அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம், சில லாகின் பிரச்சனை காரணமாக தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை, விரைவில் தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி. 

மகிழ்மதி

அத்தியாயம் – 26

கண்ணன் பேச ஆரம்பித்த போது, மெத்தனமாக அமர்ந்து இருந்தவர்கள். அவன் சாட்சி இருக்கிறது என்று சொன்ன போது உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அப்படி யார் வந்து விட போகிறார்கள் என்றே நினைத்து இருந்தனர். 

ஆனால் அப்படி சொன்னதும் சாட்சிக்கூண்டில் வந்து நின்றது என்னவோ நந்தினி! தான், அப்போது தான் அன்பழகன் தன் பக்கத்தில் திரும்பி பார்த்து இருந்தான், நந்தினி அமர்ந்து இருந்த இருக்கை காலியாக இருந்தது. ரத்தினமும், கனேசனும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. காலையில் இருந்து தங்களுடன் தனோ கிளம்பி வந்தாள், முகத்தில் கூட எந்த மாற்றமும் இல்லையே என்று தான் நினைத்து இருந்தனர். 

கதிருக்கு அதை விட பெரிய அதிர்வுதான். அவன் நந்தினியை இந்த இடத்தில் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இந்த வேலைய எப்படா  பாத்தீங்க? என்றான் முனகலாக, பக்கத்தில் அமர்ந்து இருந்த மணிமேகலைக்கு சிரிப்பு வந்தாலும், இதுக்கு தான் சுற்றி என்ன நடக்குதுனு பாக்கனும், எப்பவும் கடிவாளம் கட்டின குதிரை மாதிரி முறைச்சிகிட்டே இருக்க கூடாது என்றாள். 

அவளை திரும்பி பார்த்தவன், ஏன் உனக்கு அதிர்ச்சி இல்லையா? என்றான், பன்னதே நாங்க தான் என்றாள்………….

என்னது!!!!!!!!…………….. 

நாங்க தான்னா? 

நானும் திரியும் என்றாள் நமுட்டு சிரிப்புடன். அவன் ஏதோ மேலும் கேட்க வர உன் கேள்வி நேரத்தை எல்லாம் அப்புறம் வைச்சிக்க, இப்போ அங்க கவணி என்றாள்.

பாக்கியாவும், கனேசனுக்கும் நந்தினியை யார் என்று தெரியும் என்றாலும், என் நடக்கும் என்று பார்த்து இருந்தனர். சாட்சிக்கூண்டில் ஏறியவள், உறுதி மொழி எடுத்தபின், கண்ணன் முன் வந்து நின்றான். 

உங்க பெயர்

நந்தினி அன்பழகன் 

உங்களுக்கு திருமணம் முடிந்து எத்தனை வருடம் ஆகிறது என்றான். 

4 வருடம் 

உங்களுக்கு காதல் திருமணமா?, பெற்றோர் முடிவு செய்த திருமணமா? 

காதல் திருமணம் தான், ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. 

அன்பழகனோட முன்னாள் மனைவி பற்றி தெரியுமா?

தெரியும் நானும், கதிரழகியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தான் என்றாள்.

நீங்க கதிரழகி, அன்பழகன் திருமனத்துக்கு முன்னால உங்க இரண்டு பேரும் காதல் இருந்தா? அதற்கு பிறகா? 

கதிரழகி வீட்டுக்கு போகும் போது அவரை அடிக்கடி பார்பேன். அவரும் தான்  இருவருக்கும் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் சந்தர்பம் சூழ்நிலை காரணமாக கதிரழகிக்கும், அவருக்கும் கல்யாணம் முடிவாச்சு, நான் அவரிடம் அதை பற்றி கேட்க, தன்னை சிறு வயதில் இருந்து பார்த்துக்கொண்ட அக்காவின் பேச்சை  மீற முடியாது என்று கூறிவிட்டார், அதற்கு பிறகு தான் அதை பற்றி கதிரழகியிடமும் பேசினேன். ஆனால் அவளும் அதை பெரயதாக எடுத்துக்கொள்வில்லை. 

அவர்கள் திருமணம் நடந்து  பிறகு நடந்த பிரச்சனையில் இரண்டு பேரும் பிரிந்து போய்டாங்க. அவர் மறுபடியும் என்கிட்ட கல்யாணம் பன்னிறத பத்தி பேசுனார் எனக்கும் பிடிச்சதால் எங்க இரண்டு பேர் வீட்டிலும் பேசி, அவங்க சம்மதத்தோட கல்யாணம் பன்னிக்கிட்டோம். 

இது எல்லாம் விவாகரத்து நடந்த இரண்டு  வாரத்திலேயே நடந்து இருக்கு. அப்போ அன்பழகன், கதிரழகி திருமணத்துக்கு பிறகும் உங்களுக்குள்ள தொடர்பு இருந்தா…………………… என்ன?

அது தான் அவங்க விவாகரத்துக்கு காரணமா? என்றான்……………

அப்ஜக்சன் யூவர் ஹானர் இது இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் வழக்குக்கு தெடர்ப்பு இல்லாமல் இருக்கிறது. இங்கு நடந்துக்கொண்டு இருப்பது குழந்தையின் கஸ்டடி கேஸ், அதுக்கு சம்பந்தமாக கேள்விகளை எதிர்கட்சி வக்கீல் கேட்டார் என்றால் நன்றாக இருக்கும்.

யூவர் ஹானர், நான் கேட்கும் கேள்விகள் எல்லாம் வழக்குக்கு தொட்ர்புடையது தான், இந்த கேஸ் கதிரழகியின் விவகரத்து வழக்கின் அப்பிலாக தான் பதிபட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கதிரழகி எதற்காக விவாகரத்து பெற்றார் என்று தெளிபடுத்த வேண்டியுள்ளது. ஏன் என்றால் தற்போது அன்பழகன் தரப்பில் கதிரழகி ஓழுக்கம் இல்லாதவர் போல் சீத்தரிக்கபடுகிறது. அதாவது அவர் விவாகரத்து கேரியதே தன் மாமன் உடன் அவருக்கு பழக்கம் இருப்பதால், அவர்கள் காதலித்தார்கள் என்பது போல் தான் இந்த நீதிமன்றத்தில் போன முறை வாதாடபட்டது. அப்படி இருக்கும் போதுஅதை தெளிவுபடுத்த வேண்டி இந்த கேள்விகள் கேட்கிறேன், தேவை அல்லாமல் அல்ல. 

சொல்லுங்க நந்தினி, உங்கள் தொடர்பு அவர்களின் திருமணத்துக்கு பின்னும் நீடித்தா?

ஆமாம், கல்யாணம் முடித்தாலும் அவங்க ரெண்டு பேருக்கும் சரியான புரிதல் இல்லை, அதனால் அவர் அதை சொல்லி என்னிடம் வருத்தபடுவார்……………… என்றாள்.

நோட் திஸ் பாயிட் யூவர் ஹானர், அன்பழகன் திருமனத்துக்கு பின்னும் நந்தினியுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார், இது கதிரழகிக்கு தெரிந்து தான் இவர்கள் இருவருக்கும் பிரச்சனையாகி உள்ளது. அதை தொடர்ந்து அவர் கர்பமாக இருப்பது தெரிந்ததும், குழந்தையை கலைக்க சொல்ல, பிரச்சனை பெரியதாகி, கதிரழகி வீட்டைவிட்டு வெளியேறும் படி ஆனாது. 

இதில் இருந்து ஆரம்பத்தில் இருந்தே, அன்பழகன் இந்த திருமனத்தில் உறுதியாக இல்லை, அவர் முழுவிருப்பத்துடன் இந்த திருமணத்தை செய்துக்கொள்ளவும் இல்லை. அதனால் தான் திருமணத்துக்கு பின்னும் நந்தினியுடன்னான தொடர்பை தொடர்ந்து உள்ளார்.  அது தான் கதிரழகி மற்றும் அன்பழகன் வாழ்வில் பிரச்சனையாகியுள்ளது, அதை பற்றி கதிரழகி கேட்க போய் அவர், தன் தவறை மறைக்க கதிர்வேலன் உடன் கதிரழகியை தொடர்புபடுத்தி பேசி பிரச்சனையை திசை திருப்பியுள்ளார். அதோடு கதிரழகிக்கும் மன நெருக்கடியும் கொடுத்துள்ளார். அதனால் தான் என் கட்சிகாரர் விவாகரத்து வரை சென்றுள்ளார்.

இப்போது நான் சொன்னது எல்லாம் உண்மை தான் என்பதை நிருபிக்கும் விதமாக தான், அன்பழகன் மற்றும் நந்தினி திருமணம் விவாகரத்து முடித்து அடுத்த இரு வாரத்திலேயே நடந்து  இருக்கிறது. அவர்கள் திருமணமே இப்போது நான் சொல்லியதற்க்கு சாட்சி என்றவன்

மேலும் இந்த திருமண வாழ்வை தக்க வைக்க கதிரழகி தான் நினைத்தார், அதனால் தான் அவர் குழந்தை பிறக்கும் வரை கூட அன்பழகனுக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் கொடுத்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் அன்பழகன் தரப்பில் இருந்து எடுக்கபடவில்லை என்றே தெரிகிறது. அப்படி இருந்தவர் தீடீர் என்று வந்து குழந்தையை கேட்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அதற்கான பதிலும் இப்போது நமக்கு கிடைத்து இருக்கிறது அதையும் நந்தினியே கூறுவார் என்று முடித்தவன்.

இப்போது நீங்கள் தான் சொல்ல வேண்டும், இப்போது நான் சொன்னது அனைத்தும் உன்மை தானே என்றான்.

ஆம் என்பது போல் தலை அசைத்தவள்.

இதுவரை நீங்கள் சொன்னது எல்லாம் உன்மை இது எல்லோருக்கும் தெரிந்து நடந்த விஷயங்கள். ஆனால் இங்கு யாருக்கும் தெரியாத விஷயங்களும் இருக்கிறது. 

எங்கள் திருமணம் முடிந்து முதல் ஆறு மாதம் வரையிலும் நாங்கள் குழந்தையை ஆர்வமாக எதிர்பார்தோம், ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதால் நாங்கள் மருத்துவரை சந்திக்க சொன்றோம், எல்லாவற்றையும் கேட்டு அறிந்த மருத்துவர், இருவருக்கும் பரிசோதனைகள் செய்ய சொன்னார். ஆனால் அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,  என்று பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார். அதனால் எனக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள பட்டன அதில் எனக்கு கர்ப்பையில் நீர்கட்டிகள் இருப்பதாக கூறி அதற்கான சிகிச்சைகளை செய்துக்கொண்டேன்.

2 வருடங்களாக சிகிச்சை தொடர்ந்தும் எந்த பலனும் இல்லை. மருத்துவர் மீண்டும் என் கனவரை பரிசோதனை செய்ய சொல்ல அப்போது தான் அவருக்கு, பிரச்சனை இருப்பது தெரிந்தது. 

அதாவது, மருத்தவர் எங்களிடம் அவருக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டதா என்று கேட்க, அவர் திருமணம் நடந்து அடுத்த நாள் கதிரழகியும், அன்பழகனும் சென்ற வண்டி விபத்துக்குள்ளானது, என்று கூறினோம், எல்லாவற்றையும் கேட்வர், பரிசோதனை முடிவுகளையும் பார்த்துவிட்டு,   அப்போது அவருக்கு ஏற்பட்ட காயத்தை அவர் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார், அவன் விளைவாக அவருக்கு  குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிக குறைவே என்று எங்களுக்கு மருத்தவர் தெரிவித்தார், சொல்ல போனால் 10% தான் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

அதை அவர் அப்போதே கவணித்து சிகிச்சை எடுத்து இருந்தால், இந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாம். 

ஆனால் இப்போது அவர் இயற்கையாக தந்தையாகும் வாய்ப்பு 10% மட்மடுமே, நீங்கள் செயற்கை முறை கருதரிப்பு முயற்ச்சிக்காலம், ஆனால் அதுவும் 50% மட்டுமே சொல்ல முடியும் என்றுவிட்டார்.

அதை கேட்டதும் என் கனவர் மனதளவில் மிகவும் உடைந்துவிட்டார், தன்னால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்பதை அவரால் ஏற்க்கொள்ள முடியவில்லை. இதற்கு எல்லாம் காரணமாக அவர் கதிரழகியும், கதிர்வேலனும் என்று நினைத்து மனதளவில் பாதிப்புக உள்ளானவர், அவர்களை பழிவாங்கவே, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும் மாறு வழக்கு தொடர்ந்தார். இதில் இருவரையும் பழிவாங்கவும் அதே சமயம் குழந்தையை தன்னிடம் கொண்டு வரவும் நினைத்தவர் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக  அந்த பழய காரணத்தையே இப்போதும் கூறினார்.

அதுமட்டும் இல்லாமல் கதிரழகி தான் அவர் மாமாவின் முதல் வாரிசு, கதிரழகி நடந்த பிரச்சனைகளுக்கு பின் தனக்கு உரிய சொத்துக்களை மறுத்துவிட, அதை குழந்தை மதியழகி பெயரில் எழுதிவிடுவதாக வீட்டினர் பேசியதையும் கேட்டுக்கொண்டவர். சொத்தும் கைவிட்டு போவதை விரும்பவில்லை, அதே சமயம் தனக்கு இருக்கும் குறையும் வெளியில் தெரியவருவதை விரும்பாதவர், அவர் மனைவியான எனக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் என முழு குறையும் என்னிடமே உள்ளதாக கூறி, எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைக்கிறார். என்று சொல்லி முடிக்க……………..

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!!!!!!!!! என்று கதிர்வேலன் சொல்லி இருந்தான்………………….

இவர்களே இப்படி ஆடி போய் இருக்க, நல்லதம்பியும், அன்பழகனும் அத்தனையும் அடங்கி போய் இருந்தனர். அவர்கள் எதை எதையோ எதிர் பார்த்து இருக்க, இப்படி ஒன்றை அவர்கள் சத்தியமாக எதிர்பாக்கவில்லை. 

நந்தினியை அவர்கள் சாட்சியாக அவர்கள் நிறுத்தும் போது கூட இப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவள் சொல்லிக்கேட்ட விஷயங்கள் எல்லாம், சுனாமியாக இந்த வழக்கை மெத்தமாக திருப்பி போட்டு இருந்தது. 

வழக்கின் அடியும் நுனியும் மொத்தமாக மாற்றிவிட்டு இருக்க, இப்போது எங்கு இருந்து என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்தார் நல்லதம்பி. 

கேட்டு இருந்த நிதிபதியே அயர்ந்து தான் போய் இருந்தார். சிறிது இடைவெளிக்கு பிறகு விசாரனை தொடரும் என்றுவிட்டு இருந்தார்.     

வெளியில் வந்து இருந்தனர் எல்லோரும், அன்பழகனுக்கு நந்தினி மேல் கொலைவெறி தான் அவள் இப்படி ஒரு விஷயத்தை செய்வாள் என்று எதிர்பாக்கவில்லை அவன். அதுவும் என்னை பற்றி என்னவெல்லாம் சொல்கிறாள். நான் ஆம்பளை இல்லையா? வீட்டுக்கு வாடி நான் யாருனு காம்பிக்கிறேன். என மனதில் கருவிக்கொண்டான். அவள் புறம் கூட திரும்பவில்லை. அவள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

இங்கு நல்லதம்பியோ அன்பழகனிடம் இப்போதைக்கு வாய்தா வாங்குவோம், அப்புறம் என்ன பன்னாலம்னு  பார்க்கலாம் என்று பேசிக்கொண்டு இருக்க, என்ன பார்த்துக்கலாம் நல்லதம்பி, எதை பார்த்துக்கலாம். என்ன வாய்தா கேட்டு இந்த மெடிக்கல் சட்விகேட் எல்லாம் போலினு சொல்ல போறிங்களா?

முடியாதே ஏனா நீங்க நந்தினிக்கு என்ன பிரச்சனை எல்லாம் இருக்குனு சொல்லி  டுப்பிளிகேட் வாங்கனீங்களோ,  அதே டாக்டர் கிட்ட தான் இப்போ அன்பழகனுக்கு வாங்கி இருக்கேன், இது போலினா, அதுவும் போலி நீங்களே மாட்டிப்பிங்க அதாவது, ஆப்பு, ஆப்பு என்றவன், தன் பக்கத்தில் இருந்த கதிரடம்…………………… உனக்கு குரங்கு தனக்கு தானே அப்பு அடிச்ச கதை தெரியுமா என்றான்?

அதை கேட்டு இன்னும் கோவமான அன்பழகனை நல்லதம்பி இழுத்து செல்ல………….. அடுத்து என்ன என்று பார்த்து இருந்தனர் அனைவரும் 

   

தொடரும்…………….