அத்தியாயம் – 28

ஓரு பெரும் மழை அடித்து ஒய்ந்தது போல் இருந்தது அந்த வீடு, எல்லாவற்றையும் பேசியபின் தன் அறைக்கு சென்றுவிட்டாள் நந்தினி, அன்பழகன் இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்து இருந்தான். மனம் ஸ்தம்பித்த நிலை, அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியவில்லை. எல்லாம் என் கையில் என்று இருந்த நிலையில் இப்படி தன் மனைவி எல்லாவற்றையும் தட்டி கவிழ்ப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. 

அவன் அருகில் யாரே அமரும் அவரம் உணர்ந்து திரும்பினான், கனேசன் தான் அமர்ந்து இருந்தார். இப்போது இவர் என்ன சொல்லுவார் என்ற நினைப்பில் அவரை பார்த்து இருந்தான். அவரே அவனை பார்க்காமல் எதிரில் வெறித்தபடி பேச ஆரம்பித்தார். நீ என்ன பத்தி இதுவரை என்ன நினைச்சி இருந்தியோ தெரியாது. ஆனா நான் உன்னை இந்த வீட்டில் ஒருத்தனா தான் பார்த்தேன். 

உன் அக்காவை என்ன கல்யாணம் கட்டி வைக்க, எங்க அம்மா சாவு வரை போய் என்னைய பயமுறுத்தினாங்க. அப்பவும் எனக்கு முழு மனசா அந்த கல்யாணத்தை பன்ன விருப்பம் இல்லை. சரி சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன்  காலில் விழலாம்னு தான், உன் அம்மாவை பார்த்து இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.

எனக்கு இதில் விருப்பம் இல்லை. என்னைய கட்டி உங்க மக சந்தோசமா வாழமுடியாது அப்படினு என் மனசில் இருந்த எல்லாத்தையும் சொன்னேன். அதுக்கு உங்க அம்மா, என் மக உன்னைய கட்டலனா……….. வேற யாரையும் கட்ட மாட்டா……………… சின்ன வயசில் இருந்தே அவளுக்கு உன் மேல் பிரியம் அதை சொல்ல கூட முடியாம, இத்தனை நாள் இருந்து இருக்கா……….. இது அவ தம்பிக்கு மட்டும் தெரியும் போல……………… இது நாள் வரைக்கும் எத்தனையோ வழியில் அவளுக்கு கல்யாணம் பன்னி பாக்க முயற்சி பன்னிட்டேன் முடியில. அந்த நேரத்தில் தான் உன் அம்மா வந்து கேட்டுச்சு, இவளும் ஒத்துகிட்டா………………. தந்தை

யில்லாமல் வளர்ந்த புள்ளைங்க, என்னால முடிஞ்சத இதுவரைக்கும் அதுங்களுக்கு செய்து இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் நான் இருப்பேன். இவ இப்படியே இருந்தா………….. நாளைக்கு நானும் இல்லாம போய்யிடா…………………. இவ நிலைமை அதை நினைச்சே எனக்கு தூக்கம் இல்லை……….

அவனும் சின்ன புள்ளை, அவனை பார்க்கவே ஒருத்தர் வேனும், இதுல இவள அவன் என்னனு பார்ப்பான். அவளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை இருந்த போதும், நீங்க வாழுறதும், மேல நடக்கறதும் கடவுள் விட்ட வழி, என் புள்ளைங்க இரண்டையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் விட்டு போற நிம்மதிய எனக்கு கடைசி காலத்தில் கொடுப்பா…………………. 

என்ன நடந்தாலும் என் புள்ளைக்கள விட்டுடதே என்று கைகூப்பியவரை என்ன சொல்லுவது என்று தெரியமல் பார்த்து இருந்தான் கனேசன். அதன் பிறகு தான் தாயின் எந்த செயலுக்கும் தடை சொல்லாமல், திருமணம் செய்துக்கொண்டது. இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாது, கால போக்கில் ரத்தினம் தன் மகளிடம் நடந்துக்கொண்ட முறையில், தன் நலத்துக்காக ஒரு பெண்ணின் வாழ்வை இப்படி செய்துவிட்டோம்மோ? என்று அவருக்கு குற்ற உணர்வாகி போனது. ஒருவேளை அன்று ரத்தினத்திடமே பேசி அவளுக்கு வேறு ஒரு திருமணம் முடித்து இருந்தால், அவளும் இன்று குடும்பமாக வாழ்ந்து இருப்பாள் அல்வா என்று கனேசனுக்கு தோன்ற, அதுவே ரத்தினத்தின் மேல் அவன் பார்வை பதிய காரணம் ஆனாது.

ஒரு கட்டத்தில் இந்த உலகில் இல்லாத தன் மனைவிக்காக, இவனின் வாழ்வையும் சேர்த்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்க ஆரம்பித்தான். என்றும் என் மனைவிக்கான இடம் என் மனதில் அப்படியே தான் இருக்கிறது அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை விரும்பியதை தவிர இவள் என்ன செய்துவிட்டாள், அவளும் என்னை போல் தானே என்ற எண்ணம் அவர்களை வாழ்க்கை ஒட்டதில் இனைத்தது. ஆனால் அவரால் முடியாத ஒரு விஷயம் அன்புவிடம் நெருங்க முடியாது தான். என்ன செய்தும் தன்னைவிட்டு தள்ளி இருக்கும் அவனை நெருங்கும் மார்கம் அவருக்கு தெரியவில்லை. தள்ளி இருந்தே அவனுக்கு வேண்டியதை செய்தார். அவனையும் அவர் கதிர் போல் தான் நினைத்தார். ஆனால் அதை உணரும் நிலையில் தான் அன்பு இல்லை. 

அதனால் தான் ரத்தினம் அன்புக்கு, கதிரழகியை மனமுடிக்க கேட்ட போது அதை ஒப்புக்கொண்டார், அப்படியாவது அவன் தன்னுடன் இனக்கமாக இருப்பான் என்று நினைத்தார். ஆனால் இதை எல்லாம் கதிர் புரிந்து கொள்ளாது சண்டையிடவும், அவனை பற்றி நன்கு அறிந்தவர் தன் தேவைகளை எப்படியும் நினைவேற தெரிந்தவன், அதனால் தான்  என்ன செய்வது என்று தெரியாமல் அவனை தன் காவலில் வைத்து இருந்தார்.

மகள் அவ்வளவு பிரச்சனை செய்த போதும், அவர் அன்புவுக்கு ஆதரவாக இருக்க இதுவும் ஒரு காரணம், தான் இந்த திருணத்தை செய்துவைத்து, அவன் வாழ்வு பாழாகிவிட்டதாக நினைத்தார். அதனால் தான் அவன் நந்தினியை மனந்த போது கூட அவன் இனிமேல் சந்தோசமாக வாழட்டும் என்று நினைத்து தன் அருகில் வைத்துக்கொண்டார். ஆனால் இன்று நந்தினி பேசி பின் தான் எவ்வளவு முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்று  உணர்ந்தவர். எல்லாவற்றையும், அவனுக்கு கூறிக்கொண்டு இருந்தார்.

இதை எல்லாம் கேட்ட ரத்தினத்துக்கும் இது அதிர்ச்சி தான், இவ்வளவு நடந்தும் நான் உன்னைவிடாமல் இருக்க உன் அம்மா தான் காரணம்.என்றவர் அங்கு இருந்து எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டு இருந்தார்.

நந்தினி கூறியவை ஒருவகை அதிர்வு என்றால், இப்போது கனேசன் சொல்லி சென்றவற்றை கேட்டவன் ஏதும் தோனாமல் அப்படியே அம்ந்துவிட்டான். நடந்தவற்றை எல்லாம் முதலில் இருந்து மனதில் ஒட்டி பார்க்க, எல்லாவற்றையும் தான் சிக்கல் ஆக்கிவைத்து இருப்பது புரிந்தது. இனி என்ன செய்ய முடியும், யாருக்கும் சொல்லாமல் அவன் கதிரழகியிடம் கொண்ட ஈர்ப்பு இப்போதும் மனதில் ஒரத்தில் இருக்க தான் செய்தது. ஆனால் யதார்த்தம் வேறு. எல்லாம் என் கையில் இருந்த போது அதன் அருமை தெரியாமல் வீசிவிட்டு, இப்போது அதை நினைத்து வருந்தி என்ன செய்வது. தான் அடுத்தவருக்கு செய்யும் போது தெரியாத விஷயம், ந்ந்தினி தனக்கு செய்யும் போது அதன் வலியும், ஏமாற்றமும் அவனால் தாங்க முடியவில்லை, ஆனால் இனி இது தான் தன் வாழ்வு. என்ற யதார்த்தம் முகத்தில் அறைந்தது.

………………..

அமைதியாக அமரந்து இருந்தான், அன்று நீதிமன்றத்தில் அமர்ந்து இருந்தான், அன்று வீட்டில் நடந்த பிரச்சனைகளுக்கு பின் அவன் அமைதியாகி போய் இருந்தான். அவன் மட்டுமே அப்படி, அந்த வீட்டில் இருந்த எல்லோரும் தன் வழக்க படி தான் இருந்தனர், கனேசன், ரத்தினம் நந்தினி, பிள்ளைகள் உட்பட, இப்போது தான் அவன் தன்னை சுற்றி நடப்பவற்றை பார்க்க ஆரம்பித்து இருந்தான். இது நாள் வரை தன்னை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டவன், தான், தன் நலம் என்று மட்டுமே வாழ்ந்தவன், தன் சுற்றத்தை கவணிக்க தவறி இருந்தான். இன்று கவணித்த தன் சொந்தங்களை இதற்க்கு முன் கவணித்து இருந்தால்……………………. எப்படி பட்ட ஒரு மகிழ்ச்சியான நாட்களை எல்லாம் தவறவிட்டு இருக்கிறேன் என்ற எண்ணமே அவனை குற்ற உணர்வில் தள்ளி இருந்தது. 

நல்லதம்பி அதன் பின் வழக்கு பற்றி அவனிடம் கேட்ட போது கூட ஏதும் சொல்லவில்லை அவன். போதும் ஸார் எல்லாத்தையும் முடித்து கொள்ளாலம் என்ற சொல்லோடு நிறுத்தி இருந்தான். அவருக்கு தான் அதில் ஏக கடுப்பு, அதே கடுப்பில் தான் அவரும் இன்று நீதிமன்றம் வந்து இருந்தார். தங்கள் தரப்பில் ஆதாரம் ஏதும் இல்லை என்றும், தாங்கள் வழக்கை வாப்பஸ் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லிவிட்டார். அவருக்கு இது பெரிய தலையிறக்கம். ஆனாலும் ஒன்றும் செய் முடியாத நிலை.

எதிர் தரப்பில் வழக்கு வாப்பஸ் வாங்கபட்டு விட, மற்ற நடைமுறைகள் முடிக்கபட்டு, வழக்கு முடித்துவைக்க பட்டது. அதோடு நல்லதம்பிக்கும், அன்பழகனுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கவும் மறக்கவில்லை. .

எல்லாம் முடிந்து. நிம்மதியாக உணர்ந்தாள் கதிரழகி, அவள் அருகில் வந்த அன்பழகன் என்னைய முடிஞ்சா மண்ணிச்சிடு என்றவன். குழந்தையை ஏக்கமாக பார்த்து சென்றான். கைவிட்டு சென்ற சொர்கம் இனி எப்போதும் தன் கை திரும்பாது என்று அறிந்துக்கொண்டவன், இனி அதை நினைத்து வருந்த மட்டுமே முடிந்தது.

…………………..

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர மாலை ஆகி இருந்து. அப்போதில் இருந்து, பரிதி்க்கு முயன்றுக்கொண்டு இருக்கிறாள், லைன் கிடைக்கவில்லை. மகள் மணிமேகையிடம் தூங்க சென்றுவிட, மொட்டைமாடியின் இருளில் தனிமையில் அமர்ந்து அவனுக்கு முயன்றுக்கொண்டு இருந்தாள் கதிரழகி. என்ன தான் அப்படி வேளையோ என்று தனக்குள் தீட்டிக்கொண்டு இருந்தவள், அருகில் அமர்ந்து இருந்தான் பரிதி, யாரே அமரும் அரவம் உணர்ந்து திரும்பியவள். என்னையா திட்ற என்ற அவன் கேள்வியில்……….. அதிர்ந்து அவனை பார்த்து இருந்தாள். எப்படி வந்திங்க, எப்போ………… என்றாள்.

ஏன் வந்தனு கேட்கறயா என்றான் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து, அதில் முறைத்தவள், என்ன நக்கலா? ஒரு வார்த்தை வரதா சொல்லி இருக்கலாம் இல்ல………………. என்றாள் முகத்தை தூக்கி வைத்தபடி……………

இன்னிக்கு கோட்டுக்கே வரனும் நினைச்சேன், ம்மம்மம்மம்மம்ம பிளைட் லேட் லேட் செதப்பிடுச்சு, இப்பதான் 2 மணி நேரத்துக்கு முன்ன ஏர்போட் வந்தேன், கதிர் தான் வண்டியில் கூட்டி வந்துவிட்டு போறான். இன்னும் வீட்டுக்கு கூட போல மேல தான் வரேன், என்றான் அவள் தோளில் கை போட்ட படி, முதல் நெருக்கம் இருவருக்கும். இதற்கு முன் அவன் தோளில் நெஞ்சில் சாய்ந்து இருக்கிறாள். ஆனால் இப்போது போல் மனம் அப்போது நிர்மாலமாக இருந்தது இல்லை. இந்த நொடியை ஆழ்ந்து அனுபவித்தனர் இருவரும். பேச்சுக்கள் அற்ற மௌனம் இருவர் இடத்திலும். ஆனாலும் மனதின் எண்ணங்கள் பரிமாறபட்டு இருந்தது. சிறிது நேரம் இருந்தவன். அவள் கையில் ஒரு பையை கொடுத்தான். காலையில் நமக்கு கல்யாணம், இதுல எல்லாம் இருக்கு, காலையில் சீக்கரம் போகனும், போய் தூங்கு…………… அப்ப தான் காலையில் எழுந்து தயாராக முடியும் என்றான். 

அதில் அதிர்ந்தவள்……………… என்ன என்றாள். என்ன நினைச்சி இருக்கீங்க………… இப்போ வந்து காலையில் கல்யாணம் சொன்ன என்ன அர்த்தம் என்று அதுவை அவன் போன் எடுக்காமல் இருந்த கடுப்பு எல்லாம் அவன் மேல் பாய………………….. 

எனக்கு நேரம் இல்லை. 2 நாள் லீவ் தான் கிடைச்சது. மறுபடியும் எப்போ லீவ் கிடைக்குமோ……………… என்னால இனிமே உன்னையும், மதிகுட்டியும் விட்டு இருக்க முடியாது. என்றவன். போய் தூங்கு என்று கிளம்பிவிட்டான்.

இதுவரை இல்லாத கலக்கம் இப்போது அவள் மனதில். இப்படி தீடீர் என்று கல்யாணம் என்று வந்து நிற்பான் என்று கனவா கண்டாள். இது சரியா………………. மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள்……………….. என்ற எண்ணம் மனதில் சுழன்றது…………..

ஆனால் அது எல்லாம் காலையில் அவன் பக்கத்தில் திருமண கோலத்தில் நிற்கும் வரை தான். அவன் அனிவித்த மாங்கள்யம் அவள் கழுத்தில் ஏறிய நொடி மனம் பூரித்து தான் போனால், திருமணம் முடிந்த கையோடு,பதிவும் செய்தவர்கள். வெளியில் விருந்து உண்டு முடித்து வீடு திரும்பி இருந்தனர்.

உடனே பரிதி ஊருக்கு செல்ல வேண்டு என்று கூற, அடுத்த நாளே தங்கள் குல தெய்வகோயிலுக்கு போக முடிவு எடுத்தார் பாக்கியா. திருமணத்துக்கு யாருக்கும் அழைக்கவில்லை. நெருங்கி சொந்தங்களுக்கு மட்டும் போனில் அழைத்து சொல்லி இருந்தனர். அதனால் அங்கு ஊரிலேயே விருந்துக்கும் ஏற்பாடு செய்பட்டு இருந்தது. கதிரழகி பற்றி யாருக்கும் ஏதும் சொல்ல படவில்லை. இப்போதே அதை சொல்லி அதை பேசு பொருள் ஆக்க விரும்பவில்லை அவர்கள். ஆனால் நாளை நிச்சயம் இது பற்றி பேசுவார்கள். எல்லாவற்றையும் நல்ல படியாக முடித்துக்கொண்டு கடவுளே என்று வேண்டிக்கொண்டார் பாக்கியா.. ஆனால் அவர் நினைத்து போல் தான் நடந்தது. மகிழ்ச்சியாக தொடங்கிய பயனம், அதே போல் முடியுமா? 

  

அவர்களுக்கு அங்கு காத்து இருப்பது என்னவோ……………………..

தொடரும்…………….