
பாக்கியாலட்சுமியின் பக்கம், அவர் கணவர், சில நன்பர்கள்,கண்ணன் வந்து இருந்தார்கள். சொந்தங்கள் எல்லோருக்கும் அலைபேசியில் அழைத்து செய்தியை தெரிவித்து இருந்தனர்.
பாக்கியலட்சுமி, தன் கணவனின் தங்ககைக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, பொரிந்து தள்ளிவிட்டாள் அவள், அப்படி என்ன அவசியம் வந்தது, இப்படி ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடிக்க. அவதும் குழந்தையுடன் இருப்பவளை,நம்ம புள்ளைக்கு எதில குறை, என்று அவர் கண்படி பேசிவிட, நொந்தே போனார் அவர். இந்த காரணங்களுக்காக தானே அவர் முதலில் இந்த திருமணத்தை மறுத்தது. ஆனால் மகனுக்கு அவள் மீது இருக்கும் பிடித்தம் பார்த்து தன் பிடிவாதம் விட்டு வந்தவர், மற்றவர்களுக்கு அதை புரியவைப்பதற்குள் ஒய்ந்து போனார்.
கணவரிடம் அதை பற்றி சொன்ன போது, இது நம் மகன் வாழ்வு, புரியாதவர்களை பற்றி விட்டு விடு என்று அவர் முடித்துவிட, மகனோ உங்களை யார் அவர்களை எல்லாம் அழைக்க சொன்னது என்று சொல்லிவிட்டான். இதை எல்லாம் கேட்டவர், இன்னும் சில உறவுகளுடன் பேசியவர். நடப்பது நடக்கட்டும் என்று எல்லோருக்கும் தகவல் சொல்வதோடு நிறுத்திக்கொண்டார்.
திருமணம் முடிந்த அன்று நாள் நேரம் சரியாக இல்லை என்று மற்ற சடங்குகளை தள்ளி வைத்தனர். ஆனால் குல தெய்வகோயிலுக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று பாக்கியா கண்டிப்புடன் கூறிவிட, வேறு வழியின்று இதோ இன்று கிளம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை இருந்த மனநிலை மாறி, காலையில் பாக்கிய சொன்னவற்றை எல்லாம் மனம் அசைபோட்டுக்கொண்டு இருந்தாள்.
கதிரழகிக்கு, அதுவரை மேம் என்று அழைத்து வந்தவள், திருமணம் முடிந்தபின் அத்தை என்று அழைக்க சொல்ல, அதுவோ அவளுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டு இருந்தது. என்னவோ போல் இருந்தது அந்த அழைப்பு, இத்தனை வருடம் அவரை ஆசிரியராக வே மனதில் பதித்து விட்டு இப்போது அத்தை என்று அழைக்க முடியவில்லை. அழைப்பு ஒவ்வொறு முறையம் தீக்கிதான் வந்தது, அப்போதே சொல்லிவிட்டார் பாக்கியா, இங்க பார் அழகி, நாம நாளைக்கு எங்க ஊருக்கு குலதெய்வம் கும்பிட போறோம், எங்க சொந்தகளில் நிறைய பேருக்கு, இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை, நாளைக்கு எல்லோரும் உன்கிட்ட எப்படி நடந்துப்பாங்கனு சொல்ல முடியாது.
உன்கிட்ட எல்லாத்தையும் பெருத்து போக சொல்ல, ஆனா இங்க இருக்க போற இரண்டு நாளில் எந்த பெரிய மனகசப்பும் வராம பார்த்துக்கோ, என்று தானும் ஒரு டிபிக்கல் மாமியார் தான் என்று உணர்த்தி இருந்தார் கதிரழகிக்கு. அங்கு எப்படி இருக்குமோ, என்ன மாதிரி கேள்விகளை எதிர் கொள்ள வேண்டி வருமோ? என்ற பயபந்து நெஞ்சில் உருண்டாலும், தன் மகளை எப்படி நடத்துவார்கள் என்ற கவலையே பெரியதாக இருந்தது அவளுக்கு, அவள் குழந்தை அவளுக்கு இந்த திருணத்தை பற்றி என்ன தெரியும் சொன்னாலும் புரிந்துக்கொளும் வயதில்லை அவளுக்கு, அப்படி இருக்கையில், அவள் மனம் நேகும் படி ஏதும் நடந்துவிட கூடாது என்று மருகிக்கொண்டு இருந்தாள்.
அன்று இரவே அவர்கள் கிளம்பி இருக்க, நடு இரவில் தான் அவர்களின் ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தனர். அங்கு இருந்து கதிரழியின் ஊர் ஒரு 70 கிமீ தான். அவர்களையும் அழைத்து இருந்தனர் பரிதியின் பெற்றோர்கள். கனேசன் மற்றும் ரத்தினமும் காலையில் வருவதாக கூறியிருந்தனர். இவர்களுக்கு என்று அங்கு அவர்களின் பூர்விக விடு இருந்தது, அது தற்போது ராகவனின் தங்கை பாரமரிப்பில் இருந்தது, இவர் மட்டுமே இன்னும் இந்த ஊரில் இருக்கிறார், மற்ற அனைவரின் பிள்ளைகளும் வெளி ஊருகளில் படிப்பு வேலை என்று தங்கிவிட, இந்த மாதிரி விஷேசம் என்றால் இங்கு வருவார்கள், தங்கி விட்டு இரு நாட்களில் கிளம்பி விடுவார்கள். எல்லோருக்கும்மே நல்ல வாழ்வாதாரம் இருந்தது, அதனால் சொத்தை கொண்டு எந்த பிரச்சனையும் இல்லை.
என்றோ ஒரு நாள் சந்திப்பதால் பெரிய பூசல்களும் இதுவரை வந்தது இல்லை. இவர்கள் வந்த நேரம் அத்தை மட்டுமே முழித்து இருந்தார். வாங்க, இப்படி நடு ராத்தியா வரனும், காலையில் கிளம்பி இருந்தால் மத்தியானம் வந்து இருக்கலாம்……………… இப்ப பார் என்று அவரின் பேச்சுக்கு யாரும் ஏதும் சொல்லவில்லை. எல்லோரையும் வரவேற்றவர் கதிரழகியும், பரிதி கையில் இருக்கும் குழந்தையும் ஒரு பார்வை பார்த்துவைத்தார். அந்த பார்வையின் அர்த்தம் அவ்வளவு நல்லதாக இல்லை கதிரழகிக்கு, இப்பவேவா…………….. என்று கண்ணை கட்டியது அவளுக்கு, வீட்டிக்குள் சென்றுவிட்டாள். வாங்க அண்ணி என்று பாக்கியத்தை அழைத்தார், எப்படிமா இருக்க? என்ற ராகவன் கேள்விக்கு நல்லா இருக்கேன் அண்ணா என்றார்……………….
பரிதி ஒரு தலை அசைப்பு மட்டுமே………… அவன் எப்போதும் அப்படி தான் தெரியும்….. தெரிந்தும் ம்மம்மம்மம்மம்மம்மம என்று பெருமூச்சு அவருக்கு.. சரி எல்லோரும் தூங்குங்க, காலையில் எழுந்து வேலை இருக்கு என்றவர், பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
குழந்தை வண்டியில் வரும் போதே நல்ல தூக்கம், அப்படியே படுக்கையில் விட்டவள், உடைகளை தளர்த்தி இருந்தாள், காற்று நன்றாக வந்ததில் குழந்தை இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள், குளியல் அறைக்கு போய் தன்னை சுத்தபடுத்தி வந்தவள், ஜன்னல் அருகில் நின்று இருந்தாள், இவள் பின்னால் வந்து நின்று இருந்தான் பரிதி, என்ன தூக்கம் வரலையா? என்றான்………… ம்மம்மம்மம்மம என்றவள் மீண்டும் பார்வையை வெளியே வைத்து இருக்க, பரிதிக்கு அவள் மனதில் என்ன ஒடுகிறது என்று புரிந்தது. அவனுக்கு தெரியும், இங்கு என்ன நடக்கும் என்று, கண்டிப்பாக நாளை இவன் திருமணம் பற்றி சொந்தங்கள் இடையில் சல சலப்பு இருக்கும். சில மனம் புண்படும் படியும் நடந்துக்கொள்ளாலாம். என்றைக்கு இருந்தாலும் அவை எல்லாம் நடந்தே தீரும், இன்னும் நம் சுற்றம் இப்படி தான், அதை மாற்ற நினைப்பதைவிட, நாம் அதை எதிர்கொள்ள கற்றுக்கொள்வதே சிறந்தது.
அவள் தோள் மீது ஆதரவாக கைவைத்தவன், வந்து படுமா நாளைக்கு சீக்கரம் எழும்பனும், எப்படியும் நாளைக்கு முழுசும் ஒய்வு இருக்காது. என்றவன் அவளை அழைத்து சென்று படுக்கையில் விட்டவன், அவளை உறங்க சொன்னான். எது நடந்தாலும் பார்த்துக்கலாம் என்றவன் மற்றோரு பக்கம் வந்து படுத்துவிட, களைப்பில் எல்லோரும் உறங்கிவிட்டனர். அடுத்த நாள் விடியல் பரபரப்பாக இருந்தது, 4 மணிக்கே எழுந்து இருந்தாள் கதிரழகி, கோவிலில் பொங்கல் வைக்க தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்து சரிபார்த்துக்கொண்டு இருந்தனர்.
பாக்கியாவும், கதிரழகியும், ராகவன் காலையில் கோவிலுக்கு கிளம்பிவிட்டார் அங்கு எல்லாவற்றையும் பார்த்து வருவதாக கூறி, பரிதி மகளை எழுப்பி, குளிக்க வைத்து, அவளுக்கு சாப்பிட கொடுத்து அவளை கிளப்பிக்கொண்டு இருந்தான். நேற்று இரவு இவர்களுக்காக காத்து இருந்த ராகவனின் தங்கை எல்லாவற்றையும் எடுத்து வைச்சாச்சா என்ற கேள்வியுடன் நூழைந்தார், ம்மம்மம்மம்மம்ம எல்லாம் ரெடி மா நீ ஒருவாட்டி பார் எதாவது விட்டு போய் இருக்கானு என்று பாக்கியா கூற…. எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்தவர் எல்லாம் சரியா தான் இருக்கும். உங்க மருமகளுக்கு தான் இது எல்லாம் ஏற்கனவே அனுபவம் இருக்கும்மே எல்லாம சரியாதான் எடுத்து வைச்சி இருப்பா, என்று அவர் வார்த்தைகளை விட, அது சரியாக கதிரழகியை தாக்கி இருந்தது. பாக்கியா வாய் திறக்கும் முன் பரிதி வந்துவிட்டான் அறையில் இருந்து.
என்ன அத்தை என்று அவன் கேட்டதும் தூக்கி வாரி போட்டது அவருக்கு, இவன் உள்ள தான் இருக்கானா? என்ற மனம் தீக் என்று இருந்தது அவருக்கு, பின்னே அண்ணாவது அப்போதே நேரில் கேட்டு விடுவார், இவன் மௌன சாமியார் ஆயிற்றே நேரம் பார்த்து கழுத்தில் கத்தி வைப்பான், சிறு வயதில் தாத்தாவீட்டில் இருக்கும் போதே இவனிடம் அவர் எட்டி தான் நிற்பார்…………. அவனை இங்கு தங்கவைத்துவிட்டு கனவன்,மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் வேலை பார்ப்பது பற்றி அவர் ஒரு நாள் தன் அப்பாவிடம் பேசிவிட, அதை கேட்டவன், ஏன் நான் என் தாத்தாவீட்டில் இருக்க உங்களுக்கு என்ன கஷ்டம், என்று நேராகவே அவரை பார்த்து கேட்டுவிட்டான், அது அப்படி இல்லை பா, இந்த வயதில் அப்பா அம்மாவை விட்டு தனியா இருக்கியா அது தான் என்று அவர் கூறிவிட…………….. அப்போ அது தெரியாம நீங்க தான் பார்த்துக்கனும் என்று அவன் சொல்லிவிட, அதோடு விடாமல் அதன் பின் எல்லாவற்றுக்கும் அவரை தான் கேட்பான், இவன் பன்னியதில் அவர் தான் முழி பிதுங்கி போனார், அடுத்த வருடம் அவனை ஹாஸ்டலில் விட்டுவிட அப்போது தான் அவருக்கு மூச்சே வந்தது. அதனால் எப்போதும் அவன் வம்புக்கு போக மாட்டார். இப்போது கூட அவன் இருப்பது தெரியாமல் இப்போது வாய்யைவிட்டு இருந்தார்.
அது ஒன்னும் இல்லை பரிதி கதிரழகிக்கு எல்லாம் தெரியும் இந்த பக்கத்து புள்ளை தானே எல்லாத்தையும் ஒழுங்க எடுத்து வைத்து இருப்பாள் என்று சொன்னேன் என்றார். அப்படியா? என்ற அவன் பார்வை அவரை துளைக்க, மணி ஆச்சு கிளம்பலாம் என்று பாக்கியம் எல்லோரையும் கலைத்துவிட்டார். அப்பா என்ற ஆசுவாசத்துடன் கிளம்பினார் அவர்…………
எல்லோரும் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு அமர்ந்நு இருதனர். பாக்கியவும், கதிரழகியும் சிறு வாழையிலையில் பொங்கலை வைத்து வந்த எல்லோருக்கும் கொடுத்தனர். அதுவரை அமைதியாக இருந்த ரத்தினத்தின் தங்கை, தன் பேச்சை மீண்டும் ஆரம்பித்தார். எல்லோரும் இருப்பதால் என் செய்துவிட முடியும் என்ற எண்ணம் தான் அவருக்கு.
அப்புறம் அண்ணி வழக்கமா, கல்யாணம் முடிஞ்சு இங்க நம்ம குல தெய்வ கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டால், அடுத்த வருஷம் குலம் தழைக்க வாரிசு வந்துடும். ஆனா உங்களுக்கு அந்த கவலை இல்லை, என்று தன் பேச்சை ஆரம்பித்து இருந்தார், அவருக்கு தன் கணவன் வழியில் இருக்கும் பெண்ணை பரிதிக்கு மணம் முடிக்க ஆசை. தனக்கு ஒரு மகன் மட்டுமே இருக்க அவனும் வேலை என்று வெளி ஊரில் தங்கிவிட, தன் செல்வாக்கை தன் புகுந்த வீட்டில் காட்ட நினைத்து டாக்டராக இருக்கும் தன் அண்ணன் மகனை இங்கு சம்பந்தம் செய்தால் தன் மரியாதை புகுந்த வீட்டில் கூடும் என்று நினைத்து அவர் அதை செய்ய நினைத்து போன வருடம் கேட்டு இருந்தார். பரிதி முடியாது என்று மறுத்துவிட, தான் சொன்னால் அண்ணன் வீட்டில் மறு பேச்சு இல்லை, உன் பெண் தான் என் அண்ணன் வீட்டின் மருமகள் என்று இவர் பெண் வீட்டில் பேசி இருக்க, அதன் பின் இவர் சந்தித்த சங்கடங்கள் ஏராளம்.
அப்படி அந்த பெண்ணை நிகாரித்தவன், இப்படி ஒரு பெண்ணை திருமணம் முடித்து இருப்பது அவருக்கு பெறுக்கவில்லை. அந்த பெண்ணின் வீட்டாரும் வந்து இருக்க, தன் கெத்தை நிறுபிக்க ஆரம்பித்து விட்டார். பாக்கியாவிற்க்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை, அவர் பேச்சை ஆரம்பித்த உடன் கணவனும்,மகனும் எங்கே என்று தான் தேடினார்.
சற்று தூரத்தில் தன் நன்பன் ஒருவனிடத்தில் பேசிக்கொண்டு இருந்தவன், இங்க ஒரு பார்வையை வைத்துக்கொண்டு தான் இருந்தான், அம்மாவின் பார்வையை கவணித்தவன், உடனே அந்த இடம் வந்து இருந்தான். இத்தனை பேர் முன்னிலையில் அப்படி இவன் என்ன செய் முடியும் என்ற நினைப்பில் அவர் அப்படியே அமர்ந்து இருக்க, என்ன அம்மா என்றான், பாக்கிய வாய் திறக்கும் முன் அது ஒன்னும் இல்லை பரிதி, இங்க பொங்கல் வைத்தால் நம்ம குலம் தழைக்கும் சொல்லுவாங்க. ஆனா நமக்கு தான் அந்த கவலையே இல்லையே அதை பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன் என்றார் நக்கலாக.
அவன் உடனே கதிரழகியை தான் பார்த்தான், அவள் முகத்தில் ஒரு இறுக்கம், ஆனால் எதையும் காட்டாமல் நின்று இருந்தாள், அருகில் தான் கனேசனும்,ரத்தினமும் அமர்ந்து இருந்தனர், அவர்களால் அடுத்து என்ன சொல்லுவது என்று தெரியவில்லை, இன்னும் வாழ்நாள் முழுதும் இந்த பேச்சு மகளை தொடரும்மோ என்று கலக்கம் அவர்களிடம்………
என்ன தான் இருந்தலும் உங்களுக்கு இருக்க இந்த நல்ல மனசு இங்க யாருக்கும் இல்லை பாருங்க, மதியை என் மகளாகவே நினைக்கிறீங்க, ஆனா கவலை படாதீங்க, உங்க நல்ல மனசுக்கும் அடுத்த வருஷம் மதிக்கு தம்பியோ,தங்கையோ வந்துடுவாங்க…………….. இதே கோயிலில் உங்க முன்னிலையில் அவங்களுக்கு காது குத்து வைச்சிடுவோம் என்றான். அது எப்படி தம்பி என்று அந்த பெண்ணின் தந்தை பேசவர, அட வாங்க ஸார் நீங்க தானே கோபியோட மாமனார்…………………. அவன் என்னோட ஸ்கூல் மென்ட் தான் அவனும் உங்க பெண்ணும் சென்னையில் படிக்கும் போது காதலிச்சாங்க, உங்கள நினைச்சி தான் உங்க பெண்ணு ரொம்ப பயந்தா, ஆனா நீங்க அவங்களை புரிஞ்சுகிட்டு கல்யாணத்தை நடத்தி வைச்சிட்டிங்க என்றான்!!!!!!!!
அதில் அதிர்ந்து அவர் மட்டும் அல்ல, அவன் அத்தையும் தான் அவருக்கும் இது எல்லாமோ புதிய விஷயம், இவன் மறுத்தும் அவர் தன் மகளுக்கு வேறு வரன் பார்த்து அடுத்த மாதமே திருமணம் முடித்து இருந்தார். ஆனால் மகள் காதல் விவகாரம் தெரிந்து அவர் கண்டிக்க, மகள் சென்னையில் பதிவு திருமணம் முடித்துவிட, அதை அறிந்தவர், யாருக்கும் தெரியாமல் அதை நிச்சயத்த திருமணமாக மாற்றி இருந்தார். இன்று பரிதி அதை சபையில் சொல்லிவிட, மனிதருக்கு அடுத்த பேச முடியவில்லை, சிரித்து மழுப்பி இருந்தார். மேலும் ஏதும் பேசினால் அவன் முழுகதையும் சொல்லிவிட்டால் அடுத்து அவன் அத்தை பக்கம் திரும்ப, அவர் எங்க அங்கு நின்று இருந்தார். இப்படி அந்த நாள் கழிய மாலை எல்லோரும் கிளம்பினர். கனேசன் நடந்தவற்றை பார்த்து இருந்தவர், மகளை ஒரு சொல் சொல்ல விடாமல் பாக்கும் மருமகனை நினைத்து மகிழ்ந்து இருந்தார்.
கிளம்பும் போது பரிதியிடம் வந்தவர், மாப்பிள்ளை இன்னும் 2 நாளில் ஊருக்கு போறதா சொன்னிங்க, அப்படியே ஊருக்கும் வந்துட்டு போங்களேன் என்றார். பரிதி அம்மாவை பார்க்க, அவர் சொல்லுவதும் சரி தான் பரிதி, கல்யாணம் முடிஞ்சு நீ இன்னும் நீ அங்க போகல, இப்ப நீ போன அடுத்து எப்ப லீவுக்கு வருவியோ. இப்பவே போய்யிட்டு ஊருக்கு வந்துடு. நாங்க இப்படியே கிளம்புறோம் என்றார்.
அவன் கதிரழகியை பார்க்க, அவளோ ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். சரிமாமா என்றவன் தங்கள் அறைக்குள் சொன்றான், அவளும் பின்னாடியே போக, என்ன ஆச்சு அழகி என்றான், ஒன்னும் இல்லை என்றாள். அன்று ஊரைவிட்டு வந்தவள் தான் அதன் பின் ஊருக்கு போகவில்லை, இப்போது எப்படி அதனே? என்றான் அவள் அமைதியாக இருக்க……………. இங்க பார் எல்லாத்தையும் செய்துட்டு அவனே அந்த ஊருல இருக்கான், அதுவும் உன் வீட்டில்…………. நீ ஏன் இப்படி இருக்க……………. நாம போறோம் என்றான். அவளும் சரி என்று தலையாட்டி இருக்க.
தனியாக ஒரு காரில் அவர்கள் மூவரின் பயனம் கதிரழகியின் ஊரை நோக்கி இருந்தது.