அத்தியாயம் – 27

உணவு இடைவேளையின் போது, எல்லோரும் அமர்ந்து இருந்தாலும், எல்லோர் மனநிலையும் காலையில் இருந்தற்க்கு இப்போது முற்றிலும் மாறி இருந்து. அதிலும் நல்லதம்பி, அன்பழகன் முள்ளின் மேல் அமர்ந்து இருப்பது போல் இருந்தது அவர்களின் நிலை, நல்லதம்பிக்கோ முற்றிலும் அவனிடம் தோற்ற உணர்வு, நான் அப்போதே சந்தேகபட்டேன், இவன் இப்படி அமைதியாக இருக்க ஆள் இல்லையேனு, நான் இன்னும் கொஞ்ஞம் இவனை கவணித்து இருக்கனும், இந்த அன்பு பார்த்துபான் நினைத்தேன் பார் அது தான் நான் பன்ன தப்பு, இப்படி எல்லாம் தலைகீழா மாறும் நினைக்கலையே என்று மனதில் பெறுமிக்கொண்டு இருந்தார்.

அவரால் இப்போது அதை மட்டுமே செய் முடியும். அன்புவோ நந்தினியின் மேல் கொலை வெறியில் இருந்தான். என்ன கொழுப்பு இருந்தா இப்படி பன்னி இருப்பா கழுதை, அவன் கூட சேர்ந்து ஆட்டமா காட்டற. வீட்டுக்கு வா? இந்த அன்பு யாருனு காட்றேன் என்று அவளை முறைத்த படி இருந்தாள். இரத்தினம் மற்றும் கனேசனுக்கு இப்போது தான் ஆசுவாசமாக இருந்தது. அதே நேரம் நந்தினியிடம் சென்று பேசுவதற்க்கும் தயக்கமாக இருந்தது. இத்தனை நாள் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும், அவளிடம் நெருக்கம் காட்டியது இல்லை. இப்போது என்ன பேசுவது, என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார். ரத்தினத்துக்கு மனதில் ஒரு நிம்மதி இருந்தாலும், நந்தினி சொன்னது எல்லாம் உன்மையாக இருக்குமோ? அப்படி இருந்தால் அன்புவின் எதிர்காலம் என்று மனதில் கலக்கம் எழாமல் இல்லை. 

கனேசனுக்கோ மகள் எப்படியாவது இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு தனக்கு என ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் சரி என்று நினைத்து இருந்தார். இங்கு கதிர்வேலனோ மணிமேகலையிடம் கேட்டுக்கொண்டு இருந்தான் இது எல்லாம் எப்படி, எப்போ நடந்தது. நந்தினியை எப்படி இது ஒத்துக்க வைச்சிங்க என்று, மணிமகலையோ இங்கேயே எல்லாத்தையும் சொல்லனுமா? எல்லாத்தையும் எவனாவது ரொக்காட் பன்னி அதை ஆதாரம்மா காட்டவா……………… கொஞ்ச நேரம் உன் திருவாய்யை முடிகிட்டு இரு வீட்டுக்கு போய் எல்லாத்தையு்ம் பேசிக்கலாம் என்றாள் அவனை முறைத்தவாரே…………… 

கண்ணன் எல்லாவற்றையும் பரிதிக்கு தெரியபடுத்திக்கொண்டு இருந்தான். வழக்கு ஆரம்பித்து இத்தனை நாட்களில் இன்று தான் சற்று அமைதியாக உணர்ந்தாள் கதிரழகி, மகளை மடியில் அமர்த்தியவாரு அவளுக்கு உணவு ஊட்டிக்கொண்டு இருந்தாள்.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் விசாரனை தெடங்க………….. நீதிபதி நல்ல தம்பியிடம் உங்கள் தரப்பில் இதற்கு என்ன கூறுகிறிர்கள் என்று கேட்க, இது தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்,  நீதிபதி 3 நாட்கள் மட்டுமே தர முடியும், அதற்குள் உங்கள் தரப்பிதில் ஆதாரங்கள் கொடுக்க பட வேண்டும் இல்லை என்றால், அதற்கு சரியான காரணம் சொல்லபட வேண்டும் இதை செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த அமர்வில் தீர்ப்பு வழங்கபடும். என்று கூறினார். அத்துடன் அன்றைய நாள் முடிந்நு இருந்தது. 

வீட்டுக்கு வந்த கதிரழகி  ஏதும் பேசவில்லை, அவள்மனம் எப்படி உணர்கிறது என்றே அவளுக்கு தெரியவில்லை. ஏதோ விடுதலை உணர்வு, இத்தனைன நாட்கள் மனதை அழுத்திக்கொண்டு இருந்த எல்லாம் வெளியேறிவிட்ட உணர்வு, ஒரு ஆசுவாச பெருமூச்சு அவளிடம், அவளின் இந்த நிலை யாருக்கு புரிந்ததோ இல்லயோ, மணிமேகலைக்கு நன்றாக புரிந்து இருந்து, கோர்ட்டில் இருந்து வந்த உடன் குழந்தையை நான் கூட்டிச்செல்கிறேன் என்று கதிரழகியிடம் கூறியவள் மதிகுட்டியை தன் வீட்டுக்கு கூட்டிவந்து விட்டாள்.

இது அவளுக்கான ஆசுவாசம், இத்தனை நாள் என்ன தான் பக்கத்தில் ஆட்கள் இருந்தாலும், அவர்கள் துனை இருந்தாலும், அவர்களிடம் கூட பகிரமுடியாத மனதின் பாரங்கள் எல்லாம் இறங்கி விட்ட உணர்வு, இந்த விடுதலை உணர்வை நன்றாக ஆழ்ந்து அனுபவிக்க அவளுக்கு தனிமை தேவைபட்டது, இத்தனை வருட ஒட்டம், வேலை, படிப்பு, குழந்தை என்று தன்னை திசை மாற்றிக்கொண்டாலும். உள்ளுக்குள் சில நமநமப்புகள் இருக்க தான் செய்தது, இன்று ஏதும் இல்லா நிம்மதி உணர்வு, சொல்ல போனால், திருமணத்திற்க்கு முன்பு, கவலைகள் ஏதும் இல்லாமல் சுற்றி திரிந்த அந்த பட்டாம்பூச்சியின் நிலையில் இருந்தாள் கதிரழகி. அதை இரட்டிப்பு ஆக்கவென அந்த நேரம் அழைத்து இருந்தான் பரிதி…………….. மகிழ்ச்சி மத்தாப்புகள் மனதில் பூக்க, அந்த அழைப்பை ஏற்று இருந்தாள்…………………..

………………….

இங்கு கதிர் அழைத்துவிட்டன் மணிமேகலைக்கு, எங்க இருக்க என்று, இவர்களுக்குள் அதே குடுமிபிடி சண்டை இன்னும் இருந்தாலும், அவனுக்கு இன்று நந்தினி ஏன் அப்படி நடந்து க்கொண்டாள் என்று தெரியவேண்டி இருந்தது. அவனும் என்ன தான் செய்வான் காலையில் இருந்து, அவளிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறான், அவள் கழுவும் மீணாய் நழுவிக்கொள்கிறாள். இப்போ நீ சொல்ல நான் உன் வீட்டுக்கு வருவேன் என்று இருந்தான். 

அதை கேட்டவள் இவன் வந்தாலும் வந்து நிற்பான் என்று உணர்ந்தவள், ஏய் உணக்கு அறிவு இருக்கா வீட்டுக்கு வரேன் சொல்லுற………… என்று இவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மதியின் சத்தம் கேட்க, ஏய் அழகி கூடயா இருக்க? என்று கேட்க.. இல்ல மதியை என் வீட்டுக்கு துக்கிட்டு வந்து இருக்கேன். என்றவள் சொல்லிக்கொண்டு இருக்க, அடுத்த அவர்கள் பேசும் முன் இவர்கள் உரையாட்களை கேட்ட குழந்தை பீச்சுக்கு போலாம் கதிப்பா, கதிப்பா, கதிப்பா……………. இங்கு இருந்து கத்த, சரி குழந்தைய துக்கிட்டு ரோட்டுக்கு வா………. என்று வைத்துவிட்டான். நீ சொன்ன நான் வரனுமா? என்று முறைத்தவள். குழந்தையை துக்கிக்கொண்டு கிளம்பி இருந்தாள். இருவரும் குழந்தையை பீச்சு அழைத்து சொன்றவர்கள் வழக்கமான இடத்தில் அவளை விளையாடவிட்டு, இவர்கள் இருவரும் அமர்ந்துக்கொள்ள. இப்ப சொல்லு என்ன நடந்தது என்று அவள் முகம் பார்த்தான் கதை கேட்கும் ஆவளில்………………………………

…………………..

நிதிமன்றத்தில் வழக்கு விசாரனை முடிந்து கனேசன்,ரத்தினம், நந்தினி வீடு திரும்பி இருக்க, அன்பழகன் இன்னும் வந்து இருக்கவில்லை. ரத்தினத்திற்க்கு அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும், என்ன பேச, இத்தனை வருடங்கள் தள்ளி இருந்துவிட்டு இப்போது, எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவள் அறையை பார்த்த படி அமர்ந்து இருந்தார்.

கனேசனுக்கும் தான் மனதில் அந்த எண்ணம் ஒடிக்கொண்டு இருந்தது, எப்படி நந்தினி தீடீர் என்று அப்படி சொன்னாள்……………………….. இவர்களுக்குள் எண்ண நடந்து இருக்கும், அவள் சொல்வது உண்மையா? என்ற எண்ண ஒட்டத்தில் இருந்தார்.

நல்ல தம்பியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்து இருந்தான் அன்பழகன்………. அவன் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்து இருக்க, எல்லாம் தன் கை சேரும் நேரம், இப்படு மொத்தமாக கொட்டி கவிழ்ப்பாள் மனைவி என்று எதிர்பார்க்கவில்லை அவன். அதில் நல்லதம்பியும் அதிகம் பேசிவிட, இனி வழக்கு கண்டிப்பாக அவன் எதிர்பார்த்து போல் இருக்காது என்று தெரிந்தது. மொத்த கோவமும் நந்தினி மேல் தான் திரும்பி இருந்தது. இன்னிக்கு இருக்கு அவளுக்கு, எல்லோருக்கும் நான் ஆட்டம் காட்டினா……………… இவ எனக்கே ஆட்டம் காட்டுறா………. இருக்கட்டும் இன்னிக்கு மொத்தமா எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்……………….. என்று மனதில் கருவியபடி தான் வீட்டுக்கு வந்து இருந்தான்.

ரத்தினமும், கனேசனும் வரவேற்பறையில் உட்காட்ந்து இருக்க, நந்தினி அறையில், கூடத்தில் இருந்து, கத்தி இருந்தான், ஏய் ந்ந்தினி, நந்தினி வெளிய வாடி, கத்தி இருந்தான்…….. ஆனால் அவனின் இந்த கத்தலுக்கு தான் அவளிடம் பிரதிபலிப்பு இல்லை, நிதானமாகவே வெளியில் வந்தவள் என்ன என்பது போல் பார்த்து நின்றாள்………

ஏய் என்ன கொழுப்பா………. எவ்வளவு தைரியம் இருந்தா கோட்டில் அப்படி சொல்லுவ……………….. நான் ஆம்பளை இல்லையா?……………..   என்ன எல்லார் முன்னாலையும் என்னை அசிக்கபடுத்துறியா?……………. நானா பார்த்து தான் குப்பையில் இருந்த உன்னை இந்த இடத்தில் இருக்க வைச்சி இருக்கேன். எப்போ எனக்கே எதிரா நின்னியோ இனி உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை, போடி வெளியே…………. என்று அவன் கோவமாக கத்திக்கொண்டு இருக்க…………. எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் வந்து அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள் நந்தினி, அவள் திருமணம் நடந்த இந்த வீட்டுக்கு வந்த இந்த 4 வருடங்களில் அவள் இப்படி இருந்து யாரும் பார்த்து இல்லை. அவளின் இந்த பரிமாணம் பார்த்து இருந்தனர் ரத்தினமும், கனேசனும்.

தன்னை,தன் பேச்சை சற்றும் சட்டை செய்தா மனைவியை கோவம் கொண்டு அடிக்க போனவன், அவள் பேசி பேச்சில் அப்படியே நின்றுவிட்டான்.  

என்ன இப்படி எல்லாம் கத்திட்டா நான் பயந்துடுவேன்னா? இல்லை இந்த வீட்டை விட்டு போய்டுவேன்னா……………. நான் ஒன்னும் கதிரழகி இல்ல, நீ ஒரு சொல் சொன்னா வீட்டைவிட்டு போக………………. போகவா இத்தனையும் செய்தேன்…………………….. நான் இருக்கனும்………………… நான் மட்டும் தான் இந்த வீட்டிலும், உன் வாழ்கயிலும் கடைசி வரைக்கும் இருக்கனும்…………… அதுக்கு தான் எல்லாத்தையும் செய்தேன்.

இன்னிக்கு நேத்து இல்ல…… நாளு வருஷத்துக்கு முன்னலயே!! என்றவள் பேச்சில் அதிர்ந்து தான் பார்த்தார்கள் மூவரும்……………….. என்ன புரியலையா………………… அன்னிக்கு நீயும் கதிரழகியும் வண்டியில் போகும் போது என்ன நடந்தது பார்த்த ஒரே சாட்சி நான் தான். என்றவள் பேச்சில் அன்பழகன் விக்கித்து நின்றான் என்றால். கனேசனும் ரத்தினம் இது என்ன என்பது போல் அதிர்ந்து நின்று இருந்தனர்.

என்ன பார்க்கற, அன்னிக்கு, கதிர் ஒன்னும் உன்னைய தள்ளிவிட்டு, அடித்து போடல, நீயா தான் வண்டியை கொண்டு போய் மோதின, அதில் அதிர்ச்சியில் மயங்கி போன கதிரழகிய தான் அவங்க ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போனாங்க, அப்போ அவன் பிரண்டும் கூட தான் இருந்தான், அதுக்கு அப்புறம் நீ மயங்கிட்ட, அங்க பக்கத்தில் கழனியில் வேலை பார்த்துகிட்டு இருந்த ஆட்களை நான் தான் கூப்பிட்டேன், அவங்க வந்து உன்னைய பார்த்து வீட்டுக்கு தகவல் சொன்னாங்க………….. ஆனா அதுக்கு அப்புறம் நீ சொன்னிய ஒரு கதை, அதில் தான் நான் அசந்து போயிட்டேன். அதுக்கு அப்புறம் கதிரழகி இருந்த ஆஸ்பத்திரி பத்தி தெரிந்தும், அங்க, அவங்க இரண்டு பேரும் தனியா இல்லைற வரைக்கும் எனக்கு தெரியும், எல்லாம் தெரிஞ்சு ஏன் அமைதியா இருந்தேன் தெரியுமா?

ஒரு வேள உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ கட்டாயத்தில் தான் பன்னியோ நினைச்சேன், இதையே காரணமா வைச்சு கதிரழகியை ஒதுக்கபாக்கிறியோனு நினைச்சேன், அந்த நேரத்தில் தான் நீ என்கிட்ட நெருங்கி பழகின, உனக்கு என் மேல் இருக்கும் காதல் தான் நீ இப்படி எல்லாம் நடந்துகிற அப்படினு நினைச்சேன். அதனால் நானும் ஏதும் பேசலை. எனக்கு உன்கூட சேர இதை ஒரு வாய்ப்பா நினைச்சேன். அதுக்கு ஏத்த மாதிரி தான் எல்லாம் நடந்தது. நானும் கல்யாணம் முடிஞ்சு ஆகா………………….. என் புருஷன் போல் உண்டா அப்படினு தான் நினைச்சேன்…………………….. ஆனா பாரு போக போக உன் சாயம் வெளுத்து போச்சி, உனக்கு நான் முக்கியம் இல்லை…………………… என் காதலும் முக்கியம் இல்லை. 

முதலில் நீ குழந்தைய ஏக்கமா பார்க்கும் போது, நாம்மளும் சீக்கரம் குழந்தை பெத்துக்கனும் தோனும். ஆனா உனக்கு தேவை குழந்தை இல்லை. இந்த சொத்து, இந்த அந்தஸ்த்து, அதுக்காக நீ என்ன வேனா பன்னுவே…………………….

என்ன தான் நான் இருந்தாலும், உனக்கு அவளும் வேணும் இல்ல!!!!!!!!!!!!!!!!! அவ மேலையும் உனக்கு ஒரு கண்ணு……………. எப்போ குழந்தைய சாக்க வைச்சு நீ கேஸ் போட்டியோ அப்பவே எனக்கு சந்தோகம் தான். இருந்தாலும் உன்கிட்ட கேட்டுகிட்டே இருப்பேன்.  இவங்க எல்லாம் நினைக்க மாதிரி உன்னோட குறி இந்த சொத்து இல்ல, அவ தான். உன்னைய மீறி அவ போனத உன்னால ஏத்துக்க முடியல………….. இந்த கொஞ்ச நாளா நீ சரியே இல்லை……………. உனக்கு அவள எப்படியாவது இங்க வர வைக்கனும் அதுக்கு என்ன எல்லாம் வேலைபார்த்த.   எனக்கு ஏதும் தெரியாது நினைச்சயா? எதுவரைக்கும் போறனு தான் பார்த்துகிட்டு இருந்தேன். எப்போ அவள இந்த வீட்டுக்கு திரும்ப கூட்டி வரனும் முடிவு பன்னியோ அப்பவோ நான் முடிவு எடுத்துட்டேன். 

என்னைய என்ன கருவேப்பிலை மாதிரி துக்கிபோட நினைச்சயா? இல்லை ஊருகாய் மாதிரி தொட்டுகடலாம் நினைச்சியா? எனக்கு ஒரு விஷயம் இல்லைனா…………. அது யாருக்கும் இல்லை………………. உனக்கு வாழ்க்கை என் கூட தான்,அதை தான்டி போகனும் நினைச்ச………………….. உன்னை தக்க வைக்க நான் எந்த எல்லைக்கும் போவேன். அதுக்கு சம்பிள் தான் இன்னிக்கு நடந்தது.

இது நேத்து முடிவு பன்னி இன்னிக்கு நான் சொன்னது இல்லை. எப்போ இந்த கேஸ் கோட்டுக்கு போச்சோ அப்பவே, அந்த பக்கம் இருந்து என்கிட்ட வந்து பேசினாங்க……………….. உன் எண்ணம் இது தான், சொன்னாங்க, அவங்களுக்கு உதவ சொன்னாங்க. 

என்னடா நாம தான் அந்த கதிரை பின்னாடி ஆள்விட்டு பார்த்துகிட்டு இருந்தோம்மே அப்புறம் யாருனு யோசிக்கிறியா? அது வேற யாரும் இல்லை, அந்த டீச்சரோட பையனும், அந்த பெண்ணு மணிமேகலையும் தான். உன்னோட எண்ண ஒட்டம் இது தான் என்கிட்ட சொன்னாங்க, நானும் உன்னை பார்த்துக்கிட்டு தானே இருக்கேன். எப்போ நீ என்னைய தூக்கி போட நினைச்சியோ அப்பவே முடிவு பன்னிட்டேன். நீ எனக்கு இல்லைனா, யாருக்கும் இல்லை……………. 

உனக்கு இன்னோரு விஷயம் சொல்லவா? நீ நினைக்கிற மாதிரி அவ கதிரை கல்யாணம் பன்ன போறது இல்லை. அந்த டீச்சர் பையனத்தான் பன்னி போற, அதுவும் காதல் கல்யாணம். எப்படி இந்த டீவிஸ்ட நீ எதிர்பார்க்கல இல்ல……………… இங்க பார் அடுத்த வாட்டி கோர்ட்டுக்கு போனமா வந்ததோமா இருக்கனும். என்னோட தான் உன் காலம் இதை மாத்த நினைச்சு, ஏதும் கோக்கு மாக்கு பன்ன,  இந்த ஊரில் நீ தலை நிமிர்த்தி நடக்க முடியாது. நீ பன்ன எல்லாத்தையும் வெட்ட வெளிச்சம் மாக்கிடுவேன் என்றவள். 

முன் கனேசனும், ரத்தினமும் ஏதோ பேச வர நான் இன்னிக்கு கதிரழகிக்கு ஆதரவா சாட்சி சொல்ல, இது எல்லாம் எனக்காக என் வாழ்க்கை நல்ல இருக்க பன்னது. இதுல என் நலம் தான் எனக்கு முக்கியம் என்று பேசி முடிக்கையில் அங்க அதிகம் அதிர்வில் இருந்தது யார் என்று அவர்களுக்கே தெரியும். 

………………

அதே நேரம் இந்த கதையை எல்லாம் மணிமேகலை கதிரிடமும், பரிதி அழகியிடமும் பேசிக்கொண்டு இருந்தனர் …………………………….

அன்பழகனுக்கு திருடனுக்கு தேள் கொட்டின நிலை தான். அடுத்து ஏதும் செய் தோனாமல், செய் முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டு இருந்தான். வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் இருக்க தான் செய்கிறார்கள்…………………… 

     

தொடரும்…………….